புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மக்களை ஏமாற்றும் பிரபல நிறுவனங்கள்: சூரியகாந்தி, கடலை எண்ணெய்யில் கலப்படம்
Page 1 of 1 •
கடலை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் என்ற பெயரில் பிரபல நிறுவனங்கள் விற்றுவரும் பல பாக்கெட்களில் பாமாயில், பருத்திவிதை எண்ணெய் கலப்படம் செய்யப்பட்டிருப்பது நுகர்வோர் அமைப்பின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
‘தூய்மையான கடலை எண்ணெய், நல்லெண்ணைய்யை சமையலில் சரியான அளவில் பயன்படுத்துவது உடலுக்கு நல்லது’ என்று சமீபகால ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ஒருசில எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் விலை குறைவான பாமாயில், பருத்திவிதை எண்ணெய், தவிட்டு எண்ணெய் போன்றவற்றை கலப்படம் செய்து கடலை எண்ணெய் என்ற பெயரில் விற்பது இந்திய நுகர்வோர் சங்கம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
கன்ஸ்யூமர்ஸ் அசோஷியேஷன் ஆஃப் இந்தியா (சிஏஐ) எனப்படும் இந்த அமைப்பு சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவருகிறது. நுகர்வோர் பாதுகாப்புக்காக 30 ஆண்டுகளுக்கு மேலாக குரல் கொடுத்துவந்த இதன் நிறுவனர் தேசிகன் கடந்த ஜூன் மாதம் மறைந்தார். அதன் பிறகு, அவரது மனைவி நிர்மலா தேசிகன் இந்த அமைப்பை நிர்வகித்து வருகிறார். எண்ணெய் கலப்படம் குறித்து இந்த அமைப்பின் துணை இயக்குநர் எம்.ஆர்.கிருஷ்ணன் கூறியதாவது:
சென்னை, விழுப்புரம், சேலம், தருமபுரி, திருச்சி, ஈரோடு ஆகிய 6 மாவட்டங்களில் 14 நிறுவனங்களின் கடலை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் பாக்கெட்களை எங்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் சோதனை செய்தனர். தமிழக சுகாதாரத் துறையின் கீழ் இயங்கிவரும் சென்னை கிண்டி கிங்க்ஸ் பரிசோதனைக் கூடம் உட்பட 3 பரிசோதனைக் கூடங்களில் இவை சோதனை செய்யப்பட்டன. அவற்றின் முடிவு அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது.
‘கடலை எண்ணெய்’ என்று விற்கப்பட்ட 4 பிராண்டுகளின் பாக்கெட்களில் முழுக்க பாமாயில் மட்டுமே இருந்தது. ஒரு பாக்கெட் டில் பருத்திவிதை எண்ணெய் மட்டுமே இருந்தது. ஒரு பாக்கெட் டில் 90 சதவீதம் பாமாயில், 10 சதவீதம் கடலை எண்ணெய் இருந் தது. ஒரு சூரியகாந்தி எண்ணெய் பாக்கெட்டில் 50 சதவீதம் பாமாயில், 50 சதவீதம் பருத்திவிதை எண்ணெய் இருந்தது.
சமையல் எண்ணெய் பாக்கெட்டில் அக்மார்க் முத்திரை கட்டாயம் என உணவு பாதுகாப்பு விதிமுறை உள்ளது. ஆனால், 42 சதவீத சமையல் எண்ணெய் பாக்கெட்களில் அக்மார்க் முத்திரை இல்லை. உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய விதிகள் 2011-ன்படி அனைத்து உணவுப் பொருள் பாக்கெட்களிலும் உணவுப் பாதுகாப்பு தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) குறியீடு, உரிமம் எண் குறிப்பிடப்பட வேண்டும். ஆனால், 79 சதவீத சமையல் எண்ணெய் பாக்கெட்களில் அந்த குறியீடு இல்லை. 64 சதவீத பாக்கெட்களில் உரிமம் எண் இல்லை. கலப்படம் இல்லாத சுத்தமான கடலை எண்ணெய் ஒரு லிட்டர் விலை ரூ.105 முதல் ரூ.120 வரை உள்ளது. ஒரு லிட்டர் பாமாயில் விலை ரூ.52 மட்டுமே. அதனால், பாமாயிலை நிறம், மணம் நீக்கி ரீஃபைண்டு செய்து, கடலை எண்ணெய் என்ற பெயரில் அதிக விலைக்கு விற்று மோசடி செய்கின்றனர்.
இவ்வாறு எம்.ஆர்.கிருஷ்ணன் கூறினார்.
காணாமல்போன செக்குகள்
சென்னையில் இயற்கை அங்காடி நடத்தும் அனந்து என்பவர் கூறியபோது, ‘‘ஒரு லிட்டர் கடலை எண்ணெய் தயாரிக்க 2.5 கிலோ கடலை தேவை. ஒரு கிலோ கடலை விலை ரூ.100 முதல் ரூ.110 வரை. எனவே, கலப்படமின்றி சுத்தமாக ஒரு லிட்டர் கடலை எண்ணெய் தயாரிக்க குறைந்தபட்சம் ரூ.250 ஆகும். இதனால், செக்குகளில் ஆட்டப்படும் கடலை எண்ணெய் விலை அதிகமாக இருந்தது. மேலும், செக்கில் பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் எண்ணெயில்தான் உடலுக்கு நன்மை தரும் புரதம், நல்ல கொழுப்புச் சத்துகள் ஆகியவை சிதையாமல் கிடைக்கும். பாக்கெட்களில் குறைந்த விலையில் கிடைக்கிறதே என்று தரமற்ற எண்ணெயை மக்கள் வாங்கத் தொடங்கியதால், வருமானமின்றி செக்குகள் மூடப்பட்டுவிட்டன. நம் கண் முன்பாகவே கடலையைப் போட்டு எண்ணெய் எடுத்து தரும் செக்குகள் இப்போது இல்லை. கண்ணுக்குத் தெரியாமல் நடக்கிற இயந்திர சுத்திகரிப்பு முறை நடைமுறைக்கு வந்ததில் இருந்தே, கலப்படமும் தொடங்கிவிட்டது’’ என்றார். (திஹிண்டு)
‘தூய்மையான கடலை எண்ணெய், நல்லெண்ணைய்யை சமையலில் சரியான அளவில் பயன்படுத்துவது உடலுக்கு நல்லது’ என்று சமீபகால ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ஒருசில எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் விலை குறைவான பாமாயில், பருத்திவிதை எண்ணெய், தவிட்டு எண்ணெய் போன்றவற்றை கலப்படம் செய்து கடலை எண்ணெய் என்ற பெயரில் விற்பது இந்திய நுகர்வோர் சங்கம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
கன்ஸ்யூமர்ஸ் அசோஷியேஷன் ஆஃப் இந்தியா (சிஏஐ) எனப்படும் இந்த அமைப்பு சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவருகிறது. நுகர்வோர் பாதுகாப்புக்காக 30 ஆண்டுகளுக்கு மேலாக குரல் கொடுத்துவந்த இதன் நிறுவனர் தேசிகன் கடந்த ஜூன் மாதம் மறைந்தார். அதன் பிறகு, அவரது மனைவி நிர்மலா தேசிகன் இந்த அமைப்பை நிர்வகித்து வருகிறார். எண்ணெய் கலப்படம் குறித்து இந்த அமைப்பின் துணை இயக்குநர் எம்.ஆர்.கிருஷ்ணன் கூறியதாவது:
சென்னை, விழுப்புரம், சேலம், தருமபுரி, திருச்சி, ஈரோடு ஆகிய 6 மாவட்டங்களில் 14 நிறுவனங்களின் கடலை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் பாக்கெட்களை எங்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் சோதனை செய்தனர். தமிழக சுகாதாரத் துறையின் கீழ் இயங்கிவரும் சென்னை கிண்டி கிங்க்ஸ் பரிசோதனைக் கூடம் உட்பட 3 பரிசோதனைக் கூடங்களில் இவை சோதனை செய்யப்பட்டன. அவற்றின் முடிவு அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது.
‘கடலை எண்ணெய்’ என்று விற்கப்பட்ட 4 பிராண்டுகளின் பாக்கெட்களில் முழுக்க பாமாயில் மட்டுமே இருந்தது. ஒரு பாக்கெட் டில் பருத்திவிதை எண்ணெய் மட்டுமே இருந்தது. ஒரு பாக்கெட் டில் 90 சதவீதம் பாமாயில், 10 சதவீதம் கடலை எண்ணெய் இருந் தது. ஒரு சூரியகாந்தி எண்ணெய் பாக்கெட்டில் 50 சதவீதம் பாமாயில், 50 சதவீதம் பருத்திவிதை எண்ணெய் இருந்தது.
சமையல் எண்ணெய் பாக்கெட்டில் அக்மார்க் முத்திரை கட்டாயம் என உணவு பாதுகாப்பு விதிமுறை உள்ளது. ஆனால், 42 சதவீத சமையல் எண்ணெய் பாக்கெட்களில் அக்மார்க் முத்திரை இல்லை. உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய விதிகள் 2011-ன்படி அனைத்து உணவுப் பொருள் பாக்கெட்களிலும் உணவுப் பாதுகாப்பு தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) குறியீடு, உரிமம் எண் குறிப்பிடப்பட வேண்டும். ஆனால், 79 சதவீத சமையல் எண்ணெய் பாக்கெட்களில் அந்த குறியீடு இல்லை. 64 சதவீத பாக்கெட்களில் உரிமம் எண் இல்லை. கலப்படம் இல்லாத சுத்தமான கடலை எண்ணெய் ஒரு லிட்டர் விலை ரூ.105 முதல் ரூ.120 வரை உள்ளது. ஒரு லிட்டர் பாமாயில் விலை ரூ.52 மட்டுமே. அதனால், பாமாயிலை நிறம், மணம் நீக்கி ரீஃபைண்டு செய்து, கடலை எண்ணெய் என்ற பெயரில் அதிக விலைக்கு விற்று மோசடி செய்கின்றனர்.
இவ்வாறு எம்.ஆர்.கிருஷ்ணன் கூறினார்.
காணாமல்போன செக்குகள்
சென்னையில் இயற்கை அங்காடி நடத்தும் அனந்து என்பவர் கூறியபோது, ‘‘ஒரு லிட்டர் கடலை எண்ணெய் தயாரிக்க 2.5 கிலோ கடலை தேவை. ஒரு கிலோ கடலை விலை ரூ.100 முதல் ரூ.110 வரை. எனவே, கலப்படமின்றி சுத்தமாக ஒரு லிட்டர் கடலை எண்ணெய் தயாரிக்க குறைந்தபட்சம் ரூ.250 ஆகும். இதனால், செக்குகளில் ஆட்டப்படும் கடலை எண்ணெய் விலை அதிகமாக இருந்தது. மேலும், செக்கில் பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் எண்ணெயில்தான் உடலுக்கு நன்மை தரும் புரதம், நல்ல கொழுப்புச் சத்துகள் ஆகியவை சிதையாமல் கிடைக்கும். பாக்கெட்களில் குறைந்த விலையில் கிடைக்கிறதே என்று தரமற்ற எண்ணெயை மக்கள் வாங்கத் தொடங்கியதால், வருமானமின்றி செக்குகள் மூடப்பட்டுவிட்டன. நம் கண் முன்பாகவே கடலையைப் போட்டு எண்ணெய் எடுத்து தரும் செக்குகள் இப்போது இல்லை. கண்ணுக்குத் தெரியாமல் நடக்கிற இயந்திர சுத்திகரிப்பு முறை நடைமுறைக்கு வந்ததில் இருந்தே, கலப்படமும் தொடங்கிவிட்டது’’ என்றார். (திஹிண்டு)
எண்ணெய் பாக்கெட் வாங்கும்போது ஏமாறாமல் இருப்பது எப்படி?
சமையல் எண்ணெய் பாக்கெட், பாட்டில் வாங்கும்போது நுகர்வோர் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று இந்திய நுகர்வோர் சங்கத் தலைவர் நிர்மலா தேசிகன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் உள்ள சில பிரபல எண்ணெய் தயாரிப்பு நிறுவனங்கள் பாமாயில், பருத்தி விதை எண்ணெய், தவிட்டு எண்ணெய் போன்றவற்றை ரீபைண்டு செய்து கடலை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் என்ற பெயரில் கலப்படம் செய்து விற்பதாக இந்திய நுகர்வோர் சங்கம் (கன்ஸ்யூமர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா) சமீபத்தில் தெரிவித்தது.
இந்த அமைப்பின் தலைவர் நிர்மலா தேசிகன், நுகர்வோர் விழிப்புடன் இருக்க வேண்டிய அவசியம் குறித்து ‘தி இந்து’விடம் பகிர்ந்துகொண்டார். அவர் கூறியதாவது:
ஒரு பொருளை வாங்கும்போது, பாக்கெட் மீது அச்சிடப்பட்டுள்ள விவரங்களை நன்கு படித்துப் பார்க்க வேண்டும். விலை, காலாவதியாகும் நாள், அக்மார்க் முத்திரை, உணவுப் பாதுகாப்புத் துறையின் முத்திரையுடன் கூடிய லைசென்ஸ் எண், எடையளவு, எண்ணெய்யில் உள்ள சத்துக்கள் பற்றிய தகவல்கள், ‘ஆர்ஜிமோன் எண்ணெய் கலப்படமில்லாதது’ என்றெல்லாம் அச்சிடப்பட்டுள்ளதா என்று பார்க்க வேண்டும்.
பாக்கெட் உணவுப் பொருட்களைக் கண்காணிப்பதும், தவறு செய்யும் வணிகர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதும் தொழிலாளர் துறையின் கீழ் செயல்படும் எடையளவுச் சட்டப் பிரிவு, அக்மார்க் தர முத்திரை பிரிவு, உணவுப் பாதுகாப்புத் துறை ஆகிய 3 துறையினரின் கடமை. இத்துறைகளில் போதிய பணியாளர்கள் இல்லாததால் கடைகளுக்கு நேரில் சென்று மாதிரிகளை சோதனை செய்வது, தவறு செய்யும் வணிகர்கள் மீது நடவடிக்கை எடுப்பது போன்ற பணிகளை அவர்கள் முழுவீச்சில் மேற்கொள்வது இல்லை. இதை சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் சில வணிகர்கள், விதிமுறைகளை மீறி தங்கள் இஷ்டத்துக்கு உணவுப் பொருட்களை பாக்கெட் செய்து விற்கின்றனர்.
எடையளவுச் சட்டப்படி ஒரு லிட்டர், 500 மி.லி., 250 மி.லி. அளவுகளில் மட்டுமே எண்ணெய் விற்கவேண்டும். ஆனால் 850 மி.லி., 300 மி.லி. என்றெல்லாம் விற்கின்றனர் கொலஸ்ட் ரால் ஃப்ரீ, கொலஸ்ட்ரால் ஃபைட்டர் என விளம்பரம் செய்வதும், ரீபைண்டு ஆயில் என்பதோடு சூப்பர், அல்ட்ரா, மைக்ரோ என்கிற வார்த்தைகளை சேர்த்து விளம்பரம் செய்வதும் தவறு.
‘பிளெண்டட் எடிபிள் வெஜிடபிள் ஆயில்’ என்ற பெயரில் சமையல் எண்ணெய்களில் 20 சதவீதம் வரை பிற உணவு எண்ணெய்களை கலந்து விற்க அரசு அனுமதித்துள்ளது. என் னென்ன விகிதத்தில் என்னென்ன உணவு எண்ணெய்கள் சேர்க்கப் பட்டுள்ளன என்ற விவரத்தை பாக்கெட்டில் கட்டாயம் அச்சிட வேண்டும். மேலும், குறிப்பிட்ட ஒரு எண்ணெய் வித்தின் படத்தை மட்டுமே போட்டு விற்கக்கூடாது.
10 ஆண்டுகளுக்கு முன்பு ஆர்ஜிமோன் ஆயில் பயன்படுத்திய சிலர் ஆக்ராவில் இறந்தனர். அதன் பிறகு, உணவு எண்ணெய்யாக ஆர்ஜிமோன் ஆயிலை பயன்படுத்த அரசு தடை விதித்தது. ‘ஆர்ஜிமோன் ஆயில் இல்லை’ என எண்ணெய் பாக்கெட்களில் அச்சிடுவதும் கட்டாய மாக்கப்பட்டது. அவ்வாறு அச்சிடப் படாமல் தற்போதும் சில சமையல் எண்ணெய் பாக்கெட்கள் விற்கப்படுகின் றன. இதையும் நுகர்வோர்கள் கவனித்து வாங்க வேண்டும்.
ஆய்வில் நாங்கள் கண்டறிந்த மோசடி விவரங்களை எடையளவு துறை, அக்மார்க் பிரிவு, உணவுப் பாதுகாப்புத் துறையினருக்கு புகாராக அனுப்பியுள்ளோம். நுகர்வோர் நலன் கருதி இந்த பிரிவுகளில் கூடுதல் பணியாளர்களை அரசு நியமிக்க வேண்டும். இவ்வாறு நிர்மலா தேசிகன் கூறினார்.
கலப்பட எண்ணெய் பற்றி சந்தேகமா?
கலப்பட எண்ணெய் தொடர்பான கூடுதல் விவரங்கள், சந்தேகங்களுக்கு ‘கன்ஸ்யூமர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா அமைப்பை 044-24494573, 24494577 ஆகிய தொலைபேசி எண்களில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணியில் இருந்து மாலை 5.30 மணி வரை தொடர்பு கொள்ளலாம். caiindia1@gmail.com என்கிற மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம்.
சமையல் எண்ணெய் பாக்கெட், பாட்டில் வாங்கும்போது நுகர்வோர் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று இந்திய நுகர்வோர் சங்கத் தலைவர் நிர்மலா தேசிகன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் உள்ள சில பிரபல எண்ணெய் தயாரிப்பு நிறுவனங்கள் பாமாயில், பருத்தி விதை எண்ணெய், தவிட்டு எண்ணெய் போன்றவற்றை ரீபைண்டு செய்து கடலை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் என்ற பெயரில் கலப்படம் செய்து விற்பதாக இந்திய நுகர்வோர் சங்கம் (கன்ஸ்யூமர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா) சமீபத்தில் தெரிவித்தது.
இந்த அமைப்பின் தலைவர் நிர்மலா தேசிகன், நுகர்வோர் விழிப்புடன் இருக்க வேண்டிய அவசியம் குறித்து ‘தி இந்து’விடம் பகிர்ந்துகொண்டார். அவர் கூறியதாவது:
ஒரு பொருளை வாங்கும்போது, பாக்கெட் மீது அச்சிடப்பட்டுள்ள விவரங்களை நன்கு படித்துப் பார்க்க வேண்டும். விலை, காலாவதியாகும் நாள், அக்மார்க் முத்திரை, உணவுப் பாதுகாப்புத் துறையின் முத்திரையுடன் கூடிய லைசென்ஸ் எண், எடையளவு, எண்ணெய்யில் உள்ள சத்துக்கள் பற்றிய தகவல்கள், ‘ஆர்ஜிமோன் எண்ணெய் கலப்படமில்லாதது’ என்றெல்லாம் அச்சிடப்பட்டுள்ளதா என்று பார்க்க வேண்டும்.
பாக்கெட் உணவுப் பொருட்களைக் கண்காணிப்பதும், தவறு செய்யும் வணிகர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதும் தொழிலாளர் துறையின் கீழ் செயல்படும் எடையளவுச் சட்டப் பிரிவு, அக்மார்க் தர முத்திரை பிரிவு, உணவுப் பாதுகாப்புத் துறை ஆகிய 3 துறையினரின் கடமை. இத்துறைகளில் போதிய பணியாளர்கள் இல்லாததால் கடைகளுக்கு நேரில் சென்று மாதிரிகளை சோதனை செய்வது, தவறு செய்யும் வணிகர்கள் மீது நடவடிக்கை எடுப்பது போன்ற பணிகளை அவர்கள் முழுவீச்சில் மேற்கொள்வது இல்லை. இதை சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் சில வணிகர்கள், விதிமுறைகளை மீறி தங்கள் இஷ்டத்துக்கு உணவுப் பொருட்களை பாக்கெட் செய்து விற்கின்றனர்.
எடையளவுச் சட்டப்படி ஒரு லிட்டர், 500 மி.லி., 250 மி.லி. அளவுகளில் மட்டுமே எண்ணெய் விற்கவேண்டும். ஆனால் 850 மி.லி., 300 மி.லி. என்றெல்லாம் விற்கின்றனர் கொலஸ்ட் ரால் ஃப்ரீ, கொலஸ்ட்ரால் ஃபைட்டர் என விளம்பரம் செய்வதும், ரீபைண்டு ஆயில் என்பதோடு சூப்பர், அல்ட்ரா, மைக்ரோ என்கிற வார்த்தைகளை சேர்த்து விளம்பரம் செய்வதும் தவறு.
‘பிளெண்டட் எடிபிள் வெஜிடபிள் ஆயில்’ என்ற பெயரில் சமையல் எண்ணெய்களில் 20 சதவீதம் வரை பிற உணவு எண்ணெய்களை கலந்து விற்க அரசு அனுமதித்துள்ளது. என் னென்ன விகிதத்தில் என்னென்ன உணவு எண்ணெய்கள் சேர்க்கப் பட்டுள்ளன என்ற விவரத்தை பாக்கெட்டில் கட்டாயம் அச்சிட வேண்டும். மேலும், குறிப்பிட்ட ஒரு எண்ணெய் வித்தின் படத்தை மட்டுமே போட்டு விற்கக்கூடாது.
10 ஆண்டுகளுக்கு முன்பு ஆர்ஜிமோன் ஆயில் பயன்படுத்திய சிலர் ஆக்ராவில் இறந்தனர். அதன் பிறகு, உணவு எண்ணெய்யாக ஆர்ஜிமோன் ஆயிலை பயன்படுத்த அரசு தடை விதித்தது. ‘ஆர்ஜிமோன் ஆயில் இல்லை’ என எண்ணெய் பாக்கெட்களில் அச்சிடுவதும் கட்டாய மாக்கப்பட்டது. அவ்வாறு அச்சிடப் படாமல் தற்போதும் சில சமையல் எண்ணெய் பாக்கெட்கள் விற்கப்படுகின் றன. இதையும் நுகர்வோர்கள் கவனித்து வாங்க வேண்டும்.
ஆய்வில் நாங்கள் கண்டறிந்த மோசடி விவரங்களை எடையளவு துறை, அக்மார்க் பிரிவு, உணவுப் பாதுகாப்புத் துறையினருக்கு புகாராக அனுப்பியுள்ளோம். நுகர்வோர் நலன் கருதி இந்த பிரிவுகளில் கூடுதல் பணியாளர்களை அரசு நியமிக்க வேண்டும். இவ்வாறு நிர்மலா தேசிகன் கூறினார்.
கலப்பட எண்ணெய் பற்றி சந்தேகமா?
கலப்பட எண்ணெய் தொடர்பான கூடுதல் விவரங்கள், சந்தேகங்களுக்கு ‘கன்ஸ்யூமர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா அமைப்பை 044-24494573, 24494577 ஆகிய தொலைபேசி எண்களில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணியில் இருந்து மாலை 5.30 மணி வரை தொடர்பு கொள்ளலாம். caiindia1@gmail.com என்கிற மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம்.
- விஸ்வாஜீசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011
நல்ல பதிவு நண்பரே
நாங்கள் கடையில் வாங்குவதை நிறுத்திவிட்டோம், செக்கில் ஆட்டுபவர்களிடம்
மொத்தமாக 20,30 என்று எவ்வளவு லிட்டர் எண்ணெய் கிடைக்குமோ வாங்கி
வைத்துக் கொள்கிறோம்.
நாங்கள் கடையில் வாங்குவதை நிறுத்திவிட்டோம், செக்கில் ஆட்டுபவர்களிடம்
மொத்தமாக 20,30 என்று எவ்வளவு லிட்டர் எண்ணெய் கிடைக்குமோ வாங்கி
வைத்துக் கொள்கிறோம்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல விழிப்புணர்வுப் பதிவு சாமி , நன்றி !
அருமை விஸ்வா...விஸ்வாஜீ wrote:நல்ல பதிவு நண்பரே
நாங்கள் கடையில் வாங்குவதை நிறுத்திவிட்டோம், செக்கில் ஆட்டுபவர்களிடம்
மொத்தமாக 20,30 என்று எவ்வளவு லிட்டர் எண்ணெய் கிடைக்குமோ வாங்கி
வைத்துக் கொள்கிறோம்.
நானும் குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு நல்லஎண்ணெயும் ,தலைக்கு தேய்த்துக்கொள்ள தேங்காய் எண்ணெயும் செக்குகளில் வாங்கி தான் கத்தாருக்கு எடுத்து வருவேன். மற்றபடி இங்கு வருடம் முழுவதும் சமைப்பதற்கு அங்கிருந்து கொண்டு வரமுடியாத காரணத்தால் இங்கு கிடைக்கும் எண்ணைகளை வாங்கிகொள்கிறோம்
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
ஏமாறுபவர்கள் இருக்கும் ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1166905mbalasaravanan wrote:ஏமாறுபவர்கள் இருக்கும் ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள்
நிஜம், நலமா சரவணன்
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
மேற்கோள் செய்த பதிவு: 1166908krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1166905mbalasaravanan wrote:ஏமாறுபவர்கள் இருக்கும் ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள்
நிஜம், நலமா சரவணன்
நலம் அம்மா
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|