புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வன்னி-தமிழர்களை மீட்க அமெரிக்க படை? Poll_c10வன்னி-தமிழர்களை மீட்க அமெரிக்க படை? Poll_m10வன்னி-தமிழர்களை மீட்க அமெரிக்க படை? Poll_c10 
366 Posts - 49%
heezulia
வன்னி-தமிழர்களை மீட்க அமெரிக்க படை? Poll_c10வன்னி-தமிழர்களை மீட்க அமெரிக்க படை? Poll_m10வன்னி-தமிழர்களை மீட்க அமெரிக்க படை? Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
வன்னி-தமிழர்களை மீட்க அமெரிக்க படை? Poll_c10வன்னி-தமிழர்களை மீட்க அமெரிக்க படை? Poll_m10வன்னி-தமிழர்களை மீட்க அமெரிக்க படை? Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
வன்னி-தமிழர்களை மீட்க அமெரிக்க படை? Poll_c10வன்னி-தமிழர்களை மீட்க அமெரிக்க படை? Poll_m10வன்னி-தமிழர்களை மீட்க அமெரிக்க படை? Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
வன்னி-தமிழர்களை மீட்க அமெரிக்க படை? Poll_c10வன்னி-தமிழர்களை மீட்க அமெரிக்க படை? Poll_m10வன்னி-தமிழர்களை மீட்க அமெரிக்க படை? Poll_c10 
25 Posts - 3%
prajai
வன்னி-தமிழர்களை மீட்க அமெரிக்க படை? Poll_c10வன்னி-தமிழர்களை மீட்க அமெரிக்க படை? Poll_m10வன்னி-தமிழர்களை மீட்க அமெரிக்க படை? Poll_c10 
6 Posts - 1%
sugumaran
வன்னி-தமிழர்களை மீட்க அமெரிக்க படை? Poll_c10வன்னி-தமிழர்களை மீட்க அமெரிக்க படை? Poll_m10வன்னி-தமிழர்களை மீட்க அமெரிக்க படை? Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
வன்னி-தமிழர்களை மீட்க அமெரிக்க படை? Poll_c10வன்னி-தமிழர்களை மீட்க அமெரிக்க படை? Poll_m10வன்னி-தமிழர்களை மீட்க அமெரிக்க படை? Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
வன்னி-தமிழர்களை மீட்க அமெரிக்க படை? Poll_c10வன்னி-தமிழர்களை மீட்க அமெரிக்க படை? Poll_m10வன்னி-தமிழர்களை மீட்க அமெரிக்க படை? Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
வன்னி-தமிழர்களை மீட்க அமெரிக்க படை? Poll_c10வன்னி-தமிழர்களை மீட்க அமெரிக்க படை? Poll_m10வன்னி-தமிழர்களை மீட்க அமெரிக்க படை? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வன்னி-தமிழர்களை மீட்க அமெரிக்க படை?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 04, 2009 3:12 pm

வாஷிங்டன்: வன்னிப் போர்க் களத்தில் சிக்கியுள்ள 2 லட்சம் தமிழர்களை மீட்க அமெரிக்காவின் பசிபிக் கமாண்ட் முயலக் கூடாது. அப்படி செய்தால் அது தமிழ் மக்கள் மீதான இலங்கையின் போரை ஊக்குவிப்பது போலாகும் என்று அமெரிக்காவைச் சேர்ந்த இலங்கையில் உள்ள மக்களுக்கான சமத்துவம் மற்றும் மறுவாழ்வுக்கான அமைப்பு (பியர்ல்) கூறியுள்ளது.

வன்னி போர்க்களத்தில் மிகக் குறுகிய வனப்பரப்புக்குள் 2 லட்சம் தமிழர்கள் சிக்கியுள்ளனர்.

இவர்கள் வெளியேறுவதற்காக இலங்கை அரசும், ராணுவமும், பாதுகாப்பு வளையப் பகுதிகளை அறிவித்தது. ஆனால் அந்தப் பகுதிக்குள் வரும் மக்களை கூட்டம் கூட்டமாக கொன்று குவித்து வருகின்றன இலங்கைப் படைகள்.

இதனால் வனப் பகுதியிலிருந்து வெளியேற தமிழர்கள் தயக்கம் காட்டுகின்றனர். இந் நிலையில் வன்னி வனப்பகுதியில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க அமெரிக்காவின் பசிபிக் கமாண்ட் படையினரின் உதவியை இலங்கை கோரியுள்ளதாக தெரிகிறது.

இப்படையினர் தமிழர்களை மீட்ட இலங்கை அரசிடம் ஒப்படைப்பார்கள் எனவும் கூறப்படுகிறது.

இந்த முயற்சி்க்கு பியர்ல் அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தமிழர்களை மீட்டு இலங்கையிடம் ஒப்படைத்தால் அது அப்பாவித் தமிழர்கள் பெருமளவில் பலியாக வழி ஏற்படுத்தி விடும். மேலும், அப்பாவித் தமிழர்கள் மீதான இலங்கையின் போரை அமெரிக்கா ஆதரிப்பதாகி விடும் எனவும் பியர்ல் அமைப்பு கூறியுள்ளது.

தமிழர்களை மீட்பதற்குப் பதில் பாதுகாப்பு வலையப் பகுதிகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்கு வரும் அப்பாவிகள் பலியாகாமல் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கலாம்.

மேலும், நிவாரணப் பணியாளர்கள், பத்திரிக்கையாளர்கள், மனித உரிமை கண்காணிப்பாளர்களை அப்பகுதிகளுக்குள் சுதந்திரமாக செல்ல வழி ஏற்படுத்த வேண்டும் என்று அது கோரியுள்ளது.

இதுதொடர்பாக அமெரிக்காவிலிருந்தபடி செயல்படும் பியர்ல் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை:

கொழும்பிலிருந்து எங்களுக்குக் கிடைத்துள்ள உறுதியான தகவலின்படி, அமெரிக்காவின் பசிபிக் கமாண்ட் படைகள், 2 லட்சம் தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப் போவதாக அறிகிறோம்.

இந்த திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும். அவ்வாறு செய்தால், இலங்கையில் நடந்து வரும் இன அழிப்புக்கு ஆதரவாக செயல்படுவது போலாகி விடும்.

தமிழர்களை வெளியேற்றுவதற்குப் பதில், பாதுகாப்பு வலையப் பகுதிகளை பலப்படுத்தலாம் விரிவுபடுத்தலாம். மேலும், அங்கு நிவாரணப் பணியாளர்கள், பத்திரிக்கையாளர்கள், மனித உரிமை கண்காணிப்பாளர்களை அதிக அளவில் அனுப்ப நடவடிக்கை எடுக்கலாம்.

வன்னி வனப்பகுதியில் சிக்கியுள்ள தமிழ் மக்கள், இலங்கைப் படையினரின் தாக்குதலில் சிக்கித் தவிக்கின்றனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2000க்கும் மேற்பட்ட தமிழர்களை இலங்கைப் படைகள் கொன்று குவித்துள்ளன. 7000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

தமிழர்களை மீட்டு இலங்கை அரசிடம் ஒப்படைக்க பசிபிக் கமாண்ட் திட்டமிட்டிருப்பது அவர்களை முகாம்கள் என்ற பெயரில் சிறையி்ல் அடைக்கவே வழி செய்யும்.

தற்காலிக முகாம்களில் அகதிகளாக தங்கியிருக்கும் தமிழ் மக்களை இலங்கை அரசு மிகக் கொடூரமாகவும், மோசமாகவும் நடத்தி வருவதாக பல்வேறு மனித உரிமை அமைப்புகள், நிவாரண குழுக்கள் ஏற்கனவே ஆதாரத்துடன் தெளிவுபடுததியுள்ளன.

முகாம்களில் தங்க வைப்பதாக கூறி குடும்பத்தினரிடமிருந்து பிரித்தும், எந்தவித சர்வதேச நிவாரண உதவியும் கிடைக்காமல் செய்தும், சித்திரவதை செய்தும், கற்பழிப்பு, கொலை என்ற பாதகச் செயல்களிலும் இலங்கை அரசு ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில் லட்சக்கணக்கான தமிழர்களை மீட்டு இலங்கை அரசிடம் ஒப்படைப்பது என்பது ஆயிரக்கணக்கான தமிழர்களைக் கொல்ல மரண சாசனத்தை எழுதிக் கொடுப்பது போலாகி விடும்.

காரணம், அரசுப் பகுதிகளுக்கு இவர்கள் வந்தவுடன் பெரும்பாலானவர்கள் அரசின் கூற்றுப்படி காணாமல் போய் விடுவார்கள்.

உலக அளவில் அரசாங்கமே பெருமளவில் கடத்தல் மற்றும் கொலைச் செயல்களில் ஈடுபடுவது இலங்கையில்தான் அதிகம் நடைபெறுகிறது. இதை காணாமல் போவோர் தொடர்பான ஐ.நா. அமைப்பே கூறியுள்ளது.

அப்பாவி மக்கள் மட்டுமல்லாமல், பத்திரிக்கையாளர்கள், நிவாரணப் பணியாளர்களையும் கூட சித்திரவதை செய்வதும், கடத்துவதும் இலங்கை அரசின் செயல்களாக உள்ளன.

வன்னிப் பகுதியில் 70 ஆயிரம் பேர்தான் சிக்கியிருப்பதாக இலங்கை அரசு கூறுகிறது. ஆனால் 2 லட்சம் தமிழர்கள் சிக்கியிருப்பதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், ஐ.நா, மனித உரிமை அமைப்புகள் கூறியுள்ளன.

இதன் மூலம், பெருமளவிலான தமிழர்களை கொன்று இன அழிப்பை மேற்கொள்ள இலங்கை அரசு சதித் திட்டம் தீட்டியிருப்பது புலனாகும்.

மேலும், மீட்டு வரப்படும் தமிழர்கள் இதுவரை விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் இருந்தவர்கள் என்பதால் பழிவாங்கும் நடவடிக்கையாக அவர்களைக் கொல்லவும் இலங்கை அரசு முயலும்.

சந்தேகத்தின் பேரில், விசாரணை என்ற பெயரில் அவர்கள் கொடும் சித்திரவதைக்கு ஆளாக நேரிடும்.

எனவே வன்னி தமிழ் மக்களை மீட்டு இலங்கை அரசிடம் ஒப்படைப்பது என்பதும் இனப்படுகொலைக்கு சமமான நடவடிக்கையே ஆகும்.

அமெரிக்க குடிமக்கள் என்ற முறையில், இந்த நடவடிக்கையில் பசிபிக் கமாண்ட் ஈடுபடக் கூடாது என்று கோரிக்கை வைக்கிறோம். அவர்களது ரத்தம் எங்களது கரங்களில் படிவதை நாங்கள் விரும்பவில்லை.

இந்த நடவடிக்கைக்குப் பதில், போர் நிறுத்தத்திற்கு இலங்கை அரசை நிர்ப்பந்திக்க வேண்டும். முற்றுகைக்குள்ளான மக்கள் தங்களது பகுதிகளில் நிம்மதியாகவும், அமைதியாகவும் வாழ வழி செய்ய வேண்டும் என்று அந்த அமைப்பு கோரியுள்ளது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக