ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘லெக்கின்ஸ்’ சர்ச்சை வேண்டாமே!

+8
உதயசுதா
mbalasaravanan
விமந்தனி
T.N.Balasubramanian
M.M.SENTHIL
முனைவர் ம.ரமேஷ்
ராஜா
ayyasamy ram
12 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

‘லெக்கின்ஸ்’ சர்ச்சை வேண்டாமே! - Page 3 Empty ‘லெக்கின்ஸ்’ சர்ச்சை வேண்டாமே!

Post by ayyasamy ram Fri Oct 02, 2015 8:08 am

First topic message reminder :

‘லெக்கின்ஸ்’ சர்ச்சை வேண்டாமே! - Page 3 E9w43WJWSXWUegnvdAPY+x1
-


உலகில் மாற்றம் நிலையானது என்பார்கள்.
பிரதமர் நரேந்திரமோடி மாற்றத்தைச் சொல்லும்போது,
‘‘மாற்றத்தை எதிர்ப்பவர்கள் 21–ம் நூற்றாண்டுக்கு
பொருந்தாதவர்கள்’’ என்றார்.

மாற்றம் என்பது எல்லாவற்றுக்கும் பொருந்தும்.
கலாசாரத்துக்கும் பொருந்தும். அந்த வகையில்,
ஆதிகாலத்தில் இருந்து உடைகளில் சமுதாயம்
ஒவ்வொரு காலகட்டத்திலும் மாற்றங்களை சந்தித்து
வருகிறது. இந்த மாற்றங்கள் எல்லாம் அந்தந்த கால
கட்டங்களின் நாகரீகத்துக்கும், வசதிக்கும், வாழ்க்கை
முறைக்கும் ஏற்ப மாறிவருவதால், அனைவரும்
அதற்கேற்ற வகையில் ஆடைகளை அணியத்
தொடங்கிவிடுகிறார்கள்.

ஆதிகாலத்தில் இலை தழைகளை ஆடையாக
அணிந்துவந்த பெண்கள், அதன்பிறகு அந்தந்த
நாடுகளின் கலாசாரத்துக்கு ஏற்பவும், தட்பவெட்ப
நிலைக்கேற்பவும், தங்கள் ஆடைகளை மாற்றிக்
கொண்டார்கள்.

தமிழ்நாட்டில் ஆதிகாலத்தில் நமது முன்னோர்களான
பெண்கள், உடல் முழுவதும் ஒரே சேலையைக் கட்டிக்
கொண்டு இருந்தார்கள். அதன்பிறகு ஜாக்கெட்,
உள்ளாடைகள் அணியும் பழக்கம் வந்தது.

பின்னாட்களில் இளம்பெண்கள் தாவணி அணிந்தார்கள்.
பிறகு சல்வார் கமீஸ், தொடர்ந்து சுடிதார் வந்தது.
பிறகு ஜீன்ஸ்– டீ சர்ட் வந்தது. ஒவ்வொரு முறையும் புது
நாகரீக ஆடைகள் வரும்போதெல்லாம் கடும்
கண்டனங்கள் எழுவது வாடிக்கை.

பழமையில் ஊறிப்போனவர்களால் இந்த புதுமையின்
மாற்றத்தை ஏற்கமுடியவில்லை.

இப்போது பனியன் போன்ற துணிகளாலான, மெல்லிய
பருத்தித்துணியாலான ‘லெக்கின்ஸ்’ ஆடையும்,
மேலே நீண்ட குர்தா, கமீஸ் போன்ற ‘டாப்ஸ்’ அணிவதும்
வழக்கமாகிவிட்டது.

ஆண்டாண்டு காலமாக சர்க்கஸ்களில் பார்
விளையாடுபவர்கள் போன்ற கலைஞர்கள் வெள்ளை
நிறத்தில் இந்த ‘லெக்கின்சை’ அணிந்து வந்தனர்.
ஆனால், இப்போது வெளியே அணியும் இந்த ‘லெக்கின்ஸ்’
ஆடைகள், நீண்ட நெடும் ஆண்டுகளுக்கு முன்பே குளிர்
பிரதேசங்களில் ஆண்களும், பெண்களும் தாங்கள்
அணியும் ஆடைகளுக்கு உள்ளே மெல்லிய கம்பளி
அல்லது நைலானாலான லெக்கின்ஸை அணிந்தார்கள்.

இப்போது அது பெண்களுக்கான வசதியான ஆடையாகி
விட்டது. சமீபத்தில் சில கல்லூரிகளில் ‘லெக்கின்ஸ்’
ஆடை அணிந்துவரக்கூடாது என்று உடை கட்டுப்பாடு
தடைவிதித்ததும், சில பத்திரிகைகளில் ஆபாசமான
‘லெக்கின்ஸ்’ தேவையா? என்று கட்டுரைகள் வந்ததும்,
பெண்கள் மத்தியில் பெரிய எதிர்ப்பு கிளம்பிவிட்டது.

இது என்ன பெண்கள் அணியும் ஆடைகள் மட்டும்
எல்லோருடைய கண்களையும் உறுத்துகிறது. அழகு
என்பது பார்ப்பவர்களின் கண்களில்தான் இருக்கிறது
என்பார்கள். அதுபோலத்தான் ஆபாசமும் பார்ப்பவர்கள்
கண்களில்தான் இருக்கிறது. ஒவ்வொரு முறையும்
பெண்கள் ஆடை மாறும்போது நிச்சயமாக கண்டன
கனைகள் வீசப்படுகிறது.

சுடிதார் வந்தபோதே இதென்ன சேலை எவ்வளவு
கண்ணியமான உடை, அதை விட்டுவிட்டு சினிமாவில்
போட்டுக்கொண்டு வருவதுபோல, இப்படி ஒரு ஆடை
என்றார்கள்.

இப்போது ‘லெக்கின்ஸ்’ வந்துவிட்டது. கருப்பு, பச்சை,
சிவப்பு, வெள்ளை, நீலம் என்று பொதுவான கலர்களில்
‘லெக்கின்ஸ்’ வாங்கி போட்டுவிட்டால் துவைப்பதற்கும்
வசதி, இஸ்திரி போடவேண்டிய தேவையும் இல்லை,
ஒரு நீண்ட குர்தா போன்ற மேலாடை அணிந்துவிடுவது
வசதியாக இருக்கிறது என்று சொல்லும் பெண்கள்,
அது சரி பெண்கள் ஆடைபற்றி விமர்சனம் செய்வோர்,
கால் சட்டைகளை அணிந்து வலம் வரும் ஆண்கள்
பற்றியோ, வேட்டியை, லுங்கியை மடித்து அண்டர்வேர்
தெரிய அணியும் ஆண்கள் பற்றி மட்டும் எதுவும்
சொல்லாமல் வாய்மூடி மவுனியாக இருப்பது ஏன்
என்கிறார்கள்.

நியாயமான கேள்வி. மொத்தத்தில், ஆடை என்பது
அவரவர் தனி சுதந்திரம், இதில் தேவையற்ற கட்டுப்பாடோ,
தேவையற்ற விமர்சனங்களோ தேவையில்லை
என்பதுதான் பொதுவான கருத்து.

————————————–
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84145
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down


‘லெக்கின்ஸ்’ சர்ச்சை வேண்டாமே! - Page 3 Empty Re: ‘லெக்கின்ஸ்’ சர்ச்சை வேண்டாமே!

Post by VYASAR Sun Dec 20, 2015 1:14 pm

நாம் என்ன செய்கின்றோம் என்று அவர்களை அறியாமலே செய்யும் செயல், சமுதாயத்தில் ஒரு தவறான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடாது என்பதற்காக, தாங்கள் கேட்டுக் கொண்டபடி காலோடு இறுக்கிய ஆடை அணிவது குறித்த ஆங்கிலத்திலான கருத்தின் தமிழாக்கத்தை கீழே அளித்துள்ளேன்.

“காலோடு இறுக்கிய ஆடையை ஒரு உடையாக அணிவதாலான அபாயகரமான வெளிப்புறத்தோற்றத்தினை நீங்கள் அறியவில்லை. காலோடு இறுக்கிய ஆடை என்பது, அணிந்துகொண்டு தெருவில் நடக்கக்கூடிய ஒரு உடை அல்ல. அது உள்ளுக்குள் அணியக்கூடிய ஒரு தோலாடை. அது அடுத்தவர்களுக்கு காட்டக்கூடாது. அது உடல் அமைப்பின் வெளிவளைவுகளை மிகத்துல்லியமாக காட்டுகின்றது. காலோடு இறுக்கிய ஆடையை அணிவதன் மூலம், ஒரு பெண்ணை உடலில் ஆடை இல்லாமல் இயற்கையான நிறத்தில் பார்பதற்கு பதிலாக, ஒரு வித்தியாசமான நிறத்தில் காட்சியளிக்கின்றது. அது எந்த துணியாக இருந்தாலும், உடலோடு இறுக்கிய ஆடையானது ஒரு தோலாடை மட்டுமே, அது அடுத்தவரின் நேரடிப் பார்வைக்கு, தெரியக்கூடாத பெண்ணின் உள் உடற்பகுதியை காட்டும். நிர்வாணத்திற்கும், காலோடு இறுக்கிய ஆடையை அணிவதற்கும் வித்தியாசம் இருக்கின்றது. மற்றவர்கள்(ஆண்கள்) எப்படி உடை அணிகிறார்கள் என்று கவலைப்படவேண்டாம். அவர்கள் நிர்வாணமாகச் சென்றாலும் அது அவர்களை பாதிக்காது. ஆனால், பெண்ணின் விஷயத்தில் இது அவ்வாறு இல்லை. நினைத்து புத்தியுடன் உடை அணியுங்கள். இது, உடல் அமைப்பின் வெளிவளைவுகளை நிர்வாணமாக வெளிக்காட்டுகின்ற, காலோடு இறுக்கிய ஆடையை பெண்கள் அணிந்து வெளியே வர அனுமதித்த அவர்களின் பெற்றோர்களின் குற்றம். ஆடை தயாரிப்பாளர்களுக்கு, எப்படி மக்களை கவர்ந்து தங்களுடைய தயாரிப்புகளை விற்பனை செய்வது என்ற கவலை தான் அவர்களுக்கு. மக்கள் தான் தங்களுடைய வாழ்க்கையைப் பற்றியும், இப்படிப்பட்ட உடைகளை ஏங்கே அணியவேண்டும் என்றும் நினைக்கவேண்டும். இதை ஒரு உள்ளாடையாக மட்டுமே பயன்படுத்த முடியும். இது சாதாரணமாக பொது மக்களுக்கானது அல்ல, மனமகிழ் மன்றத்தில் ஆட விரும்புபவர் அணிவது. இதை மட்டுமே அணிந்து பொது இடத்தில் வெளியே வருமளவான ஒப்பற்ற உடை இது அல்ல என்பதே உண்மை. அறிவுக்கூர்மையோடு சிந்தியுங்கள். உடை என்பது உடலை மூடுவதற்கு. அது உங்களின் உடல் உறுப்புக்களை நேரடியாக வெளிப்பார்வையில் மற்றவர்களின் உணர்வுகளை தவறாக தூண்டும்படி காட்டக்கூடாததாக இருக்க வேண்டும். அது மற்றவர்களின் குற்றம் அல்ல. ஆனால் அது இயற்கை ஈர்ப்பு. பெண்களுக்கு நேரடியாக அபாயகரமான வழிக்கு இட்டுச் செல்லும் அத்தகைய சூழ்நிலையை எவ்வளவு முடியுமோ அவ்வளவு தவிர்க்க முயற்சியுங்கள்”.
வியாசர்_குரல்
VYASAR
VYASAR
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 5
இணைந்தது : 03/10/2015

Back to top Go down

‘லெக்கின்ஸ்’ சர்ச்சை வேண்டாமே! - Page 3 Empty Re: ‘லெக்கின்ஸ்’ சர்ச்சை வேண்டாமே!

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Dec 20, 2015 2:39 pm



இது ஒரு விவாத பிரச்சனை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு
கருத்து உண்டு, அது தான் சரியென்றுவிவாதிக்கவும்
தோன்றும் ,எனவே இதை அவரவர் அவரவர்
விருப்பத்திற்கே விட்டு விடுவோம்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

‘லெக்கின்ஸ்’ சர்ச்சை வேண்டாமே! - Page 3 Empty Re: ‘லெக்கின்ஸ்’ சர்ச்சை வேண்டாமே!

Post by VYASAR Sun Dec 20, 2015 9:17 pm

நீங்கள் சமுதாய நோக்கோடு மிகச்சரியான, தேவையான நேரத்தில் இந்த தலைப்பை கொண்டுவந்துள்ள உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி. ஏதோ நாமும் விவாதத்தில் பங்கு கொள்ளலாம் என்று வரவில்லை. நான் பாரத நாட்டியம் மேடைகளில் ஆடியிருக்கின்றேன். அவ்வாறு ஆட பரதநாட்டிய ஆடை அணியும் முன்பாக , பாதுகாப்பு கருதி உள்ளுக்குள் உடலோடு ஒட்டிய முழங்கால் வரையான உள்ளாடை அணிந்து கொள்வோம். இது மற்றவர் முன்பாக ஒரு அறையில் ஆடைமாற்றும்போது தேவை என்பதற்காக அணிவது. அத்தகைய ஒரு ஆடையை கணுக்கால் வரை அணிந்து, அந்த உடையோடு தெருவில் வருவது என்பது எப்படிப்பட்டது என்பதை உணரவேண்டும் என்பதற்காக எழுதப்பட்டது. இது அவர்கள் மட்டும் சம்பந்தப்பட்டது அல்ல. ஒட்டுமொத்த சமுதாயத்தில் உள்ள மக்கள் சம்பந்தப்பட்டது. தங்கள் விரும்பிய வாறெல்லாம் உடை அணிய முடியாது.
VYASAR
VYASAR
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 5
இணைந்தது : 03/10/2015

Back to top Go down

‘லெக்கின்ஸ்’ சர்ச்சை வேண்டாமே! - Page 3 Empty Re: ‘லெக்கின்ஸ்’ சர்ச்சை வேண்டாமே!

Post by krishnaamma Sun Dec 20, 2015 9:31 pm

VYASAR wrote:நீங்கள் சமுதாய நோக்கோடு மிகச்சரியான, தேவையான நேரத்தில் இந்த தலைப்பை கொண்டுவந்துள்ள உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.   ஏதோ நாமும் விவாதத்தில் பங்கு கொள்ளலாம்  என்று வரவில்லை.  நான் பாரத நாட்டியம் மேடைகளில் ஆடியிருக்கின்றேன்.   அவ்வாறு ஆட பரதநாட்டிய ஆடை அணியும் முன்பாக  , பாதுகாப்பு கருதி உள்ளுக்குள் உடலோடு ஒட்டிய முழங்கால் வரையான உள்ளாடை அணிந்து கொள்வோம்.  இது மற்றவர் முன்பாக ஒரு அறையில் ஆடைமாற்றும்போது தேவை என்பதற்காக அணிவது.   அத்தகைய ஒரு  ஆடையை கணுக்கால் வரை அணிந்து, அந்த உடையோடு தெருவில் வருவது என்பது எப்படிப்பட்டது என்பதை உணரவேண்டும் என்பதற்காக எழுதப்பட்டது.      இது அவர்கள் மட்டும் சம்பந்தப்பட்டது அல்ல.  ஒட்டுமொத்த சமுதாயத்தில் உள்ள மக்கள் சம்பந்தப்பட்டது.    தங்கள் விரும்பிய வாறெல்லாம் உடை அணிய முடியாது.  
மேற்கோள் செய்த பதிவு: 1181853


நீங்கள் சொல்வது முற்றிலும் ஒப்புக்கொள்ளக்கூடியதே   சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க.குளிர் காலத்தில் பாண்ட் அல்லது சுடிதாரின்   உள்ளே போட்டுக் கொள்ள  வேண்டிய உடையை வெளியே போட்டுக்கொண்டு வருவதால்  நேரும் கொடுமை இது சோகம்
.
.
.
உங்களைப்பற்றி  அறிமுகம்  பகுதிக்கு சென்று அறிமுகம் செய்து கொள்ளுங்கள் நண்பரே ! புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

‘லெக்கின்ஸ்’ சர்ச்சை வேண்டாமே! - Page 3 Empty Re: ‘லெக்கின்ஸ்’ சர்ச்சை வேண்டாமே!

Post by ராஜா Mon Dec 21, 2015 11:23 am

VYASAR wrote:நீங்கள் சமுதாய நோக்கோடு மிகச்சரியான, தேவையான நேரத்தில் இந்த தலைப்பை கொண்டுவந்துள்ள உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி. ஏதோ நாமும் விவாதத்தில் பங்கு கொள்ளலாம் என்று வரவில்லை. நான் பாரத நாட்டியம் மேடைகளில் ஆடியிருக்கின்றேன். அவ்வாறு ஆட பரதநாட்டிய ஆடை அணியும் முன்பாக , பாதுகாப்பு கருதி உள்ளுக்குள் உடலோடு ஒட்டிய முழங்கால் வரையான உள்ளாடை அணிந்து கொள்வோம். இது மற்றவர் முன்பாக ஒரு அறையில் ஆடைமாற்றும்போது தேவை என்பதற்காக அணிவது. அத்தகைய ஒரு ஆடையை கணுக்கால் வரை அணிந்து, அந்த உடையோடு தெருவில் வருவது என்பது எப்படிப்பட்டது என்பதை உணரவேண்டும் என்பதற்காக எழுதப்பட்டது. இது அவர்கள் மட்டும் சம்பந்தப்பட்டது அல்ல. ஒட்டுமொத்த சமுதாயத்தில் உள்ள மக்கள் சம்பந்தப்பட்டது. தங்கள் விரும்பிய வாறெல்லாம் உடை அணிய முடியாது.
‘லெக்கின்ஸ்’ சர்ச்சை வேண்டாமே! - Page 3 3838410834 ‘லெக்கின்ஸ்’ சர்ச்சை வேண்டாமே! - Page 3 3838410834 நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

‘லெக்கின்ஸ்’ சர்ச்சை வேண்டாமே! - Page 3 Empty Re: ‘லெக்கின்ஸ்’ சர்ச்சை வேண்டாமே!

Post by கார்த்திக் செயராம் Mon Dec 21, 2015 11:57 am

லேகின்ஸ் உடல் அங்கங்களை வெளி உலகிற்கு காட்டும் ஒரு ஆபாச உடையே
லேகின்ஸ் அணிவதை இக்கால இளைய தலை முறை இளசுகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
நாகரீகம் என்ற பெயரில் கண்களை உறுத்தும் அநாகரீக உடையந்து செல்வதுதான் இன்றைய நாகரீகமா .

இது போல் வெளியே சென்று பின்னர் நான் கற்பை இழந்துவிட்டேன் கத்தரிக்காயை இழந்துவிட்டேன் என்று நிர்ப்பது தான் நாகரீகமா?


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

‘லெக்கின்ஸ்’ சர்ச்சை வேண்டாமே! - Page 3 Empty Re: ‘லெக்கின்ஸ்’ சர்ச்சை வேண்டாமே!

Post by T.N.Balasubramanian Mon Dec 21, 2015 4:23 pm

VYASAR wrote:நீங்கள் சமுதாய நோக்கோடு மிகச்சரியான, தேவையான நேரத்தில் இந்த தலைப்பை கொண்டுவந்துள்ள உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.   ஏதோ நாமும் விவாதத்தில் பங்கு கொள்ளலாம்  என்று வரவில்லை.  நான் பாரத நாட்டியம் மேடைகளில் ஆடியிருக்கின்றேன்.   அவ்வாறு ஆட பரதநாட்டிய ஆடை அணியும் முன்பாக  , பாதுகாப்பு கருதி உள்ளுக்குள் உடலோடு ஒட்டிய முழங்கால் வரையான உள்ளாடை அணிந்து கொள்வோம்.  இது மற்றவர் முன்பாக ஒரு அறையில் ஆடைமாற்றும்போது தேவை என்பதற்காக அணிவது.   அத்தகைய ஒரு  ஆடையை கணுக்கால் வரை அணிந்து, அந்த உடையோடு தெருவில் வருவது என்பது எப்படிப்பட்டது என்பதை உணரவேண்டும் என்பதற்காக எழுதப்பட்டது.      இது அவர்கள் மட்டும் சம்பந்தப்பட்டது அல்ல.  ஒட்டுமொத்த சமுதாயத்தில் உள்ள மக்கள் சம்பந்தப்பட்டது.    தங்கள் விரும்பிய வாறெல்லாம் உடை அணிய முடியாது.  
மேற்கோள் செய்த பதிவு: 1181853

அருமையாக எடுத்துரைத்துள்ளீர் Vyasar அவர்களே . ஆமோதித்தல் ஆமோதித்தல்

75 நாட்களுக்கு முன் இணைந்தாலும் அதிகம் காணப்படுவது இல்லையே .
அடிக்கடி வரவும் .உங்கள் அருமையான எண்ணங்களை பகிர்ந்து கொள்ளவும் .
பரத நாட்டியத்தில் பங்கு கொண்டதை இப்பதிவின் மூலம்தான் அறியமுடிகிறது .
மேலும்  அறிமுகப்பகுதிக்கு சென்று  உங்களை பற்றிய விவரங்களை கூறுங்கள் .
உங்கள் கலை உலக பங்களிப்புகளை அறிய ஆவலாக உள்ளோம் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

‘லெக்கின்ஸ்’ சர்ச்சை வேண்டாமே! - Page 3 Empty Re: ‘லெக்கின்ஸ்’ சர்ச்சை வேண்டாமே!

Post by mbalasaravanan Mon Dec 21, 2015 6:39 pm

அய்யா சென்னையிலும் ஒரு சம்பவம் மழை நடந்துள்ளது நல்ல மழை பெய்த பொழுது லெக்கின்ச் ஆடை அணிந்த பெண்கள் மிகவும் சிரமப் பட்டு உள்ளனர் அதிலும் லெக்கின்ச் மற்றும் tshirt போட்ட பெண்களே அதிகமாக பாதிக்கப் பட்டுள்ளனர் , பிடித்த ஆடை அணிவதில் தப்பில்லை ஆனால் இதே போல் நேரங்களில் கஷ்டப் படுவது அவர்கள் தானே எல்லோரும் குற்றம் சொல்கிறார்கள் மற்றவர்களை சொல்வதை விட நாம் சரியாக இருக்கிறோம் என்னும் நிலை வந்தாலே போதும்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

‘லெக்கின்ஸ்’ சர்ச்சை வேண்டாமே! - Page 3 Empty Re: ‘லெக்கின்ஸ்’ சர்ச்சை வேண்டாமே!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum