Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Yesterday at 11:14 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Saravananj |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
‘லெக்கின்ஸ்’ சர்ச்சை வேண்டாமே!
+8
உதயசுதா
mbalasaravanan
விமந்தனி
T.N.Balasubramanian
M.M.SENTHIL
முனைவர் ம.ரமேஷ்
ராஜா
ayyasamy ram
12 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
‘லெக்கின்ஸ்’ சர்ச்சை வேண்டாமே!
First topic message reminder :
![‘லெக்கின்ஸ்’ சர்ச்சை வேண்டாமே! - Page 2 E9w43WJWSXWUegnvdAPY+x1](https://www.filepicker.io/api/file/E9w43WJWSXWUegnvdAPY+x1.gif)
-
–
உலகில் மாற்றம் நிலையானது என்பார்கள்.
பிரதமர் நரேந்திரமோடி மாற்றத்தைச் சொல்லும்போது,
‘‘மாற்றத்தை எதிர்ப்பவர்கள் 21–ம் நூற்றாண்டுக்கு
பொருந்தாதவர்கள்’’ என்றார்.
மாற்றம் என்பது எல்லாவற்றுக்கும் பொருந்தும்.
கலாசாரத்துக்கும் பொருந்தும். அந்த வகையில்,
ஆதிகாலத்தில் இருந்து உடைகளில் சமுதாயம்
ஒவ்வொரு காலகட்டத்திலும் மாற்றங்களை சந்தித்து
வருகிறது. இந்த மாற்றங்கள் எல்லாம் அந்தந்த கால
கட்டங்களின் நாகரீகத்துக்கும், வசதிக்கும், வாழ்க்கை
முறைக்கும் ஏற்ப மாறிவருவதால், அனைவரும்
அதற்கேற்ற வகையில் ஆடைகளை அணியத்
தொடங்கிவிடுகிறார்கள்.
ஆதிகாலத்தில் இலை தழைகளை ஆடையாக
அணிந்துவந்த பெண்கள், அதன்பிறகு அந்தந்த
நாடுகளின் கலாசாரத்துக்கு ஏற்பவும், தட்பவெட்ப
நிலைக்கேற்பவும், தங்கள் ஆடைகளை மாற்றிக்
கொண்டார்கள்.
தமிழ்நாட்டில் ஆதிகாலத்தில் நமது முன்னோர்களான
பெண்கள், உடல் முழுவதும் ஒரே சேலையைக் கட்டிக்
கொண்டு இருந்தார்கள். அதன்பிறகு ஜாக்கெட்,
உள்ளாடைகள் அணியும் பழக்கம் வந்தது.
பின்னாட்களில் இளம்பெண்கள் தாவணி அணிந்தார்கள்.
பிறகு சல்வார் கமீஸ், தொடர்ந்து சுடிதார் வந்தது.
பிறகு ஜீன்ஸ்– டீ சர்ட் வந்தது. ஒவ்வொரு முறையும் புது
நாகரீக ஆடைகள் வரும்போதெல்லாம் கடும்
கண்டனங்கள் எழுவது வாடிக்கை.
பழமையில் ஊறிப்போனவர்களால் இந்த புதுமையின்
மாற்றத்தை ஏற்கமுடியவில்லை.
இப்போது பனியன் போன்ற துணிகளாலான, மெல்லிய
பருத்தித்துணியாலான ‘லெக்கின்ஸ்’ ஆடையும்,
மேலே நீண்ட குர்தா, கமீஸ் போன்ற ‘டாப்ஸ்’ அணிவதும்
வழக்கமாகிவிட்டது.
ஆண்டாண்டு காலமாக சர்க்கஸ்களில் பார்
விளையாடுபவர்கள் போன்ற கலைஞர்கள் வெள்ளை
நிறத்தில் இந்த ‘லெக்கின்சை’ அணிந்து வந்தனர்.
ஆனால், இப்போது வெளியே அணியும் இந்த ‘லெக்கின்ஸ்’
ஆடைகள், நீண்ட நெடும் ஆண்டுகளுக்கு முன்பே குளிர்
பிரதேசங்களில் ஆண்களும், பெண்களும் தாங்கள்
அணியும் ஆடைகளுக்கு உள்ளே மெல்லிய கம்பளி
அல்லது நைலானாலான லெக்கின்ஸை அணிந்தார்கள்.
இப்போது அது பெண்களுக்கான வசதியான ஆடையாகி
விட்டது. சமீபத்தில் சில கல்லூரிகளில் ‘லெக்கின்ஸ்’
ஆடை அணிந்துவரக்கூடாது என்று உடை கட்டுப்பாடு
தடைவிதித்ததும், சில பத்திரிகைகளில் ஆபாசமான
‘லெக்கின்ஸ்’ தேவையா? என்று கட்டுரைகள் வந்ததும்,
பெண்கள் மத்தியில் பெரிய எதிர்ப்பு கிளம்பிவிட்டது.
இது என்ன பெண்கள் அணியும் ஆடைகள் மட்டும்
எல்லோருடைய கண்களையும் உறுத்துகிறது. அழகு
என்பது பார்ப்பவர்களின் கண்களில்தான் இருக்கிறது
என்பார்கள். அதுபோலத்தான் ஆபாசமும் பார்ப்பவர்கள்
கண்களில்தான் இருக்கிறது. ஒவ்வொரு முறையும்
பெண்கள் ஆடை மாறும்போது நிச்சயமாக கண்டன
கனைகள் வீசப்படுகிறது.
சுடிதார் வந்தபோதே இதென்ன சேலை எவ்வளவு
கண்ணியமான உடை, அதை விட்டுவிட்டு சினிமாவில்
போட்டுக்கொண்டு வருவதுபோல, இப்படி ஒரு ஆடை
என்றார்கள்.
இப்போது ‘லெக்கின்ஸ்’ வந்துவிட்டது. கருப்பு, பச்சை,
சிவப்பு, வெள்ளை, நீலம் என்று பொதுவான கலர்களில்
‘லெக்கின்ஸ்’ வாங்கி போட்டுவிட்டால் துவைப்பதற்கும்
வசதி, இஸ்திரி போடவேண்டிய தேவையும் இல்லை,
ஒரு நீண்ட குர்தா போன்ற மேலாடை அணிந்துவிடுவது
வசதியாக இருக்கிறது என்று சொல்லும் பெண்கள்,
அது சரி பெண்கள் ஆடைபற்றி விமர்சனம் செய்வோர்,
கால் சட்டைகளை அணிந்து வலம் வரும் ஆண்கள்
பற்றியோ, வேட்டியை, லுங்கியை மடித்து அண்டர்வேர்
தெரிய அணியும் ஆண்கள் பற்றி மட்டும் எதுவும்
சொல்லாமல் வாய்மூடி மவுனியாக இருப்பது ஏன்
என்கிறார்கள்.
நியாயமான கேள்வி. மொத்தத்தில், ஆடை என்பது
அவரவர் தனி சுதந்திரம், இதில் தேவையற்ற கட்டுப்பாடோ,
தேவையற்ற விமர்சனங்களோ தேவையில்லை
என்பதுதான் பொதுவான கருத்து.
–
————————————–
தினத்தந்தி
![‘லெக்கின்ஸ்’ சர்ச்சை வேண்டாமே! - Page 2 E9w43WJWSXWUegnvdAPY+x1](https://www.filepicker.io/api/file/E9w43WJWSXWUegnvdAPY+x1.gif)
-
–
உலகில் மாற்றம் நிலையானது என்பார்கள்.
பிரதமர் நரேந்திரமோடி மாற்றத்தைச் சொல்லும்போது,
‘‘மாற்றத்தை எதிர்ப்பவர்கள் 21–ம் நூற்றாண்டுக்கு
பொருந்தாதவர்கள்’’ என்றார்.
மாற்றம் என்பது எல்லாவற்றுக்கும் பொருந்தும்.
கலாசாரத்துக்கும் பொருந்தும். அந்த வகையில்,
ஆதிகாலத்தில் இருந்து உடைகளில் சமுதாயம்
ஒவ்வொரு காலகட்டத்திலும் மாற்றங்களை சந்தித்து
வருகிறது. இந்த மாற்றங்கள் எல்லாம் அந்தந்த கால
கட்டங்களின் நாகரீகத்துக்கும், வசதிக்கும், வாழ்க்கை
முறைக்கும் ஏற்ப மாறிவருவதால், அனைவரும்
அதற்கேற்ற வகையில் ஆடைகளை அணியத்
தொடங்கிவிடுகிறார்கள்.
ஆதிகாலத்தில் இலை தழைகளை ஆடையாக
அணிந்துவந்த பெண்கள், அதன்பிறகு அந்தந்த
நாடுகளின் கலாசாரத்துக்கு ஏற்பவும், தட்பவெட்ப
நிலைக்கேற்பவும், தங்கள் ஆடைகளை மாற்றிக்
கொண்டார்கள்.
தமிழ்நாட்டில் ஆதிகாலத்தில் நமது முன்னோர்களான
பெண்கள், உடல் முழுவதும் ஒரே சேலையைக் கட்டிக்
கொண்டு இருந்தார்கள். அதன்பிறகு ஜாக்கெட்,
உள்ளாடைகள் அணியும் பழக்கம் வந்தது.
பின்னாட்களில் இளம்பெண்கள் தாவணி அணிந்தார்கள்.
பிறகு சல்வார் கமீஸ், தொடர்ந்து சுடிதார் வந்தது.
பிறகு ஜீன்ஸ்– டீ சர்ட் வந்தது. ஒவ்வொரு முறையும் புது
நாகரீக ஆடைகள் வரும்போதெல்லாம் கடும்
கண்டனங்கள் எழுவது வாடிக்கை.
பழமையில் ஊறிப்போனவர்களால் இந்த புதுமையின்
மாற்றத்தை ஏற்கமுடியவில்லை.
இப்போது பனியன் போன்ற துணிகளாலான, மெல்லிய
பருத்தித்துணியாலான ‘லெக்கின்ஸ்’ ஆடையும்,
மேலே நீண்ட குர்தா, கமீஸ் போன்ற ‘டாப்ஸ்’ அணிவதும்
வழக்கமாகிவிட்டது.
ஆண்டாண்டு காலமாக சர்க்கஸ்களில் பார்
விளையாடுபவர்கள் போன்ற கலைஞர்கள் வெள்ளை
நிறத்தில் இந்த ‘லெக்கின்சை’ அணிந்து வந்தனர்.
ஆனால், இப்போது வெளியே அணியும் இந்த ‘லெக்கின்ஸ்’
ஆடைகள், நீண்ட நெடும் ஆண்டுகளுக்கு முன்பே குளிர்
பிரதேசங்களில் ஆண்களும், பெண்களும் தாங்கள்
அணியும் ஆடைகளுக்கு உள்ளே மெல்லிய கம்பளி
அல்லது நைலானாலான லெக்கின்ஸை அணிந்தார்கள்.
இப்போது அது பெண்களுக்கான வசதியான ஆடையாகி
விட்டது. சமீபத்தில் சில கல்லூரிகளில் ‘லெக்கின்ஸ்’
ஆடை அணிந்துவரக்கூடாது என்று உடை கட்டுப்பாடு
தடைவிதித்ததும், சில பத்திரிகைகளில் ஆபாசமான
‘லெக்கின்ஸ்’ தேவையா? என்று கட்டுரைகள் வந்ததும்,
பெண்கள் மத்தியில் பெரிய எதிர்ப்பு கிளம்பிவிட்டது.
இது என்ன பெண்கள் அணியும் ஆடைகள் மட்டும்
எல்லோருடைய கண்களையும் உறுத்துகிறது. அழகு
என்பது பார்ப்பவர்களின் கண்களில்தான் இருக்கிறது
என்பார்கள். அதுபோலத்தான் ஆபாசமும் பார்ப்பவர்கள்
கண்களில்தான் இருக்கிறது. ஒவ்வொரு முறையும்
பெண்கள் ஆடை மாறும்போது நிச்சயமாக கண்டன
கனைகள் வீசப்படுகிறது.
சுடிதார் வந்தபோதே இதென்ன சேலை எவ்வளவு
கண்ணியமான உடை, அதை விட்டுவிட்டு சினிமாவில்
போட்டுக்கொண்டு வருவதுபோல, இப்படி ஒரு ஆடை
என்றார்கள்.
இப்போது ‘லெக்கின்ஸ்’ வந்துவிட்டது. கருப்பு, பச்சை,
சிவப்பு, வெள்ளை, நீலம் என்று பொதுவான கலர்களில்
‘லெக்கின்ஸ்’ வாங்கி போட்டுவிட்டால் துவைப்பதற்கும்
வசதி, இஸ்திரி போடவேண்டிய தேவையும் இல்லை,
ஒரு நீண்ட குர்தா போன்ற மேலாடை அணிந்துவிடுவது
வசதியாக இருக்கிறது என்று சொல்லும் பெண்கள்,
அது சரி பெண்கள் ஆடைபற்றி விமர்சனம் செய்வோர்,
கால் சட்டைகளை அணிந்து வலம் வரும் ஆண்கள்
பற்றியோ, வேட்டியை, லுங்கியை மடித்து அண்டர்வேர்
தெரிய அணியும் ஆண்கள் பற்றி மட்டும் எதுவும்
சொல்லாமல் வாய்மூடி மவுனியாக இருப்பது ஏன்
என்கிறார்கள்.
நியாயமான கேள்வி. மொத்தத்தில், ஆடை என்பது
அவரவர் தனி சுதந்திரம், இதில் தேவையற்ற கட்டுப்பாடோ,
தேவையற்ற விமர்சனங்களோ தேவையில்லை
என்பதுதான் பொதுவான கருத்து.
–
————————————–
தினத்தந்தி
Re: ‘லெக்கின்ஸ்’ சர்ச்சை வேண்டாமே!
மேற்கோள் செய்த பதிவு: 1165970கவியருவி ம.ரமேஷ் wrote:(படம் ஆபாசமாக இருக்கிறதென்றால் என் பதிவை நீக்கிவிடலாம்)
முகநூலில் பார்த்து ... இந்தம்மா லெக்கின்ஸ் போட்டிருக்காங்க. உத்து பாருங்க.
பெண்ணின் சுதந்திரத்தைப் பாராட்டலாம்தானே!
இப்படி ஒரு சுதந்திரம் தேவையா
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Re: ‘லெக்கின்ஸ்’ சர்ச்சை வேண்டாமே!
ஆமாம்பா நானும் இங்க பார்த்து இருக்கேன்.லெக்கின்ஸ் என்ற பெயரில் பெண்கள் பண்ற அட்டகாசம் பார்த்து எனக்கும் வருத்தமா இருக்கு. என்ன பண்றது?
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: ‘லெக்கின்ஸ்’ சர்ச்சை வேண்டாமே!
YOU DON'T KNOW THE DANGEROUS OUT LOOK OF WEARING A LEGGING AS A DRESS. LEGGINGS-IT IS NOT A DRESS TO WEAR AND WALK IN THE STREET. IT IS A INNER WEAR SKIN DRESS. IT SHOULD NOT BE SHOWN TO OTHERS. IT SHOWS THE EXACT OUTLINE OF THE BODY SKETCH. INSTEAD OF SEEING A LADY WITHOUT DRESS IN NATURAL COLOUR, IT LOOKS DIFFERENTLY IN COLOUR FULL BY WEARING THE LEGGING- WHAT EVER IT MAY BE THE CLOTH IT IS ONLY FIT TO BODY IS ONLY A SKIN DRESS AND WILL SHOW THE INSIDE OF A BODY OF A LADY WHICH SHOULD NOT BE VISIBLE TO OTHERS NAKED EYE. THERE IS DIFFERENCE BETWEEN NAKED AND WEARING A LEGGING DRESS. DON'T BOTHER ABOUT HOW OTHERS WEAR (GENTS) THE DRESS. IT IS NOT GOING TO AFFECT THEM EVEN IF THEY GO NAKED. BUT IT IS NOT THE CASE OF A LADY. THINK AND DRESS SENSIBLY. IT IS THE FAULT OF THE PARENTS ONLY WHO ALLOWED THE GIRLS TO WEAR SUCH DRESS -LEGGING WHICH SHOWING THEIR INNER LINE OF THEIR BODY VISIBLE TO OTHERS NAKEDLY. DRESS MANUFACTURERS ARE BOTHER ABOUT HOW TO ATTRACT PEOPLE AND TO SALE THEIR PRODUCTS. PEOPLE ONLY THINK ABOUT THEIR LIFE AND WHERE TO WEAR SUCH DRESSES. IT CAN BE USED ONLY AS INNER DRESS. WHO WISH TO DANCE IN THE CLUB CAN WEAR BUT NOT THE ORDINARY PUBLIC. REALLY IT IS NOT A GENUINE DRESS TO WEAR AND COME OUT IN PUBLIC WITH IT ALONE. THINK SENSIBLY. DRESS IS TO HIDE OUT BODY. IT SHOULD NOT SHOW YOUR BODY PARTS DIRECTLY TO NAKED EYE SUCH THAT IT INDUCE OTHERS SENSE IN A WRONG WAY. IT IS NOT THE SIN OF OTHERS. BUT IT IS NATURAL ATTRACTION. TRY TO AVOID SUCH SITUATION TO THE EXTENT POSSIBLE WHICH DIRECTLY LEAD THE DANGER PATH TO LADIES. VYASAR_VOICE
VYASAR- புதியவர்
- பதிவுகள் : 5
இணைந்தது : 03/10/2015
Re: ‘லெக்கின்ஸ்’ சர்ச்சை வேண்டாமே!
வியாசர் வருக வருக ஈகரை தமிழ் தளத்திற்கு .
நீங்கள் அறிமுகப்பகுதிக்கு சென்று உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள் .
ஈகரையின் விதி முறைகளை படித்து அனுசரித்து பின்பற்றவும் .
இது தமிழ் களஞ்சியம் என்பதால் , உங்கள் கருத்துகளை தமிழில் பதிவிடவும்.
உங்களுடைய மேற்கண்ட பதிவை தமிழ்படுத்தவும் .
சாராம்சத்தை தமிழில் கூறினாலும் பரவாயில்லை .
தமிழில் கருத்துகளை பதிவிடுவது அவசியம் . ஒத்துழைப்பீர் என நம்புகிறோம் .
கஷ்டமேதும் இருக்காது அல்லவா ?
ரமணியன்
நீங்கள் அறிமுகப்பகுதிக்கு சென்று உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள் .
ஈகரையின் விதி முறைகளை படித்து அனுசரித்து பின்பற்றவும் .
இது தமிழ் களஞ்சியம் என்பதால் , உங்கள் கருத்துகளை தமிழில் பதிவிடவும்.
உங்களுடைய மேற்கண்ட பதிவை தமிழ்படுத்தவும் .
சாராம்சத்தை தமிழில் கூறினாலும் பரவாயில்லை .
தமிழில் கருத்துகளை பதிவிடுவது அவசியம் . ஒத்துழைப்பீர் என நம்புகிறோம் .
கஷ்டமேதும் இருக்காது அல்லவா ?
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010
Re: ‘லெக்கின்ஸ்’ சர்ச்சை வேண்டாமே!
நம் ஊரிலும் பாட்டன், கொள்ளுப்பாட்டன் காலத்தில்
பெண்கள் ரவிக்கை இன்றி திரிந்த காலங்கள் உண்டு.
ஆண்களும் ஒரு லங்கோடுடன் திரிந்தனர்.
ஆக காலத்திற்கேற்ப, தேவைகளுக்கேற்ப உடைகளும்
மாறி வந்துள்ளன.
-
![‘லெக்கின்ஸ்’ சர்ச்சை வேண்டாமே! - Page 2 8pIiY4iBTGmYPXGFPMIH+leggins_vc1](https://www.filepicker.io/api/file/8pIiY4iBTGmYPXGFPMIH+leggins_vc1.jpg)
பெண்கள் ரவிக்கை இன்றி திரிந்த காலங்கள் உண்டு.
ஆண்களும் ஒரு லங்கோடுடன் திரிந்தனர்.
ஆக காலத்திற்கேற்ப, தேவைகளுக்கேற்ப உடைகளும்
மாறி வந்துள்ளன.
-
![‘லெக்கின்ஸ்’ சர்ச்சை வேண்டாமே! - Page 2 8pIiY4iBTGmYPXGFPMIH+leggins_vc1](https://www.filepicker.io/api/file/8pIiY4iBTGmYPXGFPMIH+leggins_vc1.jpg)
Re: ‘லெக்கின்ஸ்’ சர்ச்சை வேண்டாமே!
லங்கோடு ஆண்களுக்கு உடல் நலம் பேணும் ஒரு ஆடை .
அதை சிறிதே அழகு படுத்தி இன்றைய ஜட்டி உருவானது .
அந்த காலங்களில் வயல்வெளிகளில் வேலைசெய்தவர்
லங்கோடு அணிந்தாலும் மேலே வேட்டியை சுற்றிக்கொண்டே
வயல் வேலைகளில் ஈடுபட்டனர் .
லங்கோடு உடுத்தியே குஸ்தி பயிலும் பயில்வான்கள் கோதாவில்
இறங்குவார்கள் . பாதுகாப்புக் கருதி .
நவீன கால பெண்கள் Women Liberation குருப் என்ற பெயரில்
கச்சையின்றி / கச்சை துறக்கும் போராட்டத்தில் ஈடுபட்டது
25/30 வருடங்களுக்கு மிகவும் பிரசித்தம் , நீங்களும் அறிந்திருப்பீர் .
இன்றைக்கும் பேஷன் பெரெட்டில் ரிப்பன் கட்டி உலா வரும் பெண்களும் உண்டு .
காலத்திற்கேற்ப ஆடை மாற்றம் வரவேற்கலாம்
ஆபாசத்தை வெளிகாட்டாத வரையில் /தூண்டதவரையிலும் வரவேற்கத்தக்கதே .
இது இரு சாராருக்கும் பொருந்தும் .
ரமணியன்
அதை சிறிதே அழகு படுத்தி இன்றைய ஜட்டி உருவானது .
அந்த காலங்களில் வயல்வெளிகளில் வேலைசெய்தவர்
லங்கோடு அணிந்தாலும் மேலே வேட்டியை சுற்றிக்கொண்டே
வயல் வேலைகளில் ஈடுபட்டனர் .
லங்கோடு உடுத்தியே குஸ்தி பயிலும் பயில்வான்கள் கோதாவில்
இறங்குவார்கள் . பாதுகாப்புக் கருதி .
நவீன கால பெண்கள் Women Liberation குருப் என்ற பெயரில்
கச்சையின்றி / கச்சை துறக்கும் போராட்டத்தில் ஈடுபட்டது
25/30 வருடங்களுக்கு மிகவும் பிரசித்தம் , நீங்களும் அறிந்திருப்பீர் .
இன்றைக்கும் பேஷன் பெரெட்டில் ரிப்பன் கட்டி உலா வரும் பெண்களும் உண்டு .
காலத்திற்கேற்ப ஆடை மாற்றம் வரவேற்கலாம்
ஆபாசத்தை வெளிகாட்டாத வரையில் /தூண்டதவரையிலும் வரவேற்கத்தக்கதே .
இது இரு சாராருக்கும் பொருந்தும் .
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010
Re: ‘லெக்கின்ஸ்’ சர்ச்சை வேண்டாமே!
கவியருவி ம.ரமேஷ் wrote:(படம் ஆபாசமாக இருக்கிறதென்றால் என் பதிவை நீக்கிவிடலாம்)
முகநூலில் பார்த்து ... இந்தம்மா லெக்கின்ஸ் போட்டிருக்காங்க. உத்து பாருங்க.
பெண்ணின் சுதந்திரத்தைப் பாராட்டலாம்தானே!
படுமோசம் ரமேஷ்....whatsup இல் கூட வந்தது இந்த போட்டோ................பெங்களூரில் இது போல நிறைய பார்க்கலாம்............அதிர்ந்தும் போகலாம்............இவங்க வீட்டில் எல்லாம் ஆண்களே இல்லையோ என்றுஎனக்கு எண்ணத்தோன்றும்...................
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ‘லெக்கின்ஸ்’ சர்ச்சை வேண்டாமே!
விமந்தனி wrote:
அடக்கடவுளே!இப்படியெல்லாமா வெளியில் வருகிறார்கள்?
இதைவிட மோசமாகக்கூட வராங்க விமந்தனி
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
.
.
.
பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கரின் தினமலர் கட்டுரையை பாருங்களேன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ‘லெக்கின்ஸ்’ சர்ச்சை வேண்டாமே!
காஞ்சிப் பட்டுடுத்தி, கஸ்துாரிப் பொட்டு வைச்சு' என்ற ஜேசுதாசின், அந்நாளையப் பாடலை, யாரேனும், 'காட்டன் லெக்கின்ஸ் உடுத்தி, கறுப்பு ஸ்டிக்கர் பொட்டு வெச்சு தேவதை போல், நீ நடந்து வர வேண்டும்' என, ரீ-மிக்ஸ் செய்தாலும் செய்யலாம். இன்று, 'லெக்கின்ஸ்' அந்த அளவு பெண்களுக்கு பிடித்த உடை.
எல்லா உடைகளுக்கும், ஒரு வரலாறும், ஒரு பின்புலமும் இருப்பது போலவே, லெக்கின்சிற்கும் ஒரு சரித்திரம் உண்டு. லெக்கின்ஸ் என்பது ஆண் - பெண் இருவருக்குமான உடையாகத் தான், ஆரம்பத்தில் இருந்தது. 16ம் நுாற்றாண்டிலிருந்து வலம் வரும் உடை இது. ஐரோப்பாவில் குளிர் தாங்காத ஆண்களும், பெண்களும் தங்கள் கால் சாராய் அல்லது பாவாடைகளுக்கு உள்ளே அணிந்து கொள்ளக் கண்டுபிடித்த உடையே லெக்கின்ஸ். அப்போதெல்லாம் ஒரு காலுக்கு ஒன்று என்று, இந்த உடைக்கு இரு பகுதிகள் இருக்கும். ஒருவழியாக, 1960க்கு பின், அமெரிக்காவில், இன்று இருப்பது போன்ற லெக்கின்ஸ் வடிவமைப்பு வந்தது. குளிர் தேசங்களுக்காக, நைலானில் மட்டுமே உருவாக்கப்பட்ட லெக்கின்ஸ், காட்டன் மற்றும் இன்ன பிற சன்னமான இழைகளால் உருவாக ஆரம்பித்ததும், இதே கால கட்டத்தில்தான்.
பின், கிழக்காசிய சந்தையில் ஊடுருவிய இந்த உடை, இந்தியப் பெண்களுக்கு பிடித்தமான உடையாகிப் போனது, கடந்த, 4 - 5 ஆண்டுகளில் தான். சென்னை போன்ற பெரு நகரங்களில், கடந்த இரு ஆண்டுகளாக!சல்வார் கமீஸ் என்கிற உடை, தமிழகத்தில் அங்கீகாரம் பெற்ற பின், அதை அணியும் பெண்களுக்கு, ஒரு பெரிய பிரச்னை வந்தது. 'கமீஸ்' எனப்படும் மேல்சட்டை சரியாக அமைந்து விடும். கால் பகுதிக்கான, சல்வார் அல்லது சுரிதார் சரியாக அமையாது. 'சல்வாருக்கும், சுரிதாருக்கும் வித்தியாசம் தெரியாத பாவப்பட்டவர்களுக்கு, சல்வார் லொட லொட என்று இருக்கும். சுரிதார் வளையம் வளையமாக கால்களில் இறுக்கி இருக்கும்; 'ச்சூரி' என்றால், இந்தியில் வளையல். இந்தப் பிரச்னையை லெக்கின்ஸ் தீர்த்தது.
கறுப்பு, பச்சை, சிவப்பு என்று பொத்தாம் பொதுவான நிறங்களில், 5, 6 லெக்கின்ஸ் வாங்கி, கொடியில் தொங்கப் போட்டு விட்டால், கையில் கிடைக்கும் சல்வார் டாப்பை உருவி எடுத்து, 'மேட்ச்சிங்' லெக்கின்ஸ் அணிந்தால், பிரச்னை போயே போச்சு. காலைத் துாக்கி வண்டியில் போட சவுகரியம். உடலில் உறுத்தாத மென்மையான உடை என்கிற சவுகரியம். 'அயர்ன்' செய்ய வேண்டாம். இவை தான் இடைத்தேர்தலில் நிற்கிற ஆளுங்கட்சி மாதிரி, லெக்கின்ஸ் போட்டியின்றி ஜெயித்த காரணங்கள்.லெக்கின்ஸ் அணியலாமா என்று படம் பிடித்து போட்ட பத்திரிகைகள் யாவும், தம் பருத்த கால்களில், முக்கால் அளவு வெளியே தெரிய, அரை டிராயர் அணிந்து வரும் ஆண்களை அல்லது லுங்கியை துாக்கி, உள்ளே இருக்கும் பட்டா பட்டி உள் ஆடையை வெளிப்படுத்தும் ஆண்களை, படம் பிடித்து போடவே மாட்டார்கள்.
ஏனெனில், இவை எல்லாம் எவ்வளவு ஆபாசமேயானாலும், விற்பனை பொருளல்ல. பெண் உடல் சம்பந்தப்பட்ட எதுவும் தான் விற்பனை பொருள். இந்த விவாதங்கள் வரும் போது, 'நாங்க எதை போட்டுகிட்டா உங்களுக்கு என்ன; உங்க பார்வையை சரியா பாருங்க...' என்று பெண்கள் தரப்பும், 'உங்க பாதுகாப்புக்காகத் தான் நாங்க பேசறோம்...' என்று ஆண்கள் தரப்பும் எப்போதும் சப்தமிடுவர்ஜீன்ஸ் அணிந்த பெண், நீதிமன்றத்தில் நுழையலாமா? நீளக் குர்த்தி அணிந்திருந்தாலும், மேலே துப்பட்டா அணியாத பெண், கல்வி மன்றங்களில் நுழையலாமா? லெக்கின்ஸ் அணியலாமா கூடாதா? ஓயாத சர்ச்சைகள் பெண் உடைகள் பற்றி. டில்லி பஸ்சில் நடந்த, 'நிர்பயா' சம்பவத்திற்கு பின், பொறுப்பில் உள்ள ஒரு பிரமுகர், 'பெண்கள், நீண்ட கோட் மாதிரி உடைக்கு மேலே அணிந்தால், அவர்களுக்கு அது பாதுகாப்பு' எனக் கூறினார்.
இன்னமும், சிலர் வழங்கிய அறிவுரைகள், 'பெண்கள் ஒழுங்கா டிரஸ் செய்துக்கிட்டா, பாதி குற்றங்கள் நடக்காது!' பாதிக்கப்பட்டவர்களுக்கு அறிவுரைகளும், குற்றவாளிகளுக்கு வாய்தாவும் வழங்கி கொண்டிருக்கும் நம் அமைப்பின் விசித்திரங்களில் அந்த அறிவுரைகளும் அடக்கம்.
லெக்கின்ஸ் உண்மையாகவே ஆபாச உடையா? நம் பண்பாட்டின் சின்னமாக போற்றப்படும் புடவையை கூட, மிக ஆபாசமாக அணிய சில பெண்களால் முடியும். தன்னை வெளிப்படுத்தி கொள்வதில் ஆர்வமும், தன்னை பார்த்து விரியும் ஆணின் கண்களில் தன் முக்கியத்துவத்தை உணரும் இச்சையும் கொண்ட சில பெண்களால், எந்த பவித்திரமான உடையையும் ஆபாசமாக்கி விட முடியும்.
ஐரோப்பாவில் லெக்கின்ஸ் விற்கப்பட்ட, 18 - 19ம் நுாற்றாண்டுகளில், 'உள்ளாடைகளின் விளிம்புகள் வெளியே தெரியக்கூடும்' என்ற எச்சரிக்கை வாசகம் விற்பனை அட்டைகளில் இருந்ததாய் சிலர் கூறுகின்றனர்.உடைகளில் கவுரவம் என்பது, பெண்ணின் கருத்தோற்றத்திலும், பெண்ணை வெறித்துப் பார்க்கக் கூடாது என்ற கண்ணியம், ஆணின் கண்ணோட்டத்திலும் இயல்பாக வளர வேண்டியதே ஒரு நாகரிக சமூகத்தின், சரியான அளவுகோல். படங்கள் ஏற்படுத்தும் பரபரப்புகள் ஓய்ந்து விடும். ஏனெனில், உடை சார்ந்த மதிப்பீடுகள் காலத்திற்கு காலம் மாறுபவை. ஆனால், மாறாத மானுட மதிப்பீடு என்பது, ஆண் - பெண்ணை பார்க்கும் பார்வை. இவள் உடல் மட்டுமல்ல, ஒரு உயிர், ஒரு அறிவு, ஒரு ஆன்மா என்ற பார்வை இந்த மதிப்பீட்டை வளர் பருவ ஆணிடமும், பெண்ணிடமும் ஏற்படுத்த குடும்பங்கள், ஆசிரியர்கள், அறிவு ஜீவிகள், ஊடகங்கள் தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும். நமக்கு வேறு என்ன தான் வழி?
இமெயில்: bharathy.பாஸ்கர் @ gmail.com
-- பாரதி பாஸ்கர்,
பேச்சாளர்,
சமூக ஆர்வலர்
எல்லா உடைகளுக்கும், ஒரு வரலாறும், ஒரு பின்புலமும் இருப்பது போலவே, லெக்கின்சிற்கும் ஒரு சரித்திரம் உண்டு. லெக்கின்ஸ் என்பது ஆண் - பெண் இருவருக்குமான உடையாகத் தான், ஆரம்பத்தில் இருந்தது. 16ம் நுாற்றாண்டிலிருந்து வலம் வரும் உடை இது. ஐரோப்பாவில் குளிர் தாங்காத ஆண்களும், பெண்களும் தங்கள் கால் சாராய் அல்லது பாவாடைகளுக்கு உள்ளே அணிந்து கொள்ளக் கண்டுபிடித்த உடையே லெக்கின்ஸ். அப்போதெல்லாம் ஒரு காலுக்கு ஒன்று என்று, இந்த உடைக்கு இரு பகுதிகள் இருக்கும். ஒருவழியாக, 1960க்கு பின், அமெரிக்காவில், இன்று இருப்பது போன்ற லெக்கின்ஸ் வடிவமைப்பு வந்தது. குளிர் தேசங்களுக்காக, நைலானில் மட்டுமே உருவாக்கப்பட்ட லெக்கின்ஸ், காட்டன் மற்றும் இன்ன பிற சன்னமான இழைகளால் உருவாக ஆரம்பித்ததும், இதே கால கட்டத்தில்தான்.
பின், கிழக்காசிய சந்தையில் ஊடுருவிய இந்த உடை, இந்தியப் பெண்களுக்கு பிடித்தமான உடையாகிப் போனது, கடந்த, 4 - 5 ஆண்டுகளில் தான். சென்னை போன்ற பெரு நகரங்களில், கடந்த இரு ஆண்டுகளாக!சல்வார் கமீஸ் என்கிற உடை, தமிழகத்தில் அங்கீகாரம் பெற்ற பின், அதை அணியும் பெண்களுக்கு, ஒரு பெரிய பிரச்னை வந்தது. 'கமீஸ்' எனப்படும் மேல்சட்டை சரியாக அமைந்து விடும். கால் பகுதிக்கான, சல்வார் அல்லது சுரிதார் சரியாக அமையாது. 'சல்வாருக்கும், சுரிதாருக்கும் வித்தியாசம் தெரியாத பாவப்பட்டவர்களுக்கு, சல்வார் லொட லொட என்று இருக்கும். சுரிதார் வளையம் வளையமாக கால்களில் இறுக்கி இருக்கும்; 'ச்சூரி' என்றால், இந்தியில் வளையல். இந்தப் பிரச்னையை லெக்கின்ஸ் தீர்த்தது.
கறுப்பு, பச்சை, சிவப்பு என்று பொத்தாம் பொதுவான நிறங்களில், 5, 6 லெக்கின்ஸ் வாங்கி, கொடியில் தொங்கப் போட்டு விட்டால், கையில் கிடைக்கும் சல்வார் டாப்பை உருவி எடுத்து, 'மேட்ச்சிங்' லெக்கின்ஸ் அணிந்தால், பிரச்னை போயே போச்சு. காலைத் துாக்கி வண்டியில் போட சவுகரியம். உடலில் உறுத்தாத மென்மையான உடை என்கிற சவுகரியம். 'அயர்ன்' செய்ய வேண்டாம். இவை தான் இடைத்தேர்தலில் நிற்கிற ஆளுங்கட்சி மாதிரி, லெக்கின்ஸ் போட்டியின்றி ஜெயித்த காரணங்கள்.லெக்கின்ஸ் அணியலாமா என்று படம் பிடித்து போட்ட பத்திரிகைகள் யாவும், தம் பருத்த கால்களில், முக்கால் அளவு வெளியே தெரிய, அரை டிராயர் அணிந்து வரும் ஆண்களை அல்லது லுங்கியை துாக்கி, உள்ளே இருக்கும் பட்டா பட்டி உள் ஆடையை வெளிப்படுத்தும் ஆண்களை, படம் பிடித்து போடவே மாட்டார்கள்.
ஏனெனில், இவை எல்லாம் எவ்வளவு ஆபாசமேயானாலும், விற்பனை பொருளல்ல. பெண் உடல் சம்பந்தப்பட்ட எதுவும் தான் விற்பனை பொருள். இந்த விவாதங்கள் வரும் போது, 'நாங்க எதை போட்டுகிட்டா உங்களுக்கு என்ன; உங்க பார்வையை சரியா பாருங்க...' என்று பெண்கள் தரப்பும், 'உங்க பாதுகாப்புக்காகத் தான் நாங்க பேசறோம்...' என்று ஆண்கள் தரப்பும் எப்போதும் சப்தமிடுவர்ஜீன்ஸ் அணிந்த பெண், நீதிமன்றத்தில் நுழையலாமா? நீளக் குர்த்தி அணிந்திருந்தாலும், மேலே துப்பட்டா அணியாத பெண், கல்வி மன்றங்களில் நுழையலாமா? லெக்கின்ஸ் அணியலாமா கூடாதா? ஓயாத சர்ச்சைகள் பெண் உடைகள் பற்றி. டில்லி பஸ்சில் நடந்த, 'நிர்பயா' சம்பவத்திற்கு பின், பொறுப்பில் உள்ள ஒரு பிரமுகர், 'பெண்கள், நீண்ட கோட் மாதிரி உடைக்கு மேலே அணிந்தால், அவர்களுக்கு அது பாதுகாப்பு' எனக் கூறினார்.
இன்னமும், சிலர் வழங்கிய அறிவுரைகள், 'பெண்கள் ஒழுங்கா டிரஸ் செய்துக்கிட்டா, பாதி குற்றங்கள் நடக்காது!' பாதிக்கப்பட்டவர்களுக்கு அறிவுரைகளும், குற்றவாளிகளுக்கு வாய்தாவும் வழங்கி கொண்டிருக்கும் நம் அமைப்பின் விசித்திரங்களில் அந்த அறிவுரைகளும் அடக்கம்.
லெக்கின்ஸ் உண்மையாகவே ஆபாச உடையா? நம் பண்பாட்டின் சின்னமாக போற்றப்படும் புடவையை கூட, மிக ஆபாசமாக அணிய சில பெண்களால் முடியும். தன்னை வெளிப்படுத்தி கொள்வதில் ஆர்வமும், தன்னை பார்த்து விரியும் ஆணின் கண்களில் தன் முக்கியத்துவத்தை உணரும் இச்சையும் கொண்ட சில பெண்களால், எந்த பவித்திரமான உடையையும் ஆபாசமாக்கி விட முடியும்.
ஐரோப்பாவில் லெக்கின்ஸ் விற்கப்பட்ட, 18 - 19ம் நுாற்றாண்டுகளில், 'உள்ளாடைகளின் விளிம்புகள் வெளியே தெரியக்கூடும்' என்ற எச்சரிக்கை வாசகம் விற்பனை அட்டைகளில் இருந்ததாய் சிலர் கூறுகின்றனர்.உடைகளில் கவுரவம் என்பது, பெண்ணின் கருத்தோற்றத்திலும், பெண்ணை வெறித்துப் பார்க்கக் கூடாது என்ற கண்ணியம், ஆணின் கண்ணோட்டத்திலும் இயல்பாக வளர வேண்டியதே ஒரு நாகரிக சமூகத்தின், சரியான அளவுகோல். படங்கள் ஏற்படுத்தும் பரபரப்புகள் ஓய்ந்து விடும். ஏனெனில், உடை சார்ந்த மதிப்பீடுகள் காலத்திற்கு காலம் மாறுபவை. ஆனால், மாறாத மானுட மதிப்பீடு என்பது, ஆண் - பெண்ணை பார்க்கும் பார்வை. இவள் உடல் மட்டுமல்ல, ஒரு உயிர், ஒரு அறிவு, ஒரு ஆன்மா என்ற பார்வை இந்த மதிப்பீட்டை வளர் பருவ ஆணிடமும், பெண்ணிடமும் ஏற்படுத்த குடும்பங்கள், ஆசிரியர்கள், அறிவு ஜீவிகள், ஊடகங்கள் தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும். நமக்கு வேறு என்ன தான் வழி?
இமெயில்: bharathy.பாஸ்கர் @ gmail.com
-- பாரதி பாஸ்கர்,
பேச்சாளர்,
சமூக ஆர்வலர்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ‘லெக்கின்ஸ்’ சர்ச்சை வேண்டாமே!
மேற்கோள் செய்த பதிவு: 1166231ayyasamy ram wrote:நம் ஊரிலும் பாட்டன், கொள்ளுப்பாட்டன் காலத்தில்
பெண்கள் ரவிக்கை இன்றி திரிந்த காலங்கள் உண்டு.
ஆண்களும் ஒரு லங்கோடுடன் திரிந்தனர்.
ஆக காலத்திற்கேற்ப, தேவைகளுக்கேற்ப உடைகளும்
மாறி வந்துள்ளன.
-
அதுக்காக இப்படியா ராம் அண்ணா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 2 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பேத்திகள் லெக்கின்ஸ் போடுகிறார்கள்...!
» வேண்டாமே... விவாகரத்து...
» முதன் முதலாக லெக்கின்ஸ் அணிந்த பெண்...:)
» அமெரிக்காவில் லெக்கின்ஸ் அணிந்த பெண்கள் விமானத்தில் பயணம் செய்ய தடை
» படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
» வேண்டாமே... விவாகரத்து...
» முதன் முதலாக லெக்கின்ஸ் அணிந்த பெண்...:)
» அமெரிக்காவில் லெக்கின்ஸ் அணிந்த பெண்கள் விமானத்தில் பயணம் செய்ய தடை
» படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|