புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாலாட்டிய வாலாட்டி! Poll_c10வாலாட்டிய வாலாட்டி! Poll_m10வாலாட்டிய வாலாட்டி! Poll_c10 
21 Posts - 84%
heezulia
வாலாட்டிய வாலாட்டி! Poll_c10வாலாட்டிய வாலாட்டி! Poll_m10வாலாட்டிய வாலாட்டி! Poll_c10 
2 Posts - 8%
வேல்முருகன் காசி
வாலாட்டிய வாலாட்டி! Poll_c10வாலாட்டிய வாலாட்டி! Poll_m10வாலாட்டிய வாலாட்டி! Poll_c10 
1 Post - 4%
viyasan
வாலாட்டிய வாலாட்டி! Poll_c10வாலாட்டிய வாலாட்டி! Poll_m10வாலாட்டிய வாலாட்டி! Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாலாட்டிய வாலாட்டி! Poll_c10வாலாட்டிய வாலாட்டி! Poll_m10வாலாட்டிய வாலாட்டி! Poll_c10 
213 Posts - 42%
heezulia
வாலாட்டிய வாலாட்டி! Poll_c10வாலாட்டிய வாலாட்டி! Poll_m10வாலாட்டிய வாலாட்டி! Poll_c10 
199 Posts - 39%
mohamed nizamudeen
வாலாட்டிய வாலாட்டி! Poll_c10வாலாட்டிய வாலாட்டி! Poll_m10வாலாட்டிய வாலாட்டி! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
வாலாட்டிய வாலாட்டி! Poll_c10வாலாட்டிய வாலாட்டி! Poll_m10வாலாட்டிய வாலாட்டி! Poll_c10 
21 Posts - 4%
prajai
வாலாட்டிய வாலாட்டி! Poll_c10வாலாட்டிய வாலாட்டி! Poll_m10வாலாட்டிய வாலாட்டி! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
வாலாட்டிய வாலாட்டி! Poll_c10வாலாட்டிய வாலாட்டி! Poll_m10வாலாட்டிய வாலாட்டி! Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
வாலாட்டிய வாலாட்டி! Poll_c10வாலாட்டிய வாலாட்டி! Poll_m10வாலாட்டிய வாலாட்டி! Poll_c10 
8 Posts - 2%
Guna.D
வாலாட்டிய வாலாட்டி! Poll_c10வாலாட்டிய வாலாட்டி! Poll_m10வாலாட்டிய வாலாட்டி! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
வாலாட்டிய வாலாட்டி! Poll_c10வாலாட்டிய வாலாட்டி! Poll_m10வாலாட்டிய வாலாட்டி! Poll_c10 
7 Posts - 1%
mruthun
வாலாட்டிய வாலாட்டி! Poll_c10வாலாட்டிய வாலாட்டி! Poll_m10வாலாட்டிய வாலாட்டி! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாலாட்டிய வாலாட்டி!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 12, 2015 2:04 am

வாலாட்டிய வாலாட்டி! BU7RTvN1TGKjsNVl4n0Q+E_1444203057

அது ஓர் அழகான தோட்டம். அதில் ஏராளமான பழ மரங்களும், பூச்செடிகளும் நிறைந்திருந்தன. பல ஜாதி மரங்கள் கம்பீரமாக நிமிர்ந்து நின்றன. குளுமையான நிழல், பறவைகளின் குதூகலமான குரல்கள்.

அது ஒரு ரம்மியமான இடம். ஊரில் உள்ளவர்கள் இன்பமாகப் பொழுதை போக்க, அந்தத் தோட்டத்துக்குத்தான் வருவார்கள். பணக்கார வீட்டார் தங்கள் குழந்தைகளைத் தள்ளு வண்டியில் வைத்து ஒற்றையடிப் பாதையில் உல்லாச நடை போடுவர்.

இப்படி ஒரு குழந்தையை அழைத்துச் சென்றபோதுதான் அது நிகழ்ந்திருக்க வேண்டும். குழந்தைகளின் கைகளுக்கு கம்பளி உறை போட்டிருந்திருக்கின்றனர். குழந்தைகளுக்கு அது இம்சையாக இருந்ததோ அல்லது நழுவி கீழே விழுந்து விட்டதோ தெரியவில்லை. ஒரு கையுறை அந்த நடைபாதையில் அநாதையாகக் கிடந்தது. பஞ்சு போன்ற வெண்மை நிறத்தில் அழகிய சின்னஞ்சிறு கம்பளிக் கையுறை.

அந்த வழியாக நடந்து வந்த ஒரு பாட்டி கம்பளி உறையைப் பார்த்தாள். 'எந்தக் குழந்தையுடையதோ? இப்படி வழியில் கிடக்கிறதே...' என்று அதை எடுத்து, மரத்தில் மாட்டினாள். கையுறையைக் காணாதவர்கள் நாளைக்கு இங்கு வந்தால் எடுத்துப் போகட்டுமே என்ற நல்லெண்ணத்துடன்.

ஆனால், பாட்டி மாட்டிய மரத்தில் ஒரு வாலாட்டிக் குருவி வசித்து வந்தது. அது ரொம்பப் பேராசைக்கார குருவி. சிவந்த மார்பு, மஞ்சள் வால், நீல இறகு பார்க்க அழகாக இருக்கும். ஆனால், பழகுவதற்கு முசுடு. அது வசித்து வந்த மரத்தில் ஏராளமான பழங்கள் இருந்தன.

ஆனால், அந்த வாலாட்டி குருவி, வேறு எந்தப் பறவையையும் அந்த மரத்தில் உள்ள கனிகளைத் தொடவிடாது. அத்தனை சுயநலம். அந்த மரத்தில்தான் பாட்டி கம்பளி உறையை மாட்டி விட்டுப் போயிருந்தாள்.
வாலாட்டிக் குருவி, 'க்விக்... க்விக்' என்று தாவித் தாவி அதன் அருகே வந்தது.

'இது என்ன புதிதாக இருக்கு?' என்று எட்டிப் பார்த்தது. என் உடல் அளவுக்குச் சரியாக இருக்கிறதே! ம்... கதகதப்பாகவும் இருக்கிறது என்று அதன் உள்ளே புகுந்து ஆராய்ந்தது. பிறகு வெளியே வர முயற்சி செய்தது. அதனால், வெளியே வரமுடியவில்லை.

''ஹா...ஹா! இதுவும் நல்லதுக்குத் தான். இதிலிருந்தபடியே வேடிக்கை செய்கிறேன். என்னுடைய இந்த மரத்தின் பழங்களைக் கொள்ளையடித்துப் போக வரும் பறவைகளை மிரட்டி, விரட்டச் சரியான சாதனம் இது,'' என்று மகிழ்ந்தது வாலாட்டிக் குருவி.

அது எண்ணியபடியே மைனா வந்தது. வாலாட்டி கம்பளி உறைக்குள்ளிருந்தபடியே தாவியது. அதனால், வெள்ளை உறை ஊசலாடியது. பாவம் மைனா பயந்து பறந்தோடி விட்டது. வாலாட்டிக்குச் சிரிப்பான சிரிப்பு. அடுத்து கிளி வந்தது.

'வந்தாயா? வா, வா, ஒரு பழத்தைக் கூட விடமாட்டாயே நீ!' என்று கருவிக் கொண்டே வாலாட்டிக் குருவி, தாவித் தாவிக் குதித்தது. இதனால் வெள்ளைக் கம்பளி உறை வேகமாக ஆடியது. வாலாட்டி உள்ளிருப்பதை அறியாத கிளி அலறி அடித்துக் கொண்டு ஓடியது. இப்படி அந்த மரத்துக்கு வந்த ஒவ்வொரு பறவையையும் பயமுறுத்தி விரட்டியது வாலாட்டி.

''ஏதோ பூதம் பிசாசு... வெள்ளையாக...'' என்று கலவரத்துடன் பறவைகள் பேசிக் கொள்வதைக் கேட்ட வாலாட்டிக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி!

ஆனால், இந்தச் சிரிப்பும், மகிழ்ச்சியும் எத்தனை நேரத்துக்கு? அதற்குப் பசித்தது. அந்தச் சின்ன இடத்துக்குள் முடங்கிக் கிடப்பது அதன் உடலில் வலியைக் கொடுத்தது. 'தமாஷ் போதும் இனி வெளியேறிச் சாப்பிடப் போகலாம்,' என்று வெளியேற முயன்றது.

ம்ஹும்... அதனால் வெளியே வர முடியவில்லை. கம்பளி உறை அதன் உடலின் பிடிப்பாகப் பொருந்திவிட்டது.
ஐயையோ! இப்படியே இதற்குள்ளேயே இருந்தால் நான் பட்டினியால் சாகத்தான் வேணும்!
''ஐயோ! என்னைக் காப்பாற்றுங்களேன்,'' என்று கதறியது. ஆனால், ஒரு பறவையும் அதன் அருகில் வரவில்லை ஏன்?

அது ஏதோ, 'பேய், பிசாசு' என்ற எண்ணத்தில் எல்லாப் பறவைகளும் எட்டி நின்றபடி அதையே பார்த்துக் கொண்டிருந்தன.

இரவு முழுவதும் அந்தச் சிறையிலேயே சிக்கித் தவித்து கண்ணீர் விட்டுக் கதறியபடி இருந்தது வாலாட்டி. ஒருநாள் முழுவதும் ஏதும் சாப்பிடாமல் இருந்ததால், கவலையும் பீதியும் அதன் உடலை இளைக்கச் செய்துவிட்டன. ஆகவே, மறுநாள் வெளியேறுவதற்கான அதன் முயற்சி பலனளிக்க, விடுதலையும் கிடைத்தது.

''ஆண்டவா! இனி என் சகோதரப் பறவைகள் எதையும் அலட்சியமாக நினைக்க மாட்டேன்; பயமுறுத்த மாட்டேன்; இம் மரத்தின் பழங்களை நான் மட்டுமே தின்பதற்கு வைத்துக்கொள்ள மாட்டேன். இனி எல்லாருடனும் சிநேகமா இருப்பேன்,'' என்று கூறியபடி இறுகிப்போன இறக்கைகளை நீவியபடி பசியை தணித்துக் கொண்டது குருவி.

சிறுவர் மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 12, 2015 2:06 am

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 12, 2015 4:26 am

வாலாட்டிய வாலாட்டி! 3838410834 வாலாட்டிய வாலாட்டி! 3838410834

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக