புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஃபேஸ்புக் அடிமைகளா நாம்?  Poll_c10ஃபேஸ்புக் அடிமைகளா நாம்?  Poll_m10ஃபேஸ்புக் அடிமைகளா நாம்?  Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
ஃபேஸ்புக் அடிமைகளா நாம்?  Poll_c10ஃபேஸ்புக் அடிமைகளா நாம்?  Poll_m10ஃபேஸ்புக் அடிமைகளா நாம்?  Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஃபேஸ்புக் அடிமைகளா நாம்?  Poll_c10ஃபேஸ்புக் அடிமைகளா நாம்?  Poll_m10ஃபேஸ்புக் அடிமைகளா நாம்?  Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
ஃபேஸ்புக் அடிமைகளா நாம்?  Poll_c10ஃபேஸ்புக் அடிமைகளா நாம்?  Poll_m10ஃபேஸ்புக் அடிமைகளா நாம்?  Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஃபேஸ்புக் அடிமைகளா நாம்?


   
   
kumaravel2011
kumaravel2011
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 19
இணைந்தது : 24/07/2015

Postkumaravel2011 Sat Jul 25, 2015 8:32 am

உழைப்பு யாருடையது, செல்வம் யாருடையது... என்பது ஆந்திராவின் மக்கள் கவிஞரான செரபண்ட ராஜுவின் கவிதை வரி.


இந்த ஆவேச வரிகள் உழைக்கும் மக்களுக்காக எழுதப்பட்டவை. ஃபேஸ்புக் தொடர்பாக அமெரிக்கரான மைக்கேல் ரோசன்பிளம் என்பவர் எழுதியுள்ள இணைய பத்தியை படிக்கும்போது இந்த வரிகள் தான் நினைவுக்கு வருகின்றன. உழைப்பாளிகளுக்கான செரபண்ட ராஜுவின் தார்மீக கோபம் போல, ரோசன்பிளம் இணையவாசிகளின் சார்பில், உள்ளடக்கம் யாருடையது, செல்வம் யாருடையது? என கேட்டு இந்தப் பத்தியை எழுதியிருக்கிறார்.


ஹஃபிங்டன் போஸ்ட் இணைய இதழில் ஃபேஸ்புக்கை தொழிற்சங்கமயமாக்குவோம் (Let's Unionize Facebook) எனும் தலைப்பில் எழுதியுள்ள இந்தப் பத்தியில், அவர் நாமெல்லாம் ஃபேஸ்புக் அடிமைகளா? என்று கேள்வி எழுப்புகிறார். ஃபேஸ்புக்குக்கு மட்டும் அல்ல, டிவிட்டர் அடிமைகள், இன்ஸ்டாகிராம் அடிமைகள் என்றும் குறிப்பிடுகிறார். இந்த இணைய சேவைகளுக்காக நாம் ஓயாமல் உள்ளடக்கத்தை உருவாக்கி கொடுத்துக்கொண்டிருக்கிறோம் என்றும் அவர் குறைப்பட்டுக்கொள்கிறார்.


இந்தக் கருத்துக்கு அவர் வந்து நிற்கும் விதம்தான் கவனத்துக்கு உரியது. வரலாற்றின் இடைப்பட்ட காலமான 15-ம் நூற்றாண்டில் நிலமே பெரும் செல்வமாக கருதப்பட்டதாகவும், பெரும் நிலப்பரப்பை கொண்ட பிரபுக்களிடம் பலரும் அடிமைகளாக வேலை பார்த்தனர் என்றும் குறிப்பிடுகிறார்.


சைபர்வெளி அடிமைகள்


காலம் மாறியிருக்கிறதே தவிர வரலாறு மாறவில்லை. இன்று நிலம் என்பது சைபர்வெளியாகி இருக்கிறது, அதில் நாமெல்லாம் அடிமைகளாக இருக்கிறோம், அமேசானின் ஜெப் பெசோசும், ஃபேஸ்புக்கின் ஜக்கர்பெர்கும் இணைய பிரபுக்களாக நமது உள்ளடக்கத்தைக் கொண்டு செல்வம் சேர்த்துக்கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
ஜக்கர்பெர்க்


ஃபேஸ்புக்கின் 100 சதவீத உள்ளடக்கம் நம்முடையது அல்லவா என கேட்கும், இதை இலவசமாக செய்து கொண்டிருக்கும் முட்டாள்கள் அல்லவா நாம் என்றும் கேட்கிறார். இதை அவர் சொல்லும் விதம் இன்னும் துடிப்பாக இருக்கிறது. தினமும் நாம் எந்த ஊதியமும் பெறாமல், ஜக்கர்பர்கின் இணைய நிலத்தில் குடியிருக்கும் உரிமைக்காக அவருக்காக உள்ளடக்கத்தை உருவாக்கி கொண்டிருக்கிறோம் என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார். ஜக்கர்பர்கின் 33 பில்லியன் டாலர் செல்வமும் நாம் சேர்த்து கொடுத்தது என்கிறார்.


இதன் பிறகு அவர் சொல்லும் விஷயம் என்ன தெரியும? 20-ம் நூற்றாண்டில் இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் உள்ள தொழிலாளர்கள் தங்களிடம் உழைப்பு எனும் சக்தி இருப்பதை உணர்ந்து கொண்டு அதன் ஆற்றலை உணர்த்த தொழிற்சங்கம் அமைத்துக்கொண்டது போல, ஃபேஸ்புக் பயனாளிகள் தொழிற்சங்கம் அமைக்கலாகாதா? என்றும் ரோசன்பிளம் கேள்வி எழுப்புகிறார்.


ஃபேஸ்புக்குக்காக உழைப்பு!


நிச்சயம் புதுவிதமான சிந்தனை தான். அதற்காக ஃபேஸ்புக்குக்கு எதிராக நாம் கொடி பிடித்துப் போராட வேண்டும் என்று அர்த்தமில்லை. ஆனால், நிச்சயம் நமது ஃபேஸ்புக் பழக்கம் பற்றி யோசித்தாக வேண்டும். ஃபேஸ்புக்கை இலவச சேவையாக கருதி மகிழ்ச்சியுடன் பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம். ஆனால் நமது உள்ளடக்கத்தை வைத்து ஃபேஸ்புக் விளம்பர வருவாயை அள்ளிக்கொண்டிருக்கிறது என்பதை மறந்து விடுகிறோம். நம்மை அறியாமல் நாம் ஃபேஸ்புக் போன்ற தளங்களுக்காக அடிமைகள் போல உள்ளடக்கத்தை உருவாக்கி கொண்டிருக்கிறோம்.


இந்தக் கருத்து உங்களுக்கு ஏற்புடையதாக இல்லாமல் இருக்கலாம். சமூக வலைப்பின்னலாக அது ஏற்படுத்தி தரும் பலன்களை வைத்து நீங்கள் வாதிடலாம். உண்மைதான், ஃபேஸ்புக் இணைய யுகத்தில் நட்புக்கும், தகவல் பரிமாற்றத்துக்கும் இன்னும் பல பயன்களுக்கும் வித்திட்டிருக்கிறது. மறுப்பதற்கில்லை. பல நேரங்களில் ஃபேஸ்புக் போன்ற சேவைகள் சமூக ஊடகங்களாக செயல்படுகின்றன. எகிப்திலும் வளைகுடா நாடுகளிலும் மலர்ந்த சமூகப் புரட்சியில் ஃபேஸ்புக்குக்கும் அதன் சமூக சகாக்களுக்கும் முக்கிய பங்கிருக்கிறது. சமூக ஊடகங்களில் பயன்பாட்டுக்கு இன்னும் நிறைய உதாரணங்கள் இருக்கின்றன.


ஃபேஸ்புக் பயன்பாடு


ஃபேஸ்புக்கை நாம் எப்படிப் பயன்படுத்தப் பழகியிருக்கிறோம் என்பதுதான் பிரச்னை. சமூக வலைப்பின்னலாக ஃபேஸ்புக்கின் ஆதார பலம் நண்பர்கள், நண்பர்களின் நண்பர்கள், அவர்களின் நண்பர்கள் என நட்பு வளையத்தை விரியச்செய்வதுதான். இந்த நட்பு வளையத்தில் எதைப் பகிர்ந்து கொள்கிறோம் என்பதும், எதற்காக பகிர்ந்து கொள்கிறோம் என்பது முக்கியமானது இல்லையா?



எல்லாவற்றையும் நிலைத்தகவலாக பகிர்ந்து கொள்வது இயல்பாக இருக்கிறது. வீட்டு விஷேசத்தில் எடுத்த புகைப்படங்களையும், சுற்றுலா பயணத்தில் எடுத்த புகைப்படங்களையும் எந்த யோசனையும் இல்லாமல் ஃபேஸ்புக்கில் பகிர்கிறோம். அதனால் என்ன வந்துவிடப்போகிறது?


ஆனால், உங்கள் தனிப்பட்ட பயணம் பற்றிய புகைப்படம், நண்பர்களின் நண்பர்களுக்கு எந்த விதத்தில் அவசியமானது என்று யோசித்துப்பாருங்கள்? உங்கள் மகனுடனோ, மகளுடனோ இருக்கும் புகைப்படம் நிலைத்தகவலாக வெளியிடுவது எதற்காக? அவற்றுக்கு காரணம் இல்லாமல் கிடைக்கும் லைக்குகளை விட்டுத்தள்ளுங்கள்.


புகைப்படங்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வது இயல்பானது தான். வீட்டுக்கு வரும் நண்பர்களிடமும் உறவினர்களிடமும் புகைப்பட ஆல்பத்தை காண்பித்து மகிழ்வது வழக்கமானது தான். ஆனால் நன்றாக யோசித்துப்பாருங்கள், எல்லோரிடமும் நீங்கள் இவ்வாறு செய்வதில்லை. அதற்கு ஒரு பரஸ்பர நெருக்கம் தேவை. வரவேற்பறையில் பேசிக்கொண்டிருக்கும் எல்லா நண்பர்களுக்கும் நீங்கள் புகைப்பட ஆல்பத்தை காட்ட விரும்ப மாட்டீர்கள். அதற்கான நெருக்கமும் இணக்கமும் இல்லாத நிலையில் அந்த நண்பரும் கூட அதை விரும்பமாட்டார். இதெல்லாம் எழுதப்படாத சமூக விதிகள். இயல்பாக எல்லோரும் அனுசரித்து நடப்பவை.


தனியுரிமை கவலை


ஆனால் ஃபேஸ்புக்கில் சொந்த ஊர் பயண புகைப்படங்களை பகிர்ந்து கொள்வது எந்தவகையான வெளிப்பாடு? ஊர் மாறியிருக்கிறது, விவசாயம் மங்கிவிட்டது போன்ற பொதுவான எண்ணங்களை பகிர்ந்து கொள்ளலாம். கிராமத்து மண்வாசத்தையும் பகிர்ந்து கொள்ளலாம். ஆனால் தனிப்பட்ட குடும்பக் காட்சிகளை சித்தரிக்கும் புகைப்படங்களை பகிர்வது எதனால்? உங்கள் பிள்ளைகளின் புகைப்படங்களும் குடும்பத்தின் புகைப்படங்களும் தேவையில்லாமல் இணையத்தில் எல்லா இடங்களிலும் இறைந்து கிடப்பது நல்லதல்ல.


வேலைக்கு ஆள் எடுக்கும் நிறுவனங்கள், விண்ணப்பித்தவர்கள் பற்றி தகவல்கள் சேகரிக்க சமூக வலைப்பின்னல் பக்கங்களை அலசிக்கொண்டிருக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா? விண்ணப்பத்தில் குறிப்பிடும் தகவல்களை எல்லாம் விட ஒருவரைப் பற்றிய சித்திரத்தை அவரது சமூக வலைப்பின்னல் பதிவுகள் உணர்த்தி விடுவதாக கருதப்படுவதும் உங்களுக்குத் தெரியுமா? இன்சூரன்ஸ் நிறுவனங்கள் ஃபேஸ்புக் பதிவுகளை ஆதாரமாகக் கொண்டு செயல்படுவதாக கூறப்படுவதை அறிந்திருக்கிறீர்களா?


நேற்று நீங்கள் ஃபேஸ்புக்கில் எந்தச் சிந்தனையும் இல்லாமல் பகிர்ந்து கொண்ட தகவலும் புகைப்படமும் என்றேனும் ஒரு நாள் உங்களுக்கு வில்லங்கமாக முடியும் வாய்ப்பு உள்ளது என்பதும் தெரியுமா?


ஜார்ஜ் ஆர்வெல் சித்தரித்த கண்காணிப்பு யுகம் போல நாளை யாரேனும், ஃபேஸ்புக்கில் நீங்கள் விரோதமான கருத்தை சொல்லியிருந்தீர்களே என்று கேட்கக்கூடிய நிலை வரலாம். இது கற்பனை தான். ஆனால் நிகழாது என்று சொல்வதற்கில்லை.


என்ன செய்யலாம் ?


அதற்காக ஃபேஸ்புக் பயன்பாடே தவறு என்று பொருள் அல்ல. அது உங்கள் விருப்பம்; உரிமையும் கூட. ஃபேஸ்புக்கைப் பயன்படுத்துங்கள், ஆனால் எதற்காக பயன்படுத்துகிறோம் என யோசிக்கவும் செய்யுங்கள். லைக்குகளுக்கும், கமெண்ட்ஸுக்கும் ஆசைபட்டு நீங்கள் பொதுவில் பகிர விரும்பாத எதையும் இணையத்தில் ஆவணப்படுத்தாதீர்கள். இணையத்தில் வெளியிட்ட எதையும் நீங்கள் திரும்ப பெற முடியாது? உங்கள் பக்கத்தில் டெலிட் செய்தாலும் அதற்கு முன்பாகவே அதன் நகல் இணையத்தில் பல இடங்களில் பதிவாகி இருக்கும்.


எனவே, எதையும் பகிரும் முன், இது சமூக வெளிக்கு ஏற்றதா என யோசியுங்கள்.


கருத்துகள் என்றால் வலைப்பதிவாக எழுத முடியுமா என முயன்று பாருங்கள். புகைப்படங்கள் என்றால் இமெயில் மூலம் தேர்ந்தெடுத்த நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாமா என யோசியுங்கள்.


மறக்காமல் ஃபேஸ்புக்கின் தனியுரிமை அமைப்புக்கு (பிரைவசி செட்டிங்) சென்று பாருங்கள். எந்த வகை தகவல்கள் யாருக்கானவை என தீர்மானியுங்கள். தனியுரிமையில் இறுதி அதிகாரம் ஃபேஸ்புக்கிடமே இருக்கிறது என்றாலும் கொடுக்கப்பட்டுள்ள உரிமையையாவது பயன்படுத்திக்கொள்ளுங்கள்.


இது ஃபேஸ்புக்கைச் சரியாக பயன்படுத்த வைக்கும்.


விக்கி வாழ்க!


வலைப்பதிவு யுகம் முடிந்து ஃபேஸ்புக் யுகம் துவங்கியிருப்பதாக கருதப்படும் நிலையில், பலரும் வலைப்பதிவுக்கு முழுக்கு போட்டு ஃபேஸ்புக் படைப்பாளிகளாக மாறுகிறார்கள் என்று சொல்லப்படும் காலத்தில் இந்த எதிர்கருத்து ஆச்சர்யத்தை அளிக்கலாம். ஆனால் இணையத்தில் தனியுரிமையின் அவசியத்தையும் அதன் அலட்சியத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளையும் மெல்ல உணரத் துவங்கியிருக்கிறோம் என்பதையும் மறந்துவிடக்கூடாது.


எல்லாவற்றையும் பகிரும் போக்கு பற்றிய கேள்விகளை எழுப்புவதுதான் இந்தப் பதிவின் நோக்கம்.


இன்னொரு முக்கிய விஷயம், சமூக ஊடக் பயன்பாட்டில் ஒருவர் தனக்கான சரியான வலைப்பின்னலைக் கண்டுகொள்வதும் முக்கியம். கல்லூரி மாணவர்களுக்கும், பணியிடத்தில் இருப்பவர்களுக்கும் ஃபேஸ்புக் பயன்பாடு கேளிக்கையைத் தரலாம். ஆனால் தொழில்முறை நபர்களுக்கான லிங்க்டுஇன் சமூக வலைப்பின்னல் தங்களுக்கு இன்னும் பொருத்தமாக இருக்காதா? என யோசிக்க வேண்டும்.


இவ்வளவு ஏன் விக்கிபீடியா கூட சமூக வலைப்பின்னல் ரகத்தைச் சேர்ந்ததுதான் தெரியுமா? ஓயாமல் நிலைத்தகவல் பதிவு செய்வதற்கு நடுவே விக்கிபீடியாவிலும் நல்ல தகவல்களைப் பகிர்ந்து கொள்ளலாமே!


ஃபேஸ்புக் தொடர்பான மைக்கேல் ரோசன்பிளம்’ கட்டுரை: http://www.huffingtonpost.com/michael-rosenblum/lets-unionize-facebook_b_7526822.html?ir=India&adsSiteOverride=in


குறிப்பு: ஃபேஸ்புக் தொடர்பான சிந்தனைகளில் ஓபன் சோர்ஸ் முன்னோடியான ரிச்சர்ட் ஸ்டால்மன் கருத்துகள் முக்கியமானவை. ஃபேஸ்புக் பயன்பாட்டுக்கு எதிராக அவர் எழுதிய கட்டுரை எழுப்பும் கேள்விகள் சிந்தனைக்குரியவை; https://stallman.org/facebook.html
By சைபர்சிம்மன்
http://www.dinamani.com/junction/nettum-nadappum/2015/06/12/ஃபேஸ்புக்-அடிமைகளா-நாம்/article2861101.ece

கவியரசன்(கவிச்சுடர்)
கவியரசன்(கவிச்சுடர்)
பண்பாளர்

பதிவுகள் : 168
இணைந்தது : 16/07/2015

Postகவியரசன்(கவிச்சுடர்) Sat Jul 25, 2015 10:31 am

நல்ல விசயம் நண்பரே தேவையான பதிவுதான் தற்போது



கவியரசன்
தமிழ் பிரியன்
தமிழ் பிரியன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 19/09/2015

Postதமிழ் பிரியன் Tue Sep 22, 2015 10:22 pm

நல்ல பதிவு ,

இதை மக்களிடம் கொண்டு சேர்க்க கூட பேஸ் புக் தான் தேவைப்படும்.

காலம் இன்டர்நெட் (கலி) காலமா போச்சு





Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Wed Sep 23, 2015 6:25 am

இழப்பதற்கு எதுவும் இல்லை என்று கருதுபவர்களுக்கு எச்சரிக்கை எதுவும் அவசியம் இல்லை. எதோ பொழுது போனால் சரி என்று நினைப்பவர்களுக்கும் மனதில் உள்ளவற்றை பகிர்ந்து கொள்வதில் கிடைக்கும் சுகத்தை அனுபவிப்பவர்களுக்கும் எதை மூடி எதை மறைத்து என்ன ஆகப் போகிறது?


ஃபேஸ்புக் அடிமைகளா நாம்?  5j1PYQXS3qnMID6mACPD+vol2(76)


கண்காணி இல் என்று கள்ளம பல செய்வார்
கண்காணி இல்லா இடமில்லை காணுங்கால்
கண்காணியாகக் கலந்து எங்கும் நின்றானை
கண்காணி கண்டார் களவு ஒழிந்தாரே--திருமந்திரம்2043






http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
தமிழ் பிரியன்
தமிழ் பிரியன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 19/09/2015

Postதமிழ் பிரியன் Thu Sep 24, 2015 11:17 am

Namasivayam Mu wrote:இழப்பதற்கு  எதுவும் இல்லை  என்று கருதுபவர்களுக்கு  எச்சரிக்கை எதுவும் அவசியம் இல்லை. எதோ பொழுது போனால் சரி என்று நினைப்பவர்களுக்கும்  மனதில் உள்ளவற்றை பகிர்ந்து கொள்வதில் கிடைக்கும் சுகத்தை அனுபவிப்பவர்களுக்கும் எதை மூடி எதை மறைத்து என்ன ஆகப் போகிறது?

உண்மை




கண்காணி இல் என்று கள்ளம பல செய்வார்
  கண்காணி இல்லா இடமில்லை காணுங்கால்
  கண்காணியாகக் கலந்து எங்கும் நின்றானை
  கண்காணி கண்டார் களவு ஒழிந்தாரே--திருமந்திரம்2043


மேற்கோள் செய்த பதிவு: 1164238

avatar
jagan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 36
இணைந்தது : 16/11/2008

Postjagan Tue Nov 17, 2015 1:57 am

கவியரசன்(கவிச்சுடர்) wrote:நல்ல விசயம் நண்பரே தேவையான பதிவுதான் தற்போது
மேற்கோள் செய்த பதிவு: 1153242 ஃபேஸ்புக் அடிமைகளா நாம்?  103459460

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக