ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரூ.5 கோடி மதிப்புள்ள நகைகள், ரூ. 17 லட்சம் கொள்ளை

2 posters

Go down

 ரூ.5 கோடி மதிப்புள்ள நகைகள், ரூ. 17 லட்சம் கொள்ளை Empty ரூ.5 கோடி மதிப்புள்ள நகைகள், ரூ. 17 லட்சம் கொள்ளை

Post by T.N.Balasubramanian Fri Sep 25, 2015 11:39 am

தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.5 கோடி மதிப்புள்ள நகைகள், ரூ. 17 லட்சம் கொள்ளை... பட்டப்பகலில் துணிகரம்


 ரூ.5 கோடி மதிப்புள்ள நகைகள், ரூ. 17 லட்சம் கொள்ளை X1MKdAZ4SrWDy7sADYkl+24-1443111305-manappuram-newwwww

தேனி-மதுரை பிரதான சாலையில் உள்ள இந்த நிறுவனத்தின் ஊழியர்கள் இன்று காலை 10 மணிக்கு பணிக்கு வந்தனர். சிறிது நேரத்தில் 6 பேர் அந்நிறுவனத்தில் நுழைந்தனர். சந்தேகத்திற்கிடமான வகையில் அவர்கள் நடந்து கொண்டதையடுத்து, அவர்களிடம் யார் என ஊழியர்கள் விசாரித்தனர். அப்போது, கண் இமைக்கும் நேரத்தில் 6 பேர் கொண்ட கும்பல் ஊழியர்களை கண்மூடி தனமாக இரும்பு கம்பியால் தாக்கியது. இதில் அவர்கள் நிலை குலைந்தனர். வெளியே சத்தம் கேட்டு விடாத படி அவர்கள் வாயில் பிளாஸ்திரியை போட்டு ஒட்டினர். பின்னர் அந்த கும்பல் கொண்டு வந்த வெல்டிங் எந்திரம் மூலம் லாக்கர்களை உடைத்தனர். அதில் இருந்த நகை மற்றும் பணத்தை ஒரு பையில் அள்ளிப் போட்டனர். அதன் பின்னர் 6 பேரும் தப்பி சென்றனர். அவர்கள் அனைவரும் முகத்தை கைக்குட்டையால் மறைத்திருந்தனர். இந்த சம்பவம் சுமார் 10 நிமிடங்களுக்கு நடந்து முடிந்து விட்டது. அரை மணி நேரம் கழித்து கடன் வாங்குவதற்காக ஒருவர் அங்கு வந்தார். அப்போது அங்கு ஊழியர்கள் கிடந்த நிலையை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனே அவர் கூச்சலிட்டதையடுத்து, சாலையில் சென்றவர்கள் ஓடி வந்தனர். பின்னர் ஊழியர்கள் அனைவரும் சகஜ நிலைக்கு திரும்பினர். அவர்கள் கொள்ளையர்கள் தங்களை தாக்கி நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றதை தெரிவித்தனர். ஆட்கள் நடமாட்டம் உள்ள இந்த பகுதியில் கொள்ளை கும்பல் பட்டப்பகலில் துணிகரமாக இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் காட்டு தீ போல பரவியது. இதனால் ஏராளமானோர் திரண்டனர். தகவல் அறிந்ததும் திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி அறிவுச் செல்வம், நிலக்கோட்டை போலீஸ் டி.எஸ்.பி. சுருளியாண்டி, வத்தலக்குண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் வினோஜி மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். அவர்கள் ஊழியர்களிடம் விசாரணை செய்தனர். விசாரணையில் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள், ரூ.17 லட்சம் ரொக்கப் பணம் கொள்ளை போனதாக தெரிய வந்தது. இது தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளையர்களின் தடயங்களை சேகரித்தனர். பட்ட பகலில் நடைபெற்ற இந்த துணிகர சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி ஒன் இந்தியா

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 ரூ.5 கோடி மதிப்புள்ள நகைகள், ரூ. 17 லட்சம் கொள்ளை Empty Re: ரூ.5 கோடி மதிப்புள்ள நகைகள், ரூ. 17 லட்சம் கொள்ளை

Post by T.N.Balasubramanian Fri Sep 25, 2015 11:41 am

இது மாதிரி கொள்ளைகள் ,சில குறிப்பிட்ட நிறுவனங்களில் மட்டும்
அதிகமாக நடைபெறுகின்றன !! ??

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 ரூ.5 கோடி மதிப்புள்ள நகைகள், ரூ. 17 லட்சம் கொள்ளை Empty கொள்ளையர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர்

Post by T.N.Balasubramanian Tue Sep 29, 2015 8:32 pm

கொள்ளையர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர்

தூத்துக்குடி: வத்தலக்குண்டு மணப்புரம் நிதி நிறுவன கொள்ளை வழக்கில் தூத்துக்குடி அரசு போக்குவரத்துக் கழகத்தில் கிளீனராக வேலை பார்த்து வந்த இரண்டு பேர், கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஸ் கிளீனர் வேலை பார்த்துக்கொண்டே இரவில் கொள்ளையர்களாக வலம் வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. வத்தலக்குண்டு 'மணப்புரம் கோல்டு பைனான்ஸ்' நிறுவனத்தில் கடந்த 24ம் தேதி காலை 8.44 மணிக்கு புகுந்த முகமூடிக் கொள்ளையர்கள் ஆறு பேர், ரூ.17 லட்சம் மற்றும் ரூ.பல கோடி அடகு நகைகளை கொள்ளை அடித்தனர். கொள்ளை நடந்த அன்று பக்ரீத் என்பதால், நிதி நிறுவனத்திற்கு எதிரே 50 போலீசார் பாதுகாப்பில் இருந்தனர். தொழுகை முடிந்து ஏராளமானோர் திரும்பிக்கொண்டிருந்தனர். காலையில் அலுவலகம் திறக்கும் நேரத்தில் கொள்ளையர்கள் உள்ளே புகுந்து, ஒன்பதே நிமிடங்களில் கொள்ளை அடித்து சென்றனர். டி.ஐ.ஜி., அறிவுச் செல்வன், சரவணன் எஸ்.பி., மேற்பார்வையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டது. நிதி நிறுவனத்தில் பணிபுரியும் அலுவலர்கள், காவலாளி பெருமாள் ஆகியோரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தனிப்படை போலீசார் மதுரை, கேரளாவிற்கு குற்றவாளிகளைத் தேடிச் சென்றனர். கொள்ளையர்கள் நகை, பணத்தோடு மொபைல் போன்களையும் எடுத்துச் சென்றுவிட்டனர். இதனிடையே கொள்ளை நடந்த போது கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோ, போட்டோக்கள் வாட்ஸ் அப் பில் வெளியாகின. இவற்றை வெளியிட்டது யார்? என்பதையும் போலீசார் விசாரணை செய்தனர். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் கிளீனராக பணியாற்றி வந்த முருகனையும், அவரது நண்பரையும் திண்டுக்கல் காவல்துறையினர் திடீரென கைது செய்தனர். மேலும், அவர்கள் தங்கியிருந்த அறைகளில் காவல்துறையினர் நடத்திய சோதனையில், அங்கு வைக்கப்பட்டிருந்த கட்டுக்கட்டான பணத்தையும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, இரண்டு பேரையும் திண்டுக்கல் அழைத்து சென்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் நகை பணத்தை கொள்ளையடித்ததை ஒத்துக்கொண்டனர். தூத்துக்குடி அரசு விரைவு போக்குவரத்துக் கழக டெப்போவில் கிளீனிங் வேலை செய்வதற்கான கான்ட்ராக்டை அதே டெப்போவில் காவலாளியை பணியாற்றி வரும் ஒருவர்தான் எடுத்து நடத்தி வருகிறார். அவரிடம் தூத்துக்குடியைச் சேர்ந்த முருகனும் அவரது நண்பரும் கடந்த இரண்டரை ஆண்டுகளாக கிளீனராக பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு டெப்போவில் தனி அறைகள் உள்ளன. பகல் நேரத்தில் அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் பஸ் கிளீனராக வேலை செய்யும் இருவரும் இரவு நேரத்தில் கொள்ளையர்களாக மாறி, பணம், நகைகளை கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி தமிழ் ஒன்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 ரூ.5 கோடி மதிப்புள்ள நகைகள், ரூ. 17 லட்சம் கொள்ளை Empty Re: ரூ.5 கோடி மதிப்புள்ள நகைகள், ரூ. 17 லட்சம் கொள்ளை

Post by ayyasamy ram Wed Sep 30, 2015 5:11 am

அநியாயம் அநியாயம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 ரூ.5 கோடி மதிப்புள்ள நகைகள், ரூ. 17 லட்சம் கொள்ளை Empty Re: ரூ.5 கோடி மதிப்புள்ள நகைகள், ரூ. 17 லட்சம் கொள்ளை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum