ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கஞ்சப் பிரபு!

5 posters

Go down

கஞ்சப் பிரபு! Empty கஞ்சப் பிரபு!

Post by krishnaamma Wed Sep 23, 2015 1:06 am

கஞ்சப் பிரபு!

அரியலூரில் வைத்யநாதன் என்பவன் இருந்தான். பெருஞ்செல்வந்தனாக இருந்த அவன் கஞ்சக் கருமியாக இருந்தான்.

"இவ்வளவு செல்வத்தை வைத்து இவன் என்ன செய்யப் போகிறான்? இவனுக்குக் குழந்தை, குட்டியா உள்ளது? ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்தால் என்ன?'' என்று அவன் காதில் விழும்படி மற்றவர்கள் பேசினர்.

"தன்னைப் பற்றி இப்படிப் பேசுகிறார்களே' என்று வருந்தினான் வைத்யநாதன்.

அவன் ஊருக்குத் துறவி ஒருவர் வந்தார்.

அவரை வணங்கிய அவன் தன்னைப் பற்றி அவரிடம் சொன்னான்.

"இந்த ஊரில் நான் செல்வந்தனாக இருக்கிறேன். எனக்குக் குழந்தைகள் இல்லை. நான் இறந்த பிறகு, என் செல்வம் அனைத்தையும் ஊரார் எடுத்துக் கொள்ளப் போகின்றனர். நல்ல செயல்களுக்கு அந்தச் செல்வத்தைப் பயன்படுத்தப் போகின்றனர். இது ஊரில் உள்ளவர்களுக்கும் தெரியும். இருந்தாலும் என் காதுபட, என்னைக் கருமி என்று திட்டுகின்றனர். என்னால் தாங்க முடியவில்லை,'' என்று வருத்தத்துடன் சொன்னான்.

இதைக் கேட்ட துறவி, "நான் ஒரு கதை சொல்கிறேன். அப்போது மக்கள் ஏன் உன்னைக் குறை சொல்கின்றனர் என்பது புரியும்,'' என்றார்.

"சொல்லுங்கள்,'' என்றான் வைத்யநாதன்.

"பசு ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது. அதன் அருகே பன்றி ஒன்று வந்தது. "பசுவே! உன்னை எல்லாரும் புகழ்ந்து பேசுகின்றனர். நீ நாள்தோறும் அவர்களுக்குப் பால் தருகிறாயாம். என்னால் அவர்களுக்கு எந்த நன்மையும் இல்லை என்று இகழ்ந்து பேசுகின்றனர். இப்போது அவர்களுக்கு என்னால் நன்மை இல்லாமல் இருக்கலாம். இறந்த பிறகு உன்னை விட நான் அவர்களுக்கு அதிகம் பயன் படுவேன்.

என் உடலின் எல்லாப் பகுதிகளையும் அவர்கள் சாப்பிடப் போகின்றனர். இப்படிப் பயன்படும் என்னை இகழ்கிறார்களே. என்னால் தாங்க முடியவில்லை, என்று வருத்தத்துடன் சொன்னது பன்றி.

அதற்குப் பசு, "நான் உயிருடன் இருக்கும் போதே அவர்களுக்குப் பயன் படுகிறேன். அதனால் என்னைப் புகழ்கின்றனர். இறந்த பிறகு பயன்பட்டால் என்ன பயன்படா விட்டால் என்ன?'' என்று பதில் சொன்னது பசு.
"இந்த கதையில் இருந்து உனக்கு ஏதாவது புரிகிறதா?'' என்று கேட்டார் துறவி.

"துறவியாரே! என் தவறு எனக்குப் புரிகிறது. இனி நான் உயிரோடு இருக்கும் போதே என்னாலான உதவியைப் பிறருக்குச் செய்வேன்,'' என்றான் அவன்.

அவனை வாழ்த்தி அனுப்பி வைத்தார் துறவி.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கஞ்சப் பிரபு! Empty Re: கஞ்சப் பிரபு!

Post by M.Jagadeesan Wed Sep 23, 2015 8:17 am

நல்ல படிப்பினையைத் தரும் கதை .

பசு உயிருடன் இருக்கும்போது பயன்படுகிறது . பசு தானாக இறக்கும் முன்பே , அதைக் கொன்று புசித்து விடுகிறார்கள் .பசுவோ ,பன்றியோ ,ஆடோ , மாடோ , கோழியோ இவற்றில் எதுவும் இறக்கும் வரையில் மனிதன் காத்திருப்பதில்லை !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

கஞ்சப் பிரபு! Empty Re: கஞ்சப் பிரபு!

Post by சசி Wed Sep 23, 2015 8:30 am

அருமையான கதை அம்மா நல்ல பதிவு


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

கஞ்சப் பிரபு! Empty Re: கஞ்சப் பிரபு!

Post by ராஜா Wed Sep 23, 2015 11:27 am

நல்ல கதை
M.Jagadeesan wrote:நல்ல படிப்பினையைத் தரும் கதை .

பசு உயிருடன் இருக்கும்போது பயன்படுகிறது . பசு தானாக இறக்கும் முன்பே , அதைக் கொன்று புசித்து விடுகிறார்கள் .பசுவோ ,பன்றியோ ,ஆடோ , மாடோ , கோழியோ இவற்றில் எதுவும் இறக்கும் வரையில் மனிதன் காத்திருப்பதில்லை !
இந்த காலத்து மாடு என்றால் "நாம் எல்லோரையும் இறக்கும் முன்பே மனிதன் கொன்று சாப்பிட தான் போகிறான் , அதனால் இருக்கும் போதே அவர்களுக்கு பயன்படவேண்டும் அப்போ தான் புகழ்வார்கள்" என்று சொல்லியிருக்கும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கஞ்சப் பிரபு! Empty Re: கஞ்சப் பிரபு!

Post by shobana sahas Thu Sep 24, 2015 4:25 am

நல்ல கதை. கஞ்சப் பிரபு! 103459460 கஞ்சப் பிரபு! 1571444738 க்ரிஷ்ணாம்மா
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

கஞ்சப் பிரபு! Empty Re: கஞ்சப் பிரபு!

Post by krishnaamma Thu Sep 24, 2015 6:19 pm

M.Jagadeesan wrote:நல்ல படிப்பினையைத் தரும் கதை .

பசு உயிருடன் இருக்கும்போது  பயன்படுகிறது . பசு தானாக இறக்கும் முன்பே , அதைக் கொன்று புசித்து விடுகிறார்கள் .பசுவோ ,பன்றியோ ,ஆடோ , மாடோ , கோழியோ இவற்றில் எதுவும் இறக்கும் வரையில் மனிதன் காத்திருப்பதில்லை !

நன்றி ஐயா.......நீங்கள் சொல்வது நிஜம் ஐயா சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கஞ்சப் பிரபு! Empty Re: கஞ்சப் பிரபு!

Post by krishnaamma Thu Sep 24, 2015 6:19 pm

Sasiiniyan Sasikaladevi wrote:அருமையான கதை அம்மா நல்ல பதிவு

நன்றி சசி புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கஞ்சப் பிரபு! Empty Re: கஞ்சப் பிரபு!

Post by krishnaamma Thu Sep 24, 2015 6:20 pm

ராஜா wrote:நல்ல கதை
M.Jagadeesan wrote:நல்ல படிப்பினையைத் தரும் கதை .

பசு உயிருடன் இருக்கும்போது  பயன்படுகிறது . பசு தானாக இறக்கும் முன்பே , அதைக் கொன்று புசித்து விடுகிறார்கள் .பசுவோ ,பன்றியோ ,ஆடோ , மாடோ , கோழியோ இவற்றில் எதுவும் இறக்கும் வரையில் மனிதன் காத்திருப்பதில்லை !
இந்த காலத்து மாடு என்றால் "நாம் எல்லோரையும் இறக்கும் முன்பே மனிதன் கொன்று சாப்பிட தான் போகிறான் , அதனால் இருக்கும் போதே அவர்களுக்கு பயன்படவேண்டும் அப்போ தான் புகழ்வார்கள்" என்று சொல்லியிருக்கும்  

புன்னகை...........இந்த கால நிலைமை தெரிந்த மிருகம் !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கஞ்சப் பிரபு! Empty Re: கஞ்சப் பிரபு!

Post by krishnaamma Thu Sep 24, 2015 6:20 pm

shobana sahas wrote:நல்ல கதை. கஞ்சப் பிரபு! 103459460 கஞ்சப் பிரபு! 1571444738 க்ரிஷ்ணாம்மா
மேற்கோள் செய்த பதிவு: 1164417

நன்றி ஷோபனா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கஞ்சப் பிரபு! Empty Re: கஞ்சப் பிரபு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum