Latest topics
» அலங்கார முகமூடிகள்!by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
அட்டாக் பாண்டி மும்பையில் கைது; பரபரப்பு தகவல்கள்! - முழு ஜாதகம்!
4 posters
Page 1 of 1
அட்டாக் பாண்டி மும்பையில் கைது; பரபரப்பு தகவல்கள்! - முழு ஜாதகம்!
![அட்டாக் பாண்டி மும்பையில் கைது; பரபரப்பு தகவல்கள்! - முழு ஜாதகம்! Kybg2hE4ScOAjwlR82bM+attack_pandi_vc1](https://www.filepicker.io/api/file/kybg2hE4ScOAjwlR82bM+attack_pandi_vc1.jpg)
மும்பை: பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் நீண்ட நாட்களாக தேடப்பட்டு வந்த தலைமறைவு குற்றவாளியான ரவுடி அட்டாக் பாண்டியை, தமிழக போலீசார் மும்பையில் கைது செய்துள்ளனர்.
![அட்டாக் பாண்டி மும்பையில் கைது; பரபரப்பு தகவல்கள்! - முழு ஜாதகம்! CN7SE9NlQjaLxJuqkuJe+7](https://www.filepicker.io/api/file/CN7SE9NlQjaLxJuqkuJe+7.jpg)
பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் இரண்டரை ஆண்டாக தலைமறைவாக இருந்து வந்த மதுரையை சேர்ந்த ரவுடி அட்டாக் பாண்டியை போலீசார் இன்று மும்பை புறநகர் பகுதியான வாஷியில் கைது செய்துள்ளனர்.
பொட்டு சுரேஷ் கொலை ஏன்?
மதுரையில் மு.க. அழகிரிக்கு மிக நெருக்கமாக இருந்து, தி.மு.க-வின் தலைமைச் செயற்குழு உறுப்பினராகப் பணியாற்றியவர் பொட்டு சுரேஷ். அழகிரியின் நண்பராக இருந்த பொட்டு சுரேஷ், கடந்த தி.மு.க ஆட்சியின்போது அரசு வட்டாரங்களில் சர்வவல்லமை பெற்றவர் என்பது எல்லோருக்கும் தெரியும். அந்தக் காலகட்டத்தில் ஜெயலலிதாவால் தென் தமிழகத்தின் துணை முதல்வர் என்று புகழப்பட்டவர்.
ஆட்சி மாறியதும் அடுத்தடுத்து பாய்ந்த வழக்குகள் காரணமாக குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டு, வெளியே வந்தார். அழகிரி ஆதரவு தி.மு.க-வுக்குள், தன்னை போட்டுத்தள்ளும் வெறியுடன் ஒரு கோஷ்டி உருவானதை உணர்ந்து, அதிலிருந்து தப்பிக்க அ.தி.மு.க-வில் சேர முயற்சித்து வந்தார். அங்கு நோ சொல்லிவிடவே, சில நாட்கள் அமைதியாக இருந்தார்.
தொடும்.....................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: அட்டாக் பாண்டி மும்பையில் கைது; பரபரப்பு தகவல்கள்! - முழு ஜாதகம்!
'நாங்கள் முந்திக்கொண்டோம்’
அழகிரியின் பிறந்த நாளையொட்டி அவரைச் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்த அடுத்த நாள் (31.1.2013) இரவில் அழகிரி வீட்டருகே உள்ள சாலையிலேயே பொட்டு சுரேஷ் வெட்டிக் கொல்லப்பட்டார். அவரது உடலில் 37 வெட்டுக்காயங்கள் இருந்தன. இந்தக் கொலை தமிழகத்தில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது.
கொலையாளிகளைப் பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. கொலை நடந்த 2-வது நாளில், அட்டாக் பாண்டியின் ஆதரவாளர்கள் 7 பேர் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அட்டாக் பாண்டியின் அக்காள் மகன் விஜயபாண்டி, கூட்டாளி ஆரோக்கிய பிரபு ஆகிய இருவருக்கும் இந்தக் கொலையில் முக்கியத் தொடர்பு இருப்பதாக போலீஸுக்குத் தெரியவர, அவர்கள் இருவர் மட்டும் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
‘அட்டாக் பாண்டியை கொல்ல பொட்டு திட்டமிட்டார், நாங்கள் முந்திக்கொண்டோம்’ என்று வாக்குமூலத்தில் கூறியிருந்தனர். கடைசியில் அட்டாக் பாண்டியின் தனிப்பட்ட விரோதம்தான் கொலைக்குக் காரணம் என்று வழக்கை முடிவுக்குக் கொண்டுவந்த வந்த போலீஸ், 21 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தலைமறைவான அட்டாக் பாண்டி
அட்டாக் பாண்டியை வெளியே கொண்டுவரும் நோக்கத்தில் அவரது மனைவி உட்பட உறவினர்கள் மேல் எல்லாம் பல வழக்குகள் போட்டு உள்ளே தள்ளியது போலீஸ். அப்படியும் அட்டாக் பாண்டி சரணடையவில்லை. அதற்குப்பின் சொத்துகளையும், வங்கிக் கணக்கையும் முடக்கியது போலீஸ். கடந்த ஆண்டு மே மாதம் நீதிமன்றம் மூலம் தேடப்படும் குற்றவாளியாக அட்டாக் பாண்டியை அறிவித்து ஊரெங்கும் போஸ்டர்கள் ஒட்டியது.
சொத்துகளை ஜப்தி செய்யவும் உத்தரவு பெற்றது. இந்த வழக்கில் ஜாமீனில் வெளி வந்திருப்பவர்கள் மீது அவ்வப்போது மிரட்டல், திருட்டு வழக்குகளைப் போட்டு டார்ச்சர் செய்தது. எவ்வளவு நெருக்கடி கொடுத்தாலும் அட்டாக்கை அவர்கள் காட்டிக் கொடுக்கத் தயாராக இல்லை.
சில மாதங்களுக்கு முன்புவரை கொல்கத்தாவில் இருப்பதாக போலீஸ் அங்கு தேடிச்சென்றது. இந்நிலையில் கடந்த ஜுலை மாதம் அட்டாக் பாண்டி மும்பையில் இருப்பதாக சொல்லப்பட்டது. ஆனாலும் அவரை போலீஸ் நெருங்காமல் இருந்ததற்கு, சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் கைதுசெய்து தி.மு.க-வுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என போடப்பட்டிருந்த திட்டம்தான் என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில் இன்று அதிரடியாக அட்டாக் பாண்டி கைது செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் அட்டாக் பாண்டியின் நடமாட்டத்தை காவல்துறையினர் கடந்த சில வாரங்களாகவே நோட்டம் விட்டு வந்துள்ளது உறுதியாகி உள்ளது.
தொடரும்....................
அழகிரியின் பிறந்த நாளையொட்டி அவரைச் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்த அடுத்த நாள் (31.1.2013) இரவில் அழகிரி வீட்டருகே உள்ள சாலையிலேயே பொட்டு சுரேஷ் வெட்டிக் கொல்லப்பட்டார். அவரது உடலில் 37 வெட்டுக்காயங்கள் இருந்தன. இந்தக் கொலை தமிழகத்தில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது.
கொலையாளிகளைப் பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. கொலை நடந்த 2-வது நாளில், அட்டாக் பாண்டியின் ஆதரவாளர்கள் 7 பேர் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அட்டாக் பாண்டியின் அக்காள் மகன் விஜயபாண்டி, கூட்டாளி ஆரோக்கிய பிரபு ஆகிய இருவருக்கும் இந்தக் கொலையில் முக்கியத் தொடர்பு இருப்பதாக போலீஸுக்குத் தெரியவர, அவர்கள் இருவர் மட்டும் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
‘அட்டாக் பாண்டியை கொல்ல பொட்டு திட்டமிட்டார், நாங்கள் முந்திக்கொண்டோம்’ என்று வாக்குமூலத்தில் கூறியிருந்தனர். கடைசியில் அட்டாக் பாண்டியின் தனிப்பட்ட விரோதம்தான் கொலைக்குக் காரணம் என்று வழக்கை முடிவுக்குக் கொண்டுவந்த வந்த போலீஸ், 21 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தலைமறைவான அட்டாக் பாண்டி
அட்டாக் பாண்டியை வெளியே கொண்டுவரும் நோக்கத்தில் அவரது மனைவி உட்பட உறவினர்கள் மேல் எல்லாம் பல வழக்குகள் போட்டு உள்ளே தள்ளியது போலீஸ். அப்படியும் அட்டாக் பாண்டி சரணடையவில்லை. அதற்குப்பின் சொத்துகளையும், வங்கிக் கணக்கையும் முடக்கியது போலீஸ். கடந்த ஆண்டு மே மாதம் நீதிமன்றம் மூலம் தேடப்படும் குற்றவாளியாக அட்டாக் பாண்டியை அறிவித்து ஊரெங்கும் போஸ்டர்கள் ஒட்டியது.
சொத்துகளை ஜப்தி செய்யவும் உத்தரவு பெற்றது. இந்த வழக்கில் ஜாமீனில் வெளி வந்திருப்பவர்கள் மீது அவ்வப்போது மிரட்டல், திருட்டு வழக்குகளைப் போட்டு டார்ச்சர் செய்தது. எவ்வளவு நெருக்கடி கொடுத்தாலும் அட்டாக்கை அவர்கள் காட்டிக் கொடுக்கத் தயாராக இல்லை.
சில மாதங்களுக்கு முன்புவரை கொல்கத்தாவில் இருப்பதாக போலீஸ் அங்கு தேடிச்சென்றது. இந்நிலையில் கடந்த ஜுலை மாதம் அட்டாக் பாண்டி மும்பையில் இருப்பதாக சொல்லப்பட்டது. ஆனாலும் அவரை போலீஸ் நெருங்காமல் இருந்ததற்கு, சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் கைதுசெய்து தி.மு.க-வுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என போடப்பட்டிருந்த திட்டம்தான் என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில் இன்று அதிரடியாக அட்டாக் பாண்டி கைது செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் அட்டாக் பாண்டியின் நடமாட்டத்தை காவல்துறையினர் கடந்த சில வாரங்களாகவே நோட்டம் விட்டு வந்துள்ளது உறுதியாகி உள்ளது.
தொடரும்....................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: அட்டாக் பாண்டி மும்பையில் கைது; பரபரப்பு தகவல்கள்! - முழு ஜாதகம்!
மதுரை திமுகவில் இரு துருவங்களாக செயல்பட்டு வந்த அட்டாக் பாண்டி, பொட்டு சுரேஷ் ஆகிய இருவருமே மு.க. அழகிரிக்கு நெருக்கம். இருப்பினும் தலைமையிடம் யாருக்கு அதிக நெருக்கம் என்ற போட்டியில் பொட்டு சுரேஷ் போட்டு தள்ளப்பட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில் அட்டாக் பாண்டி யார் என்பது குறித்த ஜாதகம் இங்கே...
மதுரையில் அனைத்து கட்சிகளிலும் ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பகுதியைச் சேர்ந்தவர்களின் ஆதிக்கம் அதிகம். அப்படி கமுதியில் இருந்து பிழைக்க மதுரைக்கு வந்தவர்களில் பாண்டியின் குடும்பமும் ஒன்று. மாவட்டச் செயலாளராக இருந்த வேலுச்சாமி, எஸ்ஸார் கோபி ஆகியோர் இவருக்கு உறவினர்தான்.
'நம்ம ஊர் பையனாச்சே' என்று தி.மு.க.வுக்குள் இழுத்துவிட்டவர். தன் ஏரியாவில் அடிதடி போன்றவற்றில் ஈடுபட்டு ரவுடியாக ஓரளவு ஃபார்ம் ஆன பாண்டி, தன் பெயருக்கு முன் ‘அட்டாக்' என்ற அடைமொழியை போட்டுக்கொண்டார். தா.கிருஷ்ணன் கொலை வழக்கில் அழகிரி கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தபோது அவர் வீட்டை தன்னுடைய அடியாட்கள் மூலம் பாதுகாத்தவர்.
காந்தி அழகிரி, துரை தயாநிதி வெளியில் செல்லும்போது, இன்னொரு காரில் சென்று அவர்களை பாதுகாத்தவர். எப்போதும் அழகிரி வீட்டுக்கு முன் அமர்ந்துகொண்டு கண்காணித்தவர். அதனால் துரையின் அன்பைப் பெற்றார்.
ஒரு நாளிதழ் கருத்து கணிப்பு வெளியிட்டு அழகிரியைக் கோபப்படுத்த, அந்தப் பத்திரிகை அலுவலகத்தை தன் ஆட்களோடு எரிக்கச் சென்றவர் அட்டாக். அதில் மூன்று தொழிலாளர்கள் கொல்லப்பட்டார்கள். அந்த வழக்கில் விடுதலையாகி வந்தார்.
தனக்காக இவ்வளவு செய்கிறானே என்று அழகிரியின் பாசத்துக்கு ஆளானார். அதனால்தான் அவருக்கு மதுரை மாவட்ட வேளாண் விற்பனைக் குழுத் தலைவர் என்ற பெரிய பதவியை வாங்கிக்கொடுத்தார். அதோடு ஏகப்பட்ட கட்டப்பஞ்சாயத்துகளில் ஈடுபட்டு குறுகிய காலத்தில் கோடீஸ்வரராக மாறினார் அட்டாக். மதுரையில் யார் சொத்து வாங்கினாலும், அங்கு வில்லங்கம் செய்து பணம் சம்பாதித்தவர் என்று இவர் மேல் ஏகப்பட்ட புகார்கள்.
அரசியல் பின்னணியில் நுழைந்துகொண்டு அவர் பண்ணாத சேட்டைகள் இல்லை. அவரது உறவினர் ஒருவர் எம்.எல்.எம். பிசினசில் ஈடுபட்டு ஏகப்பட்ட பணத்தை சேர்த்திருந்தார். அவரை மிரட்டி பணத்தை பிடுங்கியவர் அட்டாக் பாண்டி.
அட்டாக் பாண்டிக்கு காவல்துறையில் நட்பு தொடர்ந்ததால்தான் அவரால் இத்தனை நாட்கள் தலைமறைவாக இருக்க முடிந்தது என்றும் சொல்லப்படுகிறது.
நன்றி விகடன்
இந்நிலையில் அட்டாக் பாண்டி யார் என்பது குறித்த ஜாதகம் இங்கே...
மதுரையில் அனைத்து கட்சிகளிலும் ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பகுதியைச் சேர்ந்தவர்களின் ஆதிக்கம் அதிகம். அப்படி கமுதியில் இருந்து பிழைக்க மதுரைக்கு வந்தவர்களில் பாண்டியின் குடும்பமும் ஒன்று. மாவட்டச் செயலாளராக இருந்த வேலுச்சாமி, எஸ்ஸார் கோபி ஆகியோர் இவருக்கு உறவினர்தான்.
'நம்ம ஊர் பையனாச்சே' என்று தி.மு.க.வுக்குள் இழுத்துவிட்டவர். தன் ஏரியாவில் அடிதடி போன்றவற்றில் ஈடுபட்டு ரவுடியாக ஓரளவு ஃபார்ம் ஆன பாண்டி, தன் பெயருக்கு முன் ‘அட்டாக்' என்ற அடைமொழியை போட்டுக்கொண்டார். தா.கிருஷ்ணன் கொலை வழக்கில் அழகிரி கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தபோது அவர் வீட்டை தன்னுடைய அடியாட்கள் மூலம் பாதுகாத்தவர்.
காந்தி அழகிரி, துரை தயாநிதி வெளியில் செல்லும்போது, இன்னொரு காரில் சென்று அவர்களை பாதுகாத்தவர். எப்போதும் அழகிரி வீட்டுக்கு முன் அமர்ந்துகொண்டு கண்காணித்தவர். அதனால் துரையின் அன்பைப் பெற்றார்.
ஒரு நாளிதழ் கருத்து கணிப்பு வெளியிட்டு அழகிரியைக் கோபப்படுத்த, அந்தப் பத்திரிகை அலுவலகத்தை தன் ஆட்களோடு எரிக்கச் சென்றவர் அட்டாக். அதில் மூன்று தொழிலாளர்கள் கொல்லப்பட்டார்கள். அந்த வழக்கில் விடுதலையாகி வந்தார்.
தனக்காக இவ்வளவு செய்கிறானே என்று அழகிரியின் பாசத்துக்கு ஆளானார். அதனால்தான் அவருக்கு மதுரை மாவட்ட வேளாண் விற்பனைக் குழுத் தலைவர் என்ற பெரிய பதவியை வாங்கிக்கொடுத்தார். அதோடு ஏகப்பட்ட கட்டப்பஞ்சாயத்துகளில் ஈடுபட்டு குறுகிய காலத்தில் கோடீஸ்வரராக மாறினார் அட்டாக். மதுரையில் யார் சொத்து வாங்கினாலும், அங்கு வில்லங்கம் செய்து பணம் சம்பாதித்தவர் என்று இவர் மேல் ஏகப்பட்ட புகார்கள்.
அரசியல் பின்னணியில் நுழைந்துகொண்டு அவர் பண்ணாத சேட்டைகள் இல்லை. அவரது உறவினர் ஒருவர் எம்.எல்.எம். பிசினசில் ஈடுபட்டு ஏகப்பட்ட பணத்தை சேர்த்திருந்தார். அவரை மிரட்டி பணத்தை பிடுங்கியவர் அட்டாக் பாண்டி.
அட்டாக் பாண்டிக்கு காவல்துறையில் நட்பு தொடர்ந்ததால்தான் அவரால் இத்தனை நாட்கள் தலைமறைவாக இருக்க முடிந்தது என்றும் சொல்லப்படுகிறது.
நன்றி விகடன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: அட்டாக் பாண்டி மும்பையில் கைது; பரபரப்பு தகவல்கள்! - முழு ஜாதகம்!
கைது நடவடிக்கைதானே...
-
அவருக்கும் வழக்கில் ஆஜராக திறமை வாய்ந்த
வழக்கறிஞர்கள் ரெடியாக இருப்பார்கள்...!!
-
அவருக்கும் வழக்கில் ஆஜராக திறமை வாய்ந்த
வழக்கறிஞர்கள் ரெடியாக இருப்பார்கள்...!!
Re: அட்டாக் பாண்டி மும்பையில் கைது; பரபரப்பு தகவல்கள்! - முழு ஜாதகம்!
மேற்கோள் செய்த பதிவு: 1163929ayyasamy ram wrote:கைது நடவடிக்கைதானே...
-
அவருக்கும் வழக்கில் ஆஜராக திறமை வாய்ந்த
வழக்கறிஞர்கள் ரெடியாக இருப்பார்கள்...!!
நிஜம் அண்ணா, மறுபடி ஒரு நீதி மன்ற நாடகம் அரங்கேறும்.................மக்களின் வரிப்பணம் வீணாகும்.......பேப்பர் காரர்களும் டிவி நியுஸ் காரகளுக்கும் 'சுட சுட' செய்திகள் கிடைக்கும்..................அவனுக்கு விடுதலை கிடைக்கும்........அவ்வளவுதான்
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: அட்டாக் பாண்டி மும்பையில் கைது; பரபரப்பு தகவல்கள்! - முழு ஜாதகம்!
அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா !!
ரமணியன்
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
Re: அட்டாக் பாண்டி மும்பையில் கைது; பரபரப்பு தகவல்கள்! - முழு ஜாதகம்!
ஒரு பழம் அழுகினால் , தூக்கி எறிந்துவிட்டு வேறொரு பழத்தை வாங்கலாம் . ஆனால் நீதித்துறை அழுகினால் , மொத்த நாடே அழுகிவிடும் . ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்று நீதி மன்றங்கள் .சாதாரண மனிதனின் கடைசி புகலிடம் நீதி மன்றங்கள்தான் . நீதிபதிகள் காசுக்கு விலைபோனால் , அந்த மனிதனின் கதி என்ன ஆவது ? இன்று அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு ஒரு நீதி , பணம் படைத்த நடிகர்களுக்கு ஒரு நீதி என்ற கதியில் நாடு போய்க்கொண்டிருக்கிறது . இது ஒரு ஆபத்தான போக்கு .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» அழகிரியின் வலது கை அட்டாக் பாண்டி கைது !!
» ஜாதகம் பார்க்கச் சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஜோதிடர் கைது
» திமுக உட்கட்சி மோதலில் பொட்டு சுரேஷ் கொலை? போலீஸ் வளையத்தில்மன்னன்! அட்டாக் பாண்டி எஸ்கேப்!!
» ரூ.10 கோடி பறிமுதல் மும்பையில் பரபரப்பு
» மும்பையில், முதல்முறையாக பொது இடத்தில் திருவள்ளுவர் முழு உருவச்சிலை
» ஜாதகம் பார்க்கச் சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஜோதிடர் கைது
» திமுக உட்கட்சி மோதலில் பொட்டு சுரேஷ் கொலை? போலீஸ் வளையத்தில்மன்னன்! அட்டாக் பாண்டி எஸ்கேப்!!
» ரூ.10 கோடி பறிமுதல் மும்பையில் பரபரப்பு
» மும்பையில், முதல்முறையாக பொது இடத்தில் திருவள்ளுவர் முழு உருவச்சிலை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|