Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இவனும் அவனும் ! (சிறுகதைகள்) நூல்ஆசிரியர் : திரு. ஹேமலதா பாலசுப்ரமணியம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
2 posters
Page 1 of 1
இவனும் அவனும் ! (சிறுகதைகள்) நூல்ஆசிரியர் : திரு. ஹேமலதா பாலசுப்ரமணியம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
இவனும் அவனும் !
(சிறுகதைகள்)
நூல்ஆசிரியர் : திரு. ஹேமலதா பாலசுப்ரமணியம் !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
மணிவாசகர் பதிப்பகம், 12 பி, மேல சன்னதி, சிதம்பரம் – 608 001.
விலை : ரூ. 90, பக்கம் : 176
*****
நூல் ஆசிரியர் முதுபெரும் எழுத்தாளர் திரு. ஹேமலதா பாலசுப்ரமணியம் இவர் சிறந்த சிறுகதை எழுத்தாளர் மட்டுமல்ல, சிறந்த மனிதரும் ஆவார். இவர் போல மற்ற ஆண்களும், மனைவியை நேசிக்க முன்வர வேண்டும். முன்மாதிரியாக வாழ்ந்து வருபவர். தன்னுடைய பெயருக்கு முன்பாக மனைவியின் பெயரை இணைத்துக் கொண்டவர். மனைவி மறைந்திட்ட போதும் அவர் நினைவாக பொன்மாலை அறக்கட்டளை தொடங்கி மாணவ, மாணவியருக்கு உதவி வருபவர்.
தனக்கு கிடைக்கும் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம். என் மனைவிக்கும் சேர்த்துத் தான் தருகிறார்கள். அவள் இப்போது உயிரோடு இல்லாத காரணத்தால், ஓய்வூதியத்தில் பாதி அவளுக்கானது. எனவே அத்தொகையை ஏழை மாணவ, மாணவியருக்காக உதவி வருகிறேன் என்று சொன்னது நெகிழ்ச்சியாக இருந்தது.
இயந்திரமயமான உலகில் மனிதர்களும் இயந்திரமாகவே மாறி வரும் இக்காலத்தில் திரு. ஹேமலதா பாலசுப்ரமணியம் போன்ற நல்லவர்களும் வாழ்கிறார்கள் என்பது ஆறுதல் .மகாகவி பாரதி சொல்வான் கவிதை எழுதுபவர் கவிஞர் அல்ல கவிதையில் எழுதியபடி கவிதையாகவே வாழ்பவரே கவிஞர் என்று .அறம் சார்ந்து எழுதுவதோடு நின்றுவிடாமல் அறம் சார்ந்து வாழ்வது சிறப்பு .படைப்பாளிகள் இவரைப் பாடமாகக் கொள்ள வேண்டும்.
மதுரையில் இலக்கிய விழா எங்கு நடந்தாலும், பார்வையாளராக முதல் வரிசையில் வந்து அமர்ந்து விடுவார். என்னுடைய கவியரங்கம் பல கேட்டு, கை தட்டி மகிழ்ந்து உள்ளார் . நூலாசிரியர் திரு. ஹேமலதா பாலசுப்ரமணியம் உடல்நலம் குன்றி உள்ளார். அவரால் வெளியே வர இயலாது என்றனர். இந்த நூல் வெளியீட்டு விழாவை அவரது இல்லத்திலேயே ஏற்பாடு செய்து இருந்தார்கள். எழுத்தாளர்கள் திருச்சி சந்தரும், கர்ணனும் மற்றும் பலரும் வருகை தந்து சிறப்பித்தனர். எல்லோரையும் பார்த்த மகிழ்வில் நூலாசிரியர் விரைவில் நலம் பெறுவார் என்ற நம்பிக்கை வந்தது.
இந்த நூலில் 25 முத்திரைக் கதைகள் உள்ளன. பல்வேறு இதழ்களில் பிரசுரமான கதைகளைத் தொகுத்து மணிவாசகர் பதிப்பகம் மூலம் நூலாக வெளிவர உதவியவர் எழுத்தாளர் கர்ணன். அணிந்துரையும் தந்துள்ளார். இவர் ஒரு மாற்றுத்திறனாளி என்ற போதும் சக எழுத்தாளரான நூல் ஆசிரியருக்கு முதுமையில் உதவி உள்ளார், பாராட்டுக்கள்.
நூலாசிரியர் மனைவி மீது அளவற்ற பாசம் கொண்டவர். அவரது மனைவி 27.03.2002 அன்று உலகை விட்டு மறைந்திட்ட போதும் இன்றும் மனைவி பற்றி ஏதாவது பேச நேர்ந்தால் கண்கலங்கி விடுவார். தினமும் மனைவி படத்தின் முன்பு அமர்ந்து வணங்கி பேசி வருகிறார் .மற்ற ஆண்களுக்கு பாடமாக வாழ்ந்து வரும் மாமனிதர். இந்த நூலை அஞ்சலி செய்துள்ள விதத்தைப் பார்த்தாலே புரிந்து கொள்ள முடியும். இந்நூல் ஹேமாவுக்கு அஞ்சலி.
தாரமாய், தாயாய் உற்ற நல் தோழியாய்,
தடம்பதித்தாள் என் வாழ்வில் அரை நூற்றாண்டு
சில ஈரங்கள் காய்வதில்லை நெஞ்சில் போல
பல உறவுகளும் ஓய்வதில்லை, உன்னில் போல !
முதல் கதையின் தலைப்பையே, நூலின் தலைப்பாக வைத்துள்ளார். சிறுகதைகள் எப்படி எழுத வேண்டும் என்பதற்கு இலக்கணம் கூறும் விதமாக கதைகள் உள்ளன. சிறுகதைகள் எழுத வேண்டும், எழுத்தாளர் ஆக வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள் அவசியம் வாங்கிப் படித்துப் பயன்பெற வேண்டிய நூல். கதையில் சென்னை மொழி, மதுரை மொழி, ஏழ்மை மொழி என எல்லா மொழியிலும் கதைகள் உள்ளன. சமுதாயத்தை உற்று நோக்கி வடித்த கவிதைகள் நன்று. கதைகள் மூலம் வாழ்வியல் கருத்துக்களை மிக மென்மையாக உணர்த்தி வெற்றி பெறுகின்றார் நூலாசிரியர்.
இக்கதைகள் பல வருடங்களுக்கு முன்பு எழுதியவை என்ற போதும் இன்றும் பொருந்துவதாகவே உள்ளது. முதல் கதையான இவனும், அவனும் கதையில் இருந்து சில வரிகள் இதோ!
“எதிரே ஏதோ அரசியல் கட்சியின் கூட்டம். மேடையும், மைக்கும் கிடைத்தவர்கள் தங்களைத் தர்மபுத்திர்களாகவே உருவகிக்கும் வழக்கமான
காட்சியை ஜோடனைகளுடன் அரங்கேற்றிக் கொண்டிருந்தார்கள். எதிர்கட்சியினரின் ஊழல்கள் பற்றிய பட்டியல் நீண்டு கொண்டிருந்த்து. தங்களைத் தவிர மற்றவர்கள் எல்லோருமே எவ்வளவு நாணயமற்றவர்கள் என்று நிரூபிக்க்ச் சிரமமெடுத்துக் கொண்டிருந்தார்கள். இதையெல்லாம் அங்கீகரிப்பது ஒரு கடமை என்பது போல, எதிரேயிருந்து அடிக்கடி கைதட்டல்களும், ஆரவாரங்களும் எழுந்து கொண்டிருந்தன. இடையிடையே ‘வாழ்க’வும், ‘ஒழிக’வும் தமிழ் வளர்நத்து கொண்டிருந்த்து."
நூலாசிரியர் பல்லாண்டுகளுக்கு முன்பு எழுதியது இன்றும் அரசியலில் தொடர்கதையாகத் தொடர்வதை நினைத்துப் பார்த்தேன். கதைகளில் நக்கல், நையாண்டி என எள்ளல் சுவைகளுடன் பாத்திரங்களின் உரையாடல் இருந்தாலும் ஏழ்மையை உணர்த்திடும், கண்ணில் கண்ணீர் வரவழைக்கும் கதைகள் உள்ளன. பல்சுவை விருந்தாக நூல் உள்ளது.
தபஸ் என்ற கதையில் காட்டுக்குச் சென்று தாடி வளர்த்து கமண்டலத்துடன் இருப்பது மட்டுமல்ல தபம். மனைவிக்காக காத்திருப்பதும் தவம் என்கிறார்.
செம்மறியாடுகள் கதையில், மதுரையின் வீதிகளை படம் பிடித்துக் காட்டுகின்றார். மனிதர்களை விட செம்மறி ஆடுகள் மேல் என்று உணர்த்துகின்றார்.
யுக தர்மம் கதையில் வித்தியாசமான இராமாயணம் எழுதி உள்ளார்.
நிமிஷங்கள், விநாடிகள் கதையில் உள்ள ஒரு வசனம் இதோ
"ஏதோ இன்கம்டாக்ஸை ஏமாற்றும் லட்ச ரூபாய், நட்சத்திரத்தை விட அதிக சம்பாத்தியம் வந்து விட்ட்து போல மயக்கம்."
பெரிய மனிதர் கதையில் பெரிய மனிதர், பெரிய மனிதராக நடந்து கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தி உள்ளார். பெயருக்கு பெரிய மனிதராக இல்லாமல் உண்மையில் மதிக்கும் பெரிய மனிதராக வாழ வேண்டும் என்கிறார்.
நாலணா கதையில் பிறரிடம் ஓசியில் பெறுவதை இழுக்கு என்கிறார். அக்கதையின் முடிப்பில் உள்ள வரிகள் இதோ!
“சே. அத்தனையும் ஓசிப் பிழைப்பு. கேவலம், படு கேவலம், காசில்லா விட்டால் தான் என்ன, அறைக் கதவை மூடி உள்ளே விழுந்து கிடந்திருக்கலாமே. தடுமாறிச் சாய்ந்திருந்தா தன்மான உணர்வு எழுந்து நின்று சிரிக்கிறது, வெறிச் சிரிப்பு.
மனசாட்சி பேசுவது போல, பல இடங்களில் நூலாசிரியர் பேசி உள்ளார். பழிக்குப் பழி, வக்கிரம், சதி திட்டம் தீட்டுதல் – இப்படியே தொலைக்காட்சித் தொடர்கள் எடுத்து, சமுதாயத்தை சீரழித்து வரும் தொலைக்காட்சித் தொடர் இயக்குனர்கள் இந்நூலில் உள்ள கதைகளை குறும்படமாக எடுத்தால் நாடு, நலம் பெறும். முதுபெரும் எழுத்தாளர், நூலாசிரியர் திரு. ஹேமலதா பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு பாராட்டுக்கள். மனைவியின் பசுமையான நினைவுகளுடன் நூற்றாண்டு கடந்த வாழ்ந்திட வாழ்த்துக்கள் .
.
(சிறுகதைகள்)
நூல்ஆசிரியர் : திரு. ஹேமலதா பாலசுப்ரமணியம் !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
மணிவாசகர் பதிப்பகம், 12 பி, மேல சன்னதி, சிதம்பரம் – 608 001.
விலை : ரூ. 90, பக்கம் : 176
*****
நூல் ஆசிரியர் முதுபெரும் எழுத்தாளர் திரு. ஹேமலதா பாலசுப்ரமணியம் இவர் சிறந்த சிறுகதை எழுத்தாளர் மட்டுமல்ல, சிறந்த மனிதரும் ஆவார். இவர் போல மற்ற ஆண்களும், மனைவியை நேசிக்க முன்வர வேண்டும். முன்மாதிரியாக வாழ்ந்து வருபவர். தன்னுடைய பெயருக்கு முன்பாக மனைவியின் பெயரை இணைத்துக் கொண்டவர். மனைவி மறைந்திட்ட போதும் அவர் நினைவாக பொன்மாலை அறக்கட்டளை தொடங்கி மாணவ, மாணவியருக்கு உதவி வருபவர்.
தனக்கு கிடைக்கும் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம். என் மனைவிக்கும் சேர்த்துத் தான் தருகிறார்கள். அவள் இப்போது உயிரோடு இல்லாத காரணத்தால், ஓய்வூதியத்தில் பாதி அவளுக்கானது. எனவே அத்தொகையை ஏழை மாணவ, மாணவியருக்காக உதவி வருகிறேன் என்று சொன்னது நெகிழ்ச்சியாக இருந்தது.
இயந்திரமயமான உலகில் மனிதர்களும் இயந்திரமாகவே மாறி வரும் இக்காலத்தில் திரு. ஹேமலதா பாலசுப்ரமணியம் போன்ற நல்லவர்களும் வாழ்கிறார்கள் என்பது ஆறுதல் .மகாகவி பாரதி சொல்வான் கவிதை எழுதுபவர் கவிஞர் அல்ல கவிதையில் எழுதியபடி கவிதையாகவே வாழ்பவரே கவிஞர் என்று .அறம் சார்ந்து எழுதுவதோடு நின்றுவிடாமல் அறம் சார்ந்து வாழ்வது சிறப்பு .படைப்பாளிகள் இவரைப் பாடமாகக் கொள்ள வேண்டும்.
மதுரையில் இலக்கிய விழா எங்கு நடந்தாலும், பார்வையாளராக முதல் வரிசையில் வந்து அமர்ந்து விடுவார். என்னுடைய கவியரங்கம் பல கேட்டு, கை தட்டி மகிழ்ந்து உள்ளார் . நூலாசிரியர் திரு. ஹேமலதா பாலசுப்ரமணியம் உடல்நலம் குன்றி உள்ளார். அவரால் வெளியே வர இயலாது என்றனர். இந்த நூல் வெளியீட்டு விழாவை அவரது இல்லத்திலேயே ஏற்பாடு செய்து இருந்தார்கள். எழுத்தாளர்கள் திருச்சி சந்தரும், கர்ணனும் மற்றும் பலரும் வருகை தந்து சிறப்பித்தனர். எல்லோரையும் பார்த்த மகிழ்வில் நூலாசிரியர் விரைவில் நலம் பெறுவார் என்ற நம்பிக்கை வந்தது.
இந்த நூலில் 25 முத்திரைக் கதைகள் உள்ளன. பல்வேறு இதழ்களில் பிரசுரமான கதைகளைத் தொகுத்து மணிவாசகர் பதிப்பகம் மூலம் நூலாக வெளிவர உதவியவர் எழுத்தாளர் கர்ணன். அணிந்துரையும் தந்துள்ளார். இவர் ஒரு மாற்றுத்திறனாளி என்ற போதும் சக எழுத்தாளரான நூல் ஆசிரியருக்கு முதுமையில் உதவி உள்ளார், பாராட்டுக்கள்.
நூலாசிரியர் மனைவி மீது அளவற்ற பாசம் கொண்டவர். அவரது மனைவி 27.03.2002 அன்று உலகை விட்டு மறைந்திட்ட போதும் இன்றும் மனைவி பற்றி ஏதாவது பேச நேர்ந்தால் கண்கலங்கி விடுவார். தினமும் மனைவி படத்தின் முன்பு அமர்ந்து வணங்கி பேசி வருகிறார் .மற்ற ஆண்களுக்கு பாடமாக வாழ்ந்து வரும் மாமனிதர். இந்த நூலை அஞ்சலி செய்துள்ள விதத்தைப் பார்த்தாலே புரிந்து கொள்ள முடியும். இந்நூல் ஹேமாவுக்கு அஞ்சலி.
தாரமாய், தாயாய் உற்ற நல் தோழியாய்,
தடம்பதித்தாள் என் வாழ்வில் அரை நூற்றாண்டு
சில ஈரங்கள் காய்வதில்லை நெஞ்சில் போல
பல உறவுகளும் ஓய்வதில்லை, உன்னில் போல !
முதல் கதையின் தலைப்பையே, நூலின் தலைப்பாக வைத்துள்ளார். சிறுகதைகள் எப்படி எழுத வேண்டும் என்பதற்கு இலக்கணம் கூறும் விதமாக கதைகள் உள்ளன. சிறுகதைகள் எழுத வேண்டும், எழுத்தாளர் ஆக வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள் அவசியம் வாங்கிப் படித்துப் பயன்பெற வேண்டிய நூல். கதையில் சென்னை மொழி, மதுரை மொழி, ஏழ்மை மொழி என எல்லா மொழியிலும் கதைகள் உள்ளன. சமுதாயத்தை உற்று நோக்கி வடித்த கவிதைகள் நன்று. கதைகள் மூலம் வாழ்வியல் கருத்துக்களை மிக மென்மையாக உணர்த்தி வெற்றி பெறுகின்றார் நூலாசிரியர்.
இக்கதைகள் பல வருடங்களுக்கு முன்பு எழுதியவை என்ற போதும் இன்றும் பொருந்துவதாகவே உள்ளது. முதல் கதையான இவனும், அவனும் கதையில் இருந்து சில வரிகள் இதோ!
“எதிரே ஏதோ அரசியல் கட்சியின் கூட்டம். மேடையும், மைக்கும் கிடைத்தவர்கள் தங்களைத் தர்மபுத்திர்களாகவே உருவகிக்கும் வழக்கமான
காட்சியை ஜோடனைகளுடன் அரங்கேற்றிக் கொண்டிருந்தார்கள். எதிர்கட்சியினரின் ஊழல்கள் பற்றிய பட்டியல் நீண்டு கொண்டிருந்த்து. தங்களைத் தவிர மற்றவர்கள் எல்லோருமே எவ்வளவு நாணயமற்றவர்கள் என்று நிரூபிக்க்ச் சிரமமெடுத்துக் கொண்டிருந்தார்கள். இதையெல்லாம் அங்கீகரிப்பது ஒரு கடமை என்பது போல, எதிரேயிருந்து அடிக்கடி கைதட்டல்களும், ஆரவாரங்களும் எழுந்து கொண்டிருந்தன. இடையிடையே ‘வாழ்க’வும், ‘ஒழிக’வும் தமிழ் வளர்நத்து கொண்டிருந்த்து."
நூலாசிரியர் பல்லாண்டுகளுக்கு முன்பு எழுதியது இன்றும் அரசியலில் தொடர்கதையாகத் தொடர்வதை நினைத்துப் பார்த்தேன். கதைகளில் நக்கல், நையாண்டி என எள்ளல் சுவைகளுடன் பாத்திரங்களின் உரையாடல் இருந்தாலும் ஏழ்மையை உணர்த்திடும், கண்ணில் கண்ணீர் வரவழைக்கும் கதைகள் உள்ளன. பல்சுவை விருந்தாக நூல் உள்ளது.
தபஸ் என்ற கதையில் காட்டுக்குச் சென்று தாடி வளர்த்து கமண்டலத்துடன் இருப்பது மட்டுமல்ல தபம். மனைவிக்காக காத்திருப்பதும் தவம் என்கிறார்.
செம்மறியாடுகள் கதையில், மதுரையின் வீதிகளை படம் பிடித்துக் காட்டுகின்றார். மனிதர்களை விட செம்மறி ஆடுகள் மேல் என்று உணர்த்துகின்றார்.
யுக தர்மம் கதையில் வித்தியாசமான இராமாயணம் எழுதி உள்ளார்.
நிமிஷங்கள், விநாடிகள் கதையில் உள்ள ஒரு வசனம் இதோ
"ஏதோ இன்கம்டாக்ஸை ஏமாற்றும் லட்ச ரூபாய், நட்சத்திரத்தை விட அதிக சம்பாத்தியம் வந்து விட்ட்து போல மயக்கம்."
பெரிய மனிதர் கதையில் பெரிய மனிதர், பெரிய மனிதராக நடந்து கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தி உள்ளார். பெயருக்கு பெரிய மனிதராக இல்லாமல் உண்மையில் மதிக்கும் பெரிய மனிதராக வாழ வேண்டும் என்கிறார்.
நாலணா கதையில் பிறரிடம் ஓசியில் பெறுவதை இழுக்கு என்கிறார். அக்கதையின் முடிப்பில் உள்ள வரிகள் இதோ!
“சே. அத்தனையும் ஓசிப் பிழைப்பு. கேவலம், படு கேவலம், காசில்லா விட்டால் தான் என்ன, அறைக் கதவை மூடி உள்ளே விழுந்து கிடந்திருக்கலாமே. தடுமாறிச் சாய்ந்திருந்தா தன்மான உணர்வு எழுந்து நின்று சிரிக்கிறது, வெறிச் சிரிப்பு.
மனசாட்சி பேசுவது போல, பல இடங்களில் நூலாசிரியர் பேசி உள்ளார். பழிக்குப் பழி, வக்கிரம், சதி திட்டம் தீட்டுதல் – இப்படியே தொலைக்காட்சித் தொடர்கள் எடுத்து, சமுதாயத்தை சீரழித்து வரும் தொலைக்காட்சித் தொடர் இயக்குனர்கள் இந்நூலில் உள்ள கதைகளை குறும்படமாக எடுத்தால் நாடு, நலம் பெறும். முதுபெரும் எழுத்தாளர், நூலாசிரியர் திரு. ஹேமலதா பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு பாராட்டுக்கள். மனைவியின் பசுமையான நினைவுகளுடன் நூற்றாண்டு கடந்த வாழ்ந்திட வாழ்த்துக்கள் .
.
Re: இவனும் அவனும் ! (சிறுகதைகள்) நூல்ஆசிரியர் : திரு. ஹேமலதா பாலசுப்ரமணியம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
இந்த நூலில் 25 முத்திரைக் கதைகள் உள்ளன...
-
வார இதழ்களில் ஆசிரியரின் கதைகளை படித்த
ஞாபகம் வருகிறது...
-
-
வார இதழ்களில் ஆசிரியரின் கதைகளை படித்த
ஞாபகம் வருகிறது...
-
Re: இவனும் அவனும் ! (சிறுகதைகள்) நூல்ஆசிரியர் : திரு. ஹேமலதா பாலசுப்ரமணியம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
Similar topics
» மழை எனும் பெண்! நூல்ஆசிரியர் : கவிஞர் அ. ரோஸ்லின் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» புதுக்குறள்! நூல்ஆசிரியர் : கவிஞர் பெரணமல்லூர் சேகரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» எல்லோர்க்கும் பிடிக்கும் ! நூல்ஆசிரியர் : கவிஞர் வாசகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» அழகிய முதல் துளி ! நூல்ஆசிரியர் : கவிஞர் அ. ரோஸ்லின் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» நாட்குறிப்பற்றவனின் இரகசிய குறிப்புகள் நூல்ஆசிரியர் : கவிஞர் ஈழபாரதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» புதுக்குறள்! நூல்ஆசிரியர் : கவிஞர் பெரணமல்லூர் சேகரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» எல்லோர்க்கும் பிடிக்கும் ! நூல்ஆசிரியர் : கவிஞர் வாசகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» அழகிய முதல் துளி ! நூல்ஆசிரியர் : கவிஞர் அ. ரோஸ்லின் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» நாட்குறிப்பற்றவனின் இரகசிய குறிப்புகள் நூல்ஆசிரியர் : கவிஞர் ஈழபாரதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|