Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டுby heezulia Today at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐங்கரனைத் தொழுவோம் – அச்சமின்றி வாழ்வோம்!
2 posters
Page 1 of 1
ஐங்கரனைத் தொழுவோம் – அச்சமின்றி வாழ்வோம்!
-
முதலாம் இராசராசனால் எடுக்கப்பட்ட தஞ்சை
இராசராசேச்சுரம் எனும் பெரியகோயிலில் காணப்படும்
தேவகோட்டச் சிற்பம் - விநாயகர்.
----------------------------------
-
வழிபாட்டில் மிகவும் சிறப்பானதும் இன்றியமையாததும் விநாயகர் வழிபாடே. ஓர் ஊரின் குளக்கரையிலும் ஏரிக்கரையிலும் நம் கண்ணுக்கு தெரிவது முதலில் விநாயகர் சிலைதான்.
இவ்விநாயகரைப் பற்றிக் கூறும்பொழுது, தன் தாயாரைப் போன்றே மனைவி தனக்கும் வேண்டும் என்பதற்காக, ஏரிக்கரையிலும் குளக்கரையிலும் அவர் காத்திருப்பதாகக் கூறுவர்.
இந்த விநாயகர் வழிபாடும், இவர் தமிழகத்துக்கு வந்த விதமும் ஒரு பெரிய வரலாற்றைக் கொண்டுள்ளது. இவரை காவல் தெய்வம் என்றும், கானகத் தலைவன் என்றும் குறிப்பர். தலைப்பகுதி யானை முகமும், உடல் பகுதி மனித வடிவமும் கொண்டு அமைந்த இவரை, விநாயக மூர்த்தி என்றே அழைப்பர்.
முழுமுதற் கடவுள் விநாயகர். இவர் இல்லாத ஊரே இல்லையென்று சொல்வது சரியாக இருக்கும். கணபதி என்பதற்குப் பூதகணங்களின் தலைவன் என்று பொருள். சிற்ப அமைதிப்படி, பதினெட்டுக்கும் மேற்பட்ட உருவ வேற்றுமைகளில் கணபதி காணப்படுகிறார்.
-
பொதுவாக, கணபதியின் இரண்டு கைகளில் இரண்டு ஆயுதங்கள் இருக்கும். அவை, பாசமும் அங்குசமும் ஆகும். இந்த அடையாளங்கள், தாருண கணபதி, வீர விக்னேஷ்வர கணபதி, லட்சுமண கணபதி, பிரசன்ன கணபதி, நிருத்த கணபதி ஆகிய உருவங்களில் காணப்படுகின்றன. இவரை, வேட்டுவர்களின் தலைவன், கடவுள் என்றும் சிலர் குறிப்பர்.
பிரம்ம வைவார்த்த புராணம், கணபதியின் பிற பெயர்களாகக் குறிக்கும்பொழுது ஏகதந்த, லம்போதரா, சூர்ப்பனா, கஜநான, குகராஜா எனக் குறிக்கின்றது. கணபதி என்ற சொல்லுக்குப் பொருள் கொள்ளும்பொழுது, முதல் எழுத்து மதிநுட்பத்தையும், இரண்டாம் எழுத்து தடங்கலுக்குப் பாதுகாப்பு அளிப்பவன் என்றும் ஏழைப் பங்காளன் என்றும், பதி என்ற இறுதி எழுத்துகள் இறைவனாகிய பரபிரம்மத்தையும் குறிப்பதாகும்.
கணபதி வரலாறு
விநாயகர் சிற்பத்தை, கி.பி. ஏழாம் நூற்றாண்டில், வாதாபியில் இருந்து சிறுத்தொண்டர் கொண்டுவந்த பிறகுதான், விநாயகர் வழிபாடு தமிழகத்துக்கு வந்தது என்று கருதியதால்தான், கணபதியைப் பற்றி பாடும்பொழுது வாதாபி கணபதியே எனப் பாடினர்.
அக்கருத்துக்கு மாறாக, தமிழகத்தில் காணப்படும் பிள்ளையார்பட்டி விநாயகர், காலத்தால் கி.பி. ஐந்தாம் நுற்றாண்டைச் சார்ந்தது என்பதை அங்குள்ள கல்வெட்டுகள் மற்றும் அதன் சிற்ப அமைதியும் தெளிவுபடுத்துகின்றன. பரஞ்சோதி முனிவருக்கு முன்பே தமிழகத்தில் பிள்ளையார் வழிபாடு இருந்து வந்துள்ளது என்பது இதன்மூலம் தெளிவாகிறது.
திருச்சி மலைக்கோட்டையின் கீழே காணப்படும் பல்லவர் காலக் குடவரையில், பாறையில் செதுக்கப்பட்டுள்ள விநாயகர் உருவம், பரஞ்சோதி முனிவருக்கு முன் வந்தது. அதாவது, நரசிம்ம பல்லவரின் தந்தை மகேந்திர பல்லவரின் காலத்தைச் சார்ந்தது.
ஆக, வாதாபி கணபதிக்கு முன்பே தமிழகத்தில் வழிபாட்டில் விநாயகர் இருந்துள்ளார் என்பதற்கு, திருச்சி குடவரையில் காணப்படும் விநாயகர் சான்றாகும். மேலும், சங்க காலச் சோர்களும் கணபதியை வழிபட்டுள்ளனர் என்பதற்குச் சான்றாக, காஞ்சிபுரத்தில் கரிகாலச் சோழப் பிள்ளையார் எனும் கோயில் இன்றும் வழிபாட்டில் உள்ளது. இது, கரிகாலச் சோழனால் எழுப்பப்பட்டதாக இருக்கலாம்.
வழிபாட்டில் முதலில் வணங்கப்படும் கடவுள் கணபதிதான். தனிவழிபாடாக இருப்பினும், கோயில் அமைப்பிலும், கணபதியையே முதலில் வழிபாடு செய்வது வழக்கம்.
உற்சவ மூர்த்திகளை அமைக்கும்பொழுது, பஞ்ச மூர்த்திகளை ஊர்வலமாக அமைப்பர். அவற்றிலும், விநாயகரே முதன்மை வகிப்பார். இவரை, சிவனின் 24 மூர்த்தங்களில் ஒன்றாகவே கருதுவர். புராணங்களிலும், பாடல்களிலும், நூல்களிலும், கணபதி பாடலையே முதலில் அமைத்து, அவரை வணங்கிய பிறகே காரியங்களைத் துவங்குவது வழக்கமாக இருந்து வருகிறது.
-
-
முதலாம் இராசேந்திர சோழன், தனது போரினால்
பெற்ற வெற்றிப் பரிசாக சாளுக்கிய நாட்டில்
இருந்து கொண்டுவந்து, தன்னால் நிறுவப்பட்ட
சோழர்களின் இரண்டாவது தலைநகரமான
கங்கைகொண்டசோழபுரத்தில் வைத்து வணங்கிய
பிள்ளையார்.
-----------------------------------------------------------------------------------------
-
‘ஓம், சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் பிரசன்ன வதனம் தியாயோத் சர்வ விக்னோப சாந்தேயத்’ – என்று, வைணவர்வளின் விஷ்ணு சகஸ்ரநாமம் துவங்குகிறது. எனவே, முழுமுதல் கடவுளாக கணபதிதான் உள்ளார்.
இலக்கியங்களில் கணபதி
சங்க இலக்கிய நூல்களில் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு இரண்டும் சிறப்பு பெற்றவை. அவற்றில், கணபதியை நேரடியாக குறிப்பவை எதுவும் இல்லை. இருப்பினும், பத்துப்பாட்டில் முதல் பாடலான திருமுருகாற்றுப்படையில் கணபதி பற்றிய குறிப்பு வருகிறது. ‘ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை’ என்று இருக்கிறது. இந்த ஐங்கரன் குறிப்பை பிற்சேர்க்கை என்பர்.
கி.பி. ஐந்தாம் நூற்றாண்டுக்குப் பின் வந்த இலக்கியங்களிலும், சைவ ஆசாரியர்களும், விநாயகர் துதி பாடியுள்ளனர். திருஞானசம்பந்தர், அப்பர், இவர்களின் பாடல்களில் விநாயகர் பற்றிய குறிப்புகளைக் காணலாம். நம்பியாண்டார் நம்பி அவர்கள், ‘விநாயகர் திரு இரட்டை மணிமாலை’ என்ற நூலைப் படைத்துள்ளார். சைவ ஆசாரியர்களான திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோர், நரசிம்ம பல்லவன், பாண்டியன் அரிகேசரி, மாறவர்மன் மற்றும் மகேந்திரவர்மன், ராஜசிம்மன் போன்ற பல்லவ, பாண்டிய மன்னர்கள் அரசு புரிந்த காலத்தில் வாழ்ந்தவர்கள்.
சம்பந்தர் பாடிய துதியில் மிகவும் சிறப்பு வாய்ந்த பாடல் –
‘படியதன் உரு உமைகொள மிக கரியது,
வடிகொடு, தனதடி வழிபடும் அவரிடம்
கடிகண பதிவர அருளினன் மிகு கொடை
வடிவினா; பயில்வலி வல முறை இறையே’
என்பது ஆகும். அப்பர், கணபதியைக் குறிக்கும்பொழுது, விநாயகர், விக்னேஷ்வரர், விக்னவிநாயகர் என்றே குறித்துள்ளார்.
விநாயகன் என்றால் தடைகளை நீக்குபவன். கணேசன் என்றால் தலைவன் என்று பவிஷ்ய புராணம், வாமன புராணம் போன்றவற்றில் விநாயகர் பற்றிய விளக்கத்தைக் காணமுடிகிறது.
நல்லோரைச் செம்மைப்படுத்தும் கருவியாகத் திகழ்பவன்; இத்தகு பெருமை வாய்ந்த விநாயகப் பெருமான், தமிழர்களுக்கு விநாயக சதுர்த்தித் திருநாளில் அனைத்தும் வழங்கி அருள வேண்டுகிறேன். இவன் திருவடிகளை நாமும் இந்த நன்நாளில் போற்றித் துதிப்போமாக.
===========================
By ச.செல்வராஜ், தொல்லியல் துறை
நன்றி- தினமணி
Re: ஐங்கரனைத் தொழுவோம் – அச்சமின்றி வாழ்வோம்!
நல்ல பகிர்வு ராம் அண்ணா..............இந்த இரண்டாவது பிள்ளையார் தான் 'வாதாபி கணபதியா' அண்ணா ?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» "தமிழோடு வாழ்வோம் தமிழனாய் வாழ்வோம்!"
» மனமுடன் தொழுவோம்
» சமூக நிலவரங்களை அலசும் புதிய படம் ‘அச்சமின்றி’
» சுறுசுறுப்புடன் வாழ்வோம்!
» நலமுடன் வாழ்வோம்
» மனமுடன் தொழுவோம்
» சமூக நிலவரங்களை அலசும் புதிய படம் ‘அச்சமின்றி’
» சுறுசுறுப்புடன் வாழ்வோம்!
» நலமுடன் வாழ்வோம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|