ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதுதான் ஹைக்கூ – புதிய தொடர்

+2
சசி
முனைவர் ம.ரமேஷ்
6 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

இதுதான் ஹைக்கூ – புதிய தொடர் - Page 2 Empty இதுதான் ஹைக்கூ – புதிய தொடர்

Post by முனைவர் ம.ரமேஷ் Tue Sep 15, 2015 9:43 am

First topic message reminder :

1990ல் அகில உலக ஹைக்கூப் போட்டியில் முதல் பரிசு பெற்ற ஹைக்கூ இது.

புயலுக்குப் பிறகு,
சிறுவன் ஆகாயத்தைத் துடைக்கிறான்,
மேசைகளின் மீதிருந்து! – டார்கோ பிளாஸனின்

மேசைகளின் உயரம் போதுமா, ஏறி நின்று வானத்தைத் துடைக்க?

அந்தச் செயல் அல்ல, நிகழ்ந்தது; புயலின்போது, வானமே இடிந்து விழுந்தது போல் மழை, காற்று… ஆகாயப் பொழிவுகள் மேசைகளின் மீது! மேகங்கள் அல்லவா துகள்களாய்ச் சிதறி விழுந்தன… புயலின் வன்மையைக் கலைநயத்தோடு மறைமுகமாய்ச் சுட்டியிருக்கும் தன்மை வியக்கத்தக்கது.

மேசைகள் வெளியே இருப்பதற்கு வாய்ப்பில்லை. அவை வீட்டுக்குள்ளேதான் இருந்திருக்க வேண்டும். ஆயினும், சன்னல்களும், கதவுகளும், தாழ்ப்பாள்களுக்கு அடங்காமல் புயலில் அடித்துக் கொண்டதனால்தான், மேசைகளின்மீது புயலின் சின்னங்கள்.

சிறுவன் துடைக்கிறான் என்பதனால், இது உணவு விடுதியாயிருக்கலாம். மேசைகள் என்னும் பன்மை வெளிப்பாடு, இதனை உறுதிப்படுத்தும்.
நன்றி – நிர்மலா சுரேஷ், ஹைக்கூக் கவிதைகள் ஆய்வு நூல்,


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down


இதுதான் ஹைக்கூ – புதிய தொடர் - Page 2 Empty Re: இதுதான் ஹைக்கூ – புதிய தொடர்

Post by ayyasamy ram Thu Oct 08, 2015 7:46 am

இதுதான் ஹைக்கூ – புதிய தொடர் - Page 2 103459460 இதுதான் ஹைக்கூ – புதிய தொடர் - Page 2 3838410834
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இதுதான் ஹைக்கூ – புதிய தொடர் - Page 2 Empty Re: இதுதான் ஹைக்கூ – புதிய தொடர்

Post by சசி Thu Oct 08, 2015 8:29 am

இயற்கையை நேசித்தவரின் படைப்பு.அருமை
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

இதுதான் ஹைக்கூ – புதிய தொடர் - Page 2 Empty Re: இதுதான் ஹைக்கூ – புதிய தொடர்

Post by முனைவர் ம.ரமேஷ் Fri Oct 09, 2015 6:57 am

"ஹைக்கூ பயிற்சிக்குரிய சிறு விளக்கம்..!" - நன்றி - கொள்ளிடம் காமராஜ்

இரா. கவிமலை, து. வெள்ளாளவிடுதி.
கேள்வி: ஐயா, ஒரு சிறு சந்தேகம்:
"விவவசாயம் குறைந்து வருவதால் விலையேறின உழுத மாடுகள் கசாப்பு கடையில்..!"

இது ஹைக்கூவாக ரசிக்கப்படுமா?

இதற்கு என் விளக்கம்:-
இச் சொற்றொடரில் ஹைக்கூவிற்கான மையக்கரு உள்ளது..!
ஆனால் ஹைக்கூ வடிவம் இல்லை..!

பயிற்சி விளக்கம்:-
பொதுவாக ஒரு சிறந்த ஹைக்கூ என்பது மூன்று காட்சிகளை வாசகனுக்கு உணர்த்த வேண்டும்..! முதல் இரண்டு காட்சிகளில் மேலோட்மாகவும் மூன்றாவது காட்சியில் (அதாவது இறுதி வரியில்) ஆழமாகவும் மிகவும் அழுத்தமாகவும் சொல்ல வேண்டும்..!

இப்பொழுது அன்புத்தோழமைக் கவிச் சகோ இரா. கவிமலையின் ஹைக்கூவைக் காண்போம்..!

"விவசாயம் குறைந்து வருவதால் விலையேறின உழுத மாடுகள்
கசாப்பு கடையில்..!"

வார்த்தைகளை வடிவமைக்கும் முயற்சியில் கொஞ்சமும் தளரக் கூடாது..!

இன்னும் சரியான வார்த்தைகளைச் சேர்க்கும் நெளிவு சுளிவுகளைக் கற்றுக் கொண்டீர்களென்றால் தங்களின் ஹைக்கூ முயற்சியில் வெற்றி கிட்டும்..!

உழுதமாடுகள் - எருதுகள் அல்லது மாடுகள்.
கசாப்பு கடையில் இறைச்சி விற்கப்படுகின்றது.

இப்பொழுது பாருங்கள்:

அமோக விற்பனை
மாட்டிறைச்சி
கசாப்பு கடையில்..!
இது முதல் நிலைப் பயிற்சி..!

இரண்டாவதாக.!
மாட்டிறைச்சி
அமோக விற்பனை
கசாப்பு கடையில்..!

மூன்றாவது (இறுதி) இறுதி நிலை..!
கசாப்பு கடையில்
அமோக விற்பனை
மாட்டிறைச்சி..!
இதுபோன்று புதிதாக எழுதுபவர்கள் முயற்சியுங்கள்..! என் இதயப்பூர்வ நல்வாழ்த்துகள்..!
என்றும் அன்புடன்:-
கொள்ளிடம் காமராஜ்,
திருச்சிராப்பள்ளி - 621 216.


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

இதுதான் ஹைக்கூ – புதிய தொடர் - Page 2 Empty Re: இதுதான் ஹைக்கூ – புதிய தொடர்

Post by முனைவர் ம.ரமேஷ் Sat Oct 10, 2015 8:13 am

போட நீயும் உன் காதலும்...
ஹைக்கூவா? சென்ரியுவா? - பார்ப்போம்
தங்க மோதிரம்
பித்தளை ஆனது
காதலி ஜூட். - Baalamirdhan Murthy
சென்ரியுதான்.. ஏன் பித்தளையானது என்ற சிந்தனையை முதலிரண்டு அடிகள் சிந்திக்க வைக்கிறது. வரதட்சணை அதிகம் கேட்டதால் இப்படி திருட்டுத்தனமாக போட வேண்டியிருந்ததா? அல்லது சாலையில் கிடந்த அந்த மோதிரத்தை தங்கமென்று எண்ணி எடுத்தவருக்குப் பித்தனையானதா? இப்படிப் பொருள் விரிய...விரிய…. சரி அப்படி என்னத்தான் பித்தளையானது என்று பார்க்க 3 அடியைப் படிக்கிறோம்.
கடைசி வரி ஹைக்கூவுக்கான திருப்பமாக (சென்ரியுக்கும் இந்த திருப்பம் - ஹைக்கூ அமைப்பு முறை பொருந்தும்) அமைந்திருக்கிறது. காதலி ஏன் ஜூட் என்ற சிந்தனைக்குப் பல பொருள் விரியலாம்.
இப்போதும் எப்போதும் காதல் எல்லாம் புனிதம் - ஒருத்தரையொருத்தரே நினைத்திருப்பது என்ற சப்பைக்கட்டெல்லாம் உடைய... இன்றைய நவீன காதலின் பிரச்சினையை- பழகிய பின் பிடிக்காமை, காமம் தீர்ந்ததும் விலகுதல் - பிறரைப் பிடித்துப்போதல் - பெற்றோர் ஏற்காமை - அல்லது அல்லது அல்லது என்று சொல்லிக்கொண்டே போகலாம் அந்த 3 வது அடிக்கு. இன்றைய காதலர்களின் பிரச்சினையைப் பேசுவதால் இது சென்ரியு என்று எடுத்துக்கொள்வோம்.


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

இதுதான் ஹைக்கூ – புதிய தொடர் - Page 2 Empty Re: இதுதான் ஹைக்கூ – புதிய தொடர்

Post by முனைவர் ம.ரமேஷ் Mon Oct 12, 2015 7:48 am

எச்சில் இலையை விட்டு
கலையும் காகங்கள்
தூரத்தில் ஓடிவரும் நாய் - பட்டியூர் செந்தில்குமார்


எச்சில் இலையை விட்டு - கலையும் காகங்கள் – எந்த எச்சில் இலை? எந்த இடத்தில் இருக்கும் எச்சில் இலை என்றும் கலையும் காகங்கள் என்பது எச்சில் இலையில் என்ன இருந்தது… அது சுவையாக இருந்ததா? இல்லையா? முழுவதும் சாப்பிட்டு விட்டு கலைகின்றனவா? எச்சில் இலையில் இருப்பது பிடிக்காமல் கலைகின்றனவா? என்று பொருள் விரியும்… கடைசி வரி படிக்கும்போது அந்த நாய் வருவதால் பயந்து பறக்கிறது – அந்த நாய் அந்த எச்சில் இலைக்குதான் வருகிறதா? எதேச்சையாக அந்தப் பக்கம் வருகிறதா என்று பொருள் விரியும்… - கவியருவி ம. ரமேஷ்.


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

இதுதான் ஹைக்கூ – புதிய தொடர் - Page 2 Empty Re: இதுதான் ஹைக்கூ – புதிய தொடர்

Post by முனைவர் ம.ரமேஷ் Wed Oct 14, 2015 6:54 am

ஹைக்கூ புரிதல். – நா. விச்வநாதன்

*****
ஹைக்கூ எளிய ஒரு கவிதை வடிவம்தான். இன்னொன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.
இது புதிதல்ல. புதிருமல்ல. மரபு சார்ந்தது. நம் சங்கப்பாடல்கள் போலத்தான். குள்ள வடிவம்.
ஜப்பானிய மொழி சித்திரவடிவத்திலுள்ளது. இது ஒரு வசதி. ஒவ்வொரு எழுத்துக்கும் பொருளுண்டு. ஹைக்கூவை நடிக்கும் வரிகள் என்பர். நர்த்தனமிடும் வரிகள். இயற்கையழகும் பருவகால மலர்ச்சியும் இதனால் கிளர்ந்த மனதும் இணைய இது பிறந்தது. 'புள்ளெல்லாம் நான்' என்ற நம் பாரதியின் மனநிலை. துயரத்தையும் இன்பமாக மாற்றும் கலை. நல்ல கவிமனதும் வாழ்வை உற்றுப் பார்க்கும் மனநிலையைப் பேணும் பழக்கமும் வேண்டும். நம் சித்தர்மரபு தத்துவ மரபென்பர். கவிமரபும் கூட. கட்டற்ற சுதந்திரம்தான். சித்தர் பாடல்களில் ஹைக்கூ கூறுகளை நன்கு உணரலாம்.

நம் வள்ளுவர் சொல்வார்:
யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

இதன் மொழி பெயர்ப்பு போல பாஷோ பாடுவார்:
"வார்த்தை விழுந்தபின்
உதடுகள் உறைந்தன
முன் பனிக் காற்று"

- நன்றி - https://www.facebook.com/viswanathannaa


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

இதுதான் ஹைக்கூ – புதிய தொடர் - Page 2 Empty Re: இதுதான் ஹைக்கூ – புதிய தொடர்

Post by முனைவர் ம.ரமேஷ் Sat Dec 19, 2015 4:29 pm

https://www.facebook.com/groups/TamilHaikuClub/
ந.க.துறைவன்

எல்லோருக்காகவும் காத்திருக்கிறது
மரத்தின் கீழ் தனிமையில்
காலியான பெஞ்சு.

VathilaiPraba அவர்களின் விளக்கம்
பல்வேறு விரிவுகளை விழிகளில் விரியச் செய்யும் கவிதையிது. முதல் வரியின் முதல் வார்த்தையை நீக்கி
"காத்திருக்கிறது
மரத்தின் கீழ் தனிமையில்
காலியான பெஞ்சு."
என்று வாசிக்கும்போது கவிதை ஒரு வெறுமையை சுட்டுகிறது. யாரும் வராத சூழலில் இருக்கிறது இந்த பெஞ்சு.. பயன்பாடற்ற நிலையில் இருக்கிறதா எனவும் தோன்றுகிறது. விட்டுச் சென்ற உரையாடல்கள் ஆங்காங்கே சிதறிக் கிடக்குமே.. எப்படி தனிமை வரும்? பூக்கள் சொரிந்து கிடக்குமே.. எப்படி தனிமை வரும்? ஒரு இணக்கமான சூழலை இந்த பெஞ்சுகள் தரும்தான்.. அவர்களுக்கான காத்திருத்தல்தான் இந்த காலியான பெஞ்சு.. வாருங்கள் நாமும் இந்த பெஞ்சில் உட்காரலாம்.. கவிதைகள் கூட நம்மில் .உரையாடலாம்..
ஆனால், கவிஞர்.. இப்படி எழுதுகிறார்...
"எல்லோருக்காகவும் காத்திருக்கிறது
மரத்தின் கீழ் தனிமையில்
காலியான பெஞ்சு."
முதல் வரியில் எல்லோருக்காகவும் என எழுதுகிறார்.. இந்த காலி பெஞ்சுக்குக்கூட ஒரு தாயன்பு இருக்கிறது பாருங்கள்... வெறுமையோ, தனிமையோ, குறியீடாக பெஞ்சு .இருக்கிறது. யார் வேண்டுமானாலும் வரலாம். அமரலாம்.
- நன்றி வதிலைபிரபா.


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

இதுதான் ஹைக்கூ – புதிய தொடர் - Page 2 Empty Re: இதுதான் ஹைக்கூ – புதிய தொடர்

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Dec 19, 2015 10:07 pm

கவியருவி ம.ரமேஷ் wrote:
அந்தச் செயல் அல்ல, நிகழ்ந்தது; புயலின்போது, வானமே இடிந்து விழுந்தது போல் மழை, காற்று… ஆகாயப் பொழிவுகள் மேசைகளின் மீது! மேகங்கள் அல்லவா துகள்களாய்ச் சிதறி விழுந்தன… புயலின் வன்மையைக் கலைநயத்தோடு மறைமுகமாய்ச் சுட்டியிருக்கும் தன்மை வியக்கத்தக்கது.
மேற்கோள் செய்த பதிவு: 1162564
இதுதான் ஹைக்கூ – புதிய தொடர் - Page 2 3838410834 இதுதான் ஹைக்கூ – புதிய தொடர் - Page 2 103459460 இதுதான் ஹைக்கூ – புதிய தொடர் - Page 2 1571444738
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இதுதான் ஹைக்கூ – புதிய தொடர் - Page 2 Empty Re: இதுதான் ஹைக்கூ – புதிய தொடர்

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Dec 19, 2015 10:09 pm

கவியருவி ம.ரமேஷ் wrote:
எல்லோருக்காகவும் காத்திருக்கிறது
மரத்தின் கீழ் தனிமையில்
காலியான பெஞ்சு.
மேற்கோள் செய்த பதிவு: 1181559
அருமையான கவிதை விளக்கம்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இதுதான் ஹைக்கூ – புதிய தொடர் - Page 2 Empty Re: இதுதான் ஹைக்கூ – புதிய தொடர்

Post by முனைவர் ம.ரமேஷ் Wed Dec 23, 2015 7:39 am

மார்கழிப் பனி
விளக்குடன் விளையாடும்…
சிறு தும்பியொன்று – ம. ரமேஷ்

வதிலை பிரபா அவர்களின் விளக்கம். –
யாரிவன்? யாத்ரிகனா..? மார்கழிப் பனி வேறு.. பசியோடிருக்கலாம்.. ஆனால் அவன் மனம் தும்பியை அல்லவா ரசிக்கிறது. விளக்குடன் விளையாடும் தும்பி அல்லவா அது.. கணநேரம் இவன் மனசு அந்த விளக்கொளிக்குச் சென்று மீண்டும் திரும்பலாம். சிறு சலனம்.. அதில் மகிழ்ச்சி.. பழையபடி மனதில் அவன் கவலைகள் சேரும்.. மனம் இருளில் மூழ்க நேரிடும்.. ஒவ்வொருவருக்கும் இச் சிறு தும்பி வேண்டும்தான். ஒரு சலனம்.. 'பளிச்' சென்ற ஒரு மகிழ்ச்சி.. வாருங்கள்.. விளக்குடன் விளையாடும் சிறு தும்பியைத் தேடிச் செல்லலாம்.. ஒரு யாத்ரிகனாக.


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

இதுதான் ஹைக்கூ – புதிய தொடர் - Page 2 Empty Re: இதுதான் ஹைக்கூ – புதிய தொடர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum