Latest topics
» சிந்திக்க ஒரு நொடி!by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Srinivasan23 | ||||
Barushree |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தினம் ஒரு சிறுதானியம் !
4 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
தினம் ஒரு சிறுதானியம் !
First topic message reminder :
இன்று, 25 வயதில் இதய நோய், 30 வயதில் மூட்டுவலி என அனைவருமே ஏதேனும் ஒரு நோயைச் சுமந்து, மருந்துகளையே உணவாக உட்கொள்கிறோம். உணவின் தேவை அதிகரித்து வரும் நிலையில், பாரம்பரிய விவசாய முறை என்பது படுபாதாளத்தை நோக்கிப்போய் கொண்டிருக்கிறது. விளை நிலங்களைப் பூச்சிக்கொல்லி மற்றும் ரசாயன உரங்கள் ஆக்கிரமித்து விட்டன.
உணவும் நஞ்சாகி நோய்களுக்கு ரத்னக் கம்பளம் விரித்து விட்டது. இனி, உணவு புரட்சி செய்து, அதிகம் ஆர்கானிக் உணவுகளை அன்றாடம் சேர்த்துக் கொள்வது ஒன்றே நம்மிடம் எஞ்சியிருக்கும் ஒரே வழி.
சிறுதானிய உணவுப் பொருட்கள், நம் உடலுக்கு ஊட்டத்தையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் தருவதில் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன.
தினம் ஒரு சிறுதானியம் பற்றிய இந்த சிறப்புத் தகவல்கள், ஆரோக்கியமான வாழ்வுக்கு நம்மை அழைத்துச் செல்லும் என்பது உறுதி.
ஆனந்த விகடனில் பார்த்தேன், அதை இங்கு உங்களுடன் பகிறுகிறேன்
இன்று, 25 வயதில் இதய நோய், 30 வயதில் மூட்டுவலி என அனைவருமே ஏதேனும் ஒரு நோயைச் சுமந்து, மருந்துகளையே உணவாக உட்கொள்கிறோம். உணவின் தேவை அதிகரித்து வரும் நிலையில், பாரம்பரிய விவசாய முறை என்பது படுபாதாளத்தை நோக்கிப்போய் கொண்டிருக்கிறது. விளை நிலங்களைப் பூச்சிக்கொல்லி மற்றும் ரசாயன உரங்கள் ஆக்கிரமித்து விட்டன.
உணவும் நஞ்சாகி நோய்களுக்கு ரத்னக் கம்பளம் விரித்து விட்டது. இனி, உணவு புரட்சி செய்து, அதிகம் ஆர்கானிக் உணவுகளை அன்றாடம் சேர்த்துக் கொள்வது ஒன்றே நம்மிடம் எஞ்சியிருக்கும் ஒரே வழி.
சிறுதானிய உணவுப் பொருட்கள், நம் உடலுக்கு ஊட்டத்தையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் தருவதில் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன.
தினம் ஒரு சிறுதானியம் பற்றிய இந்த சிறப்புத் தகவல்கள், ஆரோக்கியமான வாழ்வுக்கு நம்மை அழைத்துச் செல்லும் என்பது உறுதி.
ஆனந்த விகடனில் பார்த்தேன், அதை இங்கு உங்களுடன் பகிறுகிறேன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தினம் ஒரு சிறுதானியம் !
20.குதிரைவாலி
சிறுதானியங்களில் முக்கியமானது குதிரைவாலி. புழுங்கல் அரிசியில் தோசை வார்த்துச் சாப்பிடுவதைக் காட்டிலும், குதிரைவாலி அரிசியில் தோசை செய்து சாப்பிட்டுப்பாருங்கள்... சுவையும், சத்தும் அற்புதமாக இருக்கும்.
பலன்கள்
இரும்புச்சத்து நிறைந்திருப்பதால், ரத்தசோகை வராமல் தடுக்கும். நார்ச்சத்து மலச்சிக்கலைத் தடுக்கவும், செரிமானத்துக்கும் உதவுகிறது. குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் என அனைவரும் சாப்பிட உகந்தது.
குதிரைவாலி தக்காளி தோசை
4 கப் குதிரைவாலி அரிசியுடன் ஒரு கப் உளுந்து, கால் டீஸ்பூன் வெந்தயம் சேர்த்து மூன்று மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு, அரைத்து உப்பு சேர்த்துக் கலந்து நான்கு மணி நேரம் புளிக்க விடவும்.
4 தக்காளி, சிறிய துண்டு இஞ்சி, ஒரு டீஸ்பூன் சீரகம் சேர்த்து, விழுதாக அரைத்த மாவுடன் கலக்கவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிச் சேர்க்கவும்.
சூடான தோசைக் கல்லில் மெல்லிய தோசைகளாகச் சுட்டு, கொத்தமல்லிச் சட்னி அல்லது தேங்காய் சட்னியுடன் சாப்பிடலாம்.
சிறுதானியங்களில் முக்கியமானது குதிரைவாலி. புழுங்கல் அரிசியில் தோசை வார்த்துச் சாப்பிடுவதைக் காட்டிலும், குதிரைவாலி அரிசியில் தோசை செய்து சாப்பிட்டுப்பாருங்கள்... சுவையும், சத்தும் அற்புதமாக இருக்கும்.
பலன்கள்
இரும்புச்சத்து நிறைந்திருப்பதால், ரத்தசோகை வராமல் தடுக்கும். நார்ச்சத்து மலச்சிக்கலைத் தடுக்கவும், செரிமானத்துக்கும் உதவுகிறது. குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் என அனைவரும் சாப்பிட உகந்தது.
குதிரைவாலி தக்காளி தோசை
4 கப் குதிரைவாலி அரிசியுடன் ஒரு கப் உளுந்து, கால் டீஸ்பூன் வெந்தயம் சேர்த்து மூன்று மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு, அரைத்து உப்பு சேர்த்துக் கலந்து நான்கு மணி நேரம் புளிக்க விடவும்.
4 தக்காளி, சிறிய துண்டு இஞ்சி, ஒரு டீஸ்பூன் சீரகம் சேர்த்து, விழுதாக அரைத்த மாவுடன் கலக்கவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிச் சேர்க்கவும்.
சூடான தோசைக் கல்லில் மெல்லிய தோசைகளாகச் சுட்டு, கொத்தமல்லிச் சட்னி அல்லது தேங்காய் சட்னியுடன் சாப்பிடலாம்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தினம் ஒரு சிறுதானியம் !
21.கம்பு
சிறு தானியங்களிலேயே அதிக அளவு புரதச்சத்து இருப்பது கம்பில்தான். எண்ணெய் சத்தான, உடலுக்கு உகந்த நிறைவுறாக் கொழுப்பு அமிலம் இதில் உள்ளது.
பலன்கள்
கம்பு, ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும். ஆரோக்கியமான சருமத்துக்கு நல்லது. கண் பார்வை தெளிவடையும். உடல் உஷ்ணத்தைக் குறைக்கும். வாய்ப்புண், மலச்சிக்கல் பிரச்னையைப் போக்கும்.
'கமகம' கம்பு தயிர் சாதம்
ஒரு கப் கம்பை சிறிது தண்ணீர் தெளித்துப் பிசறி வைக்கவும். சிறிது நேரம் கழித்து மிக்ஸியில் போட்டு 'விப்பர்' பட்டனைக் கொண்டு, இரண்டு முறை சுற்றி எடுக்கவும். பிறகு கம்பை ஒரு தட்டில் பரத்தி ஊதி, தோலை நீக்கவும். பிறகு, மீண்டும் மிக்ஸியில் போட்டு ரவைப் பதத்தில் உடைத்துக் கொள்ளவும்.
உடைத்த கம்புடன் 5 கப் தண்ணீர் சேர்த்து, குக்கரில் மிதமான தீயில் வைக்கவும். நான்கைந்து விசில் வந்ததும் இறக்கி, பிரஷர் போனதும் திறந்து, ஒன்றரை கப் பால் சேர்த்து நன்றாகக் கிளறவும்.
கடாயைக் காயவைத்து, 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, ஒரு டீஸ்பூன் அளவுக்குக் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் தாளித்து, பொன்னிறமானதும், கறிவேப்பிலை, 2 காய்ந்த மிளகாயைக் கிள்ளிப்போடவும். 2 பச்சை மிளகாய், இஞ்சியைப் பொடியாக நறுக்கி சேர்த்து வதக்கவும். இதைக் கம்பு சாதத்துடன் சேர்க்கவும்.
கடைசியாக, உப்பு, தயிர், தேவையான தண்ணீர் சேர்த்து நன்றாகக் கிளறிப் பரிமாறவும்.
சிறு தானியங்களிலேயே அதிக அளவு புரதச்சத்து இருப்பது கம்பில்தான். எண்ணெய் சத்தான, உடலுக்கு உகந்த நிறைவுறாக் கொழுப்பு அமிலம் இதில் உள்ளது.
பலன்கள்
கம்பு, ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும். ஆரோக்கியமான சருமத்துக்கு நல்லது. கண் பார்வை தெளிவடையும். உடல் உஷ்ணத்தைக் குறைக்கும். வாய்ப்புண், மலச்சிக்கல் பிரச்னையைப் போக்கும்.
'கமகம' கம்பு தயிர் சாதம்
ஒரு கப் கம்பை சிறிது தண்ணீர் தெளித்துப் பிசறி வைக்கவும். சிறிது நேரம் கழித்து மிக்ஸியில் போட்டு 'விப்பர்' பட்டனைக் கொண்டு, இரண்டு முறை சுற்றி எடுக்கவும். பிறகு கம்பை ஒரு தட்டில் பரத்தி ஊதி, தோலை நீக்கவும். பிறகு, மீண்டும் மிக்ஸியில் போட்டு ரவைப் பதத்தில் உடைத்துக் கொள்ளவும்.
உடைத்த கம்புடன் 5 கப் தண்ணீர் சேர்த்து, குக்கரில் மிதமான தீயில் வைக்கவும். நான்கைந்து விசில் வந்ததும் இறக்கி, பிரஷர் போனதும் திறந்து, ஒன்றரை கப் பால் சேர்த்து நன்றாகக் கிளறவும்.
கடாயைக் காயவைத்து, 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, ஒரு டீஸ்பூன் அளவுக்குக் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் தாளித்து, பொன்னிறமானதும், கறிவேப்பிலை, 2 காய்ந்த மிளகாயைக் கிள்ளிப்போடவும். 2 பச்சை மிளகாய், இஞ்சியைப் பொடியாக நறுக்கி சேர்த்து வதக்கவும். இதைக் கம்பு சாதத்துடன் சேர்க்கவும்.
கடைசியாக, உப்பு, தயிர், தேவையான தண்ணீர் சேர்த்து நன்றாகக் கிளறிப் பரிமாறவும்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தினம் ஒரு சிறுதானியம் !
22. வரகு
வாய்க்கு ருசியைத் தரும் வரகில், வற்றாத சத்துகள் உள்ளன. வரகின் தோலில் ஏழு அடுக்குகள் உள்ளன. கிராமங்களில் உரலில் போட்டு, வெகு நேரம் இடிப்பார்கள். வறண்ட பகுதிகளிலும் விளையக்கூடியது.
பலன்கள்
நார்ச்சத்து நிறைந்திருப்பதால் சீக்கிரத்தில் செரிக்கக்கூடியது. அரிசிக்குப் பதிலாக வரகில் இட்லி, தோசை செய்யலாம். அரிசி, கோதுமையைக் காட்டிலும் வரகில் நார்ச்சத்து மிகவும் அதிகம். மாவுச்சத்தும் குறைந்து இருப்பதால், ஆரோக்கியத்துக்கு நல்லது. உடலுக்குத் தேவையான சக்தியைக் கொடுக்கும்.
வரகு போண்டா
300 கிராம் வரகு அரிசி மாவு, 200 கிராம் கடலை மாவு, 2 டீஸ்பூன் மிளகாய்த் தூள், 100 கிராம் சின்ன வெங்காயம், ஒரு டீஸ்பூன் இஞ்சி, பூண்டு விழுது, சீரகத் தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லி, பெருங்காயம், உப்பு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து, சிறிது தண்ணீர் சேர்த்து, போண்டா மாவுப் பதத்துக்கு கட்டி தட்டாமல் பிசைந்து கொள்ளவும். கடாயில் எண்ணெயை ஊற்றி, காய்ந்ததும் மாவை உருட்டிப் போட்டு, பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.
வாய்க்கு ருசியைத் தரும் வரகில், வற்றாத சத்துகள் உள்ளன. வரகின் தோலில் ஏழு அடுக்குகள் உள்ளன. கிராமங்களில் உரலில் போட்டு, வெகு நேரம் இடிப்பார்கள். வறண்ட பகுதிகளிலும் விளையக்கூடியது.
பலன்கள்
நார்ச்சத்து நிறைந்திருப்பதால் சீக்கிரத்தில் செரிக்கக்கூடியது. அரிசிக்குப் பதிலாக வரகில் இட்லி, தோசை செய்யலாம். அரிசி, கோதுமையைக் காட்டிலும் வரகில் நார்ச்சத்து மிகவும் அதிகம். மாவுச்சத்தும் குறைந்து இருப்பதால், ஆரோக்கியத்துக்கு நல்லது. உடலுக்குத் தேவையான சக்தியைக் கொடுக்கும்.
வரகு போண்டா
300 கிராம் வரகு அரிசி மாவு, 200 கிராம் கடலை மாவு, 2 டீஸ்பூன் மிளகாய்த் தூள், 100 கிராம் சின்ன வெங்காயம், ஒரு டீஸ்பூன் இஞ்சி, பூண்டு விழுது, சீரகத் தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லி, பெருங்காயம், உப்பு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து, சிறிது தண்ணீர் சேர்த்து, போண்டா மாவுப் பதத்துக்கு கட்டி தட்டாமல் பிசைந்து கொள்ளவும். கடாயில் எண்ணெயை ஊற்றி, காய்ந்ததும் மாவை உருட்டிப் போட்டு, பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தினம் ஒரு சிறுதானியம் !
23. சிவப்பு அரிசி - கேழ்வரகு
ஒரு காலத்தில் ஏழைகளின் உணவாகக் கருதப்பட்ட கேழ்வரகு, இன்று நோய்களை விரட்டும் வரமாக இருக்கிறது.
தீட்டப்படாத அரிசி, சிவப்பு மற்றும் பிரவுன் நிறத்தில் இருக்கும். இதன் கெட்டியான மேல்தோல் தவிடு. இதில் நார்ச்சத்து நிறைந்துள்ளது.
பலன்கள்
வயதானவர்கள், குழந்தைகள் மற்றும் அஜீரணக் கோளாறு உள்ளவர்களுக்கு மிகவும் நல்ல உணவு. எனவே, காலை அல்லது இரவு வேளைகளில் சாப்பிடலாம். கார்போஹைட்ரேட், இரும்புச்சத்து நிறைந்திருப்பதால் அனைவரும் சாப்பிட ஏற்றது. கேழ்வரகில் கால்சியம் சத்து நிறைந்திருப்பதால் பல், எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவும். தேவையற்ற கொழுப்பைக் குறைக்கும்.
சிவப்பு அரிசி - கேழ்வரகு இடியாப்பம்
கால் கிலோ சிவப்பு அரிசி மாவு, கால் கிலோ கேழ்வரகு மாவு இரண்டையும் தேவையான உப்பு சேர்த்துக் கொதிக்கும் தண்ணீரை ஊற்றி, இலகுவான பதத்தில் பிசையவும். இந்த மாவை இடியாப்ப அச்சில் போட்டு, இடியாப்பமாகப் பிழியவும். பிறகு, குக்கரிலோ இட்லி பாத்திரத்திலோ வைத்து வேகவிடவும். சூடான இடியாப்பத்துடன் தேங்காய் பால், பால் சேர்த்துச் சாப்பிடலாம்.
ஒரு காலத்தில் ஏழைகளின் உணவாகக் கருதப்பட்ட கேழ்வரகு, இன்று நோய்களை விரட்டும் வரமாக இருக்கிறது.
தீட்டப்படாத அரிசி, சிவப்பு மற்றும் பிரவுன் நிறத்தில் இருக்கும். இதன் கெட்டியான மேல்தோல் தவிடு. இதில் நார்ச்சத்து நிறைந்துள்ளது.
பலன்கள்
வயதானவர்கள், குழந்தைகள் மற்றும் அஜீரணக் கோளாறு உள்ளவர்களுக்கு மிகவும் நல்ல உணவு. எனவே, காலை அல்லது இரவு வேளைகளில் சாப்பிடலாம். கார்போஹைட்ரேட், இரும்புச்சத்து நிறைந்திருப்பதால் அனைவரும் சாப்பிட ஏற்றது. கேழ்வரகில் கால்சியம் சத்து நிறைந்திருப்பதால் பல், எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவும். தேவையற்ற கொழுப்பைக் குறைக்கும்.
சிவப்பு அரிசி - கேழ்வரகு இடியாப்பம்
கால் கிலோ சிவப்பு அரிசி மாவு, கால் கிலோ கேழ்வரகு மாவு இரண்டையும் தேவையான உப்பு சேர்த்துக் கொதிக்கும் தண்ணீரை ஊற்றி, இலகுவான பதத்தில் பிசையவும். இந்த மாவை இடியாப்ப அச்சில் போட்டு, இடியாப்பமாகப் பிழியவும். பிறகு, குக்கரிலோ இட்லி பாத்திரத்திலோ வைத்து வேகவிடவும். சூடான இடியாப்பத்துடன் தேங்காய் பால், பால் சேர்த்துச் சாப்பிடலாம்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தினம் ஒரு சிறுதானியம் !
24. தினை
தினை என்றாலே தெவிட்டாத சுவைதான். தினையில் செய்யும் இந்த அதிரசம் அதிகம் சாப்பிட்டாலும் திகட்டாது.
பலன்கள்
தினையில் புரதம், மாவுச்சத்து, நார்ச்சத்து, கொழுப்புச்சத்து, கனிமச்சத்து, இரும்புச்சத்து மற்றும் பீட்டாகரோட்டின் நிறைந்திருப்பதால் வளரும் குழந்தைகள், பெரியவர்களுக்கு ஆரோக்கியமான உணவாக இருக்கிறது. கபம் தொடர்பானப் பிரச்னைகளிலிருந்து விடுபடலாம். வாயுத் தொல்லையைச் சரிசெய்யும்.
தினை அதிரசம்
ஒரு கப் தினை அரிசியைக் கழுவி ஒரு மணி நேரம் ஊறவைத்த பிறகு, ஒரு வெள்ளைத் துணியில் உலர்த்திப் பொடிக்கவும். பனை வெல்லத்தில் பாகு காய்ச்சவும். தினை அரிசி மாவில் ஒரு டீஸ்பூன் எள், சிட்டிகை ஏலக்காய்த் தூள் சேர்த்து, பாகில் ஊற்றி, மாவை மிருதுவாகப் பிசைந்து வைக்கவும். ஒரு நாள் விட்டு, மறுநாள் சிறிது நெய் சேர்த்து, சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, இலையில் வைத்துத் தட்டி, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
தினை என்றாலே தெவிட்டாத சுவைதான். தினையில் செய்யும் இந்த அதிரசம் அதிகம் சாப்பிட்டாலும் திகட்டாது.
பலன்கள்
தினையில் புரதம், மாவுச்சத்து, நார்ச்சத்து, கொழுப்புச்சத்து, கனிமச்சத்து, இரும்புச்சத்து மற்றும் பீட்டாகரோட்டின் நிறைந்திருப்பதால் வளரும் குழந்தைகள், பெரியவர்களுக்கு ஆரோக்கியமான உணவாக இருக்கிறது. கபம் தொடர்பானப் பிரச்னைகளிலிருந்து விடுபடலாம். வாயுத் தொல்லையைச் சரிசெய்யும்.
தினை அதிரசம்
ஒரு கப் தினை அரிசியைக் கழுவி ஒரு மணி நேரம் ஊறவைத்த பிறகு, ஒரு வெள்ளைத் துணியில் உலர்த்திப் பொடிக்கவும். பனை வெல்லத்தில் பாகு காய்ச்சவும். தினை அரிசி மாவில் ஒரு டீஸ்பூன் எள், சிட்டிகை ஏலக்காய்த் தூள் சேர்த்து, பாகில் ஊற்றி, மாவை மிருதுவாகப் பிசைந்து வைக்கவும். ஒரு நாள் விட்டு, மறுநாள் சிறிது நெய் சேர்த்து, சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, இலையில் வைத்துத் தட்டி, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தினம் ஒரு சிறுதானியம் !
25. கம்பு
நன்கு உலர வைத்த கம்பு தானியம் சுமார் மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை கெடாமல் இருக்கும்.
பலன்கள்
கம்புப் புட்டைக் கடலைக் கறியுடன் சேர்த்து சாப்பிட்டால், உடலுக்குத் தேவையான தாது உப்புக்கள், மாவுச்சத்து, புரதச்சத்து, பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள் கிடைக்கும். தினமும் காலை உணவாகச் சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.
கம்புப் புட்டு
150 கிராம் கம்பை நன்றாக அரைத்து, தேவையான உப்பு, தேங்காய் சேர்த்து, வெந்நீரை விட்டுப் பிசைந்து, வட்டமான கிண்ணத்தில் அடைத்து, குக்கரில் வைத்துப் புட்டாகத் தயாரிக்கவும். நன்றாகத் தண்ணீரில் ஊறிய 50 கிராம் கொண்டைக் கடலையுடன், வெங்காயம், தக்காளி, தேங்காயைப் பொடியாக நறுக்கிச் சேர்த்து, தண்ணீர் ஊற்றிக் கொதிக்க வைத்து, மஞ்சள் தூள், மிளகுத் தூள், உப்பு போட்டு இறக்கவும். சூடான கடலைக் கறியுடன் கம்புப் புட்டு சேர்த்துச் சாப்பிட சுவையாக இருக்கும்.
நன்கு உலர வைத்த கம்பு தானியம் சுமார் மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை கெடாமல் இருக்கும்.
பலன்கள்
கம்புப் புட்டைக் கடலைக் கறியுடன் சேர்த்து சாப்பிட்டால், உடலுக்குத் தேவையான தாது உப்புக்கள், மாவுச்சத்து, புரதச்சத்து, பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள் கிடைக்கும். தினமும் காலை உணவாகச் சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.
கம்புப் புட்டு
150 கிராம் கம்பை நன்றாக அரைத்து, தேவையான உப்பு, தேங்காய் சேர்த்து, வெந்நீரை விட்டுப் பிசைந்து, வட்டமான கிண்ணத்தில் அடைத்து, குக்கரில் வைத்துப் புட்டாகத் தயாரிக்கவும். நன்றாகத் தண்ணீரில் ஊறிய 50 கிராம் கொண்டைக் கடலையுடன், வெங்காயம், தக்காளி, தேங்காயைப் பொடியாக நறுக்கிச் சேர்த்து, தண்ணீர் ஊற்றிக் கொதிக்க வைத்து, மஞ்சள் தூள், மிளகுத் தூள், உப்பு போட்டு இறக்கவும். சூடான கடலைக் கறியுடன் கம்புப் புட்டு சேர்த்துச் சாப்பிட சுவையாக இருக்கும்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தினம் ஒரு சிறுதானியம் !
இது தவிரவும் நிறைய செய்யலாம். கம்பு ரொட்டி, கேழ்வரகு அடை, சோள ரொட்டி, சோள பணியாரம்.....இப்படிப் பல ............ நானும் என்னுடைய குறிப்புகளில் போட்டிருக்கேன்
இதோ அந்த லிங்க் :
சிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள் !
செய்து பாருங்கள் , உடலுக்கு ரொம்ப நல்லது
இதோ அந்த லிங்க் :
சிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள் !
செய்து பாருங்கள் , உடலுக்கு ரொம்ப நல்லது
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தினம் ஒரு சிறுதானியம் !
அடாடா.....ஒரு பின்னூட்டம் கூட இல்லையே ...............................ம்.......அப்புறம் எப்படி செய்து சாப்பிடுவார்கள்?.......உடம்புக்கு ரொம்ப நல்லது என்று பிரச்சாரம் செய்கிறார்களே................
.
.
.
.
.
.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தினம் ஒரு சிறுதானியம் !
மேற்கோள் செய்த பதிவு: 1162660krishnaamma wrote:அடாடா.....ஒரு பின்னூட்டம் கூட இல்லையே ...............................ம்.......அப்புறம் எப்படி செய்து சாப்பிடுவார்கள்?.......உடம்புக்கு ரொம்ப நல்லது என்று பிரச்சாரம் செய்கிறார்களே................
.
.
.
பயனுள்ள தகவல்கள் .
உடலுக்கு நன்மை பயப்பவை .
மறுபதிவு பகிர்ந்தமைக்கு நன்றி !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
Re: தினம் ஒரு சிறுதானியம் !
மேற்கோள் செய்த பதிவு: 1162673T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1162660krishnaamma wrote:அடாடா.....ஒரு பின்னூட்டம் கூட இல்லையே ...............................ம்.......அப்புறம் எப்படி செய்து சாப்பிடுவார்கள்?.......உடம்புக்கு ரொம்ப நல்லது என்று பிரச்சாரம் செய்கிறார்களே................
.
.
.
பயனுள்ள தகவல்கள் .
உடலுக்கு நன்மை பயப்பவை .
மறுபதிவு பகிர்ந்தமைக்கு நன்றி !
ரமணியன்
மறுபதிவா...முதல்து எங்கே இருக்கு ஐயா, நான் பார்க்கலையே?..........இருந்தால் தயவு செய்து இணைத்து விடுங்களேன் .............
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» ஊட்டம் தரும் சிறுதானியம்
» ரேஷன் கடைகளில் சிறுதானியம் வழங்க உத்தரவு
» நாளில் மட்டுமா ஒற்றுமை? : அக்.2 - காந்தி பிறந்த தினம், காமராஜர் நினைவு தினம்!
» காதலர் தினம் அன்னையர் தினம் போன்ற மேற்கு கலாசாரம் நமக்கு தேவையா
» இந்திய தேசிய இளைஞர் தினம்- சுவாமி விவேகானந்தர் அவர்கள் பிறந்த தினம் இன்று
» ரேஷன் கடைகளில் சிறுதானியம் வழங்க உத்தரவு
» நாளில் மட்டுமா ஒற்றுமை? : அக்.2 - காந்தி பிறந்த தினம், காமராஜர் நினைவு தினம்!
» காதலர் தினம் அன்னையர் தினம் போன்ற மேற்கு கலாசாரம் நமக்கு தேவையா
» இந்திய தேசிய இளைஞர் தினம்- சுவாமி விவேகானந்தர் அவர்கள் பிறந்த தினம் இன்று
Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|