புதிய பதிவுகள்
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கந்தர் அலங்காரம் பாடல் 1 Poll_c10கந்தர் அலங்காரம் பாடல் 1 Poll_m10கந்தர் அலங்காரம் பாடல் 1 Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
கந்தர் அலங்காரம் பாடல் 1 Poll_c10கந்தர் அலங்காரம் பாடல் 1 Poll_m10கந்தர் அலங்காரம் பாடல் 1 Poll_c10 
1 Post - 25%
ayyasamy ram
கந்தர் அலங்காரம் பாடல் 1 Poll_c10கந்தர் அலங்காரம் பாடல் 1 Poll_m10கந்தர் அலங்காரம் பாடல் 1 Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கந்தர் அலங்காரம் பாடல் 1 Poll_c10கந்தர் அலங்காரம் பாடல் 1 Poll_m10கந்தர் அலங்காரம் பாடல் 1 Poll_c10 
285 Posts - 45%
heezulia
கந்தர் அலங்காரம் பாடல் 1 Poll_c10கந்தர் அலங்காரம் பாடல் 1 Poll_m10கந்தர் அலங்காரம் பாடல் 1 Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
கந்தர் அலங்காரம் பாடல் 1 Poll_c10கந்தர் அலங்காரம் பாடல் 1 Poll_m10கந்தர் அலங்காரம் பாடல் 1 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
கந்தர் அலங்காரம் பாடல் 1 Poll_c10கந்தர் அலங்காரம் பாடல் 1 Poll_m10கந்தர் அலங்காரம் பாடல் 1 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கந்தர் அலங்காரம் பாடல் 1 Poll_c10கந்தர் அலங்காரம் பாடல் 1 Poll_m10கந்தர் அலங்காரம் பாடல் 1 Poll_c10 
20 Posts - 3%
prajai
கந்தர் அலங்காரம் பாடல் 1 Poll_c10கந்தர் அலங்காரம் பாடல் 1 Poll_m10கந்தர் அலங்காரம் பாடல் 1 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கந்தர் அலங்காரம் பாடல் 1 Poll_c10கந்தர் அலங்காரம் பாடல் 1 Poll_m10கந்தர் அலங்காரம் பாடல் 1 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கந்தர் அலங்காரம் பாடல் 1 Poll_c10கந்தர் அலங்காரம் பாடல் 1 Poll_m10கந்தர் அலங்காரம் பாடல் 1 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கந்தர் அலங்காரம் பாடல் 1 Poll_c10கந்தர் அலங்காரம் பாடல் 1 Poll_m10கந்தர் அலங்காரம் பாடல் 1 Poll_c10 
7 Posts - 1%
mruthun
கந்தர் அலங்காரம் பாடல் 1 Poll_c10கந்தர் அலங்காரம் பாடல் 1 Poll_m10கந்தர் அலங்காரம் பாடல் 1 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கந்தர் அலங்காரம் பாடல் 1


   
   
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Thu Sep 03, 2015 8:08 pm

பேற்றைத் தவஞ்சற்று மில்லாத வென்னைப்ர பஞ்சமென்னும்
  சேற்றைக் கழிய வழிவிட்ட வா! செஞ் சடாடவிமேல்
     ஆற்றைப் பணியை யிதழியைத் தும்பையை யம்புலியின்
        கீற்றைப் புனைந்த பெருமான் குமாரன் க்ருபாகரனே.   ...      1

பிரபஞ்சம் என்ற சேற்றை கடந்து சென்றால் மட்டுமே ஒரு ஆத்மா ஒளி சரீரம் உடையதாக பரலோகத்தில் நுழைய முடியும் .

ஆனால் அது அவ்வளவு லெகுவான காரியமா ? பிரபஞ்சம் என்ற மாயையோ களிமண்ணால் ஆன சேறு . அது பிசு பிசுவென நம் ஆத்மாவில் ஒட்டிக்கொண்டு மனதில் எண்ணத்தை தூண்டிவிடும் ஏதாவது ஒரு கட்டுக்குள் கட்டிவைக்கவே முயற்சி செய்யும் .

தியானம் ; தவம் ; மனசமநிலை இருமைகளை வென்று நன்மை தீமைகளை கடந்த நிலை அவ்வளவு லேசானது அல்ல . யோகாப்பியசங்கள் செய்வது மனதை கட்டுப்படுத்த ஓரளவு பக்குவம் கொடுக்குமேயன்றி மனம் நிலைவரப்படுதல் என்பது பாவங்கள் கழிவது மற்றும் இறைசித்தம் கிருபை இல்லாமல் நடக்கவே முடியாது . பல பிறவி தவத்தில் மட்டுமே அதை அடையமுடியும் . பேற்றைத்தவம் என்கிற வார்த்தையை அருணகிரியார் இங்கு பயன்படுத்துகிறாரே பல பிறவி பயிற்சியில் உண்டாகும் பேறாகிய தவம் – பேற்றைத்தவம்


ஆன்மீகவாழ்வு ஒரு நாளில் ஒரு குருவழியில் ஒரு பிறவியில் அடையவே முடியாது . ஆனாலும் அடைந்துவிடலாம் அடைந்துவிடலாம் என்று நம்பிக்கையோடுதான் சொல்வார்கள் ; அதற்கு அர்த்தம் இந்த சீட்டு உனக்கு பாதையை இலக்கை நிச்சயமாக எப்பிறவியிலாவது காட்டாமல் விடாது என்பதுதான் .

ஒருமைக்கண் தான் கற்ற கல்வி
எழுமைக்கும் ஏமாப் புடைத்து
என்றொரு குறளை கூட வாசித்திருப்பீர்கள் . அது மனித ஆத்மா கற்றுக்கொண்ட ஞானம் எதுவும் வீண்போகாது . சந்தர்ப்ப சூழ்நிலையில் அது இல்லாததுபோல இருக்கும் ; ஆனால் அது ஏற்ற சமயத்தில் வெளிவந்து நம் ஆத்மாவை மேன்மைப்படுத்தாது விடாது . ஆன்மிக வாழ்வில் தோல்விகள் பல நேர்ந்தாலும் அவன் இரண்டும் கெட்டான் போல தெரிந்தாலும் அது உண்மையல்ல ; அடுத்த பிறவியில் நல்ல சூழலில் நல்ல குடுமபத்தில் பிறந்து பல படி முன்னேற்றம் உண்டாகும் என்பது யுகபுருஷன் கிரிஷ்ணரின் வாக்கு . ஆகவே துவண்டு விடாது தோல்விகள் வீழ்ச்சிகள் பற்றி கலங்காது கடவுளிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டே தொடரவேண்டும் . தடுமாறி விழுவது தவிர்க்க இயலாது ; அதற்காக கடவுள் நம்மை ஒதுக்கி வைத்து விடுவதில்லை . ஆனால் பட்டறிவு ஆத்மாவில் விளைந்து வைரமாக வேண்டுமானால் சில காலம் இடைவெளி உண்டாகும் . உலக போக்கில் நம்மை அனுபவிக்கவும் விட்டு சொட்டென்று பொறியில் தட்டி மாற்றுவது கடவுளுக்கு கைவந்த கலை .

அருணகிரியாரின் அந்தப்பிறவி வாழ்வும் அப்படித்தான் இருந்தது . பிறந்த நாளில் இருந்து பெண் பித்து . விதவிதமான பெண்களின் சரீரங்களை ஆராய்ச்சி செய்வதே வேலையாகவும் இருந்தது ; போதிய பணமும் இருந்தது

அப்பா அம்மா பேச்சை கேட்காமல் ; வேலை வெட்டிக்கு போகாமால் குடும்பத்தின் ஆஸ்தியை மைனர் குஞ்சு வேலையை செய்து கணிகையரிடம் காமத்தை அனுபவித்துக்கொண்டிருந்தார் பெண் கொடுப்பார் இல்லாத அளவு பிரபலம் . மனம் நொந்து பெற்றோர்கள் இறந்து விட்டனர் . தொழு நோயும் வந்து விட்டது . காசெல்லாம் கரைந்தும் விட்டது . கணிகையர் காசில்லாமல் வராதே என துரத்தியும் விட்டனர் .அப்போதும் காமம் போதும் என நிறைவடைந்த பாடில்லை . இந்தக்காமம் இருக்கிறதே அது அடிப்படையில் ஒரு சாபம் . அது எப்போதும் நிறைவடையவே நிறைவடையாது . ஒன்றுமில்லாத வெற்று மாயை ; நம்மை மயக்கி ஆட்டிப்படைத்துக்கொண்டுள்ளது என்று தெளிந்து தேர்ந்தால் ஒழிய அவ்வளவு லேசில் விடாது ; ஏதாவது ஒரு பிசிறை வைத்து நம்மை வறுத்தெடுத்து விடும் . ஒன்றுமேயில்லை என்று உணர்வதும் லெகுவல்ல ; அதற்கு நாமும் நொந்து வேண்டி இறைவனும் கிருபை அளித்தால் மட்டுமே சாத்தியம் .

அந்தப்போராட்ட அனுபவமே பிறக்குபோதே அண்ணகன் அதாவது ஆண்பெண் பேதத்தை கடந்தவன் என்ற பக்குவத்தோடு நம்மை பிறக்கவைக்கும் – வள்ளலாரைப்போல .

குஷ்ட்டம் வந்து பார்ப்போர் அருவெறுத்து துரத்தியடித்தும் அருணகிரிக்கு காமம் கடந்தபாடில்லை . பணம் இருந்தால் போகலாம் என பணம் கேட்டு உடன்பிறந்த அக்காவை அண்டி நச்சரித்தார்

ஆஸ்தியெல்லாம் தொலைந்து விட்டது . குடும்பத்தின் பேரும் சீரழிந்துவிட்டது . ஊரே சந்தி சிரித்து நொந்து நூலாகி தாய்தகப்பனும் இறந்துவிட்டனர் . பிறந்தவீடு தாழ்மையடைந்தால் எந்தப்பெண் தான் மனம் நோகாமல் இருப்பாள் . இலை மறை காயாக தம்பிக்கு பணம் உதவியும் அறிவுரை கூறியும் திருந்தாத ஜென்மத்தை பணம் கேட்டு வந்தவுடன் சட்டென்று ஒரு வார்த்தையால் இறைவன் ஒரு சொட்டு சொட்டினார்

இவ்வளவு கேவலப்பட்டும் இன்னமுமா உனக்கு பொம்பள உடம்பு கேட்குது . என்னைய கொன்னுட்டு பொம்பள உடம்ப அனுபவிச்சுக்கோ .

இறைவன் தடுத்தாட்கொண்டார் தடுத்தாட்கொண்டார் என்று படித்திருக்கிறோமே அது இப்படித்தான் . ஒரு மனிதனுக்கு அவனுக்கு உரைக்கும்படி ஒரு வார்த்தை தொடவேண்டும் . அப்படியே திருந்திவிடுவான் .

அந்த வார்த்தை அப்படியே அவரை போட்டுத்தாக்கியது . உள்ளம் தொடப்பட்டு நொறுங்கிப்போனார் . தன்னைப்பற்றிய இழிவுகளை அவராலேயே தாங்கிக்கொள்ள இயலவில்லை . இந்தப்பிறவி இவ்வளவு கேவலமாக முடிந்ததே ; அடுத்த பிறவியாவது நல்ல பிறவியை கொடு இறைவா என வேண்டிக்கொண்டே திருவண்ணாமலையின் கோபுரத்தில் ஏறினார் . ஏறி குதித்தும் விட்டார் .

தற்கொலை செய்துகொள்ளும் ஆத்மாக்கள் அதற்கும் ஒரு தண்டனையை அனுபவித்தே அடுத்த பிறவி எடுக்க முடியும் . அந்தக்கொடுமையையை அனுபவிப்பதை விட இப்பிறவி கொடுமையை அனுபவிப்பது எளிதானது . ஆகவே தற்கொலை என்பது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று . தற்கொலை முயற்சி என்பதே இறைவனை நாடாமல் சுயத்திலே எடுக்கும் முயற்சி என்பதால் இறைவன் காக்க வருவதில்லை .

ஆனால் அருணகிரியை காக்க முருகன் வந்தார் என்றால் அதன் காரணம் ஒன்றே ஒன்றுதான் . அருணகிரியின் பேற்றைத்தவம் . முந்தய பிறவியில் அவர் செய்த தவங்களால் அவர் எல்லா பலகீனங்களையும் கடந்துவிட்டார் . ஆனால் காமம் ஒன்றைமட்டுமே அவர் கடரவில்லை . அந்த ஒன்றை கடர மட்டுமே இப்பிறவி வாய்த்தது .

எதற்காக அவருக்கு பிறவி உண்டானதோ அதில் வெம்பி வெதும்பி திருந்தியபோது அவரை நாடி சற்குருநாதர் முருகன் வந்தார் .

எசேக்கியேல் 18:32  மனந்திரும்புங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்; சாகிறவனுடைய சாவை நான் விரும்புகிறதில்லை என்று கடவுள் சொல்லுகிறார்.

பாவங்களுக்கு பதிலுக்கு பதில் தண்டனை கொடுத்தே தீருவேன் என கடவுள் கறாராக இருப்பதில்லை . அவர் நம்மை வாட்டுவது நாம் திருந்தவேண்டும் என்ற நோக்கத்தில் மட்டுமே . கஷ்ட்டம் வரும்போதெல்லாம் இறைவா நான் உணரவேண்டியதை எனக்கு உணர்த்தி வைப்பாயாக . நான் திருந்தவேண்டியது எதுவோ அதை கற்றுக்கொள்ளும் திறனை தருவாயாக என்று நால்வர் நாமத்தினால் வேண்டிக்கொண்டே இருக்கவேண்டும் . மனம் திருந்தினால்போதும் அந்தக்கஷ்ட்டங்கள் விலகிவிடும் .

மனந்திரும்புவோருக்கு இறைவன் எப்போதும் சமீபமாக இருப்பார் . இது ஒரு ரகசியம்

அருணகிரிக்கு நேர்ந்தது இதுவே . அதுவும் அவரது ஆத்மாவில் இருந்த கடைசி பாவம் . அதில் குத்தப்பட்டு கடந்ததும் சற்குரு அவரை நாடி வந்தார்

அப்படி இப்படி என்னை ஏன் காப்பாற்றினீர்கள் என்று அலட்டியபோது அவர் சொன்ன ஒரே ஒரு வார்த்தை சும்மாயிரு .

[color:b413= #00600]ஏற்ற சமயத்தில் குருவின் வார்த்தை வந்ததும் அவர் அப்படியே நிஷ்ட்டையில் ஆழ்ந்துவிட்டார் . அவரை மீண்டும் முருகன் எழுப்பும்வரை பல நாட்கள் நிஷ்ட்டை வாய்த்தது . அது எவ்வளவு நாட்கள் என்று அவரும் அறியார் . குஷ்ட்டம் நீங்கி சொஸ்த்தம் ஆனது . உள்ளமும் தூய்மையடைந்தது . இறைவன் நாடினாலன்றி தவம் சித்தியளிக்காது

அண்ணாமலையில் மேற்குப்பக்கம் ஒரு முருகன் கோவில் உள்ளது . அந்தக்கோவில் இருக்கும் இடத்தில்தான் அருணகிரியார் ஆழ்ந்த நிஷ்ட்டை சித்தித்து ஞானியானார் . அவரை முருகன் எழுப்பி நாவில் வேலால் எழுதி பாடு எனப்பணித்தார்

ஆகவேதான் அடுக்குத்தமிழிலும் ஆழ்ந்த ஞானப்புலமையிலும் அருள்நிலையில் அவரது பாடல்கள் அருளப்பட்டன .

சித்தர்கள் பலர் மனித நிலையில் தாங்கள் உண்மை என நம்பியதை பாடியதில் பல மனித தவறுகள் உள்ளன . ஆனால் அருணகிரியார் பாடியவை அனைத்தும் அருள்நிலையில் வந்தவை

இந்த முதல் பாடலில் அவர் பேற்றைத்தவம் என்ற முதல்வரியை தொடங்குகிறார் . ஆனால் எவ்வளவுதான் தவம் இருந்தாலும் இறைவன் அருள் இல்லாவிட்டால் இந்த பிரபஞ்சத்தை கடர முடியுமா ? முடியவே முடியாது .

ஒவ்வொரு சின்ன சின்ன பாவத்திற்கு பத்து பிறவியெடுத்து கடர முடியாமல் அல்லாடிக்கொண்டே இருக்கவேண்டும்

இறைவன் நாடினாலோ நம்மால் கடந்துவிட முடியும் .

ஒரு குறிப்பிட்ட அளவுக்குமேல் ஆன்மீகத்தில் ஞானத்தில் வளர்ந்து விட்டால் மனித முயற்சி என்பது செல்லாக்காசு என்பதை இறைவன் பாடம் எடுத்துக்கொண்டே இருப்பார் . எவ்விசயத்திலும் பிச்சைக்காரனைப்போல அவரிடம் கேட்டுக்கொண்டிருந்தால் மட்டுமே எதுவும் நடக்கும் என்பதை திரும்ப திரும்ப புரியவைப்பார் . அப்போதுதான் முழுசரணாகதி என்ற நிலையை அடையமுடியும் .

ஞானத்தில் வளர்ந்த பிறகு முழு சரணாகதியை கற்றுக்கொள்ளும் நிலையில் மனித அறிவும் ஞானமும் செல்லாக்காசு என்பதை உணர்ந்து உணர்ந்து இறைவனுக்காக காத்திருக்கும் ஒரு பக்தி உண்டாகிறதே அதுவே பக்தியோக நிலை . ஆரம்ப கால பக்தி – சரியை வகைப்பட்ட பக்திக்கும் ஞான வளர்ச்சியால் உண்டாகும் பக்திக்கும் நிறைய வேறுபாடு உள்ளது .

பாவங்கள் அனைத்துமே கடந்த ஒரு ஆத்மா – சற்குருவே தேடி வந்து ஆட்கொண்ட ஒரு ஆத்மா – அருணகிரியார் என்ன சொல்கிறார் பாருங்கள்

பேற்றைத்தவம் சற்றும் இல்லாத என்னை பிரபஞ்சமென்னும் சேற்றை கழிய வழிவிட்டவா


நாராயணனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணனாய

ஆதிசேஷனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ ஆதிசேஷாய

நாராயணியாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணியாய

சிவனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ சிவாய

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 03, 2015 8:40 pm

கந்தர் அலங்காரம் பாடல் 1 TDV8vnZuSji63ZlxgtDo+lordganeshadownloaddesktopwallpapers

பிள்ளையாரை விட்டு விட்டு ஆரம்பித்து விட்டீர்களே கிருபா புன்னகை

அடல் அருணைத் திருக்கோபுரத்தே அந்த வாயிலுக்கு
வட அருகில் சென்று கண்டு கொண்டேன் வருவார் தலையில்
தடபட எனப்படு குட்டுடன் சர்க்கரை மொக்கியகைக்
கடதட கும்பக் களிற்றுக்கு இளைய களிற்றினையே!
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Thu Sep 03, 2015 8:59 pm

பிள்ளையாரும் முருகனும் அதிதேவர் ஆதிஷேசனின் வியாபகங்களே . அவரின் கிருபை என்றும் உண்டு

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 04, 2015 1:59 am

புன்னகை சரி, சீர்காழி கோவிந்த ராஜன் பாடிய கந்தர் அலங்காரம் லிங்க் பார்த்து விட்டீர்களா ?...........டவுன்லோட் செய்து கொண்டீர்களா?....அந்த திரி இல் பதில் போடலையே நீங்க? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 05, 2015 12:15 am

கந்தர் அலங்காரம் பாடல் 1 3838410834



கந்தர் அலங்காரம் பாடல் 1 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Mon Sep 14, 2015 8:24 pm

கிரிஷ்ணம்மா கந்தர் அலங்காரத்தின் காப்பு  பாடலில் மேற்போக்காக விநாயகர்  துதி  இருப்பதுபோல  தெரிந்தாலும்  உண்மையில் அப்படி  இல்லை  . காரணம் ஒருவர் கார்க்கோடகன் என்றால் மற்றவர் செங்கோடன் . ஆக  இருவரும்  அதிதேவர் ஆதிசேஷனின்  வியாபகங்களே

ஆனாலும்  உலக வழக்கத்தின்படி விநாயகர்  துதி  என்ற  பாணியில்  விநாயகரின் தம்பியை  கண்டுகொண்டேன்  என்றுதான்  குறிப்பிட்டுள்ளார்   . மேலும் ஒரு முக்கிய சேதி  அவர்  திருவன்னாமாலையின்  வடக்கு  கோபுர  வாசலில்   ஏறி  குதித்தார்  என்பதாகும்

ஆனாலும்  இதில் நயமாக  வடக்கு  கோபுரத்திற்கு  வரும்  பொதுமக்கள் அனைவரும் சக்கரையை கணபதிக்கு  படைத்து சக்கரை அப்பிய  கையுடன் தடபட கட தட என தலையில் குட்டிக்கொள்கிரார்களே  அந்த  களிறுக்கு  இளைய  களிரை  முருகனை வடக்கு கோபுரத்தில் கண்டுகொண்டேன் என்கிறார்

கந்தர் அலங்காரம் பாடல் விளக்கங்களுடன் சீர்காழியாரின் குரலில் கேட்டு ரசியுங்கள் :



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 14, 2015 10:43 pm

நன்றி கிருபா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக