ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேமராக்கள் சாட்சியாக பொதுமக்கள் மத்தியில் துள்ளத்துடிக்க கொலை செய்த அதிமுகவினர்

+3
krishnaamma
mbalasaravanan
சிவா
7 posters

Go down

கேமராக்கள் சாட்சியாக பொதுமக்கள் மத்தியில் துள்ளத்துடிக்க கொலை செய்த அதிமுகவினர் Empty கேமராக்கள் சாட்சியாக பொதுமக்கள் மத்தியில் துள்ளத்துடிக்க கொலை செய்த அதிமுகவினர்

Post by சிவா Wed Sep 09, 2015 1:32 am

கேமராக்கள் சாட்சியாக பொதுமக்கள் மத்தியில் துள்ளத்துடிக்க கொலை செய்த அதிமுகவினர் 11350899_932473020159129_6111434055935689063_n

கொலைகள் நடப்பது நாட்டில் சர்வசாதாரணம். ஆனால், கேமராக்கள் சாட்சியாக கொலைகள் நடக்கும் என்றால், நாட்டில் சட்டம் - ஒழுங்கு எப்படி இருக்கிறது என்பதைச் சொல்ல வேண்டுமா?

‘அதிரடி’ மகா என்ற வேலூர் ரவுடி, பொதுமக்கள் மத்தியில் கல்லை தூக்கிப்போட்டு துள்ளத்துடிக்க கொலைசெய்யப்பட்ட சம்பவம், குலைநடுங்க வைத்துள்ளது!

யார் இந்த ‘அதிரடி’ மகா?

“ஆரம்பத்தில், சிறுசிறு குற்றச் செயல்களில் ஈடுபட்டுவந்த ஆட்டோ டிரைவரான மகாலிங்கம், பின்னர் கூலிப்படையாக மாறினார். கூட்டாளிகளைச் சேர்த்துக்கொண்டு கொலை, ஆள் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து போன்றவற்றில் ஈடுபட்டார். ஒரு ஆளை காலிசெய்ய இவரிடம் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தால்போதும். காரியத்தை முடித்துவிடுவார். மகாலிங்கமாக இருந்த இவர் ஒரு கட்டத்தில், ‘அதிரடி’ மகா என்று அவதாரம் எடுத்தார். 2010-ம் ஆண்டு வேலூர் சி.எம்.சி மருத்துவமனையின் பி.ஆர்.ஓ ஜான்சேகரை, அவரது மனைவி மற்றும் மகனின் கண் எதிரிலேயே வெட்டிக் கொலைசெய்தார் ‘அதிரடி’ மகா. அந்த வழக்கில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, கடலூர் சிறையில் இருந்தார். இவர் மீது மேலும் ஆறு கொலை வழக்குகள் உண்டு. நான்கு மாதங்களுக்கு முன் நிபந்தனை ஜாமீன் பெற்று வெளியே வந்த மகா, சில நாட்களில் தலைமறைவானார். கடந்த மாதம்கூட செம்மர ஏஜென்ட் ஒருவர் கடத்தப்பட்ட வழக்கில் மகாவையும் போலீஸ் தேடிவந்தது. இந்த சமயத்தில்தான், ஜி.ஜி.ரவி என்பவரை போட்டுத்தள்ள திட்டம் தீட்டினார். கடைசியில், அவரே பலியாகிவிட்டார்” என்கின்றனர், அவரைப் பற்றி அறிந்தவர்கள்.

சம்பவத்தை நேரில் பார்த்த சிலர், “கிருஷ்ண ஜெயந்தி விழாவில் கலந்துகொள்ள ஜி.ஜி.ரவி வருவதைத் தெரிந்துக்கொண்ட மகா, ரவியை தீர்த்துக்கட்டுவதற்காக வந்துள்ளார். ரவியைப் பார்த்தவுடன் கத்தியோடு பாய்ந்துள்ளார். அதைப் பார்த்துவிட்ட ரவி சுதாரித்துக்கொண்டார். ஆனாலும், ரவியின் கன்னத்திலும் நெற்றியிலும் வெட்டுகள் விழுந்தன. ரவியின் ஆட்கள் மகாவை மடக்கிப் பிடிக்க வந்தனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க வேகமாக ஓடிய மகா, எதிர்பாராத விதமாக எதிரே வந்த பேருந்து மீது மோதி கீழே விழுந்தார். உடனே ரவியின் ஆட்கள் அங்கு கிடந்த கருங்கற்களைக் கொண்டு மகாவின் மண்டையில் தாக்கினர். உயிர்போன பிறகு ரத்தவெள்ளத்தில் மகாவின் உடலை கற்களால் விடாமல் அடித்து உருத்தெரியாமல் ஆக்கினர்” என்றனர் அதிர்ச்சியோடு.

ஜி.ஜி.ரவியை மகா ஏன் கொலைசெய்ய வந்தான் என்பதற்கான காரணம் குறித்து போலீஸ் தரப்பில் விசாரித்தோம்.

“ஜி.ஜி.ரவி என்பவர் பால் வியாபாரம் செய்துகொண்டு, ஆட்டோ டிரைவராகவும் இருந்தவர். அவர் மீதும் சந்தன மரக்கடத்தல் மற்றும் வேறு சில வழக்குகள் இருந்தன. 2001-ல் பொறியியல் கல்லூரி ஆரம்பிக்கும் அளவுக்கு வளர்ந்தார். ஆரம்பத்தில் காங்கிரஸில் இருந்தவர் பின்பு,
அ.தி.மு.க-வில் சேர்ந்து கவுன்சிலராகவும், நகர்மன்றத்தில் எதிர்க் கட்சித் தலைவராகவும் இருந்தார். இவருக்கு ரமேஷ் என்ற தம்பி இருந்தார். ஃபைனான்ஸ் தொழில் நடத்திய அவரிடம் வேலைப்பார்த்த தோட்டப்பாளையத்தைச் சேர்ந்த குப்பன் என்பவருக்கும், ரமேஷுக்கும் பார் அமைப்பது தொடர்பாக தகராறு ஏற்பட, ரமேஷை குப்பன் வெட்டிக்கொன்றார். குப்பனும், ‘அதிரடி’ மகாவும் நெருக்கமானவர்கள்.

ரமேஷை வெட்டியதற்காக எப்போது வேண்டுமானாலும் நாம் பழிவாங்கப்படலாம் என்று பயந்த குப்பன், மகா மூலமாக ஜி.ஜி.ரவியைக் கொல்ல முயன்றிருக்கலாம் என சந்தேகப்படுகிறோம்.

மகாவுக்கு எதிராக செயல்பட்டுவந்த வசூர் ராஜாவுக்கு ஜி.ஜி.ரமேஷ் ஆதரவாக செயல்பட்டு வந்தார். அதுவும் மகாவுக்கு ரவி மீது கோபத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனாலும் இரு தரப்பிலும் விரோதம் இருந்தது” என்று சொல்கிறார்கள்.

மகாவின் கொலைக்காக ஜி.ஜி.ரவியின் மகன்களான தமிழ்மணி, கோகுல் மற்றும் ரவியின் தம்பி மகன்கள் கார்த்திக்குமார், சஞ்சீவ்குமார், ரஞ்சித்குமார் மற்றும் அவர்களின் உறவினர் சிலம்பரசன் ஆகியோர் மீது கொலை செய்தது, கலவரம் ஏற்படுத்தியது போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து கைதுசெய்துள்ளது போலீஸ். தகவல் தெரிந்து மீடியாக்கள் போனபோது தமிழ்மணியும் கோகுலும் கையில் கல்லை வைத்துக்கொண்டு சாகும் வரை மகாவை அடித்த காட்சி அதிர்ச்சித் தருவதாக இருந்தது.

கற்காலத்தை நோக்கிப் போகும் ரவுடியிஸம் ஒடுக்கப்பட வேண்டும்.

விகடன்


கேமராக்கள் சாட்சியாக பொதுமக்கள் மத்தியில் துள்ளத்துடிக்க கொலை செய்த அதிமுகவினர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கேமராக்கள் சாட்சியாக பொதுமக்கள் மத்தியில் துள்ளத்துடிக்க கொலை செய்த அதிமுகவினர் Empty Re: கேமராக்கள் சாட்சியாக பொதுமக்கள் மத்தியில் துள்ளத்துடிக்க கொலை செய்த அதிமுகவினர்

Post by mbalasaravanan Wed Sep 09, 2015 11:30 am

கற்காலத்தை நோக்கிப் போகும் ரவுடியிஸம் ஒடுக்கப்பட வேண்டும்- உண்மை தான்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

கேமராக்கள் சாட்சியாக பொதுமக்கள் மத்தியில் துள்ளத்துடிக்க கொலை செய்த அதிமுகவினர் Empty Re: கேமராக்கள் சாட்சியாக பொதுமக்கள் மத்தியில் துள்ளத்துடிக்க கொலை செய்த அதிமுகவினர்

Post by krishnaamma Wed Sep 09, 2015 11:44 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கேமராக்கள் சாட்சியாக பொதுமக்கள் மத்தியில் துள்ளத்துடிக்க கொலை செய்த அதிமுகவினர் Empty Re: கேமராக்கள் சாட்சியாக பொதுமக்கள் மத்தியில் துள்ளத்துடிக்க கொலை செய்த அதிமுகவினர்

Post by ayyasamy ram Wed Sep 09, 2015 1:37 pm

அநியாயம் அநியாயம் அநியாயம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கேமராக்கள் சாட்சியாக பொதுமக்கள் மத்தியில் துள்ளத்துடிக்க கொலை செய்த அதிமுகவினர் Empty Re: கேமராக்கள் சாட்சியாக பொதுமக்கள் மத்தியில் துள்ளத்துடிக்க கொலை செய்த அதிமுகவினர்

Post by ஜாஹீதாபானு Wed Sep 09, 2015 2:48 pm

செத்தவன் நல்லவனா இருந்தா வருத்தப்படலாம்...


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கேமராக்கள் சாட்சியாக பொதுமக்கள் மத்தியில் துள்ளத்துடிக்க கொலை செய்த அதிமுகவினர் Empty Re: கேமராக்கள் சாட்சியாக பொதுமக்கள் மத்தியில் துள்ளத்துடிக்க கொலை செய்த அதிமுகவினர்

Post by T.N.Balasubramanian Wed Sep 09, 2015 5:08 pm

கத்தி எடுத்தவனுக்கு
கத்தியாலே சாவு .
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கேமராக்கள் சாட்சியாக பொதுமக்கள் மத்தியில் துள்ளத்துடிக்க கொலை செய்த அதிமுகவினர் Empty Re: கேமராக்கள் சாட்சியாக பொதுமக்கள் மத்தியில் துள்ளத்துடிக்க கொலை செய்த அதிமுகவினர்

Post by shobana sahas Thu Sep 10, 2015 12:49 am

T.N.Balasubramanian wrote:கத்தி எடுத்தவனுக்கு
கத்தியாலே சாவு .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1161528
ரொம்ப சரி அய்யா .
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

கேமராக்கள் சாட்சியாக பொதுமக்கள் மத்தியில் துள்ளத்துடிக்க கொலை செய்த அதிமுகவினர் Empty Re: கேமராக்கள் சாட்சியாக பொதுமக்கள் மத்தியில் துள்ளத்துடிக்க கொலை செய்த அதிமுகவினர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum