புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:51 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தனி ஒருவன் - திரை விமர்சனம் Poll_c10தனி ஒருவன் - திரை விமர்சனம் Poll_m10தனி ஒருவன் - திரை விமர்சனம் Poll_c10 
37 Posts - 74%
dhilipdsp
தனி ஒருவன் - திரை விமர்சனம் Poll_c10தனி ஒருவன் - திரை விமர்சனம் Poll_m10தனி ஒருவன் - திரை விமர்சனம் Poll_c10 
4 Posts - 8%
mohamed nizamudeen
தனி ஒருவன் - திரை விமர்சனம் Poll_c10தனி ஒருவன் - திரை விமர்சனம் Poll_m10தனி ஒருவன் - திரை விமர்சனம் Poll_c10 
3 Posts - 6%
வேல்முருகன் காசி
தனி ஒருவன் - திரை விமர்சனம் Poll_c10தனி ஒருவன் - திரை விமர்சனம் Poll_m10தனி ஒருவன் - திரை விமர்சனம் Poll_c10 
3 Posts - 6%
heezulia
தனி ஒருவன் - திரை விமர்சனம் Poll_c10தனி ஒருவன் - திரை விமர்சனம் Poll_m10தனி ஒருவன் - திரை விமர்சனம் Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
தனி ஒருவன் - திரை விமர்சனம் Poll_c10தனி ஒருவன் - திரை விமர்சனம் Poll_m10தனி ஒருவன் - திரை விமர்சனம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தனி ஒருவன் - திரை விமர்சனம் Poll_c10தனி ஒருவன் - திரை விமர்சனம் Poll_m10தனி ஒருவன் - திரை விமர்சனம் Poll_c10 
32 Posts - 76%
dhilipdsp
தனி ஒருவன் - திரை விமர்சனம் Poll_c10தனி ஒருவன் - திரை விமர்சனம் Poll_m10தனி ஒருவன் - திரை விமர்சனம் Poll_c10 
4 Posts - 10%
mohamed nizamudeen
தனி ஒருவன் - திரை விமர்சனம் Poll_c10தனி ஒருவன் - திரை விமர்சனம் Poll_m10தனி ஒருவன் - திரை விமர்சனம் Poll_c10 
3 Posts - 7%
வேல்முருகன் காசி
தனி ஒருவன் - திரை விமர்சனம் Poll_c10தனி ஒருவன் - திரை விமர்சனம் Poll_m10தனி ஒருவன் - திரை விமர்சனம் Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
தனி ஒருவன் - திரை விமர்சனம் Poll_c10தனி ஒருவன் - திரை விமர்சனம் Poll_m10தனி ஒருவன் - திரை விமர்சனம் Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தனி ஒருவன் - திரை விமர்சனம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 05, 2015 10:23 pm

தனி ஒருவன் - திரை விமர்சனம் P18a

குற்றவாளி யார்? அவனுக்கு பின்னால் இருக்கும் தீய சக்திகள் என்ன? என்பதை கண்டுபிடித்தப் பிறகு ஐபிஎஸ் அதிகாரியாக பொறுப்பேற்று அவனை வீழ்த்த ஜெயம் ரவி நடத்தும் த்ரில்லர் யுத்தம்தான் ‘தனி ஒருவன்’.

சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிபெற்று ஐபிஎஸ் பயிற்சி வகுப்பில் இருக்கும் மித்ரன் (ஜெயம் ரவி), உடனிருக்கும் 3 நண்பர்களுடன் சேர்ந்து போலீஸ் அதிகாரியாக பதவி ஏற்பதற்கு முன்பே குற்றங்களுக்கு எதிராக களத்தில் இறங்கி குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தருகிறார். குழந்தை கடத்தல், செயின் பறிப்பு என்று ஒவ்வொரு குற்றங்களுக்குப் பின்னாலும் மிகப்பெரிய அள வில் வணிகம் நடப்பது அவர்களுக்குத் தெரிய வருகிறது. அதற்குக் காரணமாக இருக்கும் பல்வேறு குற்றவாளிகளைப் பட்டியலிட்டு, அதில் பெரிய அளவில் குற்றங்களில் ஈடு படும் 3 நபர்களைத் தேர்வு செய்து தண்டனை பெற்றுத்தர திட்டமிடுகிறார், மித்ரன்.

இந்தச் சூழலில் மருத் துவத்துறை வழியாக சமூகத்துக்கு எதிராக பெரிய குற்றங்களை செய்துகொண்டிருக்கும் விஞ்ஞானி சித்தார்த் அபிமன்யூவின் (அரவிந்த்சாமி) செயல்கள் மித்ரனுக்கு தெரிய வருகிறது. தான் குறிவைத்த 3 குற்றவாளிகளுக்கும் அவன்தான் முன்னோடி என்பதையும் கண்டுபிடிக்கிறார். அதன்பிறகு அந்த எதிரியை அவர் வேட்டையாடினாரா என்பதுதான் கதை.

குப்பத்தைச் சேர்ந்த செங்கல் வராயன் (தம்பி ராமையா) எப்படி எம்.எல்.ஏ ஆகிறார் என்ற முன்கதை திருப்பத்தோடு திரைக்கதை விரிகிறது. செங்கல் வராயனின் மகனான பழனிதான் வில்லன் சித்தார்த் என்று அறிமுக மாகும் இடத்திலேயே கைதட்டல் வாங்கத் தொடங்குகிறார் அரவிந்த் சாமி. கிளைமாக்ஸ் காட்சியில் நாயகனிடம், ‘உனக் காக மட்டும் எல்லாத்தையும் சொல்கிறேன்’ என்று அரவிந்த்சாமி கூறும் இடம் வரைக்கும் அந்த கைதட்டல் நீள்கிறது. குறிப்பாக தம்பி ராமையாவுடன் அவர் வரும் காட்சிகளில் இருவருமே ரசிக்க வைக்கிறார்கள்.

நாயகி நயன்தாரா நடிப்பிலும், பார்வையிலும் மிளிர்கிறார். ஹீரோவைப் போலவே சிவில் சர்வீஸ் பயிற்சி, பார்த்ததும் காதல் என்று அறிமுகமாகும் சில காட்சிகள் சினிமாத்தனமாக இருந்தாலும், அடுத்தடுத்து அவர் எடுத்து வைக்கும் அடிகளால் அழகாக மனதில் அமர்ந்துவிடுகிறார். ஜெயம் ரவி, நயன்தாரா இருவரும் முதன்முதலாக காதலை வெளிப் படுத்திக் கொள்ளும் இடம் அழகு!

ஒவ்வொரு காட்சியும் பரபரப் பாக நகர்கிறது. கதாபாத் திரங்களுக்கு இயக்குநர் கொடுத் திருக்கும் முக்கியத்துவம்தான் இதற்குக் காரணம்.

படத்துக்கு வசனமும் பெரிய பலம். இயக்குநர் மோகன் ராஜா, எழுத்தாளர் சுபா எழுதியிருக் கிறார்கள். ‘நல்லது மட்டுமே செய் யணும்னா அது கடவுளாலகூட முடியாது’, ‘நான் செய்ற குற்றத் துல மிச்சம் வைக்கிறத கண்டு பிடிக்கிறதே அவன்தான்’ என்று அரவிந்த்சாமி பேசும் இடம், ‘உனக்காக உயிரைக் கொடுப் பேன்னு ஒரு பேச்சுக்கு சொன் னேன்’ என்று ஜெயம் ரவியிடம் நயன்தாரா பேசும் இடம் என்று பல இடங்களில் வசனங்கள் கைதட்டல்களை அள்ளுகின்றன.

இசை ‘ஹிப் ஆப்’ தமிழா. கச்சிதமான பின்னணி இசை. பாடல்கள் தனி ஆல்பமாகவே ஹிட். ஒளிப்பதிவு ராம்ஜி, படத்தொகுப்பு கோபி கிருஷ்ணா, கலை இயக்குநர் வி.செல்வகுமார் என்று சிறப்பான கூட்டணியை சேர்த்துக்கொண்டு இயக்குநர் பயணித்திருக்கிறார். அறையில் வில்லன் சித்தார்த்தின் கை ரேகையைக் கண்டுபிடிக்கும் இடங்களில் எடிட்டர், கேமராமேன் இருவரும் பெரிய உதவியாக இருந்திருக்கிறார்கள்.

வில்லன் அரவிந்த்சாமி சிறுவனாக இருந்து வளர்வது, படிப்பு, தொழில் என்று அவரது முழு புரொஃபைலை படத்தில் காட்டியிருப்பது வித்தியாசம். தன் உடலில் ‘டிராக்கிங் டிவைஸ்’ கருவி பொருத்தப்பட்டிருப்பதை ஜெயம் ரவி அறியும் இடம் படத்தில் மிரட்டுகிறது. ‘இப்படத்தில் இடம்பெறும் சம்பவங்கள் யாவும் கற்பனையே. நிஜத்தின் அளவுக்கு கொடூரமானவை அல்ல!’ என்று திரைப்படம் தொடங்கும் இடத்தில் வரும் வாசகத்தின் உணர்வை படத்தின் ஒவ்வொரு காட்சியும் உணர்த்துகிறது.

மருத்துவத்துறைக்கு எதிராக சித்தார்த் செய்யும் குற்றத்தை வீடியோ ஆதாரமாக வைத்திருந்த மணிமேகலை (அபிநயா) பேசிய ஆடியோ அடங்கிய ‘மெமரி ஜிப்’பை போலீஸ் பயன்படுத்தும் லத்தியில் வைத்திருப்பது எல்லாம் அப்பப்பா ‘முடியல’ சார்? அழகி சில்பாவாக நடித்திருக்கும் முக்தா கோட்ஸேயின் அப்பாவை திட்டமிட்டுக் கொன்ற விஷயம் ஜெயம் ரவிக்கு எப்படி தெரியும்? இப்படி இங்கும் அங்கும் சின்னச் சின்ன ‘ஏன்? எதற்கு?’ கேள்விகள் கேட்கத் தோன்றினாலும் முழுமையாக மனதை த்ரில்லர் மழையில் நனைய வைக்கிறது படம்.

இந்து டாக்கீஸ் குழு



தனி ஒருவன் - திரை விமர்சனம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 05, 2015 10:24 pm

தனி ஒருவன் - சினிமா விமர்சனம்

ஊர், உலகத்தையே வளைத்துப் போட்டிருக்கும் ஒரு 'சூப்பர் ஸ்மார்ட்’ வில்லனை 'தனி ஒருவனாக’ ஹீரோ எதிர்கொண்டால்..?

'ரீமேக் ராஜா’ பெயரை அதிரடியாகக் கடாசியிருக்கிறார் 'மோகன் ராஜா’. 'நல்லவன் Vs கெட்டவன்’ கதைதான். ஆனால், ஆரம்ப ஃப்ளாஷ்பேக் காட்சியின் எதிர்பாராத திருப்பம் தொடங்கி, க்ளைமாக்ஸ் திடுக்கிடல் வரை களைகட்டுகிறது படம். அப்ளாஸ், கங்கிராட்ஸ் இயக்குநரே!

தனக்குத் தகுதியான ஓர் எதிரியை நிர்ணயித்து அவனை அழிப்பதே ஐ.பி.எஸ் அதிகாரி 'ஜெயம்’ ரவியின் லட்சியம். அதற்காக மிக மோசமான மூன்று கிரிமினல்களைத் தேர்ந்தெடுத்தால், அந்த மூன்று பேரின் மாஸ்டர் பிரெயினும் ஒருவனே எனத் தெரியவருகிறது. அந்த ஒருவனை, ரவி எப்படிக் காலிசெய்கிறார் என்பதே இரண்டரை மணி நேர விறுவிறு சேஸ்!

தனி ஒருவனில் அசத்தல் 'ஒன் மேன் ஷோ’ கொடுப்பது அர்விந்த் சுவாமி. சித்தார்த் அபிமன்யூவாக ஒட்டுமொத்த லைக்ஸையும் அள்ளி கோட் பாக்கெட்டில் குவித்துக்கொள்கிறார். பதற்றத் தருணங்களில் உதட்டின் ஓரமாகப் பூக்கும் சிரிப்பு, கிடுகிடுவெனத் திட்டமிடும் கண்கள், சிறையில் கால் நீட்டி அமர்ந்திருக்கும் அலட்டிக்கொள்ளாத உடல்மொழி... என மெர்சல் காஸ்ட்டிங். தனக்கு ஒரு பிரச்னை என்றால் கேர்ள் ஃப்ரெண்ட் முதல் அப்பா வரை யாரையும் பலி கேட்கும் அந்தக் 'கெத்து’, க்ளைமாக்ஸ் காய் நகர்த்தலில் முழுமை அடைவது... அட்டகாசம்.

எதிர்பாராத திசையில் இருந்து ஹெலிகாப்டர் ஷாட் அடித்திருக்கிறார் 'ஜெயம்’ ரவி. மித்ரனாக இறுக்கமும் மூர்க்கமுமாக... இரும்பு வார்ப்பு. அட, வெறுமனே வலம்வராமல் துறுதுறுவென நடிக்கவேண்டிய கேரக்டர் நயன்தாராவுக்கு. 'ஜெயம்’ ரவி, நயனிடம் காதலைச் சொல்லும் காட்சியில் 'தட்றா க்ளாப்ஸ்’ என அதிர்கிறது அரங்கம்.

திரைக்கதையில் திடுக் திருப்பங்கள் மட்டும் அல்லாமல்... ஆச்சர்ய ஆனந்த ட்விஸ்ட்களையும் புதைத்திருக்கிறார்கள் எழுத்தாளர்கள் சுபா. அதில் செம விசேஷம் தம்பி ராமையா, அர்விந்த் சுவாமி இடையிலான 'அப்பா-மகன்’ லகலக காம்போ. மகனுடைய மிரட்டலுக்கு மிரளும் அப்பா என செம ரவுசு. சின்னச்சின்னக் குற்றங்களை இயக்கும் 'ஒருங்கிணைக்கப்பட்ட குற்றத் தலைமையகம்’, நடப்புச் செய்திகளைத் தீர்மானிக்கும் வணிகச் செய்திகள், 'பக் விளையாட்டு எனப் படம் நெடுக பல 'பவர் ப்ளே’ அத்தியாயங்கள் (ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் ஸ்பேஸ் கொடுத்தது உள்பட!).

எக்ஸ்பிரஸ் ஓட்டத்தில் யோசிக்க அனுமதிக்காத சம்பவங்களால், தியேட்டரில் இருக்கும் வரை 'மேஜிக்’ காட்டுகிறது லாஜிக். ஆதியின் பின்னணி இசையில் தடதடக்கிறது ஆக்ஷன் மேளா. பரபர திருப்பங்கள், திக் திடுக் திருப்பங்களைக் கச்சிதமாகக் கவர்ந்துகொடுக்கிறது ராம்ஜியின் ஒளிப்பதிவு மற்றும் கோபிகிருஷ்ணாவின் எடிட்டிங் கூட்டணி.

'தனி ஒருவன்’ நினைத்தால் எதுவும் சாத்தியமே என அதிரடியாக வெடித்திருக்கிறார்கள்.

ஆசம்... ஆவேசம்!

- விகடன் விமர்சனக் குழு



தனி ஒருவன் - திரை விமர்சனம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Sep 06, 2015 1:07 am

//தனி ஒருவனில் அசத்தல் 'ஒன் மேன் ஷோ’ கொடுப்பது அர்விந்த் சுவாமி. சித்தார்த் அபிமன்யூவாக ஒட்டுமொத்த லைக்ஸையும் அள்ளி கோட் பாக்கெட்டில் குவித்துக்கொள்கிறார். பதற்றத் தருணங்களில் உதட்டின் ஓரமாகப் பூக்கும் சிரிப்பு, கிடுகிடுவெனத் திட்டமிடும் கண்கள், சிறையில் கால் நீட்டி அமர்ந்திருக்கும் அலட்டிக்கொள்ளாத உடல்மொழி... என மெர்சல் காஸ்ட்டிங். தனக்கு ஒரு பிரச்னை என்றால் கேர்ள் ஃப்ரெண்ட் முதல் அப்பா வரை யாரையும் பலி கேட்கும் அந்தக் 'கெத்து’, க்ளைமாக்ஸ் காய் நகர்த்தலில் முழுமை அடைவது... அட்டகாசம். //

நிஜம் அருமையான படம்..........நல்ல நடிகர் அரவிந்தசாமி, ஏன் நடிக்காமல் போனார் என்று தெரியலை.......மீண்டும் நிறைய நடிப்பார் என்று நம்புவோம் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக