ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெருக்கும் சிபிஐ... சிக்குமா சிதம்பரம் குடும்பம்?

4 posters

Go down

நெருக்கும் சிபிஐ... சிக்குமா சிதம்பரம் குடும்பம்? Empty நெருக்கும் சிபிஐ... சிக்குமா சிதம்பரம் குடும்பம்?

Post by T.N.Balasubramanian Mon Aug 31, 2015 7:38 pm

நெருக்கும் சிபிஐ... சிக்குமா சிதம்பரம் குடும்பம்?



கடந்த சில நாட்களாக சிபிஐ புலனாய்வு அமைப்பின் நடவடிக்கைகளைப் பார்க்கும் போது அது முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தையும், அவரது குடும்பத்தையும் எப்படியும் சிக்கலில் மாட்டி விட வேண்டும் என்றே கங்கணம் கட்டிக் கொண்டு செயற்படுவதாகவே எண்ணத் தோன்றுகிறது. மூன்று நாட்களுக்கு முன்பு ராஜஸ்தான் மாநிலத்தில் 108 ஆம்புலன்ஸ்கள் வாங்குவதில் நடைபெற்றதாகச் சொல்லப் படும் முறைகேடுகள் சம்மந்தமாக ப சிதம்பரத்தின் மகன் கார்த்தி மீது சிபிஐ முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்த போதே பலரது புருவங்கள் உயர்ந்தன. இந்த எஃப்ஐஆரி ல் ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சர் அஷோக் கெஹலோட், இளம் காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் ஆகியோரின் பெயர்களும் இடம் பெற்றிருந்தாலும், கார்த்தியின் பெயர் இடம் பெற்றிருப்பததுதான் முக்கியமாக பார்க்கப்படுகிறது. கார்த்திக்கு சொந்தமானதாக கருதப்படும் ஒரு நிறுவனம்தான் இந்த ஆம்புலனஸ்களின் வடிவமைப்பில் கடைசி நேரத்தில் சில மாறுதல்களைச் செய்யச் சொன்னதாகவும் இதன் காரணமாகவே அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாகவும் சிபிஐ குற்றம் சாட்டுகிறது. ஆனால் இந்தக் குற்றச் சாட்டை கார்த்தி சிதம்பரம் மறுக்கிறார். குறிப்பட்ட அந்த நிறுவனத்துக்கும் தனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பதுதான் அவரது அதிகாரபூர்வ நிலைப்பாடாக உள்ளது.
இந்தப் பிரச்சினை வெளிவந்த உடனேயே மற்றோர் விவகாரமும் இன்று காலையில் வந்த எக்னாமிக் டைம்ஸ் பத்திரிகையில் செய்தியாகிருக்கிறது. மத்திய நிதியமைச்சகத்தின் கீழியங்கும் அமலாக்கப் பிரிவு (ஈடி) இந்திய ரிசர்வ் வங்கிக்கு எழுதயிருக்கும் ஒரு கடிதத்தில் கார்த்தியின் நிறுவனங்கள் வெளிநாடுகளுடன் செய்து வந்த வர்த்தகத்தில் மேற்கொள்ளப் பட்ட அந்நிய செலாவணி பரிவர்த்தனை விவரங்களை கேட்டிருக்கிறது. இதேபோல பங்குச் சந்தைகளில் கார்த்தி தொடர்பான நிறுவனங்களின் செயற்பாடுகள் பற்றியும் விவரங்களை கேட்டிருக்கிறது ஈடி. கார்த்தி சிதம்பரத்தை வளைக்கவே இந்த இரண்டு நிறுவனங்களின் பரிவர்த்தனகளை ஈடி அமைப்பு குறிவைப்பதாக எக்னாமிக் டைம்ஸ் செய்தி தெரிவிக்கிறது.

2006 ல் சி சிவசங்கரனுக்குச் சொந்தமான ஏர்செல் டெலிவென்ச்சர்ஸ் நிறுவனம் 26 லட்சம் ரூபாயை அட்வாண்டேஜ் ஸ்டேரடிஜிக் கண்சல்டிங் லிமிடேட் என்ற நிறுவனத்துக்குக் கொடுத்துள்ளது. இந்த நிறுவனத்துடன் கார்த்திக்கு நெருக்கமான தொடர்பு இருப்பதாகக் ஈடி கருதுகிறது. இது எப்படியென்றால், 2011 ல் அட்வாண்டேஜ் ஸ்டேரடிஜிக் கண்சல்டிங் லிமிடேட், பங்குச் சந்தையில் 1,219 இருந்த ஒரு ஷேரை வெறும் 15 ரூபாய்க்கு ஆஸ்பிரிட்ஜ் ஹோல்டிங்கஸ் என்ற நிறுவனத்திற்கு விற்றது. ஆஸ்பிரிட்ஜ் ஹோல்டிங்சில் 95 சதவிகித பங்குகளை கார்த்தி சிதம்பரம் வைத்திருந்த போதுதான் அந் நிறுவனம் அட்வாண்டேஜ் ஸ்டேரடிஜிக் கண்சல்டிங் லிமிடேட் நிறுவனத்தில் 66 சதவிகித பங்குகளை வாங்கியிருப்பதாக கருதுகிறது ஈடி. இந்த 26 லட்சத்தை ஏர்செல் டெலிவிஸ்டாஸ் அட்வாண்டேஜ் ஸ்டேரடிஜிக் கண்சல்டிங் லிமிடேட் நிறுவனத்துக்கு அவர்கள் கொடுத்த கன்சல்டன்சி சர்வீசஸ்களுக்காக அளித்த கட்டணமாகக் கூறுகிறது. ஆனால் என்ன மாதிரியான கன்சல்டன்சி சேவை கொடுக்கப்பட்டதென்று ஈடி விசாரணையில் கேட்கப் பட்டபோது அதற்கு முறையான பதில் கிடைக்கவில்லை என்று ஈடி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதே போல வாசன் ஹெல்த்கேர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் 100 கோடி ஷேர்கள் வெறும் 1.5 கோடிக்கு அட்வாண்டேஜ் ஸ்டேரடிஜிக் கண்சல்டிங் லிமிடேட் நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்டதும் ஈடி பூதக் கண்ணாடியில் மாட்டிக் கொண்டுள்ளது.
இதே போல கார்த்தி சிதம்பரத்தின் மனைவிக்கு சொந்தமான க்ரியா எஃப்எம்சிஜி டிஸ்டிரிபியூஷன் நிறுவனத்துக்கும், அப்போலோ குரூப்புக்கும் நடைபெற்ற ஒரு பரிவர்த்தனையும் தற்போது சிபிஐ வளையத்தில் உள்ளது. இந்த விசாரணைகள் அனைத்தின் நோக்கமும் எப்படியாவது ஏர்செல் மாக்சிஸ் விவகாரத்தில் ப சிதம்பரம் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களை உள்ளே இழுப்பதுதான் என்றே கூறப்படுகிறது. திடீரென்று ப சிதம்பரத்துக்கு நெருக்கமானவர்களுக்கு எதிரான அமலாக்கப் பிரிவு மற்றும் சிபிஐயின் நடவடிக்கைகள் நன்கு திட்டமிடப்பட்ட, ஆழமானதோர் அரசியல் தாக்குதலின் ஒரங்கமாகவே பார்க்கப்படுகிறது. இது ஏதோ ஒரே நாளில் நடந்ததாக தெரியவில்லை.
‘ஆகஸ்ட் 7 ம் தேதி சென்னையில் முதலமைச்சர் ஜெயலலிதாவை பிரதமர் மோடி சந்தித்த பின் நடந்தவற்றை நினைவு கூறுங்கள். முன்னாள் மத்திய அமைச்சர் ஆ ராசா மீது சொத்து குவிப்பு வழக்கு, திமுக தலைவர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதனுக்கு 2ஜி வழக்கு சம்மந்தமாக சிபிஐ சம்மன், தற்போது கார்த்தி சிதம்பரத்திற்கு எதிரான நடவடிக்கைகள்... இவ்வாறு சொல்வதால் அ ராசாவும், சண்முகநாதனும், கார்த்தியும் சொக்கத் தங்கங்கள் என்று நான் சொல்ல வரவில்லை. ஆனால் ஆகஸ்ட் 7 சந்திப்புக்கும் தற்போது நடப்பதற்கும் எந்த தொடர்பும் இல்லையென்று நாம் கருதுவது அரசியல் பேதமை ஆகாதா?' என்கிறார் தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு நெருக்கமான ஒரு தலைவர். நன்கு குறிவைத்து ப சிதம்பரத்தை ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் உள்ளே இழுப்பதற்கான வேலையை நாலா பக்கத்திலிருந்தும் சிபிஐ தொடங்கி விட்டதாகவும் அவர் மேலும் கூறுகிறார்.
1996 ம் ஆண்டில் அப்போதய நிதியமைச்சராக ப சிதம்பரம் இருந்தபோதுதான் சசிகலா மீது அந்நிய செலாவணி மோசடி வழக்குள் அடுத்தடுத்து போடப்பட்டன. 1996 ஜூன் மாதம் ஈடி யால் கைது செய்யப் பட்ட சசிகலா பத்து மாதங்கள் சிறையில் இருந்து 1997 ஏப்ரலில்தான் விடுதலையானார். சசசிகலா வுக்கு எதிரான கிட்டத்தட்ட ஆறுக்கும் மேற்பட்ட அந்நிய செலாவணி மோசடி வழக்குகள் இன்னமும் சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. இது கள யதார்த்தம்.
இன்று காலம் மாறியிருக்கிறது... காட்சிகளும் மாறியிருக்கின்றன. அனேகமாக இது அன்று பாதிக்கப்பட்டவர்கள், அதற்குக் காரணமானவர்களுக்கு வட்டியும் முதலுமாகத் திருப்பித் தரப் போட்டிருக்கும் திட்டமாகவும் இருக்கலாம்! -

ஆர் மணி.

நன்றி தட்ஸ்தமிழ்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நெருக்கும் சிபிஐ... சிக்குமா சிதம்பரம் குடும்பம்? Empty Re: நெருக்கும் சிபிஐ... சிக்குமா சிதம்பரம் குடும்பம்?

Post by ayyasamy ram Tue Sep 01, 2015 2:02 pm

நெருக்கும் சிபிஐ... சிக்குமா சிதம்பரம் குடும்பம்? MXPxarhiT6m2TO3zDN9k+31-1441024570-p-chidambaram-5-600
-
புன்னகை புன்னகை
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நெருக்கும் சிபிஐ... சிக்குமா சிதம்பரம் குடும்பம்? Empty Re: நெருக்கும் சிபிஐ... சிக்குமா சிதம்பரம் குடும்பம்?

Post by shobana sahas Tue Sep 01, 2015 9:10 pm

ayyasamy ram wrote:நெருக்கும் சிபிஐ... சிக்குமா சிதம்பரம் குடும்பம்? MXPxarhiT6m2TO3zDN9k+31-1441024570-p-chidambaram-5-600
-
புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1160049

ஐ ராம் அய்யா நல்ல பொருத்தமான படம் ... நல்ல முக பாவம் . சூப்பர்
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

நெருக்கும் சிபிஐ... சிக்குமா சிதம்பரம் குடும்பம்? Empty Re: நெருக்கும் சிபிஐ... சிக்குமா சிதம்பரம் குடும்பம்?

Post by krishnaamma Wed Sep 02, 2015 12:50 am

shobana sahas wrote:
ayyasamy ram wrote:நெருக்கும் சிபிஐ... சிக்குமா சிதம்பரம் குடும்பம்? MXPxarhiT6m2TO3zDN9k+31-1441024570-p-chidambaram-5-600
-
புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1160049

ஐ ராம் அய்யா நல்ல பொருத்தமான படம் ... நல்ல முக பாவம் . சூப்பர்
மேற்கோள் செய்த பதிவு: 1160166

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ................அவர் குடும்பம் " சிக்கும்....ஆனா சிக்காது"..............ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நெருக்கும் சிபிஐ... சிக்குமா சிதம்பரம் குடும்பம்? Empty Re: நெருக்கும் சிபிஐ... சிக்குமா சிதம்பரம் குடும்பம்?

Post by T.N.Balasubramanian Wed Sep 02, 2015 6:46 am

சிக்கலான சிதம்பர ரகசியம் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நெருக்கும் சிபிஐ... சிக்குமா சிதம்பரம் குடும்பம்? Empty Re: நெருக்கும் சிபிஐ... சிக்குமா சிதம்பரம் குடும்பம்?

Post by shobana sahas Wed Sep 02, 2015 7:12 am

T.N.Balasubramanian wrote:சிக்கலான சிதம்பர ரகசியம் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1160274
உங்களுக்கு நான் வாய்த்த பெயர் "mr . bold " ... புடிச்சுருக்கா அய்யா ?
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

நெருக்கும் சிபிஐ... சிக்குமா சிதம்பரம் குடும்பம்? Empty Re: நெருக்கும் சிபிஐ... சிக்குமா சிதம்பரம் குடும்பம்?

Post by T.N.Balasubramanian Wed Sep 02, 2015 1:46 pm

shobana sahas wrote:
T.N.Balasubramanian wrote:சிக்கலான சிதம்பர ரகசியம் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1160274
உங்களுக்கு நான் வாய்த்த பெயர் "mr . bold " ... புடிச்சுருக்கா அய்யா ?
மேற்கோள் செய்த பதிவு: 1160278

சிதம்பர ரகசியம் இல்லையே இது .
mr . b ...old என்கிறாய் . எல்லாரும் அறிந்ததே ! புன்னகை புன்னகை புன்னகை சிரி சிரி சிரி

"வாய்த்த பெயர்" என்று கூறி , "புடிச்சுருக்கா" ன்னு கேட்டா என்ன சொல்லறது !

ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Wed Sep 02, 2015 2:25 pm; edited 1 time in total (Reason for editing : addnl.word)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நெருக்கும் சிபிஐ... சிக்குமா சிதம்பரம் குடும்பம்? Empty Re: நெருக்கும் சிபிஐ... சிக்குமா சிதம்பரம் குடும்பம்?

Post by shobana sahas Thu Sep 03, 2015 1:17 am

T.N.Balasubramanian wrote:
shobana sahas wrote:
T.N.Balasubramanian wrote:சிக்கலான சிதம்பர ரகசியம் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1160274
உங்களுக்கு நான் வாய்த்த பெயர் "mr . bold " ... புடிச்சுருக்கா அய்யா ?
மேற்கோள் செய்த பதிவு: 1160278

சிதம்பர ரகசியம் இல்லையே இது .
mr . b ...old என்கிறாய் . எல்லாரும் அறிந்ததே ! புன்னகை புன்னகை புன்னகை சிரி சிரி சிரி

"வாய்த்த பெயர்" என்று கூறி , "புடிச்சுருக்கா" ன்னு கேட்டா என்ன சொல்லறது !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1160310
நான் ஒன்னும் be ஓல்ட் ன்னு சொல்ல வில்லை அய்யா . mr . bold (bolt இல்ல .... ஆம்மாம் ...) சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

நெருக்கும் சிபிஐ... சிக்குமா சிதம்பரம் குடும்பம்? Empty Re: நெருக்கும் சிபிஐ... சிக்குமா சிதம்பரம் குடும்பம்?

Post by T.N.Balasubramanian Thu Sep 03, 2015 1:08 pm

நன்றி நன்றி நன்றி

தேங்க்ஸ் ஷோபனா ! இந்த விஷயம் மாமிக்கு தெரியவேண்டாம் !

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நெருக்கும் சிபிஐ... சிக்குமா சிதம்பரம் குடும்பம்? Empty Re: நெருக்கும் சிபிஐ... சிக்குமா சிதம்பரம் குடும்பம்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஏர்ஏசியா முறைகேடு : சிதம்பரம், அஜித்சிங் மீது சிபிஐ வழக்கு
» இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலத்தை சிபிஐ வெளியிட்டது ஏன்? கார்த்தி சிதம்பரம் வக்கீல் கேள்வி
» சட்டவிரோத விசா வழக்கு - விசா முறைகேடு: கார்த்தி சிதம்பரம் முன்ஜாமின் தள்ளுபடி.
» சிபிஐ விசாரணைக்கு ராசா வருவாரா? சிபிஐ கைது செய்ய திட்டம்?
» உலகத்தில் மொழியை வைத்து பிழைத்த ஒரே குடும்பம் கருணாநிதி குடும்பம் தான்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum