Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஹெல்மெட்! by Krishnaamma :)
+2
விஸ்வாஜீ
krishnaamma
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
ஹெல்மெட்! by Krishnaamma :)
ராம், ராஜ், அருண் மற்றும் வாசு நல்லவரும் ஒரே ரூமில் தங்கி இருப்பவர்கள். இதில் ராம் ஒரு பத்திரிக்கை இல் ரிப்போர்டராக வேலை செய்பவன். ராஜ், போட்டோ ஸ்டுடியோவில் வேலை செய்பவன். அருண் வேலை தேடுபவன். வாசு படிக்கிறான்.
வாசு ஒருநாள் அவர்கள் கல்லூரி நூலகத்திலிருந்து ஒரு புத்தகம் கொண்டு வந்திருந்தான், அது இறந்தவர்களின் ஆவிகளுடன் எப்படி பேசுவது என்பதைப் பற்றியது. அதில் இவர்களுக்கு ஆர்வம் வரவே, வாசுவும் ஒருநாள் அவனுக்குத்தெரிந்த ஒருவரிடமிருந்து அந்த வினோத போர்டை வாங்கி வந்தான். ஒருநாள் இவர்கள் நால்வருக்கும் அதை சோதித்து பார்க்கணும் என்று முடிவெடுத்தார்கள்.
அந்த போர்ட் இல் ABCD சுற்றிலும் எழுதப்பட்டிருந்தது, YES NO எல்லாம் இருந்தது. ஒரு லீவு நாளாய் பார்த்து, அனைவரும் சுற்றிலும் அமர்ந்தார்கள். அந்த புத்தகத்தில் இருந்தபடி,பேப்பர் பேனா ஒரு காயின் என்று எல்லாம் எடுத்து வைத்துக்கொண்டார்கள். அப்போது ஒரு போன் வரவே,
ராம், " நீங்க கொஞ்சம் இருங்கடா, இதோ 10 நிமிஷத்தில் வந்துடறேன், பக்கம்தான், ஒரு சின்ன நியூஸ் கிடைத்திருக்கு...ப்ளீஸ்டா"......என்றான்..............
இவர்களும் , "சரி சரி...போயிட்டு வாடா, ஆனால் 1/2 மணிக்கு மேலே போனால் நாங்க ஆரம்பிச்சுடுவோம் " என்றார்கள்.
வாசுவும், " ஆமாடா, ஆரம்பித்து விட்டால், யாரும் பாதி இல் அப்படியே விட்டுவிட்டு எழுந்திருக்க முடியாதுடா........நீ நாளை போயேன் ".....என்றான்.
"இல்லைடா, நிஜமாவே 10 நிமிஷம் தான்"............இல்லாவிட்டால் நீங்க ஆரம்பியுங்க, நான் வெளியே நிற்கிறேன்.....ஆனால் அப்படி ஆகாதுடா....கண்டிப்பாக நான் எப்படியும் வந்துடுவேன்".............என்றான் ஈம்.
இவர்களும் சரி என்று அவனை போக அனுமதித்தார்கள். எப்பவும் ஹெல்மெட் போடும் வழக்கம் உள்ள ராஜ், "டேய், ஹெல்மெட் டா"....என்றான். ராம் அது தன் காதிலேயே விழாதவன் போல போய்விட்டான்.
"விடுடா..........ஹெல்மட் மட்டும் தான் பாதுகாப்பா?........எவ்வளவோ ரோடு ரூல்ஸ் இருக்கு, ஆனா இதை மட்டும் பிடிச்சிகிட்டு தொங்கறாங்க எல்லோரும்....பாரு எத்தனை முறை சொல்லி இருப்பாங்க " வரும் 1 ம் தேதி லிருந்து ஹெல்மெட் கம்பல்சரி " என்று................எவனாவது மதித்து இருக்கானா?............இல்ல அக்சிடென்ட் கேஸ் எண்ணிக்கை தான் குறைந்து இருக்கா?......போலீஸ் காரனுங்க மாமுல் நல்லா வாங்குவாங்க, மட்டமான ஹெல்மெட் எல்லாம் தேக்க நிலை இல் இருந்து வித்து போகும் அவ்வளவு தான்............" என்று சொல்லி சிரித்தான் அருண்.
இப்படியே 1/2 மணி 3/4 மணிக்கும் மேலே போனது ஆனால் வெளியே போன ராமை காணும். எனவே பேசியபடி இவர்கள் மூவரும் போர்டு ஐ வைத்துக்கொண்டு ஆவிகளை கூப்பிட ஆயத்தம் ஆனார்கள். இவர்கள் கூப்பிட்டதுமே உடனே ஒரு ஆவி வந்துவிட்டது.
இவங்களுக்கு ரொம்ப ஆச்சர்யம், காத்திருந்தது போல உடனே வந்து விட்டதே எண்டு. எனவே, அந்த புத்தகத்தில் இருந்தது போல, கேள்விகள் கேட்க ஆரம்பித்தான் வாசு.
'நீ நல்ல ஆவியா கேட்ட ஆவியா?'...............
நடுவில் வைத்திருந்த அந்த coin நகர்ந்து போய், அங்கிருந்த சூரியன் படத்தை தொட்டது, அதாவது வந்துள்ளது நல்ல ஆவி என்று சொல்லிக்கொண்டது.
இவர்களும் மகிழ்ந்து, 'உனக்கு எங்களைத் தெரியுமா'? என்று கேட்டார்கள்.
அந்த coin நகர்ந்து போய் YES என்று தொட்டது.
அதுத்து, " நீ எங்களுக்கு சொந்தமா? "....என்றார்கள்.
நிசப்தம்.
அதற்குள் வாசு, " டேய் அப்படி பொதுவாய் கேட்டால் எப்படி விளக்கும்?........எஸ் நோ சொல்வது போல கேட்கணும் டா".......என்றதும்..............
மீண்டும் அந்த coin நகர்ந்து போய் YES என்று தொட்டது.
எனவே, இவர்கள் கேள்வியை மாற்றி கேட்டார்கள்.............."நீ எங்கள் நண்பனா? ".............
மீண்டும் அந்த coin நகர்ந்து போய் YES என்று தொட்டது மிக வேகமாக.
"அப்படியா?...........யார் நீ, உன் பேர் என்ன ? "......................
"அது எழுத்துகளை அடித்துக்காட்டியது"..................அது அங்கும் இங்கும் நகரும்போது இவர்களுக்கு புரியலை.............
"சரி ...சரி.... ஒவ்வொன்றாக கேட்கிறேன், மெதுவாக சொல், என்று சொல்லிவிட்டு, ஒரு பேப்பரை எடுத்துக்கொண்டான்,
"உன் பேர்".............
அது அடித்தது RAM ............துணுக்குற்றார்கள் இவர்கள், ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு .சீசிசி நம் ராம் இல்லை, இருக்காது என்று தலையை ஆட்டிக் கொண்டார்கள் .
" நீ எப்போதிலிருந்து இப்படி இருக்கிறாய் ................அதாவது ஆவியாக? "
"10 நிமிஷமாய் "................அதிர்ந்தே போனார்கள்........
" ஹயே, நீ எங்க ராமா டா" ? என்று ஏறக்குறைய அலறினார்கள்...................
மீண்டும் அந்த coin நகர்ந்து போய் YES என்று தொட்டது மிக வேகமாக.
"அடப்பாவி, எப்படிடா..............ஏண்டா? " என்று பலவாறாக கத்தினார்கள்...............
அந்த ஆவி சொன்னதன் தொகுப்பு இதோ:
ராம் வண்டியை எடுத்துக்கொண்டு வெளியே போய் தன் நண்பனிடம் பேசிவிட்டு திரும்பிம்போது, கரண்ட் கட் ஆகிவிட்டது, அவன் நண்பன் சொன்னான், " டேய், கொஞ்சம் இருடா, ரோடு லைட்டு கூட இல்ல, கொஞ்சம் பொறுத்து போகலாம்"
ராம்," இல்லடா, அங்க என் friends காத்திருப்பாங்க எனக்காக, நாங்க ஆவிகளுடன் இன்று பேசப்போகிறோம்"............."மேலும் என் வண்டில ஹெட் லைட் இருக்குடா" என்றான்.
"ஹேய், நானும் வரேண்டா, அதை விட்டுட்டா இங்க வந்த மச்சான் , உன் தொழில் பக்தி அபாரம்டா" என்று கூறி சிரித்தவாறே , அவனும் இவனுடன் வண்டி இல் ஏறி அமர்ந்தான். இருவரும் கிளம்பி வந்து கொண்டிருக்கும்போது, ஒரு திருப்பத்தில், ஹெட் லைட் டே இல்லாத தண்ணி லாரி ஒன்று வேகமாய் திரும்ப, இவர்கள் வண்டி அதில் மோதி, இருவரும் தூக்கி எறியப்பட்டார்கள்.
உயிருக்கு போராடிய இவர்களை, ஹாஸ்பிடலுக்கு அந்த லாரிக்காரனே கொண்டு போனான் , ஆனால் ராம் வழியிலேயே இறந்து விட்டான், அவன் நண்பன் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கான்.
அந்த லாரி காரனின் owner , போலீசை சரிக்கட்டி, ஹெல்மெட் இல்லாததால் தான் ராம் இறந்து விட்டதாக கேஸ் எழுத சொல்லி விட்டான். அந்த போலீஸ் காரரும், ஒப்புக்கொண்டு, வரும் ஜூலை முதல் ஹெல்மெட் கட்டயமாகாப்படும் என்று சொல்லி வருகிற இந்த நேரத்தில், செய்தி சேகரிக்க சென்ற ஒரு நிருபர் இப்படி அடிபட்டு செத்தார் என்று செய்தி வந்தால், மக்களுக்கு பயம் வரும் என்று சொல்லி, ஒப்புக்கொண்டுவிட்டார்..........டா...........
எவ்வளவு நேரமாய் நான் உங்களுக்காக காத்திருக்கேன் தெரியுமா? எப்போ ஆரம்பிப்பிர்கள், நான் வரலாம் என்று ..........."........."இந்த விஷயத்தை நீங்க தான் டா, என் நண்பனுடன் சேர்ந்து வெளிக்கொண்டு வரணும்...செய்யறீங்களா டா" என்றான் ராம்...சாரி ராமின் ஆவி...................
ஆவியான பின்னும், "கண்டிப்பாக எப்படியும் வந்துடுவேண்டா" என்று சொல்லி சென்ற நண்பன் தவறாமல் வந்ததற்கு சந்தோஷப்படுவதா?...........அவன் ஆவியானதுக்கு அப்புறமும் வெளிப்படும் அவனின் தொழில் பக்தி யை பாராட்டுவதா?..............இல்லை இப்படிப்பட்ட ஒருவனை இழந்து நிக்கிறோமே என்று அழுவதா என்று தெரியாமல் மூவரும் விக்கித்து இருந்தார்கள்.
by ,
Krishnaamma
வாசு ஒருநாள் அவர்கள் கல்லூரி நூலகத்திலிருந்து ஒரு புத்தகம் கொண்டு வந்திருந்தான், அது இறந்தவர்களின் ஆவிகளுடன் எப்படி பேசுவது என்பதைப் பற்றியது. அதில் இவர்களுக்கு ஆர்வம் வரவே, வாசுவும் ஒருநாள் அவனுக்குத்தெரிந்த ஒருவரிடமிருந்து அந்த வினோத போர்டை வாங்கி வந்தான். ஒருநாள் இவர்கள் நால்வருக்கும் அதை சோதித்து பார்க்கணும் என்று முடிவெடுத்தார்கள்.
அந்த போர்ட் இல் ABCD சுற்றிலும் எழுதப்பட்டிருந்தது, YES NO எல்லாம் இருந்தது. ஒரு லீவு நாளாய் பார்த்து, அனைவரும் சுற்றிலும் அமர்ந்தார்கள். அந்த புத்தகத்தில் இருந்தபடி,பேப்பர் பேனா ஒரு காயின் என்று எல்லாம் எடுத்து வைத்துக்கொண்டார்கள். அப்போது ஒரு போன் வரவே,
ராம், " நீங்க கொஞ்சம் இருங்கடா, இதோ 10 நிமிஷத்தில் வந்துடறேன், பக்கம்தான், ஒரு சின்ன நியூஸ் கிடைத்திருக்கு...ப்ளீஸ்டா"......என்றான்..............
இவர்களும் , "சரி சரி...போயிட்டு வாடா, ஆனால் 1/2 மணிக்கு மேலே போனால் நாங்க ஆரம்பிச்சுடுவோம் " என்றார்கள்.
வாசுவும், " ஆமாடா, ஆரம்பித்து விட்டால், யாரும் பாதி இல் அப்படியே விட்டுவிட்டு எழுந்திருக்க முடியாதுடா........நீ நாளை போயேன் ".....என்றான்.
"இல்லைடா, நிஜமாவே 10 நிமிஷம் தான்"............இல்லாவிட்டால் நீங்க ஆரம்பியுங்க, நான் வெளியே நிற்கிறேன்.....ஆனால் அப்படி ஆகாதுடா....கண்டிப்பாக நான் எப்படியும் வந்துடுவேன்".............என்றான் ஈம்.
இவர்களும் சரி என்று அவனை போக அனுமதித்தார்கள். எப்பவும் ஹெல்மெட் போடும் வழக்கம் உள்ள ராஜ், "டேய், ஹெல்மெட் டா"....என்றான். ராம் அது தன் காதிலேயே விழாதவன் போல போய்விட்டான்.
"விடுடா..........ஹெல்மட் மட்டும் தான் பாதுகாப்பா?........எவ்வளவோ ரோடு ரூல்ஸ் இருக்கு, ஆனா இதை மட்டும் பிடிச்சிகிட்டு தொங்கறாங்க எல்லோரும்....பாரு எத்தனை முறை சொல்லி இருப்பாங்க " வரும் 1 ம் தேதி லிருந்து ஹெல்மெட் கம்பல்சரி " என்று................எவனாவது மதித்து இருக்கானா?............இல்ல அக்சிடென்ட் கேஸ் எண்ணிக்கை தான் குறைந்து இருக்கா?......போலீஸ் காரனுங்க மாமுல் நல்லா வாங்குவாங்க, மட்டமான ஹெல்மெட் எல்லாம் தேக்க நிலை இல் இருந்து வித்து போகும் அவ்வளவு தான்............" என்று சொல்லி சிரித்தான் அருண்.
இப்படியே 1/2 மணி 3/4 மணிக்கும் மேலே போனது ஆனால் வெளியே போன ராமை காணும். எனவே பேசியபடி இவர்கள் மூவரும் போர்டு ஐ வைத்துக்கொண்டு ஆவிகளை கூப்பிட ஆயத்தம் ஆனார்கள். இவர்கள் கூப்பிட்டதுமே உடனே ஒரு ஆவி வந்துவிட்டது.
இவங்களுக்கு ரொம்ப ஆச்சர்யம், காத்திருந்தது போல உடனே வந்து விட்டதே எண்டு. எனவே, அந்த புத்தகத்தில் இருந்தது போல, கேள்விகள் கேட்க ஆரம்பித்தான் வாசு.
'நீ நல்ல ஆவியா கேட்ட ஆவியா?'...............
நடுவில் வைத்திருந்த அந்த coin நகர்ந்து போய், அங்கிருந்த சூரியன் படத்தை தொட்டது, அதாவது வந்துள்ளது நல்ல ஆவி என்று சொல்லிக்கொண்டது.
இவர்களும் மகிழ்ந்து, 'உனக்கு எங்களைத் தெரியுமா'? என்று கேட்டார்கள்.
அந்த coin நகர்ந்து போய் YES என்று தொட்டது.
அதுத்து, " நீ எங்களுக்கு சொந்தமா? "....என்றார்கள்.
நிசப்தம்.
அதற்குள் வாசு, " டேய் அப்படி பொதுவாய் கேட்டால் எப்படி விளக்கும்?........எஸ் நோ சொல்வது போல கேட்கணும் டா".......என்றதும்..............
மீண்டும் அந்த coin நகர்ந்து போய் YES என்று தொட்டது.
எனவே, இவர்கள் கேள்வியை மாற்றி கேட்டார்கள்.............."நீ எங்கள் நண்பனா? ".............
மீண்டும் அந்த coin நகர்ந்து போய் YES என்று தொட்டது மிக வேகமாக.
"அப்படியா?...........யார் நீ, உன் பேர் என்ன ? "......................
"அது எழுத்துகளை அடித்துக்காட்டியது"..................அது அங்கும் இங்கும் நகரும்போது இவர்களுக்கு புரியலை.............
"சரி ...சரி.... ஒவ்வொன்றாக கேட்கிறேன், மெதுவாக சொல், என்று சொல்லிவிட்டு, ஒரு பேப்பரை எடுத்துக்கொண்டான்,
"உன் பேர்".............
அது அடித்தது RAM ............துணுக்குற்றார்கள் இவர்கள், ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு .சீசிசி நம் ராம் இல்லை, இருக்காது என்று தலையை ஆட்டிக் கொண்டார்கள் .
" நீ எப்போதிலிருந்து இப்படி இருக்கிறாய் ................அதாவது ஆவியாக? "
"10 நிமிஷமாய் "................அதிர்ந்தே போனார்கள்........
" ஹயே, நீ எங்க ராமா டா" ? என்று ஏறக்குறைய அலறினார்கள்...................
மீண்டும் அந்த coin நகர்ந்து போய் YES என்று தொட்டது மிக வேகமாக.
"அடப்பாவி, எப்படிடா..............ஏண்டா? " என்று பலவாறாக கத்தினார்கள்...............
அந்த ஆவி சொன்னதன் தொகுப்பு இதோ:
ராம் வண்டியை எடுத்துக்கொண்டு வெளியே போய் தன் நண்பனிடம் பேசிவிட்டு திரும்பிம்போது, கரண்ட் கட் ஆகிவிட்டது, அவன் நண்பன் சொன்னான், " டேய், கொஞ்சம் இருடா, ரோடு லைட்டு கூட இல்ல, கொஞ்சம் பொறுத்து போகலாம்"
ராம்," இல்லடா, அங்க என் friends காத்திருப்பாங்க எனக்காக, நாங்க ஆவிகளுடன் இன்று பேசப்போகிறோம்"............."மேலும் என் வண்டில ஹெட் லைட் இருக்குடா" என்றான்.
"ஹேய், நானும் வரேண்டா, அதை விட்டுட்டா இங்க வந்த மச்சான் , உன் தொழில் பக்தி அபாரம்டா" என்று கூறி சிரித்தவாறே , அவனும் இவனுடன் வண்டி இல் ஏறி அமர்ந்தான். இருவரும் கிளம்பி வந்து கொண்டிருக்கும்போது, ஒரு திருப்பத்தில், ஹெட் லைட் டே இல்லாத தண்ணி லாரி ஒன்று வேகமாய் திரும்ப, இவர்கள் வண்டி அதில் மோதி, இருவரும் தூக்கி எறியப்பட்டார்கள்.
உயிருக்கு போராடிய இவர்களை, ஹாஸ்பிடலுக்கு அந்த லாரிக்காரனே கொண்டு போனான் , ஆனால் ராம் வழியிலேயே இறந்து விட்டான், அவன் நண்பன் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கான்.
அந்த லாரி காரனின் owner , போலீசை சரிக்கட்டி, ஹெல்மெட் இல்லாததால் தான் ராம் இறந்து விட்டதாக கேஸ் எழுத சொல்லி விட்டான். அந்த போலீஸ் காரரும், ஒப்புக்கொண்டு, வரும் ஜூலை முதல் ஹெல்மெட் கட்டயமாகாப்படும் என்று சொல்லி வருகிற இந்த நேரத்தில், செய்தி சேகரிக்க சென்ற ஒரு நிருபர் இப்படி அடிபட்டு செத்தார் என்று செய்தி வந்தால், மக்களுக்கு பயம் வரும் என்று சொல்லி, ஒப்புக்கொண்டுவிட்டார்..........டா...........
எவ்வளவு நேரமாய் நான் உங்களுக்காக காத்திருக்கேன் தெரியுமா? எப்போ ஆரம்பிப்பிர்கள், நான் வரலாம் என்று ..........."........."இந்த விஷயத்தை நீங்க தான் டா, என் நண்பனுடன் சேர்ந்து வெளிக்கொண்டு வரணும்...செய்யறீங்களா டா" என்றான் ராம்...சாரி ராமின் ஆவி...................
ஆவியான பின்னும், "கண்டிப்பாக எப்படியும் வந்துடுவேண்டா" என்று சொல்லி சென்ற நண்பன் தவறாமல் வந்ததற்கு சந்தோஷப்படுவதா?...........அவன் ஆவியானதுக்கு அப்புறமும் வெளிப்படும் அவனின் தொழில் பக்தி யை பாராட்டுவதா?..............இல்லை இப்படிப்பட்ட ஒருவனை இழந்து நிக்கிறோமே என்று அழுவதா என்று தெரியாமல் மூவரும் விக்கித்து இருந்தார்கள்.
by ,
Krishnaamma
Last edited by krishnaamma on Mon Aug 31, 2015 10:21 am; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஹெல்மெட்! by Krishnaamma :)
அருமை அம்மா ஹெல்மெட் பற்றிய கதை அருமை ஆனால் எங்கள்
ஏரியாவில் ஹெல்மெட் போட்டுக் கொண்டு போகும்போது அதிகப்பட்சமாக
5 நபர்கள்தான் ஹெல்மெட் போட்டுக் கொண்டு போகிறார்கள். இங்கு யாரும்
கேட்பதில்லை உயிருக்கான பாதுகாப்பை
ஏரியாவில் ஹெல்மெட் போட்டுக் கொண்டு போகும்போது அதிகப்பட்சமாக
5 நபர்கள்தான் ஹெல்மெட் போட்டுக் கொண்டு போகிறார்கள். இங்கு யாரும்
கேட்பதில்லை உயிருக்கான பாதுகாப்பை
விஸ்வாஜீ- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011
Re: ஹெல்மெட்! by Krishnaamma :)
மேற்கோள் செய்த பதிவு: 1158964விஸ்வாஜீ wrote:அருமை அம்மா ஹெல்மெட் பற்றிய கதை அருமை ஆனால் எங்கள்
ஏரியாவில் ஹெல்மெட் போட்டுக் கொண்டு போகும்போது அதிகப்பட்சமாக
5 நபர்கள்தான் ஹெல்மெட் போட்டுக் கொண்டு போகிறார்கள். இங்கு யாரும்
கேட்பதில்லை உயிருக்கான பாதுகாப்பை
ஆமாம் விஸ்வா, ஏதோ கடமைக்காகவும் கட்டாயத்துக்காகவும் போடுகிறார்களே தவிர தங்களின் நல்லதுக்கு என்று உணரவில்லை மக்கள்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஹெல்மெட்! by Krishnaamma :)
மேற்கோள் செய்த பதிவு: 1158970krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1158964விஸ்வாஜீ wrote:அருமை அம்மா ஹெல்மெட் பற்றிய கதை அருமை ஆனால் எங்கள்
ஏரியாவில் ஹெல்மெட் போட்டுக் கொண்டு போகும்போது அதிகப்பட்சமாக
5 நபர்கள்தான் ஹெல்மெட் போட்டுக் கொண்டு போகிறார்கள். இங்கு யாரும்
கேட்பதில்லை உயிருக்கான பாதுகாப்பை
ஆமாம் விஸ்வா, ஏதோ கடமைக்காகவும் கட்டாயத்துக்காகவும் போடுகிறார்களே தவிர தங்களின் நல்லதுக்கு என்று உணரவில்லை மக்கள்
தலையில் வைத்துக் கொள்வது பெரிய விசயமாக தெரியவில்லை அம்மா அதை
போகுமிடமெல்லாம் கையில் வைத்துக் கொண்டு அலைவது தான் கஷ்டமாக இருக்கிறது
விஸ்வாஜீ- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011
Re: ஹெல்மெட்! by Krishnaamma :)
நல்ல , அருமையான, இந்த கால கட்டத்திற்கு மிகவும் அவசியமான கருத்துள்ள கதை க்ரிஷ்ணாம்மா.. சூப்பர்
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: ஹெல்மெட்! by Krishnaamma :)
விஸ்வாஜீ wrote:மேற்கோள் செய்த பதிவு: 1158970krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1158964விஸ்வாஜீ wrote:அருமை அம்மா ஹெல்மெட் பற்றிய கதை அருமை ஆனால் எங்கள்
ஏரியாவில் ஹெல்மெட் போட்டுக் கொண்டு போகும்போது அதிகப்பட்சமாக
5 நபர்கள்தான் ஹெல்மெட் போட்டுக் கொண்டு போகிறார்கள். இங்கு யாரும்
கேட்பதில்லை உயிருக்கான பாதுகாப்பை
ஆமாம் விஸ்வா, ஏதோ கடமைக்காகவும் கட்டாயத்துக்காகவும் போடுகிறார்களே தவிர தங்களின் நல்லதுக்கு என்று உணரவில்லை மக்கள்
தலையில் வைத்துக் கொள்வது பெரிய விசயமாக தெரியவில்லை அம்மா அதை
போகுமிடமெல்லாம் கையில் வைத்துக் கொண்டு அலைவது தான் கஷ்டமாக இருக்கிறது
ஆமாம் நிஜம், அதுக்கு ஒரு லாக் இருந்தாலும் வண்டிகளை வைக்கும் இடத்திலும் இவைகளை வைக்க ஒப்புக்கொள்ள மாட்டார்கள்............அரசு தான் இதற்கும் ஒரு வழி வகுக்கணும்......வண்டி வைக்கும்போது இதையும் வைக்க ஏற்ப்பாடு செய்யணும்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஹெல்மெட்! by Krishnaamma :)
மேற்கோள் செய்த பதிவு: 1159072shobana sahas wrote:நல்ல , அருமையான, இந்த கால கட்டத்திற்கு மிகவும் அவசியமான கருத்துள்ள கதை க்ரிஷ்ணாம்மா.. சூப்பர்
நன்றி ஷோபனா ..............
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஹெல்மெட்! by Krishnaamma :)
ஆவியுடன் பேசுவது சாத்தியமா சொல்வீரே ?
...அறிவியல் காலத்தில் ஏனிந்த மூடமதி ?
பாவி வாசு கொண்டுவந்த புத்தகத்தால்
...பரலோகம் சென்றது ராமின் உயிரன்றோ !
ஹெல்மெட் போடாதது மட்டுமே தவறல்ல !
...ஹெட்லைட் போடாதது லாரியின் குற்றமன்றோ !
பல்புகள் சாலையில் எரியாதது யார்தவறு ?
...பலதவறுகள் சேர்ந்திங்கே உயிரை மாய்த்தது .
...அறிவியல் காலத்தில் ஏனிந்த மூடமதி ?
பாவி வாசு கொண்டுவந்த புத்தகத்தால்
...பரலோகம் சென்றது ராமின் உயிரன்றோ !
ஹெல்மெட் போடாதது மட்டுமே தவறல்ல !
...ஹெட்லைட் போடாதது லாரியின் குற்றமன்றோ !
பல்புகள் சாலையில் எரியாதது யார்தவறு ?
...பலதவறுகள் சேர்ந்திங்கே உயிரை மாய்த்தது .
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Page 1 of 2 • 1, 2
Similar topics
» "சலுகை"...by Krishnaamma :)
» குழந்தை - by krishnaamma :)
» ப்ராப்தம்............by Krishnaamma :)
» சமயோஜிதம்........... by Krishnaamma :)
» "யதார்த்தம் " by Krishnaamma !
» குழந்தை - by krishnaamma :)
» ப்ராப்தம்............by Krishnaamma :)
» சமயோஜிதம்........... by Krishnaamma :)
» "யதார்த்தம் " by Krishnaamma !
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|