Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறுby Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm
» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am
» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
prajai |
| |||
rajuselvam |
| |||
kavithasankar |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Guna.D |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பயத்தின் வெளிப்பாடு!
Page 1 of 1
பயத்தின் வெளிப்பாடு!
கல்லூரிக்கு கிளம்பிக் கொண்டிருந்த பவித்ரா, ''லட்சுமியம்மா... 11:00 மணி போல அத்தைக்கு ஞாபகமாக சூப் வைச்சு கொடுத்திடுங்க. ஜுரம் அடிச்சதால ரெண்டு நாளா சரியாக சாப்பிடாம சோர்ந்து போயிருக்காங்க,'' என்றாள்.
''நீங்க கிளம்புங்கம்மா; நான் பாத்துக்கிறேன், '' என, சமையல்காரம்மா சொல்ல, மாமியார் இருக்கும் அறையை எட்டிப் பார்த்தாள்.
''பவித்ரா... வேலைக்கு கிளம்பிட்டியா... ஆபிஸ் வேலையா ஊருக்கு போயிருக்கிற வரதன் எப்ப வர்றான்?''என்று கேட்டார் மாமியார்.
''ரெண்டு நாள்ல உங்க பிள்ளை வந்திடுவாரு அத்தை... நான் கிளம்பறேன்,''என்று கூறி, விடைபெற்று வாசலுக்கு வந்தவள், மகள் லலிதா வருவதை ஆச்சரியமாக பார்த்தாள்.
லலிதாவிற்கு திருமணம் முடிந்து மூணு மாதம் தான் ஆகிறது. கணவனுடன் இதே சென்னையில் தான் இருக்கிறாள்.
போன் கூட செய்யாமல் மகள் வந்து நின்றது ஆச்சரியம் அளிக்க, ''வா லலிதா... என்ன வரேன்னு கூட சொல்லாம, புறப்பட்டு வந்திருக்க... மாப்பிள்ள வரலயா?''என்று கேட்டாள்.
பதில் சொல்லாமல் சோர்வுடன் உட்கார்ந்த லலிதா, ''என்கிட்ட எதுவும் கேட்காத... நீ வேலைக்கு போயிட்டு வா சாயந்திரம் பேசிக்கலாம்,'' என்றாள்.
''அது இருக்கட்டும்; உன் முகம் ஏன் ஒரு மாதிரி இருக்கு... என்ன விஷயம்ன்னு சொல்லு...''
''அங்க இருக்க எனக்கு பிடிக்கலம்மா. என் மாமியார் என்னை அதிகாரம் செய்றதும், இதைச் செய், அதைச் செய்யின்னு ஆர்டர் போடுறதும்... நான் என்ன அவங்க வீட்டு வேலைக்காரியா... ''நான், அவங்க பிள்ளையோட மனைவிங்கிற எண்ணம் அவங்க மனசுல இருக்கிற மாதிரி தெரியல. அவர்கிட்ட இதப்பத்தி பேசலாம்ன்னா, அவங்கம்மா மேல குறை சொல்றேன்னு தப்பா எடுத்துப்பாரோன்னு தயக்கமா இருக்கு.
''அதான் மனசே சரியில்ல; அம்மாவ பாத்துட்டு வரேன்னு அவர்கிட்ட சொல்லிட்டு புறப்பட்டு வந்துட்டேன்,'' என்றாள் லலிதா.
''சரி... நீ சாப்பிட்டுட்டு, பாட்டியோடு பேசிட்டு இரு; எனக்கு காலேஜுக்கு நேரமாச்சு; சாயந்திரம் வந்து விவரமாகப் பேசலாம்.''
''ஹலோ மாப்பிள்ளை... நான் பவித்ரா பேசறேன்.''
''சொல்லுங்க அத்தை.. நல்லாயிருக்கீங்களா... லலிதா அங்க தான் வந்திருக்கா பாத்தீங்களா...''
''பாத்தேன் மாப்பிள்ள... மதியம் லஞ்ச்சுக்கு எங்க காலேஜுக்கு பக்கத்திலிருக்கிற ஓட்டலுக்கு வர்றீங்களா... உங்க கிட்ட சில விஷயங்க பேசணும்ன்னு நினைக்கிறேன்,'' என்றாள்.
''என்ன விஷயம் அத்தை... சாயந்திரம் தான் வீட்டுக்கு வர்றேனே அப்ப பேசுவோம்; அப்படியே லலிதாவையும் அழைச்சிட்டு வந்திடுவேன்,''என்றான்.
''இல்ல மாப்பிள்ள... உங்ககிட்ட பர்சனலா பேசணும்ன்னு நினைக்கிறேன்; உங்களுக்கு சிரமம்ன்னா வேணாம்.''
''அப்படியெல்லாம் இல்லத்தை; நான், 1:00 மணிக்கு அங்கு வர்றேன்.''
டேபிள் மீது வைக்கப்பட்டிருந்த சாப்பாட்டையே பார்த்தபடி மவுனமாக இருந்தாள் பவித்ரா.
''சாப்பிடுங்க அத்தை... இங்க அடிக்கடி வருவீங்களா... சாப்பாடு அருமையா இருக்கு,'' என சாப்பிட்டபடி சொன்னான் குமார்.
''மாப்பிள்ளை... நான் சொல்ல வர்றதை நீங்க சரியா புரிஞ்சுக்கணும்...''
''எதுக்கு அத்தை இந்த பீடிகை... தைரியமா சொல்லுங்க.''
''நீங்க அப்பா இல்லாம, அம்மாவோட அரவணைப்பில வளர்ந்தவரு. தனி மனுஷியா உங்கள வளத்து ஆளாக்கியிருக்காங்க உங்க அம்மா. அதனால, அவங்களுக்கு உங்க மேலே அன்பும், பாசமும் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும்; அதே மாதிரி உங்ககிட்டேயும் அவங்க எதிர்பாப்பாங்க...'' என்று அவள் கூறிக் கொண்டிருக்கும் போதே, ''நீங்க சொல்றது ரொம்ப சரி... எங்கம்மா என் மேலே ரொம்ப அன்பு வச்சிருக்காங்க; நானும் இன்னைக்கு வரைக்கும், அவங்க மனசு கோணாம தான் நடந்துட்டு வரேன்,''என்றான் குமார்.
தொடரும்...........
''நீங்க கிளம்புங்கம்மா; நான் பாத்துக்கிறேன், '' என, சமையல்காரம்மா சொல்ல, மாமியார் இருக்கும் அறையை எட்டிப் பார்த்தாள்.
''பவித்ரா... வேலைக்கு கிளம்பிட்டியா... ஆபிஸ் வேலையா ஊருக்கு போயிருக்கிற வரதன் எப்ப வர்றான்?''என்று கேட்டார் மாமியார்.
''ரெண்டு நாள்ல உங்க பிள்ளை வந்திடுவாரு அத்தை... நான் கிளம்பறேன்,''என்று கூறி, விடைபெற்று வாசலுக்கு வந்தவள், மகள் லலிதா வருவதை ஆச்சரியமாக பார்த்தாள்.
லலிதாவிற்கு திருமணம் முடிந்து மூணு மாதம் தான் ஆகிறது. கணவனுடன் இதே சென்னையில் தான் இருக்கிறாள்.
போன் கூட செய்யாமல் மகள் வந்து நின்றது ஆச்சரியம் அளிக்க, ''வா லலிதா... என்ன வரேன்னு கூட சொல்லாம, புறப்பட்டு வந்திருக்க... மாப்பிள்ள வரலயா?''என்று கேட்டாள்.
பதில் சொல்லாமல் சோர்வுடன் உட்கார்ந்த லலிதா, ''என்கிட்ட எதுவும் கேட்காத... நீ வேலைக்கு போயிட்டு வா சாயந்திரம் பேசிக்கலாம்,'' என்றாள்.
''அது இருக்கட்டும்; உன் முகம் ஏன் ஒரு மாதிரி இருக்கு... என்ன விஷயம்ன்னு சொல்லு...''
''அங்க இருக்க எனக்கு பிடிக்கலம்மா. என் மாமியார் என்னை அதிகாரம் செய்றதும், இதைச் செய், அதைச் செய்யின்னு ஆர்டர் போடுறதும்... நான் என்ன அவங்க வீட்டு வேலைக்காரியா... ''நான், அவங்க பிள்ளையோட மனைவிங்கிற எண்ணம் அவங்க மனசுல இருக்கிற மாதிரி தெரியல. அவர்கிட்ட இதப்பத்தி பேசலாம்ன்னா, அவங்கம்மா மேல குறை சொல்றேன்னு தப்பா எடுத்துப்பாரோன்னு தயக்கமா இருக்கு.
''அதான் மனசே சரியில்ல; அம்மாவ பாத்துட்டு வரேன்னு அவர்கிட்ட சொல்லிட்டு புறப்பட்டு வந்துட்டேன்,'' என்றாள் லலிதா.
''சரி... நீ சாப்பிட்டுட்டு, பாட்டியோடு பேசிட்டு இரு; எனக்கு காலேஜுக்கு நேரமாச்சு; சாயந்திரம் வந்து விவரமாகப் பேசலாம்.''
''ஹலோ மாப்பிள்ளை... நான் பவித்ரா பேசறேன்.''
''சொல்லுங்க அத்தை.. நல்லாயிருக்கீங்களா... லலிதா அங்க தான் வந்திருக்கா பாத்தீங்களா...''
''பாத்தேன் மாப்பிள்ள... மதியம் லஞ்ச்சுக்கு எங்க காலேஜுக்கு பக்கத்திலிருக்கிற ஓட்டலுக்கு வர்றீங்களா... உங்க கிட்ட சில விஷயங்க பேசணும்ன்னு நினைக்கிறேன்,'' என்றாள்.
''என்ன விஷயம் அத்தை... சாயந்திரம் தான் வீட்டுக்கு வர்றேனே அப்ப பேசுவோம்; அப்படியே லலிதாவையும் அழைச்சிட்டு வந்திடுவேன்,''என்றான்.
''இல்ல மாப்பிள்ள... உங்ககிட்ட பர்சனலா பேசணும்ன்னு நினைக்கிறேன்; உங்களுக்கு சிரமம்ன்னா வேணாம்.''
''அப்படியெல்லாம் இல்லத்தை; நான், 1:00 மணிக்கு அங்கு வர்றேன்.''
டேபிள் மீது வைக்கப்பட்டிருந்த சாப்பாட்டையே பார்த்தபடி மவுனமாக இருந்தாள் பவித்ரா.
''சாப்பிடுங்க அத்தை... இங்க அடிக்கடி வருவீங்களா... சாப்பாடு அருமையா இருக்கு,'' என சாப்பிட்டபடி சொன்னான் குமார்.
''மாப்பிள்ளை... நான் சொல்ல வர்றதை நீங்க சரியா புரிஞ்சுக்கணும்...''
''எதுக்கு அத்தை இந்த பீடிகை... தைரியமா சொல்லுங்க.''
''நீங்க அப்பா இல்லாம, அம்மாவோட அரவணைப்பில வளர்ந்தவரு. தனி மனுஷியா உங்கள வளத்து ஆளாக்கியிருக்காங்க உங்க அம்மா. அதனால, அவங்களுக்கு உங்க மேலே அன்பும், பாசமும் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும்; அதே மாதிரி உங்ககிட்டேயும் அவங்க எதிர்பாப்பாங்க...'' என்று அவள் கூறிக் கொண்டிருக்கும் போதே, ''நீங்க சொல்றது ரொம்ப சரி... எங்கம்மா என் மேலே ரொம்ப அன்பு வச்சிருக்காங்க; நானும் இன்னைக்கு வரைக்கும், அவங்க மனசு கோணாம தான் நடந்துட்டு வரேன்,''என்றான் குமார்.
தொடரும்...........
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பயத்தின் வெளிப்பாடு!
புன்னகையோடு மருமகனை பார்த்தவள், ''என் மாமியாரும் அப்படித்தான்; சின்ன வயசிலேயே புருஷனை பறிகொடுத்து, தனக்கு எல்லாமே பிள்ளை மட்டும் தான்னு வாழ்ந்துட்டு வர்றாங்க.
எனக்கு கல்யாணமான புதுசுல என் மாமியார் என்கிட்டே சொன்னது இதுதான்:
'நீ, என் பிள்ளைக்கு மனைவியா, இந்த வீட்டிற்கு மருமகளாக வந்திருக்கே... தனி மனுஷியா என் பிள்ளையை கஷ்டப்பட்டு வளர்த்தேன்.
'என் உலகமே என் பிள்ளைதான். இதை, நீ முதல்ல புரிஞ்சுக்கணும். என் பிள்ளை கிட்ட நான் காட்டற அன்பும், பாசமும் உனக்கு மிகையாகக் கூட தோணலாம். அதான் உன்கிட்டே என் மனசிலிருக்கிறத எல்லாம் தெளிவாக பேசிடலாம்ன்னு நினைக்கிறேன். என்னை மாதிரி பிள்ளைய மட்டுமே நம்பி வாழற அம்மாக்கள், எங்கே மருமகள் தன் பிள்ளைய தன்னிடமிருந்து பிரிச்சிடுவாளோன்னு பயப்படுவாங்க.
'அதை மறைக்க, பிள்ளை மேல் தனக்கிருக்கிற உரிமைய வெளிப்படுத்த, அதிகாரத்தை மருமகள் கிட்டே காட்டுவாங்க. ஆனா, நான், என் பிள்ளை மேல் இருக்கிற உரிமைய வெளிப்படுத்த அதிகாரத்தைக் காட்ட விரும்பல; அன்பை தான் வெளிப்படுத்த நினைக்கிறேன்.
'என் பிள்ளையும், நீயும் எனக்கு ஒண்ணுதான். என் பிள்ளை மேல் வச்சிருக்கிற அன்பு, நிச்சயம் உன்கிட்டேயும் வெளிப்படும். என்னை உன் தாய் ஸ்தானத்தில் வச்சு கடைசி வரை பராமரிப்பியா பவித்ரா'ன்னு சொன்னாங்க...
''இன்னைக்கு வரைக்கும் அவங்க எனக்கு ஒரு அம்மாவாகத்தான் வாழ்ந்துட்டு இருக்காங்க. இதை நான் எதுக்கு உங்ககிட்ட சொல்றேன்னா, உங்கம்மாவோட மன நிலையும் இதே மாதிரி தான் இருக்கு. என் மகள், எங்கே உங்கள அவங்க கிட்டேயிருந்து பிரிச்சுடுவாளோன்னு பயப்படறாங்க. அதன் வெளிப்பாடு, அவகிட்டே கண்டிப்பையும், அதிகாரத்தை மட்டும் காட்டறாங்க. அது, அவ மனசிலே வெறுப்பை தான் வளர்க்கும்.
''காலையில லலிதா என்கிட்டே, உங்கம்மாவோட நடவடிக்கைக தன்னை கஷ்டப்படுத்தறதாவும் உங்ககிட்ட சொன்னா, நீங்க தப்பா எடுத்துப்பீங்களோன்னு பயப்படறதா சொன்னா...'' என்றாள் பவித்ரா.
''நீங்க சொல்றது எனக்கு புரியது அத்தை... அதான் கொஞ்ச நாளா முகம் வாடி, சோர்வா இருந்தாளா... எங்கம்மாவோட பயம் அர்த்தமில்லாததுன்னு அவங்களுக்கு நான் புரிய வைக்கிறேன்,''என்றான் குமார்.
''அது மட்டுமில்ல மாப்பிள்ள... அவங்க மனசு வருத்தப்படாம, நீங்க தான் நல்லபடியா அவங்களுக்கு எடுத்துச் சொல்லணும். மருமகள் கிட்ட காட்டுற அன்பும், பிரியமும் தான், மகன் அருகில் கடைசி வரை அவங்களை வச்சிருக்கும்கிறதை நீங்க தான் நல்லபடியா சொல்லணும்.
''உங்களை நம்பி வந்த உங்க மனைவியையும், சந்தோஷமா வச்சிக்கணும்; உங்க அம்மாவுக்கும் ஒரு நல்ல மகனா இருக்கணும்,'' என்றாள்.
தனக்கு புரியும்படி தெளிவாக பேசும் மாமியாரை பார்த்து, ''உங்க அணுகுமுறை எனக்கு ரொம்பவே பிடிச்சுருக்கு அத்தை. மாமியார் மேலே தப்பான அபிப்ராயத்தோடு வந்த மகளை, மேலும் அவ மனசை கெடுத்து, குடும்பத்தை பிரிக்க நினைக்காம, உள்ள நிலைமைய எனக்கு புரியும்படி அழகா எடுத்துச் சொன்னீங்க; ரொம்ப நன்றி. சாயந்திரம் நானே வீட்டுக்கு வந்து லலிதாவை கூட்டிட்டு போறேன்; இனி நிச்சயம் லலிதா இது மாதிரி புகாரோடு வர மாட்டா,'' என்றான் உறுதியுடன் குமார்.
ராஜ் பாலா
எனக்கு கல்யாணமான புதுசுல என் மாமியார் என்கிட்டே சொன்னது இதுதான்:
'நீ, என் பிள்ளைக்கு மனைவியா, இந்த வீட்டிற்கு மருமகளாக வந்திருக்கே... தனி மனுஷியா என் பிள்ளையை கஷ்டப்பட்டு வளர்த்தேன்.
'என் உலகமே என் பிள்ளைதான். இதை, நீ முதல்ல புரிஞ்சுக்கணும். என் பிள்ளை கிட்ட நான் காட்டற அன்பும், பாசமும் உனக்கு மிகையாகக் கூட தோணலாம். அதான் உன்கிட்டே என் மனசிலிருக்கிறத எல்லாம் தெளிவாக பேசிடலாம்ன்னு நினைக்கிறேன். என்னை மாதிரி பிள்ளைய மட்டுமே நம்பி வாழற அம்மாக்கள், எங்கே மருமகள் தன் பிள்ளைய தன்னிடமிருந்து பிரிச்சிடுவாளோன்னு பயப்படுவாங்க.
'அதை மறைக்க, பிள்ளை மேல் தனக்கிருக்கிற உரிமைய வெளிப்படுத்த, அதிகாரத்தை மருமகள் கிட்டே காட்டுவாங்க. ஆனா, நான், என் பிள்ளை மேல் இருக்கிற உரிமைய வெளிப்படுத்த அதிகாரத்தைக் காட்ட விரும்பல; அன்பை தான் வெளிப்படுத்த நினைக்கிறேன்.
'என் பிள்ளையும், நீயும் எனக்கு ஒண்ணுதான். என் பிள்ளை மேல் வச்சிருக்கிற அன்பு, நிச்சயம் உன்கிட்டேயும் வெளிப்படும். என்னை உன் தாய் ஸ்தானத்தில் வச்சு கடைசி வரை பராமரிப்பியா பவித்ரா'ன்னு சொன்னாங்க...
''இன்னைக்கு வரைக்கும் அவங்க எனக்கு ஒரு அம்மாவாகத்தான் வாழ்ந்துட்டு இருக்காங்க. இதை நான் எதுக்கு உங்ககிட்ட சொல்றேன்னா, உங்கம்மாவோட மன நிலையும் இதே மாதிரி தான் இருக்கு. என் மகள், எங்கே உங்கள அவங்க கிட்டேயிருந்து பிரிச்சுடுவாளோன்னு பயப்படறாங்க. அதன் வெளிப்பாடு, அவகிட்டே கண்டிப்பையும், அதிகாரத்தை மட்டும் காட்டறாங்க. அது, அவ மனசிலே வெறுப்பை தான் வளர்க்கும்.
''காலையில லலிதா என்கிட்டே, உங்கம்மாவோட நடவடிக்கைக தன்னை கஷ்டப்படுத்தறதாவும் உங்ககிட்ட சொன்னா, நீங்க தப்பா எடுத்துப்பீங்களோன்னு பயப்படறதா சொன்னா...'' என்றாள் பவித்ரா.
''நீங்க சொல்றது எனக்கு புரியது அத்தை... அதான் கொஞ்ச நாளா முகம் வாடி, சோர்வா இருந்தாளா... எங்கம்மாவோட பயம் அர்த்தமில்லாததுன்னு அவங்களுக்கு நான் புரிய வைக்கிறேன்,''என்றான் குமார்.
''அது மட்டுமில்ல மாப்பிள்ள... அவங்க மனசு வருத்தப்படாம, நீங்க தான் நல்லபடியா அவங்களுக்கு எடுத்துச் சொல்லணும். மருமகள் கிட்ட காட்டுற அன்பும், பிரியமும் தான், மகன் அருகில் கடைசி வரை அவங்களை வச்சிருக்கும்கிறதை நீங்க தான் நல்லபடியா சொல்லணும்.
''உங்களை நம்பி வந்த உங்க மனைவியையும், சந்தோஷமா வச்சிக்கணும்; உங்க அம்மாவுக்கும் ஒரு நல்ல மகனா இருக்கணும்,'' என்றாள்.
தனக்கு புரியும்படி தெளிவாக பேசும் மாமியாரை பார்த்து, ''உங்க அணுகுமுறை எனக்கு ரொம்பவே பிடிச்சுருக்கு அத்தை. மாமியார் மேலே தப்பான அபிப்ராயத்தோடு வந்த மகளை, மேலும் அவ மனசை கெடுத்து, குடும்பத்தை பிரிக்க நினைக்காம, உள்ள நிலைமைய எனக்கு புரியும்படி அழகா எடுத்துச் சொன்னீங்க; ரொம்ப நன்றி. சாயந்திரம் நானே வீட்டுக்கு வந்து லலிதாவை கூட்டிட்டு போறேன்; இனி நிச்சயம் லலிதா இது மாதிரி புகாரோடு வர மாட்டா,'' என்றான் உறுதியுடன் குமார்.
ராஜ் பாலா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» உச்ச கட்ட பயத்தின் உளறல் என்பது....(ட்விட்டரில் ரசித்தவை)
» ஏழையின் வெளிப்பாடு!
» நட்பின் வெளிப்பாடு
» காதல் வெளிப்பாடு ....!
» அன்பின் வெளிப்பாடு
» ஏழையின் வெளிப்பாடு!
» நட்பின் வெளிப்பாடு
» காதல் வெளிப்பாடு ....!
» அன்பின் வெளிப்பாடு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|