புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 9 I_vote_lcapகுறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 9 I_voting_barகுறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 9 I_vote_rcap 
22 Posts - 51%
ayyasamy ram
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 9 I_vote_lcapகுறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 9 I_voting_barகுறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 9 I_vote_rcap 
17 Posts - 40%
mohamed nizamudeen
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 9 I_vote_lcapகுறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 9 I_voting_barகுறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 9 I_vote_rcap 
3 Posts - 7%
T.N.Balasubramanian
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 9 I_vote_lcapகுறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 9 I_voting_barகுறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 9 I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 9 I_vote_lcapகுறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 9 I_voting_barகுறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 9 I_vote_rcap 
22 Posts - 51%
ayyasamy ram
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 9 I_vote_lcapகுறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 9 I_voting_barகுறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 9 I_vote_rcap 
17 Posts - 40%
mohamed nizamudeen
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 9 I_vote_lcapகுறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 9 I_voting_barகுறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 9 I_vote_rcap 
3 Posts - 7%
T.N.Balasubramanian
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 9 I_vote_lcapகுறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 9 I_voting_barகுறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 9 I_vote_rcap 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறுந்தொகை.....தொடர் பதிவு !


   
   

Page 9 of 11 Previous  1, 2, 3 ... 8, 9, 10, 11  Next

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sat Aug 22, 2015 8:20 am

First topic message reminder :

அருளும் அன்பும் நீக்கித் துணை துறந்து
பொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின்,
உரவோர் உரவோர் ஆக
மடவம் ஆக மடந்தை நாமே.
                கோப்பெருஞ்சோழன்




shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Fri Oct 23, 2015 7:51 pm

M.Jagadeesan wrote:நற்றாய் : என் மகள் வீட்டிற்குச் சென்று வந்தாயே ; அங்கு என்மகள் எப்படி குடும்பம் நடத்துகிறாள் ?

செவிலித்தாய் : அடா ! அடா ! அந்தக் காட்சியைக் காணக் கண்கள் கொடுத்து வைத்திருக்கவேண்டும் . என்னே அன்பு ! என்னே அன்பு !

நற்றாய் : சரி ! சரி ! விஷயத்துக்கு வா ! சுற்றி வளைக்காதே ! நீ சென்ற சமயத்தில் அங்கு என்ன நடந்தது ?

செவிலித்தாய் :
அம்மா ! நான் சென்ற சமயத்தில் உன் மகள் அடுக்களையில் இருந்தாள் . கட்டித் தயிரை தன்னுடைய காந்தள் விரல்களால் பிசைந்து கொண்டிருந்தாள். புளிக்குழம்பு தயார்செய்து வைத்திருந்தாள் . அந்தக் குழம்பைத் தாளிக்கும்போது எழுந்த புகை மணமானது , குவளைபோன்ற அவளது கண்களைத் தாக்கியிருந்தது நன்றாகத் தெரிந்தது . அந்த சமயத்தில் அவளது கணவன் அங்கு வந்தான் . சாப்பாடு கொண்டுவரச் சொன்னான் . அவசரத்தில் உன்னுடைய மகள் தயிர் பிசைந்த தன் கைகளைச் சேலையில் துடைத்துக் கொண்டாள் . அந்த சுத்தம் செய்யாத ஆடையுடனேயே , தன் கணவனுக்குப் புளிக்குழம்பு சோறு பரிமாறினாள். அதை அவனோ “ ஆகா ! அற்புதம் ! என்ன சுவை ! என்ன சுவை !! “ என்று சொல்லி உண்டான் .
அதைக் கண்ட உன் மகளோ மெல்லச் சிரித்துத் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாள் .

167- முல்லை- செவித்தாய் கூற்று
**********************************************************

முளிதயிர்ப் பிசைந்த காந்தள் மெல்விரல்
கழுவுறு கலிங்கம் கழா அது உடீஇ
குவளை உண்கண் குய்ப்புகை கழுமத்
தான் துழந்து அட்ட தீம்புளிப் பாகர்
இனிது எனக் கணவன் உண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே .


-கூடலூர் கிழார் .
[You must be registered and logged in to see this link.]

நல்ல விளக்கம் அய்யா . அருமை . நன்றி .

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Wed Nov 25, 2015 3:49 pm

102. நெய்தல் _தலைவி கூற்று 

உள்ளின் உள்ளம் வேமே உள்ளாது 
இருப்பின் எம் அளவைத்து அன்றே வருத்தி 
காமம் தோய்வற்றே, காமம் 
சான்றோர் அல்லர், யாம் மரீஇஃயோரே. 

ஔவையார் 
என் தலைவனை நினைத்தால் 
உள்ளம் உவகை கொள்ளும்!! 

அவர் பிரிவை 
நினைத்தால் 
என்
உள்ளம் 
வெந்து நிற்கும்!! 

என் தலைவனை 
நினைக்காமல் 
இருந்தாலோ 
அது அதைவிட 
கொடியதாய் 
இருக்கும்!! 

என் தலைவனை 
நினைக்காமல் 
இருப்பது 
என் ஆற்றலுக்கு 
அப்பாற்பட்டதாக 
இருக்கும்!! 

காமத்தின் 
வருத்தமானது 
வானமதை 
தொட்டுவிடும் 
அளவாக 
இருக்கும்!! 

என்னால் 
நேசிக்கபட்டவரோ 
தான் 
சொன்ன நேரத்தில் 
வராமல் 
போனால் 
சால்பு உடையவர் 
அல்லர்!!



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Nov 28, 2015 3:25 pm

நல்லது சசி அவர்களே !
இவ்விதமாகக் குறுந்தொகையை நெடுந்தொகையாக மாற்றியுள்ளீர்கள் ! இதுதான் வளர்ச்சி என்பது !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 28, 2015 6:27 pm

குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 9 103459460 குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 9 3838410834
-

உள்ளின் உள்ளம் வேமே உள்ளாது
இருப்பின் எம் அளவைத்து அன்றே வருத்தி
காமம் தோய்வற்றே, காமம்
சான்றோர் அல்லர், யாம் மரீஇஃயோரே.

-
[You must be registered and logged in to see this image.]
-
சிறப்புக் குறிப்பு:
”என் துயரத்தை அறியாததால் அவர் அன்புடையவர் அல்லர்.
அவருடைய பிரிவு நீட்டித்தலால் என் உடலில் உண்டாகிய
வேறுபாடுகளையறிந்த ஊரார் தம்மைத் பழித்துரைப்பதைப்
பற்றிக் கவலைப்படாமல் இன்னும் பிரிந்தே இருப்பதால் அவர்
நாணமில்லாதவர்.

இல்லறத்தில் இருப்பவர்கள் தம் தலைவியருடன் இருந்து இன்புறும்
உலக வழக்கை மறந்ததால் அவர் ஒப்புரவு (உலகத்தார் போற்றும்
நல்லொழுக்கம்) இல்லாதவர்.

என் துயரத்தை நீக்க வாராததால் அவர் கண்ணோட்டம் இல்லாதவர்.

தாம் கூறிய காலத்தில் திரும்பி வராததால் அவர் வாய்மை உடையவர்
அல்லர்.

ஆகவே, அவர் அன்பு, நாணம், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை
என்ற சான்றாண்மைக்கு இன்றியமையாத ஐந்து பண்புகளும்
இல்லாதவர் ஆகையால் அவர் சான்றோர் அல்லர்.” என்று தலைவி
எண்ணுவதாகவும்,

“அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையோடு,
ஐந்துசால்பு ஊன்றிய தூண்”

-
(குறள், 983) என்ற குறள் இங்கு ஒப்பு நோக்கத் தக்கதாகவும்
உ. வே. சாமிநாத ஐயர் அவர்கள் தம் நூலில் கூறுகிறார்.
-
----------------------------

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sat Nov 28, 2015 9:04 pm

நன்றி திரு. சௌந்தர்ராஜன் ஐயா, நன்றி ராம் ஐயா, அருமையான விளக்கம் இதன் மூலம் தெரிந்து கொண்டேன்.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Jan 04, 2016 6:35 pm

32 குறிஞ்சி _தலைவன் கூற்று 

காலையும், பகலும், கையறு மாலையும், 
ஊர் துஞ்சு யாமமும், விடியலும், என்று இப் 
பொழுது இடை தெரியின், பொய்யே காமம் 
மா என மடலொடு மறுகில் தோன்றித் 
தெற்றெனத் தூற்றலும் பழியே 
வாழ்தலும் பழியே பிரிவு தலைவரினே. 

அள்ளூர் நன்முல்லையார் 

விளக்கம் ;

சூரியனின் ஒளிக்கற்றைகள் 
ஒவ்வொரு உயிரிலும் 
ஒளி வீசும் 
அழகிய காலை பொழுதும்! 

ஓய்வில்லாமல் உழைக்கும் 
உச்சிப்பொழுதும்! 

காதல் கொண்டவர்கள் 
கைப்பற்றி சேர இயலாத 
மாலைப் பொழுதும்! 

காதலில் வென்றவர்கள் 
வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள் 
உறங்கும் பொழுதும்! 

நிலவின் ஒளி விலகி 
சூரியனை வரவேற்கும் 
விடியற்காலை பொழுதும்! 

செவ்வி ஒருவரால் 
அறியப்படுமானால் 
அவர் கொண்ட காமம் 
உண்மையானதன்று! 

காதலியால் பிரிவு 
நேரிடுமாயின் 
பனைக்குதிரை உருவத்தின் மீது 
ஊர்ந்து வெளிப்பட்டு இவளால் 
இவன் இச்செயல் செய்தாள் 

என பலரும் அறிந்து 
என் காதலியை தூற்றுவதற்கு 
நான் இடம் தரேன்!! 

என் காதலியை பிரிந்து 
உயிரோடு வாழ்ந்தாலும் 
அது எனக்குப் பழியே!! 

தலைவியை ஊரார் முன் காட்டிக் கொடுக்க விரும்பாத தலைவன், அவளைப் பிரிந்து வாழமுடியாத தன் நிலையையும் இப்பாடல் மூலம் உணர்த்துகின்றான்.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Jan 04, 2016 9:20 pm

மா _குதிரை, இப்பாடலில் வரும் 
மடல் ஏறுதல் பற்றி இன்னும் விளக்கம் வேண்டும் ஐயா.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Wed Jan 13, 2016 9:13 pm

108 முல்லை _தலைவி கூற்று 

மழை விளையாடும் குன்று சேர் சிறுகுடிக் 
கறவை கன்றுவயின் படரப் புறவில் 
பாசிலை முல்லை ஆசு இல் வான் பூச் 
செவ் வான் செவ்வி கொண்டன்று 
உய்யேன் போல்வல் தோழி! யானே. 


வாயிலான் தேவனார் 

கார் மேகங்கள் 
மலை முகட்டில் 
கொஞ்சி விளையாடி 
உருவாகும் மழையினால் 
மண் அது மணம் 
கமழும் சிற்றூராம் அது!! 

அவ்வூரில் பசுக்கள் 
மேய்ச்சல் முடிந்து 
தம் அழகிய கன்றை 
நினைத்து மீளுகின்ற 
முல்லை நிலத்தில் 

பச்சை இலைகளையுடைய 
வெள்ளிய முல்லை மலர்கள் 
செவ்வானத்தின் அழகை 
உள்வாங்கி பிரதிபலிக்கும் 
காட்சி கண்கொள்ளா காட்சியாய் 
காணக் கிடைக்கும் 
கார் காலமும் வந்தது!! 

இவற்றை எல்லாம் 
காணும் யான் 
அழகிய கார்ப்பருவத்தில் 
மாலையில் மணாளன் 
இல்லாமல் இனி உயிர் வாழேன்!! 

தலைவி தோழியிடம் கூறியது.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sat Jan 16, 2016 12:47 pm

சசி wrote:102. நெய்தல் _தலைவி கூற்று 

உள்ளின் உள்ளம் வேமே உள்ளாது 
இருப்பின் எம் அளவைத்து அன்றே வருத்தி 
காமம் தோய்வற்றே, காமம் 
சான்றோர் அல்லர், யாம் மரீஇஃயோரே. 

ஔவையார் 
என் தலைவனை நினைத்தால் 
உள்ளம் உவகை கொள்ளும்!! 

அவர் பிரிவை 
நினைத்தால் 
என்
உள்ளம் 
வெந்து நிற்கும்!! 

என் தலைவனை 
நினைக்காமல் 
இருந்தாலோ 
அது அதைவிட 
கொடியதாய் 
இருக்கும்!! 

என் தலைவனை 
நினைக்காமல் 
இருப்பது 
என் ஆற்றலுக்கு 
அப்பாற்பட்டதாக 
இருக்கும்!! 

காமத்தின் 
வருத்தமானது 
வானமதை 
தொட்டுவிடும் 
அளவாக 
இருக்கும்!! 

என்னால் 
நேசிக்கபட்டவரோ 
தான் 
சொன்ன நேரத்தில் 
வராமல் 
போனால் 
சால்பு உடையவர் 
அல்லர்!!
[You must be registered and logged in to see this link.]

காமமும் கள்ளும் கலதி கட்கே ஆகும்
மா மலமும் சமயத்துள் மயல் உறும்
போ மதி ஆகும் புனிதன் இணை அடி
ஓமய ஆனந்தத் தேறல் உணர்வு உண்டே.---திருமந்திரம்






[You must be registered and logged in to see this link.]


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jan 16, 2016 1:01 pm

குறுந்தொகை விளக்கம் நன்று ! இடையில் என்னுடைய பணி விட்டுப் போய்விட்டது . இனி நானும் தொடர முடிவு செய்துள்ளேன் . தொடர்ந்து செய்துவரும் சசி அவர்களுக்கு நன்றி !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



Page 9 of 11 Previous  1, 2, 3 ... 8, 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக