ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரத்த தானம் ! ...by , கிருஷ்ணாம்மா !

+2
shobana sahas
krishnaamma
6 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

ரத்த தானம்  ! ...by , கிருஷ்ணாம்மா ! Empty ரத்த தானம் ! ...by , கிருஷ்ணாம்மா !

Post by krishnaamma Tue Aug 18, 2015 1:19 am

ரத்த தானம்  !

ஒரு அலுவலகத்தில் ரத்த தான முகாம் நடந்தது. பலபேர் அதில் கலந்து கொண்டு ரத்தம் கொடுத்தார்கள். சிலபேர் பயந்தார்கள். அதில் ராம்மும் ஒருவன். அவன் நண்பர்கள் எவ்வளவோ சொல்லியும் அவன் தனக்கு ரத்தத்தை பார்த்தால் மயக்கம் வரும், படபடப்பு வரும் என்று சொல்லி மறுத்து விட்டான்.

ஆனால், அவர்களுடன் வெளியே வந்து முகாம் நடக்கும் இடத்திக்கு அருகில் இருந்த பூங்காவில் அமர்ந்து கொண்டான். இவர்கள் எப்படி தைரியமாய் தருகிறார்கள் என்று இருந்தது அவனுக்கு. டிவி இல் கூட நிறைய விளம்பரங்கள் பார்த்திருந்தான், கொடுக்க ஆசை தான் ஆனால்........தயக்கமும் பயமும் மிக அதிகமாய் இருந்தது.

ஆனால் அவன் தன் கண்களை இன்ஷூர் செய்து இருந்தான். அது இறந்த பிறகு தானே எடுப்பார்கள் என்று ஜாலிஜாலிஜாலி

இப்படி எதையோ யோசித்துக்கொண்டு இருந்த போது  ஒரு சிறு பெண் இவன் அருகே வந்தாள்.

இவனின் கைகளை பார்த்த வாறே, "அங்கிள், நீங்க இன்னும் ரத்தம் தரலையா ?" என்றாள்...................
அவ்வளவு சிறிய பெண்ணிடம் தனக்கு பயம் என்று சொல்ல இவனுக்கு  சங்கடமாய் இருந்தது.

எனவே, இவன் பேச்சை மாற்றி, " ஹாய், நீ எப்படி இங்கே? " என்றான்.

"எங்க அப்பா தான் ஆர்கனைசர், நான் அவருடன் கூட வந்தேன். " என்றாள்.

மேற்கொண்டு என்ன சொல்வது என்று தெரியாமல் வெறுமன... . "ஒ " என்று மட்டும் கேட்டுக்கொண்டான்.

ஆனால் அவள் விடாமல், " நீங்க இன்னும் ரத்தம் தரலையா என்று கேட்டேனே".....என்றாள்..............

இவன் 'ஏதுடா இது வம்பாய் போச்சு'............என்று நினைத்து ...........என்ன பதில் சொல்வது என்று யோசித்தான், மீண்டும் பதில் சொல்வதற்குள் அந்த பெண் யாரையோ பார்த்து விட்டு , ' ஒரு நிமிஷம்" என்று இவனிடம் சொல்லி விட்டு ஓடினாள்.

மீண்டும் வந்தாள் இவனிடம்....அவள் கை இல் ஒரு சின்ன நோட்டு புத்தகம் இருந்தது, அதை பார்த்தவாறே வந்தாள் அவள்.

அவள் மீண்டும் கேட்பதற்கு முன், இவனே, " இங்கெல்லாம் வருகிறாயே உனக்கு பயமாய் இல்லை? " என்று கேட்டான். அவள் நிமிர்ந்து பார்த்து இவனிடம் தன் நோட்டை நீட்டினாள். பார்த்தால், அதில் நிறைய பேர் கையெழுத்து போட்டிருந்தார்கள். இவளை வாழ்த்தி இருந்தார்கள்...........

இவன் "என்ன இது?" என்று கேட்டான்.............

அதற்கு அந்த குட்டிப்பெண் சொன்னாள், "போன வருடம் எனக்கு ஒரு அக்சிடென்ட் ஆனது, நிறைய ரத்தம் போய்விட்டது, அப்போது பலபேர் கொடுத்த ரத்தம் தான் என்னை காப்பாற்றியது. அப்போதிலிருந்து தான் என் அப்பா, இது போல முகாம்கள் நடத்த துவங்கினார். நானும் அவருடன் வருவேன், யார் ரத்தம் கொடுத்தாலும் அவர்களிடம் ஒரு ஆட்டோகிராப் வாங்கிக்கொள்வேன்.

எனக்கு யார் கொடுத்தார்கள் என்று தெரியாது, ஆனால் அப்பா சொல்வார் 'இப்படி ரத்தம் கொடுப்பவர்கள் எல்லாமே மற்றவருக்கு  உயிர்  கொடுக்கும்  கடவுள்கள் தான்' என்று. அதனால் தான் நான் அவர்களிடம் சென்று நன்றி சொல்லி, ஆட்டோகிராப் ம் வாங்கி வைத்துக்கொள்கிறேன்.

நான் பெரியவளானதும் தொடர்ந்து கொடுப்பேன். இப்போ வெல்லாம் நாம்  ஒருமுறை ரத்தம் கொடுப்பதை வைத்து 3 பேரை காப்பாற்றுவார்களாம் அங்கிள்" என்று ரொம்ப பெரிய மனுஷி போல பேசினாள் அவள்.

"உங்களுக்குத்தெரியுமா, ஒரு ஆஸ்திரேலியா தாத்தா, இப்படி ரத்தம் கொடுத்து கொடுத்து 20 லக்ஷம்
பேரை காப்பாத்தி இருக்காராம்..............அவர் தான் பூலோக பிரும்மா என்று அப்பா சொன்னார்.....பேப்பரில் வந்ததாம், நீங்க பாக்கலையா? "

மேலும் சொன்னாள் , "நீங்கள் பேசியதை  நான் கேட்டுவிட்டேன் அங்கிள், சாரி , ஆனால் ஒரு பயமும் இல்லை , அப்படியே பயம் என்றாலும் நீங்க ரத்தத்தை பார்க்காதீங்க , நான் உங்க பக்கத்தில் இருக்கேன், வாருங்கள்"  என்று அன்பாய் அவன் கையை பிடித்து இழுத்தாள்.

அந்த சின்ன பெண்ணின் பேச்சை மீற முடியாமல், மந்திரத்துக்கு கட்டுப்பட்டவன் போல,  அவளை பின் தொடர்ந்தான் அவன். அவள் உள்ளே அழைத்து சென்று அவனை படுக்க வைத்தாள் . கூடவே  நின்று கொண்டாள். அவள் தந்தை அவளை பார்த்ததும், " நீ ஏன் உள்ளே வந்தாய் அம்மா?" என்றார்.

இவள் உடனே, "இல்லப்பா, இந்த  அங்கிள் சிக்கிரம் போகணுமாம், அங்கு ஒரே கூட்டம் என்று நான் தான் முதலில்  இவருக்கு ரத்தம் எடுக்க இங்கு கூட்டி வந்தேன் " என்றாள்.

"ஒ...அப்படியா.............சரி சரி, ஒரு நிமிடம் சார்" என்று சொல்லி அவர் யாரையோ கூப்பிட்டு ராம் ஐ கவனிக்க சொன்னார். ராமை பார்த்து கண்களை சிமிட்டி சிரித்தாள், தான் சொன்ன படிக்கு அந்த குட்டிப் பெண் ராமுடனேயே நின்று கொண்டாள்.

நர்ஸ் ஊசி போடும்போது, ஒரு எறும்பு கடித்தது போல உணர்ந்தான் ராம். அவ்வளவு தான். 'ச்சே !  இதற்காகவா  இத்தனை நாளும் பயந்தேன்'  என்று நினைத்துக்கொண்டான்.  

அவன் மீண்டும் வெளியே வரும் போது  தன்னை ஒரு புது மனிதனாய் உணர்ந்தான். இறந்த பிறகு நாம் யாருக்கு பயன் பட்டோம் என்று நமக்கு தெரியாது, ஆனால் இப்போது நாம் உயீருடன்  இருக்கும் போதே உதவுவது என்பது சொல்ல வொண்ணாத நிம்மதி தருவதை முதன் முதலில் உணர்ந்தான்.
இனி கண்டிப்பாக தொடர்ந்து ரத்த தானம் செய்யணும் என்று  முடிவு செய்து கொண்டான்.

அதற்கு காரணமாய் இருந்த அந்த சிறுமியை நன்றியுடன் பார்த்தான். அவள் இவனிடம் தன் ஆட்டோகிராப் நோட்டை நீட்டும் போது இவன் சொன்னான், " நீ தான் மா எனக்கு போட்டுத் தரணும் " என்று.

அப்போது அங்கு வந்த இவன் நண்பர்கள் இவன் கையை பார்த்துவிட்டு, " எப்படிடா?  அதுவும் எங்களுக்கு முன்னாடியே கொடுத்துவிட்டாய் " ? என்று ஆச்சர்யமாய் கேட்டார்கள். அவன் அவளை காட்டினான் புன்னகை

இந்த விளம்பரமும் ஏனோ அவன் கண் முன்னே நிழலாடியது புன்னகை



by  ,
கிருஷ்ணாம்மா புன்னகை


Last edited by krishnaamma on Tue Aug 18, 2015 9:45 am; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ரத்த தானம்  ! ...by , கிருஷ்ணாம்மா ! Empty Re: ரத்த தானம் ! ...by , கிருஷ்ணாம்மா !

Post by shobana sahas Tue Aug 18, 2015 1:24 am

அருமையான கதை க்ரிஷ்ணாம்மா . வாழ்த்துக்கள் .. வி பொ பா . அம்மா . ரத்த தானம்  ! ...by , கிருஷ்ணாம்மா ! 3838410834 ரத்த தானம்  ! ...by , கிருஷ்ணாம்மா ! 103459460 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

ரத்த தானம்  ! ...by , கிருஷ்ணாம்மா ! Empty Re: ரத்த தானம் ! ...by , கிருஷ்ணாம்மா !

Post by krishnaamma Tue Aug 18, 2015 1:26 am

shobana sahas wrote:அருமையான கதை க்ரிஷ்ணாம்மா . வாழ்த்துக்கள் .. வி பொ பா . அம்மா . ரத்த தானம்  ! ...by , கிருஷ்ணாம்மா ! 3838410834 ரத்த தானம்  ! ...by , கிருஷ்ணாம்மா ! 103459460 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1157924

நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் ...................நன்றி ஷோபனா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ரத்த தானம்  ! ...by , கிருஷ்ணாம்மா ! Empty Re: ரத்த தானம் ! ...by , கிருஷ்ணாம்மா !

Post by krishnaamma Tue Aug 18, 2015 9:47 am

//"உங்களுக்குத்தெரியுமா, ஒரு ஆஸ்திரேலியா தாத்தா, இப்படி ரத்தம் கொடுத்து கொடுத்து 20 லக்ஷம் பேரை காப்பாத்தி இருக்காராம்..............அவர் தான் பூலோக பிரும்மா என்று அப்பா சொன்னார்.....பேப்பரில் வந்ததாம், நீங்க பாக்கலையா? "//

இந்த வரிகளை இப்போது இணைத்தேன் ஷோபனா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ரத்த தானம்  ! ...by , கிருஷ்ணாம்மா ! Empty Re: ரத்த தானம் ! ...by , கிருஷ்ணாம்மா !

Post by ஜாஹீதாபானு Tue Aug 18, 2015 4:05 pm

ரத்த தானத்தை வலியுறுத்தும் நல்ல கதை பகிர்வுக்கு நன்றிமா


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ரத்த தானம்  ! ...by , கிருஷ்ணாம்மா ! Empty Re: ரத்த தானம் ! ...by , கிருஷ்ணாம்மா !

Post by T.N.Balasubramanian Tue Aug 18, 2015 8:38 pm

நல்ல கதை .
ரத்த தானத்தை உக்குவிக்கும் கதை .

இருப்பினும் ,உதைக்கும் ஒரே விஷயம் ,இடை செருகல் , 20 லக்ஷம் உயிர் காப்பாற்றப்பட்டது ஒருவரின் ரத்த தானத்தால் !

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ரத்த தானம்  ! ...by , கிருஷ்ணாம்மா ! Empty Re: ரத்த தானம் ! ...by , கிருஷ்ணாம்மா !

Post by krishnaamma Tue Aug 18, 2015 11:32 pm

நன்றி பானு, நன்றி ஐயா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ரத்த தானம்  ! ...by , கிருஷ்ணாம்மா ! Empty Re: ரத்த தானம் ! ...by , கிருஷ்ணாம்மா !

Post by விஸ்வாஜீ Wed Aug 19, 2015 12:42 pm

நல்ல பதிவு நான் இதுவரை கொடுத்ததில்லை அம்மா இங்கு எங்கள்
ஏரியாவில் இதுவரை இந்த முகாம் நடந்ததில்லை இனி அதற்காக
முயற்சிக்கிறேன் அம்மா
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

ரத்த தானம்  ! ...by , கிருஷ்ணாம்மா ! Empty Re: ரத்த தானம் ! ...by , கிருஷ்ணாம்மா !

Post by சசி Wed Aug 19, 2015 1:49 pm


விஸ்வாஜீ wrote:நல்ல பதிவு நான் இதுவரை கொடுத்ததில்லை அம்மா இங்கு எங்கள்
ஏரியாவில் இதுவரை இந்த முகாம் நடந்ததில்லை இனி அதற்காக
முயற்சிக்கிறேன் அம்மா
மேற்கோள் செய்த பதிவு: 1158061 இரத்த தானம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்து விட்டால்,அனைத்து
தாலுகா மருத்துவமனை மற்றும்
மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு தலைமை மருத்துவமனை,
அரசு அங்கீகாரம் பெற்ற இரத்த வங்கியில் எப்பொழுது வேண்டுமானாலும் இரத்த தானம் செய்யலாம்.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

ரத்த தானம்  ! ...by , கிருஷ்ணாம்மா ! Empty Re: ரத்த தானம் ! ...by , கிருஷ்ணாம்மா !

Post by சசி Wed Aug 19, 2015 1:51 pm

உங்கள் பதிவுக்கு நன்றி அம்மா


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

ரத்த தானம்  ! ...by , கிருஷ்ணாம்மா ! Empty Re: ரத்த தானம் ! ...by , கிருஷ்ணாம்மா !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum