Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
குட்டி நாடுகள் – ஒரு சுவாரஸ்ய தொகுப்பு 10
3 posters
Page 1 of 1
குட்டி நாடுகள் – ஒரு சுவாரஸ்ய தொகுப்பு 10
உலகில் மிகப்பெரிய நாடுகள், உலக அதிசயங்கள்
என வியந்து போற்றியவைகளில் குட்டி நாடுகளும்
சேர்ந்து கொள்கின்றன.
இங்கே நாம் சில குட்டி நாடுகளைப் பார்க்கப் போகிறோம்.
அவற்றைப் பற்றிய தகவல்கள் வெகு சுவாரஸ்யம்.
-
---------------------
-
மொனாக்கோ
-
மொனாக்கோ (Monaco) என்பது ஐரோப்பாவில் பிரெஞ்சு
ரிவியேராவில் பிரான்ஸ் நாட்டுக்கு தென்கிழக்கில் உள்ள
ஒரு தன்னாட்சி கொண்ட நாடு.
இதன் பரப்பளவு 4 சதுர மைல் மட்டுமே! 2001ம் ஆண்டு
கணக்கெடுப்பின்படி மக்கள்தொகை 36,000.
-
இங்கு செல்வந்தர்கள் அதிகம். இந்த குட்டி தேசம் உலகின்
அதிக மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் (GDP $215,163)
கொண்டுள்ளது. தனி நபர் வாழ்வுக்காலம் 90 ஆண்டுகள்.
நாட்டின் தலைவர் இளவரசர் இரண்டாம் ஆல்பர்ட்.
-
1297ம் ஆண்டில் இருந்து மொனாக்கோ கிரிமால்டி
குடும்பத்தினரின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வருகிறது.
1861ம் ஆண்டில் பிரான்சுடன் ஏற்பட்ட உடன்பாட்டை அ
டுத்து இது சுயாட்சி கொண்ட நாடாக அங்கீகரிக்கப்பட்டது.
-
கிரிமால்டி வம்சத்தினரே இதனை ஆண்டு வருகின்றனர்.
மொனாக்கோ தனி நாடாக இருந்தாலும், இதன் பாதுகாப்பு
பிரான்சின் பொறுப்பில் உள்ளது. வெளிநாட்டுக் கொள்கையை
மொனாக்கோவே கவனித்துக் கொள்கிறது. இந்நாட்டின் முக்கிய
தொழில் சுற்றுலா. இங்கு பரவலாக பேசப்படுவது பிரெஞ்சு.
-
என வியந்து போற்றியவைகளில் குட்டி நாடுகளும்
சேர்ந்து கொள்கின்றன.
இங்கே நாம் சில குட்டி நாடுகளைப் பார்க்கப் போகிறோம்.
அவற்றைப் பற்றிய தகவல்கள் வெகு சுவாரஸ்யம்.
-
---------------------
-
மொனாக்கோ
-
மொனாக்கோ (Monaco) என்பது ஐரோப்பாவில் பிரெஞ்சு
ரிவியேராவில் பிரான்ஸ் நாட்டுக்கு தென்கிழக்கில் உள்ள
ஒரு தன்னாட்சி கொண்ட நாடு.
இதன் பரப்பளவு 4 சதுர மைல் மட்டுமே! 2001ம் ஆண்டு
கணக்கெடுப்பின்படி மக்கள்தொகை 36,000.
-
இங்கு செல்வந்தர்கள் அதிகம். இந்த குட்டி தேசம் உலகின்
அதிக மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் (GDP $215,163)
கொண்டுள்ளது. தனி நபர் வாழ்வுக்காலம் 90 ஆண்டுகள்.
நாட்டின் தலைவர் இளவரசர் இரண்டாம் ஆல்பர்ட்.
-
1297ம் ஆண்டில் இருந்து மொனாக்கோ கிரிமால்டி
குடும்பத்தினரின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வருகிறது.
1861ம் ஆண்டில் பிரான்சுடன் ஏற்பட்ட உடன்பாட்டை அ
டுத்து இது சுயாட்சி கொண்ட நாடாக அங்கீகரிக்கப்பட்டது.
-
கிரிமால்டி வம்சத்தினரே இதனை ஆண்டு வருகின்றனர்.
மொனாக்கோ தனி நாடாக இருந்தாலும், இதன் பாதுகாப்பு
பிரான்சின் பொறுப்பில் உள்ளது. வெளிநாட்டுக் கொள்கையை
மொனாக்கோவே கவனித்துக் கொள்கிறது. இந்நாட்டின் முக்கிய
தொழில் சுற்றுலா. இங்கு பரவலாக பேசப்படுவது பிரெஞ்சு.
-
Re: குட்டி நாடுகள் – ஒரு சுவாரஸ்ய தொகுப்பு 10
-
துவாலு
-
துவாலு (Tuvalu) என்பது தெற்கு பசிபிக் கடலில் கில்பர்ட் தீவிற்கும்
ஆஸ்திரேலியாவிற்கும் நடுவில் உள்ள தீவு நாடு.
இது முன்னர் எலீஸ் தீவுகள் என அழைக்கப்பட்டது. இதன் அயல்
நாடுகளாக கிரிபட்டி, சமோவா மற்றும் ஃபிஜி ஆகியன அமைந்துள்ளன.
-
துவாலுவில் மொத்தம் நான்கு தீவுகள் உள்ளன.
மொத்தப் பரப்பளவு 26 சதுர கி.மீ. உலகின் 2வது மிகக் குறைந்த
மக்கள் தொகையைக் கொண்ட நாடு இது. மக்கள் தொகை 7000.
முக்கியத் தொழில் மீன் பண்ணை. இந்நாடு ஐ.நா அவையிலும்
உறுப்பினராக உள்ளது. உலகின் நான்காவது மிகச்சிறிய நாடு இது.
-
இந்நாட்டு மக்களின் முன்னோர்கள் பாலினேசியர்கள்.
19ம் நூற்றாண்டின் இறுதியில் இத்தீவுகள் பிரிட்டிஷ் குடியேற்ற
நாடாகின. 1978ம் ஆண்டு முதல் துவாலு தனி நாடாக
அங்கீகரிக்கப்பட்டது.
-
Re: குட்டி நாடுகள் – ஒரு சுவாரஸ்ய தொகுப்பு 10
மாலத்தீவுகள்
-
இது இந்தியப் பெருங்கடலில் உள்ள பல சிறிய தீவுகள்
சேர்ந்த ஒரு குட்டி நாடாகும். இது இந்தியாவின்
லட்சத்தீவுகளுக்கு தெற்கேயும் இலங்கையிலிருந்து சுமார்
700 கிமீ தென் மேற்காகவும் உள்ளது.
இத்தீவின் மக்கள் தொகை சுமார் 3 லட்சம். 1,192 தீவுகள்
கொண்ட மாலத்தீவுத் தொடரில் 200 தீவுகளில் மட்டுமே
மக்கள் வசிக்கிறார்கள். இவற்றில் 26 பவளப்பாறைகளால்
உருவான தீவுகள். இவை மாலைபோல் காணப்படுவதால்
மாலைத் தீவுகள் என்று அழைத்தார்கள். காலப்போக்கில்
அதுவே ‘மாலத்தீவுகள்’ என்றானது.
-
நமது சோழ மன்னர்கள் காலத்தில் அவர்களின் ஆளுகைக்கு
உட்பட்ட தீவுக்கூட்டமாக இது இருந்தது.
பிறகு 1558ல் போர்த்துக்கீசியரிடமும் 1654ம் ஆண்டில்
டச்சுக்காரர்களிடமும் 1887 முதல் பிரிட்டிஷாரிடமும் அடிமைப்
பட்டது. 1965ம் ஆண்டு இது விடுதலை பெற்றது.
1968ல் சுல்தான் ஆட்சியில் குடியரசாக மாறியது. அடிக்கடி ஆட்சி
மாற்றங்களும் போராட்டங்களும் நடைபெறும் மாலத் தீவுகளுக்கு
பெரும் வருமானம் ஈட்டித் தருவது சுற்றுலாத் தொழில்தான்.
-
-
இது இந்தியப் பெருங்கடலில் உள்ள பல சிறிய தீவுகள்
சேர்ந்த ஒரு குட்டி நாடாகும். இது இந்தியாவின்
லட்சத்தீவுகளுக்கு தெற்கேயும் இலங்கையிலிருந்து சுமார்
700 கிமீ தென் மேற்காகவும் உள்ளது.
இத்தீவின் மக்கள் தொகை சுமார் 3 லட்சம். 1,192 தீவுகள்
கொண்ட மாலத்தீவுத் தொடரில் 200 தீவுகளில் மட்டுமே
மக்கள் வசிக்கிறார்கள். இவற்றில் 26 பவளப்பாறைகளால்
உருவான தீவுகள். இவை மாலைபோல் காணப்படுவதால்
மாலைத் தீவுகள் என்று அழைத்தார்கள். காலப்போக்கில்
அதுவே ‘மாலத்தீவுகள்’ என்றானது.
-
நமது சோழ மன்னர்கள் காலத்தில் அவர்களின் ஆளுகைக்கு
உட்பட்ட தீவுக்கூட்டமாக இது இருந்தது.
பிறகு 1558ல் போர்த்துக்கீசியரிடமும் 1654ம் ஆண்டில்
டச்சுக்காரர்களிடமும் 1887 முதல் பிரிட்டிஷாரிடமும் அடிமைப்
பட்டது. 1965ம் ஆண்டு இது விடுதலை பெற்றது.
1968ல் சுல்தான் ஆட்சியில் குடியரசாக மாறியது. அடிக்கடி ஆட்சி
மாற்றங்களும் போராட்டங்களும் நடைபெறும் மாலத் தீவுகளுக்கு
பெரும் வருமானம் ஈட்டித் தருவது சுற்றுலாத் தொழில்தான்.
-
Re: குட்டி நாடுகள் – ஒரு சுவாரஸ்ய தொகுப்பு 10
லீச்டென்ஸ்டீன்
-
இது ஜெர்மனுக்கும் பிரான்ஸுக்கும் இடையில் உள்ள நாடு.
இதன் பரப்பளவு 160.4 சதுர கிலோ மீட்டர். மேற்கே
சுவிட்ஸர்லாந்து மற்றும் கிழக்கே ஆஸ்திரியா ஆகிய நாடுகள்
இதன் எல்லைகளாக உள்ளன. ஆட்சி மொழி ஜெர்மன்.
-
எல்லையாக நான்கு புறமும் நிலத்தால் சூழப்பட்ட ஒரே
ஐரோப்பிய நாடு இதுவே. இங்கு வேலையில்லாத் திண்டாட்டமே
கிடையாது. வரிகளும் மிகக் குறைவு.
-
-
இது ஜெர்மனுக்கும் பிரான்ஸுக்கும் இடையில் உள்ள நாடு.
இதன் பரப்பளவு 160.4 சதுர கிலோ மீட்டர். மேற்கே
சுவிட்ஸர்லாந்து மற்றும் கிழக்கே ஆஸ்திரியா ஆகிய நாடுகள்
இதன் எல்லைகளாக உள்ளன. ஆட்சி மொழி ஜெர்மன்.
-
எல்லையாக நான்கு புறமும் நிலத்தால் சூழப்பட்ட ஒரே
ஐரோப்பிய நாடு இதுவே. இங்கு வேலையில்லாத் திண்டாட்டமே
கிடையாது. வரிகளும் மிகக் குறைவு.
-
Re: குட்டி நாடுகள் – ஒரு சுவாரஸ்ய தொகுப்பு 10
நவுரூ
-
ஆஸ்திரேலியாவுக்குக் கிழக்கே உள்ளது நவுரூ தீவு.
இதை இனிமையான தீவு என்கிறார்கள். இதன் பரப்பளவு
21 சதுர கிலோ மீட்டர். 1798ல் ஜான் பியர்ம் என்பவரால்
இந்த நாடு கண்டுபிடிக்கப்பட்டது.
-
இதன் மக்கள்தொகை 12 ஆயிரம். நவுரூ நாட்டில் 21 இனங்கள்
வாழ்ந்ததன் அடையாளமாக அவர்களின் தேசியக் கொடியில்
21 நட்சத்திரங்கள் உள்ளன. இரண்டாம் உலகப்போரில்
ஜப்பான் நவுரூவைக் கைப்பற்றியிருந்தது.
-
1945ல் ஆஸ்திரேலியா ஜப்பானியர்களை விரட்டி நவுரூவை
தனி நாடாக உருவாக்கினர். நவுரூவுக்கு 1968ல் தான் விடுதலை
கிடைத்தது. ஒருகாலத்தில் பாஸ்பரஸை ஆஸ்திரேலியா,
நியூசிலாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து
வளமாக இருந்த இந்த தேசம் இப்போது கடும் வேலையில்லாத்
திண்டாட்டத்தில் வாடுகிறது.
-
——–
– ராஜிராதா, பெங்களூரு
.நன்றி- முத்தாரம்
-
ஆஸ்திரேலியாவுக்குக் கிழக்கே உள்ளது நவுரூ தீவு.
இதை இனிமையான தீவு என்கிறார்கள். இதன் பரப்பளவு
21 சதுர கிலோ மீட்டர். 1798ல் ஜான் பியர்ம் என்பவரால்
இந்த நாடு கண்டுபிடிக்கப்பட்டது.
-
இதன் மக்கள்தொகை 12 ஆயிரம். நவுரூ நாட்டில் 21 இனங்கள்
வாழ்ந்ததன் அடையாளமாக அவர்களின் தேசியக் கொடியில்
21 நட்சத்திரங்கள் உள்ளன. இரண்டாம் உலகப்போரில்
ஜப்பான் நவுரூவைக் கைப்பற்றியிருந்தது.
-
1945ல் ஆஸ்திரேலியா ஜப்பானியர்களை விரட்டி நவுரூவை
தனி நாடாக உருவாக்கினர். நவுரூவுக்கு 1968ல் தான் விடுதலை
கிடைத்தது. ஒருகாலத்தில் பாஸ்பரஸை ஆஸ்திரேலியா,
நியூசிலாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து
வளமாக இருந்த இந்த தேசம் இப்போது கடும் வேலையில்லாத்
திண்டாட்டத்தில் வாடுகிறது.
-
——–
– ராஜிராதா, பெங்களூரு
.நன்றி- முத்தாரம்
Re: குட்டி நாடுகள் – ஒரு சுவாரஸ்ய தொகுப்பு 10
அருமையான தகவல்கள் .
நன்றி ram /ராஜிராதா
ரமணியன்
நன்றி ram /ராஜிராதா
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
உலகிலேயே மிகக் குட்டியான நாடு இதுதான்....
நீங்கள் படங்களில் பார்த்துக் கொண்டிருக்கும் இந்த இடம் என்ன தெரியுமா? கடலின் நட்ட நடுவில் உள்ள பழைய கட்டிடம் என்றுதானே நினைக்கிறீர்கள். அதுதான் இல்லை; இது ஒரு நாடு. உலகின் மிகவும் குட்டி நாடு. இதன் பெயர் சீலேண்ட். ஆச்சரியமாக இருக்கிறதா? இந்தக் குட்டி நாட்டைப் பற்றிப் படிக்கப் படிக்க இன்னும் விந்தையாக இருக்கும்.
இங்கிலாந்து நாட்டின் வட பகுதியில் எஸக்ஸ் என்ற இடத்திலிருந்து கடலில் 13 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இந்த நாடு. இரண்டாம் உலகப் போர் பற்றிப் பாடப் புத்தகங்களில் படித்திருக்கிறீர்கள் அல்லவா?
அப்படி அந்தப் போர் தொடங்கியபோது 1942-ம் ஆண்டில் பிரிட்டிஷ் அரசு கடலில் குட்டித் துறைமுகத்தைக் கட்டியது. கடலில் இரும்பு மற்றும் வலுவான கான்கிரீட்டைப் பயன்படுத்தி இந்த துறைமுகத்தைக் கட்டியிருக்கிறார்கள். போரில் பயன்படுத்தப்பட்ட கப்பல்களுக்கு எரிபொருள் போடுவதற்காக இதைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
போர் முடிவடைந்த பிறகும் 1956-ம் ஆண்டு வரை ரப் டவர் எனப் பெயரிட்டு இந்தத் துறைமுகத்தைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். பின்னர் இந்த இடத்தை அப்படியே விட்டுவிட்டார்கள் ஆங்கிலேயர்கள். 1967-ம் ஆண்டில் இந்த இடத்துக்கு பேட்டி ராய் பேட்ஸ் என்பவர் தனது குடும்பத்துடன் இந்தத் துறைமுகத்துக்குப் போய்த் தங்கிவிட்டார்.
இவர் முன்னாள் ராணுவ அதிகாரியாக இருந்தவர். இங்கு வந்த பேட்ஸ், ‘பிரின்ஸிபாலிட்டி ஆஃப் சீலேண்ட்’ என்று அந்த இடத்துக்குப் பெயரை வைத்தார். அங்கிருந்து ராய் பேட்ஸை அனுப்பப் பிரிட்டிஷ் அதிகாரிகள் நிறைய முயற்சி செய்தார்கள். ஆனால், அவரை அங்கிருந்து அனுப்ப முடியவில்லை.
இந்த விவகாரம் நீதிமன்றத்துக்குப் போனது. ஆனால், இந்தத் துறைமுகம் இங்கிலாந்து நாட்டு கடல் எல்லைக்கு வெளியே இருப்பதால், வழக்கை நடத்த முடியாது என்று நீதிமன்றம் கூறியது. இதன்பிறகு ராய் பேட்ஸ் 1975-ம் ஆண்டில் சீலேண்டை தனி நாடாக அறிவித்தார். இந்த நாட்டுக்கென்று தனியாகக் கொடி, தேசியக் கீதம், பணம், பாஸ்போர்ட் என்று ஒரு நாட்டில் என்னவெல்லாம் இருக்குமோ எல்லாவற்றையும் பேட்ஸ் அறிமுகப்படுத்தினார்.
கடலுக்குள்ள ஒரு குட்டி கட்டிடத்தில்தான் இந்த நாடே இருக்கிறது. ஒரு முறை பேட்ஸூம் அவரது குடும்பத்தினரும் இங்கிலாந்துக்குப் போனபோது, ஜெர்மனி, போர்ச்சுகல் கொள்ளையர்கள் இந்த நாட்டை ஆக்கிரமிப்பு செய்துவிட்டார்கள். பேட்ஸூம், அவரது மகன் மைக்கேலும் ஆயுதங்களைப் பயன்படுத்திக் கொள்ளையர்களை விரட்டினார்கள்.
1987-ம் வருடத்தில் பிரிட்டிஷ் அரசு கடல் எல்லைப் பரப்பை 22 கிலோ மீட்டராக அதிகரித்து, சீலேண்டை அவர்களுடைய கட்டுபாட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்தார்கள். ஆனாலும் முடியவில்லை. சீலேண்டின் இளவரசராக ராய் பேட்ஸ் செயல்பட்டு நிர்வாகமும் செய்து வந்தார்.
மூன்று வருடங்களுக்கு முன்பு பேட்ஸ் நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டார். அப்போது முதல் சீலேண்ட் நாட்டின் இளவரசராகப் பேட்ஸின் மகன் மைக்கேல் இருந்து வருகிறார். தற்போது இவர்களது குடும்பத்தினர் உட்பட 50 பேர் இங்கு வாழ்ந்து வருகிறார்கள். இந்தக் குட்டிக் கட்டிடத்தில் 30 அறைகள் உள்ளன. கடலுக்குள் இருப்பதால் தேவையான நீரை அவர்களே உற்பத்தி செய்து கொள்கிறார்கள்.
ஞாபகச் சின்னங்கள் போன்றவற்றை இணையதளத்தில் விற்பனை செய்து பணம் சம்பாதிக்கிறார்கள். இந்த நாட்டுக்கு வெளி நாட்டுக்காரர்கள் யாராவது வர வேண்டுமென்றால் பாஸ்போர்ட், விசா எடுத்துக்கொண்டுதான் வர வேண்டும்.
இங்கிலாந்து நாட்டின் வட பகுதியில் எஸக்ஸ் என்ற இடத்திலிருந்து கடலில் 13 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இந்த நாடு. இரண்டாம் உலகப் போர் பற்றிப் பாடப் புத்தகங்களில் படித்திருக்கிறீர்கள் அல்லவா?
அப்படி அந்தப் போர் தொடங்கியபோது 1942-ம் ஆண்டில் பிரிட்டிஷ் அரசு கடலில் குட்டித் துறைமுகத்தைக் கட்டியது. கடலில் இரும்பு மற்றும் வலுவான கான்கிரீட்டைப் பயன்படுத்தி இந்த துறைமுகத்தைக் கட்டியிருக்கிறார்கள். போரில் பயன்படுத்தப்பட்ட கப்பல்களுக்கு எரிபொருள் போடுவதற்காக இதைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
போர் முடிவடைந்த பிறகும் 1956-ம் ஆண்டு வரை ரப் டவர் எனப் பெயரிட்டு இந்தத் துறைமுகத்தைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். பின்னர் இந்த இடத்தை அப்படியே விட்டுவிட்டார்கள் ஆங்கிலேயர்கள். 1967-ம் ஆண்டில் இந்த இடத்துக்கு பேட்டி ராய் பேட்ஸ் என்பவர் தனது குடும்பத்துடன் இந்தத் துறைமுகத்துக்குப் போய்த் தங்கிவிட்டார்.
இவர் முன்னாள் ராணுவ அதிகாரியாக இருந்தவர். இங்கு வந்த பேட்ஸ், ‘பிரின்ஸிபாலிட்டி ஆஃப் சீலேண்ட்’ என்று அந்த இடத்துக்குப் பெயரை வைத்தார். அங்கிருந்து ராய் பேட்ஸை அனுப்பப் பிரிட்டிஷ் அதிகாரிகள் நிறைய முயற்சி செய்தார்கள். ஆனால், அவரை அங்கிருந்து அனுப்ப முடியவில்லை.
இந்த விவகாரம் நீதிமன்றத்துக்குப் போனது. ஆனால், இந்தத் துறைமுகம் இங்கிலாந்து நாட்டு கடல் எல்லைக்கு வெளியே இருப்பதால், வழக்கை நடத்த முடியாது என்று நீதிமன்றம் கூறியது. இதன்பிறகு ராய் பேட்ஸ் 1975-ம் ஆண்டில் சீலேண்டை தனி நாடாக அறிவித்தார். இந்த நாட்டுக்கென்று தனியாகக் கொடி, தேசியக் கீதம், பணம், பாஸ்போர்ட் என்று ஒரு நாட்டில் என்னவெல்லாம் இருக்குமோ எல்லாவற்றையும் பேட்ஸ் அறிமுகப்படுத்தினார்.
கடலுக்குள்ள ஒரு குட்டி கட்டிடத்தில்தான் இந்த நாடே இருக்கிறது. ஒரு முறை பேட்ஸூம் அவரது குடும்பத்தினரும் இங்கிலாந்துக்குப் போனபோது, ஜெர்மனி, போர்ச்சுகல் கொள்ளையர்கள் இந்த நாட்டை ஆக்கிரமிப்பு செய்துவிட்டார்கள். பேட்ஸூம், அவரது மகன் மைக்கேலும் ஆயுதங்களைப் பயன்படுத்திக் கொள்ளையர்களை விரட்டினார்கள்.
1987-ம் வருடத்தில் பிரிட்டிஷ் அரசு கடல் எல்லைப் பரப்பை 22 கிலோ மீட்டராக அதிகரித்து, சீலேண்டை அவர்களுடைய கட்டுபாட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்தார்கள். ஆனாலும் முடியவில்லை. சீலேண்டின் இளவரசராக ராய் பேட்ஸ் செயல்பட்டு நிர்வாகமும் செய்து வந்தார்.
மூன்று வருடங்களுக்கு முன்பு பேட்ஸ் நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டார். அப்போது முதல் சீலேண்ட் நாட்டின் இளவரசராகப் பேட்ஸின் மகன் மைக்கேல் இருந்து வருகிறார். தற்போது இவர்களது குடும்பத்தினர் உட்பட 50 பேர் இங்கு வாழ்ந்து வருகிறார்கள். இந்தக் குட்டிக் கட்டிடத்தில் 30 அறைகள் உள்ளன. கடலுக்குள் இருப்பதால் தேவையான நீரை அவர்களே உற்பத்தி செய்து கொள்கிறார்கள்.
ஞாபகச் சின்னங்கள் போன்றவற்றை இணையதளத்தில் விற்பனை செய்து பணம் சம்பாதிக்கிறார்கள். இந்த நாட்டுக்கு வெளி நாட்டுக்காரர்கள் யாராவது வர வேண்டுமென்றால் பாஸ்போர்ட், விசா எடுத்துக்கொண்டுதான் வர வேண்டும்.
சங்கர்.ப
சங்கர்.ப- பண்பாளர்
- பதிவுகள் : 60
இணைந்தது : 21/07/2015
Re: குட்டி நாடுகள் – ஒரு சுவாரஸ்ய தொகுப்பு 10
ஆச்சர்யமாக இருக்கிறது .
இவர்களின் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான பொருட்களை , அண்டை நாட்டிற்கு சென்றுதான் வாங்க வேண்டுமல்லவா ?
இந்த நாட்டிற்கு வருமானம் எப்பிடி வருகின்றது ? இந்நாட்டை சென்று பார்க்க விசா எங்கு வாங்க வேண்டும் ?
ஏற்றுமதி என்று ஏதாவது உண்டா ?
ரமணியன்
இவர்களின் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான பொருட்களை , அண்டை நாட்டிற்கு சென்றுதான் வாங்க வேண்டுமல்லவா ?
இந்த நாட்டிற்கு வருமானம் எப்பிடி வருகின்றது ? இந்நாட்டை சென்று பார்க்க விசா எங்கு வாங்க வேண்டும் ?
ஏற்றுமதி என்று ஏதாவது உண்டா ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
Re: குட்டி நாடுகள் – ஒரு சுவாரஸ்ய தொகுப்பு 10
மேற்கோள் செய்த பதிவு: 1157439T.N.Balasubramanian wrote:ஆச்சர்யமாக இருக்கிறது .
இவர்களின் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான பொருட்களை , அண்டை நாட்டிற்கு சென்றுதான் வாங்க வேண்டுமல்லவா ?
இந்த நாட்டிற்கு வருமானம் எப்பிடி வருகின்றது ? இந்நாட்டை சென்று பார்க்க விசா எங்கு வாங்க வேண்டும் ?
ஏற்றுமதி என்று ஏதாவது உண்டா ?
ரமணியன்
தொடர்புக்கு...
http://www.sealandgov.org
சங்கர்.ப
சங்கர்.ப- பண்பாளர்
- பதிவுகள் : 60
இணைந்தது : 21/07/2015
Re: குட்டி நாடுகள் – ஒரு சுவாரஸ்ய தொகுப்பு 10
நன்றி சங்கர் .ப !
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
Similar topics
» அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் 50 நாடுகள் கையெழுத்து வல்லரசு நாடுகள் எதிர்ப்பு
» வண்டலூர் பூங்காவில் 3 குட்டி போட்ட சிங்கம்: பிறக்கும் போது ஒரு குட்டி இறந்தது
» மு .வ .பொன்மொழிகள் தொகுப்பு ம .ரா .போ. நூலிலிருந்து தொகுப்பு கவிஞர் இரா .இரவி
» முல்லை கீர்த்திக் குட்டி மாதிரி இருந்திருக்கக் கூடும் அல்லது கீர்த்திக் குட்டி முல்லை மாதிரி வரக் கூடும்
» உயிரோட்டமுள்ள, குட்டி, குட்டி குழந்தை பொம்மைகள் !
» வண்டலூர் பூங்காவில் 3 குட்டி போட்ட சிங்கம்: பிறக்கும் போது ஒரு குட்டி இறந்தது
» மு .வ .பொன்மொழிகள் தொகுப்பு ம .ரா .போ. நூலிலிருந்து தொகுப்பு கவிஞர் இரா .இரவி
» முல்லை கீர்த்திக் குட்டி மாதிரி இருந்திருக்கக் கூடும் அல்லது கீர்த்திக் குட்டி முல்லை மாதிரி வரக் கூடும்
» உயிரோட்டமுள்ள, குட்டி, குட்டி குழந்தை பொம்மைகள் !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|