புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றே படியுங்கள் இதை - ஆடி அமாவாசை கதை :)  I_vote_lcapஇன்றே படியுங்கள் இதை - ஆடி அமாவாசை கதை :)  I_voting_barஇன்றே படியுங்கள் இதை - ஆடி அமாவாசை கதை :)  I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
இன்றே படியுங்கள் இதை - ஆடி அமாவாசை கதை :)  I_vote_lcapஇன்றே படியுங்கள் இதை - ஆடி அமாவாசை கதை :)  I_voting_barஇன்றே படியுங்கள் இதை - ஆடி அமாவாசை கதை :)  I_vote_rcap 
236 Posts - 37%
mohamed nizamudeen
இன்றே படியுங்கள் இதை - ஆடி அமாவாசை கதை :)  I_vote_lcapஇன்றே படியுங்கள் இதை - ஆடி அமாவாசை கதை :)  I_voting_barஇன்றே படியுங்கள் இதை - ஆடி அமாவாசை கதை :)  I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
இன்றே படியுங்கள் இதை - ஆடி அமாவாசை கதை :)  I_vote_lcapஇன்றே படியுங்கள் இதை - ஆடி அமாவாசை கதை :)  I_voting_barஇன்றே படியுங்கள் இதை - ஆடி அமாவாசை கதை :)  I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இன்றே படியுங்கள் இதை - ஆடி அமாவாசை கதை :)  I_vote_lcapஇன்றே படியுங்கள் இதை - ஆடி அமாவாசை கதை :)  I_voting_barஇன்றே படியுங்கள் இதை - ஆடி அமாவாசை கதை :)  I_vote_rcap 
19 Posts - 3%
prajai
இன்றே படியுங்கள் இதை - ஆடி அமாவாசை கதை :)  I_vote_lcapஇன்றே படியுங்கள் இதை - ஆடி அமாவாசை கதை :)  I_voting_barஇன்றே படியுங்கள் இதை - ஆடி அமாவாசை கதை :)  I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
இன்றே படியுங்கள் இதை - ஆடி அமாவாசை கதை :)  I_vote_lcapஇன்றே படியுங்கள் இதை - ஆடி அமாவாசை கதை :)  I_voting_barஇன்றே படியுங்கள் இதை - ஆடி அமாவாசை கதை :)  I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இன்றே படியுங்கள் இதை - ஆடி அமாவாசை கதை :)  I_vote_lcapஇன்றே படியுங்கள் இதை - ஆடி அமாவாசை கதை :)  I_voting_barஇன்றே படியுங்கள் இதை - ஆடி அமாவாசை கதை :)  I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
இன்றே படியுங்கள் இதை - ஆடி அமாவாசை கதை :)  I_vote_lcapஇன்றே படியுங்கள் இதை - ஆடி அமாவாசை கதை :)  I_voting_barஇன்றே படியுங்கள் இதை - ஆடி அமாவாசை கதை :)  I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
இன்றே படியுங்கள் இதை - ஆடி அமாவாசை கதை :)  I_vote_lcapஇன்றே படியுங்கள் இதை - ஆடி அமாவாசை கதை :)  I_voting_barஇன்றே படியுங்கள் இதை - ஆடி அமாவாசை கதை :)  I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றே படியுங்கள் இதை - ஆடி அமாவாசை கதை :)


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 14, 2015 12:33 am

முன்னொரு காலத்தில் அழகாபுரி என்ற பட்டணத்தை கத்தலைராஜா என்ற அரசன் ஆண்டுவந்தான். இவனுக்கு குழந்தைகள் இல்லை. பல புண்ணிய தலங்களுக்கு சென்று விரதம் மேற்கொண்டான். புண்ணிய நதிகளில் நீராடினான்.

அதன் பலனாக ஒரு ஆண்குழந்தை பிறந்தது. குழந்தைக்கு அழகேசன் என பெயரிட்டனர். கத்தலைராஜா ஒரு முறை வேட்டைக்கு சென்றான். தாகத்தின் மிகுதியால் ஒரு சுனையைத் தேடிச்சென்றான். தண்ணீர் குடித்துவிட்டு நிமிர்ந்து பார்க்கவும் எதிரே ஒரு காளி கோயில் இருந்தது தெரிந்தது.

காளி மாதாவை தரிசித்தான்.அன்னையிடமிருந்து ஒரு வாக்கு வெளிப்பட்டது. மன்னா! நீ ஆசையோடு வளர்க்கும் உன் அருமை மகன் 16ம் வயதில் இறந்துவிடுவான் என சொல்லிவிட்டு அடங்கிவிட்டது. மன்னன் தவித்தான்.

தாயே! இது என்ன கொடுமை? வேண்டுமானால் என் உயிரையும், என் மனைவியின் உயிரையும் இப்போதே எடுத்துக்கொள். அவனுக்கு நீண்ட ஆயுளைக்கொடு, என அழுதுகொண்டும் ஆவேசத்தோடும் சொல்லியபடியே, வாளை எடுத்து தன்னை மாய்க்க ஓங்கினான்.

மன்னா! பொறு. நான் சொல்வதைக் கேள். உன் மகன் இறந்ததும் சடலத்திற்கு உலகிலேயே நல்ல குணங்கள் கொண்ட ஒரு பெண்ணை திருமணம் செய்து வை. அவளது மாங்கல்ய பலத்தால் உன் மகன் மீண்டும் உயிர் பெற்று எழுவான், என்றாள் காளி. காலமும் விரைந்து ஓடியது.

அழகேசனுக்கு 15 வயதானது. இன்னும் ஒரு ஆண்டில் மகன் உயிர்நீத்துவிடுவான் என்று எண்ணிய அரசன் மனம் வருந்திக் கொண்டிருந்தான். ஒரு சிறிய கிராமத்திற்கு சென்றான். அங்கே தேவசர்மா என்ற முதியவர் வாழ்ந்தார். அவருக்கு ஏழு ஆண்மக்கள். கடைசியாக ஒரு பெண் குழந்தை. குழந்தை பிறந்ததும் அவரது மனைவி ஜன்னி கண்டு இறந்துவிட்டாள்.

இதனால் அந்த பெண் குழந்தையை எல்லாரும் வெறுத்தார்கள். அண்ணன்களுக்கெல்லாம் திருமணம் முடிந்துவிட்டது. கங்கா என்ற பெயர் கொண்ட அந்தப் பெண்ணுக்கு மட்டும் திருமணம் நடக்கவில்லை. அனைத்து அண்ணிகளும் கங்காவை கொடுமைப்படுத்தினர். கங்காவுக்கு சாப்பாடு கொடுப்பதில்லை. தண்ணீரை குடித்துக்கொண்டே வாழ்நாள் முழுவதும் கண்ணீர் சிந்தினாள்.

ஒருமுறை வீதியில் பறை அறிவிக்கப்பட்டது. அழகாபுரி மன்னன் மகன் இறந்து விட்டான். அவனது சடலத்திற்கு யாராவது நற்குணமுள்ள பெண் கொடுத்தால் அந்த குடும்பத்திற்கு வேண்டும் அளவு செல்வம் தரப்படும், என கூறப்பட்டது. அண்ணிகள் அனைவரும் மகிழ்ந்தனர்.

தங்கள் கணவன்மாரை வசப்படுத்தி கங்காவை சடலத்திற்கு திருமணம் செய்துவைக்க கட்டாயப்படுத்தினர். அவளுக்கு அலங்காரம் செய்விக்கப்பட்டது. ஆனால் விஷயத்தை சொல்லவில்லை. கங்காவுக்கு ஏதும் புரியவில்லை. நேற்றுவரை கொடுமை செய்த அண்ணிகள் இன்று இவ்வாறு உபசரிப்பதன் காரணம் என்ன? என்பதை அறிந்துகொள்ள விரும்பினாள்.

அவளுக்கு திருமண ஏற்பாடு செய்துள்ள விஷயத்தை அண்ணிகள் சொன்னார்கள். மறுநாள் கங்கா அரண்மனைக்கு அழைத்து செல்லப்பட்டாள். ஏழையான தன்னை அரண்மனைக்கு அழைத்து வந்திருப்பதன் காரணத்தை தெரிந்துகொள்ளாமல் கலங்கினாள். ஆயினும் தலைகுனிந்த வண்ணம் உள்ளே சென்றாள்.

மணவறையில் அமரவைக்கப்பட்டாள். அவளது அருகில் சடலம் வைக்கப்பட்டது. அக்கால மன்னர் முறைப்படி கண்ணைக்கட்டிதான் திருமணம் செய்ய வேண்டும் என்று அவளிடம் இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி கண்ணைக்கட்டிவிட்டனர். திருமணம் நடந்தது. ஒரு பல்லக்கில் கங்காவையும் சடலத்தையும் ஏற்றி காட்டில் கொண்டு விடக்கூறினர்.

பல்லக்கு இறக்கப்பட்டதும் கண் கட்டு அவிழ்க்கப்பட்டது. அருகில் இருந்த சடலத்தைப் பார்த்து கங்கா அதன் அழகில் லயித்துப்போனாள். தனக்கு இப்படிப்பட்ட அழகான கணவன் கிடைத்ததற்காக பெருமைப்பட்டாள். அசதியின் காரணமாக அவன் உறங்குகிறான் என நினைத்துக்கொண்டாள். நீண்ட நேரமாகியும் கணவன் எழவில்லை. எனவே கணவனை மெதுவாக தொட்டு எழுப்பினாள்.

அவன் அசையவில்லை. அவனை லேசாக அசைத்துப்பார்த்தாள். எவ்வித உணர்வும் இல்லாததால் அவளுக்கு நிலைமை புரிந்துவிட்டது. தனக்கு செய்யப்பட்ட மோசடியை அறிந்து கண்ணீர்விட்டாள். அப்போது வான் வழியே பார்வதியும், பரமேஸ்வரரும் புஷ்பக விமானத்தில் சென்றுகொண்டிருந்தனர். அவர்கள் காதில் கங்காவின் ஓலம் கேட்டது.

பார்வதிதேவி சிவனிடம், அந்தப்பெண் எதற்கோ அழுகிறாள். என்னவென்று கேட்டு வருவோம், என்றாள். சிவன் அவளிடம், அந்தப்பெண் அறியாமல் ஒரு சடலத்தை திருமணம் செய்துகொண்டுவிட்டாள். அதை நினைத்தே அழுகிறாள். அவனது விதி முடிந்துவிட்டது. நாம் போகலாம் வா, என்றார்.

கருணைக்கடலான பார்வதிதேவி பிடிவாதம் பிடித்தாள். அந்தப்பெண்ணை அவசியம் பார்க்க வேண்டும் என்றாள். இதற்காகத்தான் அம்மன் வழிபாடு இப்போதும் பிரபலமாக இருக்கிறது. ஆண் தெய்வங்களை வணங்குவதைவிட அம்மனை வணங்கினால் காரியம் விரைவில் கைகூடிவிடும் என்பது நம்மவர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

கிராமப்புறங்களில் அம்மன் வழிபாடு அதிகரிக்க இதுவே காரணம். இருவரும் அவளிடம் வந்தனர். பார்வதிதேவியின் காலில் விழுந்து புலம்பினாள் கங்கா. அத்துடன் சிவபெருமானின் கால்களை கட்டிக்கொண்டு தன் கணவனுக்கு உயிர் தராவிட்டால் அவ்விடத்தைவிட்டு அகலவிடமாட்டேன் என சூளுரைத்தாள்.

சிவன் அவளிடம், மகளே! கவலைப்படாதே! அழுகையை நிறுத்து. உன் முன்வினைப்பயனால் ஏற்பட்ட பாவங்கள் அனைத்தையும் உன் வீட்டிலேயே தொலைத்து விட்டாய். இன்று ஆடி அமாவாசை. இந்நாளில் இறைவனை நினைத்து வழிபடுவோருக்கு நினைத்ததெல்லாம் நிறைவேறும். பெண்கள் சுமங்கலிகளாய் இருக்க அருள்செய்யும் விரதநாள் இது.

உன் கணவன் உடனே எழுவான், என்றார். அழகேசனும் எழுந்தான். பார்வதிதேவி கங்காவிடம், உனது வரலாற்றை படிக்கும் அனைத்து பெண்களுக்கும் மாங்கல்ய பாக்கியம் சித்திக்கும். ஆடி அமாவாசைக்கு முதல்நாள் இக்கதையை ஒருவர் சொல்ல மற்றவர் கேட்க வேண்டும், என அருள்பாலித்தாள்.

நன்றி தினமலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 14, 2015 9:10 am

ஆண் தெய்வங்களை வணங்குவதைவிட
அம்மனை வணங்கினால் காரியம் விரைவில்
கைகூடிவிடும்
-
சூப்பருங்க

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 14, 2015 1:21 pm

இதுவரை கேட்காத கதை .நன்றாக உள்ளது .
ஆனால் ,அன்றும் இன்றும் ,என்றும் , காரியம் ஆகவேண்டுமென்றால் ,
அம்மா மூலம் தான் காரியத்தை நடத்துகிறோம் .
பூமியிலும் அப்பிடியே ,தேவலோகங்களிலும் அப்பிடியே தான் போலும் .


ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Fri Aug 14, 2015 1:27 pm

நன்றாக உள்ளது அம்மா
விஸ்வாஜீ
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் விஸ்வாஜீ

கண்ணன்
கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 17/10/2014

Postகண்ணன் Fri Aug 14, 2015 1:55 pm

இன்றே படியுங்கள் இதை - ஆடி அமாவாசை கதை :)  3838410834

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக