ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

நிகழ்நிலை நிர்வாகிகள்

மது அருந்தும் 30 சதவீதம் பேருக்கு மனநோய் ஏற்படுகிறது

2 posters

Go down

மது அருந்தும் 30 சதவீதம் பேருக்கு மனநோய் ஏற்படுகிறது Empty மது அருந்தும் 30 சதவீதம் பேருக்கு மனநோய் ஏற்படுகிறது

Post by சாமி Wed 12 Aug 2015 - 1:18

மது அருந்துவோர் 30 சதவீதம் பேருக்கு மனநோய் ஏற்படுகிறது. அதனால் சமூகத்தில் இன்று விவாகரத்து, தற்கொலை, கொலை சம்பவங்கள் அதிகரிப்பதாக மனநல மருத்துவ ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

முன்பெல்லாம் போதிய விழிப் புணர்வு இல்லாததால், சங்கிலியால் பிணைக்கப்பட்டவர்கள், தனிமைப் படுத்தப்பட்டவர்கள்தான் மன நோயாளிகள் என சமூகத்தில் நினைக்கப்பட்டது. 'நிரூபிக்கப் படாத, உண்மையில் நிகழ்ந்திராத ஒரு விஷயத்தை, அது உண்மை யில் நடக்கிறது என்ற அசைக்க முடியாத எண்ணம் கொண்டிருப் பவர்கள்கூட' மனநோயாளிகள் தான் என மருத்துவ ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதற்கு 'டெலூசன்' (Delusion) அல்லது 'மனப்பிறழ்வு' என்று மனநல மருத்துவத்தில் சொல்லப் படுகிறது. இந்நோய் உள்ளவர்கள், மற்றவர்களுடன் நெருக்கமாக பழகுவர். இவர்களை மேலோட் டமாக பார்த்தால் வேறு எந்த மாற் றங்களும் தெரியாது. அதனால் அவர்களுக்கு மனநோய் இருப்பதை நம்புவதற்கே கடினமாகி விடும்.

வெளியே தெரியாமல் ஏற்படும் இந்த மனநோயால், மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கொலை, தற்கொலை போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதாக மருத்துவ ஆராய்ச்சியில் நிரூபிக் கப்பட்டுள்ளது. சராசரியாக 3 சதவீதம் பேரை பாதிக்கும் இந்த மனநோய், குடிப்பழக்கம் உள்ளவர்களிடையே 30% வரை காணப்படுவதாக மனநல மருத்துவ ஆராய்ச்சியில் நிரூபண மானதாக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி உதவி பேராசிரியரும் மனநல சிறப்பு மருத்துவரு மான ஆ.காட்சன் தெரிவிக்கிறார்.

இதுகுறித்து அவர் 'தி இந்து' விடம் கூறியதாவது: இது மனச் சிதைவு நோயின் அங்கமாகவோ அல்லது ஏதேனும் ஒரு குறிப் பிட்ட நிகழ்வை மட்டும் மைய மாக கொண்ட தனிப்பட்ட மனநோயாகவோ கருதப்படுகிறது. தங்கள் வாழ்க்கைத் துணை தவறான தொடர்பு வைத்திருப்பதாகவும், தனக்கு துரோகம் செய்வதாகவும் அதீத எண்ணத்தை ஏற்படுத்தும் சந்தேக மனநோயாகும். இது இருபாலினருக்கும் ஏற்படலாம்.

ஆண்கள் பாதிக்கப்பட்டால் ஏற்படும் விளைவுகளும், பெண் கள் பாதிக்கப்பட்டால் ஏற்படும் விளைவுகளும் சற்று வித்தியாசப் படுகின்றன. இந்நோயால் பாதிக் கப்படும் ஆண்கள், மனைவி தொழில்ரீதியாக அல்லது அன்றாட வாழ்க்கை சம்பவங்களில்கூட ஆண்களிடம் பேசுவதை சந்தேகக் கண்ணோட்டத்துடன் பார்ப்பதுடன், அவர்கள் எந்த ஆண்களுடனும் பேசக்கூடாது, வீட்டை விட்டே வெளியே செல்லக்கூடாது என்றும் கட்டாயப்படுத்துவர்.

இதனால் அடிக்கடி கணவன் மனைவி இடையே பிரச்சினை ஏற்படுவது, அடிப்பது, வெளியில் சொல்லி அவமானப்படுத்துவது, விவாகரத்து கோருவது, இல்லற வாழ்க்கையில் பாதிப்புகள் போன் றவை ஏற்படுகின்றன. உச்சகட்டமாக கொலை செய்யும் அளவுக்கு ஆக்ரோஷமான செயல்களில்கூட ஈடுபடுவர்.

பெண்களுக்கு இந்த சந்தேக நோய் ஏற்பட்டால் கணவரின் செல் போன் எண்கள், குறுஞ்செய்திகளை அடிக்கடி உளவுபார்ப்பது, பெண் களிடம் சாதாரணமாக பேசினால்கூட அவர்களுடன் கணவனுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறுவது, வேலைக்கு சென்று வீடு திரும்ப தாமதமானால் அடிக்கடி போன் செய்து எங்கு இருக்கிறார் என்பதை உறுதி செய்வது போன்றவை நடக்கும்.

கணவன் பழக்கம் வைத்திருப் பதாக சந்தேகப்படும் பெண்களுடன் சண்டையில் ஈடுபடுவர். சில பெண்கள் கணவரைப் பற்றி தீர விசாரிக்காமலே போலீஸிடம் புகார் செய்வது, தனியாகவோ அல்லது குழந்தைகளுடனோ தற்கொலை செய்துகொள்வது போன்ற விபரீத முடிவுகளையும் எடுப்பர்.

தங்கள் வாழ்க்கைத் துணை உண்மையிலேயே தவறான தொடர்பு வைத்திருப்பதாக எண் ணம் ஏற்படுத்தும் இந்த சந்தேக மனநோயை, எத்தனை ஆதாரங் களுடன் நிரூபித்தாலும் மாற்றமுடியாது. கணவன், மனைவி இடையே ஏற்படும் இந்த மனநோயே தற்போது நீதிமன்றங்களில் விவாகரத்து வழக்குகள் அதிகரிப்பதற்கு முக்கிய காரணம்.

விழிப்புணர்வு இல்லாததும், பாதிக்கப்பட்டவர்கள் சிகிச் சைக்கு வர மறுப்பதும்தான் பிரச் சினைகள் முற்றிப்போக காரணம். ஆரம்பத்தில் இவர்கள் கூறுவது உண்மையே என்று நம்பும் அள வுக்கு ஜோடனைகள் இருக்கும். நாளடைவில் வாழ்க்கை துணையின் நடத்தைகளைக் குறித்து அவர்கள் கூறும் சாத்தியமற்ற காரணங்கள், சம்பந்தமே இல்லாத விளக்கங்கள் மற்றும் செயல்கள் மூலமாக மனநோயின் அறிகுறிதான் என்று தெளிவாகக் கண்டுகொள்ளலாம்.

இதை சாதாரணமாக ஆலோச னைகள் அல்லது கவுன்சலிங் மூலமாக மாற்றவே முடியாது. மாத்திரைகள் உட்கொள்வது மூலம் மட்டுமே மாற்றத்தை காணமுடியும். ஆரம்ப அறிகுறி கள் தெரியும்போதே சிகிச்சை செய்துகொண்டால் நல்லபலன் கிடைக்கும். இவ்வகை மனநோய் மது அருந்துவோருக்கு அதிகம் ஏற்படுகிறது. அதனால், இளை ஞர்கள் ஆரம்பத்திலே குடிப் பழக்கத்துக்கு அடிமையாகாமல் தடுப்பது பெற்றோர் மற்றும் இந்த சமுதாயத்தின் கடமை என்று அவர் தெரிவித்தார். (நன்றி- திஹிண்டு தமிழ்)
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

மது அருந்தும் 30 சதவீதம் பேருக்கு மனநோய் ஏற்படுகிறது Empty Re: மது அருந்தும் 30 சதவீதம் பேருக்கு மனநோய் ஏற்படுகிறது

Post by shobana sahas Wed 12 Aug 2015 - 4:19

நல்ல பதிவு சாமி அவர்களே . நன்றி .
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

Back to top

- Similar topics
» மது அருந்தும் 30 சதவீதம் பேருக்கு மனநோய் ஏற்படுகிறது: மனநல மருத்துவ ஆராய்ச்சியில் தகவல்
» மது அருந்தும் இந்தியர்களில் 7.5 சதவீதம் பேர் பெண்கள்
» தமிழகத்தில் இன்று 1243 பேருக்கு கரோனா தொற்று- சென்னையில் 458 பேருக்கு பாதிப்பு: 634 பேர் குணமடைந்தனர்
» தேர்தல் பணியாற்றும் அரசு ஊழியர், ஆசிரியர்களில் 30 சதவீதம் பேருக்கு தபால் ஓட்டுகள் தரப்படவில்லை
» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum