புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல் Poll_c10திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல் Poll_m10திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல் Poll_c10 
30 Posts - 50%
heezulia
திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல் Poll_c10திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல் Poll_m10திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல் Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல் Poll_c10திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல் Poll_m10திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல் Poll_c10திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல் Poll_m10திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல் Poll_c10 
72 Posts - 57%
heezulia
திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல் Poll_c10திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல் Poll_m10திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல் Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல் Poll_c10திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல் Poll_m10திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல் Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல் Poll_c10திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல் Poll_m10திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Apr 03, 2013 2:57 pm

[You must be registered and logged in to see this link.]

உலகத்திலுள்ள அத்தனை ஜீவன்களுக்காகவும் ஒன்றரை அடியில் குறள் எழுதிய திருவள்ளுவர், ஒரே ஒரு ஜீவனுக்காக மட்டும் நான்கடியில் ஒரு பாட்டு எழுதியுள்ளார் தெரியுமா! யார் அந்த பெருமைக்குரிய ஜீவன்?

அந்த பெருமைக்குரியவர், அவரது மனைவி வாசுகி தான்.அந்த அம்மையார் தனது கணவரின் செயல்பாடுகள் குறித்து வாழ்நாள் முழுவதும் விமர்சித்ததே இல்லை. அவர் செய்தால் எல்லாம் சரியாகத்தான் இருக்கும் என்று நினைத்தவர்.

தன் கணவர் சாப்பிடும் போது, ஒரு கொட்டாங்குச்சியில் தண்ணீரும், ஒரு ஊசியும் வைத்துக் கொண்டுதான் சாப்பிடுவாராம். அது ஏன்னு அம்மையாருக்கு விளங்கவே இல்லியாம். ஆனாலும், கணவரிடம் காரணத்தை எப்படி கெட்பதுன்னு அமைதியா இருப்பாராம்.

இதற்கான காரணத்தை அந்த அம்மையார் இறக்கும் தருவாயில் தான் கணவரிடம் கேட்டாராம்.சோற்றுப்பருக்கை கீழே சிந்தினால் ஊசியில் குத்தி கொட்டாங்குச்சியில் உள்ள நீரில் கழுவி மீண்டும் சோற்றில் கலந்து உண்ணவே அவை இரண்டும் என்றாராம். நீ பரிமாறுகையில் சோற்று பருக்கை சிந்தவே இல்லை. அதனால் அதன் பயன்பாடு உனக்கு தெரியவில்லை என்றுநெகிழ்ச்சியாக சொன்னாராம்.

வள்ளுவரின் இல்லத்துக்கு துறவி ஒருவர் வந்தார். அவர்கள், இருவரும் பழைய சாதம் சாப்பிட்டனர். அப்போது வள்ளுவர் வாசுகியிடம், சோறு சூடாக இருக்கிறது. விசிறு, என்றார்.
பழைய சோறு எப்படி சுடும்?அந்த அம்மையார் கேள்வியே கேட்கவில்லை. விசிற ஆரம்பித்து விட்டார். இப்படி, கணவருடன் வாதம் செய்யாமல் விட்டுக்கொடுக்கும் மனப்பக்குவம் கொண்டிருந்தார்.

அந்த கற்புக்கரசி ஒருமுறை கிணற்றில் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தார். வள்ளுவர் அவரை அழைக்கவே, கயிறை அப்படியே விட்டு விட்டு வந்தார். குடத்துடன் கூடிய அந்தக் கயிறு அப்படியே நின்றதாம்.இப்படி ஒரு மனைவி கிடைத்தால், அந்தக் கணவன் கொடுத்து வைத்தவன் தானே! அந்த அன்பு மனைவி ஒருநாள் இறந்து போனார்.

“நெருநல் உளனொருவன் இன்றில்லை எனும் பெருமை படைத்து இவ்வுலகு” என்று ஊருக்கே புத்தி சொன்ன அந்தத் தெய்வப்புலவரே, மனைவியின் பிரிவைத் தாங்காமல் கலங்கி விட்டார். நேற்றிருந்தவர் இன்றைக்கு இல்லை என்பது தான் இந்த உலகத்திற்கே பெருமை என்பது இந்தக் குறளின் பொருள். ஆக, தனது கருத்துப்படி, அந்த அம்மையாரின் மறைவுக்காக பெருமைப்பட்டிருக்க வேண்டிய அவர், மனைவியின் பிரிவைத் தாளாமல்,

"அடியிற்கினியாளே அன்புடையாளே படிசொல் தவறாத பாவாய்- அடிவருடிபின்தூங்கி முன்னெழும்பும் பேதாய்- இனிதா(அ)ய் என் தூங்கும் என்கண் இரவு"

என்று ஒரு நாலு வரி பாட்டெழுதினார்.அடியவனுக்கு இனியவளே! அன்புடையவளே! என் சொல்படி நடக்கத் தவறாத பெண்ணே! என் பாதங்களை வருடி தூங்கச் செய்தவளே! பின் தூங்கி முன் எழுபவளே! பேதையே! என் கண்கள் இனி எப்படித்தான் இரவில் தூங்கப் போகிறதோ! என்பது பாட்டின் உருக்கமான பொருள்.

இன்று, சிறுசிறு கருத்து வேறுபாடுகளுக்கு கூட,நீதிமன்ற வாசலில் நிற்கும் தம்பதியர், இந்தசம்பவத்தை மனதிற்குள் அசைபோடுவார்களா!

ஒரு மணவிழாவில தந்த புத்தகத்தில் இருந்தது. அதை உங்கள் பார்வைக்கு....

மின்னஞ்சல்



[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Apr 03, 2013 2:58 pm

[You must be registered and logged in to see this link.] இந்த பதிவு உள்ளது நண்பரே



[You must be registered and logged in to see this link.]
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Apr 03, 2013 3:05 pm

ஈகரை தேடுபொறியில் தேடிய பின்பு தான் பதிவு செய்தேன்.

இருந்தாலும் ஏற்கனவே இந்த பதிவு இருந்தால் இப்பதிவை நீக்கிவிடவும்.



[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Apr 03, 2013 3:07 pm

ராஜு சரவணன் wrote:ஈகரை தேடுபொறியில் தேடிய பின்பு தான் பதிவு செய்தேன்.

இருந்தாலும் ஏற்கனவே இந்த பதிவு இருந்தால் இப்பதிவை நீக்கிவிடவும்.

வேண்டாம் விடுங்கள் இணைத்து விடலாம்



[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Apr 03, 2013 3:18 pm

ராஜு சரவணன் wrote:[You must be registered and logged in to see this link.]

இன்று, சிறுசிறு கருத்து வேறுபாடுகளுக்கு கூட,நீதிமன்ற வாசலில் நிற்கும் தம்பதியர், இந்தசம்பவத்தை மனதிற்குள் அசைபோடுவார்களா!

மின்னஞ்சல்
இருக்கட்டும் பரவாயில்லை.

ஆனால் ஆணாதிக்கக் காலத்தில் இது சாத்தியம். அப்போது மனையுறை பெண்டிராக பெண்கள் இருந்தனர். இப்போது எல்லாம் சமத்துவம் என்று வந்த நிலையில் கண்டிப்பாக வாய்ப்பே இல்லை.

இப்போது ஆறிய சோற்றுக்குக் கணவன் விசிறச் சொன்னால் சிந்தித்துப் பாருங்கள்.. அவளது நிலையை.... அவனை(ரை) என்ன என்று நினைத்து உடன் குடும்பம் நடத்த இயலும்.

“பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் புவி பேணி வளர்த்திடும் ஈசன். மண்ணுக்குள்ளே சில மூடர் நல்ல மாதர் அறிவைக் கெடுத்தார்” - பாரதி

பாரதிக்கே இதில் உடன்பாடு இல்லை.



[You must be registered and logged in to see this link.]
nikky
nikky
பண்பாளர்

பதிவுகள் : 63
இணைந்தது : 08/02/2013

Postnikky Wed Apr 03, 2013 3:29 pm

ஆச்சர்யமான தகவல் ..... ஓரக்கண் பார்வை

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun May 10, 2015 6:44 pm

' அடிசிற் கினியாளே !அன்புடை  யாளே !
படிசொல் தவறாதபாவாய் ! -- அடிவருடிப்
பின்தூங்கி முன்னெழூஉம் பேதையே ! போதியோ ?
என் தூங்கும் கண் இரா .'

வள்ளுவர்  இந்தப் பாடலைப் பாடியதாகச் சொல்வது  வெறும் கட்டுக்கதை.  இந்த வெண்பாவில் உள்ள  " பின் தூங்கி "  " என் தூங்கும் " என்ற சொற்களைக் கவனித்தாலே இந்தப் பாடலை வள்ளுவர் இயற்றவில்லை  என்பது புலப்படும்.

வள்ளுவர், " தூங்குதல் "  என்ற சொல்லைக் " காலம் தாழ்த்துதல் "  என்ற  பொருளிலேயே  பயன்படுத்துகிறார்.

தூங்காமை  கல்வி துணிவுடைமை  இம்மூன்றும்
நீங்கா நிலன்ஆள் பவற்கு. (  இறைமாட்சி -383 )

பொருள் :
========
நிலவுலகை ஆளுகின்ற அரசனுக்குக்  காலம் கடத்தாது விரைந்து செய்யும் ஆற்றலும், நல்ல கல்வியும்,  துணிவும் ஆகிய மூன்று குணங்களும் நீங்காது இருக்கவேண்டும்.

இக்காலத்தில்  " தூக்கம் "  என்ற சொல் தன் உண்மைப் பொருளை  இழந்து   கண் மூடித் துயில்வதைக் குறிக்கும் சொல்லாக  அமைந்து விட்டது.

" தூங்காதே ! தம்பி தூங்காதே ! "  என்ற திரைப்படப் பாடலிலும் " தூங்குதல் " என்ற சொல் கண் மூடித் துயில்வதையே  குறிக்கிறது.

கண் மூடித் துயில்வதை  வள்ளுவர் " உறக்கம் " என்ற சொல்லால்  குறிப்பிடுவார்.

உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு . ( நிலையாமை- 339 )

பொருள் :
=========
சாதலாவது உறக்கம் வருதலோடு ஒக்கும்; பிறப்பாவது உறங்கினவன் விழித்தலோடு ஒக்கும்.

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun May 10, 2015 7:08 pm

வள்ளுவர் பெயரில் வேறு யாரோ எழுதியுள்ளார் என்பது தெளிவாகுகிறது

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82381
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 11, 2015 7:15 am

வள்ளுவர் வாசுகியிடம்,
"சோறு சூடாக இருக்கிறது. விசிறு,'' என்றார்.
"பழைய சோறு எப்படி சுடும்?' அந்த அம்மையார்
கேள்வியே கேட்கவில்லை.
விசிற ஆரம்பித்து விட்டார்.
-
என்னே பதிபக்தி..!
-
புன்னகை புன்னகை

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon May 11, 2015 6:23 pm

எனக்கு என்னமோ திருவள்ளுவருக்கு திருமணம் ஆகியிருக்கும் என்று சொல்வதும், அவர் மனைவி பற்றி சொல்வதும் உண்மை என்பர் தோன்றவில்லை.
.
.
.
.
.
திருவள்ளுவருக்கு திருமணம் ஆயிருந்தால் இப்படி ஒரு நூலை (திருக்குறளை) அவர் எழுதியிருப்பாரா?
இல்ல எழுததான் விட்டுடுவாங்களா அவர் வீட்டுக்கார அம்மா.... அய்யோ, நான் இல்லை



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக