ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கம்ப ரசம்

+3
shobana sahas
T.N.Balasubramanian
ayyasamy ram
7 posters

Go down

கம்ப ரசம் Empty கம்ப ரசம்

Post by ayyasamy ram Tue Aug 11, 2015 8:11 am

[You must be registered and logged in to see this image.]
-
பழ ரசம் பருகியிருப்பீர்கள்.

மிளகு ரசம் பருகியிருப்பீர்கள்.

இன்று சிறிது கம்ப ரசம் பருகுவோமா?

கம்பன் ஒரு கவிச் சக்கரவர்த்தி.

பல பாடல்கள் நம் மனத்தில் தோன்றும் எண்ணங்களுக்கு ஏற்பப் பொருள் படும் வகையில் இருக்கும்.அது அவன் சொல்ல விரும்பிய கருத்தாக இல்லாமல் இருக்கலாம்.

ஆனாலும் வேறு பொருள் கொள்ளவும் இடம் கொடுக்கும்!

வாலி வதைப் படலத்தில்,இராமன் மறைந்து நின்று வாலி மீது அம்பெய்தி,வாலி வீழ்கிறான்.
தன் நெஞ்சில் தைத்த வாளியை எடுத்துப் பார்க்கிறான் வாலி .

இராமன் என்ற பெயரைப் பார்க்கிறான்.

இராமனை இகழ ஆரம்பிக்கிறான்.

அதில் ஒரு பாடல்……

“கோ இயல் தருமம், உங்கள் குலத்து உதித்தோர்கட்கு எல்லாம் –
ஓவியத்து எழுத ஒண்ணா உருவத்தாய்! – உடைமை அன்றோ?
ஆவியை, சனகன் பெற்ற அன்னத்தை, அமிழ்தின் வந்த
தேவியை, பிரிந்த பின்னை, திகைத்தனை போலும், செய்கை! “

”ஓவியத்தில் எழுத முடியாத அழகுள்ள ராமனே!உன் குலத்தோர் அரச தர்மம் தவறாதவர்கள். ஆனால் நீ?!சீதையைப் பிரிந்ததனால் மனம் பேதலித்து இவ்வாறு செய்தாயோ?” என்கிறான் வாலி.

இகழும்போது கூட அவன் அழகைப் புகழ்வானா என ஒரு கேள்வி!எனில் வேறு என்ன
பொருள் கொள்ளலாம்?

அக்காலத்தில் மன்னர்களின் வீரச் செயலை ஓவியமாகத் தீட்டி வைப்பர்(புகைப்பட வசதி கிடையாது!)அவ்வாறு” இந்த நிகழ்ச்சியை ,நீ என்னைக் கொன்ற நிகழ்ச்சியை, படமாகத் தீட்டினால் உன்னை அதில் எழுத முடியாது;ஏனெனில் நீ மறைந்திருந்து கொன்றாய், எனவே ஓவியத்தில் தெரிய மாட்டாய் “என்பதும் ஒரு பொருளாகத் தோன்றுகிறது .

அதுவே கம்ப ரசம்.

இன்னொரு பாடல்.

கைகேயி இராமனிடம் ”பரதன் அரசாளவும்,நீ மரவுரி தரித்துக் காட்டுக்குப் பதினான்கு ஆண்டுகள் போகவும் வேண்டும் என அரசன் சொன்னான்” என்றுசொல்கிறாள்

அப்போது இராமன் சொல்கிறான்…

‘மன்னவன் பணியன்று ஆகின், நும் பணி மறுப்பனோ? என்
பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றது அன்றோ?
என் இனி உறுதி அப்பால்? இப்பணி தலைமேற் கொண்டேன்;
மின்னொளிர் கானம் இன்றே போகின்றேன்; விடையும் கொண்டேன்

”தசரதன் சொல்லாமல் நீங்களே சொன்னாலும் நான் மறுப்பேனா?பரதனுக்குக் கிடைத்தால் எனக்கே கிடைத்த மாதிரிதானே” எனச் சொல்கிறான்.

இதையே வேறு கோணத்தில் பார்க்கலாம்.

“ இது மன்னவன் பணியன்று;

ஆனாலும் உங்களின் இந்தப்பணியை நான் மறுப்பேனா?

நான் பெறப்போகும் அதே செல்வத்தைத்தானே(மரவுரி)பரதனும் பெறப்போகிறான் (அடியனேன் பெற்றதன்றோ என் பின்னவன் பெற்ற செல்வம்).

நடந்த உண்மையையும்,நடக்கப்போகும் உண்மையையும் இராமன் கூறுவது போல் உள்ளதல்லவா?

இதுதான் கம்பரசம்!

(வாரியார் ஸ்வாமிகள் சொல்லக்கேட்டவை)
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கம்ப ரசம் Empty Re: கம்ப ரசம்

Post by T.N.Balasubramanian Tue Aug 11, 2015 6:18 pm

ரசிக்கும் படியான தகவல் ,ராம்
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கம்ப ரசம் Empty Re: கம்ப ரசம்

Post by shobana sahas Wed Aug 12, 2015 12:47 am

மிகவும் அருமை அய்யா . வி பொ பா ..
நன்றி அய்யா
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

கம்ப ரசம் Empty Re: கம்ப ரசம்

Post by Namasivayam Mu Fri Aug 28, 2015 8:55 pm

ayyasamy ram wrote:[You must be registered and logged in to see this image.]
-
பழ ரசம் பருகியிருப்பீர்கள்.

மிளகு ரசம் பருகியிருப்பீர்கள்.

இன்று சிறிது கம்ப ரசம் பருகுவோமா?

கம்பன் ஒரு கவிச் சக்கரவர்த்தி.

பல பாடல்கள் நம் மனத்தில் தோன்றும் எண்ணங்களுக்கு ஏற்பப் பொருள் படும் வகையில் இருக்கும்.அது அவன் சொல்ல விரும்பிய கருத்தாக இல்லாமல் இருக்கலாம்.

ஆனாலும் வேறு பொருள் கொள்ளவும் இடம் கொடுக்கும்!

வாலி வதைப் படலத்தில்,இராமன் மறைந்து நின்று வாலி மீது அம்பெய்தி,வாலி வீழ்கிறான்.
தன் நெஞ்சில் தைத்த வாளியை எடுத்துப் பார்க்கிறான் வாலி .

இராமன் என்ற பெயரைப் பார்க்கிறான்.

இராமனை இகழ ஆரம்பிக்கிறான்.

அதில் ஒரு பாடல்……

“கோ இயல் தருமம், உங்கள் குலத்து உதித்தோர்கட்கு எல்லாம் –
ஓவியத்து எழுத ஒண்ணா உருவத்தாய்! – உடைமை அன்றோ?
ஆவியை, சனகன் பெற்ற அன்னத்தை, அமிழ்தின் வந்த
தேவியை, பிரிந்த பின்னை, திகைத்தனை போலும், செய்கை! “

”ஓவியத்தில் எழுத முடியாத அழகுள்ள ராமனே!உன் குலத்தோர் அரச தர்மம் தவறாதவர்கள். ஆனால் நீ?!சீதையைப் பிரிந்ததனால் மனம் பேதலித்து இவ்வாறு செய்தாயோ?” என்கிறான் வாலி.

இகழும்போது கூட அவன் அழகைப் புகழ்வானா என ஒரு கேள்வி!எனில் வேறு என்ன
பொருள் கொள்ளலாம்?

அக்காலத்தில் மன்னர்களின் வீரச் செயலை ஓவியமாகத் தீட்டி வைப்பர்(புகைப்பட வசதி கிடையாது!)அவ்வாறு” இந்த நிகழ்ச்சியை ,நீ என்னைக் கொன்ற நிகழ்ச்சியை, படமாகத் தீட்டினால் உன்னை அதில் எழுத முடியாது;ஏனெனில் நீ மறைந்திருந்து கொன்றாய், எனவே ஓவியத்தில் தெரிய மாட்டாய் “என்பதும் ஒரு பொருளாகத் தோன்றுகிறது .

அதுவே கம்ப ரசம்.

இன்னொரு பாடல்.

கைகேயி இராமனிடம் ”பரதன் அரசாளவும்,நீ மரவுரி தரித்துக் காட்டுக்குப் பதினான்கு ஆண்டுகள் போகவும் வேண்டும் என அரசன் சொன்னான்” என்றுசொல்கிறாள்

அப்போது இராமன் சொல்கிறான்…

‘மன்னவன் பணியன்று ஆகின், நும் பணி மறுப்பனோ? என்
பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றது அன்றோ?
என் இனி உறுதி அப்பால்? இப்பணி தலைமேற் கொண்டேன்;
மின்னொளிர் கானம் இன்றே போகின்றேன்; விடையும் கொண்டேன்

”தசரதன் சொல்லாமல் நீங்களே சொன்னாலும் நான் மறுப்பேனா?பரதனுக்குக் கிடைத்தால் எனக்கே கிடைத்த மாதிரிதானே” எனச் சொல்கிறான்.

இதையே வேறு கோணத்தில் பார்க்கலாம்.

“ இது மன்னவன் பணியன்று;

ஆனாலும் உங்களின் இந்தப்பணியை நான் மறுப்பேனா?

நான் பெறப்போகும் அதே செல்வத்தைத்தானே(மரவுரி)பரதனும் பெறப்போகிறான் (அடியனேன் பெற்றதன்றோ என் பின்னவன் பெற்ற செல்வம்).

நடந்த உண்மையையும்,நடக்கப்போகும் உண்மையையும் இராமன் கூறுவது போல் உள்ளதல்லவா?

இதுதான் கம்பரசம்!

(வாரியார் ஸ்வாமிகள் சொல்லக்கேட்டவை)
[You must be registered and logged in to see this link.]
நன்று


[You must be registered and logged in to see this link.]


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015

http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

கம்ப ரசம் Empty Re: கம்ப ரசம்

Post by M.Jagadeesan Wed Feb 03, 2016 1:25 pm

இராமலிங்க அடிகளார் ( வள்ளலார் ) வாழ்ந்த காலத்தில் புகைப்படம் எடுக்கும் கலை வந்துவிட்டது. ஆனால் வள்ளலார் அவர்களை புகைப்படம் எடுத்தாலும் , அவர் விழமாட்டாராம் . இதுவரையில் அவரது புகைப்படத்தை யாரும் பார்த்தது கிடையாது.

வள்ளலார் அவர்களும் " ஓவியத்து எழுதவொண்ணா உருவத்தினராக " இருந்தார் என்பது வியப்பிற்கு உரிய செய்தி.


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

கம்ப ரசம் Empty Re: கம்ப ரசம்

Post by T.N.Balasubramanian Wed Feb 03, 2016 2:49 pm

சித்தப் புருஷர்களையும் , சில மகான்களை போடோவில் எடுத்தாலும்
படத்தில் காணமுடிவதில்லை என்பதுதான் கண்கூடாக நாம் காண்பது .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கம்ப ரசம் Empty Re: கம்ப ரசம்

Post by சசி Wed Feb 03, 2016 3:02 pm

அருமையான பதிவு ஐயா. அது தான் மகா கவிஞனின் திறமை. அதனால் தான் கவிச்சக்கரவர்த்தி. நன்றி ஐயா.


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

கம்ப ரசம் Empty Re: கம்ப ரசம்

Post by kandhasami saravanan Fri Mar 11, 2016 5:53 pm

மிக அருமை! நல்ல பதிவு தெளிவான விளக்கம்! கோடி நன்றிகளை உங்களுக்கு உரித்தாக்குகிறேன்!
kandhasami saravanan
kandhasami saravanan
பண்பாளர்


பதிவுகள் : 122
இணைந்தது : 28/06/2014

Back to top Go down

கம்ப ரசம் Empty Re: கம்ப ரசம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum