ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

Top posting users this week
heezulia
மரணத்திற்குப் பின்...  Poll_c10மரணத்திற்குப் பின்...  Poll_m10மரணத்திற்குப் பின்...  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரணத்திற்குப் பின்...

5 posters

Go down

மரணத்திற்குப் பின்...  Empty மரணத்திற்குப் பின்...

Post by M.Jagadeesan Fri Aug 07, 2015 7:46 pm

பூக்கள் சூடி புன்னகை செய்யும் பெண்ணே!
மனிதன் மரணித்த 36 மணி நேரத்தில்
ஈக்கள் முட்டையிடும் என்பதை அறிவாயா ?

பார்வைக் கணையால் துளைக்கும் ஊர்வசியே !
மனிதன் மரணித்த 60 மணி நேரத்தில்
லார்வாக்கள் தோன்றும் என்பதை அறிவாயா ?

முகம்காட்டி முறுவலிக்கும் மூன்றாம் பிறையே !
மனிதன் மரணித்த மூன்றாம் நாளில்
நகங்கள் விழுகின்றன என்பதை அறிவாயா ?

தேர்போல் நடந்துவரும் தேவதையே ! சற்றேகேள் !
மனிதன் மரணித்த நான்காம் நாளில்
ஈறுகள் தொலைகின்றன என்பதை அறிவாயா ?

துருவ விண்மீனே ! தூயவளே ! கேட்டிடுவாய் !
மனிதன் மரணித்த ஐந்தாம் நாளில்
உருகுகிறது மூளை என்பதை அறிவாயா ?

துடியிடை கொண்ட தூமணியே ! கூறக்கேள் !
மனிதன் மரணித்த ஆறாம் நாளில்
வெடிக்கிறது வயிறு என்பதை அறிவாயா ?

அழகே ! ஆரணங்கே ! அன்பே செவிமடுப்பாய் !
மனிதன் மரணித்த இரண்டாம் மாதத்தில்
அழுகும் உடல் என்பதை அறிவாயா ?

கண்மூடி மனிதன் யோசிக்கும் வேளையிலே
மண்மூடிப் போகும் மனித வாழ்க்கையினை
பெண்ணே ! அறிந்தாயா ? நிலையற்ற இவ்வாழ்வில்

எத்தனை ஆணவம் ! எத்தனை பேராசை !
எத்தனை கோபம் ! எத்தனை கெடுமதி ?
வித்தகனே ! இறைவா ! உனக்கொரு வேண்டுகோள் !
மொத்தத்தில் மனிதனைப் படைப்பதை நிறுத்திவிடு ! .
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

மரணத்திற்குப் பின்...  Empty Re: மரணத்திற்குப் பின்...

Post by T.N.Balasubramanian Fri Aug 07, 2015 8:27 pm

பெண்களை பற்றிய வர்ணனையும் ,
உடல்கூறு விஷயங்களை கலந்தளித்து
கவிதை ரூபத்தில் கூறியது , புதுமை ---அருமை .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மரணத்திற்குப் பின்...  Empty Re: மரணத்திற்குப் பின்...

Post by சிவா Fri Aug 07, 2015 10:46 pm

வாழும் பொழுது மரணத்தை நினைத்தால் அந்த வாழ்க்கை நரகம் தான்!



மரணத்திற்குப் பின்...  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மரணத்திற்குப் பின்...  Empty Re: மரணத்திற்குப் பின்...

Post by krishnaamma Fri Aug 07, 2015 10:50 pm

மன்னிக்கணும் ஜெகதீசன் ஐயா..............எனக்கு இந்த கவிதை ரசிக்கலை...ஜீரணிப்பது கஷ்டமாய் இருக்கு சோகம் .................சிவா சொல்வது போல "வாழும் பொழுது மரணத்தை நினைத்தால் அந்த வாழ்க்கை நரகம் தான்! ...................
.
.
அழகை வர்ணிக்கும் போது .............இந்த ஒப்பீடு தேவையா? சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மரணத்திற்குப் பின்...  Empty Re: மரணத்திற்குப் பின்...

Post by shobana sahas Fri Aug 07, 2015 10:51 pm

//அழகே ! ஆரணங்கே ! அன்பே செவிமடுப்பாய் !
மனிதன் மரணித்த இரண்டாம் மாதத்தில்
அழுகும் உடல் என்பதை அறிவாயா ?
//
இரண்டாம் மாதம் தான் அழுகுமா அய்யா ?
ஆச்சர்யமான விஷயம் ...
நல்ல கவிதை , பதிவு அய்யா .
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

மரணத்திற்குப் பின்...  Empty Re: மரணத்திற்குப் பின்...

Post by krishnaamma Fri Aug 07, 2015 10:54 pm

shobana sahas wrote://அழகே ! ஆரணங்கே ! அன்பே செவிமடுப்பாய் !
மனிதன் மரணித்த இரண்டாம் மாதத்தில்
அழுகும் உடல் என்பதை அறிவாயா ?
//
இரண்டாம் மாதம் தான் அழுகுமா அய்யா ?
ஆச்சர்யமான விஷயம் ...
நல்ல கவிதை , பதிவு அய்யா .
மேற்கோள் செய்த பதிவு: 1156261

ஷோபனா.....ஷோபனா..............என்ன சொல்வது என்று தெரியலை எனக்கு.......சரியான ஆளு நீங்க....................புன்னகைபுன்னகைபுன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மரணத்திற்குப் பின்...  Empty Re: மரணத்திற்குப் பின்...

Post by shobana sahas Fri Aug 07, 2015 10:58 pm

krishnaamma wrote:
shobana sahas wrote://அழகே ! ஆரணங்கே ! அன்பே செவிமடுப்பாய் !
மனிதன் மரணித்த இரண்டாம் மாதத்தில்
அழுகும் உடல் என்பதை அறிவாயா ?
//
இரண்டாம் மாதம் தான் அழுகுமா அய்யா ?
ஆச்சர்யமான விஷயம் ...
நல்ல கவிதை , பதிவு அய்யா .
மேற்கோள் செய்த பதிவு: 1156261

ஷோபனா.....ஷோபனா..............என்ன சொல்வது என்று தெரியலை எனக்கு.......சரியான ஆளு நீங்க....................புன்னகைபுன்னகைபுன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1156265
இல்லை க்ரிஷ்ணாம்மா . இன்னொரு கேள்வியும் கேட்க நினைத்தேன் ..
இறந்த உடனேயே ஐஸ் பாக்ஸ் இல் வைக்கிறார்களே அது ஏன் ?

அம்மா நீங்க என்ன யோசிகிரீங்கன்னு சொல்லவா ...... வெள்ளி கிழமை அதுவுமா ....விளக்கு வைக்கும் நேரத்தில் இது தேவையான்னு ? அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

மரணத்திற்குப் பின்...  Empty Re: மரணத்திற்குப் பின்...

Post by M.Jagadeesan Sat Aug 08, 2015 12:19 pm

சிவா wrote:வாழும் பொழுது மரணத்தை நினைத்தால் அந்த வாழ்க்கை நரகம் தான்!

மேற்கோள் செய்த பதிவு: 1156253

வாழும்போது மரணத்தை நினைப்பவன்தான் மனிதன் . மரணபயம் இருந்தால்தான் தீய செயல்களைச் செய்வதற்கு மனிதன் அஞ்சுவான் . திருவள்ளுவர் , " நிலையாமை " என்ற அதிகாரத்தைப் பாடியதன் நோக்கமே ,மனிதன் நிலையில்லாத செல்வத்தின் மீது ஆசை வைக்கக் கூடாது என்பதற்காகத்தான் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

மரணத்திற்குப் பின்...  Empty Re: மரணத்திற்குப் பின்...

Post by M.Jagadeesan Sat Aug 08, 2015 12:46 pm

krishnaamma wrote:மன்னிக்கணும் ஜெகதீசன் ஐயா..............எனக்கு இந்த கவிதை ரசிக்கலை...ஜீரணிப்பது கஷ்டமாய் இருக்கு சோகம் .................சிவா சொல்வது போல "வாழும் பொழுது மரணத்தை நினைத்தால் அந்த வாழ்க்கை நரகம் தான்! ...................
.
.
அழகை வர்ணிக்கும் போது .............இந்த ஒப்பீடு தேவையா? சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1156258

அழகை வர்ணிப்பது கவிதையின் நோக்கமல்ல . மரணத்திற்குப்பின் நம் உடல் அடையும் மாற்றங்களை விவரிப்பதுதான் கவிதையின் நோக்கம் .

திருமணச் சந்தையில் அழகான பெண்களை ( குணவதிகளை விட்டுவிட்டு ) தேடி அலையும் ஆண்களுக்காகவும் , தன்அழகை நினைத்து பெருமை கொள்ளும் பெண்களுக்காகவும் , இக்கவிதை புனையப்பட்டது .

அழகு என்பது அழியும் பொருள் என்பதை உணர்த்துவதற்காக , அழகான பெண்களை விளித்துச்  சொல்வதுபோல் இக்கவிதை அமைக்கப் பட்டுள்ளது .

" இளமையும் நில்லா , யாக்கையும் நில்லா
வளவிய வான்பெருஞ் செல்வமும் நில்லா  ( மணிமேகலை )


குறிப்பு : வெள்ளிக் கிழமை  விளக்கு வைக்கும் நேரத்தில் இக்கவிதையைப் பதிவிட்டது தவறாகப் போய்விட்டது .
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

மரணத்திற்குப் பின்...  Empty Re: மரணத்திற்குப் பின்...

Post by shobana sahas Sun Aug 09, 2015 5:03 am

M.Jagadeesan wrote:
krishnaamma wrote:மன்னிக்கணும் ஜெகதீசன் ஐயா..............எனக்கு இந்த கவிதை ரசிக்கலை...ஜீரணிப்பது கஷ்டமாய் இருக்கு சோகம் .................சிவா சொல்வது போல "வாழும் பொழுது மரணத்தை நினைத்தால் அந்த வாழ்க்கை நரகம் தான்! ...................
.
.
அழகை வர்ணிக்கும் போது .............இந்த ஒப்பீடு தேவையா? சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1156258

அழகை வர்ணிப்பது கவிதையின் நோக்கமல்ல . மரணத்திற்குப்பின் நம் உடல் அடையும் மாற்றங்களை விவரிப்பதுதான் கவிதையின் நோக்கம் .

திருமணச் சந்தையில் அழகான பெண்களை ( குணவதிகளை விட்டுவிட்டு ) தேடி அலையும் ஆண்களுக்காகவும் , தன்அழகை நினைத்து பெருமை கொள்ளும் பெண்களுக்காகவும் , இக்கவிதை புனையப்பட்டது .

அழகு என்பது அழியும் பொருள் என்பதை உணர்த்துவதற்காக , அழகான பெண்களை விளித்துச்  சொல்வதுபோல் இக்கவிதை அமைக்கப் பட்டுள்ளது .

" இளமையும் நில்லா , யாக்கையும் நில்லா
வளவிய வான்பெருஞ் செல்வமும் நில்லா  ( மணிமேகலை )


குறிப்பு : வெள்ளிக் கிழமை  விளக்கு வைக்கும் நேரத்தில் இக்கவிதையைப் பதிவிட்டது தவறாகப் போய்விட்டது .
மேற்கோள் செய்த பதிவு: 1156392
அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை அய்யா.... தங்கள் கவிதை என்றும் கரும்பு போல் இனிப்பவை ...
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

மரணத்திற்குப் பின்...  Empty Re: மரணத்திற்குப் பின்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள்
» மரணத்திற்குப் பின்னர் வாழ்க்கை உண்டு : - நிரூபித்த ஜெர்மன் டாக்டர்கள்
» அதற்காகத்தான் சட்டையின் பின் பக்கத்தில் எனக்கு காது கேட்காது என்று எழுதி "பின்' போட்டுள்ளேன்
» மழைக்குப் பின்
» உங்கள் பிள்ளைகளுக்கு நாளும் ஒரு துஆ சொல்லிக்கொடுங்கள். (இலகுவான துஆக்கள்)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum