Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்ணியம் மலர வேண்டுமா?
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
பெண்ணியம் மலர வேண்டுமா?
சமுதாயத்தில் ஒவ்வொருவரின் மனதிலும் பெண் என்பவள் வெறும் காமத்துக்கான வடிகால் அல்ல. அவளும் நம்மைப் போன்றே உணர்ச்சிகளும் உருவமும் கொண்ட ஒரு உயிரே என்ற பார்வை உண்டாக வேண்டும். அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரை பெண்கள் அடிமைகளாகவும், போகப் பொருளாகவும், ஆண்களுக்குக் கட்டுப்பட்டவர்களாகவும் மட்டுமே சமுதாயத்தால் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இதில் சமுதாயம் என்பதற்கு ஆண்கள் மட்டுமே என்று எடுத்துக் கொள்ள வழியின்றி பெண்ணியத்துக்கு எதிரியாய் சில பெண்களும் ஒளிந்திருக்கும் ஒரு உண்மையாகும். ஆதலால் பெண்ணியம் என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் கூறமுடியும். இல்லை ஆணுக்குப் பெண் சமமென முழங்கி இன்று பல பெண்கள் எமது கலாசாரத்தைத் தொலைத்துத் திரிவதுதான் பெண்ணியமா? எடுத்ததற்கெல்லாம் சண்டையிட்டு இதுதான் பெண்விடுதலையென்று விவகாரத்து பெற்றுச் செல்வதுதான் பெண்ணியமா?.
இல்லை இஷ்டப்படி வாழ நினைப்பதுதான் பெண் விடுதலையா? பெண்களை அடிமைகளாக, ஆணுக்குக் கட்டுப்பட்டவர்களாக நடத்தாமல் ஆணும் பெண்ணும் சமமென்ற நிலை வேண்டுமென்பதுதான் பெண்ணியமாகும். இன்று ஆணுக்கு நிகராய் பெண்கள் கால் பதிக்காத துறைகளே இல்லை. ஆணைவிட அதிகமாய் சம்பாதிக்கும் பெண்களையும், ஆண்களுக்கே மேலதிகாரியாய் திகழும் பெண்களையும், சர்வ சாதாரணமாய் ஒவ்வொரு அலுவலகத்திலும் பார்க்கமுடிகிறது. ஆட்சிப் பொறுப்பலிருந்து ஆகாய விமானம் வரை பெண்கள் சாதித்திருந்தாலும் இன்னும் ஏன் ஒவ்வொரு வீட்டின் சமையலறையும் பெண்ணின் சொத்தாக அவள் கால்களிலேயே கட்டப்பட்டிருக்கிறது?
திருமணமாகி குடும்ப வாழ்க்கையில் கட்டுண்டிருக்கும் யாராவது ஒரு பெண்ணாவது நான் எந்தவொரு வகையிலும் ஆணைச் சார்ந்தோ அவனுக்குக் கட்டுப்பட்டோ இல்லாமல் சரிநிகராகத்தான் இருக்கிறேனென்று மனசாட்சியில் கைவைத்துக் கூறமுடியுமா? எவ்வளவுதான் சாதித்தாலும் சமுதாயத்தில் பெண்களின் மீதான பார்வையில் இதுவரை பெரிதாய் மாற்றங்கள் ஏதுமில்லை. அந்தக் காலத்தில் பெண் விடுதலைக்காகப் போராடியவர்கள் பெண் கல்விக்கே முக்கியத்துவம் அளித்தார்கள்.
பெண்கள் கல்வியில் முன்னேறினால் பெண் விடுதலை பெற்று பெண்ணியமும் பேணப்படுமென்று நம்பினார்கள். ஆனா, இன்று பெண்கள் கல்வியில் முன்னேறியும் பெண் விடுதலை மலர்ந்ததாய்த் தெரியவில்லை. இன்றும் பெண்களுக்கெதிரான வன்கொடுமைகள் உலகம் முழுவதும் அரங்கேறிக்கொண்டேதான் இருக்கின்றன. பெண்களுக்கெதிரான பாலியல் கொடுமைகளுக்கு ஒரு நிரந்தரத் தீர்வு உண்டாகாத வரையில் பெண் விடுதலையும், பெண்ணியம் என்பதும் வெறும் பேச்சில் மட்டுமே இருக்கக்கூடும்.
ஏழை, பணக்காரன், படித்தவன் என்று எந்தவொரு வித்தியாசமுமின்றி எல்லா ஆண்களுமே இன்றும் தங்கள் மனைவியின் மீது தங்கள் விருப்பங்களைத் திணிப்பதுடன் ஏதோவொரு வகையில் அவர்களைக் கட்டுப்படுத்தியே வைத்திருக்கின்றனர். விருப்பப்பட்ட இடத்துக்கு, விருப்பப்பட்ட நேரத்தில், விருப்பப்பட்டவர்களுடன் போய் வரும் ஆண்கள் கூட்டம் தங்கள் மனைவியையோ இல்லை மகளையோ அவ்வாறான சுதந்திரத்திற்கு அனுமதிப்பார்களா? ஆணுக்கு ஒரு பார்வை, பெண்ணுக்கு ஒரு பார்வை என்பதே பெண்ணடிமைத் தனத்தின் ஆணி வேராக இருக்கக்கூடும்.
வெறுமனே பேசுவதாலும், எழுதுவதாலும் மட்டுமே மாறிவிடாது இந்த நிலை. என்னால் நிச்சயமாய் கூறமுடியும் பெண் விடுதலையும் பெண்ணிய வளர்ச்சியும் முழுவதுமாய் பெண்கள்கையில் மட்டுமேயில்லை, ஒவ்வொரு ஆண் மகனும் தன் தாயை, மனைவியை, மகளை எப்போது ஒரு நல்ல நண்பராய் நடத்த ஆரம்பிக்கிறானோ அப்பொழுதுதான் பெண்ணியம் மலரத் தொடங்கும்.
மாலைமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பெண்ணியம் மலர வேண்டுமா?
நல்ல கட்டுரை .........பகிர்வுக்கு நன்றி சிவா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பெண்ணியம் மலர வேண்டுமா?
நல்ல கருத்துள்ள பதிவு . நன்றி.
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: பெண்ணியம் மலர வேண்டுமா?
இதில் சமுதாயம் என்பதற்கு ஆண்கள் மட்டுமே என்று எடுத்துக் கொள்ள வழியின்றி பெண்ணியத்துக்கு எதிரியாய் சில பெண்களும் ஒளிந்திருக்கும் ஒரு உண்மையாகும்.
ஆயிரம் எடுத்துக்காட்டுகள் காண்பிக்க முடியும் .
நல்லதோர் கட்டுரை .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
Re: பெண்ணியம் மலர வேண்டுமா?
பெண்ணீயம் என்பதன் அர்த்தத்தை நம் சமுதாயம் என்று முழுமையாக புரிந்து கொள்ளுகிறதோ, அன்று தான் பெண்ணீயம் என்பது மலரும். அதுவரை இப்படி பேசிக்கொண்டே இருக்கவேண்டியது தான்.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: பெண்ணியம் மலர வேண்டுமா?
மேற்கோள் செய்த பதிவு: 1156116விமந்தனி wrote:பெண்ணீயம் என்பதன் அர்த்தத்தை நம் சமுதாயம் என்று முழுமையாக புரிந்து கொள்ளுகிறதோ, அன்று தான் பெண்ணீயம் என்பது மலரும். அதுவரை இப்படி பேசிக்கொண்டே இருக்கவேண்டியது தான்.
நிஜம் விமந்தினி, ,மேலே கட்டுரை இல் குறிப்பிடப்பட்டுள்ள இந்த வரிகள்பாருங்கள்...........
//விருப்பப்பட்ட இடத்துக்கு, விருப்பப்பட்ட நேரத்தில், விருப்பப்பட்டவர்களுடன் போய் வரும் ஆண்கள் கூட்டம் தங்கள் மனைவியையோ இல்லை மகளையோ அவ்வாறான சுதந்திரத்திற்கு அனுமதிப்பார்களா? ஆணுக்கு ஒரு பார்வை, பெண்ணுக்கு ஒரு பார்வை என்பதே பெண்ணடிமைத் தனத்தின் ஆணி வேராக இருக்கக்கூடும். //
இப்படி நேரம் காலம் தெரியாமல் அலைவதா பெண்ணீயம்?....எனக்குப்புரியவில்லை .............
நம் தளத்தில் இருக்கும் இந்த கதையை பாருங்கள்...............முள் - சிறுகதை
இது தானே யதார்த்தம்.......இப்படி நடக்கும்போது எப்படி ஒரு கணவன் தன் மனைவியை வெளியே அனுப்புவான்?..............அப்படி ஏதும் நடந்துவிட்டாலும் தன் மனைவியை வைத்து குடும்பம் நடத்தணும், அது தான் பெண்ணீயம் என்கிறாரா கட்டுரை ஆசிரியர்?....எனக்கு புரியவில்லை ..............
என்னுடைய இந்த கதையிலும் இதைத்தான் சொல்ல முயற்சித்தேன்
தன் வினை தன்னை சுடும்போது ???????????? by Krishnaamma
இந்த மனப்பான்மை மாறணும் என்று கட்டுரை ஆசிரியர் சொன்னால்....................
நம் சமுதாயம் ????????????????????
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பெண்ணியம் மலர வேண்டுமா?
ஆமாம் கிருஷ்ணாம்மா. முதலில் படித்துவிட்டு பேசாமல் தான் போய்விட்டேன். ஆனால், அப்படி வந்தது பொறுப்பில்லாத்தனமாக எனக்கே தோன்றியது. அதனால் தான் திரும்ப வந்து, பெண்ணீயத்துக்கு சம்மந்தமே இல்லாமல் இது தான் பெண்ணீயம் என்று கட்டுரை எழுதியவருக்காக என் கருத்தை பதிவு செய்தேன்.krishnaamma wrote:நிஜம் விமந்தினி, ,மேலே கட்டுரை இல் குறிப்பிடப்பட்டுள்ள இந்த வரிகள்பாருங்கள்...........விமந்தனி wrote:பெண்ணீயம் என்பதன் அர்த்தத்தை நம் சமுதாயம் என்று முழுமையாக புரிந்து கொள்ளுகிறதோ, அன்று தான் பெண்ணீயம் என்பது மலரும். அதுவரை இப்படி பேசிக்கொண்டே இருக்கவேண்டியது தான்.
//விருப்பப்பட்ட இடத்துக்கு, விருப்பப்பட்ட நேரத்தில், விருப்பப்பட்டவர்களுடன் போய் வரும் ஆண்கள் கூட்டம் தங்கள் மனைவியையோ இல்லை மகளையோ அவ்வாறான சுதந்திரத்திற்கு அனுமதிப்பார்களா? ஆணுக்கு ஒரு பார்வை, பெண்ணுக்கு ஒரு பார்வை என்பதே பெண்ணடிமைத் தனத்தின் ஆணி வேராக இருக்கக்கூடும். //
இப்படி நேரம் காலம் தெரியாமல் அலைவதா பெண்ணீயம்?....எனக்குப்புரியவில்லை .............
நம் தளத்தில் இருக்கும் இந்த கதையை பாருங்கள்...............முள் - சிறுகதை
இது தானே யதார்த்தம்.......இப்படி நடக்கும்போது எப்படி ஒரு கணவன் தன் மனைவியை வெளியே அனுப்புவான்?..............அப்படி ஏதும் நடந்துவிட்டாலும் தன் மனைவியை வைத்து குடும்பம் நடத்தணும், அது தான் பெண்ணீயம் என்கிறாரா கட்டுரை ஆசிரியர்?....எனக்கு புரியவில்லை ..............
என்னுடைய இந்த கதையிலும் இதைத்தான் சொல்ல முயற்சித்தேன்
தன் வினை தன்னை சுடும்போது ???????????? by Krishnaamma
இந்த மனப்பான்மை மாறணும் என்று கட்டுரை ஆசிரியர் சொன்னால்....................
நம் சமுதாயம் ????????????????????
முதலில் கட்டுரை ஆசிரியர் என்ன சொல்லவருகிறார் என்றே எனக்கு புரியவில்லை.
//ஆணுக்குப் பெண் சமமென முழங்கி இன்று பல பெண்கள் எமது கலாசாரத்தைத் தொலைத்துத் திரிவதுதான் பெண்ணியமா? எடுத்ததற்கெல்லாம் சண்டையிட்டு இதுதான் பெண்விடுதலையென்று விவகாரத்து பெற்றுச் செல்வதுதான் பெண்ணியமா?.// - இப்படியும் சொல்கிறார்.
//விருப்பப்பட்ட இடத்துக்கு, விருப்பப்பட்ட நேரத்தில், விருப்பப்பட்டவர்களுடன் போய் வரும் ஆண்கள் கூட்டம் தங்கள் மனைவியையோ இல்லை மகளையோ அவ்வாறான சுதந்திரத்திற்கு அனுமதிப்பார்களா? ஆணுக்கு ஒரு பார்வை, பெண்ணுக்கு ஒரு பார்வை ...// - என்று இப்படியும் சொல்கிறார்.
பெண்ணீயம் என்றால் என்ன என்று அவராலேயே ஒரு கணிப்பிற்கு வரமுடியாத குழப்பத்தில் இருக்கிறார் என்று நினைக்கிறேன்.
சுதந்திரம் என்பது எது என்று முதலில் ஒரு முடிவுக்கு வரவேண்டும். என் இஷ்டப்படி எப்படிவேண்டுமாலும் இருப்பேன் என்றால் அதன் பெயர் சுதந்திரமில்லை. காட்டுமிராண்டித்தனம்.... கற்கால வாழ்க்கை...
எப்படிவேண்டுமானாலும் வாழலாம் என்ற மிருகங்கள் கூட தங்களுக்குள் சில கட்டுப்பாடுகளை பின்பற்றுகின்றன.
ஆணானாலும், பெண்ணானாலும் தத்தம் வாழ்க்கையில் யாரையாவது சார்ந்து தான் வாழ்கிறார்கள். பெண் மட்டுமா தான் குடும்பத்துக்காக உழைத்து தேய்ந்து போகிறாள்? ஏன் தன் குடும்பத்திற்காக எந்த ஆணும் உழைப்பதில்லையா...? சம்பாதிப்பதை எல்லாம் மனைவி பேருக்கே சொத்தாக வாங்கி குவிப்போர் இல்லையா...?
அப்படியிருக்கும் போது //திருமணமாகி குடும்ப வாழ்க்கையில் கட்டுண்டிருக்கும் யாராவது ஒரு பெண்ணாவது நான் எந்தவொரு வகையிலும் ஆணைச் சார்ந்தோ அவனுக்குக் கட்டுப்பட்டோ இல்லாமல் சரிநிகராகத்தான் இருக்கிறேனென்று மனசாட்சியில் கைவைத்துக் கூறமுடியுமா? // - என்று இந்த அபத்தமான கேள்வி எங்கிருந்து வந்தது...?
இன்னும் விரிவாக பேசிக்கொண்டே போகலாம். ஆனால், //இதில் சமுதாயம் என்பதற்கு ஆண்கள் மட்டுமே என்று எடுத்துக் கொள்ள வழியின்றி பெண்ணியத்துக்கு எதிரியாய் சில பெண்களும் ஒளிந்திருக்கும் ஒரு உண்மையாகும்.// - என்று நமக்கும் முத்திரை குத்திவிடுவார்கள். இன்னும் ஒரு படி அதிகமாக போய் நம்மை பழைய பஞ்சாங்கம் என்பார்கள்....
முள் சிறுகதை மிக அற்புதமான படைப்பு கிருஷ்ணாம்மா. இப்போதைய பல இளம்பெண்களின் மன நிலையை மிக அழகாக சித்தரித்திருக்கிறது. இது தான் யதார்த்தம். பேசவேண்டிய இடத்தில் பேசமுடியாமல் வாயடைத்து நிற்கும் பெண்கள் தான் எனக்கு சுதந்திரம் வேண்டும் என்று கேட்பவர்கள்....
நம் நாட்டில் பெண்களின் மதிப்பு என்றும் குறையவில்லை. அன்றும், இன்றும், என்றும். பெண் தன் எல்லை உணர்ந்து தாண்டாதவரையிலும்...
ஒரு பெண் எந்த சூழ்நிலையிலுமே அனாதையாவதில்லை தெரியுமா...? ஆனால், கட்டியவள் சரியில்லாமல் போனால், அந்த ஆணின் நிலை மிக, மிக பரிதாபத்திற்குரியது ஆகிவிடுகிறது. எத்தனை பேர் சுற்றி இருந்தாலும், அவன் தன்னை அனாதையாகவே தான் நினைக்கின்றான்.
ஒரு ஆணை சார்ந்து இருப்பதில் பெண் எப்போதுமே அவமானமாய் கருத மாட்டாள்.
எந்த ஒரு இடத்தில் பிறரது உணர்வுகளை மதித்து ஒருவருக்கொருவர் நடந்து கொள்கிறோமோ அங்கே பெண்ணீயம் மட்டுமல்ல, மனிதமும் மலரும் என்பது என் கருத்து.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: பெண்ணியம் மலர வேண்டுமா?
விமந்தனி அக்கா , நன்றாக எழுதி இருக்கிறீர்கள் ... நீங்கள் சொல்வது போல் .. இந்த கட்டுரையை ஒரு அவசரத்தில் படித்தால் , பாரா பாரா வா படித்தால் சரியாகவே தோன்றும் ... ஆனால் ஒரு கோர்வையா படித்தால் .. எழுதியவரே குழப்பத்தில் தான் உள்ளார் என்று தெரிகிறது ...
நானும் ஏமாந்து விட்டு , அப்படி பின்னூட்டம் போட்டு விட்டேன் ... பொறுப்பில்லாமல் .
தெளிவு கொடுத்ததற்கு நன்றி . வி பொ பா
நானும் ஏமாந்து விட்டு , அப்படி பின்னூட்டம் போட்டு விட்டேன் ... பொறுப்பில்லாமல் .
தெளிவு கொடுத்ததற்கு நன்றி . வி பொ பா
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: பெண்ணியம் மலர வேண்டுமா?
shobana sahas wrote:விமந்தனி அக்கா , நன்றாக எழுதி இருக்கிறீர்கள் ... நீங்கள் சொல்வது போல் .. இந்த கட்டுரையை ஒரு அவசரத்தில் படித்தால் , பாரா பாரா வா படித்தால் சரியாகவே தோன்றும் ... ஆனால் ஒரு கோர்வையா படித்தால் .. எழுதியவரே குழப்பத்தில் தான் உள்ளார் என்று தெரிகிறது ...
நானும் ஏமாந்து விட்டு , அப்படி பின்னூட்டம் போட்டு விட்டேன் ... பொறுப்பில்லாமல் .
தெளிவு கொடுத்ததற்கு நன்றி . வி பொ பா
கிருஷ்ணாம்மா கொடுத்து இருக்கும் இரண்டு சிறுகதைகளை படித்தீர்களா ஷோபனா?
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: பெண்ணியம் மலர வேண்டுமா?
இது தவறு ஷோபனா. நம்மிடம் உள்ள பலவீனமே இதுதான். நமக்காக ஒருவர் வக்காலத்து வாங்குகிறார் என்றாலே.. ஏன், எதற்கு என்று கொஞ்சமும் யோசிக்காமல் ஏமாந்து தான் விடுகிறோம்.shobana sahas wrote:விமந்தனி அக்கா , நன்றாக எழுதி இருக்கிறீர்கள் ... நீங்கள் சொல்வது போல் .. இந்த கட்டுரையை ஒரு அவசரத்தில் படித்தால் , பாரா பாரா வா படித்தால் சரியாகவே தோன்றும் ... ஆனால் ஒரு கோர்வையா படித்தால் .. எழுதியவரே குழப்பத்தில் தான் உள்ளார் என்று தெரிகிறது ...
நானும் ஏமாந்து விட்டு , அப்படி பின்னூட்டம் போட்டு விட்டேன் ... பொறுப்பில்லாமல் .
தெளிவு கொடுத்ததற்கு நன்றி . வி பொ பா
தேவையில்லாத விஷயங்களுக்கெல்லாம் வீண் ஆராய்ச்சி செய்யும் பெண்கள் தேவையான விஷயங்களில் கொட்டைவிட்டுவிடுவதன் பலனை தான் பல பெண்கள் அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள். இதில் தவறு யாருடையது? ஏமாற்றியவரா? ஏமாந்தவரா?
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Page 1 of 2 • 1, 2
Similar topics
» திருமணம் ஆகவேண்டுமா? ராகு-கேது தோஷம் நீங்க வேண்டுமா? திருஷ்டி கழிய வேண்டுமா?
» வரம் வேண்டுமா? சாபம் வேண்டுமா?
» வரம் வேண்டுமா, வரன் வேண்டுமா
» பெண்ணியம்
» பெண்ணியம்...
» வரம் வேண்டுமா? சாபம் வேண்டுமா?
» வரம் வேண்டுமா, வரன் வேண்டுமா
» பெண்ணியம்
» பெண்ணியம்...
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|