ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்!

3 posters

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Go down

மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 5 Empty மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்!

Post by சிவா Tue Aug 04, 2015 12:48 am

First topic message reminder :

மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 5 Tasmac%20protest%201
கடந்த ஒருவாரமாக தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் மதுவிலக்கு கோரி பொதுமக்கள் நடத்தும் போராட்டங்கள் ஆளும் அரசுக்கு நெருக்கடியை உண்டாக்கியிருக்கிறது.அதனால்தான் தலைமைச் செயலகம் வந்த முதல்வர் காவல்துறை அதிகாரிகளோடு மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து அவசர அவசரமாகக் கேட்டு அறிந்து இருக்கிறார்.

கோட்டையில் அவசர ஆலோசனை நடந்து கொண்டிருக்கும்போதே சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் அந்தக் கல்லூரி அமைந்துள்ள பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடைமுன்பு திரண்டனர்.புத்தகத்தைப் படிக்கவா சாராயத்தைக் குடிக்கவா என்று முழக்கங்கள் எழுப்பியவாறு டாஸ்மாக் கடையை மூடச் சொல்லி போராட்டம் நடத்தினர்.காவல்துறை அனுமதி மறுத்து அவர்கள் மீது தாக்குதல் நடத்த மாணவர்களும் விடாமல் போராடினர்.ஒரு கட்டத்தில் டாஸ்மாக் கடைமீது கல்லெறிந்து அடித்து நொறுக்கினர்.அப்போது நிகழ்ந்த தள்ளுமுள்ளுவில் காவல்துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்ட மாணவர்கள் சிலர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவுகிறது.

விருத்தாசலம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு முன்பாகத் திரண்ட இளைஞர்கள் நெடுநாட்களாக பல்வேறு பிரச்சனைகள் எழ காரணமாக இருந்த,தமிழக அரசு நடத்திவரும் டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கியுள்ளனர்.இன்னும் பல இடங்களில் பொதுமக்கள்,வயது வித்தியாசம் இன்றி தாமாகவே முன்வந்து டாஸ்மாக் கடைகளை முற்றுகையிட்டு மூடவலியுறுத்தி `மதுவிலக்கு` என்ற சமுதாய ஆரோக்கிய தீபத்தை ஏற்ற கோரிக்கை விடுத்த வண்ணம் இருக்கின்றனர்.

தமிழகத்தில் மதுவிலக்கு கொண்டுவர வலியுறுத்தி போராட்டங்கள் நடப்பது ஐம்பது ஆண்டுகளுக்கு மேலான வரலாற்றைக் கொண்டது.மதுவிலக்கை வலியுறுத்தி பெரியார் தனது தோட்டத்தில் இருந்த நூற்றுக் கணக்கான தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தினார். அவர் காலம் தொடங்கி காங்கிரஸ்,திமுக,அதிமுக என்று கட்சிகள் மாறிமாறி தமிழகத்தில் ஆட்சி செலுத்திய போதும் மதுவிலக்குக் கொள்கை மட்டும் ஆளும் ஆண்ட கட்சிகளுக்கு வேப்பங்காயாக கசக்கவே செய்தது;கசந்தும் வருகிறது. இதில் ஆட்சி அதிகாரம் வகிப்போரே மதுபானம் தயாரிக்கும் ஆலைகளை நடத்தி வருவதும் மதுபான விடுதிகள் பார்கள் நடத்திவருவதும் யதார்த்தம்.

கடந்த 31ஆம் தேதி மதுவிலக்கு கொண்டுவர வலியுறுத்தி மார்த்தாண்டத்தில் செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்திய காந்தியவாதி சசிபெருமாள் பரிதாபமாக இறந்தார். 5 மணி நேரத்திற்கும் மேலாக பல நூறு அடிக்கும் அதிகமான உயரம் கொண்ட செல்போன் டவரில் நின்றபடி போராடிய அவர்,போலீசாரின் தவறான அணுகுமுறையால்,அரசின் மெத்தனத்தால் உடல் நலம் பாதிக்கப்பட்டு ரத்த வாந்தி எடுத்த நிலையில் பிணமானார். ஒட்டுமொத்த தமிழகமும் காட்டுத் தீயென பரவிய காந்தியவாதி சசிபெருமாள் மரணச் செய்தி அரசியல் இயக்கங்களை ஒன்று படுத்தி,கடந்த 4 நாட்களாக போராட்டங்களைத் தீவிரப்படுத்தி இருக்கிறது.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவரின் தாயாரோடும் மதுவிலக்கு போராட்டத்தை சொந்த ஊரான கலிங்கப்பட்டியிலிருந்து முன்னெடுத்து இருக்கிறார்.நேற்று(ஞாயிறு)அங்கு நடந்த போரட்டத்தில் போலீசார் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி போராட்டக்காரர்களைக் கலைத்துள்ளனர்.இது மேலும் எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றியது போல மாறி இருப்பதை இன்று(திங்கள்) நடந்து வரும் போராட்ட சம்பவங்கள் காட்டுகின்றன.

காந்தியவாதி சசிபெருமாளின் சொந்த ஊரில் அவரின் வாரிசுகளும்,அரசியல் இயக்கங்களும் அவர் வலியுறுத்திய மதுவிலக்கு போராட்ட தீபத்தை கையிலெடுத்துள்ளனர்.போலீசாரின் மிரட்டல்களுக்கும் கைது கொடுமைகளுக்கும் அஞ்சாமல் தியாகி சசிபெருமாளின் மகள் கவியரசி பள்ளிச் செல்லும் சிறுமியும் சிறைக்குள் தள்ளப்பட்டு இருக்கிறார். வேலூர்,சேலம்,காஞ்சிபுரம் என்று பல்வேறு பகுதிகளில் இருக்கும் செல்போன் கோபுரங்களில் ஏறி இளைஞர்கள் போராடி வருகிறார்கள்.அவர்களிடம் மிரட்டல் விடுக்கும் காவல்துறை சமாதானம் பேசுவது போல பேசி கீழிறங்க வைத்து கைது செய்து வருகிறார்கள் தமிழகம் முழுவதும் உள்ள பல ஆயிரம் செல்போன் டவர்கள் தற்போது போலீசாரின் காவலில் இருக்கின்றன.

தற்போது மதுவிலக்கு போராட்டம் கல்லூரி மாணவர்கள் மத்தியிலும் பரவியுள்ளது.சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் அதனைத் தொடங்கி வைத்துள்ளனர்.மதுரையில் மதிமுக பொதுச் செயலாளர் தமிழக கல்லூரி மாணவர்கள் கையில்தான் மதுவிலக்கு உள்ளது.அதனால் 1965 ஆம் ஆண்டு மொழிப் போராட்டங்களில் மாணவர்கள் பங்காற்றியது போல இப்போது மதுவிலக்கிலும் பங்கெடுக்கவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். நாளை(செவ்வாய்) தமிழகம் முழுவதும் மதிமுக,கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக,தேமுதிக, காங்கிரஸ், வணிகர் சங்கங்கள் மற்றும் பால் நுகர்வோர் சங்கம் ஆகியவை இணைந்து மதுவிலக்கு கோரும் பந்த் நடத்த உள்ளனர். இதற்கு,பாஜகவும் திமுகவும் ஆதரவை வழங்கியுள்ளன.

35 ஆண்டுகளாக மது ஒழிப்புக்காகப் போராடி வரும் டாக்டர் ராமதாஸ்,பாமக இதில் பங்கேற்காது என்று கூறிவிட்டார். தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியும் இதில் பங்கேற்காது என்றும் ஆனால் மதுவிலக்குக் கொள்கையை மதிக்கிறோம் என்றும் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். பந்த் மூலம் பெருமளவில் மதுவிலக்கு ஆதரவை திரட்ட இந்தக் கட்சிகள் முடிவு செய்து பெருமளவில் திட்டமிட்டுள்ளன.

வரும் 6 ஆம் தேதி தேமுதிக சார்பில் சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெறவுள்ளது.அடுத்து வரும் 10 ஆம் தேதி மதுவிலக்கை நடைமுறைப்படுத்த கோரி திமுக சார்பில் அறவழியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.தமிழகம் முழுக்க மதுவிலக்கு கோரிக்கை வலிமையடைந்துள்ளது.ஆனால் ஆளும் அரசுத் தரப்பில் கோரிக்கை நிறைவேற்றப்படுவது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் போராட்டத்தை எப்படி நீர்த்துப் போகச் செய்யலாம் என்ற கோணத்தில் ஆலோசிக்கப்படுவதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 5 Empty Re: மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்!

Post by சிவா Sat Aug 08, 2015 1:25 pm

மதுவுக்கு 4,011 டாஸ்மாக் ஊழியர்கள் பலி: கடைகளை மூட பணியாளர்களே வலியுறுத்தல்

தமிழகத்தில் மதுவுக்கு அடிமையாகி கடந்த 13 ஆண்டுகளில் 4,011 டாஸ்மாக் ஊழியர்கள் இறந்துள்ளனர். அதனால், மதுக்கடை களை மூடிவிட்டு, மாற்றுப்பணி வழங்க வேண்டும் என அரசுக்கு டாஸ்மாக் பணியாளர் சங்கங்களே வலியுறுத்தியுள்ளன.

தமிழகத்தில் 2003-ம் ஆண்டு நவம்பர் 29-ம் தேதி அரசு டாஸ் மாக் சில்லறை விற்பனை தொடங் கப்பட்டது. ஆரம்பத்தில், டாஸ்மாக் கடைகளில் பணிபுரிய மேற்பார்வை யாளர்களுக்கு ரூ.2 ஆயிரம், விற்பனையாளர்களுக்கு ரூ.1,500 என ஊதியம் நிர்ணயிக்கப்பட்டது. இப்பணிக்கு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

குடும்பத்தில் விருப்பமோ, சமுதாயத்தில் மரியாதையோ இல்லாத இந்த வேலையில் சேர இளைஞர்கள் ஆர்வம் செலுத்தாத தால் மேற்பார்வையாளருக்கு ரூ.3,000, விற்பனையாளருக்கு ரூ.2,000, உதவி விற்பனையாள ருக்கு ரூ.1,500 ஊதியம் வழங்கப் படும் என மீண்டும் அறிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து இந்த வேலைக்கு எஸ்.எஸ்.எல்.சி. முதல் பட்டதாரிகள் வரை விண் ணப்பித்தனர். இவர்களில், 36,000 பேரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் தேர்வு செய்து, 6,286 கடைகளில் பணி நியமனம் செய்தனர். தற்போது டாஸ்மாக் கடைகள் எண்ணிக்கை 6,856 ஆக அதிகரித்துள்ளன.

இதுபோன்ற சூழ்நிலையில், தமிழகத்தில் கடந்த 13 ஆண்டுகளில் மதுவுக்கு அடிமையாகி டாஸ்மாக் கடைகளில் பணிபுரிந்த 4,011 ஊழி யர்கள் மரணமடைந்துள்ளனர். அதனால், டாஸ்மாக் கடை களை மூடிவிட்டு மாற்றுப் பணி வழங்க வேண்டும் என டாஸ்மாக் பணியாளர்கள் சங்கங்களே தற்போது அரசை வலியுறுத்தி வருகின்றன.

இதுகுறித்து தமிழ்நாடு டாஸ்மாக் ஏ.ஐ.டியூ.சி. சங்க மாநில பொதுச்செயலர் தனசேகரன் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

டாஸ்மாக் நிறுவனத்தில் வரு வாய் 2004-ம் ஆண்டு ரூ.4,867 கோடியாக இருந்தது. இது தற் போது ரூ.26,852 கோடியாக அதிகரித்துள்ளது. குடிப்பவர் கள் எண்ணிக்கையும், கடைகள் எண்ணிக்கையும் அதிகரித்துவிட் டன. ஆனால், டாஸ்மாக் ஊழி யர்கள் எண்ணிக்கை மட்டும் நாளுக்குநாள் சுருங்கி வருகிறது. 36 ஆயிரமாக இருந்த ஊழியர்கள் எண்ணிக்கை, 26,865 பேராக குறைந்துவிட்டனர்.

டாஸ்மாக் கடைகள் தொடங் கியபோது நான்கு ஆண்டு வேலை நியமன தடை சட்டம் நடைமுறையில் இருந்தது. இதனால், படித்த இளைஞர்களுக்கு வேறு வாழ்வாதாரம் இல்லாததால் இந்த வேலையில் சேர்ந்தோம். அதன்பின் போதுமான ஊதி யம் இல்லை. சலுகைகள் இல்லாததால் பெரும்பாலான ஊழியர்கள் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகிவிட்டனர்.

அதனால் சமுதாயத்திலும், குடும்பத்திலும் மதிப்பில்லாத இந்த வேலையில் தொடர விருப்பம் இல்லாத டாஸ்மாக் ஊழியர்கள் பலர் சுயதொழில், குரூப்-2, குரூப்-4 தேர்வு எழுதி அரசுப் பணிக்கு சென்றுவிட்டனர்.

1,500 பேர் முதல் 2,000 பேர் வரை தற்போது ‘சஸ்பெண்ட்’, ‘டிஸ்மிஸ்’ நடவடிக்கையில் உள் ளனர். மீதியுள்ளவர்களில் 4,011 பேர் மரணமடைந்துள்ளனர். குறிப்பாக கடந்த 2012, 2013, 2014 ஆகிய மூன்று ஆண்டுகளில் 600-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இதற்கு காரணம் அவர்கள் மதுவுக்கு அடிமையானதே.

பலர் குடித்துவிட்டுதான் கடையை திறக்கின்றனர். இவர் கள் குடித்துவிட்டு வாக னத்தை ஓட்டுவதால் விபத்தில் மரணமடைகின்றனர். பலர் உடல் நலத்தை பராமரிக்காமல் மது குடித்தே மாரடைப்பு, கல்லீரல், மஞ்சள் காமாலை நோயால் இறக்கின்றனர்.

வெளியூர்களில் தங்கி பணி புரியும் ஊழியர்கள், வாரம் ஒருமுறை அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வீட்டுக் குச் செல்கின்றனர். அதனால், இயற்கையாகவே குடும்பங்களில் பிரச்சினை ஏற்பட்டு புரிதல் இல்லாமல் பலர் தற்கொலை செய்துள்ளனர்.

சனி, ஞாயிறு விடுப்பு வேண்டும்

இவ்வாறு டாஸ்மாக் ஊழியர்கள் 4,011 பேரின் மரணத்துக்கு அடிப்படை காரணமாக மது இருந் துள்ளது. கடந்த 13 ஆண்டு களில் மது வாங்க வரும் வாடிக்கையாளர்களின் கண்ணீர் அஞ்சலி போஸ்டரை பார்க்கிறோம். அதற்கு நாங்களும் ஒரு வகையில் காரணம் என்கிறபோது வேதனையாக உள்ளது.

அதனால், டாஸ்மாக் கடை களை மூட வேண்டும் என்பதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. முதற்கட்டமாக மாதத்தின் முதல் சனி, ஞாயிறு விடுமுறை அளிக்க வேண்டும். விற்பனை நேரத்தை குறைக்க வேண்டும். மதுக்கடைகளின் எண்ணிக்கையை குறைத்து படிப்படியாக மூடலாம் என்றார்.

டாஸ்மாக் நிறுவனத்தில் வருவாய் 2004-ம் ஆண்டு ரூ.4,867 கோடியாக இருந்தது. இது தற்போது ரூ.26,852 கோடியாக அதிகரித்துள்ளது. குடிப்பவர்கள் எண்ணிக்கையும், கடைகள் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டன.


மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 5 Empty Re: மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்!

Post by சிவா Sun Aug 09, 2015 10:00 pm

மதுவிலக்கு: தமிழகம் முழுவதும் நாளை திமுக ஆர்ப்பாட்டம்

மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை திமுக ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது.

மதுவிலக்குக் கோரி எதிர்க்கட்சிகள் பல்வேறு வகையில் போராட்டம் நடத்தி வருகின்றன.

திமுக சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் இந்த ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.


மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 5 Empty Re: மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்!

Post by சிவா Sun Aug 09, 2015 10:04 pm

மதுவிலக்குக்கு வாய்ப்பு இல்லையென்றால், படிப்படியாக குறையுங்கள்

பூரண மதுவிலக்குக்கு வாய்ப்பு இல்லையென்றால், படிப்படியாக மதுக்கடைகளின் எண்ணிக்கையையும், விற்பனை நேரத்தையும் குறைக்க வேண்டும் என்று தேமுதிகவின் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சுதந்திரத் தினத்தன்று அதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

பூரண மதுவிலக்கை அமல்படுத்த வாய்ப்பில்லை என்றாலும், பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக, படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்தும் வேண்டும்.

ஆகஸ்டு 15 சுதந்திரத் தினத்தன்று மதுக்கடைகளின் எண்ணிக்கையையும், விற்பனை நேரத்தையும் குறைத்து, 21 வயது பூர்த்தியானவர்களுக்கு மட்டுமே மதுவிற்பனை செய்யப்படும் எனும் அறிவிப்பை முதல்வர் ஜெயலலிதா வெளியிடவேண்டும்.

அக்டோபர் 2-ஆம் காந்தி ஜெயந்தி அன்று அந்த அறிவிப்பை அமல்படுத்த வேண்டும்.


மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 5 Empty Re: மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்!

Post by krishnaamma Sun Aug 09, 2015 11:31 pm

சிவா wrote:மதுவிலக்குக்கு வாய்ப்பு இல்லையென்றால், படிப்படியாக குறையுங்கள்

பூரண மதுவிலக்குக்கு வாய்ப்பு இல்லையென்றால், படிப்படியாக மதுக்கடைகளின் எண்ணிக்கையையும், விற்பனை நேரத்தையும் குறைக்க வேண்டும் என்று தேமுதிகவின் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சுதந்திரத் தினத்தன்று அதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

பூரண மதுவிலக்கை அமல்படுத்த வாய்ப்பில்லை என்றாலும், பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக, படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்தும் வேண்டும்.

ஆகஸ்டு 15 சுதந்திரத் தினத்தன்று மதுக்கடைகளின் எண்ணிக்கையையும், விற்பனை நேரத்தையும் குறைத்து, 21 வயது பூர்த்தியானவர்களுக்கு மட்டுமே மதுவிற்பனை செய்யப்படும் எனும் அறிவிப்பை முதல்வர் ஜெயலலிதா வெளியிடவேண்டும்.

அக்டோபர் 2-ஆம் காந்தி ஜெயந்தி அன்று அந்த அறிவிப்பை அமல்படுத்த வேண்டும்.
மேற்கோள் செய்த பதிவு: 1156770

ம்...செய்தால் நல்லது புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 5 Empty Re: மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum