புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:56 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:52 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:53 pm

» அனுபவ பாடம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:47 pm

» செவிலியர் தினம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:46 pm

» காலம் கணிக்கும் உயிர்த்தோட்டம்
by ayyasamy ram Today at 1:46 pm

» கனவு ராஜாங்கம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:43 pm

» பொற்காலப் புதல்வர் காமராஜர்
by ayyasamy ram Today at 1:43 pm

» ஆத்மாக்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:42 pm

» மண நாள் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:41 pm

» பார்த்து…பார்த்து…!
by ayyasamy ram Today at 1:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:58 am

» மனிதனின் மன நிலைகள் :-
by selvanrajan Today at 9:04 am

» என் புள்ள சிங்கம்டா...!
by ayyasamy ram Today at 8:56 am

» ஜோதிடரை பரிந்துரைக்க முடியுமா
by raajmithun Today at 2:01 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:24 pm

» கருத்துப்படம் 16/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:18 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:40 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:22 pm

» தலைவலி குறைய...
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 11:44 am

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Yesterday at 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Yesterday at 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Yesterday at 11:39 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Yesterday at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Yesterday at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 10:11 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Mon Jul 15, 2024 9:30 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 4 Poll_c10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 4 Poll_m10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 4 Poll_c10 
53 Posts - 50%
heezulia
மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 4 Poll_c10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 4 Poll_m10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 4 Poll_c10 
34 Posts - 32%
Dr.S.Soundarapandian
மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 4 Poll_c10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 4 Poll_m10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 4 Poll_c10 
6 Posts - 6%
T.N.Balasubramanian
மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 4 Poll_c10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 4 Poll_m10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 4 Poll_c10 
4 Posts - 4%
kavithasankar
மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 4 Poll_c10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 4 Poll_m10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 4 Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 4 Poll_c10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 4 Poll_m10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 4 Poll_c10 
2 Posts - 2%
prajai
மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 4 Poll_c10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 4 Poll_m10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 4 Poll_c10 
2 Posts - 2%
rajuselvam
மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 4 Poll_c10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 4 Poll_m10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 4 Poll_c10 
1 Post - 1%
mruthun
மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 4 Poll_c10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 4 Poll_m10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 4 Poll_c10 
1 Post - 1%
selvanrajan
மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 4 Poll_c10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 4 Poll_m10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 4 Poll_c10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 4 Poll_m10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 4 Poll_c10 
239 Posts - 43%
heezulia
மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 4 Poll_c10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 4 Poll_m10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 4 Poll_c10 
222 Posts - 40%
Dr.S.Soundarapandian
மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 4 Poll_c10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 4 Poll_m10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 4 Poll_c10 
24 Posts - 4%
mohamed nizamudeen
மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 4 Poll_c10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 4 Poll_m10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 4 Poll_c10 
16 Posts - 3%
i6appar
மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 4 Poll_c10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 4 Poll_m10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 4 Poll_c10 
16 Posts - 3%
Anthony raj
மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 4 Poll_c10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 4 Poll_m10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 4 Poll_c10 
13 Posts - 2%
T.N.Balasubramanian
மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 4 Poll_c10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 4 Poll_m10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 4 Poll_c10 
13 Posts - 2%
prajai
மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 4 Poll_c10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 4 Poll_m10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 4 Poll_c10 
6 Posts - 1%
kavithasankar
மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 4 Poll_c10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 4 Poll_m10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 4 Poll_c10 
3 Posts - 1%
Guna.D
மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 4 Poll_c10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 4 Poll_m10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 4 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்!


   
   

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 04, 2015 12:48 am

First topic message reminder :

மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 4 Tasmac%20protest%201
கடந்த ஒருவாரமாக தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் மதுவிலக்கு கோரி பொதுமக்கள் நடத்தும் போராட்டங்கள் ஆளும் அரசுக்கு நெருக்கடியை உண்டாக்கியிருக்கிறது.அதனால்தான் தலைமைச் செயலகம் வந்த முதல்வர் காவல்துறை அதிகாரிகளோடு மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து அவசர அவசரமாகக் கேட்டு அறிந்து இருக்கிறார்.

கோட்டையில் அவசர ஆலோசனை நடந்து கொண்டிருக்கும்போதே சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் அந்தக் கல்லூரி அமைந்துள்ள பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடைமுன்பு திரண்டனர்.புத்தகத்தைப் படிக்கவா சாராயத்தைக் குடிக்கவா என்று முழக்கங்கள் எழுப்பியவாறு டாஸ்மாக் கடையை மூடச் சொல்லி போராட்டம் நடத்தினர்.காவல்துறை அனுமதி மறுத்து அவர்கள் மீது தாக்குதல் நடத்த மாணவர்களும் விடாமல் போராடினர்.ஒரு கட்டத்தில் டாஸ்மாக் கடைமீது கல்லெறிந்து அடித்து நொறுக்கினர்.அப்போது நிகழ்ந்த தள்ளுமுள்ளுவில் காவல்துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்ட மாணவர்கள் சிலர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவுகிறது.

விருத்தாசலம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு முன்பாகத் திரண்ட இளைஞர்கள் நெடுநாட்களாக பல்வேறு பிரச்சனைகள் எழ காரணமாக இருந்த,தமிழக அரசு நடத்திவரும் டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கியுள்ளனர்.இன்னும் பல இடங்களில் பொதுமக்கள்,வயது வித்தியாசம் இன்றி தாமாகவே முன்வந்து டாஸ்மாக் கடைகளை முற்றுகையிட்டு மூடவலியுறுத்தி `மதுவிலக்கு` என்ற சமுதாய ஆரோக்கிய தீபத்தை ஏற்ற கோரிக்கை விடுத்த வண்ணம் இருக்கின்றனர்.

தமிழகத்தில் மதுவிலக்கு கொண்டுவர வலியுறுத்தி போராட்டங்கள் நடப்பது ஐம்பது ஆண்டுகளுக்கு மேலான வரலாற்றைக் கொண்டது.மதுவிலக்கை வலியுறுத்தி பெரியார் தனது தோட்டத்தில் இருந்த நூற்றுக் கணக்கான தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தினார். அவர் காலம் தொடங்கி காங்கிரஸ்,திமுக,அதிமுக என்று கட்சிகள் மாறிமாறி தமிழகத்தில் ஆட்சி செலுத்திய போதும் மதுவிலக்குக் கொள்கை மட்டும் ஆளும் ஆண்ட கட்சிகளுக்கு வேப்பங்காயாக கசக்கவே செய்தது;கசந்தும் வருகிறது. இதில் ஆட்சி அதிகாரம் வகிப்போரே மதுபானம் தயாரிக்கும் ஆலைகளை நடத்தி வருவதும் மதுபான விடுதிகள் பார்கள் நடத்திவருவதும் யதார்த்தம்.

கடந்த 31ஆம் தேதி மதுவிலக்கு கொண்டுவர வலியுறுத்தி மார்த்தாண்டத்தில் செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்திய காந்தியவாதி சசிபெருமாள் பரிதாபமாக இறந்தார். 5 மணி நேரத்திற்கும் மேலாக பல நூறு அடிக்கும் அதிகமான உயரம் கொண்ட செல்போன் டவரில் நின்றபடி போராடிய அவர்,போலீசாரின் தவறான அணுகுமுறையால்,அரசின் மெத்தனத்தால் உடல் நலம் பாதிக்கப்பட்டு ரத்த வாந்தி எடுத்த நிலையில் பிணமானார். ஒட்டுமொத்த தமிழகமும் காட்டுத் தீயென பரவிய காந்தியவாதி சசிபெருமாள் மரணச் செய்தி அரசியல் இயக்கங்களை ஒன்று படுத்தி,கடந்த 4 நாட்களாக போராட்டங்களைத் தீவிரப்படுத்தி இருக்கிறது.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவரின் தாயாரோடும் மதுவிலக்கு போராட்டத்தை சொந்த ஊரான கலிங்கப்பட்டியிலிருந்து முன்னெடுத்து இருக்கிறார்.நேற்று(ஞாயிறு)அங்கு நடந்த போரட்டத்தில் போலீசார் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி போராட்டக்காரர்களைக் கலைத்துள்ளனர்.இது மேலும் எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றியது போல மாறி இருப்பதை இன்று(திங்கள்) நடந்து வரும் போராட்ட சம்பவங்கள் காட்டுகின்றன.

காந்தியவாதி சசிபெருமாளின் சொந்த ஊரில் அவரின் வாரிசுகளும்,அரசியல் இயக்கங்களும் அவர் வலியுறுத்திய மதுவிலக்கு போராட்ட தீபத்தை கையிலெடுத்துள்ளனர்.போலீசாரின் மிரட்டல்களுக்கும் கைது கொடுமைகளுக்கும் அஞ்சாமல் தியாகி சசிபெருமாளின் மகள் கவியரசி பள்ளிச் செல்லும் சிறுமியும் சிறைக்குள் தள்ளப்பட்டு இருக்கிறார். வேலூர்,சேலம்,காஞ்சிபுரம் என்று பல்வேறு பகுதிகளில் இருக்கும் செல்போன் கோபுரங்களில் ஏறி இளைஞர்கள் போராடி வருகிறார்கள்.அவர்களிடம் மிரட்டல் விடுக்கும் காவல்துறை சமாதானம் பேசுவது போல பேசி கீழிறங்க வைத்து கைது செய்து வருகிறார்கள் தமிழகம் முழுவதும் உள்ள பல ஆயிரம் செல்போன் டவர்கள் தற்போது போலீசாரின் காவலில் இருக்கின்றன.

தற்போது மதுவிலக்கு போராட்டம் கல்லூரி மாணவர்கள் மத்தியிலும் பரவியுள்ளது.சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் அதனைத் தொடங்கி வைத்துள்ளனர்.மதுரையில் மதிமுக பொதுச் செயலாளர் தமிழக கல்லூரி மாணவர்கள் கையில்தான் மதுவிலக்கு உள்ளது.அதனால் 1965 ஆம் ஆண்டு மொழிப் போராட்டங்களில் மாணவர்கள் பங்காற்றியது போல இப்போது மதுவிலக்கிலும் பங்கெடுக்கவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். நாளை(செவ்வாய்) தமிழகம் முழுவதும் மதிமுக,கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக,தேமுதிக, காங்கிரஸ், வணிகர் சங்கங்கள் மற்றும் பால் நுகர்வோர் சங்கம் ஆகியவை இணைந்து மதுவிலக்கு கோரும் பந்த் நடத்த உள்ளனர். இதற்கு,பாஜகவும் திமுகவும் ஆதரவை வழங்கியுள்ளன.

35 ஆண்டுகளாக மது ஒழிப்புக்காகப் போராடி வரும் டாக்டர் ராமதாஸ்,பாமக இதில் பங்கேற்காது என்று கூறிவிட்டார். தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியும் இதில் பங்கேற்காது என்றும் ஆனால் மதுவிலக்குக் கொள்கையை மதிக்கிறோம் என்றும் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். பந்த் மூலம் பெருமளவில் மதுவிலக்கு ஆதரவை திரட்ட இந்தக் கட்சிகள் முடிவு செய்து பெருமளவில் திட்டமிட்டுள்ளன.

வரும் 6 ஆம் தேதி தேமுதிக சார்பில் சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெறவுள்ளது.அடுத்து வரும் 10 ஆம் தேதி மதுவிலக்கை நடைமுறைப்படுத்த கோரி திமுக சார்பில் அறவழியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.தமிழகம் முழுக்க மதுவிலக்கு கோரிக்கை வலிமையடைந்துள்ளது.ஆனால் ஆளும் அரசுத் தரப்பில் கோரிக்கை நிறைவேற்றப்படுவது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் போராட்டத்தை எப்படி நீர்த்துப் போகச் செய்யலாம் என்ற கோணத்தில் ஆலோசிக்கப்படுவதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 04, 2015 11:46 pm

மதுக்கடைகளை ஒரே நாளில் மூடினால் நலத் திட்டங்கள் பாதிக்கும்: சரத்குமார்

மதுவிலக்கு போராட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க எதிர்க்கட்சிகள் முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது என்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.

மேலும், மதுக்கடைகளை ஒரே நாளில் மூடினால் மக்கள் நலத் திட்டங்கள் பாதிக்கும் என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சரத்குமார் வெளியிட்ட அறிக்கையில், "கூட்டு முயற்சி மூலமாகவே சமுதாயத்தில் மதுப் பழக்கத்தை நிறுத்த முடியும். ஆனால், மதுவிலக்கு போராட்டத்தை அரசுக்கு எதிரான போராட்டமாக மாற்ற நினைக்கின்றனர்.

அறவழிப் போராட்டம் என்ற பெயரில் சட்டத்துக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு விளம்பரம் தேடிக்கொள்கின்றனர். அப்பாவிகளையும் தூண்டி விடுகின்றனர்.

டாஸ்மாக் மூலம் கிடைக்கும் ரூ.30 ஆயிரம் கோடி வருவாயில் இலவசத் திட்டங்கள், சமூக நலத் திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. டாஸ்மாக் கடைகளை ஒரே நாளில் மூடினால் மக்கள் நலத் திட்டங்களை உடனடியாக நிறுத்தவேண்டிய நிலை ஏற்படும்.

குடிப்பழக்கம் உள்ளவர்களை படிப்படியாகவே அதில் இருந்து விடுவிக்க முடியும். இல்லாவிட்டால், எதிர்மறையான விளைவுகளே ஏற்படும்.

மது அருந்தக் கூடாது என்ற விழிப்புணர்வை அனைவரிடமும் ஏற்படுத்த வேண்டுமே தவிர, மதுவிலக்கு பிரச்சினையை கையில் எடுத்துக்கொண்டு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை உருவாக்க நினைப்பது கண்டிக்கத்தக்கது" என்று சரத்குமார் கூறியுள்ளார்.



மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 05, 2015 12:03 am

//மதுக்கடைகளை ஒரே நாளில் மூடினால் நலத் திட்டங்கள் பாதிக்கும்: சரத்குமார்//

அதுசரி...............புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 06, 2015 10:35 pm

அனுமதியின்றி போராட்டம்: தேமுதிக தலைவர் விஜயகாந்த் கைது

பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி சென்னையில் கோயம்பேடு முதல் கோட்டை வரை மனித சங்கிலி போராட்டத்தில் தேமுதிகவினர் ஈடுபட்டனர்.மனித சங்கிலி போராட்டத்திற்கு போலீசாரும், ஐகோர்ட்டும் அனுமதிக்காத நிலையில் அக்கட்சியினர் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் கைது செய்யப்பட்டார். அவருடன் 100-க்கும் மேற்பட்ட தேமுதிக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். விஜயகாந்த் கைது செய்யப்பட்டதையடுத்து தேமுதிக வினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட முயற்சித்தனர். தீவுத்திடல் அருகே தேமுதிக தொண்டர்கள் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சென்னை சென்ட்ரல், கீழ்பாக்கம் ஆகிய பகுதிகளில் போராட்டம் நடத்திய தேமுதிகவினரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், மதுரை, திண்டுக்கல், பெரம்பலூர் உள்ளிட்ட பல இடங்களிலும் தேமுதிகவினர் மதுவிலக்கை அமல்படுத்த கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.




மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 06, 2015 10:35 pm

தமிழகத்தில் கடைசி சொட்டு மது ஒழிக்கப்படும் வரை தொடர்ந்து போராடுவேன்- டாக்டர் ராமதாஸ்

தமிழகத்தில் கடைசி சொட்டு மது ஒழிக்கப்படும் வரை தொடர்ந்து நான் போராடுவேன் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக எதையும் செய்யக்கூடியவர் கருணாநிதி. விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் வரவிருக்கிறது என்பதால் தான், இதுவரை 5 முறை அளித்து நிறைவேற்றப்படாத மது விலக்கு வாக்குறுதியை மீண்டும் ஒருமுறை அளித்திருக்கிறார். கருணாநிதி கூற்றுப்படியே பார்த்தாலும் 1981-ம் ஆண்டில் மதுவிலக்கு ரத்து செய்யப்பட்ட பிறகு 35 ஆண்டுகளாக தமிழகத்தை மது அரக்கன் ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் நிலையில், அதற்கு எதிராக இதுவரை ஒரே ஒரு போராட்டமாவது நடத்தியதுண்டா? ஆனால், நான் அப்படியல்ல. கடந்த 35 ஆண்டுகளாக மதுவுக்கு எதிராக போராட்டம் நடத்துவதே எனது வாழ்க்கை முறையாக மாறியிருக்கிறது. உதாரணத்திற்காக ஒரு சில போராட்டங்களை மட்டும் பொதுமக்கள் பார்வைக்கு பட்டியலிடுகிறேன்...

*பா.ம.க. தொடங்கப்படுவதற்கு முன்பே 1984-ம் ஆண்டில் மதுவுக்கு எதிராக மக்களைத் திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினேன். 1989-ம் ஆண்டில் பா.ம.க. தொடங்கப்பட்டதும் நிறைவேற்றப்பட்ட 2-வது தீர்மானமே தமிழகத்தில் முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பது தான். 2004-ம் ஆண்டில் தமிழகம் முழுவதும் முழு மதுவிலக்கு கோரி பா.ம.க. மகளிர் அணி சார்பில் மதுக்கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம். தைலாபுரம் அருகிலுள்ள மதுக்கடைக்கு பூட்டுப் போட முயன்றபோது நானும் கைது ஆனேன். இந்த போராட்டத்தின்போது 15 ஆயிரம் பெண்கள் கைது செய்யப்பட்டு 30 நாட்கள் வரை சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

02.03.2007 அன்று மதுக்கடைகளில் குடிப்பகங்கள் திறப்பதை கண்டித்து எனது தலைமையில் தமிழகம் முழுவதும் போராட்டம். 23.11.2008 அன்று சென்னையில் மது ஒழிப்பு கலந்தாய்வுக் கூட்டம். 27.06.2009 சென்னையில் மகளிர் சங்கம் சார்பில் மது ஒழிப்பு பேரணி. 04.05.2011 மது விளம்பரத்தில் நடித்த கிரிக்கெட் வீரர் தோனியை கண்டித்து சென்னையில் அவர் தங்கியிருந்த விடுதியை முற்றுகையிட்டு பசுமைத் தாயகம் சார்பில் போராட்டம்.

26.02.2013 மதுவிலக்கை வலியுறுத்தி தருமபுரியில் பா.ம.க. மகளிர் அணி ஆர்ப்பாட்டம். 01.01.2014 ஆரணியில் தொடங்கி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் பா.ம.க. மகளிர் அணி சார்பில் மது விலக்குக்கு எதிரான மகளிர் எழுச்சி மாநாடு நடத்தப்பட்டது. இவை தவிர பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நடத்தப்பட்ட அனைத்துப் போராட்டங்களிலும் நான் கலந்து கொண்டிருக்கிறேன். வழக்கறிஞர்கள் சமூகநீதிப்பேரவை மூலம் சட்டப்போராட்டம் நடத்தி தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்த 604 மதுக்கடைகளை அகற்ற வைத்திருக்கிறோம்.

உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கின் முடிவில் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள 1500 மதுக்கடைகள் மூடப்படும் என்று நம்புகிறேன். மதுவிலக்கு போராட்டத்தை நான் அரசியலாக கருதவில்லை. மாறாக சமூகக் கடமையாகவே கருதுகிறேன். தேர்தலுக்காகவோ, வாக்குகளை வாங்குவதற்காகவோ இந்த போராட்டங்களை நான் நடத்தவில்லை. அதேபோல், நான் ஏற்கனவே கூறியதைப் போலவே மது விலக்கில் தி.மு.க.வுக்கு அக்கறை இருந்தால், அதன் மீதான அக்கட்சியின் உறுதிப்பாட்டை மது ஆலைகளை மூடி காட்ட வேண்டும். அதைவிடுத்து வார்த்தை சிலம்பம் ஆடுவதில் எந்த பயனும் இல்லை.

மற்றபடி மதுவிலக்கு கோரி இதயசுத்தியுடன் பொதுமக்கள் நடத்தும் போராட்டங்களை நான் ஆதரிக்கிறேன். அதேநேரத்தில் மாணவர்கள் தங்களின் கல்வி மற்றும் எதிர்காலத்தை பாதிக்காத வகையில் செயல்படும்படி கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாட்டில் கடைசி சொட்டு மது ஒழிக்கப்படும்வரை நான் தொடர்ந்து போராடுவேன். இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.



மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 06, 2015 10:36 pm

தேமுதிக தொண்டர்கள் மீது காவல் துறை தடியடி

பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி கோயம்பேடு முதல் கோட்டை வரை மனித சங்கிலி போராட்டம் நடத்த தே.மு.தி.க முடிவு செய்தது. இதற்கு காவல்துறை அனுமதி தரவில்லை இதையடுத்து போராட்டத்திற்கு அனுமதி கேட்டு சென்னை ஐகோர்ட்டில் தே.மு.தி.க சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது உரிய உத்தரவு பிறப்பிக்கப்படாத நிலையில் திட்டமிட்டப்படி சென்னை கோயம்பேட்டில் இன்று மாலை விஜயகாந்த் தலைமையில் மனித சங்கிலி போராட்டம் தொடங்கியது.

அனுமதியின்றி போராட்டம் நடத்தியதால் அவர்களை கலைந்து போகும்படி போலீசார் கேட்டுக்கொண்டனர். ஆனால் விஜயகாந்த் அதனை ஏற்க மறுத்து தனது ஆதரவாளர்களுடன் கைகோர்த்து மனித சங்கிலி போராட்டத்தை தொடர்ந்தார். இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட விஜயகாந்த் உள்பட்ட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.

அப்போது போலீஸாருடன் தேமுதிக தொண்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதேபோல், தேமுதிக இளைஞரணி செயலாளர் சுதிஷ், பிரேமலதா விஜயகாந்தும் கைது செய்யப்பட்டார். தேமுதிகவினர் ஏற்றிச்செல்லப்பட்ட பேருந்துகளை தொண்டர்கள் செல்லவிடாமல் தடுத்ததால் காவல் துறை தடியடி நடத்தி தொண்டர்களை கலைத்தது. இதனால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு நிலவியது.




மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 06, 2015 10:52 pm

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கைது: தலைவர்கள் கண்டனம்!

சென்னை: தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கைது செய்யப்பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தே.மு.தி.க. சார்பில் இன்று தமிழகம் முழுவதும் மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தப்பட்டது. சென்னை, கோயம்பேட்டில் நடந்த போராட்டத்தில் விஜயகாந்த்தும், சென்னை சென்ட்ரல் அருகே நடந்த போராட்டத்தில் அவரது மனைவி பிரேமலதாவும் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், போலீஸ் அனுமதி அளிக்காத நிலையில் போராட்டம் நடத்தியதாகக் கூறி விஜயகாந்த், பிரேமலதா உள்பட போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்நிலையில் விஜயகாந்த் கைது செய்யப்பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

இந்நிலையில், கைது செய்யப்பட்டு நெற்குன்றத்திலுள்ள திருமண மண்டபம் ஒன்றில் வைக்கப்பட்ட தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்தை, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சந்தித்துப் பேசினார்.

இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்தவே தமிழக அரசை வலியுறுத்துகிறோம். ஆனால் அரசு அதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காததால், மதுவிலக்கு என்ற கொள்கைக்காக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்துள்ளோம் '' என்றார்.


வைகோ

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறுகையில், ''விஜயகாந்த் உள்ளிட்டோரை கைது செய்தது அராஜக நடவடிக்கை. அடக்குமுறையின் மூலம் அச்சுறுத்தலாம் என அரசு தவறாக எண்ணுகிறது'' என்றார்.


மு.க.ஸ்டாலின்

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், ''மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி தே.மு.தி.க. நடத்திய மனித சங்கிலி போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது கண்டனத்திற்குரியது'' என்றார்.




மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 06, 2015 11:15 pm

நாடு முழுவதும் மதுவிலக்கு கொண்டுவரப்பட்டால் தமிழகத்திலும் மதுவிலக்கு... நத்தம் விஸ்வநாதன் பேச்சு

நாடு முழுவதும் மது விலக்கு கொண்டு வரப்பட்டால் தமிழகத்திலும் மது விலக்கு கொண்டு வரப்படும் என மின்சாரம் மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் மதுவிலக்கு கோரி போராட்டங்கள் வெடித்து வருகின்றன. தீவிரமடைந்து போராட்டங்கள் சில பகுதிகளில் வன்முறையில் முடிகின்றன.

மதுவிலக்கு விவகாரம் தமிழக அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ள நிலையில், மது விலக்கு குறித்து அத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் விளக்கமளித்துள்ளார்.

கடலூரில் நடைபெற்ற அதிமுகபொது கூட்டத்தில் அவர் பேசியதாவது..

நாடு முழுவதும் மது விலக்கு கொண்டு வரப்பட்டால் தமிழகத்திலும் மது விலக்கு கொண்டு வரப்படும். நாட்டில் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் மதுவிலக்கு கொண்டு வரப்படவில்லை. அதே நேரத்தில் நமது மாநிலத்தில் மது விலக்கு கொண்டு வரப்பட்டால் பிற மாநிலங்களில் இருந்து கொண்டுவரப்படும் மது தமிழகத்தை கள்ளச்சந்தையாக மாற்றிவிடும்.

தமிழகத்தில் மது விற்பனை அரசின் விருப்பம் இன்றி தான் நடைபெற்று வருகிறது. தி.மு.க. ஆட்சி காலத்தில் தான் மது நிறுவனங்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அது ஏன் தடுக்கப்படவில்லை. இவ்வாறு அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேசினார்




மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 07, 2015 1:41 am

ம்ம்... இப்போ எல்லா பேப்பரிலும் மதுவிலக்கு செய்தி தான் முதல் பக்கத்தில் வருது புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 08, 2015 12:49 pm

தக்கலையில் டாஸ்மாக் கடை முன்பு பெண்கள் முற்றுகை: 131 பேர் கைது

தக்கலையை அடுத்த கோழிப்போர் விளையில் டாஸ்மாக் ஒன்று உள்ளது.

இதனை அகற்றக்கோரி அந்த பகுதி மக்கள் கடந்த 2 ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வந்தனர். இன்று கோழிப்போர் விளை கிராம முன்னேற்ற சங்க பெண்கள் மற்றும் ஊர் மக்கள் ஏராளமானோர் அந்த டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு ஸ்டாரி தலைமை தாங்கினார். முளகுமூடு வட்டார தலைவர் பாதிரியார் சகாயதாஸ் முன்னிலை வகித்தார். கோழிப்போர்விளை பங்குத்தந்தை பபியான், பாதிரியார் ஒய்ஸ்லின் சேவியர், திக்கணங்கோடு ஊராட்சி தலைவர் முருகராஜன், தி.மு.க. முன்னாள் மாவட்ட துணை செயலாளர் விஜயகுமார் மற்றும் 500–க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். அவர்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு கோஷமிட்டனர்.

தகவல் அறிந்து கல்குளம் தாசில்தார் குமாரதாஸ், இணை தாசில்தார் சுரேஷ், கிராம நிர்வாக அதிகாரி கில்டா ஆகியோர் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததை தொடர்ந்து அவர்கள் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை பாதுகாப்புக்கு நின்ற போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். 15 சிறுவர்கள், 5 ஆண்கள், 111 பெண்கள் உள்பட 131 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களை போலீசார் அருகில் உள்ள மண்டபத்தில் அடைத்தனர். போராட்டம் காரணமாக காலை 10 மணிக்கு திறக்கப்பட வேண்டிய டாஸ்மாக் கடை மூடியே கிடந்தது. போராட்டம் முடிந்து பெண்கள் அனைவரும் அப்புறப்படுத்தப்பட்ட பின்பு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது.



மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 08, 2015 1:20 pm

மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 4 11863264_1031334026890264_5189351597196233700_n



மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக