ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்!

3 posters

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 2 Empty மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்!

Post by சிவா Tue Aug 04, 2015 12:48 am

First topic message reminder :

மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 2 Tasmac%20protest%201
கடந்த ஒருவாரமாக தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் மதுவிலக்கு கோரி பொதுமக்கள் நடத்தும் போராட்டங்கள் ஆளும் அரசுக்கு நெருக்கடியை உண்டாக்கியிருக்கிறது.அதனால்தான் தலைமைச் செயலகம் வந்த முதல்வர் காவல்துறை அதிகாரிகளோடு மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து அவசர அவசரமாகக் கேட்டு அறிந்து இருக்கிறார்.

கோட்டையில் அவசர ஆலோசனை நடந்து கொண்டிருக்கும்போதே சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் அந்தக் கல்லூரி அமைந்துள்ள பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடைமுன்பு திரண்டனர்.புத்தகத்தைப் படிக்கவா சாராயத்தைக் குடிக்கவா என்று முழக்கங்கள் எழுப்பியவாறு டாஸ்மாக் கடையை மூடச் சொல்லி போராட்டம் நடத்தினர்.காவல்துறை அனுமதி மறுத்து அவர்கள் மீது தாக்குதல் நடத்த மாணவர்களும் விடாமல் போராடினர்.ஒரு கட்டத்தில் டாஸ்மாக் கடைமீது கல்லெறிந்து அடித்து நொறுக்கினர்.அப்போது நிகழ்ந்த தள்ளுமுள்ளுவில் காவல்துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்ட மாணவர்கள் சிலர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவுகிறது.

விருத்தாசலம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு முன்பாகத் திரண்ட இளைஞர்கள் நெடுநாட்களாக பல்வேறு பிரச்சனைகள் எழ காரணமாக இருந்த,தமிழக அரசு நடத்திவரும் டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கியுள்ளனர்.இன்னும் பல இடங்களில் பொதுமக்கள்,வயது வித்தியாசம் இன்றி தாமாகவே முன்வந்து டாஸ்மாக் கடைகளை முற்றுகையிட்டு மூடவலியுறுத்தி `மதுவிலக்கு` என்ற சமுதாய ஆரோக்கிய தீபத்தை ஏற்ற கோரிக்கை விடுத்த வண்ணம் இருக்கின்றனர்.

தமிழகத்தில் மதுவிலக்கு கொண்டுவர வலியுறுத்தி போராட்டங்கள் நடப்பது ஐம்பது ஆண்டுகளுக்கு மேலான வரலாற்றைக் கொண்டது.மதுவிலக்கை வலியுறுத்தி பெரியார் தனது தோட்டத்தில் இருந்த நூற்றுக் கணக்கான தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தினார். அவர் காலம் தொடங்கி காங்கிரஸ்,திமுக,அதிமுக என்று கட்சிகள் மாறிமாறி தமிழகத்தில் ஆட்சி செலுத்திய போதும் மதுவிலக்குக் கொள்கை மட்டும் ஆளும் ஆண்ட கட்சிகளுக்கு வேப்பங்காயாக கசக்கவே செய்தது;கசந்தும் வருகிறது. இதில் ஆட்சி அதிகாரம் வகிப்போரே மதுபானம் தயாரிக்கும் ஆலைகளை நடத்தி வருவதும் மதுபான விடுதிகள் பார்கள் நடத்திவருவதும் யதார்த்தம்.

கடந்த 31ஆம் தேதி மதுவிலக்கு கொண்டுவர வலியுறுத்தி மார்த்தாண்டத்தில் செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்திய காந்தியவாதி சசிபெருமாள் பரிதாபமாக இறந்தார். 5 மணி நேரத்திற்கும் மேலாக பல நூறு அடிக்கும் அதிகமான உயரம் கொண்ட செல்போன் டவரில் நின்றபடி போராடிய அவர்,போலீசாரின் தவறான அணுகுமுறையால்,அரசின் மெத்தனத்தால் உடல் நலம் பாதிக்கப்பட்டு ரத்த வாந்தி எடுத்த நிலையில் பிணமானார். ஒட்டுமொத்த தமிழகமும் காட்டுத் தீயென பரவிய காந்தியவாதி சசிபெருமாள் மரணச் செய்தி அரசியல் இயக்கங்களை ஒன்று படுத்தி,கடந்த 4 நாட்களாக போராட்டங்களைத் தீவிரப்படுத்தி இருக்கிறது.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவரின் தாயாரோடும் மதுவிலக்கு போராட்டத்தை சொந்த ஊரான கலிங்கப்பட்டியிலிருந்து முன்னெடுத்து இருக்கிறார்.நேற்று(ஞாயிறு)அங்கு நடந்த போரட்டத்தில் போலீசார் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி போராட்டக்காரர்களைக் கலைத்துள்ளனர்.இது மேலும் எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றியது போல மாறி இருப்பதை இன்று(திங்கள்) நடந்து வரும் போராட்ட சம்பவங்கள் காட்டுகின்றன.

காந்தியவாதி சசிபெருமாளின் சொந்த ஊரில் அவரின் வாரிசுகளும்,அரசியல் இயக்கங்களும் அவர் வலியுறுத்திய மதுவிலக்கு போராட்ட தீபத்தை கையிலெடுத்துள்ளனர்.போலீசாரின் மிரட்டல்களுக்கும் கைது கொடுமைகளுக்கும் அஞ்சாமல் தியாகி சசிபெருமாளின் மகள் கவியரசி பள்ளிச் செல்லும் சிறுமியும் சிறைக்குள் தள்ளப்பட்டு இருக்கிறார். வேலூர்,சேலம்,காஞ்சிபுரம் என்று பல்வேறு பகுதிகளில் இருக்கும் செல்போன் கோபுரங்களில் ஏறி இளைஞர்கள் போராடி வருகிறார்கள்.அவர்களிடம் மிரட்டல் விடுக்கும் காவல்துறை சமாதானம் பேசுவது போல பேசி கீழிறங்க வைத்து கைது செய்து வருகிறார்கள் தமிழகம் முழுவதும் உள்ள பல ஆயிரம் செல்போன் டவர்கள் தற்போது போலீசாரின் காவலில் இருக்கின்றன.

தற்போது மதுவிலக்கு போராட்டம் கல்லூரி மாணவர்கள் மத்தியிலும் பரவியுள்ளது.சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் அதனைத் தொடங்கி வைத்துள்ளனர்.மதுரையில் மதிமுக பொதுச் செயலாளர் தமிழக கல்லூரி மாணவர்கள் கையில்தான் மதுவிலக்கு உள்ளது.அதனால் 1965 ஆம் ஆண்டு மொழிப் போராட்டங்களில் மாணவர்கள் பங்காற்றியது போல இப்போது மதுவிலக்கிலும் பங்கெடுக்கவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். நாளை(செவ்வாய்) தமிழகம் முழுவதும் மதிமுக,கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக,தேமுதிக, காங்கிரஸ், வணிகர் சங்கங்கள் மற்றும் பால் நுகர்வோர் சங்கம் ஆகியவை இணைந்து மதுவிலக்கு கோரும் பந்த் நடத்த உள்ளனர். இதற்கு,பாஜகவும் திமுகவும் ஆதரவை வழங்கியுள்ளன.

35 ஆண்டுகளாக மது ஒழிப்புக்காகப் போராடி வரும் டாக்டர் ராமதாஸ்,பாமக இதில் பங்கேற்காது என்று கூறிவிட்டார். தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியும் இதில் பங்கேற்காது என்றும் ஆனால் மதுவிலக்குக் கொள்கையை மதிக்கிறோம் என்றும் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். பந்த் மூலம் பெருமளவில் மதுவிலக்கு ஆதரவை திரட்ட இந்தக் கட்சிகள் முடிவு செய்து பெருமளவில் திட்டமிட்டுள்ளன.

வரும் 6 ஆம் தேதி தேமுதிக சார்பில் சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெறவுள்ளது.அடுத்து வரும் 10 ஆம் தேதி மதுவிலக்கை நடைமுறைப்படுத்த கோரி திமுக சார்பில் அறவழியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.தமிழகம் முழுக்க மதுவிலக்கு கோரிக்கை வலிமையடைந்துள்ளது.ஆனால் ஆளும் அரசுத் தரப்பில் கோரிக்கை நிறைவேற்றப்படுவது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் போராட்டத்தை எப்படி நீர்த்துப் போகச் செய்யலாம் என்ற கோணத்தில் ஆலோசிக்கப்படுவதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 2 Empty Re: மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்!

Post by சிவா Tue Aug 04, 2015 1:12 am

”உடனடியாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்” - கருணாநிதி வலியுறுத்தல்

தமிழகத்தில் உடனடியாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வைகோவின் தாயார், 99 வயதான மாரியம்மாள் தலைமையில் போராட்டம் தொடங்கியுள்ளது. சசிபெருமாளின் சொந்த ஊரில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகின்றது. இந்த நிலையில் அ.தி.மு.க. அரசு உடனடியாக மதுவிலக்கினை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசர அவசியமான ஒன்றாகும்.

பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கோவையில் செய்தியாளர்களிடம் கூறும்போது, தமிழகத்தில் உடனடியாக மதுவிலக்கு அமல்படுத்தப்பட வேண்டுமென்று கூறியிருக்கிறார். நெல்லை மாவட்டத்தில், ஆலங்குளத்தில் இசக்கிமுத்து என்ற ஆட்டோ டிரைவரை டாஸ்மாக் பாரிலேயே காவலர் ஒருவர் நேற்று பாட்டிலால் குத்திக் கொலை செய்திருக்கிறார் என்ற செய்தியும் வந்துள்ளது.

அதே நெல்லையில் கலிங்கப்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி, வைகோவின் தாயார், 99 வயதான மாரியம்மாள் தலைமையில் போராட்டம் தொடங்கியுள்ளது. சசிபெருமாளின் சொந்த ஊரில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகின்றது. இந்த நிலையில் அதிமுக அரசு உடனடியாக மதுவிலக்கினை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசர அவசியமான ஒன்றாகும்.

திமுக ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தில் மதுவிலக்கினை நடைமுறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளும் என்று நான் அறிவித்திருந்த போதிலும், தற்போது தமிழகத்தில் எழுந்துள்ள நிலைமை மாற்று யோசனை எதற்கும் இடம் கொடுக்காமல் உடனடியாகவே மதுவிலக்கினை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதற்கு பேராதரவாகவே உள்ளது.

எனவே சசிபெருமாள் போன்று மேலும் பலரது உயிர்களைக் காவு கொடுக்காமல் காப்பாற்ற அதிமுக அரசு இனியும் தாமதிக்காமல், மதுவிலக்கினை உடனடியாக தமிழகத்தில் கொண்டு வருவதற்கான அறிவிப்பினைச் செய்ய வேண்டுமென்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்துகிறேன்.


மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 2 Empty Re: மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்!

Post by சிவா Tue Aug 04, 2015 1:12 am

ஆகஸ்ட் 4 முழு அடைப்புப் போராட்டத்திற்குக் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு

தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமுல்படுத்த கோரி, ஆகஸ்ட் 4 ஆம் தேதி நடைபெற உள்ள போரட்டத்திற்கு, முழு ஆதரவு தெரிவிப்பதாக மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து, மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகில் உண்ணாமலைக்கடை எனும் கிராமத்தில், செயல்படும் டாஸ்மாக் மதுக் கடையை மூட வேண்டுமெனக் கிராம மக்கள் போராடி வந்தனர்.

அந்தக் கடையை அகற்ற வேண்டும் எனச் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையும் உத்தரவிட்டுள்ளது. ஆனால், மக்கள் போராட்டத்தின்போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமலும், நீதிமன்ற உத்தரவை மதிக்காமலும், தமிழக அரசு தொடர்ந்து மதுக்கடையை நடந்தி வந்துள்ளது.

இதனைக் கண்டித்து, காந்தியவாதி சசிபெருமாள், 200 அடி உயர அலைபேசி கோபுரத்தின் உச்சிக்குச் சென்று தீப்பந்தம் ஏந்தி போராடினார். ஐந்து மணி நேர போராட்டத்தின் முடிவில் அவர் மரணமடைந்தார். அவரின் மரணத்திற்கு அரசின் அலட்சியமே காரணமாகும்.

தமிழகத்தின் ஏழை எளியோர், தொழிலாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள் வாழ்க்கையைப் பாதிக்கும் மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்துவருகிறது. தமிழ்நாட்டில் மதுவிலக்கினை படிப்படியாக அமல் படுத்த வேண்டு என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் ஆகஸ்ட் 13 ஆம் தேதி, மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை நடத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, விடுதலைசிறுத்தைகள் கட்சி, மனித நேய மக்கள் கட்சி, காந்திய மக்கள் இயக்கம் ஆகிய ஆறு கட்சிகள் முடிவு செய்துள்ளன.

இந்நிலையில், சசிபெருமாள் மரணத்தை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில், ஆளும் கட்சி தவிர்த்த அனைத்துக் கட்சியினர் சார்பில் முழு அடைப்புப் போராட்டம் ஆகஸ்ட் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதே நாளில், தமிழகம் முழுவதும் முழு அடைப்புப் போராட்டத்திற்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப்பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோர் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்த முழு அடைப்புப் போராட்டத்திற்குக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முழு ஆதரவைத் தெரிவிக்கிறோம் எனத் தெரிவித்துள்ளனர்.


மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 2 Empty Re: மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்!

Post by சிவா Tue Aug 04, 2015 1:16 am

மதுவிலக்குப் போராட்டங்கள்: அரசியல் கட்சிகளுக்கு தமிழக அரசு கண்டனம்

காந்தியவாதி சசிபெருமாள் இறப்பை வைத்து அரசியல் நடத்துவது அருவருக்கத் தக்கதும் கண்டனத்துக்குரியதுமாகும் என்று தமிழக அரசு மதுவிலக்கு போராட்டங்களை கண்டித்துள்ளது.

இது குறித்து மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

"மதுவின் ஊற்றுக்கண்ணாக விளங்கும் தி.மு.க., தாங்கள் ஆளும் மாநிலங்களில் மதுவிலக்கை நடைமுறை․படுத்தாத பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ், மதுவின் துணை கொண்டு மாநாடுகள் மற்றும் கூட்டங்களை நடத்திக் கொண்டிருக்கும் உதிரிக் கட்சிகள் எல்லாம் இன்று மதுவிலக்கு குறித்து பேசுவதும், இதற்காக சில அரசியல் கட்சிகள் 4.8.2015 அன்று தமிழ்நாட்டில் "பந்த்" நடத்தப் போவதாக அறிவித்து இருப்பது‥ சாத்தான் வேதம்ஓதுவது போல் உள்ளது.

கடந்த 4 ஆண்டு அதிமுக அரசின் சாதனைகளைபொறுத்துக் கொள்ள முடியாமல் மதுவிலக்கு என்ற ஆயுதத்தை அரசியல் ஆதாயம் தேடும் நோக்கில் எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன.

மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என கூறும் இதே தலைவர்கள்தான் உடனடியாக அமல்படுத்த முடியாது என்றும் சொல்கின்றனர். இதன் மூலம் முழு அடைப்பு என்பது மதுவிலக்குக்காக அல்ல என்பது தெளிவாகிறது.

கன்னியாகுமரியில் மதுக்கடையை அகற்ற கோரி சசிபெருமாள் செல்பேசி கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்தினார்.

7 நாட்களில் கடை அகற்றப்படும் என டாஸ்மாக் மேலாளர் உத்தரவாதம் அளித்தார். அதை தொடர்ந்து சசிபெருமாளை மீட்க கோபுரத்தின் உச்சிக்கு சென்றபோது அவர் நினைவில்லாமல் இருந்தது தெரியவந்தது.

அவரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனை கொண்டு சென்றபோது ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவரின் மரணம் வேதனை அளிக்கிறது.

தற்கொலை செய்து கொள்ள போவதாக மிரட்டுவது காந்திய வழி அல்ல. சசிபெருமாளின் இறப்பை வைத்து அரசியல் நடத்துவது கண்டனத்துக்குரியது.

திமுகவைச் சேர்ந்த 5 நபர்களுக்கு மது ஆலை நடத்த அனுமதி வழங்கிய கருணாநிதிக்கு மதுவிலக்கு பற்றி பேச தகுதி கிடையாது.

ஆகஸ்ட் 1-ம் தேதி கலிங்கப்பட்டியில் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற மதிமுக பொதுச் செயலர் வைகோ தாயார் 2-ம் தேதி பேராட்டத்தில் பங்கேற்கவில்லை. இதிலிருந்து அங்கு நடந்த கலவரம் திட்டமிட்டு நடத்தப்பட்டதோ என்ற சந்தேகம் எழுகிறது.

மதுவை போன்று புகையிலையும் தீங்கானது. ஆனால், வைகோவின் மகன் துரை வையாபுரி புகையிலை வாணிபத்தில் ஈடுபட்டு வருகிறார். இதற்கு வைகோவின் பதில் என்ன?

வழிபாட்டுத்தலங்கள், பள்ளி, கல்லூரிகள் அருகில் மதுபான கடைகள் இருப்பதாக கூறுவது தவறானது. மதுபான விற்பனைக்கான விதிகளில் குறிப்பிட்டுள்ள வழிமுறைகள் தவறாமல் கடைபிடிக்கப்படுகின்றன.

தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்த 504 கடைகள் அகற்றப்பட்டுள்ளன. அதிமுக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த எதுவும் இல்லை என்பதால் மதுவிலக்கை கையில் எடுத்துள்ளனர். இவர்களின் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது.

மதுவிலக்குப் பற்றி பேசுவதாலும், அதற்கென போராட்டம் நடத்துவதாலும் தேர்தல் களத்தில் வாக்குகளைப் பெற்று விடலாம் என்று நினைத்து அரசியல் ஆதாயம் தேடுபவர்களைப் பற்றி தமிழக மக்களுக்கு நன்றாகத் தெரியும்.

அரசுக்கு எதிராக எதுவுமே இல்லை என்பதால், மதுவிலக்கு குறித்து போராட்டம் நடத்தி தமிழக அரசுக்கு களங்கம் கற்பிக்கலாம் என்று மனப்பால் குடிப்பவர்களின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 2 Empty Re: மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்!

Post by சிவா Tue Aug 04, 2015 1:18 am

டாஸ்மாக் கடை மீது தாக்குதல்: பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் - போலீஸ் கடும் மோதல்

மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 2 Tas_2496702f

சென்னை அமைந்தகரையில் உள்ள டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

அந்த டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கிய கல்லூரி மாணவர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே கடும் மோதல் வெடித்தது.

பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் திடீரென டாஸ்மாக் கடையில் உள்ள மதுபாட்டில்களை அடித்து நொறுக்கினர். டாஸ்மாக் கடையை கல்வீசி தாக்கி, அடித்து நொறுக்கும்போது போலீஸார் தடுத்து நிறுத்தினர். அப்போது மாணவர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

மாணவர்களை விரட்டி அடிக்க, போலீஸார் தடியடி நடத்தினர். மாணவர்களைப் பிடித்து அடித்து, பலவந்தமாக இழுத்துச் செல்லப்பட்டனர்.

அப்போது, மாணவர்களை மீட்பதற்காக மாணவிகள் போலீஸாரிடம் வாக்குவாதம் நடத்தினர். போலீஸார் தொடர் தடியடி நடத்தியபோது, ஒரு மாணவி மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர் பத்திரமாக அழைத்துச் செல்லப்பட்டார்.

பின்னர், மாணவிகளை இழுத்து தள்ளிவிட்டு மாணவர்களை சரமாரியாக போலீஸார் அடித்தனர். குண்டுக்கட்டாக மாணவர்களைத் தூக்கி போலீஸ் வேனில் ஏற்றினர்.

புத்தகத்தை படிக்கவா? சாராயத்தை குடிக்கவா? என்று மாணவிகள் தொடர்ந்து முழக்கமிட்டனர்.

இதைத் தொடர்ந்து, ஹாரிங்டன் சாலையில் உள்ள டாஸ்மாக் கடை மூடப்பட்டது. அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். போலீஸார் நடத்திய தடியடி தாக்குதலால் பல மாணவர்கள் பலத்த காயமடைந்துள்ளனர்.

இந்த போராட்டக் களேபரங்களுக்கு இடையில், சில மாணவர்கள் டாஸ்மாக் கடையில் இருந்த மது பாட்டில்களை எடுத்துச் சென்றனர்.


மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 2 Empty Re: மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்!

Post by சிவா Tue Aug 04, 2015 1:19 am

மாணவர்கள் மீது தடியடி: காவல்துறைக்கு வைகோ கண்டனம்

பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''முழு மதுவிலக்கை வலியுறுத்திப் போராடி வந்த காந்தியவாதி சசிபெருமாள் கன்னியாகுமரி மாவட்டம், உண்ணாமலைக்கடை போராட்டக் களத்திலேயே மரணம் அடைந்த துயர நிகழ்ச்சி, தமிழ்நாடு முழுவதும் மதுக்கடைகளுக்கு எதிரான போராட்டத்தைத் தீவிரப்படுத்தி இருக்கின்றது.

டாஸ்மாக் கடைகளை உடனடியாக இழுத்து மூடி முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற போர்க்குரல் ஒட்டுமொத்தமாக ஒலிக்கத் தொடங்கி இருக்கிறது.

கலிங்கப்பட்டியில் மக்கள் ஒன்றுதிரண்டு நடத்திய அறவழிப் போராட்டத்தில் காவல்துறை தடியடி நடத்தியது. இந்நிலையில், சென்னை பச்சையப்பன் கல்லூரி அருகில், ஹாரிங்டன் சாலையில் இருக்கும் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி அக்கல்லூரி மாணவர்கள் பலமுறை அரசுக்கு வேண்டுகோள் வைத்தனர்.

ஜெயலலிதா அரசின் அலட்சியப் போக்கைக் கண்டு கொதித்து எழுந்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கல்லூரிக்கு அருகே இருந்த டாஸ்மாக் கடையை மூடக் கோரி இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது டாஸ்மாக் கடையின் உள்ளே இருந்து மாணவர்கள் மீது சிலர் மது பாட்டில்களை வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். மாணவர்கள் மீது மது பாட்டில்கள் வீசப்பட்டதால், அவர்கள் டாஸ்மாக் கடை மீது தாக்குதல் நடத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

இந்தப் போராட்டத்தில் கல்லூரி மாணவர்களுடன், மாணவிகளும் முன்நின்று முழக்கம் எழுப்பி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். ஆனால், காவல்துறையினர் மதுக்கடையை அகற்றக் கோரிய மாணவர், மாணவிகள் மீது ஈவு இரக்கமின்றி தடியடி நடத்தி விரட்டி உள்ளனர்.

மாணவிகளை பூட்ஸ் காலால் எட்டி உதைத்து, மிதித்து அவர்கள் மயக்கம் அடையும் வரை தாக்குதல் நடத்தி உள்ளனர். மாணவர்களை அடித்துக் காயப்படுத்தி இழுத்துச் சென்றுள்ளனர். முப்பதுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களைக் காவல்துறை கைது செய்துள்ளது.

பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது தடியடி நடத்திய காவல்துறையின் நடவடிக்கைக்குக் கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். மதுக்கடைகளுக்கு எதிராக தமிழகம் முழுவதும் வெடித்துள்ள போராட்டங்களை அடக்குமுறை மூலம் முறியடித்து விடலாம் என்று ஜெயலலிதா அரசு நினைக்குமானால், விளைவுகள் விபரீதமாகும் என்று எச்சரிக்கிறேன்.

பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது ஜெயலலிதா அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஹாரிங்டன் சாலை டாஸ்மாக் கடை மட்டுமின்றி, தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக் கடைகளையும் மூட வேண்டிய நிலைமை உருவாகி வருவதை ஜெயலலிதா அரசு உணர்ந்துகொண்டு, முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும்'' என்று வைகோ கூறியுள்ளார்.


மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 2 Empty Re: மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்!

Post by krishnaamma Tue Aug 04, 2015 1:22 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 2 Empty Re: மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்!

Post by சிவா Tue Aug 04, 2015 1:24 am

மதுவிலக்கு அமலுக்கு வந்தால் மது ஆலைகளும் மூடப்படும்: கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு ஸ்டாலின் பதில்

தமிழகத்தில் மதுவிலக்கு அமலுக்கு வந்தால், திமுகவினர் நடத்துவதாக கூறப்படும் மது ஆலைகளும் மூடப்படும் என்பதை அரசியல் கட்சித் தலைவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் இன்று கூறுகையில், ''காந்தியவாதி சசிபெருமாள் மரணத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் மதுக்கடைகளை மூடக்கோரி போராட்டங்கள் வலுவடைந்து வருகின்றன.

ஆனால், தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால்தான் மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி மாவட்டத் தலைநகரங்களில் ஆகஸ்ட் 10-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

திமுகவை சேர்ந்தவர்கள் மதுபான ஆலைகளை நடத்துவதாக பாமக நிறுவனர் ராமதாஸ், பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் ஆகியோர் கூறுகின்றனர். மதுவிலக்கு வந்துவிட்டால் மது உற்பத்தி ஆலைகளும் மூடப்படும் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

திராவிடக் கட்சிகளுடன் சத்தியமாக கூட்டணி இல்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். கூட்டணிக்கு வாருங்கள் என அவரை எந்த கட்சியும் வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கவில்லை'' என்று ஸ்டாலின் கூறினார்.


மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 2 Empty Re: மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்!

Post by krishnaamma Tue Aug 04, 2015 1:27 am

//தமிழகத்தில் மதுவிலக்கு அமலுக்கு வந்தால், திமுகவினர் நடத்துவதாக கூறப்படும் மது ஆலைகளும் மூடப்படும் என்பதை அரசியல் கட்சித் தலைவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.//

ஆஹா..என்ன வொரு தாராளம் ? சிரி சிரி சிரி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 2 Empty Re: மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்!

Post by சிவா Tue Aug 04, 2015 1:29 am

வைகோ உள்ளிட்ட 152 பேர் மீது வழக்கு

திருநெல்வேலி மாவட்டம், கலிங்கப்பட்டியில் மதுக் கடையை முற்றுகையிட்டபோது ஏற்பட்ட வன்முறை சம்பவம் தொடர்பாக, மதிமுக பொதுச்செயலர் வைகோ உள்ளிட்ட 152 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

கலிங்கப்பட்டியில் உள்ள டாஸ்மாக் மதுக் கடையை அகற்றக் கோரி, ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் வைகோ தலைமையில் பொதுமக்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். அப்போது சிலர் டாஸ்மாக் கடைக்குள் புகுந்து அக்கடையை சூறையாடினர்.

இந்த சம்பவத்தையடுத்து, போலீஸார் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி கூட்டத்தைக் கலைக்க முயன்றனர். அப்போது கல்வீச்சு சம்பவங்களும் நிகழ்ந்தன. இதில், 15 பேர் காயமடைந்தனர்.

12 பிரிவுகளில் வழக்கு: இந்த சம்பவம் தொடர்பாக, வைகோ மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உள்பட 152 பேர் மீது கலவரத்தை ஏற்படுத்துதல், ஆயுதங்களால் தாக்குதல், அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தல் என 12 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 2 Empty Re: மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்!

Post by சிவா Tue Aug 04, 2015 1:47 am

ஆக.10-இல் திமுக ஆர்ப்பாட்டம், ஆக.6-இல் தேமுதிக மனித சங்கிலி

தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்தக் கோரும் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.

திமுக சார்பில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் ஆகஸ்ட் 10-ஆம் தேதி ஆர்ப்பாட்டமும், தேமுதிக சார்பில் ஆகஸ்ட் 3-ஆம் தேதி மனித சங்கிலிப் போராட்டம் நடைபெறும் என்று அக் கட்சியின் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.

திமுக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்திருந்தேன். எனினும், தமிழகமெங்கும் மதுவிலக்கை உடனே அமல்படுத்த வேண்டும் என்று அதிமுக அரசை வலியுறுத்தும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

தமிழகத்தில் மதுவினால் ஏற்பட்டுள்ள சீரழிவைத் தடுத்து நிறுத்திட, பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி ஆகஸ்ட் 6-ஆம் தேதி மாலை 4 மணி முதல் 5 மணி வரை கோயம்பேடு முதல் கோட்டை வரை விஜயகாந்த் தலைமையில் மனித சங்கிலிப் போராட்டம் அகிம்சை வழியில் நடைபெறும் என்று அவர் கூறியுள்ளார்.


மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 2 Empty Re: மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum