புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 4:08 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மஹா  பெரியவா ! I_vote_lcapமஹா  பெரியவா ! I_voting_barமஹா  பெரியவா ! I_vote_rcap 
61 Posts - 47%
heezulia
மஹா  பெரியவா ! I_vote_lcapமஹா  பெரியவா ! I_voting_barமஹா  பெரியவா ! I_vote_rcap 
38 Posts - 29%
mohamed nizamudeen
மஹா  பெரியவா ! I_vote_lcapமஹா  பெரியவா ! I_voting_barமஹா  பெரியவா ! I_vote_rcap 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
மஹா  பெரியவா ! I_vote_lcapமஹா  பெரியவா ! I_voting_barமஹா  பெரியவா ! I_vote_rcap 
6 Posts - 5%
T.N.Balasubramanian
மஹா  பெரியவா ! I_vote_lcapமஹா  பெரியவா ! I_voting_barமஹா  பெரியவா ! I_vote_rcap 
5 Posts - 4%
Raji@123
மஹா  பெரியவா ! I_vote_lcapமஹா  பெரியவா ! I_voting_barமஹா  பெரியவா ! I_vote_rcap 
4 Posts - 3%
prajai
மஹா  பெரியவா ! I_vote_lcapமஹா  பெரியவா ! I_voting_barமஹா  பெரியவா ! I_vote_rcap 
3 Posts - 2%
kavithasankar
மஹா  பெரியவா ! I_vote_lcapமஹா  பெரியவா ! I_voting_barமஹா  பெரியவா ! I_vote_rcap 
2 Posts - 2%
Barushree
மஹா  பெரியவா ! I_vote_lcapமஹா  பெரியவா ! I_voting_barமஹா  பெரியவா ! I_vote_rcap 
2 Posts - 2%
Saravananj
மஹா  பெரியவா ! I_vote_lcapமஹா  பெரியவா ! I_voting_barமஹா  பெரியவா ! I_vote_rcap 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மஹா  பெரியவா ! I_vote_lcapமஹா  பெரியவா ! I_voting_barமஹா  பெரியவா ! I_vote_rcap 
176 Posts - 41%
heezulia
மஹா  பெரியவா ! I_vote_lcapமஹா  பெரியவா ! I_voting_barமஹா  பெரியவா ! I_vote_rcap 
174 Posts - 40%
mohamed nizamudeen
மஹா  பெரியவா ! I_vote_lcapமஹா  பெரியவா ! I_voting_barமஹா  பெரியவா ! I_vote_rcap 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
மஹா  பெரியவா ! I_vote_lcapமஹா  பெரியவா ! I_voting_barமஹா  பெரியவா ! I_vote_rcap 
21 Posts - 5%
வேல்முருகன் காசி
மஹா  பெரியவா ! I_vote_lcapமஹா  பெரியவா ! I_voting_barமஹா  பெரியவா ! I_vote_rcap 
9 Posts - 2%
prajai
மஹா  பெரியவா ! I_vote_lcapமஹா  பெரியவா ! I_voting_barமஹா  பெரியவா ! I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
மஹா  பெரியவா ! I_vote_lcapமஹா  பெரியவா ! I_voting_barமஹா  பெரியவா ! I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
மஹா  பெரியவா ! I_vote_lcapமஹா  பெரியவா ! I_voting_barமஹா  பெரியவா ! I_vote_rcap 
6 Posts - 1%
Raji@123
மஹா  பெரியவா ! I_vote_lcapமஹா  பெரியவா ! I_voting_barமஹா  பெரியவா ! I_vote_rcap 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மஹா  பெரியவா ! I_vote_lcapமஹா  பெரியவா ! I_voting_barமஹா  பெரியவா ! I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மஹா பெரியவா !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 03, 2015 6:26 pm

மஹா  பெரியவா ! Yiolov24SmilvUH0lfNJ+kanji-periava

நீங்க எல்லாருமே சுவாமி கும்புடறவாளாதான் இருப்பேள்.

தினசரி கர்மானுஷ்டானங்களை அனுசரிச்சு பூஜை பண்ணாட்டாலும் தெரிஞ்ச ஒரு சின்னத் துதியையாவது சொல்லி, சில நிமிஷமாவது தினமும் சுவாமியை வணங்கறதையும் பழக்கமா வைச்சுண்டிருப்பேள் .

அவா அவா வழக்கப்படிஆராதனைகளைப் பண்ணினாலும் நிச்சயம் ஏதாவது ஒரு வேண்டுதலும் அதுல இருக்கும்கறதுதான் நிஜம். அப்படி நீங்க வேண்டிக்கறதெல்லாம் உடனே பலிச்சுடறதா?
சிலருக்கு கேட்டது உடனே கிடைக்கும், இன்னும் கொஞ்சம் பேருக்கு கொஞ்சம் தாமதமா கிடைக்கும். மத்தவாள்ல சிலருக்கு ரொம்ப லேட்டா கோரிக்கை ஈடேறும்... சிலருக்கு நிறைவேறவே நிறைவேறாது.

எல்லாருமே வேண்டிக்கறது என்னவோ சுவாமிகிட்டேதான். ஆனாலும் ஏன் இப்படி வேற வேற மாதிரி பலன் கிடைக்கறது? அதுக்குக் காரணம், கோரிக்கை பண்றது நாமாக இருந்தாலும், கேட்டதை தரலாமா? வேண்டாமான்னு தீர்மானிக்கறது தெய்வம்தான்.

மனுஷாதான் யார் எதைக் கேட்டாலும் தரலாமா? வேண்டாமா?ன்னு ஆலோசனை பண்ணுவா? ஆனா கடவுளுக்கு எல்லாருமே சமம்தானே? அப்புறம் ஏன் ஒருத்தருக்கு குடுக்கறது, இன்னொருத்தருக்கு தாமதப்படுத்தறது, சிலருக்கு தராமலே இருந்துடறதுன்னு பார்ஷியாலிடி பண்றது எதனால?

இந்த சந்தேகம் பலருக்கும் இருக்கறதுதான் வாஸ்தவம். தன்னோட கோரிக்கைகள் நூறு இருந்தா அதுல தொண்ணூத்து ஒன்பது ஈடேறிடறதைப்பத்தி நினைக்கறதே இல்லை. ஒண்ணே ஒண்ணு நடக்கலைன்னதும் தெய்வத்தையே குறை சொல்ல ஆரம்பிச்சுடுவா.

ஒரு தாய்க்கு நாலு புள்ளைகள் இருக்கா. அவா நாலுபேருமே ஐஸ்க்ரீம் கேட்கறான்னு வைச்சுப்போம். அந்தப் புள்ளைகள்ல ஒருத்தனுக்கு ஜலதோஷம்.

அதனால, அவனுக்கு அப்போதைக்கு வாங்கித் தர மாட்டா. அடுத்தவனுக்கு சைனஸ் ப்ராப்ளம் அவனுக்கு கொஞ்ம் குணமானதும் வாங்கித் தருவா. மூணாவனுக்கு டான்சில் வளர்ந்திரக்கு. அதனால அவனுக்கு ஐஸ்க்ரீமே தரக் கூடாது. நாலாவது புள்ளைக்கு ஒரு பிரச்னையும் இல்லை.

அதனால அவனுக்கு உடனே கிடைக்கிறது. இந்த விஷயத்தை நன்னா நினைச்சுப் பாருங்கோ. அம்மா யார்கிட்டேயும் பாகுபாடெல்லாம் பார்க்கலை. கேட்டதை தர்றதுக்கு முன்னால, தரலாமா? அதனால பின்விளைவுகள் எதுவும் ஏற்படுமான்னு யோசிச்சுப் பார்க்கறா. சங்கடம் வரும்னா, தராம தவிர்க்கறா. சந்தோஷம் கிடைக்கும்னா உடனே கிராண்டட்.

அப்படித்தான் சுவாமியும் கேட்கறதை தர்றதால, பக்தர்களுக்கு பிரச்னை வரும்னா, தராம இருந்துடறா. அப்போதைக்குத்தான் தரக்கூடாது. கொஞ்சம் கழிச்சு தரலாம்னா, அப்படியே கொஞ்சம் லேட்டா கிடைக்கிறது. சரி இந்த கேள்விக்கு விடை மாதிரி, மகாபெரியவா சொன்ன ஒரு சம்பவம் இப்போ பார்க்கலாமா?

விஜய நகர சாம்ராஜ்யம்னு வரலாறுல படிச்சிருப்பேள். அந்த ராஜ்யம் அமையறதுக்கு காரணமானவர், பரம சன்யாசியான வித்யாரண்யர். சன்யாசம் ஏத்துக்கறவா எல்லாரும், எதுவுமே வேணாம்னுட்டு ஆஸ்ரமம் ஏத்துக்குவா. ஆனா, இவர் சன்யாசி அனதே வித்தியாசமான காரணத்துக்காக.

வித்யாரண்யர்ங்கறது அவரோட ஆஸ்ரமப் பேர், பூர்வாஸ்ரமப் பேர் என்னன்னு தெரியலை. ஆனா, அவர் பரம ஏழ்மையா இருந்தார். கஷ்டமெல்லாம் தீரணும்னா அதுக்கு ஒரே வழி மகாலட்சுமியோட கடாட்சம் தன்மேல படறதுதான்னு தீர்மானிச்சு, கடுமையா தவம் பண்ணினார். அவரோட தவத்துக்கு இரங்கி காட்சி தந்தா திருமகள்.

"அம்மா... அலைமகள்ங்கற உன்னோட பேருக்கு ஏத்த மாதிரி உன்னோட பார்வையை அங்கே இங்கேன்னு அலையவிடாம, என்மேல கொஞ்ச நாழி பதிச்சியான்னா. என்னோட வறுமையெல்லாம் தீர்ந்துடும்..!'னு வேண்டிண்டார்.

"இவ்வளவு கடுமையா தபஸெல்லாம் பண்ணி என்னை கும்பிட்டிருக்கே, அதுக்காகவாவது நான் உனக்க வரம் தந்துதான் ாகணும். ஆனா, உன்னோட விதியில இந்த ஜனமாவுல உனக்கு வறுமைதான்னு எழுதியிருக்கு, அதை என்னால மாத்த முடியாது. அதனால உன்னோட அடுத்த ஜன்மாவுல தங்கச் சுரங்கமாவே செல்வம் தர்றேன்! இப்போ வேற ஏதாவது வேணும்னா கேளு!' அப்படின்னா மகாலட்சுமி.

திக்குன்னு ஆச்சு, வித்யாரண்யருக்கு. பிரம்மசரியம் அனுஷ்டிக்கற பருவத்துலயே இந்த வறுமையை தாங்கிக்க முடியலையே... இன்னும் இந்தப் பிறவி முழுக்க இதை அனுபவிக்கணும்னா அவ்வளவுதான். இங்கேயே நரகவாசம் பண்றாப்புல ஆயிடுமே... இதுல இருந்து தப்பிக்க ஏதாவது வழி இருக்குமான்னு யோசிச்சார். சட்டுன்னு ஓர் எண்ணம் தோணித்து அவருக்கு.

ஒருத்தர் சன்யாசம் ஏத்துண்டார்னா, அது அவரோட ரெண்டாவது ஜென்மான்னு சொல்றது சாஸ்த்ரம். நம இப்ப உடனே சன்யாசம் ஏத்துண்டுட்டா, இந்த ஜென்மா முடிஞ்சு அடுத்த ஜன்மா எடுத்துட்டதா ஆயிடும். அப்போ மகாலட்சுமி நமக்கு வரம் தர்றதுல எந்த பிரச்னையும் இருக்காது! அப்படின்னு தோணித்த அவருக்கு.

உடனே, "தாயே மகாலட்சுமி நான் இந்த க்ஷணமே சன்யாசம் வாங்கிக்கறேன். இப்போ இது என்னோட ரெண்டாவது ஜன்மாவா ஆயிடுத்து... அதனால நீ சொன்னபடிக்கு எனக்கு செல்வத்தைக் குடு!'ன்னு கேட்டார் வித்யாரண்யர்.

மறுவிநாடியே அவர் பார்த்த இடமெல்லாம் தங்கமா மாறித்த. மலைமலையா பெரும் தங்கக் குவியல் அவரை சுத்தி இருந்தது. பார்த்தார் வித்யாரண்யர்.

அவரோட கண்ணுல இருந்து ஜலம் அருவிமாதிரி கொட்டித்து. "ஆஹா.. இவ்வளவு செல்வம் கிடைச்சும் இதுல ஒரு தூசியைக்கூட தொட முடியாதபடிக்கு சன்யாசம் வாங்கிட்டோமே... சன்யாசிக்கு எதுக்கு இவ்வளவு தங்கம்? தாயார் சொன்னபடிக்கு அடுத்த பிறவியில வாங்கியிருந்தாலாவது அதை "னுபவிச்சிருக்கலாம்.

இப்போ தெய்வத்தை ஏமாத்தறதா நினைச்சுண்டு நம்பளை நமளே ஏமாத்திண்டிருக்கோம். சரி, நடந்ததை மாத்திக்க முடியாது. இனிமேலாவது நல்லபடியா ஏதாவது பண்ணுவோம்' னு நினைச்சார். கண்ணுக்கு எட்டின தூரத்துல யாராவது இருக்காளான்னு பார்த்தார்.

கொஞ்சம் தொலைவுல குறும்பர்கள் அதாவது ஆடு, மாடு மேய்க்கறவா ரெண்டு பேர் நின்னுண்டு இருந்தாங்க. துங்கபத்திரை நதியோட கரையில ஒரு ராஜாங்கத்தை ஸ்தாபிச்சு அதுக்கு அவா ரெண்டுபேரையும் ராஜாக்களா ஆக்கினார். செல்வம் முழுசையும் தந்து, மாலிக்காபூரோட படையெடுப்பால் சிதைஞ்சு போயிருந்த கோயில்களையெல்லாம் சீரமைக்கச் சொன்னார்.

அன்னிக்கு அவர் ஸ்தாபிச்சதுதான், விஜயநகர சாம்ராஜ்யம். ஹரிஹரர், புக்கர்தான் அந்த ரெண்டு ராஜாக்கள்.அதுக்கப்புறம் வித்யாரண்யர் சன்யாச ஆஸ்ரமத்துல இருந்துண்டு. நாலு வேதங்களுக்கு பாஷ்யம் எழுதினார்.

யாருக்கு எப்போ எதைக் கொடுத்தா நல்லது? எந்த சமயத்துல தந்தா, அது அவாளுக்கு பயன்படக்கூடியதா இருக்கும்? கேட்டதைத் தர்றதா, கேட்காததைக் குடுக்கறதா? இதெல்லாம் சுவாமியோட தீர்மானப்படி நடந்தா நல்லது. நாம கேட்கலாமே தவிர, பகவான் குடுக்கறதை மனப்பக்குவத்தோட ஏத்துக்கணும். இந்த வித்யாரண்யர் வரலாறு மகாபெரியவா உபந்யாசங்கள் பண்றச்சே பலசமயங்கள்ல சொல்லியிருக்கார்.

செய்வத்துகிட்டே எப்படி நடந்துக்கணும்கறதுக்கு நடமாடும் தெய்வமான பரமாசார்யா சொன்ன இந்த வழிமுறை, சன்யாசிகளுக்கு மட்டுமல்லாம எல்லாருக்குமே பொருந்தும் இல்லையா?

பி. ராமகிருஷ்ணன்
dinamalar




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 03, 2015 6:49 pm

ஜய ஜய சங்கரா
ஹர ஹர சங்கரா
மஹா  பெரியவா ! OyIsHmlQTX243CQ9P5g4+periyava
மஹா  பெரியவா ! ANtg9NAJT8SpV2pGjJxd+c2677625-f06f-49ce-9294-65e5c11b0ab2_namaste01
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Aug 03, 2015 7:38 pm

மகா பெரியவர் சொன்ன கருத்தைத்தான் , மாணிக்கவாசகர் இவ்வாறு குறிப்பிடுகிறார் .


வேண்டத்தக்கது அறிவோய் நீ
வேண்டமுழுதும் தருவோய் நீ
வேண்டும் அயன் மாற்கு அரியோய் நீ
வேண்டி என்னைப் பணி கொணடாய்
வேண்டி நீயாது அருள் செய்தாய்
...யானும் அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசொன்று உண்டென்னில்
அதுவும் உன்தன் விருப்பன்றே.

- “திருவாசகம்”


பொருள் : என் சிவபெருமானே, நான் வேண்டியதை தருபவன் நீ. எனக்கு என்னவேண்டும் என்பது எனக்கு தெரியாவிட்டாலும் உனக்கு தெரியும். எனக்கு எதனை அருள வேண்டுமென்பதை நீயே அறிய வல்லவன். எனக்கு நல்லது எதுவோ அதனை வழங்கும் பொறுப்பு உன்னுடையது.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 03, 2015 7:44 pm

தெய்வ சந்நிதானத்தில் நல்லதே செய் என்று வேண்டினாலே போதும் .
ஆண்டவனுக்கு தெரியும் எதை எவ்வளவு எப்போது தரவேண்டும் என்று .
அந்த நம்பிக்கை வேண்டும் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 03, 2015 8:36 pm

ஒரு ஆதி திராவிடர், பிராமண பெண்ணை மணந்திருந்தார்...
-
சுமார், நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் அவர்கள்
காஞ்சி மடத்திற்கு சென்றனர்....
-
மதிய உணவு சாப்பிட நின்ற க்யூவில் சென்ற கணவரை
உணவு கூடத்திற்கு செல்ல அனுமதிக்க வில்லை...
-
இப்போது நிலைமை எப்படி உள்ளது..?
-



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 03, 2015 8:53 pm

யாருக்காவது இது விஷயம் தெரிந்து இருந்தால் ,
பகிர்ந்து கொள்ளலாம் .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Tue Aug 04, 2015 12:52 am

T.N.Balasubramanian wrote:தெய்வ சந்நிதானத்தில் நல்லதே செய் என்று வேண்டினாலே போதும் .
ஆண்டவனுக்கு தெரியும் எதை எவ்வளவு எப்போது தரவேண்டும் என்று .
அந்த நம்பிக்கை வேண்டும் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1155066

நல்லது செய் என வேண்டவும் வேண்டுமா ? எதையுமே வேண்டாமல் "இதுவரை செய்ததற்கு நன்றி "
என்று சொன்னாலும் போதும் . அவனுக்கு தெரியும் எதை , எப்போ, எப்படி , யார் மூலமாக , எவ்வளோ
தரவேண்டும் , தரலாமா பிடாதா என்று .

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Aug 04, 2015 7:09 am

வேண்டுதல் வேண்டி செல்வதால்
வேண்டுதல் அவசியம் என நினைத்தேன்
வேண்டாம் என்பவர்களுக்கு வேண்டாம்
வேண்டும் என்பவர்களுக்கு வேண்டும்
வேண்டுமா வேண்டாமா உங்களுக்கு ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Tue Aug 04, 2015 7:19 am

T.N.Balasubramanian wrote:வேண்டுதல் வேண்டி செல்வதால்
வேண்டுதல் அவசியம் என நினைத்தேன்
வேண்டாம் என்பவர்களுக்கு வேண்டாம்
வேண்டும் என்பவர்களுக்கு வேண்டும்
வேண்டுமா வேண்டாமா உங்களுக்கு ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1155255

எனக்கு
வேண்டவே... வேண்டாம் ....
வேண்டவே வேண்டாம் .....
என் நாடி போகும் வரை
நான் நாடுவேன் அவனை ... :வணக்கம்:
வேண்டுதல் இல்லாமலே .

உங்க அளவுக்கு கவிதை வரவில்லை அய்யா ... அழுகை அழுகை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக