ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாளை (Aug.3 ) ஆடிப்பெருக்கு :)

5 posters

Go down

நாளை (Aug.3 ) ஆடிப்பெருக்கு :)  Empty நாளை (Aug.3 ) ஆடிப்பெருக்கு :)

Post by krishnaamma Mon Aug 03, 2015 12:44 am

ஆக., 3 ஆடிப்பெருக்கு!

நாளை (Aug.3 ) ஆடிப்பெருக்கு :)  7ai0p9uQSy4nP93xCo2j+E_1438323966

'பெருக்கு' என்றால், பெருகுதல் என்ற பொருள் மட்டுமல்ல, 'சுத்தம் செய்தல்' என்ற பொருளும் உண்டு. ஆடி மாதத்தில் காவிரியாறு பெருக்கெடுத்து ஓடும்; அப்போது ஆற்றில் கிடக்கும் அசுத்தங்கள் எல்லாம் கடலுக்கு அடித்துச் செல்லப்படுவதால், ஆறு தூய்மையாகக் காட்சியளிக்கும்.
இதைப் போன்றே மனித மனங்களிலும் ஆசை, பொறாமை, ஆணவம் மற்றும் தீய எண்ணங்கள் உள்ளிட்ட கெட்ட குணங்கள் நிரம்பியுள்ளன. இதை, பக்தி என்னும் வெள்ளம் மூலம் அகற்ற வேண்டும். இதுவே, ஆடிப்பெருக்கு விழா உணர்த்தும் தத்துவம்.

இது, செல்வ அபிவிருத்திக்குரிய நாள்; ஆடிப்பெருக்கன்று துவங்கும் தொழில்கள், பலமடங்கு லாபம் தரும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. அதுபோல், இன்று செய்கிற தானம் உள்ளிட்ட நற்செயல்களால், புண்ணியம் பலமடங்கு பெருகும்.

திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் ஈரோடு பகுதிகளில் ஆடிப்பெருக்கு விழா மிகவும் பிரசித்தம். மக்கள் ஆறுகளுக்கு சென்று புனித நீராடி பாவங்களைத் தொலைப்பர். ஸ்ரீரங்கம் ரங்கநாதரின் திருமேனியைச் சுற்றி வரும் புண்ணியம் பெற்றது காவரி ஆறு.

இது, அகத்தியர் எனும் மாமுனிவரால் உருவாக்கப்பட்டது. மேலும், காகம் வடிவில் வந்த விநாயகரின் திருவடி ஸ்பரிசம் பெற்றது. இத்தகைய புண்ணிய நதியில், சுமங்கலிகள் தங்கள் கணவருடன் நீராடி, மாங்கல்யக் கயிறு மாற்றினால் தீர்க்க சுமங்கலியாக வாழ்வர்.

கன்னிப் பெண்கள், நல்ல வாழ்க்கைத் துணை வேண்டியும், விவசாயிகள், விளைச்சல் அதிகரிக்க வேண்டும் என, காவிரியை வேண்டுவர்.காவிரி, ரங்கநாதரின் தங்கையாகக் கருதப்படுவதால், இந்நாளில், சமயபுரம் பகுதிகளில், சகோதரர்கள் தங்கள் சகோதரிகளுக்கு சீர் செய்யும் நிகழ்வு நடக்கும்.

சகோதரர்கள் இங்குள்ள ஆதிமாரியம்மன் (சமயபுரம் மாரியம்மனின் மூத்த சகோதரி) கோவிலுக்கு, தங்கள் சகோதரிகள் மற்றும் அவர்களது கணவர்களை அழைத்துச் சென்று, மாரியம்மனை வழிபட்டு, அவர்களுக்கு சீர் கொடுப்பர்.

அதேபோன்று, தன் தங்கை காவிரிக்கு சீர் கொடுக்க, அம்மா மண்டப படித்துறைக்கு எழுந்தருள்வார் ரங்கநாதர். அப்போது, சீதனப் பொருட்களாக பட்டு, தாலிப்பொட்டு, மஞ்சள் உள்ளிட்ட மங்களப் பொருட்கள் ஆற்றில் மிதக்க விடப்படும்.

ஆடிப்பெருக்கன்று வீட்டில் பூஜை செய்வதுடன், அன்று மாலை விளக்கேற்றும் முன், வாசலில் பசுஞ்சாண நீர் தெளித்து, மாக்கோலம் இட வேண்டும். பின்பு, லட்சுமி தாயாரின் படத்தின் முன் பால், தேன், தாமரை, தானியம், சர்க்கரைப் பொங்கல் படைத்து பூஜை செய்ய வேண்டும். பாலை குழந்தைகளுக்கும், தேனைப் பெண்களுக்கும், தானியத்தைப் பறவைகளுக்கும், சர்க்கரைப் பொங்கலை ஏழைகளுக்கும் தானமாக வழங்கவேண்டும்.

ஆடிப்பெருக்கு நன்னாளில் சகல செல்வமும் பெற்று வாழ ரங்கநாதரையும், காவிரித் தாயையும் வேண்டுவோம்!

தி.செல்லப்பா


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நாளை (Aug.3 ) ஆடிப்பெருக்கு :)  Empty Re: நாளை (Aug.3 ) ஆடிப்பெருக்கு :)

Post by krishnaamma Mon Aug 03, 2015 12:49 am

இப்போது எல்லோரும் நகரங்களில் வசிப்பதால், இந்த விழாவை அப்படியே விட்டு விட்டுவிடமாட்டோம் நாங்கள் புன்னகை..............வீட்டில் இருக்கும் கிணற்றுக்கோ, மோட்டார் ஷெட்டுக்கோ அட எதுவுமே இல்லாத அடுக்கு மாடி கட்டிடம் என்றால், வீட்டில் தண்ணீர் வரும் குழாய்க்கு பூஜை செய்கிறோம் புன்னகை

ஆமாம், அந்த காலத்தில் ஆற்றங்கரைக்கு போய் பூஜை செய்வார்கள், பிறகு மணல்வெளி இல் கலந்த சாதம் உண்பார்கள். அது போலவே, இன்றும் நாங்கள் வீட்டில் இருக்கும் குழாயை ( Tap ) அலம்பி, குங்குமம் சந்தனம் இட்டு, பூ வைத்து, நைவேயத்தியம் செய்து கற்பூர ஹாரத்தி எடுத்து வழிபடுகிறோம்.

கலந்த சாதங்கள் , அப்பளம் வடாம் பொரிக்கிறோம் ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நாளை (Aug.3 ) ஆடிப்பெருக்கு :)  Empty Re: நாளை (Aug.3 ) ஆடிப்பெருக்கு :)

Post by shobana sahas Mon Aug 03, 2015 2:11 am

பரவாஇல்லயெ க்ரிஷ்ணாம்மா நீங்கள் குழாஇக்காவது பூஜை பண்றீங்களே! நான் மனதார ஐம்பெரும் பூதங்களுக்கு தினமும் நன்றி சொல்வேன் ..அவ்வளோதான் . சோகம் சோகம்
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

நாளை (Aug.3 ) ஆடிப்பெருக்கு :)  Empty இன்று ஆடிபெருக்கு -ஆடி 18

Post by T.N.Balasubramanian Mon Aug 03, 2015 7:19 am

இன்று ஆடிபெருக்கு -ஆடி 18

ஆடிப் பெருக்கிற்காக, திறக்கப்பட்ட காவிரி நீர், டெல்டா மாவட்டங்களை, நேற்று சென்றடைந்தது.
ஆடிப்பெருக்கு விழாவின்போது, காவிரியில் பூஜைகள் செய்வதையும், புதுப் பெண்கள் தாலி மாற்றுவதையும் சடங்காக வைத்துள்ளனர். திருச்சி, தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், இவ்விழா, சிறப்பாக கொண்டாடப்படும். இவ்விழா, டெல்டா மாவட்டங்களில் இன்று கொண்டாடப்படுகிறது.


நாளை (Aug.3 ) ஆடிப்பெருக்கு :)  WHZrPVEiReWiFvOIaQ6L+11800298_857842577636794_987672096222946275_n

நாளை (Aug.3 ) ஆடிப்பெருக்கு :)  H4xYKgQtRSyuPM0fn58w+11218216_857842410970144_4626995032115191345_n

நாளை (Aug.3 ) ஆடிப்பெருக்கு :)  V9gt2tgcRqr6T5ahXxVK+11796274_857842340970151_3840671438805793039_n

ஆடி பண்டிகை கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துகள்

ரமணியன்

நன்றி தினமலர் /மின்னஞ்சல்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நாளை (Aug.3 ) ஆடிப்பெருக்கு :)  Empty Re: நாளை (Aug.3 ) ஆடிப்பெருக்கு :)

Post by shobana sahas Mon Aug 03, 2015 7:22 am

நல்ல பதிவு அய்யா . காவிரியில் கொஞ்சமாவது தண்ணீர் இருக்கா அய்யா இப்போ ?
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

நாளை (Aug.3 ) ஆடிப்பெருக்கு :)  Empty Re: நாளை (Aug.3 ) ஆடிப்பெருக்கு :)

Post by T.N.Balasubramanian Mon Aug 03, 2015 7:46 am

இருக்க வேண்டுமே !

நான் இருப்பது சென்னையில் .

நம் சரா தான் சொல்லவேண்டும் . அவரும் ரொம்ப பிசி போல் உள்ளது .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நாளை (Aug.3 ) ஆடிப்பெருக்கு :)  Empty Re: நாளை (Aug.3 ) ஆடிப்பெருக்கு :)

Post by M.Jagadeesan Mon Aug 03, 2015 8:46 am

காவிரித்தாய்
==============
ஆடிப் பெருக்கினிலே ஓடிவரும் தாயேஉன்
......அழகைக் காண்பதற்கே ஆயிரம் கண்வேண்டும் !
வாடிய தமிழகத்தில் வளம்சேர்க்க வந்தவளே !
......வழிபட்டு நிற்போர்க்கு வரந்தந்து காப்பவளே !
கூடியே உன்கரையில் கொண்டாட வந்திட்டோம் !
.....குலம்காக்க வந்தவளே கொண்டானின் நலம்காக்க
நாடியே வந்துன்னை வேண்டி நிற்கின்றோம் !
......நாங்கள் சுமங்கலியாய் இருந்திட அருள்வாயே !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

நாளை (Aug.3 ) ஆடிப்பெருக்கு :)  Empty Re: நாளை (Aug.3 ) ஆடிப்பெருக்கு :)

Post by ayyasamy ram Mon Aug 03, 2015 9:06 am

சிதம்பரம் அருகே கொள்ளிடத்தில்
ஆடிப்பெருக்கு கொண்டாடும் மக்கள்...
-
நாளை (Aug.3 ) ஆடிப்பெருக்கு :)  GRsKw8xRTQGndjVwlouA+ADIPERUKKU
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நாளை (Aug.3 ) ஆடிப்பெருக்கு :)  Empty Re: நாளை (Aug.3 ) ஆடிப்பெருக்கு :)

Post by krishnaamma Mon Aug 03, 2015 10:14 am

திரிகளை இணைத்து விட்டேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நாளை (Aug.3 ) ஆடிப்பெருக்கு :)  Empty Re: நாளை (Aug.3 ) ஆடிப்பெருக்கு :)

Post by T.N.Balasubramanian Tue Aug 04, 2015 5:01 pm

shobana sahas wrote:நல்ல பதிவு அய்யா . காவிரியில் கொஞ்சமாவது தண்ணீர் இருக்கா அய்யா இப்போ ?
மேற்கோள் செய்த பதிவு: 1154941

ஷோபனா உங்களுக்காக ,

நாளை (Aug.3 ) ஆடிப்பெருக்கு :)  5cpUaLZRTnqilWJ8pp75+04_08_2015_011_007_001

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நாளை (Aug.3 ) ஆடிப்பெருக்கு :)  Empty Re: நாளை (Aug.3 ) ஆடிப்பெருக்கு :)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum