Latest topics
» கருத்துப்படம் 01/10/2024by mohamed nizamudeen Today at 12:58 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 12:18 am
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 12:16 am
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 12:14 am
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 12:12 am
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 12:10 am
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 12:09 am
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 12:08 am
» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 12:07 am
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 12:07 am
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 12:04 am
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 12:03 am
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 11:59 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 11:57 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 11:56 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 11:55 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 11:54 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 11:53 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 11:52 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 2:08 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05 am
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 12:51 am
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 10:39 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 10:05 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 12:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 12:46 am
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 10:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:27 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:18 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:59 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:49 am
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:01 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:59 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:57 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:56 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:54 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:52 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:50 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:48 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:46 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 6:21 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 5:52 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 5:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 5:03 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 3:39 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 2:35 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 2:24 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆலமரம்
4 posters
Page 1 of 1
ஆலமரம்
ஆலமரம் ஆதிகாலம் தொட்டே இந்தியாவில் இருந்து வருகிறது. குறிப்பாக, இமய மலைச்சாரல் காடுகளிலும், இந்திய தீபகற்பத்தின் மேற்கு, கிழக்கு தொடர்ச்சி மலைச்சரிவுகளிலும் காணப்படுகிறது. சாலை ஓரங்களிலும், ஆலயங்களின் அருகிலும், ஆறுகளின் கரை ஓரங்களிலும் காணப்படுகிறது.
கிராமங்களில் பெருமளவு ஆலமரங்கள் வளர்கின்றன. பரந்து விரிந்து நிழல் தருவதால் கிராம மக்கள் கூடும் இடமாகவும், கிராம வாணிபம் நடைபெறும் இடமாகவும், கால்நடைகளின் உறைவிடமாகவும், கிராம சங்கங்களின் கூட்டம் நடத்தும் இடமாகவும் ஆலமரங்கள் திகழ்கின்றன. இந்திய நாட்டின் வெப்ப பகுதிகளில் கடும் வெப்பத்தில் இருந்து தங்களை காத்துக் கொள்ள ஆலமரங்களை நடுகிறார்கள். இந்த மரத்திற்கு ஆங்கிலத்தில் பன்யான் ட்ரீ என்று பெயர் வந்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது. பெர்சியா வளைகுடாவில் பனியாக்கள் எனப்படும் வியாபாரிகள் இறைவணக்கத்திற்காகவும், வியாபாரத்துக்காகவும் இந்த மரத்தின் அடியில் அடிக்கடி கூடுவார்கள். எனவே அந்த மரத்துக்கு ஆங்கிலேயர்கள் பனியாக்களின் பெயரையே அந்த மரத்துக்கு வைத்து விட்டார்கள்.
ஆல மரங்களை கட்டுப்படுத்தாமல் விட்டு விட்டால் இவை தொடர்ந்து பல மீட்டர் அளவுக்கு அகலமாக விழுதுகள் விட்டுச் செல்லக் கூடியவை. பொதுவாக பல சந்தர்ப்பங்களால் ஆல மரங்கள் முழுமையாக வளர முடிவதில்லை. பல இடங்களில் குழந்தைகள் ஆல மரத்தின் விழுதுகளை ஊஞ்சலாக உபயோகிப்பதால் விழுதுகளும், வேர்களும் சேதம் அடைகின்றன. அதனால் அவை நிலத்தினை வந்து அடைவதில்லை. சில இடங்களில் கால்நடைகள் தங்களின் உணவாக ஆல மரத்தில் இருந்து கீழே தொங்கும் இளம் விழுதுகளை உண்கின்றன. இதனாலும் அந்த விழுதுகள் பூமியை வந்து அடைய முடியாமல் தடுக்கப்படுகின்றன.
சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கீதையில் ஆல மரத்தின் பெருமை கூறப்பட்டிருக்கிறது. எவ்வளவுதான் தடுத்தாலும் ஆல மரங்களின் பழங்களை பறவைகள் விரும்பி உண்பதால் அவை பறவைகளால் எடுத்துச் செல்லப்பட்டு நாட்டில் விதைகள் பரவி மரங்கள் மீண்டும், மீண்டும் தோன்றிக்கொண்டே இருக்கின்றன. எனவே ஆல மரத்துக்கு அழிவில்லை என்கிறார்கள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஆலமரம்
ஆலமரம் .
அருமையான தகவல்கள் , சிவா . நன்றி !
பழைய செய்யுள் நினைவில் வருகிறது .
செய்யுளின் வரிகள் நினைவில்லை .
jagadeesan அவர்களோ /ayyasami ram அவர்களோ
அறிந்த மற்றவர்களோ கொடுத்தால் ,மகிழ்வேன் .
கருத்து இதுதான் .
சின்னச் சிறிய ஆலம் விதை , மரமாகி , வளரும் போது ,
அரசன் தன் , ரத,கஜ , துரக ,பதாதி என்ற நான்கு வித
சைனியங்களுடன் , அந்த நிழலில் , இளைப்பாற கூடிய
அளவில் , அடர்ந்து படர்ந்து இருக்குமாம் .
ரமணியன்
அருமையான தகவல்கள் , சிவா . நன்றி !
பழைய செய்யுள் நினைவில் வருகிறது .
செய்யுளின் வரிகள் நினைவில்லை .
jagadeesan அவர்களோ /ayyasami ram அவர்களோ
அறிந்த மற்றவர்களோ கொடுத்தால் ,மகிழ்வேன் .
கருத்து இதுதான் .
சின்னச் சிறிய ஆலம் விதை , மரமாகி , வளரும் போது ,
அரசன் தன் , ரத,கஜ , துரக ,பதாதி என்ற நான்கு வித
சைனியங்களுடன் , அந்த நிழலில் , இளைப்பாற கூடிய
அளவில் , அடர்ந்து படர்ந்து இருக்குமாம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: ஆலமரம்
நல்ல பகிர்வு சிவா ....என் ஸ்வாமி, ஆலிலை யை தேர்ந்து எடுத்ததில் இருந்தே தெரியலையா அதன் சிறப்பு?
ஆலிலை கிருஷ்ணர் !......
.
.
.
ஆலமரம் பற்றி நான் 'கயா' திரி இல் போட்ட படமும் குறிப்பும் இதோ
அக்ஷய வடம் என்ற ஆலமரம் கயாவிலிருக்கு. அதன் வேர் ப்ரயாகை(அலஹாபாத்) நடு உடம்பு காசி, இலைகளுள்ள நுனிபாகம் கயாவிலிருக்குன்னு ஐதீகம். இது தான் அந்த மரம்
'அக்ஷய வடம்' என்றால் 'வாடாத ஆல மரம்' - 'நிரந்தரமான ஆல மரம் 'என்று அர்த்தமாம். அந்த மரம் கொஞ்சம் உயரமான இடத்தில் இருந்ததால் நிறைய படிகள் ஏறி அஷய வடம் சென்றோம்.
அஷய வடத்தின் இலைகள் இலையுதிர்காலத்தில் கூட பசுமையாக இருந்தது. அஷய வடம் மரத்திற்கு அடியில் கிருஷ்ண விக்ரகம் இருந்து. மரத்தை வலம்வந்து அதனடியில் அமர்ந்து பித்ரு காரியங்களை செய்யவேண்டும்.
'கயா' கட்டுரை லிங்க் இதோ
ஆலிலை கிருஷ்ணர் !......
.
.
.
ஆலமரம் பற்றி நான் 'கயா' திரி இல் போட்ட படமும் குறிப்பும் இதோ
அக்ஷய வடம் என்ற ஆலமரம் கயாவிலிருக்கு. அதன் வேர் ப்ரயாகை(அலஹாபாத்) நடு உடம்பு காசி, இலைகளுள்ள நுனிபாகம் கயாவிலிருக்குன்னு ஐதீகம். இது தான் அந்த மரம்
'அக்ஷய வடம்' என்றால் 'வாடாத ஆல மரம்' - 'நிரந்தரமான ஆல மரம் 'என்று அர்த்தமாம். அந்த மரம் கொஞ்சம் உயரமான இடத்தில் இருந்ததால் நிறைய படிகள் ஏறி அஷய வடம் சென்றோம்.
அஷய வடத்தின் இலைகள் இலையுதிர்காலத்தில் கூட பசுமையாக இருந்தது. அஷய வடம் மரத்திற்கு அடியில் கிருஷ்ண விக்ரகம் இருந்து. மரத்தை வலம்வந்து அதனடியில் அமர்ந்து பித்ரு காரியங்களை செய்யவேண்டும்.
'கயா' கட்டுரை லிங்க் இதோ
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஆலமரம்
மேற்கோள் செய்த பதிவு: 1154442T.N.Balasubramanian wrote:ஆலமரம் .
அருமையான தகவல்கள் , சிவா . நன்றி !
பழைய செய்யுள் நினைவில் வருகிறது .
செய்யுளின் வரிகள் நினைவில்லை .
jagadeesan அவர்களோ /ayyasami ram அவர்களோ
அறிந்த மற்றவர்களோ கொடுத்தால் ,மகிழ்வேன் .
கருத்து இதுதான் .
சின்னச் சிறிய ஆலம் விதை , மரமாகி , வளரும் போது ,
அரசன் தன் , ரத,கஜ , துரக ,பதாதி என்ற நான்கு வித
சைனியங்களுடன் , அந்த நிழலில் , இளைப்பாற கூடிய
அளவில் , அடர்ந்து படர்ந்து இருக்குமாம் .
ரமணியன்
தெள்ளிய ஆலின் சிறுபழத் தொருவிதை
தெண்ணீர்கயத்து சிறுமீன் சினையினும்
நுண்ணிதே ஆயினும் அன்னல் யானை
அணிதேர்ப் புரவி ஆட்பெரும் படையொடு
மன்னர்க்கிருக்க நிழலாகும்மே '
( வெற்றிவேற்கை-அதிவீரராம பாண்டியன்)
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: ஆலமரம்
வாவ் , jagadeesan . மிக்க நன்றி !
எந்தன் dairy இல் குறித்து வைத்துக் கொள்ள வேண்டிய செய்யுள் !
மீண்டும் நன்றி அய்யா
ரமணியன்
எந்தன் dairy இல் குறித்து வைத்துக் கொள்ள வேண்டிய செய்யுள் !
மீண்டும் நன்றி அய்யா
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: ஆலமரம்
உங்களுக்கு நான்தான் நன்றி சொல்லவேண்டும் . தங்களுடைய ஐயத்தைக் களைவதற்கு எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தீர்கள் அல்லவா அதற்கு !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Similar topics
» ஆலமரம்..!
» ஆத்தோரம் ஆலமரம்..........
» திகில் படம் ‘ஆலமரம்’
» ஆலமரம் போல் தனித்துவமாக வாழ....
» இளமையை காக்கும், முடி உதிர்வை தடுக்கும் ஆலமரம்
» ஆத்தோரம் ஆலமரம்..........
» திகில் படம் ‘ஆலமரம்’
» ஆலமரம் போல் தனித்துவமாக வாழ....
» இளமையை காக்கும், முடி உதிர்வை தடுக்கும் ஆலமரம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|