ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளைஞர்களின் இதய நாயகன் கலாம்

4 posters

Go down

இளைஞர்களின் இதய நாயகன் கலாம் Empty இளைஞர்களின் இதய நாயகன் கலாம்

Post by சிவா Thu Jul 30, 2015 11:31 pm


இந்தியாவை 2020ம் ஆண்டிற்குள் வல்லரசாக்க வேண்டும் என்ற லட்சிய தாக்கத்துடன் அனைத்து தரப்பினரிடமும் நம்பிக்கை விதையை விதைத்தவர் மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம்.

வளர்ந்த இந்தியாவை 2020க்குள் எட்ட, பார்லிமென்ட் முதல் சட்டசபை வரை சென்று அனைத்து தரப்பினரிடமும், “அனைவரும் சேர்ந்து ஒரு தொலை நோக்கு பார்வையுடன் உழைத்தால் சாதிக்க முடியும்,' என்ற நம்பிக்கையை விதைத்தவர். பார்லிமென்ட்டில் “வளர்ந்த இந்தியா 2020' என்ற தொலை நோக்கு திட்டத்தை பற்றி விரிவாக விவாதம் நடத்தி எம்.பி.,களுக்கு அதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். நதி நீர் இணைப்பு, எரிசக்தி பாதுகாப்பு, தொடக்க கல்வியில் மாற்றங்கள், “புரா' திட்டம் இப்படி பல்வேறு தொலை நோக்கு பார்வையை ஜனாதிபதியாக இருந்த போது இந்தியாவிற்கு தந்தார். ஊழலை ஒழிக்க பல்வேறு சட்டங்கள் இருந்தாலும், மாணவர்கள், இளைஞர்கள் ஊழல் ஒழிப்பை வீட்டிலிருந்து தொடங்கினால் கண்டிப்பாக ஊழல் ஒழியும் என்று அவர்களை ஊக்கப்படுத்தினார்.

உறுதிமொழிகள் பத்து:

“லீடு இந்தியா 2020' என்ற இயக்கம் மூலம் 14 லட்சம் மாணவர்களுக்கு ஆந்திராவில் சுதர்சன் ஆச்சார்யா தலைமையில் பத்து உறுதிமொழிகள் ஏற்க செய்தார். சிறப்பு பயிற்சி அளித்து, மாணவர்கள் தாங்கள் உயர்ந்தால், இந்த நாடு உயரும் என்ற தாரக மந்திரத்தை அளித்தார். மாணவர் தன் தனித்திறமையை உணர செய்து, பெற்றோர்களையும், ஆசிரியர்களையும் மதிக்க செய்து கல்வியில் மேம்பாடு அடையவும், ஒரு நல்ல குடிமகனாக மாற்றவும் வழிகாட்டினார். அந்த பயிற்சி பெற்ற மாணவர்கள் தங்கள் பெற்றோர்களை மாற்றி நல்வழிக்கு திருப்பினர்.

மாற்றத்தை ஏற்படுத்திய மகான்:

ஒரு நாள் திருப்பதியில் ஒரு லட்சம் மாணவர்கள் தங்கள் பெற்றோரிடம் ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டோம் என்ற உறுதிமொழியை பெற்று, அவர்களிடம் கையெழுத்து வாங்கி டாக்டர் அப்துல் கலாமிடம் சமர்ப்பித்தனர். அந்தளவுக்கு மாற்றத்தை டாக்டர் அப்துல் கலாமின் மாணவர்களுக்கான உறுதிமொழி அவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியது தெரியும். தமிழகத்திலும் அத்தகைய பயிற்சியை மாணவர்களுக்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டார். கோவையில் சதீஷ் என்பவர் தலைமையில் இம்முயற்சி நடக்கிறது. நடிகர் தாமு தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட 200 பள்ளிகளில் இதற்கான பயிற்சியை இதுவரை அளித்திருக்கிறார்.

வளர்ச்சிக்கான அனுபவ பெட்டகம் :

2020ல் இந்தியா வளர்ந்த நாடாக வேண்டும் என்பதின் தொடர்ச்சியாக டாக்டர் அப்துல் கலாமுடன் நான் இணைந்து எழுதிய புத்தகம் தான் “ஏ மானிபெஸ்டோ பார் சேஞ்ச்' . இந்த புத்தகம் பஞ்சாயத்து தேர்தல் முதல் சட்டசபை, லோக்சபா வரை எப்படி ஒரு நேர்மையான, ஊழலற்ற, வளர்ச்சிக்கான அரசியல் செய்ய இயலும், எப்படி இளைஞர்கள் வளர்ச்சிக்கான அரசியலில் பங்கெடுக்க இயலும் என்ற லட்சிய விதை விதைக்கும் வகையில் அமைந்திருக்கிறது. அரசியலில் ஆர்வம் கொண்ட அனைவருக்கும் அது ஒரு அனுபவ பெட்டகமாக கொள்கை விளக்கமாக, கை ஏடாக இருக்கும் என்பது திண்ணம்.

நாட்டின் எதிர்காலம்:

குழந்தைகள் தான் இந்த நாட்டின் எதிர் காலம் என்று தீர்க்கமாக நம்பி இளைஞர்களே, “தலைவர்களை வெளியில் தேடாதீர்கள். உங்களுக்குள் அந்த தலைவன் இருக்கிறான். நான் உனக்கு தலைமை தாங்க மாட்டேன். உன் பின்னாலும் வர மாட்டேன். உன்னோடு நான் நடந்து வருகிறேன். என்னோடு சேர்ந்து நட, உனது தலைமை பண்பு இந்த தேசத்தை மாற்றட்டும்,'' என்பார்.

தலைவனுக்கு இலக்கணம் வகுத்தவர்:

நீ என்ன செயல் செய்தாலும், அதில் ஒரு நல்ல தலைவனாக மாறு. உனது தலைமை பண்பு இந்த தேசத்தை வழிநடத்தும் என்ற தாரக மந்திரத்தை டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் விதைத்தார். தலைவன் என்றால் என்ன? தலைமை பண்பு என்றால் என்ன? எனக்கு கொடு, கொடு என்ற மனநிலை தான் இன்றைக்கு அனைத்து ஊழலுக்கும், மக்களின் துன்பத்திற்கும் காரணம். கொடு என்று ஒன்று குழந்தை கேட்கும் மற்றொன்று பிச்சைகாரன் தான் கேட்பான். ஊழலுக்கு கண்டிப்பாக குழந்தை தனம் இடம் கொடுக்காது. அப்படி என்றால் ஊழல் மனப்பான்மை பிச்சைக்காரனின் மனப்பான்மைக்கு சமம். எனவே கொடு, கொடு என்ற மனநிலையில் இருந்து மாற்றம் பெற்று, நான் தான் உனக்கு என்ன செய்ய வேண்டும் என்ற மனநிலைக்கு ஒருவர் மாறி விட்டால், அவன் தான் தலைவன். அப்படிப்பட்ட தலைவர்கள் அனைத்து துறையிலும் வர வேண்டும். அதிகாரிகள் மட்டத்திலும், அரசியலிலும் வர வேண்டும். அந்த மனநிலைக்கு மக்களை மாற்ற வேண்டும் என்றால், இளையசமுதாயத்திற்கு அப்படிப்பட்ட உணர்வு வர வேண்டும். அந்த சமுதாயம் ஒரு வேளை ஊழலில் ஈடுபடும் பெற்றோர்களை மாற்ற வேண்டும் என்பதில் அவர் தீவிரமான நம்பிக்கையுடன் செயல்பட்டார். அப்படிப்பட்ட இளைய சமுதாயத்தை உருவாக்கும் முயற்சியில் நாம் அனைவரும் பாடுபட வேண்டும்.

வழிகாட்டியாக திகழ்ந்தார்:

இந்தியாவை வளமான நாடாக்கி காட்டுவோம் என்று சபதம் எடுக்க செய்து வழிகாட்டியாக திகழ்ந்தார். கனவு காணுங்கள் எனக்கூறி இளைஞர்களின் கனவு நாயகனாக விளங்கினார். நான் அவருடன் பணிபுரிந்த காலங்களை மறக்க முடியாது. யாரையும் அவர் கடிந்து நான் பார்த்ததில்லை. கோபம் வந்தாலும் கூட வெளிகாட்ட மாட்டார். முடியாது என்ற செயல்களை கூட முடியும் என நம்பிக்கையை ஏற்படுத்த செய்து முடிக்க வைப்பார்.

உயர்ந்த எண்ணங்களை விதைப்பார்:

புறங்கூறுவதை ஏற்க மாட்டார். அன்பினாலும், பாசத்தினாலும் சாதிக்க முடியாததை கோபத்தாலும், வெறுப்பாலும் சாதிக்க முடியாது என அடிக்கடி அவர் கூறுவார். உயர்ந்த எண்ணங்களை பற்றி சிந்திக்க வைப்பார். பெரியளவில் எண்ணங்களை வளர்த்து கொள்ள வேண்டும் என்பார். எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் என்னை உடன் அழைத்து செல்லும் டாக்டர் கலாம், இம்முறை விண்ணுலகம் செல்வதாலோ என்னவோ என்னை அழைக்காமல் மேகலாயா நிகழ்ச்சிக்கு சென்று விட்டாரோ. அவர் நினைவுகளோடு இந்த உலகம் வாழும். அவரது லட்சியத்தை மனதில் கொண்டு அனைவரும் செயல்படுவோம்!

“இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாணநன்னயம் செய்து விடல்'' என்ற திருக்குறள் நெறிப்பட வாழ்ந்த அந்த மகாத்மாவின் கனவை நனவாக்குவோம்.

-வெ.பொன்ராஜ்,
அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகர்


இளைஞர்களின் இதய நாயகன் கலாம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இளைஞர்களின் இதய நாயகன் கலாம் Empty Re: இளைஞர்களின் இதய நாயகன் கலாம்

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா Thu Jul 30, 2015 11:35 pm

Whatsup ல் என் நண்பன் கொண்டல் ஏழுதியுள்ளான் மிக நல்ல பதிவு கலாமின் மன நிலை அனுபவத்தில் அவருக்கு வந்த சமரச சன்மார்க்கம் ஆனால் அதை அவர் வாய் விட்டு சொல்லவில்லை
நவ. 20 2003; திருப்பதிக்கு தரிசனம் செய்ய வந்தார் அன்றைய முதற்குடிமகன்.
பைந்தமிழால் பாமாலை சூட்டி, ஆழ்வார்கள் உள்ளம் உருகிய இடம்.
தமிழிசையால் இறைவனைத் தாலாட்டி மகிழ்ந்த இடம்.
தெழி குரல் அருவித் திருவேங்கடம்!
அடியவர்களுக்கும் பொதுமக்களுக்கும் தொல்லை தர விரும்பாமல் விடியற்காலை வைகறைப் பூசைகளில் மட்டும் கலந்து கொண்டார்.
நாட்டின் மன்னருக்கு அளிக்கப்படும் மரியாதைகள் தரப்பட்டு, ராஜகோபுரத்தின் அருகே வரவேற்கப்பட்டார்.
தயங்கி நிற்கிறார்...... அனைவரும் "அதை" மறந்துவிட..
அணுக்கோட்பாடுகளையே நினைவில் இருத்திய இவருக்கா அது மறந்து விடும்?
"எங்கே... அந்த கையெழுத்துப் புத்தகம்? கொண்டு வாருங்கள்" என்று கேட்டு வாங்கிக் கொள்கிறார்.
மாற்று மதத்தினராய் இருப்பதால்,
ஆலயத்தில் அதன் கோட்பாடுகளுக்குக் குந்தகம் வாராது, இறை தரிசனம் செய்ய விழைகிறேன் என்று படிவத்தில் கையொப்பம் இடுகிறார்!
நல்ல மனிதரான கலாம் இதை வைத்து அரசியல் செய்யவில்லை. அதிகாரம் காட்டவில்லை!
அதிகாரிகள் மறந்தால் கூடத் தாமே கேட்டு வாங்கி, இருக்கும் விதியைக் கடைப்பிடிக்கிறார்.
உண்மையான, உள்ளார்ந்த பக்தர்களின் நற்குணம் இது! அவர்கள் நோக்கம் இறை தரிசனம் மட்டுமே!
ஆலயத்தில் இறைவனை மட்டுமே அடியவர்கள் முன்னிறுத்துகிறார்கள்! இறைவனோ அடியவரை முன்னிறுத்துகிறான்.
கலாம் என்ன நினைத்தாரோ, என்ன வேண்டினாரோ, எப்படி வழிபட்டாரோ, அறியோம்!
சுமார் பத்து நிமிடங்கள், ஆழ்வார்களின் பாசுரங்கள் முழங்க, வழிபாடு.முடித்துக் கொண்டு, தீர்த்தமும் திருப்பாதமான சடாரியும் பெற்றுக் கொண்டு, வலம் வருகிறார் கலாம். உண்டியலில் காணிக்கையும் செலுத்துகிறார்.
அங்கே ரங்கநாயக மண்டபத்தில் மரியாதைகள் செய்யக் காத்து இருக்கிறார்கள் கோவில் அலுவலர்கள்!
திருமலையில் எப்பேர்ப்பட்ட விஐபி-க்கும் மாலைகள் போட்டு மரியாதை கிடையாது!
மாலைகளும் மலர்களும் ஆண்டாள் சூடிக் கொடுத்தவை அல்லவா?அவை எம்பெருமானுக்கு மட்டுமே உரியவை!
இது இந்த ஆலயத்தின் சம்பிரதாயம்!
அதனால் லட்டு/வடை பிரசாதமும், வஸ்திரம் என்கிற பட்டுத்துணியும் அர்ச்சகர்கள் வாழ்த்திக் கொடுக்கிறார்கள்!
இங்க வாங்க-னு அர்ச்சகரை அருகில் அழைத்து...
வேத ஆசிர் வசனம் என்ற சுலோகங்கள் உள்ளதே!
அதை ஓதி வாழ்த்தும் போது,
நம் தேசத்தின் பேரைச் சொல்லி, "இந்தியா" என்று வாழ்த்திக் கொடுங்களேன்!
நாட்டுக்காக ஆசிர்வாத மந்திரம் சொல்லுங்களேன், என்று அர்ச்சகர்களைக் கேட்டுக் கொண்டார்...
ஈயாடவில்லை ஒருவர் முகத்திலும்; இதெல்லாம் இவருக்கு எப்படித் தெரியும் என்ற வியப்பாய் ஆளுனர் பர்னாலாவும்; இதையெல்லாம் நாம கூடச் செய்யலையே என்ற திகைப்புடன் முதலமைச்சர் நாயுடுகாருவும்..
தன் பையிலிருந்து 600 ரூபாய் குடுத்து மூன்று அர்ச்சனை சிட்டுகள் வாங்கிவரச் செய்து; குடுத்து அர்ச்சனை செய்யச் சொன்னாராம்.
தன் குடும்பம், தன் பெண்டு, தன் பிள்ளையின் பேரில் தான் அர்ச்சனை செய்து பார்த்துள்ளோம்.
இல்லைன்னா சுவாமி பேருக்கே அர்ச்சனை என்பார்கள் சிலர்!ஆனால் இப்படியும் ஒரு அர்ச்சனையா?
அந்த நாள், கோவில் பட்டர்களுக்கே சற்று வித்தியாசமான நாளாகத் தான் இருந்திருக்கும்!
பலரும் அப்துல் கலாமை,
ஒரு விஞ்ஞானி,
தேசபக்தர்,
மனித நேயர்,
நல்ல மேலாளர்,
கல்வியாளர்,
குழந்தைப் பாசம் கொண்டவர்,
எளிமைப் பண்பாளர்,
இயற்கை ஆர்வலர்,
குடியரசுத் தலைவர் என்று தான் பார்த்திருப்பார்கள்!
அவர் ஓய்வு பெறும் இந்த வேளையில்....அவர் ஓய்வு தான் பெறுகிறாரா......இல்லை
இல்லை அவரது உடலுக்கு விடைகொடு விழா!
வாழ்கநீ எம்மான்! இந்த
வையத்து நாட்டில் எல்லாம்,
தாழ்வுற்ற தோற்றம் போல்
தோன்றிய பாரதத்தை
ஆழ்வுற்று கனவு கண்டு
அனைவரும் நாடச் செய்து
வாழ்விக்க வந்த கலாம்
வாழ்கநீ வாழ்க வாழ்க!
வாழ்கநின் புகழ் வாழ்க!
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011

http://kirubarp.blogspot.com

Back to top Go down

இளைஞர்களின் இதய நாயகன் கலாம் Empty Re: இளைஞர்களின் இதய நாயகன் கலாம்

Post by விமந்தனி Thu Jul 30, 2015 11:44 pm

நம் நாட்டிற்க்கு ஏற்ப்பட்ட ஈடில்லா பேரிழப்பு. சோகம் சோகம்


இளைஞர்களின் இதய நாயகன் கலாம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇளைஞர்களின் இதய நாயகன் கலாம் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இளைஞர்களின் இதய நாயகன் கலாம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

இளைஞர்களின் இதய நாயகன் கலாம் Empty Re: இளைஞர்களின் இதய நாயகன் கலாம்

Post by சிவா Thu Jul 30, 2015 11:53 pm

பகிர்வுக்கு நன்றி அண்ணா.

எனக்கும் வாட்ஸப்பில் கிடைத்தது!


இளைஞர்களின் இதய நாயகன் கலாம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இளைஞர்களின் இதய நாயகன் கலாம் Empty Re: இளைஞர்களின் இதய நாயகன் கலாம்

Post by shobana sahas Fri Jul 31, 2015 2:58 am

//இங்க வாங்க-னு அர்ச்சகரை அருகில் அழைத்து...
வேத ஆசிர் வசனம் என்ற சுலோகங்கள் உள்ளதே!
அதை ஓதி வாழ்த்தும் போது,
நம் தேசத்தின் பேரைச் சொல்லி, "இந்தியா" என்று வாழ்த்திக் கொடுங்களேன்!
நாட்டுக்காக ஆசிர்வாத மந்திரம் சொல்லுங்களேன், என்று அர்ச்சகர்களைக் கேட்டுக் கொண்டார்...
ஈயாடவில்லை ஒருவர் முகத்திலும்; இதெல்லாம் இவருக்கு எப்படித் தெரியும் என்ற வியப்பாய் //
கண்களில் கண்ணீர் வருகிறது .... எத்தனை பெரிய மனம் வேண்டும் ... அய்யா உங்களை நமஸ்கரிக்கிறோம் .... அழுகை அழுகை
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

இளைஞர்களின் இதய நாயகன் கலாம் Empty Re: இளைஞர்களின் இதய நாயகன் கலாம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum