புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரிட்டனுக்கு வேண்டும் குற்றவுணர்வு: சசி தரூர் உரை Poll_c10பிரிட்டனுக்கு வேண்டும் குற்றவுணர்வு: சசி தரூர் உரை Poll_m10பிரிட்டனுக்கு வேண்டும் குற்றவுணர்வு: சசி தரூர் உரை Poll_c10 
44 Posts - 41%
heezulia
பிரிட்டனுக்கு வேண்டும் குற்றவுணர்வு: சசி தரூர் உரை Poll_c10பிரிட்டனுக்கு வேண்டும் குற்றவுணர்வு: சசி தரூர் உரை Poll_m10பிரிட்டனுக்கு வேண்டும் குற்றவுணர்வு: சசி தரூர் உரை Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
பிரிட்டனுக்கு வேண்டும் குற்றவுணர்வு: சசி தரூர் உரை Poll_c10பிரிட்டனுக்கு வேண்டும் குற்றவுணர்வு: சசி தரூர் உரை Poll_m10பிரிட்டனுக்கு வேண்டும் குற்றவுணர்வு: சசி தரூர் உரை Poll_c10 
8 Posts - 7%
T.N.Balasubramanian
பிரிட்டனுக்கு வேண்டும் குற்றவுணர்வு: சசி தரூர் உரை Poll_c10பிரிட்டனுக்கு வேண்டும் குற்றவுணர்வு: சசி தரூர் உரை Poll_m10பிரிட்டனுக்கு வேண்டும் குற்றவுணர்வு: சசி தரூர் உரை Poll_c10 
5 Posts - 5%
வேல்முருகன் காசி
பிரிட்டனுக்கு வேண்டும் குற்றவுணர்வு: சசி தரூர் உரை Poll_c10பிரிட்டனுக்கு வேண்டும் குற்றவுணர்வு: சசி தரூர் உரை Poll_m10பிரிட்டனுக்கு வேண்டும் குற்றவுணர்வு: சசி தரூர் உரை Poll_c10 
5 Posts - 5%
Raji@123
பிரிட்டனுக்கு வேண்டும் குற்றவுணர்வு: சசி தரூர் உரை Poll_c10பிரிட்டனுக்கு வேண்டும் குற்றவுணர்வு: சசி தரூர் உரை Poll_m10பிரிட்டனுக்கு வேண்டும் குற்றவுணர்வு: சசி தரூர் உரை Poll_c10 
3 Posts - 3%
prajai
பிரிட்டனுக்கு வேண்டும் குற்றவுணர்வு: சசி தரூர் உரை Poll_c10பிரிட்டனுக்கு வேண்டும் குற்றவுணர்வு: சசி தரூர் உரை Poll_m10பிரிட்டனுக்கு வேண்டும் குற்றவுணர்வு: சசி தரூர் உரை Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
பிரிட்டனுக்கு வேண்டும் குற்றவுணர்வு: சசி தரூர் உரை Poll_c10பிரிட்டனுக்கு வேண்டும் குற்றவுணர்வு: சசி தரூர் உரை Poll_m10பிரிட்டனுக்கு வேண்டும் குற்றவுணர்வு: சசி தரூர் உரை Poll_c10 
2 Posts - 2%
Barushree
பிரிட்டனுக்கு வேண்டும் குற்றவுணர்வு: சசி தரூர் உரை Poll_c10பிரிட்டனுக்கு வேண்டும் குற்றவுணர்வு: சசி தரூர் உரை Poll_m10பிரிட்டனுக்கு வேண்டும் குற்றவுணர்வு: சசி தரூர் உரை Poll_c10 
2 Posts - 2%
Saravananj
பிரிட்டனுக்கு வேண்டும் குற்றவுணர்வு: சசி தரூர் உரை Poll_c10பிரிட்டனுக்கு வேண்டும் குற்றவுணர்வு: சசி தரூர் உரை Poll_m10பிரிட்டனுக்கு வேண்டும் குற்றவுணர்வு: சசி தரூர் உரை Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிரிட்டனுக்கு வேண்டும் குற்றவுணர்வு: சசி தரூர் உரை Poll_c10பிரிட்டனுக்கு வேண்டும் குற்றவுணர்வு: சசி தரூர் உரை Poll_m10பிரிட்டனுக்கு வேண்டும் குற்றவுணர்வு: சசி தரூர் உரை Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
பிரிட்டனுக்கு வேண்டும் குற்றவுணர்வு: சசி தரூர் உரை Poll_c10பிரிட்டனுக்கு வேண்டும் குற்றவுணர்வு: சசி தரூர் உரை Poll_m10பிரிட்டனுக்கு வேண்டும் குற்றவுணர்வு: சசி தரூர் உரை Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
பிரிட்டனுக்கு வேண்டும் குற்றவுணர்வு: சசி தரூர் உரை Poll_c10பிரிட்டனுக்கு வேண்டும் குற்றவுணர்வு: சசி தரூர் உரை Poll_m10பிரிட்டனுக்கு வேண்டும் குற்றவுணர்வு: சசி தரூர் உரை Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
பிரிட்டனுக்கு வேண்டும் குற்றவுணர்வு: சசி தரூர் உரை Poll_c10பிரிட்டனுக்கு வேண்டும் குற்றவுணர்வு: சசி தரூர் உரை Poll_m10பிரிட்டனுக்கு வேண்டும் குற்றவுணர்வு: சசி தரூர் உரை Poll_c10 
21 Posts - 5%
prajai
பிரிட்டனுக்கு வேண்டும் குற்றவுணர்வு: சசி தரூர் உரை Poll_c10பிரிட்டனுக்கு வேண்டும் குற்றவுணர்வு: சசி தரூர் உரை Poll_m10பிரிட்டனுக்கு வேண்டும் குற்றவுணர்வு: சசி தரூர் உரை Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
பிரிட்டனுக்கு வேண்டும் குற்றவுணர்வு: சசி தரூர் உரை Poll_c10பிரிட்டனுக்கு வேண்டும் குற்றவுணர்வு: சசி தரூர் உரை Poll_m10பிரிட்டனுக்கு வேண்டும் குற்றவுணர்வு: சசி தரூர் உரை Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
பிரிட்டனுக்கு வேண்டும் குற்றவுணர்வு: சசி தரூர் உரை Poll_c10பிரிட்டனுக்கு வேண்டும் குற்றவுணர்வு: சசி தரூர் உரை Poll_m10பிரிட்டனுக்கு வேண்டும் குற்றவுணர்வு: சசி தரூர் உரை Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
பிரிட்டனுக்கு வேண்டும் குற்றவுணர்வு: சசி தரூர் உரை Poll_c10பிரிட்டனுக்கு வேண்டும் குற்றவுணர்வு: சசி தரூர் உரை Poll_m10பிரிட்டனுக்கு வேண்டும் குற்றவுணர்வு: சசி தரூர் உரை Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பிரிட்டனுக்கு வேண்டும் குற்றவுணர்வு: சசி தரூர் உரை Poll_c10பிரிட்டனுக்கு வேண்டும் குற்றவுணர்வு: சசி தரூர் உரை Poll_m10பிரிட்டனுக்கு வேண்டும் குற்றவுணர்வு: சசி தரூர் உரை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பிரிட்டனுக்கு வேண்டும் குற்றவுணர்வு: சசி தரூர் உரை Poll_c10பிரிட்டனுக்கு வேண்டும் குற்றவுணர்வு: சசி தரூர் உரை Poll_m10பிரிட்டனுக்கு வேண்டும் குற்றவுணர்வு: சசி தரூர் உரை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரிட்டனுக்கு வேண்டும் குற்றவுணர்வு: சசி தரூர் உரை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 26, 2015 9:52 pm


எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் சசி தரூர். 189 ஆண்டு பாரம்பரியம் மிக்க 'ஆக்ஸ்போர்டு யூனியன் சொசைட்டி'யில் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் ஆற்றிய உரைதான் இணைய உலகில் இந்த வாரத்தின் வைரல். பிரிட்டனால் காலனியாதிக்க நாடுகள் பலன் பெற்றனவா, சுரண்டப்பட்டனவா எனும் விவாதப் பொருளில் நடந்த விவாதம் அது. காலனியாதிக்கத்தால் பிரிட்டன் எவ்வளவு சுரண்டியது என்று பேச ஆரம்பித்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் தன்னுடைய 15 நிமிஷ உரையில், அன்றைய இந்தியாவை அப்படியே கண் முன் கொண்டுவந்த நிறுத்தியதோடு, பிரிட்டனின் சுரண்டல்களையும் அம்பலப்படுத்தினார்.

இணையத்தில் லட்சக்கணக்கானோரால், பார்க்கப்பட்ட / கேட்கப்பட்ட / பேசப்பட்ட சரி தரூரின் உரை இந்திய நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. நாடாளுமன்ற உறுப்பினர் களுக்கான நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிரதமர் மோடி வெளிப்படையாக சசி தரூரைப் பாராட்டினார்.

உலகின் 10-ல் 9 பங்கு நிலப்பரப்பை ஆக்ரமித்திருந்த மேற்கத்திய காலனியாதிக்க அராஜகங்களை இன்று நினைவுகூர்வது வெறும் வரலாற்றுப் பக்கங்களை புரட்டி பார்க்கும் நிகழ்வு மட்டும் அல்ல. ஒருவகையில், காலனியாதிக்கம் மீதம் விட்டுச்சென்றுள்ள ஆதிக்க மனோபாவங்கள், அரசியல் திட்டங்கள், கோட்பாடுகள் ஆகியவற்றை ஆய்வுக்குள்ளாக்குவதோடு தொடர்புடையது.

சசி தரூர் உரையின் தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கியமான பகுதிகள் இவை:

* "எனக்கு 8 நிமிடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மொத்தம் 8 பேச்சாளர்களில் நான் 7-வதாக உரையாற்ற வந்துள்ளேன். ஏற்கெனவே மிக நீண்ட மாலைப்பொழுதாக உங்களுக்கு அமைந்துள்ள நிலையில், நான் 8-ம் ஹென்றியின் கடைசி மனைவியாக என்னை உணர்கிறேன். எதிர்த் தரப்பினர் காலனியாதிக்கத்தினால் நாடுகளின் பொருளாதாரம் சிறப்படைந்தது என்று முன்வைத்த கருத்தைக் கேள்விக்குட்படுத்த விரும்புகிறேன்.

* காலனியாதிக்கத்தின் மூலம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பொருளாதாரச் சூழ்நிலைகள் மோசமடைந்தன என்பதே உண்மை. பிரிட்டன் ஆதிக்கவாதிகள் இந்தியாவுக்குள் நுழையும்போது உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்களிப்பு 23%. பிரிட்டன் நாட்டைவிட்டு வெளியேறியபோது உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்களிப்பு 4%. இதைவிடச் சான்று வேண்டுமா?

* பிரிட்டனின் 200 ஆண்டு கால காலனியாதிக்கம் அவர்களது வளர்ச்சியை முன்னிறுத்தியே தொடர்ந்தது. பிரிட்டனின் வளர்ச்சியாக விதந்தோதப்படும் தொழிற்புரட்சி, இந்தியத் தொழில் துறையை அழித்ததன் மூலமே உருவானது.

* இந்தியாவின் பருத்தி உற்பத்தி நசுக்கப்பட்டு, சுரண்டப்பட்டு பிரிட்டன் பொருளாதாரம் வளர்ந்தது. கச்சாப் பொருட்களை இந்தியாவிலிருந்து கொள்ளை அடித்து பிரிட்டன் கொண்டுசென்று உற்பத்திசெய்து, ஆடைகளாக அவற்றை மீண்டும் இந்தியாவிற்குக் கொண்டுவந்து விற்றது பிரிட்டன். இதன் மூலம் இந்தியாவைத் தன் சந்தையாக்கியது. இந்திய நெசவாளர்கள் பிச்சைக்காரர்களாக மாறினர், உலகத் தரம் வாய்ந்த பருத்தி ஆடைகளின் ஏற்றுமதியாளராகக் கோலோச்சிய இந்தியா, இறக்குமதி நாடானது. உலக பருத்தி ஏற்றுமதியில் 27% பங்களிப்பு செய்த இந்தியாவின் ஏற்றுமதி 2% ஆகக் குறைந்தது.

* ராபர்ட் கிளைவ் இந்தியிலுள்ள 'லூட்' (கொள்ளை) எனும் சொல்லை ஆங்கில அகராதிக்கு அளித்தார். கூடவே கொள்ளையிடும் பழக்கத்தையும் பிரிட்டனுக்கு அளித்தார். அவரை 'கிளைவ் ஆஃப் இந்தியா' என்று பிரிட்டன் வர்ணித்தது, ஆனால், நாடே கிளைவின் கொடூர வலைப் பின்னல்களுக்கு அடிமைப்படுத்தப்பட்டது.

* 19-ம் நூற்றாண்டின் முடிவில் இந்தியா, பிரிட்டனின் மிகப் பெரிய கறவை மாடானது, பிரிட்டன் பொருட்களின் நுகர்வுச் சந்தையாக மாற்றப்பட்டது.

* பிரிட்டிஷ் அரசு ஊழியர்களுக்கு நாம் பெரிய அளவில் சம்பளம் கொடுத்தோம், எங்களை அடக்குமுறைக்கு உட்படுத்த நாங்களே கொடுத்துக்கொண்ட சம்பளம் அது.

* இந்த விவாத அரங்கில், ஏற்கெனவே குறிப்பிடப் பட்டதுபோல, செல்வ வளம் கொழித்த விக்டோரிய இங்கிலாந்தின் செல்வந்தர்கள், அடிமைப் பொருளாதாரத்தின் மூலமே தங்களது செல்வங்களை ஈட்டியுள்ளனர். அடிமைப் பொருளாதாரம் மூலம் ஐந்தில் ஒரு பங்கு இங்கிலாந்து மக்கள் பணக்காரர்களானார்கள்.

* 1833-ல் அடிமை முறை ஒழிக்கப்பட்டபோது இழப்பீடாக 20 மில்லியன் பவுண்டுகள் தொகை அளிக்கப்பட்டது. யாருக்குக் கொடுக்கப்பட்ட இழப்பீடு தெரியுமா இது? அடிமைச் சுரண்டல்களால் உயிரிழந்தவர்களுக்கோ, அடக்குமுறை துன்பம் அனுபவித்தவர்களுக்கோ அல்ல; அடிமை முறை ஒழிப்பினால் சொத்துகளை இழந்தவர்களுக்குக் கொடுக்கப்பட்ட இழப்பீடு இது.

* இந்த யூனியனின் வைஃபை கடவுச்சொல் கிளாட்ஸ்டோன் என்ற 'லிபரல் ஹீரோ'வாகக் கருதப்பட்டவரின் நினைவைக் கொண்டாடுவதற்காக வைக்கப்பட்டதாக அறிந்ததைக் கண்டு திகைத்தேன். காரணம் மேற்கூறிய 20 மில்லியன் பவுண்டுகள் இழப்பீட்டுத் தொகையால் பலன் அடைந்த குடும்பங்களில் அவருடையதும் ஒன்று.

* பிரிட்டிஷ் ஆட்சிக் காலப் பெரும் பஞ்சத்துக்கு 1.5 கோடி முதல் 2.9 கோடி மக்கள் மடிந்தனர். வங்காள வறட்சிக்கு மட்டும் 40 லட்சம் மடிந்தனர். காரணம், வின்ஸ்டன் சர்ச்சிலின் கொடூரமான கொள்கைகள். இரண்டாம் உலகப் போரின்போது அத்தியாவசியப் பொருட்கள் பிரிட்டன் ராணுவத்துக்காகப் பதுக்கப்பட்டன. இதற்கான உத்தரவைப் பிறப்பித்தவர் வின்ஸ்டன் சர்ச்சில். மக்கள் இந்தியாவில் உணவின்றிச் செத்து மடிகின்றனர் என்று ஓரளவு ஈரமுள்ள பிரிட்டன் அதிகாரிகள் சர்ச்சிலுக்கு எழுதினார்கள். அந்தக் கோப்பின் விளிம்பில் சர்ச்சில் எழுதினார்: "ஏன் காந்தி இன்னும் சாகவில்லை?"

* காலனியாதிக்க அனுபவம் மூலம் பெறப்பட்டதெல்லாம் வன்முறையும் நிறவெறியும் மட்டுமே. இதுதான் காலனியாதிக்க இயந்திரத்தின் நடைமுறை. பிரிட்டன் பேரரசில் சூரியன் அஸ்தமிக்கவில்லை என்று கூறப்படுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை, காரணம், கடவுள்கூட ஆங்கிலேயர்களை இருட்டில் நம்பத் தயாராக இல்லை.

* இங்கு எனக்கு முன்னால் பேசிய எதிர்த் தரப்பாளர் அடக்குமுறையையும், இழப்பையும் எண்ணிக்கைக்குள் கொண்டுவர முடியாது என்றார். பல உதாரணங்களில் ஒன்றை நான் இங்கு குறிப்பிடுகிறேன்.. இரண்டாம் உலகப் போரின்போது பிரிட்டன் படையில் ஆறில் ஒரு பங்கு இந்தியர்கள். 54,000 இந்தியர்கள் போரில் பலியாகியுள்ளனர். 65,000 பேர் காயமடைந்தனர். 4000 பேர் கதி என்னவென்று தெரியவில்லை; இவர்கள் சிறையில் இருந்திருக்கலாம்.

* இரண்டாம் உலகப் போருக்காக இந்திய வரிசெலுத்துவோர் அன்றைய மதிப்பின்படி 100 மில்லியன் பவுண்டுகளை இழந்தனர். இந்தியா 70 மில்லியன் ஆயுதங்களை வழங்கியது. 600,000 துப்பாக்கிகள், மற்றும் இயந்திரத் துப்பாக்கிகள் 42 மில்லியன் ஆடைகள் இந்தியாவிலிருந்து சென்றன. 13 லட்சம் இந்தியர்கள் இந்தப் போரில் ஈடுபடுத்தப்பட்டனர். இதோடு 173,000 விலங்குகள், 370 மில்லியன் டன்கள் பொருட்கள் அனுப்பப்பட்டன.

* இந்தியாவில் கடும் பஞ்சம் ஏற்பட்ட நிலையில் இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் இந்தியாவிலிருந்து கொண்டுசெல்லப்பட்ட பொருட்களின் மதிப்பு இன்றைய மதிப்பின்படி 8 பில்லியன் பவுண்டுகள்.

* ஸ்காட்லாந்தை வறுமையிலிருந்து மீட்க இந்தியாவில் செய்த சுரண்டல்களே உதவின.

* காலனி ஆதிக்க நாடுகளில் பிரிட்டன் அரசு ரயில் பாதைகளையும் சாலைகளை அமைத்ததைப் பற்றிப் பிரமாதமாகப் பேசுகிறார்கள். பிரிட்டனின் தொழில் துறைத் தேவைகளுக்காக, கொள்ளைக்காகக் கொண்டுவரப்பட்டவைதான் ரயில்வேயும், சாலைகளுமே தவிர, உள்ளூர் மக்களின் பயன்பாடுகளுக்காக அல்ல. கச்சாப் பொருட்களை உள்ளூரிலிருந்து துறைமுகத்துக் கொண்டுசெல்ல வேண்டும். அதற்காகவே போக்குவரத்து பெரிதும் பயன்பட்டது.

* இந்தியாவில் ரயில்வேயை உருவாக்க பிரிட்டன் முதலீட்டாளர்களை அழைத்தபோது, இந்தியாவிலிருந்து கிடைக்கும் பெரிய தொகையை, அதாவது இந்திய வரிப்பணம் என்ற ஆசையையும், உத்தரவாதத்தையும் அளித்தது. இதனால் ஒரு மைல் தூர பால வேலைகள் நடக்க இரு மடங்கு செலவானது. அதாவது கனடாவிலோ, ஆஸ்திரேலியாவிலோ இந்தத் தொலைவுக்கு ஆகும் செலவைவிட இரு மடங்கானது. இந்தியப் பொதுமக்களைத் துன்பத்தில் ஆழ்த்தி, பிரிட்டன் தனியார் துறைகள் ரயில்வே, சாலைகள் திட்டம் மூலம் கொழுத்து வளர்ந்தன.

* ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி என்றெல்லாம் பிரிட்டிஷ் ஆட்சிபற்றிப் பேசப்படுகிறது. சித்ரவதைகள், சுரண்டல்கள், அடக்குமுறைகள், வன்முறைகள்… இப்படி 200 ஆண்டு காலம் ஓட்டிவிட்டு எல்லாம் முடிந்ததும் 'ஜனநாயகம்' பற்றி எப்படிப் பேச முடிகிறது என்று தெரியவில்லை. எங்களுக்கு ஜனநாயகம் மறுக்கப்பட்டது. அதை நாங்கள் உங்களிடமிருந்து பறிக்கப் போராட வேண்டியதாக இருந்தது.

* இவற்றையெல்லாம் மீறி பிரிட்டன், இந்தியாவுக்கு நிதியுதவி அளித்தது என்று பேசப்படுகிறது. ஆம் உதவி அளிக்கப்பட்டது. எவ்வளவு அளிக்கப்பட்டது? அந்த உதவியை எங்கள் உள்நாட்டு உற்பத்தி மதிப்புடன் ஒப்பிட்டால், வெறும் 0.4%. நாங்கள் உரங்களுக்குக் கொடுக்கும் மானியம் மட்டும் இதைவிடப் பல மடங்கு அதிகமானது.

* இதற்கெல்லாம் பிரிட்டன் கடன்பட்டிருக்கிறது என்றும் அதற்கான நிதி இழப்பீடு எவ்வளவு என்றெல்லாம் இந்த விவாதத்தில் பேசப்பட்டது. ஆனால், காலனியாதிக்க காலத்தில் எம் மக்கள் அனுபவித்த பயங்கரங்களுக்கு எந்தத் தொகை ஈடாகும்? வீட்டுக்குள் நுழையும் கொள்ளைக்காரர் வீட்டைச் சூறையாடிவிட்டுச் செல்கிறார் என்றால் இருதரப்பிலும் 'தியாகங்கள்' இருக்கின்றன என்ற வாதம் அறரீதியாக சரியானதாக இருக்க முடியுமா?

* பிரிட்டன் கடன்பட்டிருக்கிறது என்பதைக் கொள்கை ரீதியாக ஒப்புக்கொள்ள ஒரு 'மன்னிப்பு' போதும். அதை விடுத்து நிதியுதவி, இழப்பீடு என்ற வாதங்களை ஏற்க முடியாது. ஆனால் 'நாம் கடன்பட்டிருக்கிறோம்' என்ற குற்ற உணர்வு வேண்டும்!"

- தொகுப்பும் மொழியாக்கமும்: ஆர்.முத்துக்குமார்



பிரிட்டனுக்கு வேண்டும் குற்றவுணர்வு: சசி தரூர் உரை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக