புதிய பதிவுகள்
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:25 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மரணித்த நம்பிக்கை.! Poll_c10மரணித்த நம்பிக்கை.! Poll_m10மரணித்த நம்பிக்கை.! Poll_c10 
60 Posts - 46%
ayyasamy ram
மரணித்த நம்பிக்கை.! Poll_c10மரணித்த நம்பிக்கை.! Poll_m10மரணித்த நம்பிக்கை.! Poll_c10 
54 Posts - 41%
mohamed nizamudeen
மரணித்த நம்பிக்கை.! Poll_c10மரணித்த நம்பிக்கை.! Poll_m10மரணித்த நம்பிக்கை.! Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
மரணித்த நம்பிக்கை.! Poll_c10மரணித்த நம்பிக்கை.! Poll_m10மரணித்த நம்பிக்கை.! Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
மரணித்த நம்பிக்கை.! Poll_c10மரணித்த நம்பிக்கை.! Poll_m10மரணித்த நம்பிக்கை.! Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
மரணித்த நம்பிக்கை.! Poll_c10மரணித்த நம்பிக்கை.! Poll_m10மரணித்த நம்பிக்கை.! Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
மரணித்த நம்பிக்கை.! Poll_c10மரணித்த நம்பிக்கை.! Poll_m10மரணித்த நம்பிக்கை.! Poll_c10 
2 Posts - 2%
prajai
மரணித்த நம்பிக்கை.! Poll_c10மரணித்த நம்பிக்கை.! Poll_m10மரணித்த நம்பிக்கை.! Poll_c10 
2 Posts - 2%
Manimegala
மரணித்த நம்பிக்கை.! Poll_c10மரணித்த நம்பிக்கை.! Poll_m10மரணித்த நம்பிக்கை.! Poll_c10 
2 Posts - 2%
Saravananj
மரணித்த நம்பிக்கை.! Poll_c10மரணித்த நம்பிக்கை.! Poll_m10மரணித்த நம்பிக்கை.! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரணித்த நம்பிக்கை.! Poll_c10மரணித்த நம்பிக்கை.! Poll_m10மரணித்த நம்பிக்கை.! Poll_c10 
420 Posts - 48%
heezulia
மரணித்த நம்பிக்கை.! Poll_c10மரணித்த நம்பிக்கை.! Poll_m10மரணித்த நம்பிக்கை.! Poll_c10 
296 Posts - 34%
Dr.S.Soundarapandian
மரணித்த நம்பிக்கை.! Poll_c10மரணித்த நம்பிக்கை.! Poll_m10மரணித்த நம்பிக்கை.! Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
மரணித்த நம்பிக்கை.! Poll_c10மரணித்த நம்பிக்கை.! Poll_m10மரணித்த நம்பிக்கை.! Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
மரணித்த நம்பிக்கை.! Poll_c10மரணித்த நம்பிக்கை.! Poll_m10மரணித்த நம்பிக்கை.! Poll_c10 
28 Posts - 3%
prajai
மரணித்த நம்பிக்கை.! Poll_c10மரணித்த நம்பிக்கை.! Poll_m10மரணித்த நம்பிக்கை.! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
மரணித்த நம்பிக்கை.! Poll_c10மரணித்த நம்பிக்கை.! Poll_m10மரணித்த நம்பிக்கை.! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
மரணித்த நம்பிக்கை.! Poll_c10மரணித்த நம்பிக்கை.! Poll_m10மரணித்த நம்பிக்கை.! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
மரணித்த நம்பிக்கை.! Poll_c10மரணித்த நம்பிக்கை.! Poll_m10மரணித்த நம்பிக்கை.! Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
மரணித்த நம்பிக்கை.! Poll_c10மரணித்த நம்பிக்கை.! Poll_m10மரணித்த நம்பிக்கை.! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரணித்த நம்பிக்கை.!


   
   
kumaravel2011
kumaravel2011
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 19
இணைந்தது : 24/07/2015

Postkumaravel2011 Sun Jul 26, 2015 12:36 pm

இதோ அதோ என்று இருந்த அந்த மேல்முறையீடு விசாரணைக்கு திங்களன்று வர
இருக்கிறது.    பெங்களுரு சிறப்பு நீதிமன்றத்தில் ஜெயலலிதா மீதான
வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 27 அன்று வர இருந்தபோது, இருந்த பரபரப்போ,
மே 11 அன்று கர்நாடக உயர்நீதிமனறத் தீர்ப்பு வர இருந்தபோது இருந்த
பரபரப்போ, உச்சநீதிமன்றத்தில் வர உள்ள மேல் முறையீட்டுக்கு சுத்தமாக
இல்லை.
M_Id_426903_TN_CM_Jayalalitha
அவ்வழக்கு கர்நாடகத்தில் இருந்த வரை, தினமும் அது குறித்து ஒரு மணிநேரம்
விவாதிக்கும் பத்திரிக்கையாளர் கூட, “அதை விடுடா” என்று சலிப்போடு
சொல்கிறார்.   ஊடகங்களிலும் இது குறித்த பரபரப்பு முற்றிலும் இல்லாமல்
இருக்கிறது.  வாரமிருமுறை இதழ்களில் கூட இது குறித்த செய்திகள் குறைவாகவே
இருக்கிறது.
நீதிமன்றங்களின் மீது மக்கள் முழுமையாக நம்பிக்கை இழந்து விட்டதையே இது
காட்டுகிறது.   பணமும் செல்வாக்கும் இருந்தால், எத்தனை பெரிய வழக்காக
இருந்தாலும் அதிலிருந்து வெளிவர இயலும் என்பதை ஜெயலலிதா ஆணித்தரமாக
உணர்த்தி உள்ளார்.   லஞ்ச ஒழிப்புத் துறை ஜெயலலிதா மீது தொடர்ந்திருந்த
வழக்கானது  விஞ்ஞானபூர்வமான முறையில் பதிவு செய்யப்பட்ட வழக்கு.
ஏறக்குறைய முழுக்க முழுக்க கணிதம் சார்ந்தது.  1991 முதல் 1996 வரை,
ஜெயலலிதாவுக்கு 66.5 கோடி வருமானம் இருந்ததா இல்லையா என்பது மட்டுமே
தீர்மானிக்கப்பட வேண்டியது.  இப்படிப்பட்ட வழக்கிலேயே ஒரு நீதிபதி
அப்பட்டமாக கண்ணுக்கு தெரியும் வகையில் ஒரு பிழையோடு தீர்ப்பளித்து,
ஜெயலலிதாவை விடுதலை செய்திருக்கிறார்.    இதன் பிறகு, மேல்முறையீட்டில்
அப்படி என்ன நடந்து விடப்போகிறது என்றே பலரும் கருதுகின்றனர்.
உச்சநீதிமன்றத்தில் இத்தீர்ப்பு சரி செய்யப்படுமா என்று பலரிடம்
கேட்டதற்கு, பெரும்பாலானோர் நம்பிக்கை அற்றே பதிலுரைத்தனர்.
உச்சநீதிமன்றமோ, உயர்நீதிமன்றமோ, சம்பந்தப்பட்ட நபருக்குத் தகுந்தார்ப்
போலத்தான்  வழக்கின் விசாரணை நடைபெறுகிறது.   அதிலும் பல நேர்வுகளில்
ஆஜராகும் வழக்கறிஞரை வைத்தே தீர்ப்புகள் வருகின்றன.   வழக்கை
விசாரிக்கும் நீதிபதிகளின் தன்மையும் தீர்ப்புகளில் பிரதிபலிக்கின்றன.
உதாரணமாக சென்னை உயர்நீதிமன்றத்தை எடுத்துக் கொண்டால், திமுகவுக்கு
எதிரான வழக்கு நீதிபதி சி.டி.செல்வத்திடம் செல்கிறது என்றால், அது
நிச்சயம் தள்ளுபடி என்று உறுதியாக கூறலாம்.    ஒரு பெரிய குற்றவாளியின்
ஜாமீன் மனு நீதிபதி கர்ணனிடம் சென்றால், 100 சதவிகிதம் அவர் விடுதலை
என்று உறுதியாக நம்பலாம்.     வழக்குகளில் உள்ள சட்ட நுணுக்கங்களின்
அடிப்படையில் ஆராய்ந்து அலசி தீர்ப்பளிக்கும் நீதிபதிகள் வெகு குறைவே.
சாதாரண மனிதர்களைப் போன்ற அனைத்து விருப்பு வெறுப்புக்களும் இந்த
நீதிபதிகளுக்கும் உண்டு.  ஒரு வழக்கறிஞரை பிடிக்காது என்றால், அந்த
வழக்கறிஞர் தாக்கல் செய்யும் அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்வது.
அவரை பிடிக்கும் என்றால், எல்லா வழக்குகளிலும் உத்தரவு பிறப்பிப்பது
என்று இப்படித்தான் நீதிமன்றங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.
வழக்கில் சம்பந்தப்பட்டவர் ஜெயலலிதா என்றால், எழுந்து நின்று வழக்கை
விசாரிக்கும் அளவுக்கு பணிவு காட்டும் நீதிபதிகள் சென்னை
உயர்நீதிமன்றத்தில் பலர் உண்டு.  தற்போது இரண்டாவது மூத்த நீதிபதியாக
சென்னை உயர்நீதிமன்றத்தில் இருக்கும் சதீஷ் அக்னிஹோத்ரி இந்த வகையைச்
சேர்ந்தவர்தான்.   அரசு தலைமை வழக்கறிஞர் சோமயாஜி ஆஜரானார் என்றாலே, அந்த
வழக்கில் கண்ணை மூடிக்கொண்டு அரசுக்கு ஆதரவாக உத்தரவு பிறப்பிப்பது இவரது
வழக்கம்.
இந்த வழக்கம் உச்சநீதிமன்றத்திலும் உண்டு.     ஜெயலலிதாவின் ஜாமீன் மனுவை
கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததும், உச்சநீதிமன்றத்தில் மேல்
முறையீடு செய்யப்பட்டது.  அந்த வழக்கை விசாரித்தவர், தலைமை நீதிபதி
தத்து. ஜெயலலிதா எப்படியாவது சிறையில் இருந்து வெளிவர வேண்டும் என்று,
வீட்டுச் சிறையில் கூட இருக்கத் தயார் என்றே அவரது வழக்கறிஞர்
வாதாடினார்.  அவரது வழக்கறிஞர் ஃபாலி எஸ் நரிமன் எப்படியாவது ஜெயலலிதாவை
விடுதலை செய்ய வேண்டும் என்று மன்றாடினார்.
FL12_kumaraswamy_j_2418095m
ஆனால் வழக்கை விசாரித்த தத்துவோ, ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கியதோடு,
அவரது மேல் முறையீட்டு மனுவையும் நான்கு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும்
என்று உத்தரவிட்டார்.   இப்படியொரு வேண்டுகோளை ஜெயலலிதா தரப்பே
வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தகுந்த விஷயம்.  இப்படி கேட்காத
வரத்தையெல்லாம் அளித்த தத்து, செய்திருக்க வேண்டிய முக்கியமான விஷயம்
என்ன தெரியுமா ?  கூட்டல் பிழையோடு வெளிவந்த அந்த தீர்ப்பை சரிசெய்ய
தானாக முன்வந்து வழக்கை எடுத்திருக்க வேண்டும்.   தன்னுடைய உத்தரவினால்
இப்படியொரு தவறான தீர்ப்பு வெளியாகி, நீதித்துறைக்கு பெரும் களங்கம்
ஏற்பட்டுள்ளதே என்று உடனடியாக நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.  ஆனால்,
அதைப்பற்றி துளியும் கண்டுகொள்ளாமல் இருக்கிறார் தத்து.
தற்போது செய்யப்பட்டுள்ள இந்த மேல் முறையீட்டையாவது, ஒரு உருப்படியான
நீதிபதியிடம் அனுப்பி வைத்துள்ளாரா என்றால் இல்லை.  பினாகி சந்திர கோஷ்
பற்றி உச்சநீதிமன்றத்தில் கேட்டால், வரும் தகவல்கள் ஆரோக்கியமானதாக
இல்லை.  இப்படிப்பட்ட ஒரு சூழலில்தான் ஜெயலலிதாவின் மேல் முறையீட்டு
வழக்கு திங்களன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
ஜெயலலிதா தரப்பிலோ மிகுந்த நம்பிக்கையோடு இருக்கிறார்கள்.  கடந்த முறை
இதே போல ஜெயலலிதா தரப்பு கர்நாடக உயர்நீதிமன்றத் தீர்ப்பை நம்பிக்கையோடு
எதிர்ப்பார்த்தனர் என்று வந்த தகவலை, நமது நீதித்துறையின் மீது இருந்த
நம்பிக்கை காரணமாக நம்பவில்லை. ஆனால், குமாரசாமிக்கு பிறகு, இதை
நம்பித்தான் ஆக வேண்டும்.  நீதித்துறையின் மீது நம்பிக்கையோடு இருந்த
இதயங்களில் ஈட்டி பாய்ச்சிவிட்டார் குமாரசாமி.
இந்திய நீதித்துறையானது மிக மிக அற்புதமாக உலகுக்கே வழிகாட்ட வேண்டிய ஒரு
அமைப்பாக இருந்தது.   கேசவானந்த பாரதி வழக்கு அப்படிப்பட்ட ஒரு வழக்கு.
பிரபல வழக்கறிஞர் நைனி பல்கிவாலா வாதாடிய மூன்று முக்கிய வழக்குகளில்
இந்திரா அரசுக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டது.  கோலக்நாத் என்ற வழக்கு,
வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட வழக்கு மற்றும் மன்னர் மான்ய ஒழிப்பு
குறித்த வழக்கு ஆகிய வழக்குகளில் அரசுக்கு பின்னடைவு ஏற்பட்டதால்,
உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களின் அதிகாரத்தை குறைப்பது என்று
இந்திரா முடிவெடுத்தார்.  இதையடுத்து, இந்த மூன்று தீர்ப்புகளையும் ரத்து
செய்யும் வண்ணம் ஒரு சட்டத்தை பாராளுமன்றத்தில் கொண்டு வந்தார்.  இந்தத்
தீர்ப்பின் பொருள் என்னவென்றால், பாராளுமன்றம் நினைத்தால், அடிப்படை
உரிமைகளைக் கூட நீக்கி விடலாம் என்பதே.   இதை எதிர்த்து கேசவானந்த பாரதி
மற்றும் சிலர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.   இந்த வழக்கை
விசாரிக்க மொத்தம் 13 நீதிபதிகள் அடங்கிய அமர்வு நியமிக்கப்பட்டது.  அந்த
வழக்கில் பாராளுமன்றத்துக்கு எல்லா உரிமைகளும் உண்டு என்று ஆறு
நீதிபதிகள் முடிவெடுத்தனர்.   அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படை
அம்சங்களை மாற்றுவதற்கு அரசுக்கு உரிமை இல்லை என்று ஏழு நீதிபதிகள்
முடிவெடுத்தனர்.   அந்த ஏழாவது நீதிபதிதான் இந்திராவின் மிரட்டல்களுக்கு
அடிபணியாத எச்.ஆர்.கண்ணா.
நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்ட பிறகு உச்சநீதிமன்ற நீதிபதியாக
இருந்தவர் எச்.என்.ரே.    தந்திரமாக கேசவானந்த் பாரதி தீர்ப்பை
திருத்துவதற்காக மீண்டும் 13 நீதிபதிகள் அடங்கிய அமர்வை கூட்டினார் ரே.
இந்த வழக்கில் மீண்டும் நைனி பல்கிவாலா ஆஜராகி, வாதாடியபோதுதான், இந்த
வழக்கை திருத்துவதற்காக யாருமே மனுத்தாக்கல் செய்யவில்லை என்பது தெரிய
வந்தது. இந்த விவகாரம் வெளிவந்ததும், அந்த அமர்வு கலைக்கப்பட்டது.
இப்படி அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படை ஷரத்துக்கள் அனைத்தையும்
பாதுகாப்பதில், இந்திய நீதிமன்றங்கள் பெரும்பணி ஆற்றியுள்ளன.
அப்படிப்பட்ட நீதிமன்றங்களின் வாரிசுகளாகத் தான் இன்று குமாரசாமிகளும்
ஏ.என்.ரேக்களும் உருவாகியுள்ளனர். நீதித்துறையின் களங்கங்களாக உள்ள
இவர்களின் கையில்தான் இந்திய நீதித்துறையின் முகத்தையே மாற்றி அமைக்கும்
வழக்கு உள்ளது என்பது, வேதனையானது.
இது குறித்து பேசிய ஒரு மூத்த பத்திரிக்கையாளர், “கர்நாடக அரசின் மேல்
முறையீடு குறித்து தற்போது பரபரப்பு ஏதும் இல்லாமல் இருப்பது, இந்திய
மக்கள், நீதித்துறையின் மீது ஒரு துளி கூட நம்பிக்கை வைக்கவில்லை
என்பதையே காட்டுகிறது.  இதை சரி செய்ய வேண்டிய பொறுப்பு நீதித்துறையையே
சாரும்.  செருப்பு தைப்பவன் முதல், ஐஏஎஸ் அதிகாரிகள் வரை, அனைவருக்குமான
கடைசி நம்பிக்கையாக இருப்பது, இந்திய நீதிமன்றங்களே.   இந்த
நம்பிக்கைக்கு வெளிப்படையான சவாலாக குமாரசாமியின் தீர்ப்பு அமைந்துள்ளது.
பணமும், வலுவும் உள்ளவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து நிச்சயம்
தப்பித்து விடலாம் என்ற கருத்து வலுப்பெற்றுள்ளது.    இப்படியொரு மோசமான
நீதிப்பிறழ்வை இன்னும் எத்தனை நாளைக்கு உச்சநீதிமன்றம் வேடிக்கைப்
பார்க்கப் போகிறது என்பது தெரியவில்லை.
ஜெயலலிதா மற்ற வழக்குகளைப் போல விடுதலை செய்யப்பட்டிருந்தால் இத்தகைய
விவாதங்கள் ஏற்படப்போவதில்லை  ஆனால், முழுக்க முழுக்க முட்டாள்த்தனமான
ஒரு தீர்ப்பு இது.   மொத்த உலகமும் நம்மைப் பார்த்து கைகொட்டிச்
சிரிக்கும் நிலைக்கு நம்மை தள்ளியுள்ளது இந்தத் தீர்ப்பு.
இது ஜெயலலிதாவோ  அல்லது கருணாநிதியோ சம்பந்தப்பட்ட ஒரு தீர்ப்பாக பார்க்க
முடியாது.  இந்திய ஜனநாயகத்தின் ஒரு தூணையே உளுத்துப் போகச் செய்த ஒரு
தீர்ப்பு.   மேலும், இந்தத் தீர்ப்பைப் பயன்படுத்தி, இந்தியா முழுக்க
பல்வேறு ஊழல் குற்றவாளிகள் தப்பிக்க பயன்படும் வகையில் அமைந்துள்ள
தீர்ப்பு இது.
ஜெயலலிதாவின் பிடிக்குள் அடங்கி, இதையும் சரி என்று உச்சநீதிமன்றம்
சொன்னாலும் வியப்பில்லை” என்றார்.
குமாரசாமியின் தீர்ப்பு நம் மீது பூசப்பட்ட கரி அல்ல.
உச்சநீதிமன்றத்தின் மீது பூசப்பட்ட கரி.  இந்தக் கறையை உச்சநீதிமன்றம்
துடைக்குமா, அல்லது கறை நிலைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க
வேண்டும்.
https://www.savukkuonline.com/

சங்கர்.ப
சங்கர்.ப
பண்பாளர்

பதிவுகள் : 60
இணைந்தது : 21/07/2015

Postசங்கர்.ப Sun Jul 26, 2015 12:53 pm

மரணித்த நம்பிக்கை.! 103459460 மரணித்த நம்பிக்கை.! 103459460 நன்றி !

ஞாயத்தில் நிறம்
பார்க்கும் காலமிது
தண்டனையை கூட
கூலாக “ஜெயில் பறவை”
ஆக்கியிருக்கிறது

பிரசண்டேஜ்ஜில்
பிழை இருக்கிறது
பேப்பர் எல்லாம்
ரீவேல்யூஷன்
சென்றிருக்கின்றன.

என் மகனுக்கு கூட
கணக்கில் பிணக்குதான்
சந்தோஷம் எனக்குத்தான்
எப்படியும் அவன்
பின்னாளில்
பெரிய ஜட்ஜ்தான்

யார் சொன்னார்கள்
சோறில்லை என்று
நான் கேட்கிறேன் வா
இப்போது நான்
சொல்கிறேன்
”சோறில்லை போ”

காமெடிதான் ஞாபகத்திற்கு வருகிறது....



சங்கர்.ப

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக