Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரே மாதத்தில் ஒழுகும் மேற்கூரை: சென்னை மெட்ரோ
+4
விமந்தனி
ayyasamy ram
shobana sahas
T.N.Balasubramanian
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
ஒரே மாதத்தில் ஒழுகும் மேற்கூரை: சென்னை மெட்ரோ
ஒரே மாதத்தில் ஒழுகும் மேற்கூரை: சென்னை மெட்ரோ ரயில் நிலைய கவலை நிலை
சி.எம்.பி.டி. மெட்ரோ ரயில் நிலையத்தில் மேற்கூரையில் இருந்து ஒழுகும் மழை நீரை சேகரிக்க வைக்கப்பட்டுள்ள பக்கெட்டுகள்.
சென்னை மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டு ஒரே மாதத்தில், கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தில் மேற்கூரை ஒழுகுவதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
சென்னை கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்துக்கு நேற்று சென்ற பயணிகள் எஸ்கலேட்டர் சிறிது நேரம் செயல்படாததால் படிகளை பயன்படுத்த வேண்டியிருந்தது. மேற்கூரை வழியாக மழைத் தண்ணீர் ஒழுகுவதால் படிகளிலும் மழை நீர் தேங்கியிருந்ததால், கிரானைட் தரை வழுக்கும் விதத்தில் இருந்தது.
மெட்ரோ ரயில் நிலையங்களுக்குள் மழை நீர் அதிகம் வருவதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
ஆலந்தூர் முதல் கோயம்பேடு வரையிலான மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 29-ம் தேதி தொடங்கிவைத்தார்.
இந்நிலையில், சமீபகாலமாக மெட்ரோ ரயில் நிலையங்களுக்குள் மழை நீர் தேங்குவதால் பயணிகள் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலைய படிகளில் கூரையில் இருந்து வழியும் தண்ணீரைப் பிடிக்க மெட்ரோ நிர்வாகத்தினர் பெரிய அளவிளான பக்கெட்டுகளை வைத்திருந்தனர். இத்தனைக்கும் நுங்கம்பாக்கத்தில் 3 செ.மீ, மீனம்பாக்கத்தில் 2 செ.மீ. அளவிலேயே மழை பெய்திருந்தன.
நேற்று (புதன்கிழமை) டெல்லி மெட்ரோ ரயிலில் முதல் முறையாக பயணிக்க வந்த பயணி எஸ்.கோபாலகிருஷ்ணன் கூறும்போது, "மழை பெய்ததால் சாலை வழியாக செல்வதைவிட மெட்ரோ ரயிலில் ஆலந்தூர் செல்லலாம் என வந்தேன். இது என் முதல் மெட்ரோ பயணம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்புடன் வந்தேன். ஆனால், எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இப்போதுதான் திறக்கப்பட்ட கட்டத்தில் மேற்கூரையில் மழை தண்ணீர் வழிவது எப்படி" என்றார்.
அதேபோல், தினகரன் என்ற மற்றொரு பயணி கூறும்போது, "மெட்ரோ ரயில் நிலையத்தில் ஆங்காங்கே மழை தண்ணீர் தேங்கியிருக்கிறது. கிரானைட் தரை என்பதால் வயதானவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் செல்லவேண்டும்" என்றார்.
மேற்கூரை களுக்கும், நடைமேடை சுவர்களுக்கும் இடையே அதிக இடைவெளி இருப்பதாலேயே, மழைநீர் உள்ளே வருகிறது என்று கூறப்படுகிறது.
இதுபற்றி அங்குள்ள மெட்ரோ ரயில் பணியாளர்கள் கூறும்போது, "எல்லா மெட்ரோ ரயில் நிலையங்களிலும் அதிக அளவில் மழைநீர் உள்ளே வருவதில்லை. சாரல்தான் உள்ளே அடிக்கிறது. ஆலந்தூர், வடபழனி, சிஎம்பிடி, கோயம்பேடு நிலையங்களின் அருகில் பெரிய அளவில் கட்டிடங்கள் இல்லாததால், சாதாரணமாக காற்று வீசினாலே மழைநீர் எளிதில் உள்ளே வந்துவிடுகிறது" என்றனர்.
இதுதொடர்பாக மெட்ரோ ரயில் அதிகாரிகளிடம் கேட்டபோது, "ரயில் நிலையங்களில் நல்ல காற்றாட்டம் இருக்க வேண்டும் என்பதற்காகவே மேற்கூரைக்கும் நடைமேடை சுவர்களுக்கும் இடையே தாராளமாக இடைவெளி விட்டு அமைக்கப்பட்டுள்ளது. பயணிகளின் புகார் குறித்து பரிசீலிக்கப்படும். தேவையிருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.
நன்றி :தமிழ் ஹிந்து
ரமணியன்
சி.எம்.பி.டி. மெட்ரோ ரயில் நிலையத்தில் மேற்கூரையில் இருந்து ஒழுகும் மழை நீரை சேகரிக்க வைக்கப்பட்டுள்ள பக்கெட்டுகள்.
சென்னை மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டு ஒரே மாதத்தில், கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தில் மேற்கூரை ஒழுகுவதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
சென்னை கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்துக்கு நேற்று சென்ற பயணிகள் எஸ்கலேட்டர் சிறிது நேரம் செயல்படாததால் படிகளை பயன்படுத்த வேண்டியிருந்தது. மேற்கூரை வழியாக மழைத் தண்ணீர் ஒழுகுவதால் படிகளிலும் மழை நீர் தேங்கியிருந்ததால், கிரானைட் தரை வழுக்கும் விதத்தில் இருந்தது.
மெட்ரோ ரயில் நிலையங்களுக்குள் மழை நீர் அதிகம் வருவதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
ஆலந்தூர் முதல் கோயம்பேடு வரையிலான மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 29-ம் தேதி தொடங்கிவைத்தார்.
இந்நிலையில், சமீபகாலமாக மெட்ரோ ரயில் நிலையங்களுக்குள் மழை நீர் தேங்குவதால் பயணிகள் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலைய படிகளில் கூரையில் இருந்து வழியும் தண்ணீரைப் பிடிக்க மெட்ரோ நிர்வாகத்தினர் பெரிய அளவிளான பக்கெட்டுகளை வைத்திருந்தனர். இத்தனைக்கும் நுங்கம்பாக்கத்தில் 3 செ.மீ, மீனம்பாக்கத்தில் 2 செ.மீ. அளவிலேயே மழை பெய்திருந்தன.
நேற்று (புதன்கிழமை) டெல்லி மெட்ரோ ரயிலில் முதல் முறையாக பயணிக்க வந்த பயணி எஸ்.கோபாலகிருஷ்ணன் கூறும்போது, "மழை பெய்ததால் சாலை வழியாக செல்வதைவிட மெட்ரோ ரயிலில் ஆலந்தூர் செல்லலாம் என வந்தேன். இது என் முதல் மெட்ரோ பயணம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்புடன் வந்தேன். ஆனால், எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இப்போதுதான் திறக்கப்பட்ட கட்டத்தில் மேற்கூரையில் மழை தண்ணீர் வழிவது எப்படி" என்றார்.
அதேபோல், தினகரன் என்ற மற்றொரு பயணி கூறும்போது, "மெட்ரோ ரயில் நிலையத்தில் ஆங்காங்கே மழை தண்ணீர் தேங்கியிருக்கிறது. கிரானைட் தரை என்பதால் வயதானவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் செல்லவேண்டும்" என்றார்.
மேற்கூரை களுக்கும், நடைமேடை சுவர்களுக்கும் இடையே அதிக இடைவெளி இருப்பதாலேயே, மழைநீர் உள்ளே வருகிறது என்று கூறப்படுகிறது.
இதுபற்றி அங்குள்ள மெட்ரோ ரயில் பணியாளர்கள் கூறும்போது, "எல்லா மெட்ரோ ரயில் நிலையங்களிலும் அதிக அளவில் மழைநீர் உள்ளே வருவதில்லை. சாரல்தான் உள்ளே அடிக்கிறது. ஆலந்தூர், வடபழனி, சிஎம்பிடி, கோயம்பேடு நிலையங்களின் அருகில் பெரிய அளவில் கட்டிடங்கள் இல்லாததால், சாதாரணமாக காற்று வீசினாலே மழைநீர் எளிதில் உள்ளே வந்துவிடுகிறது" என்றனர்.
இதுதொடர்பாக மெட்ரோ ரயில் அதிகாரிகளிடம் கேட்டபோது, "ரயில் நிலையங்களில் நல்ல காற்றாட்டம் இருக்க வேண்டும் என்பதற்காகவே மேற்கூரைக்கும் நடைமேடை சுவர்களுக்கும் இடையே தாராளமாக இடைவெளி விட்டு அமைக்கப்பட்டுள்ளது. பயணிகளின் புகார் குறித்து பரிசீலிக்கப்படும். தேவையிருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.
நன்றி :தமிழ் ஹிந்து
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010
Re: ஒரே மாதத்தில் ஒழுகும் மேற்கூரை: சென்னை மெட்ரோ
ஏரிகளில் தண்ணீர் தேங்க மாட்டேன் என்கிறதே !
ஏரிகளின் இடத்தை மாற்றவேண்டியது தான் போலிருக்கு .
ரமணியன்
ஏரிகளின் இடத்தை மாற்றவேண்டியது தான் போலிருக்கு .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010
Re: ஒரே மாதத்தில் ஒழுகும் மேற்கூரை: சென்னை மெட்ரோ
வாளி நன்றாக உள்ளது என்று மக்கள் அதை வீட்டுக்கு கொண்டுபோகபோகிரர்களோ என்பதே என் கவலை ... தண்ணீர் குடிக்க வைத்துவிட்டு டம்ப்ளரை ஒரு சங்கிலியால் இணைத்திருப்பது ஞாபகம் வருகிறது...
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: ஒரே மாதத்தில் ஒழுகும் மேற்கூரை: சென்னை மெட்ரோ
அச்சச்சோ , என்னே கவலை !
அந்த பக்கெட்டை எடுக்காம வந்துட்டார் பாருங்க ,அந்த இந்திய குடிமகன் !
ரமணியன்
அந்த பக்கெட்டை எடுக்காம வந்துட்டார் பாருங்க ,அந்த இந்திய குடிமகன் !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010
Re: ஒரே மாதத்தில் ஒழுகும் மேற்கூரை: சென்னை மெட்ரோ
நீங்களே கூரைன்னு சொல்லிட்டீங்க... பின்னே கூரைன்னா ஒழுகத்தான் செய்யும். இதையெல்லாம் பெருசு பண்ணாதீங்க ப்ளீஸ்!
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: ஒரே மாதத்தில் ஒழுகும் மேற்கூரை: சென்னை மெட்ரோ
பெரிசு பண்ணினா இன்னும் அதிகமாக ஒழுகும் , ஆமாம்
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010
Re: ஒரே மாதத்தில் ஒழுகும் மேற்கூரை: சென்னை மெட்ரோ
மேற்கோள் செய்த பதிவு: 1153118விமந்தனி wrote:நீங்களே கூரைன்னு சொல்லிட்டீங்க... பின்னே கூரைன்னா ஒழுகத்தான் செய்யும். இதையெல்லாம் பெருசு பண்ணாதீங்க ப்ளீஸ்!
பொதுவாக மேல்தளத்தை Roof என்று சொல்வார்கள் . Roof = கூரை
கீற்றுகளால் வேயப்பட்டிருந்தால் Thatched Roof = கீற்றுக் கூரை
கான்கிரீட் தளமானால் Concrete Roof = கான்கிரீட் கூரை
கீற்று களால் வேயப்பட்ட வீட்டைக் " கூரை வீடு " என்று சொல்வது தவறு .
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: ஒரே மாதத்தில் ஒழுகும் மேற்கூரை: சென்னை மெட்ரோ
மேற்கோள் செய்த பதிவு: 1152912shobana sahas wrote:வாளி நன்றாக உள்ளது என்று மக்கள் அதை வீட்டுக்கு கொண்டுபோகபோகிரர்களோ என்பதே என் கவலை ... தண்ணீர் குடிக்க வைத்துவிட்டு டம்ப்ளரை ஒரு சங்கிலியால் இணைத்திருப்பது ஞாபகம் வருகிறது...
அம்மா ஷோபனா, இப்படியெல்லாம் ஐடியா தரக்கூடாது ........ஹா...ஹா...ஹா.....
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஒரே மாதத்தில் ஒழுகும் மேற்கூரை: சென்னை மெட்ரோ
மெட்ரோ வழியா ட்ரெயின் வரலாம் தண்ணி வரக்கூடாதா
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Page 1 of 2 • 1, 2
Similar topics
» ஒழுகும் சென்னை விமான நிலையம்!
» சரியாப் போச்சு! நம்ம சென்னை ஏர்போர்ட்டில் மேற்கூரை ஒழுகுகிறதாம்!!
» சென்னை: நாளை(அக்.,3) அதிகாலையில் மெட்ரோ ரயில்
» சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்கள் பெயர் மாற்றம்
» சென்னை மெட்ரோ ரெயிலுக்கு 168 நவீன பெட்டிகள் தயாரிப்பு
» சரியாப் போச்சு! நம்ம சென்னை ஏர்போர்ட்டில் மேற்கூரை ஒழுகுகிறதாம்!!
» சென்னை: நாளை(அக்.,3) அதிகாலையில் மெட்ரோ ரயில்
» சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்கள் பெயர் மாற்றம்
» சென்னை மெட்ரோ ரெயிலுக்கு 168 நவீன பெட்டிகள் தயாரிப்பு
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|