Latest topics
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நீங்கள் ஏழையா, பணக்காரரா?
+2
krishnaamma
பாலாஜி
6 posters
Page 1 of 1
நீங்கள் ஏழையா, பணக்காரரா?
நீங்கள் ஏழையா இல்லை பணக்காரரா என்று கேட்டால், என்ன பதில் சொல்வீர்கள்? இந்தக் கேள்விக்குச் சில பணக் காரர்கள், தங்களை ஏழை என்று சொல்வார்கள். சில நடுத்தர வர்க்கத்தினர், தன்னைப் பணக் காரர் என்று சொல்வார்கள். நீங்கள் ஏழையா அல்லது பணக் காரரா என்பதை எப்படித் தீர்மானிப்பது? என்கிற கேள்வியை மும்பையைச் சேர்ந்த லேடர்செவன் ஃபைனான்ஷியல் அட்வைஸரி நிறுவனத்தின் இயக்குநர் சுரேஷ் சடகோபனிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.
“மாத சம்பளம் வாங்கு பவர்களில் பெரும்பாலானவர் கள் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகவே இருப்பார் கள். ரூ.10 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சம் வரை மாத சம்பளம் வாங்குபவர்கள் இருக்கிறார்கள். நடுத்தரவர்க்கம், கீழ் நடுத்தர வர்த்தகம், மேல் நடுத்தரவர்க்கம், உயர்வர்க்கம் எனத் தங்களின் வருமானத்தின் அடிப்படையில் வகைப் பிரித்து வைத்துக் கொள்கிறார்கள். இதில் அதிகமா னவர்கள் ஒரு நிலையிலிருந்து அடுத்த நிலையை எப்படியாவது அடைந்துவிட வேண்டும் என்பதை எதிர்கால நோக்கமாக வைத்துக்கொள்கிறார்கள். அதை அடைய முடியவில்லையெனில், தங்களை ஏழையாக நினைத்துக் கொள்கிறார்கள். அரசாங்கமும் ஒரு நாளைக்கு 30 ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ளவர்களை வறுமைக்கோட்டுக்கு மேலே உள்ளவர்களாகக் கருதுகிறது. அதேபோல, வரிச் செலுத்து பவர்களைப் பணக்காரர்களாக நினைக்கிறது. இந்த அணுகுமுறை முற்றிலும் தவறானது.
நீங்கள் ஏழையா, பணக்காரரா என்பதை அறிந்துகொள்ளப் பல்வேறு வழிமுறைகள் உள்ளன. சம்பளத்தை மட்டும் அடிப்படை யாக எடுத்துக்கொள்ளாமல், சேமிப்பை வைத்து உங்களின் நிலையைக் கணக்கிடப் போகி றோம். இதில் இரண்டு வீடு, நான்கு கார்கள், அதிகமான சொத்துகள், தொடர்ந்து பண வரத்து இருப்பவர்களுக்கு இந்தக் கணக்கீடு பொருந்தாது. குடும்பச் சொத்துகள் வைத்திருந்தாலும், இந்த அளவீட்டுக்குள் அவர்கள் வரமாட்டார்கள். இதுமாதிரி இல்லாதவர்களை ஏழையா, பணக்காரரா என்பதை அளவிடுவது அவசியமானது.
செலவு விகிதம்!
சிலர் வாங்கும் சம்பளத்தில் 70 சதவிகித தொகையைச் செலவு செய்துவிடுவார்கள். இது மிகவும் ஆபத்தானது. அதுவும் அடுத்தச் சில ஆண்டுகளில் ஓய்வு பெறப் போகிறவர்கள் மிக அதிகமான தொகையைச் சேமிக்க வேண்டியி ருக்கும். அதாவது, மாதம் 50 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் நபர், அடுத்த 10 ஆண்டு களில் ஓய்வுபெறப் போகிறார் என வைத்துக்கொள்வோம். இவருக்கு என்ன செலவுகள் உள்ளன என்பதைப் பட்டியலிட வேண்டும். அதாவது, வீட்டுக் கடனுக்கான இஎம்ஐ இன்னும் எத்தனை வருடத்துக்குச் செலுத்த வேண்டும், குழந்தைகளின் உயர் கல்விக்கு எவ்வளவு தொகை தேவைப்படும், குழந்தைகள் என்ன மாதிரியான படிப்பைப் படிக்கப் போகிறார்கள், ஓய்வுக் காலத்துக்கு எவ்வளவு தொகை தேவைப்படும் என்பதைக் கணக்கிட வேண்டும். இந்தத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள அவர் மாத சம்பளத்தில் 40-50 சதவிகித தொகையை சேமிக்க வேண்டியிருக்கும். அதுவும் போதுமானதாக இருக்குமா என்பது நிச்சயம் இல்லை.
உண்மையான செலவு!
வாங்கும் சம்பளத்தில் உங்களின் உண்மையான செலவுகள் என்னென்ன என்பதைக் கவனிக்க வேண்டும். அதாவது, சில செலவுகளைக் கட்டாயம் செய்தே ஆக வேண்டும். வீட்டுச் செலவு, வீட்டுக் கடன் இஎம்ஐ, குழந்தைகள் படிப்பு போன்றவை உண்மையான செலவுகள். இதுபோக உள்ள மற்ற செலவுகள், முடிந்தவரைத் தவிர்க்கக்கூடிய செலவுகளே ஆகும். அதாவது, ஷாப்பிங், ஹோட்டல், பொழுதுபோக்கு போன்றவை.
சேமிப்பு எப்படி இருக்க வேண்டும்?
சேமிக்க வேண்டும் என்றுதான் எல்லோரும் நினைக்கிறார்கள். ஆனால், சேமிக்கிறோம் என்பதைவிட எவ்வளவு சேமிக்கி றோம் என்பதே முக்கியம். அதாவது, சேமிக்கும் தொகையில் செலவு தொகை எத்தனை மடங்கு என்பதைப் பார்க்க வேண்டும். மாதம் 50 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் நபரின் சேமிப்பு, மாதம் 10 ஆயிரம் ரூபாய் என வைத்துக் கொள்வோம். செலவு 40 ஆயிரம் ரூபாய். இவர் வருடத்துக்கு 1.2 லட்சம் ரூபாய்தான் சேமிக்க முடியும். இந்தத் தொகை அவரது மூன்று மாத செலவு தொகையைத் தான் ஈடுகட்ட முடியும். ஆனால், அவசரகாலத் தேவைகள் வரும்போது, இந்தத் தொகையை வைத்து நிலைமையைச் சமாளிப்பது கடினம்தான்.
அடுத்தது, மாதம் 30 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் ஒருவர் மாதம் அதே 10 ஆயிரம் ரூபாயைச் சேமிக்கிறார் என வைத்துக் கொள்வோம். ஆக, ஒரு வருடத்தின் முடிவில் 1.2 லட்சம் ரூபாய் இருக்கும். இவரது மாத செலவு மாதத்துக்கு 20,000 என்பதால், இவர் 6 மாத செலவு தொகையைக் கையில் வைத்திருப்பார். இந்த இருவரில் யார் பணக்காரர் என்பது இப்போது உங்களுக்கே தெரியும்.
இதில் குறிப்பிடப்பட்டுள்ள இருவரின் சம்பளம் ஒரே அளவானதாக இல்லை என்றாலும், இருவரும் சேமிக்கும் தொகையும் ஒன்றுதான். ஆனால், அவர்களின் செலவு தொகையின் விகிதம் வித்தியாசப்படுகிறது. எனவே, முடிந்தவரை செலவு களைக் குறைத்துச் சேமிப்பை அதிகரிப்பதுதான் முக்கியம். அப்போதுதான் அவசர தேவைகளை எளிதாகச் சமாளிக்க முடியும். மருத்துவத் தேவை, வேலை இழப்பு போன்றவை எதிர்பாராதவிதமாக நிகழும்போது நிலைமையை எளிதாகச் சமாளித்துக்கொள்ள இது உதவியாக இருக்கும். இல்லையெனில், கடன் வாங்க வேண்டிய சூழல் உருவாகும். இதன் விளைவாக அடுத்த ஆண்டின் சேமிப்பு விகிதம் குறையும்.
யார் பணக்காரர், யார் ஏழை?
வருமானம் இல்லாத சமயங் களில் உங்கள் சேமிப்பு மூலமாக எத்தனை மாதங்களுக்குக் குடும்பத் தேவைகளைச் சிக்கல் இல்லாமல் நிறைவேற்ற முடியும் என்பதைப் பொறுத்தே நீங்கள் பணக்காரரா, ஏழையா என்பதை முடிவு செய்ய முடியும். குறைந்தபட்சம் 5-10 மாத செலவு தொகை ஒருவரது சேமிப்பாக இருப்பது அவசியத்திலும் அவசியம்’’ என்றார்.
சேமிக்கும்போதும், செலவு செய்யும்போதும் ஒரு சிறிய திட்டமிடல் வைத்திருப்பது நல்லது. நான் 5 லட்சம் ரூபாய் சேமித்து வைத்திருக்கிறேன் என்று அதன் மதிப்பை மட்டும் மனதில் வைத்துக்கொள்ளாமல், அதை வைத்து எத்தனை மாத செலவுகளைச் சமாளிக்க முடியும் என்பதைக் கவனிப்பது அவசியம்.மேலும், உங்களுடைய எதிர்காலக் குறிக்கோள்களை நிறைவேற்றும் வகையில் சேமிப்பு உள்ளதா என்பதையும் கவனிக்க வேண்டும். எதிர்காலத் தேவைகளை நிறைவேற்றும் சேமிப்புதான் சரியான சேமிப்பாக இருக்கும்.
இரா.ரூபாவதி
ந.விகடன்“மாத சம்பளம் வாங்கு பவர்களில் பெரும்பாலானவர் கள் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகவே இருப்பார் கள். ரூ.10 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சம் வரை மாத சம்பளம் வாங்குபவர்கள் இருக்கிறார்கள். நடுத்தரவர்க்கம், கீழ் நடுத்தர வர்த்தகம், மேல் நடுத்தரவர்க்கம், உயர்வர்க்கம் எனத் தங்களின் வருமானத்தின் அடிப்படையில் வகைப் பிரித்து வைத்துக் கொள்கிறார்கள். இதில் அதிகமா னவர்கள் ஒரு நிலையிலிருந்து அடுத்த நிலையை எப்படியாவது அடைந்துவிட வேண்டும் என்பதை எதிர்கால நோக்கமாக வைத்துக்கொள்கிறார்கள். அதை அடைய முடியவில்லையெனில், தங்களை ஏழையாக நினைத்துக் கொள்கிறார்கள். அரசாங்கமும் ஒரு நாளைக்கு 30 ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ளவர்களை வறுமைக்கோட்டுக்கு மேலே உள்ளவர்களாகக் கருதுகிறது. அதேபோல, வரிச் செலுத்து பவர்களைப் பணக்காரர்களாக நினைக்கிறது. இந்த அணுகுமுறை முற்றிலும் தவறானது.
நீங்கள் ஏழையா, பணக்காரரா என்பதை அறிந்துகொள்ளப் பல்வேறு வழிமுறைகள் உள்ளன. சம்பளத்தை மட்டும் அடிப்படை யாக எடுத்துக்கொள்ளாமல், சேமிப்பை வைத்து உங்களின் நிலையைக் கணக்கிடப் போகி றோம். இதில் இரண்டு வீடு, நான்கு கார்கள், அதிகமான சொத்துகள், தொடர்ந்து பண வரத்து இருப்பவர்களுக்கு இந்தக் கணக்கீடு பொருந்தாது. குடும்பச் சொத்துகள் வைத்திருந்தாலும், இந்த அளவீட்டுக்குள் அவர்கள் வரமாட்டார்கள். இதுமாதிரி இல்லாதவர்களை ஏழையா, பணக்காரரா என்பதை அளவிடுவது அவசியமானது.
செலவு விகிதம்!
சிலர் வாங்கும் சம்பளத்தில் 70 சதவிகித தொகையைச் செலவு செய்துவிடுவார்கள். இது மிகவும் ஆபத்தானது. அதுவும் அடுத்தச் சில ஆண்டுகளில் ஓய்வு பெறப் போகிறவர்கள் மிக அதிகமான தொகையைச் சேமிக்க வேண்டியி ருக்கும். அதாவது, மாதம் 50 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் நபர், அடுத்த 10 ஆண்டு களில் ஓய்வுபெறப் போகிறார் என வைத்துக்கொள்வோம். இவருக்கு என்ன செலவுகள் உள்ளன என்பதைப் பட்டியலிட வேண்டும். அதாவது, வீட்டுக் கடனுக்கான இஎம்ஐ இன்னும் எத்தனை வருடத்துக்குச் செலுத்த வேண்டும், குழந்தைகளின் உயர் கல்விக்கு எவ்வளவு தொகை தேவைப்படும், குழந்தைகள் என்ன மாதிரியான படிப்பைப் படிக்கப் போகிறார்கள், ஓய்வுக் காலத்துக்கு எவ்வளவு தொகை தேவைப்படும் என்பதைக் கணக்கிட வேண்டும். இந்தத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள அவர் மாத சம்பளத்தில் 40-50 சதவிகித தொகையை சேமிக்க வேண்டியிருக்கும். அதுவும் போதுமானதாக இருக்குமா என்பது நிச்சயம் இல்லை.
உண்மையான செலவு!
வாங்கும் சம்பளத்தில் உங்களின் உண்மையான செலவுகள் என்னென்ன என்பதைக் கவனிக்க வேண்டும். அதாவது, சில செலவுகளைக் கட்டாயம் செய்தே ஆக வேண்டும். வீட்டுச் செலவு, வீட்டுக் கடன் இஎம்ஐ, குழந்தைகள் படிப்பு போன்றவை உண்மையான செலவுகள். இதுபோக உள்ள மற்ற செலவுகள், முடிந்தவரைத் தவிர்க்கக்கூடிய செலவுகளே ஆகும். அதாவது, ஷாப்பிங், ஹோட்டல், பொழுதுபோக்கு போன்றவை.
சேமிப்பு எப்படி இருக்க வேண்டும்?
சேமிக்க வேண்டும் என்றுதான் எல்லோரும் நினைக்கிறார்கள். ஆனால், சேமிக்கிறோம் என்பதைவிட எவ்வளவு சேமிக்கி றோம் என்பதே முக்கியம். அதாவது, சேமிக்கும் தொகையில் செலவு தொகை எத்தனை மடங்கு என்பதைப் பார்க்க வேண்டும். மாதம் 50 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் நபரின் சேமிப்பு, மாதம் 10 ஆயிரம் ரூபாய் என வைத்துக் கொள்வோம். செலவு 40 ஆயிரம் ரூபாய். இவர் வருடத்துக்கு 1.2 லட்சம் ரூபாய்தான் சேமிக்க முடியும். இந்தத் தொகை அவரது மூன்று மாத செலவு தொகையைத் தான் ஈடுகட்ட முடியும். ஆனால், அவசரகாலத் தேவைகள் வரும்போது, இந்தத் தொகையை வைத்து நிலைமையைச் சமாளிப்பது கடினம்தான்.
அடுத்தது, மாதம் 30 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் ஒருவர் மாதம் அதே 10 ஆயிரம் ரூபாயைச் சேமிக்கிறார் என வைத்துக் கொள்வோம். ஆக, ஒரு வருடத்தின் முடிவில் 1.2 லட்சம் ரூபாய் இருக்கும். இவரது மாத செலவு மாதத்துக்கு 20,000 என்பதால், இவர் 6 மாத செலவு தொகையைக் கையில் வைத்திருப்பார். இந்த இருவரில் யார் பணக்காரர் என்பது இப்போது உங்களுக்கே தெரியும்.
இதில் குறிப்பிடப்பட்டுள்ள இருவரின் சம்பளம் ஒரே அளவானதாக இல்லை என்றாலும், இருவரும் சேமிக்கும் தொகையும் ஒன்றுதான். ஆனால், அவர்களின் செலவு தொகையின் விகிதம் வித்தியாசப்படுகிறது. எனவே, முடிந்தவரை செலவு களைக் குறைத்துச் சேமிப்பை அதிகரிப்பதுதான் முக்கியம். அப்போதுதான் அவசர தேவைகளை எளிதாகச் சமாளிக்க முடியும். மருத்துவத் தேவை, வேலை இழப்பு போன்றவை எதிர்பாராதவிதமாக நிகழும்போது நிலைமையை எளிதாகச் சமாளித்துக்கொள்ள இது உதவியாக இருக்கும். இல்லையெனில், கடன் வாங்க வேண்டிய சூழல் உருவாகும். இதன் விளைவாக அடுத்த ஆண்டின் சேமிப்பு விகிதம் குறையும்.
யார் பணக்காரர், யார் ஏழை?
வருமானம் இல்லாத சமயங் களில் உங்கள் சேமிப்பு மூலமாக எத்தனை மாதங்களுக்குக் குடும்பத் தேவைகளைச் சிக்கல் இல்லாமல் நிறைவேற்ற முடியும் என்பதைப் பொறுத்தே நீங்கள் பணக்காரரா, ஏழையா என்பதை முடிவு செய்ய முடியும். குறைந்தபட்சம் 5-10 மாத செலவு தொகை ஒருவரது சேமிப்பாக இருப்பது அவசியத்திலும் அவசியம்’’ என்றார்.
சேமிக்கும்போதும், செலவு செய்யும்போதும் ஒரு சிறிய திட்டமிடல் வைத்திருப்பது நல்லது. நான் 5 லட்சம் ரூபாய் சேமித்து வைத்திருக்கிறேன் என்று அதன் மதிப்பை மட்டும் மனதில் வைத்துக்கொள்ளாமல், அதை வைத்து எத்தனை மாத செலவுகளைச் சமாளிக்க முடியும் என்பதைக் கவனிப்பது அவசியம்.மேலும், உங்களுடைய எதிர்காலக் குறிக்கோள்களை நிறைவேற்றும் வகையில் சேமிப்பு உள்ளதா என்பதையும் கவனிக்க வேண்டும். எதிர்காலத் தேவைகளை நிறைவேற்றும் சேமிப்புதான் சரியான சேமிப்பாக இருக்கும்.
இரா.ரூபாவதி
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: நீங்கள் ஏழையா, பணக்காரரா?
எப்போதும் போலவே இந்த பகிர்வும் அருமை பாலாஜி........மிக்க நன்றி .....
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நீங்கள் ஏழையா, பணக்காரரா?
அறிவுசார் அலசல் .
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: நீங்கள் ஏழையா, பணக்காரரா?
இதெல்லாம் படிக்க படிக்க இன்பம் தரும்
விஷயம்....
-
30,000 சம்பளம் வாங்குபவர் அதில் 10,000 சேமிப்பது
என்றால், அதை விட சிறந்த நகைச்சுவை
ஏதும் இல்லை...!!
-
தற்போதைய விலைவாசி ஏற்றம் குறித்து அறியாதவர்
எழுதிய கட்டுரை..!!
விஷயம்....
-
30,000 சம்பளம் வாங்குபவர் அதில் 10,000 சேமிப்பது
என்றால், அதை விட சிறந்த நகைச்சுவை
ஏதும் இல்லை...!!
-
தற்போதைய விலைவாசி ஏற்றம் குறித்து அறியாதவர்
எழுதிய கட்டுரை..!!
Re: நீங்கள் ஏழையா, பணக்காரரா?
மேற்கோள் செய்த பதிவு: 1152830ayyasamy ram wrote:இதெல்லாம் படிக்க படிக்க இன்பம் தரும்
விஷயம்....
-
30,000 சம்பளம் வாங்குபவர் அதில் 10,000 சேமிப்பது
என்றால், அதை விட சிறந்த நகைச்சுவை
ஏதும் இல்லை...!!
-
தற்போதைய விலைவாசி ஏற்றம் குறித்து அறியாதவர்
எழுதிய கட்டுரை..!!
அப்படிஇல்லை ராம் அண்ணா, அதை ஒரு உதரணத்துக்கு த்தான் எடுத்துக்கணும்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» நீங்கள் ஏழையா, பணக்காரரா? - உள்ளதைச் சொல்லும் கதை! #MotivationStory
» செல்வந்தனா... ஏழையா?
» நீங்கள் மில்லினியலா? சேமிப்புக்கு நீங்கள் கவனிக்க வேண்டிய 5 டிப்ஸ்கள்
» நீங்கள் காதலிக்கிறீர்களா? உங்கள் ராசிப்படி நீங்கள் காதலில் எப்படி ? வெற்றி பெறுவீர்களா?
» காதல் மன்னன் ஆவது எப்படி(ஆண்களே நீங்கள் காதலிக்க போறீங்களா நீங்கள் செய்யவேண்டியவை )
» செல்வந்தனா... ஏழையா?
» நீங்கள் மில்லினியலா? சேமிப்புக்கு நீங்கள் கவனிக்க வேண்டிய 5 டிப்ஸ்கள்
» நீங்கள் காதலிக்கிறீர்களா? உங்கள் ராசிப்படி நீங்கள் காதலில் எப்படி ? வெற்றி பெறுவீர்களா?
» காதல் மன்னன் ஆவது எப்படி(ஆண்களே நீங்கள் காதலிக்க போறீங்களா நீங்கள் செய்யவேண்டியவை )
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|