Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள் by heezulia Today at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !
+19
mbalasaravanan
rejeetharakan
ayyasamy ram
K.Senthil kumar
பழ.முத்துராமலிங்கம்
Hari Prasath
sundarr.sa
சசி
Namasivayam Mu
ஜாஹீதாபானு
விஸ்வாஜீ
M.Jagadeesan
வேல்முருகன்
Aarthi Krishna
விமந்தனி
சரவணன்
balakarthik
shobana sahas
krishnaamma
23 posters
Page 36 of 46
Page 36 of 46 • 1 ... 19 ... 35, 36, 37 ... 41 ... 46
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !
First topic message reminder :
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ........என்கிற இந்த பாடலை கேட்கும்போது, நம் பாட்டி தாத்தா சொன்ன கதைகள் நமக்கு நினைவுக்கு வரும்..அவற்றை இந்த காலத்து குழந்தைகள் வரை கொண்டு சேர்க்கவே இந்த திரி............
இதில் எனக்கு தெரிந்த கதைகளை பதிகிறேன், நீங்களும் சிரமம் பார்க்காமல் பதிவு போடுங்கள். ஏன் என்றால், நாம் வாயில் சொல்ல எளிதாக இருக்கும் இவை type அடிக்க நேரம் எடுக்கும்.ஆனால் நாம் ரசித்த கதைகளை நம் அடுத்த சந்ததிக்கு கொண்டு சேர்க்க அந்த கஷ்டம் படலாம் என்றே எண்ணுகிறேன்![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
இந்த திரி ஷோபனாவின் குட்டிப் பையனுக்காக ஆரம்பித்திருக்கேன் ............. உங்கள் வீட்டில் இருக்கும் குட்டி பசங்களுக்காகவும் தான்.....எனவே, நீங்களும் பதிவு போடுங்கள்................
முதல் கதை .......வாலு போச்சு கத்தி வந்தது.............
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ........என்கிற இந்த பாடலை கேட்கும்போது, நம் பாட்டி தாத்தா சொன்ன கதைகள் நமக்கு நினைவுக்கு வரும்..அவற்றை இந்த காலத்து குழந்தைகள் வரை கொண்டு சேர்க்கவே இந்த திரி............
இதில் எனக்கு தெரிந்த கதைகளை பதிகிறேன், நீங்களும் சிரமம் பார்க்காமல் பதிவு போடுங்கள். ஏன் என்றால், நாம் வாயில் சொல்ல எளிதாக இருக்கும் இவை type அடிக்க நேரம் எடுக்கும்.ஆனால் நாம் ரசித்த கதைகளை நம் அடுத்த சந்ததிக்கு கொண்டு சேர்க்க அந்த கஷ்டம் படலாம் என்றே எண்ணுகிறேன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
இந்த திரி ஷோபனாவின் குட்டிப் பையனுக்காக ஆரம்பித்திருக்கேன் ............. உங்கள் வீட்டில் இருக்கும் குட்டி பசங்களுக்காகவும் தான்.....எனவே, நீங்களும் பதிவு போடுங்கள்................
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
முதல் கதை .......வாலு போச்சு கத்தி வந்தது.............
Last edited by krishnaamma on Sat Aug 01, 2015 9:24 pm; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !
அடுத்த கதை23. : குரங்கும் முதலையும்..............![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 36 Px5m0a3SoGkfJbcCWcYA+kurankumu](https://www.filepicker.io/api/file/Px5m0a3SoGkfJbcCWcYA+kurankumu.jpg)
ஒருகாட்டில், ஒரு நாள் காட்டில, ஒரு குரங்கு நாவல் மரத்தில் இருந்து பழங்களை சாப்பிட்டு கொண்டிருந்ததாம். அந்த மரம் ஒரு நதியை ஒட்டி இருந்ததாம். அப்போ அங்கே, அந்த மரத்தின் கீழே ஒரு முதலை கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து இருந்ததை பார்த்ததாம் இந்த குரங்கு. பார்த்ததும் அதுக்கு ரொம்ப பாவமாய் போச்சாம், ரொம்ப பசி போல இருக்கு என்று நினைத்து, அது யார் என்ன என்றல்லாம் யோசிக்காமல், உடனே மரத்தில் இருந்து கொஞ்சம் பழங்களை பறித்து முதலை கிட்டே போட்டதாம். அன்பாக அதைப் பார்த்து "சாப்பிடு" என்றதாம்.
பேச்சு சப்தம் கேட்டதும், முதலை நிமிர்ந்து பார்த்ததாம். அதைப் பார்த்த குரங்கு, "நான் தான் போட்டேன், சாப்பிடு" என்றதாம். பழங்கள் தன அருகில் கிடப்பதை பார்த்து அவற்றை உண்டு மகிழ்ந்து, தன பசியை போக்கிக் கொண்டதாம் அந்த முதலை.
இதுபோல் ஒருசில நாட்கள் நடந்ததாம் . இது தொடர்ந்ததால், அவா ரெண்டு பேரும் நல்ல நண்பர்களாக மாறினார்களாம். இப்படியாக நாட்கள் நகர்ந்ததாம். இதை பார்த்த மற்ற குரங்குகள், " ஏய், இது கூடா நட்பு, ஒரு குரங்கும் முதலையும் எப்படி பிரண்ட்ஸ் ஆக இபுக்க முடியும்?.......இந்த முதலையை நம்பாதே !" என்று சொன்னதுகளாம்.
ஆனா, அந்த குரங்கு இதை காதில் வாங்காமல், " பாவம் அன்று அது பசியால் அழுத்தத்து தெரியுமா?" என்றதாம்.
அதற்கு அந்த மற்ற குரங்குகள், " அதத்தான் மனிதர்கள் முதலைக் கண்ணீர் என்று சொல்வார்கள், அது அழுகை இன் அறிகுறி இல்லை" என்று சொல்லிப்பர்த்ததாம். ஆனால் அதையெல்லாம் இது காதில் வாங்கிக்கலையாம். தொடர்ந்து முதலை இங்கு வருவதும் இந்த குரங்கு பழங்கள் தருவதும் தொடர்ந்ததாம்.
அப்போ ஒருநாள் என்ன ஆச்சாம், முதலை குரங்கிடம் "என் மனைவி, நான் தினமும் ஏன் நேரம் கழித்து வருகிறேன் என்று கேட்டாள், நான் உன்னுடன் பேசிவிட்டு , இந்த நாவல் பழங்கள் சாப்பிட்டு விட்டு வருவதாக சொன்னேன். அவள் நம்பவில்லை. அப்படியானால் எனக்கும் அந்த இனிப்பான பழங்களைக் கொண்டுவர முடியுமா? என்று கேட்கிறாள், கொஞ்சம் தருகிறாயா? " என்று கேட்டதாம்.
" அதனால் இன்று, எனது மனைவிக்கும் சேர்த்து நிறைய பழங்களை பறித்து போடு" என்றதாம். இதைக்கேட்டதும் அந்த குரங்குக்கு உச்சி குளிர்ந்து போச்சாம். உடனே , ரொம்ப சந்தோஷமாய் நிறைய பழங்களை பறித்து போட்டதாம் அது.
முதலையும் சந்தோஷமாய் அந்த பழங்களை தன் மனைவிக்காக எடுத்துக்கொண்டு போனதாம். முதலையின் மனைவி அந்த பழங்களை சாப்பிட்டுவிட்டு, " நீ சொல்வது ரொம்ப நிஜம் தான், இந்தப் பழங்கள் மிகவும் சுவையாக இருகிறதே, இந்தப் பழமே இத்தனை ருசியாக இருக்கு என்றால், இந்த பழங்களை தினமும் சாப்பிடும் அந்தக் குரங்கின் ஈரல் எவ்வளவு சுவையாக இருக்கும்"? என்றதாம்.
இதைக் கேட்ட முதலை, ஐயோ!, அந்த குரங்கு என் நண்பன்...........அவனைப் பற்றி இப்படி நினைப்பது பாவம்" என்றதாம். ஆனால் அதைப்பற்றிக் கொஞ்சமும் கவலைப் படாத அந்த பெண் முதலை, " என்ன நண்பன் என்று சொல்கிறீர்கள்?, எப்படி ஒரு குரங்கும் முதலையும் நட்பாக முடியும்? ....நாம் எல்லா மிருகங்களையும் தானே சாபிடுகிரேம், இதில் குரங்குமட்டும் என்ன விதி விலக்கு?...............அதனால் , நாம் தாராளமாய் அந்த குரங்கை சாப்பிடலாம். மற்ற மிருகங்கள் போலத்தானே அதுவும்." என்று சொன்னதாம்.
'கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் " என்பது போல..........இதக் கேட்டதும், அந்த ஆண் முதலைக்கும், தன் மனைவி சொல்வதில் நியாயம் இருப்பதாகவே பட்டது....... தான் என்றுமே அந்த குரங்கை நண்பன் என்று அழைத்ததாய் நினைவில் இல்லை, மேலும் அதுவாகத்தான் பழங்கள் தந்தது. இன்று மட்டுமே நாம் கேட்டு வாங்கி வந்தோம், எனவே, அந்த குரங்கை எப்படி வேட்டை யாடுவது என்று தான் இனி யோசிக்கணும் என்று முடிவெடுத்ததாம்.
இரண்டுமாக பேசி ஒரு முடிவுக்கு வந்ததாம். தங்கள் வீட்டில் விருந்து என்று சொல்லி, குரங்கை இங்கு அழைத்து வந்து விட்டால், அதனால் தண்ணீர் சூழ்ந்த இந்த பகுதி இல் இருந்து தப்பிச்செல்ல முடியாது. மேலும், தண்ணீருக்குள் முதலைக்கு பலம் அதிகம் . அதுவும் அது ஒன்று இவர்கள் இரண்டு பேர் , எனவே எப்படியும் இன்று குரங்குக்கு விருந்து என்று சொல்லி, நாம் விருந்து சாப்பிடலாம் என்று முடிவெடுத்தன .
தொடரும்....................
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 36 Px5m0a3SoGkfJbcCWcYA+kurankumu](https://www.filepicker.io/api/file/Px5m0a3SoGkfJbcCWcYA+kurankumu.jpg)
ஒருகாட்டில், ஒரு நாள் காட்டில, ஒரு குரங்கு நாவல் மரத்தில் இருந்து பழங்களை சாப்பிட்டு கொண்டிருந்ததாம். அந்த மரம் ஒரு நதியை ஒட்டி இருந்ததாம். அப்போ அங்கே, அந்த மரத்தின் கீழே ஒரு முதலை கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து இருந்ததை பார்த்ததாம் இந்த குரங்கு. பார்த்ததும் அதுக்கு ரொம்ப பாவமாய் போச்சாம், ரொம்ப பசி போல இருக்கு என்று நினைத்து, அது யார் என்ன என்றல்லாம் யோசிக்காமல், உடனே மரத்தில் இருந்து கொஞ்சம் பழங்களை பறித்து முதலை கிட்டே போட்டதாம். அன்பாக அதைப் பார்த்து "சாப்பிடு" என்றதாம்.
பேச்சு சப்தம் கேட்டதும், முதலை நிமிர்ந்து பார்த்ததாம். அதைப் பார்த்த குரங்கு, "நான் தான் போட்டேன், சாப்பிடு" என்றதாம். பழங்கள் தன அருகில் கிடப்பதை பார்த்து அவற்றை உண்டு மகிழ்ந்து, தன பசியை போக்கிக் கொண்டதாம் அந்த முதலை.
இதுபோல் ஒருசில நாட்கள் நடந்ததாம் . இது தொடர்ந்ததால், அவா ரெண்டு பேரும் நல்ல நண்பர்களாக மாறினார்களாம். இப்படியாக நாட்கள் நகர்ந்ததாம். இதை பார்த்த மற்ற குரங்குகள், " ஏய், இது கூடா நட்பு, ஒரு குரங்கும் முதலையும் எப்படி பிரண்ட்ஸ் ஆக இபுக்க முடியும்?.......இந்த முதலையை நம்பாதே !" என்று சொன்னதுகளாம்.
ஆனா, அந்த குரங்கு இதை காதில் வாங்காமல், " பாவம் அன்று அது பசியால் அழுத்தத்து தெரியுமா?" என்றதாம்.
அதற்கு அந்த மற்ற குரங்குகள், " அதத்தான் மனிதர்கள் முதலைக் கண்ணீர் என்று சொல்வார்கள், அது அழுகை இன் அறிகுறி இல்லை" என்று சொல்லிப்பர்த்ததாம். ஆனால் அதையெல்லாம் இது காதில் வாங்கிக்கலையாம். தொடர்ந்து முதலை இங்கு வருவதும் இந்த குரங்கு பழங்கள் தருவதும் தொடர்ந்ததாம்.
அப்போ ஒருநாள் என்ன ஆச்சாம், முதலை குரங்கிடம் "என் மனைவி, நான் தினமும் ஏன் நேரம் கழித்து வருகிறேன் என்று கேட்டாள், நான் உன்னுடன் பேசிவிட்டு , இந்த நாவல் பழங்கள் சாப்பிட்டு விட்டு வருவதாக சொன்னேன். அவள் நம்பவில்லை. அப்படியானால் எனக்கும் அந்த இனிப்பான பழங்களைக் கொண்டுவர முடியுமா? என்று கேட்கிறாள், கொஞ்சம் தருகிறாயா? " என்று கேட்டதாம்.
" அதனால் இன்று, எனது மனைவிக்கும் சேர்த்து நிறைய பழங்களை பறித்து போடு" என்றதாம். இதைக்கேட்டதும் அந்த குரங்குக்கு உச்சி குளிர்ந்து போச்சாம். உடனே , ரொம்ப சந்தோஷமாய் நிறைய பழங்களை பறித்து போட்டதாம் அது.
முதலையும் சந்தோஷமாய் அந்த பழங்களை தன் மனைவிக்காக எடுத்துக்கொண்டு போனதாம். முதலையின் மனைவி அந்த பழங்களை சாப்பிட்டுவிட்டு, " நீ சொல்வது ரொம்ப நிஜம் தான், இந்தப் பழங்கள் மிகவும் சுவையாக இருகிறதே, இந்தப் பழமே இத்தனை ருசியாக இருக்கு என்றால், இந்த பழங்களை தினமும் சாப்பிடும் அந்தக் குரங்கின் ஈரல் எவ்வளவு சுவையாக இருக்கும்"? என்றதாம்.
இதைக் கேட்ட முதலை, ஐயோ!, அந்த குரங்கு என் நண்பன்...........அவனைப் பற்றி இப்படி நினைப்பது பாவம்" என்றதாம். ஆனால் அதைப்பற்றிக் கொஞ்சமும் கவலைப் படாத அந்த பெண் முதலை, " என்ன நண்பன் என்று சொல்கிறீர்கள்?, எப்படி ஒரு குரங்கும் முதலையும் நட்பாக முடியும்? ....நாம் எல்லா மிருகங்களையும் தானே சாபிடுகிரேம், இதில் குரங்குமட்டும் என்ன விதி விலக்கு?...............அதனால் , நாம் தாராளமாய் அந்த குரங்கை சாப்பிடலாம். மற்ற மிருகங்கள் போலத்தானே அதுவும்." என்று சொன்னதாம்.
'கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் " என்பது போல..........இதக் கேட்டதும், அந்த ஆண் முதலைக்கும், தன் மனைவி சொல்வதில் நியாயம் இருப்பதாகவே பட்டது....... தான் என்றுமே அந்த குரங்கை நண்பன் என்று அழைத்ததாய் நினைவில் இல்லை, மேலும் அதுவாகத்தான் பழங்கள் தந்தது. இன்று மட்டுமே நாம் கேட்டு வாங்கி வந்தோம், எனவே, அந்த குரங்கை எப்படி வேட்டை யாடுவது என்று தான் இனி யோசிக்கணும் என்று முடிவெடுத்ததாம்.
இரண்டுமாக பேசி ஒரு முடிவுக்கு வந்ததாம். தங்கள் வீட்டில் விருந்து என்று சொல்லி, குரங்கை இங்கு அழைத்து வந்து விட்டால், அதனால் தண்ணீர் சூழ்ந்த இந்த பகுதி இல் இருந்து தப்பிச்செல்ல முடியாது. மேலும், தண்ணீருக்குள் முதலைக்கு பலம் அதிகம் . அதுவும் அது ஒன்று இவர்கள் இரண்டு பேர் , எனவே எப்படியும் இன்று குரங்குக்கு விருந்து என்று சொல்லி, நாம் விருந்து சாப்பிடலாம் என்று முடிவெடுத்தன .
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
தொடரும்....................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !
மேற்கோள் செய்த பதிவு: 1194974krishnaamma wrote:இன்னும் ஷோபனா இந்த கதைகளை பார்க்கலை என்று நினைக்கிறேன்![]()
மன்னிக்கணும் கிருஷ்னாம்மா . இதோ பார்த்து படித்து விட்டேன் . மூன்று(2 1/2) கதைகளும் அருமையாக இருக்கு.
எப்போதும் போல் அருமையாக எழுதி இருக்கிறீர்கள். காக்கா கதை .. சீன கதையும் நன்றாக உள்ளது . ஒவ்வொரு நாட்டில் ஒவ்வொரு மாதிரி சொல்கிறார்கள் . ஆனாலும் ஒரு நீதி உள்ளது .
![தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 36 103459460](/users/1813/71/41/02/smiles/103459460.gif)
![தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 36 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 36 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !
![தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 36 Ns0GRz7LTGOdwcFVywLQ+7643074_f248](https://www.filepicker.io/api/file/ns0GRz7LTGOdwcFVywLQ+7643074_f248.jpg)
மறுநாள், அந்த முதலை குரங்கிடம், " என் மனைவிக்கு நீ கொடுத்த பழங்கள் ரொம்ப பிடித்து விட்டது. இவ்வளவு அருமையான பழங்களைத் தரும் குரங்குக்கு நம் வீட்டில் ஒரு விருந்து தரலாம், அழைத்து வர்ருங்கள் என்று சொல்லி இருக்கிறாள், எனவே, நீ என்னுடன் இன்று எங்கள் வீட்டுக்கு வருகிறாயா? என்று அன்பாய் கேட்டதாம்.
இந்த வார்த்தைகளைக் கேட்டதும் குரங்குக்கு ரொம்ப சந்தோஷமாய் போச்சாம்...........தன் குரங்கு நண்பர்களிடம் எல்லாம் போய், " என்னவோ அன்று அப்படி சொன்னீர்கள்,இப்போ பாருங்கோ எனக்கு விருந்து"
![குதூகலம்](/users/1813/71/41/02/smiles/168113.gif)
![குதூகலம்](/users/1813/71/41/02/smiles/168113.gif)
![குதூகலம்](/users/1813/71/41/02/smiles/168113.gif)
அதையெல்லாம் இந்த குரங்கு கொஞ்சம் சட்டைப் பண்ணாமல் விருந்துக்கு கிளம்பித்தாம்...............
மனதளவில், விருந்துக்கு செல்லத் தயாராய் வந்த குரங்கு முதலை இடம், " உன் வீடு எங்கே இருக்கு நான் எப்போ எப்படி வருவது?" என்று கேட்டதாம்.
அதற்கு அந்த முதலை, சிரித்து " என்னது , நீயாக வருவதா? ... அது நீர் சூழ்ந்த பகுதி, உன்னால் தனியாக அங்கு வர முடியாது, நானே உன்னை என் முதுகின் மேல் ஏற்றி அழைத்துப் போகிறேன், அதுவும் இன்றே, இப்போவே". என்றதாம்.
எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு அந்த குரங்கு 'ஜாம், ஜாம் ' என்று முதலை இன் முதுகில் ஜானவாச மாப்பிள்ளை போல உட்கார்ந்து கொண்டதாம். முதலையும் தண்ணிரில் நீந்த ஆரம்பித்ததாம். ஏதோ விளையாட்டாக பேசியபடி போனார்களாம் இருவரும். வழி இல் இருபுறமும் தெரிந்த இயற்கை அழகைக் கண்டு ரொம்பவும் சந்தோஷம் கொண்டதாம் அந்த குரங்கு.
"ஏய், உன் வீடுக்குக்குப் போகும் வழி ரொம்ப அழகாய் இருக்கு டா"... என்னை மாதம் ஒருமுறையாவது இப்படி சவாரி கூட்டி வருகிறாயா? " என்று கேட்டதாம்.
அதற்கு ஏதோ நினைவாக, " மாசம் ஒருமுறையா?....இன்னையோட நீ காலி, அப்புறம் எப்படி இப்படி வருவே?" என்று சொல்லி விட்டதாம்.
இதைக் கேட்ட குரங்குக்கு, 'பக்' என்றதாம். " என்னடா சொல்கிறாய்?" என்று கேட்டதாம். உளறிவிட்டோமே என்று ஒரு புறம் நினைத்தாலும், இந்தக் குரங்கு நம்மை மீறி எங்கே போய்விடப்போகிறது " என்று நினைத்த முதலை, " உன்னை விருந்துக்கு நான் அழைத்துப் போகலை, என் மனைவிக்கு உன்னையே விருந்தாக்கப் போகிறேன்."........என்று ஒரு குண்டைத் தூக்கி போட்டதாம்.
குரங்குக்கு குரலே எழும்ப வில்லை, பேசாமல் முதலை மேலும் என்ன சொல்லப் போகிறதோ என்று காத்திருந்ததாம். "என்னடா, குரலே காணும்?.".............என்று சிரித்த முதலை, என் மனைவி கர்ப்பமாய் இருக்கிறாள், எனவே அவள் விரும்புவதை செய்ய நான் கடமைப் பட்டிருக்கிறேன், அவள் தான் நேற்று நீ கொடுத்தனுப்பிய பழங்களை சாப்பிட்டதும், " இந்தப் பழங்களே இவ்வளவு ருசியாக இருந்தால், இதையே தினமும் சாப்பிடும் அந்தக் குரங்கின் ஈரல் அதாவது குடல் எவ்வளவு ருசியாக இருக்கும், எனக்கு அது வேண்டும் " என்று கேட்டாள்...............அதற்குத்தான் இப்போ உன்னை கூட்டிப் போகிறேன் என்றதாம்.
ஒரேநிமிடம் தான், தன்னைத்தானே சுதாதரித்துக் கொண்ட குரங்கு, " அடாடா, இதை நீ முதலிலேயே சொல்லி இருந்தால் இவ்வளவு கஷ்டம் வந்திருக்காதே உனக்கு"...என்றதாம் ..............
'என்னடா இவன் அழுது புலம்புவான், நமக்கு பார்க்க சகிக்காது , எப்படி சமாளிப்பது என்றெல்லாம் நாம யோசித்துக்கொண்டு இருக்கோம், இவன் என்னடா வென்றால் எனக்கு கஷ்டம் என்கிறானே' என்று நினைத்தது அந்த முதலை .
'நீ என்ன சொல்கிறாய், எனக்குப் புரியலையே" என்றது அது.
அதற்கு அந்த குரங்கு, " நான் வழக்கமாய் என்னுடைய குடலை என்னுடைய மரத்தில் காயப்போடுவது வழக்கம், நீ முதலிலேயே என்னிடம் சொல்லி இருந்தால் நான் கையோடு கொண்டு வந்திருப்பேன், இப்போ அது வேண்டும் என்றால் அங்கு தான் போகணும், பார் நீ தான் மீண்டும் அந்த மரத்தடிக்கு நீந்திப் போகணும், இது ரெண்டு வேலைதானே , உனக்கு கஷ்டம் தானே , அதனால் தான் நான் அப்படி சொன்னேன்..... ஈரல் இல்லாமல் போனால் உன் மனைவி உன்னை திட்டுவாளே!"... என்றதாம்.
இதைக் கேட்ட முதலை "ஐயோ!, நேத்தே அவள் அழுது ஆகாத்தியம் பண்ணினாள் இப்போ ஈரல் இல்லாமல் போனால் என்னையே கொன்னாலும் கொன்னுடுவாள் , எனக்கு கஷ்டம் ஒன்றும் இல்லை, வா மீண்டும் போய் எடுத்துவந்து, அவளிடம் கொடுப்போம்", என்றது முதலை.
இந்த வார்த்தைகளைக் கேட்ட குரங்குக்கு காதில் தேன் பாய்ந்தது போல இருந்தது. கரை இல் குதிக்கத் தயாராய் நின்றுகொண்டது. கரை வந்தது தான் தாமதம், பாய்ந்து குதித்து மரத்தின் மேலே ஏறி உட்கார்ந்து கொண்டதாம் அந்தக் குரங்கு.
இதைப் பார்த்த முதலை, " என்னடா, உட்கார்ந்து விட்டாய், நேரம் ஆகிறது, ஈரலை எடுத்துக் கொண்டு கிளம்பு".என்றதாம்........
உடனே சிரித்த குரங்கு," போடா நன்றி கெட்டவனே, உடல் உறுப்பான ஈரலை கழட்டி வைக்க முடியுமா? முட்டாள், நம்பிக்கை துரோகி, என்று பலவாறாய் திட்டியதாம். ( வேண்டுமானால் குழந்தைகளிடம் ரொம்ப திட்டித்தாம் என்று மட்டும் சொல்லுங்கோ
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
இதைக் கேட்ட முதலைக்கு ரொம்ப வெட்கமாய் போச்சாம். சுய புத்தி இல்லாமல், தன் மனைவி இன் சொல்லைக் கேட்டதால் தானே தனக்கு இந்த நிலை என்று தன்னைத் தானே நொந்து கொண்டதாம். ஒரு நல்ல நண்பனை இழந்து விட்டோமே, இனி என்றுமே அவனை பார்க்க முடியாமல் போனதே என்று நினைத்து மிகவும் வருந்தியதாம்.
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
உயிர் போகப்போகிறது என்று தெரிந்தும், குரங்கு தனது அறிவை சரியான நேரத்தில் பயன்படுத்திக் கொண்டது; உயிர் பிழைத்தது, இல்லையா?...........அது போல நம்மை ஆபத்து சூழ்ந்தால், அது எப்படிப்பட்டதாக இருந்தாலும் ஒரு நிமிடம் நிதானித்து கடவுளை தியானிக்கணும். மனதை நிர்மலமாய் வைத்துக்கொண்டு, இந்த ஆபத்திலிருந்து வெளியேறும் சக்தியை எனக்கு கொடுப்பா என்று அந்த பெருமாளை வேண்டிக்கணும்.
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
உடனேயே, நமக்கு ஏதாவது வழி கண்டிப்பாக பிறக்கும்.........சரியா குழந்தைகளே !
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
மேலும், இந்த சிறுகதையில் இருந்து நண்பர்களை தேர்வு செய்யும் போது ரொம்ப ஜாக்கிரதையாக இருக்கணும், நல்லவர்களாய் பார்த்து பழக ணும் என்று குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுங்கள். நண்பனால் ஆபத்து என்றால், இந்தக் குரங்கைப் போலவே அவனை உடனடியாக மறந்து விடணும்; தாட்சண்யம் பார்த்தல் நமக்குத்தான் பின்பு ஆபத்து என்றும் சொல்லுங்கள்.
ஆங்கிலத்தில் ஒரு பழமொழி இருக்கே அதை இங்கே சொல்லணும்.
'உன் நண்பர்கள் யார் என்று சொல், நான் உன்னைப் பற்றி சொல்கிறேன்' என்று அதை சொல்லணும். சரியா?
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !
மேற்கோள் செய்த பதிவு: 1195307shobana sahas wrote:மேற்கோள் செய்த பதிவு: 1194974krishnaamma wrote:இன்னும் ஷோபனா இந்த கதைகளை பார்க்கலை என்று நினைக்கிறேன்![]()
மன்னிக்கணும் கிருஷ்னாம்மா . இதோ பார்த்து படித்து விட்டேன் . மூன்று(2 1/2) கதைகளும் அருமையாக இருக்கு.
எப்போதும் போல் அருமையாக எழுதி இருக்கிறீர்கள். காக்கா கதை .. சீன கதையும் நன்றாக உள்ளது . ஒவ்வொரு நாட்டில் ஒவ்வொரு மாதிரி சொல்கிறார்கள் . ஆனாலும் ஒரு நீதி உள்ளது .
![]()
![]()
![]()
நோ ப்ரோப்ளேம் ஷோபனா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !
24. அடுத்தது, தெனாலி ராமனும் பூனையும்
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !
அருமையான கதை அம்மா. நன்றாக உள்ளது.குட்டி குழந்தைகளுக்கு ஞாயிறு கதை உங்களுடையது தான்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி- தளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !
விருப்பம் தெரிவித்தேன் அம்மா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி- தளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !
மேற்கோள் செய்த பதிவு: 1195697சசி wrote:அருமையான கதை அம்மா. நன்றாக உள்ளது.குட்டி குழந்தைகளுக்கு ஞாயிறு கதை உங்களுடையது தான்.
மிக்க நன்றி சசி
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !
மேற்கோள் செய்த பதிவு: 1195699krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1195697சசி wrote:அருமையான கதை அம்மா. நன்றாக உள்ளது.குட்டி குழந்தைகளுக்கு ஞாயிறு கதை உங்களுடையது தான்.
மிக்க நன்றி சசி![]()
![]()
![]()
................ஒரு பையன் தானே உங்களுக்கு, வேறு யார் குழந்தைகள் என்று சொல்லறீங்களே?
...வி.பொ.பா.
எதிர் வீடு, பக்கத்து வீடு குழந்தைகள் எல்லாம் என் வீட்டில் தான். வீடு அதகள படும்.இனியனுக்காக எல்லா குழந்தைகளும் ஒன்று சேர்ந்து விளையாடி மகிழும். இடையில் நான் பட்சணம் செய்து தருவேன். குழந்தைகள் மகிழ்ச்சியாக இருப்பதை பார்க்க பிடிக்கும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி- தளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
Page 36 of 46 • 1 ... 19 ... 35, 36, 37 ... 41 ... 46
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ...pfd
» தாத்தா பாட்டி சொன்ன அறிவுரைகள்...!!
» தாத்தா பாட்டி பார்த்திருப்போம்.... ஒரு தாத்தா, பாட்டியானதை பார்த்திருக்கீங்களா?
» படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
» நாங்கள் தாத்தா/பாட்டி ஆகிவிட்டோம் !!!
» தாத்தா பாட்டி சொன்ன அறிவுரைகள்...!!
» தாத்தா பாட்டி பார்த்திருப்போம்.... ஒரு தாத்தா, பாட்டியானதை பார்த்திருக்கீங்களா?
» படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
» நாங்கள் தாத்தா/பாட்டி ஆகிவிட்டோம் !!!
Page 36 of 46
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|