புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 20 I_vote_lcapதாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 20 I_voting_barதாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 20 I_vote_rcap 
57 Posts - 47%
ayyasamy ram
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 20 I_vote_lcapதாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 20 I_voting_barதாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 20 I_vote_rcap 
48 Posts - 40%
mohamed nizamudeen
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 20 I_vote_lcapதாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 20 I_voting_barதாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 20 I_vote_rcap 
5 Posts - 4%
T.N.Balasubramanian
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 20 I_vote_lcapதாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 20 I_voting_barதாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 20 I_vote_rcap 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 20 I_vote_lcapதாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 20 I_voting_barதாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 20 I_vote_rcap 
4 Posts - 3%
Guna.D
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 20 I_vote_lcapதாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 20 I_voting_barதாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 20 I_vote_rcap 
1 Post - 1%
ஜாஹீதாபானு
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 20 I_vote_lcapதாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 20 I_voting_barதாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 20 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 20 I_vote_lcapதாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 20 I_voting_barதாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 20 I_vote_rcap 
57 Posts - 47%
ayyasamy ram
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 20 I_vote_lcapதாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 20 I_voting_barதாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 20 I_vote_rcap 
48 Posts - 40%
mohamed nizamudeen
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 20 I_vote_lcapதாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 20 I_voting_barதாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 20 I_vote_rcap 
5 Posts - 4%
T.N.Balasubramanian
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 20 I_vote_lcapதாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 20 I_voting_barதாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 20 I_vote_rcap 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 20 I_vote_lcapதாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 20 I_voting_barதாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 20 I_vote_rcap 
4 Posts - 3%
Guna.D
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 20 I_vote_lcapதாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 20 I_voting_barதாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 20 I_vote_rcap 
1 Post - 1%
ஜாஹீதாபானு
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 20 I_vote_lcapதாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 20 I_voting_barதாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 20 I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !


   
   

Page 20 of 46 Previous  1 ... 11 ... 19, 20, 21 ... 33 ... 46  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 22, 2015 6:02 pm

First topic message reminder :



தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ........என்கிற இந்த பாடலை கேட்கும்போது, நம் பாட்டி தாத்தா சொன்ன கதைகள் நமக்கு நினைவுக்கு வரும்..அவற்றை இந்த காலத்து குழந்தைகள் வரை கொண்டு சேர்க்கவே இந்த திரி............


இதில் எனக்கு தெரிந்த கதைகளை பதிகிறேன்,  நீங்களும் சிரமம் பார்க்காமல் பதிவு போடுங்கள். ஏன் என்றால், நாம் வாயில்  சொல்ல எளிதாக இருக்கும் இவை type  அடிக்க நேரம் எடுக்கும்.ஆனால் நாம் ரசித்த கதைகளை நம் அடுத்த சந்ததிக்கு கொண்டு சேர்க்க அந்த கஷ்டம் படலாம் என்றே எண்ணுகிறேன் புன்னகை

இந்த திரி ஷோபனாவின் குட்டிப் பையனுக்காக ஆரம்பித்திருக்கேன் ............. உங்கள் வீட்டில் இருக்கும் குட்டி பசங்களுக்காகவும் தான்.....எனவே,  நீங்களும் பதிவு போடுங்கள்................புன்னகை


முதல் கதை .......வாலு போச்சு கத்தி வந்தது.............



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 05, 2015 11:59 am

வேல்முருகன் wrote:
krishnaamma wrote:
shobana sahas wrote:தம்பி ரொம்ப குரும்புக்காறாரு !!
சுத்தி எவ்வளோ பெரிசா இருக்கு ... ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல
மேற்கோள் செய்த பதிவு: 1160491

நல்ல காலம் ஷோபனா, நான் சொல்லும்போது இவ்வளவு பெரிய சுத்திய என் தலை இல் போடாமல் விட்டார் ................. அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை ...................... குதூகலம் குதூகலம் குதூகலம்
மேற்கோள் செய்த பதிவு: 1160539

சிரி சிரி சிரி நக்கல் நாயகம் நக்கல் நாயகம்
மேற்கோள் செய்த பதிவு: 1160698

ஹா....ஹா...ஹா....ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 10, 2015 12:30 am

13. புறாக்களும் எலிகளும் !

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 20 ZvFszLr4RtSPeTnXtIWS+download(2)

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு ! என்று வலியுறுத்தும் கதை இது புன்னகை

கோதாவரி என்ற நதி கரையோரத்திலே, ஒரு பெரிய ஆலமரம் இருந்ததாம்.  பல நூறு வருடங்களாக அந்த மரம் அங்கே இருந்ததாம்.ரொம்ப பெரிய மரமாம் அது. அதில் நிறைய பறவைகள் குடி இருந்ததாம். சில மர  பொந்துகளில், சில கூடு கட்டிக்கொண்டு  என சந்தோஷமாய் வசித்து வந்ததாம்.

அந்த வழியே போய் வரும் பிரயாணிகள் கூட , இவ்வளவு பெரிய மரத்தை பார்த்ததும், கொஞ்ச நேரம் தங்கள் களைப்புத் தீர அந்த மரத்தின் நிழலில் சிறிது நேரம் தங்கி சாப்பிட்டு விட்டு, பிறகு  படுத்து ஓய்வெடுப்பார்க ளாம். அருகேயிருந்த நதியும் இருந்ததால் அவர்களுக்கு மிக  சுத்தமான தண்ணீரும்  கிடைத்ததாம். அதை குடித்துக் களைப்புத் தீர்ந்து, தங்கள் பயணத்தைத் தொடர்வார்களாம்.

இப்படி இருக்கும்போது , ஒருநாள்  ஒரு வேடன் அந்த வழியாக வந்தானாம். தன் களைப்பு தீர ஆற்றுத் தண்ணீரை  குடித்து விட்டு, மரத்தை நிமிர்ந்து பார்த்தானாம். அவனுக்கு நிறைய பறவைகளின் கூடுகளும்  , மரபொந்துகளும் கண்ணில் பட்டதாம் . அவைகளை பார்த்ததும் அவனுக்கு ரொம்ப சந்தோஷமாய் போச்சாம்.

ஆஹா, இன்று நல்ல வேட்டை தான். இரை தேடப்போன பறவைகள் வருவதற்குள், இங்கு வலையை விரித்து வைத்தால்....என்று எண்ணிப்பார்த்தானாம்.............. ம்.. நிறைய பறவைகள் சிக்கும், எனவே, நான் என் வேலையை சிக்கிரம் முடிக்கிறேன். என்று நினைத்து துரிதமாக வேலை இல் இறங்கினானாம்.

தனக்குள் பேசிக்கொண்ட வேடன், மரத்தின்கீழ், புல்வெளியில் தனது வலையை விரித்து வைத்தானாம்.
சிறு கம்புகளைத் தரையில் குத்தி, அவற்றைச் சிறு கயிறுகளால் கட்டினான். பறவைகளின் கண்களில் அந்த வலை தெரியாதபடிக்கு,  புல் மற்றும் இலைகளைப் போட்டு வலையை மறைத்து வெச்சானாம்.

அப்புறம், தனது மடியிலிருந்த துணிப்பையை எடுத்து, அதிலிருந்த தானியங்களை அந்த வலையில் அங்குமிங்குமாகத் தூவி விட்டானாம். தன் ஏற்பாட்டை பார்த்து தானே  "சரி, இன்று எனக்கு எப்படியும் ஏராளமான பறவைகள் கிடைக்கும்" என்று நினைத்துக் கொண்டானாம். தான் மட்டும் அடுத்த மரத்தின் பின்னாடி போய் ஒளிந்துகொண்டானாம்.

thodarum................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 10, 2015 12:51 am

அப்போது, வானத்திலே கூட்டமாய்  பறவைகள்  பறந்து வந்ததாம்.. அதுல, நிறைய புறா இருந்ததாம்......ம்.. ஒரு  ஐம்பதுக்கும் மேல இருக்கும்.........அந்த அழகான  புறாக்கள் கூட்டத்திற்கு ஒரு ராஜா இருந்தானாம்.அவன் பேர்  சித்திர கிரீவனாம்.

அன்றைக்கு பார்த்து அந்த புறாக்களுக்கு  எங்கேயும் 'மம்முவே' கிடைக்கலையாம் சோகம்........பாவம் அதுகள்,  ரொம்ப தூரம் பறந்து வந்ததால் அதுகள் எல்லாத்துக்கும் தொப்ப பசிச்சிதாம். இருட்டினா அதுகளுக்கு கண் தெரியாது, அதனால பசியோடவே தங்களோட கூட்டுக்கு வந்துடுத்தாம்.

அதனால் எல்லாமே ரொம்ப டயர்டா இருந்துத்தம்....எதாவது கொஞ்சமாவது 'மம்மு' கிடைக்குமா நு பார்த் துண்டே வந்ததாம். அப்போத்தான் ஒரு குட்டி புறா கீழே இருந்த தானியத்தைப் பார்த்ததாம்.........உடனே ரொம்ப சந்தோஷமாய் போச்சாம் அதுக்கு.

" அம்மா, அம்மா, அங்கே பாரேன் மம்மு" என்று கத்தித்தாம். இது கத்தினதும் தரையில் தூவப்பட்டிருந்த தானியங்களை அந்தப் புறாக்கள் எல்லாமே பார்த்துதாம். எல்லாத்துக்கும் ரொம்ப சந்தோஷமாய் போச்சாம்.

அப்பாடா, ஒருவழியாக நம்ம கூட்டுக்கு கிட்டக்கயே இன்று சாப்பாடு  கிடைச்சாச்சு என்று சந்தோஷமாய் கத்தித்தாம் . ஆனால், ராஜா  சித்திரகிரீவன் மட்டும், அந்தத் தானியங்களைப் பார்த்தும், ஏதும் பேசாமல் பறந்து கொண்டேயிருந்ததாம்.

அதைப்பார்த்ததும் ஒரு புறா , " ராஜா, ராஜா,  கீழே ஏராளமான தானியங்கள் கொட்டிக் கிடக்கே, நீங்க அதை பார்க்கலையா?.....உங்களுக்கு சந்தோஷம் இல்லையா?.....பசியோட   இருக்கும் நம் கூட்டத்துக்கே  அந்த சாப்பாடு போறுமே, நாம சாப்பிடலாம் தானே,  நீங்க ஏன் ஒண்ணும் சொல்லாமல் இருக்கீங்க ? " என்று கேட்டது.

அதுக்கு அந்த ராஜா  புறா "நானும் பார்த்தேன்.............." என்று  இழுத்ததாம்.

"பார்த்துடீங்க இல்ல, அப்படியானால் வாருங்கோ  , நாம எல்லாருமாகத் தரையில் இறங்கி, அந்தத் தானியங்களைச் சாப்பிடுவோம். இன்று முழுவதும் நமக்கு உணவே கிடைக்கவில்லை" என்று சின்னப்புறா சொல்லித்தாம்.

உடனே, ராஜா..............."இல்லை இல்லை , அவசரப்பட வேணாம்" என்று சொல்லி, கீழே இறங்க வேண்டாம் என்று சொல்லித்தாம்.

"கண்ணா , நீ குட்டிப்புறா , உனக்கு ஒன்று சொல்லறேன் கேளு, ஒரு வேலையை  செய்வதற்கு முன்னாடி, நாம பல தடவை யோசிக்கவேண்டும். ( இந்த இடத்தில்  ஒரு திருக்குறள் சொல்லணும் புன்னகை ) யோசித்து சரியாக செய்யணும்......அப்புறம், யோசித்து செய்யும் வேலையை பாதி இல் விடக் கூடாது.

எண்ணித்துணிக கருமம் எண்ணித்துணிக கருமம்
துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு.

வள்ளுவரின் வேதமொழி,  என்றும் எப்போதும் நினைவில் இருக்கவேண்டிய ஒன்று என்று சொல்லணும் புன்னகை

கீழே பாரு,  மனித நடமாட்டமேயில்லாத காடு. இந்தக் காட்டின் நடுவிலே, இவ்வளவு தானியங்கள் எப்படி  வந்தது? ................இந்தத் தானியங்களைப்  யார் இங்கே போட்டா?.............எதுக்கு  போட்டா? .................. இதையெல்லாம் யோசித்துப்  பார்க்க வேண்டும்" என்று சித்திரகிரீவன் சொல்லித்தாம்.

தொடரும் ...................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 10, 2015 1:10 am

குட்டி  புறா வேகமாகத் தலையை ஆட்டித்தாம் . "எனக்கு  ரொம்ப பசிக்குது, ராஜாவே,  உங்களுக்கு ரொம்ப வயசாகிப் போச்சு.............. அதனால், அறிவும், வேகமும்  கொறஞ்சு  போச்சு................. நீங்கள் சொன்னபடி யோசித்துக்கொண்டேயிருந்தால் அவ்வளவுதான் ............நாம இன்னைக்கு பசியால செத்து போகவேண்டியதுதான்........... வீரமும், துணிவும் இல்லாதவனுக்கு இந்த உலகத்தில் இடமில்லை.......எனவே , யார் யாருக்கு ரொம்ப பசிக்கிறதோ என் பின்னாடி வாங்கோ என்று " என்று சொல்லித்தாம்.

அந்தப் புறாவுடன் மேலும் பல புறாக்களும் சேர்ந்து கொண்டன. பசியின் கொடுமையால், எப்படியாவது சாப்பாடு கிடைத்தால் போதும் என்று நினைத்த அவை, அதன் பின் விளைவு எப்படி இருக்கும் என்று ஒரு நிமிடம்கூட யோசிக்கலையாம்.

'பசி வந்திட பத்தும் பறந்துவிடும்' என்று சும்மாவா சொன்னா பெரியவா?.அது இங்கே நிஜமாச்சு.

ராஜா  எவ்வளவு புத்தி சொல்லியும், தடுத்தும்  அதுகள் கேட்கவில்லை. ராஜா சொல்பேச்சைக் கேட்காமல், எல்லாப் புறாக்களும் கீழே இறங்கித்தாம். தானியங்கள் கொட்டிக் கிடந்த இடத்தில் இறங்கி, பசியால் வேக வேகமாகத் தானியங்களைச் சாப்பிடத் தொடங்கித்தாம்.. ............அப்போது, அந்தப் புறாக்களின் கால்கள்  வேடன் விரித்திருந்த வலையில் சிக்கிக் கொண்டு விட்டதாம்.

கொஞ்சம் சாப்பிட்டு பசி குறைந்ததும் தான் அதுகளுக்கு நாம எல்லாம் வலையில் சிக்கிக்கொண்டு  விட்டோம் என்று புரிந்ததாம் ......நிமிர்ந்து பார்த்தால்............... வேடன்................. பயம்  பயம்  பயம்

'போச்சுடா............அப்போ பசியால் சாகப்போகிறோம் என்று  நினைத்தோம், ஆனால் இப்போ அந்த வேடன்   கையால சாகப்போரோமா' ? என்று நினைத்து நிமிர்ந்து வானத்தைப் பார்த்ததுகளாம் ........

பார்த்தால் அவைகளின் ராஜா மட்டும் மேலே பறந்து கொண்டிருந்ததாம்............. தங்கள் உயிர் போகப்போவதை நினைத்து பயந்த புறாக்கள்,  தங்கள் காலடியில் கிடக்கும் தானியங்களைச் சாப்பிடக்கூட மனசில்லாமல் தங்களின் ராஜாவை பார்த்து , "ராஜா, மன்னிச்சுடுங்கோ, நீங்க சொல்ல சொல்ல கேட்காமல் வந்து மாட்டிக்கொண்டோம் எங்களை காப்பாற்றுங்கள்,... காப்பாற்றுங்கள்" என்று கதறி  அழுததாம்.

வானத்தில் தனியாக வட்டமிட்டுப் பறந்துகொண்டிருந்த ராஜா  புறா சித்திரகிரீவன் அந்தப் புறாக்களின் அபயக் குரலைக் கேட்டு, சரி இவைகளை எப்படியாவது  காப்பாத்தணும் என்று  தீர்மானித்ததாம்.

ஒரு ஐடியா வந்ததும் , தானும் கீழே இறங்கி வந்து, அந்த வலையில் சிக்கிக் கொண்டது. உடனே, மத்த புறாக்கள், " ஐயோ...நீங்களும் இங்கே வந்துட்டா யார் எங்களை காப்பாத்துவா? " என்று கத்தித்தாம்...........அதுக்கு அமைதியாக பதில் சொல்லித்தாம்  ராஜா புறா" உங்களுக்கு  எப்பவும் அவசரம் ......நான் ஐடியா இல்லாமல் இங்கு வரலை, நான் சொல்வதை எல்லோரும் கவனமாய் கேளுங்கள் " என்றதாம்.

மிச்ச  புறாக்கள் தலைவனைப் பார்த்து அழுதுத்தாம் . "ம்ம்...ம்... ராஜா.ஆஅ.....,.. உங்களை மதிக்காமல், நீங்கள் சொன்ன புத்தியைக் கேட்காமல் வந்து இந்த மரண வலையில் மாட்டிக்கொண்டோம் , நீங்க தான்  எப்படியாவது எங்களைக் காப்பாத்தணும்" என்றதாம்..........

ராஜாவும், "சரி...சரி...அழ வேண்டாம் ............அதுக்குத்தான் நான் வந்திருக்கேன்.............கொஞ்சநேரம் அமைதியாய் இருங்கள்" என்றதாம் .

தொடரும்..................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 10, 2015 1:23 am

அந்த ராஜா " அடுத்த கிராமத்தின் எல்லையில், ஒரு மரப்பொந்தில், இரணியகன் என்ற எலி இருக்கு, அது என்னுடைய  நெருங்கிய நண்பன். இந்த ஆபத்து காலத்துல  அந்த எலி தான் நமக்கு உதவும் " என்று சொல்லித்தாம்.

அதே வேளையில, தான் விரித்த வலையில் ஏராளமான புறாக்கள் மாட்டிக்  கொண்டிருப்பதை வேடன் பார்த்தான். அவனுக்கு ரொம்ப சந்தோஷமாய் போச்சு. இதுகளை பிடிக்க, மறைவிலிருந்து வெளியே  வந்தான்.

அவன் ஓடிவருவதைச் சித்திரகிரீவன் பார்த்தூவிட்டு,  "அன்பு புறாக்களே,  நாம வலையில் சிக்கியிருப்பதை அந்தக்  வேடன் பார்த்துட்டான். ...................நம்மையெல்லாம் பிடித்துச் செல்ல அதோ, தடியுடன் வந்துகொண்டிருக்கின்றான். ................ அவன் இங்கே வரர்த்துக்குள்ளே,  நாம் எல்லோரும்  தப்பிச்சுடனும்" என்றதாம்.................

உடனே எல்லா புறாவும் " எப்படி எப்படி" ? என்று கத்தித்தாம்.

"ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு; நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் சாவு" என்று மனிதர்கள் சொல்வார்கள். அதேபோல், நாமும் எல்லாருமாக ஒன்று சேர்ந்து, ஒற்றுமையாக இந்த வலையைத் தூக்கிக்கொண்டு பறந்து செல்ல வேண்டும். நாம் எல்லாரும் சேர்ந்து ஒரே நேரத்தில் முயற்சி செய்தால், இது நிச்சயம் முடியும்" என்று கூறியது.

" நான்  1..2...3.......வன்று சொல்வேன், உடனே எல்லோரும் ஒரே சமயத்தில் பறக்கணும் " என்றதாம்.

எல்லா புறாக்களும்  ஒப்புத்துக் கொண்டதாம்....வேடன் , எல்லா புறாவும் தான் மாட்டிக்கொண்டதே என்று கொஞ்சம் மெதுவாய் நடந்து வந்தானாம். அதற்குள் ராஜா புறா.............1.....2.........3..........என்று சொன்னதாம் .............அது அப்படி  சொன்னதும் , எல்லாப் புறாக்களும் 'விர்' என்று பறந்ததாம்.

தொடரும்.....................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 10, 2015 1:35 am

எல்லாப் புறாக்களும் ஒன்றாகச் சேர்ந்து, அந்த வலையைத் தூக்கிக்கொண்டு வானத்தில் பறந்ததாம். அப்படி எல்லா புறாக்களும் வலையைத் தூக்கிக்கொண்டு வானத்தில் பறப்பது அழகாக இருந்தது. இதைக் கொஞ்சமும் எதிர் பார்க்காத வேடன், அப்படியே அதிர்ச்சியாகி நின்றுவிட்டனாம். அதுகள் ரொம்ப தூரம் போனதும் தான் இவனுக்கு , உரைத்தது, அதுகள் தன வலையை யும் தூக்கிண்டு பறக்கிறது என்று.

"ஐயோ !....என் வலை"........என்று கத்திக்கொண்டே, கொஞ்ச தூரம் அந்தப் புறாக்களைத் துரத்திக் கொண்டு ஓடினான். ஆனால், அவனால் அந்தப் புறாக்களைப் பிடிக்க முடியவில்லை. அவைகள் ரொம்ப பாஸ்ட் ஆக பறந்து விட்டதாம்.

கொஞ்ச நேரம் அப்படி பறந்து, எலி இன் இடத்துக்கு போய் சேர்ந்தார்களாம். அங்கே, ஒரு புளிய மரத்தின் பொந்துக்குள் வாழ்ந்து வந்த இரணியகன் என்ற எலி , இவர்களைப் பார்த்து ரொம்ப ஆச்சர்யப்பட்டதாம். இவர்களின் வலையை பல்லால் கடித்து குதறிவிடலாம் என்று யோசித்து, அது தன்
எலி நண்பர்களை கூப்பிட்டதாம்.

இதனுடைய குரல் கேட்டதும் நிறைய எலிகள் வந்ததாம்....நிலைமையை புரிந்து கொண்ட அந்த எலிகள் எல்லாம் புறாக்களின் கால்களிலும் சிக்கி இருந்த வலைகளை கடித்து, புறாக்களை விடுவித்து விட்டதாம்.

புறாக்களுக்கு நிம்மதியானதாம். புறாக்களுக்கு கண் தெரியாது என்று சொன்னேன் இல்லையா, அதனால் அவை அன்று இரவை இந்த மரத்தில் கழிக்க முடிவு செய்தனவாம். எலிக்கு இரவு தானே வேட்டையே , எனவே அவைகள் எல்லோரும் புறாக்களுக்கு உணவு கொடுத்ததாம். இப்படியாக எல்லோரும் சந்தோஷமாய் 'பார்டி' வைத்து கொண்டாடினார்களாம் ஜாலி ஜாலி ஜாலி

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu Sep 10, 2015 1:41 am

க்ரிஷ்ணாம்மா ... நீங்கள் கதையை எப்போது முடிப்பீர்கள் என்று காத்திருந்தேன் , பின்னூட்டம் போட.
கதை அருமை அம்மா . நீங்கள் சொல்லும் விதமே ஒரு தனி ஸ்டைல் .. குழந்தைகளுக்கு பிடித்தால் போல ....
நன்றி என்று ஒரு வார்த்தையில் சொல்ல மனம் வரவில்லை .... ரொம்ப நன்றிகள் க்ரிஷ்ணாம்மா ... வி பொ பா . அம்மா .
வாழ்த்துக்கள் கோடி உங்களுக்கு ...
நான் வேற சந்தர்ப்பம் தெரியாமல் கேட்டுவிட்டேன் . தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 20 1757813334 தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 20 1757813334
பாவம் , முதுகு வலியோடு போட்டுளீர்களே ... எனக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது .

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 10, 2015 1:45 am

shobana sahas wrote:க்ரிஷ்ணாம்மா ... நீங்கள் கதையை எப்போது முடிப்பீர்கள் என்று காத்திருந்தேன் , பின்னூட்டம் போட.
கதை அருமை அம்மா . நீங்கள் சொல்லும் விதமே ஒரு தனி ஸ்டைல் .. குழந்தைகளுக்கு பிடித்தால் போல ....
நன்றி என்று ஒரு வார்த்தையில் சொல்ல மனம் வரவில்லை .... ரொம்ப நன்றிகள் க்ரிஷ்ணாம்மா ... வி பொ பா . அம்மா .
வாழ்த்துக்கள் கோடி உங்களுக்கு ...
நான் வேற சந்தர்ப்பம் தெரியாமல் கேட்டுவிட்டேன் . தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 20 1757813334 தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 20 1757813334
பாவம் , முதுகு வலியோடு போட்டுளீர்களே ... எனக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது .
மேற்கோள் செய்த பதிவு: 1161644

ச்சே...ச்சே....என்ன ஷோபனா இது.............. கூடாது கூடாது கூடாது இன்று வலி தேவலாம்........எனக்கு ரொம்ப நாளாய் வலிக்கலை, அது தான் இந்த முறை நானே தனியாய் பக்ஷணம் செய்தேன், அது ......ப்ரோப்ளேம் ஆ போச்சு...........நிறைய கூட பண்ணலை புன்னகை.....................
.
.
.
குழந்தை அந்த வீடியோ பார்த்தனா?.......பிடித்ததா அவனுக்கு? புன்னகை
.
.
.
மிக்க நன்றி ஷோபனா..............தவறாமல் பின்னுட்டம் போட்டு விடுகிறீர்கள் புன்னகை சூப்பருங்க அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 17, 2015 7:14 pm

அடுத்த கதை : குரங்கும் குல்லா வியாபாரியும் ! ......................இரவு அல்லது நாளை புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Thu Sep 17, 2015 10:05 pm

அம்மா கதை நன்றாக இருக்கிறது. என் வீட்டு நண்டு பொன்னியின் செல்வன் கதையை ஒன்று விடாமல் கேட்பான். வேறு கதை சொன்னால் காதை அடைத்து கொள்வான்.நீங்கள் சொன்னதாக இன்றைக்கு சொல்லி பார்கிறேன்.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Sponsored content

PostSponsored content



Page 20 of 46 Previous  1 ... 11 ... 19, 20, 21 ... 33 ... 46  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக