புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மதுவிலக்கு---கருணாநிதி?----தமிழருவி மணியன் Poll_c10மதுவிலக்கு---கருணாநிதி?----தமிழருவி மணியன் Poll_m10மதுவிலக்கு---கருணாநிதி?----தமிழருவி மணியன் Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
மதுவிலக்கு---கருணாநிதி?----தமிழருவி மணியன் Poll_c10மதுவிலக்கு---கருணாநிதி?----தமிழருவி மணியன் Poll_m10மதுவிலக்கு---கருணாநிதி?----தமிழருவி மணியன் Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
மதுவிலக்கு---கருணாநிதி?----தமிழருவி மணியன் Poll_c10மதுவிலக்கு---கருணாநிதி?----தமிழருவி மணியன் Poll_m10மதுவிலக்கு---கருணாநிதி?----தமிழருவி மணியன் Poll_c10 
11 Posts - 4%
prajai
மதுவிலக்கு---கருணாநிதி?----தமிழருவி மணியன் Poll_c10மதுவிலக்கு---கருணாநிதி?----தமிழருவி மணியன் Poll_m10மதுவிலக்கு---கருணாநிதி?----தமிழருவி மணியன் Poll_c10 
9 Posts - 4%
Jenila
மதுவிலக்கு---கருணாநிதி?----தமிழருவி மணியன் Poll_c10மதுவிலக்கு---கருணாநிதி?----தமிழருவி மணியன் Poll_m10மதுவிலக்கு---கருணாநிதி?----தமிழருவி மணியன் Poll_c10 
4 Posts - 2%
Rutu
மதுவிலக்கு---கருணாநிதி?----தமிழருவி மணியன் Poll_c10மதுவிலக்கு---கருணாநிதி?----தமிழருவி மணியன் Poll_m10மதுவிலக்கு---கருணாநிதி?----தமிழருவி மணியன் Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
மதுவிலக்கு---கருணாநிதி?----தமிழருவி மணியன் Poll_c10மதுவிலக்கு---கருணாநிதி?----தமிழருவி மணியன் Poll_m10மதுவிலக்கு---கருணாநிதி?----தமிழருவி மணியன் Poll_c10 
2 Posts - 1%
jairam
மதுவிலக்கு---கருணாநிதி?----தமிழருவி மணியன் Poll_c10மதுவிலக்கு---கருணாநிதி?----தமிழருவி மணியன் Poll_m10மதுவிலக்கு---கருணாநிதி?----தமிழருவி மணியன் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
மதுவிலக்கு---கருணாநிதி?----தமிழருவி மணியன் Poll_c10மதுவிலக்கு---கருணாநிதி?----தமிழருவி மணியன் Poll_m10மதுவிலக்கு---கருணாநிதி?----தமிழருவி மணியன் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
மதுவிலக்கு---கருணாநிதி?----தமிழருவி மணியன் Poll_c10மதுவிலக்கு---கருணாநிதி?----தமிழருவி மணியன் Poll_m10மதுவிலக்கு---கருணாநிதி?----தமிழருவி மணியன் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுவிலக்கு---கருணாநிதி?----தமிழருவி மணியன்


   
   

Page 1 of 2 1, 2  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jul 22, 2015 5:38 pm

மதுவிலக்குக் கொள்கையில் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டவரா கருணாநிதி? - தமிழருவி மணியன்

மதுவிலக்கு---கருணாநிதி?----தமிழருவி மணியன் PdbzZjYkR8Sa5Uhg9b4i+thamizharuvi_22959_2481170h

வாக்குறுதிகளை வழங்குவதும், பின்பு அவற்றிற்கு நேர்மாறாக நடப்பதும் கருணாநிதியின் கடந்த காலச் சரித்திரம் என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள் என்று காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''திமுக வரவிருக்கும் சட்டப் பேரவை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கு நடைமுறைப்படுத்தபடும் என்று கருணாநிதி அறிவித்திருக்கிறார்.

ஆட்சி நாற்காலியைக் கைப்பற்றுவதற்கு அனைத்து வழிகளிலும் முயற்சியை மேற்கொண்டிருக்கும் கருணாநிதி, மக்களை ஏமாற்றும் தேர்தல் உத்திகளுள் ஒன்றாகவே இந்த அறிவிப்பும் இருக்கக்கூடும்.

கொட்டும் மழையில் இராஜாஜி கோபாலாபுரத்து வீடு தேடி வந்து கண்கள் கலங்கியபடி, மதுவிலக்கை ரத்து செய்து ஒரு சமுதாயத்தையே சாராயத்தின் மூலம் சீரழித்துவிட வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தபோது செவி சாய்க்காதவருக்கு இன்று திடீர் ஞனோதயம் எப்படி வந்தது?

பூரண மதுவிலக்கை கருணாநிதி உண்மையில் நடைமுறைப்படுத்த விரும்பினால் நாட்டு மக்களுக்கு ஒரு விளக்கத்தைத் தர வேண்டும். தமிழக அரசின் ஆண்டு வருவாய் ஒரு லட்சத்து நாற்பத்தாராயிரம் கோடி ரூபாய். இதில் மானியம், இலவசம், அரசு ஊழியர் ஊதியம், ஓய்வூதியம், வாங்கிய 2 லட்சம் கோடிக்கும் மேற்பட்ட கடனுக்கு வட்டி ஆகிய செலவினங்களுக்கு ஒதுக்கப்படுவது 1.36 ஆயிரம் கோடி. வளர்ச்சித் திட்டங்களுக்கு எஞ்சுவது 6000 கோடி ரூபாய்க்கும் குறைவு.

இந்த நிலையில் டாஸ்மாக் வருவாய் 26000 கோடி ரூபாய் இழப்புக்குப் பின்பு அதை எந்த வகையில் ஈடு செய்து அரசின் நிதி நிலையை மேம்படுத்துவார் என்பதை அவர் முதலில் விரிவாக விளக்க வேண்டும்.

தன் ஆட்சிக் காலத்தில் மதுவிலக்குக் கொள்கையில் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டவர் இல்லை கருணாநிதி. இன்று பூரண மதுவிலக்கைக் கொண்டுவருவதாகச் சொல்லி ஆட்சியில் அமர்ந்த பின்பு கள்ளச் சாராயச் சாவுகளையும் நிதி நிலை நெருக்கடிகளையும் காரணங்களாகக் காட்டி மீண்டும் மதுக்கடைகளை திறக்க மாட்டார் என்பதற்கு என்ன உத்திரவாதம் ?

வாக்குறுதிகளை வழங்குவதும், பின்பு அவற்றிற்கு நேர்மாறாக நடப்பதும் கருணாநிதியின் கடந்த காலச் சரித்திரம் என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்'' என்று தமிழருவி மணியன் கூறியுள்ளார்.

நன்றி : தி ஹிந்து .



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jul 22, 2015 5:47 pm

எந்த கட்சி ஆச்சிக்கு வந்தாலும் பூரண மதுவிலக்கை அமல் படுத்தாது அனைத்துகட்சியுமே தேர்தல் உட்டாலக்கடி வாக்குறுதித்தான் தருகிறது என்று அனைவருக்குமே தெரியும்
balakarthik
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் balakarthik



ஈகரை தமிழ் களஞ்சியம் மதுவிலக்கு---கருணாநிதி?----தமிழருவி மணியன் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jul 22, 2015 5:48 pm

கொட்டும் மழையில் இராஜாஜி கோபாலாபுரத்து வீடு தேடி வந்து கண்கள் கலங்கியபடி, மதுவிலக்கை ரத்து செய்து ஒரு சமுதாயத்தையே சாராயத்தின் மூலம் சீரழித்துவிட வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தபோது செவி சாய்க்காதவருக்கு இன்று திடீர் ஞனோதயம் எப்படி வந்தது?

ஆம் , அந்த காலத்தில் பரவலாக பேசப்பட்ட விஷயம் .

மதுவிலக்கு தளர்த்தப்பட்ட சமயம்
அப்போது திருச்சியில் இருந்தேன் நான் .
மதியம் 3 மணி இருக்கும் , ஒரு பெண்மணி , 50 வயது இருக்கும் , தலையில் கூடை ,நடு ரோடில்,
நான் குடிச்சிட்டேன் ,நான் குடிச்சிட்டேன் என்று கூவிக்கொண்டும் பாடிக்கொண்டும் தள்ளாடிபடி
வந்து கொண்டு இருந்தார் .

அன்று ஆரம்பம் ஆன துயரத் தொடர் , மெகா சீரியல் போல் வளர்ந்து கொண்டே இருக்கிறது .

விதைத்தவர் ஒருவர் , வளர்த்தவர் ஒருவர் , அவதிப்படுபவர் ஆயிரம் ஆயிரம் குடும்பங்கள் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jul 22, 2015 5:52 pm

balakarthik wrote:எந்த கட்சி ஆச்சிக்கு வந்தாலும் பூரண மதுவிலக்கை அமல் படுத்தாது அனைத்துகட்சியுமே தேர்தல் உட்டாலக்கடி வாக்குறுதித்தான் தருகிறது என்று அனைவருக்குமே தெரியும்
மேற்கோள் செய்த பதிவு: 1152500

100% சரி .
பதவிக்கு வந்து விட்டால் ,அவ்வளவுதான் ,
யாராவது வாக்குறுதியானது என்னது என்று கேட்டால் ,
அவனது வா குருதியாவது நிச்சயம் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jul 22, 2015 5:59 pm

T.N.Balasubramanian wrote:விதைத்தவர் ஒருவர் , வளர்த்தவர் ஒருவர் , அவதிப்படுபவர் ஆயிரம் ஆயிரம் குடும்பங்கள் .

ரமணியன்


இவர் இதை மட்டுமல்ல இலவசம் கொடுப்பதையும் இவர் தான் விதைத்தார்



ஈகரை தமிழ் களஞ்சியம் மதுவிலக்கு---கருணாநிதி?----தமிழருவி மணியன் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Jul 22, 2015 6:15 pm

முதலில், " மதுவிலக்கை அமல்படுத்துவேன் "என்று இராமதாஸ் சொன்னபோது யாரும் அவரை பொருட்படுத்தவில்லை . "மரம்வெட்டி " என்று கேலி பேசினார்கள் .

இப்போது கலைஞர் " மதுவிலக்கை அமல்படுத்துவேன் " என்று சொன்னால், அதை யாரும் நம்பத் தயாராக இல்லை .

அம்மையார் இன்னும் வாயைத் திறக்கவில்லை .

அடுத்து ஆட்சிக்கு வருவதற்கு வாய்ப்புள்ள கட்சிகள் இரண்டே இரண்டுதான் . தி .மு .க . அல்லது அ .தி .மு .க . இந்த நிலையில் அம்மையார் " மதுவிலக்கை அமல்படுத்துவேன் " என்று சொன்னால்தான் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கமுடியும் . அவரை ஒரு இக்கட்டான நிலையில் கலைஞர் மாட்டிவிட்டுள்ளார் .எனவே அம்மையாரிடமிருந்து " நான் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்துவேன் "என்ற அறிவிப்பு சீக்கிரத்தில் வரலாம் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jul 22, 2015 6:24 pm

M.Jagadeesan wrote:அடுத்து ஆட்சிக்கு வருவதற்கு வாய்ப்புள்ள கட்சிகள் இரண்டே இரண்டுதான் . தி .மு .க . அல்லது அ .தி .மு .க . இந்த நிலையில் அம்மையார் " மதுவிலக்கை அமல்படுத்துவேன் " என்று சொன்னால்தான் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கமுடியும் . அவரை ஒரு இக்கட்டான நிலையில் கலைஞர் மாட்டிவிட்டுள்ளார் .எனவே அம்மையாரிடமிருந்து " நான் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்துவேன் "என்ற அறிவிப்பு சீக்கிரத்தில் வரலாம் .


மது பிரெச்சனை இப்பொழுது பெரிதாக உருவெடுத்துள்ளது நிஜம்த்தான் ஆனால் திமுக மீண்டும் வர வாய்ப்பு மிக மிக குறைவாகவே உள்ளது ADMK மீது மக்களுக்கு பெரிய கோபமில்லை ஜெயாவின் வழக்கு அந்த அளவுக்கு மக்களிடையே பாதிப்பை ஏற்படுத்தவில்லை

முழு மதுவிலக்கு சாத்தியமில்லை என்று மக்களுக்கும் தெரியும்
தடை செய்வதாக சொல்பவர்களும் செய்யமாட்டார்கள் என்பதும் மக்களுக்கு தெரியும் மேலும் இடைத்தேர்தலுக்கு முன் அம்மையார் மதுக்கடைகளின் நேரத்தை குறைப்பதாக கூறியிருந்தார் அந்த நேரத்தில் தேர்தல் வந்ததால் அது நடக்கவில்லை இப்பொழுது அதை செய்யலாம் அல்லது மதுக்கடைகளை குறைப்பதாக சொல்லலாம் மற்றபடி அம்மையார் முழு மதுவிலக்கை கொண்டுவருவதாக உறுதியாளிக்கமாட்டார்கள் என்றே தோன்றுகிறது



ஈகரை தமிழ் களஞ்சியம் மதுவிலக்கு---கருணாநிதி?----தமிழருவி மணியன் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jul 22, 2015 7:07 pm

[b]அன்புமணி கேள்விகள் ஸ்டாலின்னுக்கு[/b]

பலமுறை மீண்டும், மீண்டும் மதுவைத் திணித்து சீரழித்ததற்காக தமிழ்நாட்டு மக்களிடம் நீங்களும், அதிமுகவும் பாவமன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில் கூறுகையில், '' உங்கள் கட்சித் தலைமையின் கருத்தை வலுப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு, ‘‘சொன்னதை செய்யும் கழக அரசு முழு மதுவிலக்கையும் நடைமுறைப்படுத்தும்’’ என்ற தலைப்பில் ஓர் அறிக்கையை முகநூலில் பதிவு செய்திருக்கிறீர்கள்.

அதைப் படித்ததும் திமுகவின் முரண்பட்ட நிலைகள் தொடர்பாக என் மனதில் எழுந்த 10 வினாக்களை இக்கடிதத்தில் வரிசைப்படுத்தியிருக்கிறேன்.

இவை மக்கள் மனதிலும் எழுந்துள்ள வினாக்கள் என்பதால் இவற்றுக்கு நீங்கள் விடையளிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

1. தமிழ்நாட்டில் 4 வயது குழந்தை கூட மது குடிக்கும் அவல நிலை ஏற்பட்டதற்கு காரணம் யார்?

2. 1971 ஆம் ஆண்டில் ராஜாஜி கொட்டும் மழையில் கோபாலபுரம் இல்லத்திற்குச் சென்று, மதுவிலக்கை ரத்து செய்து விட வேண்டாம் என்று கேட்டுக் கொண்ட போதிலும், அதை பொருட்படுத்தாமல் 23 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த மதுவிலக்கை ரத்து செய்தவர் யார்?

3. மது மூலம் கிடைக்கும் வருவாய் என்பது புழுத்துப்போன தொழுநோயாளி கையில் உள்ள வெண்ணெயை வாங்குவதற்குச் சமம் என்று அண்ணா கூறினார். மது கூடவே கூடாது என்று பெரியார் கூறினார். ஆனால், பெரியார், அண்ணாவின் கொள்கைகள் தேவையில்லை... வருமானம் தான் முக்கியம் எனக் கருதி மதுக்கடைகளை திறந்தவர் யார்?

4. புதிய மது ஆலைகளுக்கு அனுமதி அளிப்பதில்லை என 30 ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வந்த விதியை தளர்த்தி தங்கள் கட்சியைச் சேர்ந்த இரு முன்னாள் மத்திய அமைச்சர்கள், வேண்டிய இருவர் உட்பட 5 பேருக்கு புதிய மது ஆலைகளை நடத்த அனுமதி வழங்கியது யார்?

5. மது விலக்கை ஏற்படுத்தும் சிந்தனை கருணாநிதிக்கு ஏற்கெனவே ஏற்பட்டுவிட்டதாக கூறியிருக்கிறீர்கள். அப்படியானால், தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று 22.12.2008 அன்று ராமதாஸூக்கு வாக்குறுதி அளித்த கருணாநிதி, அதன்பிறகு 30 மாதங்கள் ஆட்சியில் இருந்தும் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தாதது ஏன்? அப்போது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத கருணாநிதி இப்போது மட்டும் நிறைவேற்றுவார் என எப்படி நம்புவது?

6. 1996 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக ஆட்சிக்கு வந்தால் முழுமதுவிலக்கு மிகத் தீவிரமாக செயல்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்த கருணாநிதி அதன் பின்னர் 10 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்தும் அதை நிறைவேற்றாதது ஏன்? தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று 27.12.2008 அன்று நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், அதன்பின் இரண்டரை ஆண்டுகள் பதவியில் இருந்த உங்கள் அரசு அதை செயல்படுத்தாதது ஏன்? இப்படிப்பட்ட உங்களை எப்படி மக்கள் நம்புவார்கள்?

7. தமிழகத்தில் நடைமுறையில் இருந்த மதுவிலக்கை நீக்கி கடந்த 44 ஆண்டுகளாக மதுவைக் கொடுத்து இரு தலைமுறைகளை சீரழித்தது யார்?

8. காமராஜர் முதலமைச்சராக இருந்த போது 12,000 புதிய பள்ளிகளை திறந்து அனைத்து மாணவர்களையும் படிக்க வைத்தார். ஆனால், அவருக்குப் பின் 7,000 மதுக்கடைகளை திறந்து மக்களை குடிக்க வைத்தது யார்?

9. அதிமுக தான் டாஸ்மாக் மதுக்கடைகளை திறந்ததாகவும், அதனால் தான் 10 ஆயிரம் பேருக்கு ஒரு மதுக்கடை என்ற நிலை ஏற்பட்டதாகவும் குற்றம்சாட்டும் நீங்கள், உங்கள் ஆட்சியில் அந்த கடைகளை மூடாதது ஏன்?

10. மதுவின் மூலம் கிடைக்கும் வருவாய் முக்கியமல்ல, மக்கள் நலனே முக்கியம் என்று திடீரென அக்கறை காட்டுகிறீர்கள். 2006 ஆம் ஆண்டில் திமுக அரசு பதவியேற்ற போது ஆண்டுக்கு ரூ.6086 கோடியாக இருந்த மது வருவாயை 2011 ஆம் ஆண்டில் 150% அதிகரித்து ரூ.14,965 கோடியாக இலக்கு நிர்ணயித்து உயர்த்தினீர்களே.... இதனால் மக்கள் நலன் பாதிக்கப்படவில்லையா?

இந்த 10 கேள்விகளுக்கும் நீங்கள் விடை தருவீர்கள் என்று நம்புகிறேன். தமிழகத்தின் இன்றைய சீரழிவுக்குக் காரணம் உங்கள் கட்சியும், அதிமுகவும் தான். பெண்கள் மற்றும் குழந்தைகளும் மது அருந்தும் கலாச்சாரத்தை உருவாக்கிய உங்களையும், அதிமுகவையும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள். 44 ஆண்டுகளாக மதுவைக் கொடுத்து மக்களைக் கெடுத்த நீங்கள் இப்போது மது விலக்கு பற்றி பேசத் தொடங்கியிருப்பதற்குக் காரணம் கடந்த 30 ஆண்டுகளாக ராமதாஸ் மேற்கொண்ட மது எதிர்ப்பு மற்றும் மது ஒழிப்பு பணிகள் தான் என்பது எங்களுக்கு பெருமையளிக்கிறது.

மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதாக பலமுறை வாக்குறுதி அளித்த திமுக அத்தனை முறையும் வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஏமாற்றியிருக்கிறது. இப்போது தேர்தலை மனதில் கொண்டு மீண்டும் ஒருமுறை வாக்குறுதி அளித்து மக்களை ஏமாற்ற முயல்கிறீர்கள்.

பலமுறை மீண்டும், மீண்டும் மதுவை திணித்து சீரழித்ததற்காக தமிழ்நாட்டு மக்களிடம் நீங்களும், அதிமுகவும் பாவமன்னிப்பு கேட்க வேண்டும்'' என்று அன்புமணி கூறியுள்ளார்.

நன்றி :தி ஹிந்து

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jul 22, 2015 7:12 pm

கடந்த 30 ஆண்டுகளாக ராமதாஸ் மேற்கொண்ட மது எதிர்ப்பு மற்றும் மது ஒழிப்பு பணிகள் தான்

முதலில் இவர் கட்சி ஆளுங்களை குடிக்காமல் பார்த்துக்கொள்ளட்டும்



ஈகரை தமிழ் களஞ்சியம் மதுவிலக்கு---கருணாநிதி?----தமிழருவி மணியன் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jul 22, 2015 7:24 pm

மரங்களை வெட்டுதல் /சாலை மறியல் / தரமற்ற மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி அளித்தல்,
தானோ/ தன் குடும்பத்தினரோ அரசியல் /பதவிகளுக்கு வரமாட்டோம் என்பது ./தானே போய் கருணாநிதி குடும்பத்திற்கு கல்யாண பத்திரிகை வைப்பது --அரசியல் நாகரீகம் என்பது
அதே அவர் கட்சியின் மணி ,கருணாநிதியை கண்டு தன் வீட்டு கல்யாணப் பத்திரிகை கொடுத்தால் காச்ச்மூச்ச் .
இவர்களை எல்லாம் அரசியல் xxxxxxxxx என்றே கூறவேண்டும்

ரமணியன்





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக