ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் இலக்கணம்

+8
கவியரசன்(கவிச்சுடர்)
krishnaamma
balakarthik
shobana sahas
மாணிக்கம் நடேசன்
ayyasamy ram
T.N.Balasubramanian
M.Jagadeesan
12 posters

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

தமிழ் இலக்கணம்  - Page 5 Empty தமிழ் இலக்கணம்

Post by M.Jagadeesan Mon Jul 20, 2015 9:50 am

First topic message reminder :


தமிழாசிரியர் வகுப்பினுள் நுழைந்தார். மாணவர்கள் அனைவரும் எழுந்து நின்று ,"வணக்கம் அய்யா! " என்றனர்.

" மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம். அமருங்கள். இன்று என்ன பாடம்?"

" இலக்கணம் அய்யா! "

" நல்லது. எல்லோரும் இலக்கணப் புத்தகம் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்."

அப்பொழுது சரவணன் என்ற மாணவன் எழுந்து " அய்யா! பள்ளிக்கு வரும் வழியில் ஒரு கடையில் " இங்கு சிமெண்ட் விற்க்கப்படும்" என்று எழுதியிருந்தது. அது சரியா அய்யா?" என்று கேட்டான்.

ஆசிரியர் சரவணனை, அவன் சொன்னதைக் கரும்பலகையில் எழுதிக்காட்டுமாறு கேட்டுக்கொண்டார். சரவணனும் ," இங்கு சிமெண்ட் விற்க்கப்படும் " என்று எழுதினான்.

உடனே தமிழாசிரியர், " விற்கப்படும் " என்று எழுதுவதே சரி. " விற்க்கப்படும் " என்று எழுதுவது தவறு. வல்லெழுத்து " ற் " க்குப் பக்கத்தில் ஒற்றெழுத்து வருதல் கூடாது. உங்கள் நினைவுக்காக ஒரு குறிப்புத் தருகிறேன்.அதாவது "ய், ர், ழ் " ஆகிய மூன்று எழுத்துக்களுக்குப் பக்கத்தில்தான் ஒற்று எழுத்து வருதல் வேண்டும்.உதாரணமாக " நாய்க்குட்டி, நீர்க்குமிழி, தமிழ்த்தாய் " என்று எழுதுவதுதான் சரி. பிற ஒற்று எழுத்துக்களுக்குப் பக்கத்தில் ஒற்று எழுத்து வருவது பிழை."

" ஐயா! அப்படியானால் " கேப்டன் விஜயகாந்த் " என்று எழுதுவது பிழையா?" என்று சரவணன் கேட்டான்.

" உறுதியாகச் சொல்வேன்; அவ்வாறு எழுதக்கூடாது. " கேப்டன் விஜயகாந்து " என்றுதான் எழுதவேண்டும். சிலர் டீக்கடைக்குச் சென்று "ஒரு ஸ்ட்ராங்க் டீ போடப்பா! என்று கேட்பார்கள். சிலர் "பேங்க்" என்று எழுதுவார்கள்.ஆங்கில வார்த்தைகளை அப்படியே தமிழில் எழுதுவதால்தான் இதுபோன்ற குழப்பங்கள் வருகின்றன. "பேங்க் "என்ற வார்த்தைக்குப் பதிலாக " வங்கி " என்ற வார்த்தையைப் பயன்படுத்தலாமே! "ஸ்ட்ராங்க் டீ " என்பதற்குப் பதிலாக " கெட்டியான டீ " என்று சொல்லலாமே! " என்று ஆசிரியர் சொன்னார்.
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down


தமிழ் இலக்கணம்  - Page 5 Empty Re: தமிழ் இலக்கணம்

Post by ayyasamy ram Sat Jul 25, 2015 7:50 am

மதிப்புக்குரிய பெரியவர்கள் யாருக்காவது எழுதும்போது,
'மகா ராராஸ்ரீ' என அடைமொழி
கொடுத்து எழுதுவதும் அந்தக்கால பழக்கம்..!!
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தமிழ் இலக்கணம்  - Page 5 Empty Re: தமிழ் இலக்கணம்

Post by M.Jagadeesan Sat Jul 25, 2015 8:08 am

shobana sahas wrote:ஜெகதீசன் அய்யா ரொம்ப நன்றி .. தினமும் எங்களுக்கு பாடம் நடத்துங்கள் .பயன் பெறுகிறோம் . தமிழ் இலக்கணம்  - Page 5 1571444738 தமிழ் இலக்கணம்  - Page 5 1571444738
மேற்கோள் செய்த பதிவு: 1153212

எல்லோரும் படித்து பயன்பெற வேண்டுமானால் , வாரம் ஒருமுறை நடத்துவதுதான் நல்லது .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

தமிழ் இலக்கணம்  - Page 5 Empty Re: தமிழ் இலக்கணம்

Post by M.Jagadeesan Tue Aug 04, 2015 5:15 pm

தமிழாசிரியர் வகுப்பறைக்குள் நுழைந்தார்.

மாணவர்கள் அனைவரும் எழுந்துநின்று ," வணக்கம் ஐயா ! " என்றனர் .

" அமருங்கள் ! சென்ற வகுப்பில் வல்லெழுத்து மிகும் இடங்களைப் பார்த்தோம். இந்த வகுப்பில் வல்லெழுத்து மிகா இடங்களைப் பற்றிப் பார்ப்போம் . தொலைக்காட்சிப்பெட்டிக்கு வேறொரு பெயர் என்ன தெரியுமா ? "

உடனே ஜேம்ஸ் என்ற மாணவன் எழுந்து ," சின்னத்திரை "ஐயா !

"எங்கே கரும்பலகையில் வந்து எழுது பார்ப்போம் ."

ஜேம்ஸ் கரும்பலகையில் ," சின்னத்திரை " என்று எழுதினான் .

உடனே ஆசிரியர், "இதை  இதைத்தான் நான் எதிர் பார்த்தேன் .இவ்வாறு ஒற்று சேர்த்து எழுதக் கூடாது . " சின்ன திரை " என்றுதான் எழுதவேண்டும் .ஆங்கிலத்தில் ' Small Screen " என்று பொருள்படும் . " சின்னத்திரை " என்றால் " சின்னம் தாங்கிய திரை " அதாவது " Screen with a Symbol " என்று பொருள்படும் . இதேபோல " சின்னத்தம்பி " என்று சொல்லக் கூடாது ." சின்ன தம்பி " என்றுதான் சொல்லவேண்டும் .

" சின்னதம்பி " பிரபு நடிச்ச படம் சார் !

" தெரியும் ! வேறு ஏதாவது எடுத்துக் காட்டு தரமுடியுமா ?"

" பெரிய தம்பி " ஐயா !

" மிகவும் நன்று "


' சரி, இனி  வல்லெழுத்து மிகா இடங்களைப் பற்றிப் பார்ப்போம் .

1. அது, இது, எது  முன் மிகாது.
(எ-டு) அது பெரிது, இது சிறிது, எது பெரிது?

2. அவை, இவை, எவை  முன் மிகாது.
(எ-டு) அவை சென்றன, இவை கண்டன, எவை தின்றன?

3. அவ்வாறு, இவ்வாறு, எவ்வாறு?
(எ-டு) அவ்வாறு சொன்னார், இவ்வாறு செப்பினார், எவ்வாறு கண்டார்?

4. பல, சில முன் மிகாது.
(எ-டு) பல சொற்கள், சில பதர்கள், பல தடைகள், சில கனவுகள்.

5 . உகர ஈற்று  வினையெச்சங்கள் முன் மிகாது.
(எ-டு) வந்து சென்றான், நின்று கண்டான்.

6 . பெயரெச்சம் முன் மிகாது.
(எ-டு) ஓடாத குதிரை, வந்த பையன், பறந்த புறா

குறிப்பு:- ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் முன் மிகும்.
(எ-டு) ஓடாக் குதிரை, பாடாத் தேனீ

7. என்று, வந்து, கண்டு முன் மிகாது.
(எ-டு) என்று சொன்னார், வந்து சென்றார், கண்டு பேசினார்.

8 . அத்தனை , இத்தனை , எத்தனை ஆகிய சொற்களுக்கு முன் வலி மிகாது .

" எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே "  அப்பிடின்னு ஒரு சினிமா பாட்டு இருக்கு சார் !

" தெரியும் ! " மலைக்கள்ளன் " என்ற படத்திலே வருகிற பாட்டு அது .  

9 . அடுத்து அவ்வாறு , இவ்வாறு , எவ்வாறு , அவ்வளவு , இவ்வளவு , எவ்வளவு என்ற சொற்களுக்கு முன் வல்லின எழுத்துக்கள் வந்தால் ஒற்று மிகாது .

கூட்டத்திற்கு எவ்வளவு பேர் வந்தார்கள் ? - இது சரி .
கூட்டத்திற்கு எவ்வளவுப்பேர் வந்தார்கள் ? - இது தவறு .

10 . அடுத்து அடுக்குத் தொடரில் வலி மிகாது .

பாம்பு ! பாம்பு ! என்பது அடுக்குத் தொடர் . இதை
பாம்புப் பாம்பு ! என்று சொல்லக்கூடாது .

11 . அடுத்து இரட்டைக்கிளவியில் வலி மிகாது .

அவள் கல கலவென்று சிரித்தாள் .

நீர் சலசலவென்று  ஓடியது .

இங்கெல்லாம் வலி மிகாது . அதாவது

அவள் கலக்கலவென்று சிரித்தாள் .

நீர் சலச்சலவென்று ஓடியது . என்று எழுதக் கூடாது .

அப்பொழுது சரவணன் எழுந்து , " ஐயா ! அடுக்குத் தொடருக்கும், இரட்டைக் கிளவிக்கும் என்ன வேறுபாடு ? "

அடுக்குத் தொடரைப் பிரித்தாலும்   பொருள்தரும் ஆனால் இரட்டைக் கிளவியைப் பிரித்தால் பொருள் தராது . சரி நாம் பாடத்துக்கு வருவோம் .

12 . இரு வடமொழிச் சொற்கள் சேர்ந்துவரும் தொடரில் வலி மிகாது .

ஆதி + பகவன் = ஆதிபகவன் .
தேச + பக்தி = தேசபக்தி .

" ஐயா ! ஆதிபகவன் என்றசொல் திருக்குறளில் வருவதல்லவா ! அப்படியானால் திருக்குறளில் வடமொழிச் சொற்கள் உள்ளனவா ?"

திருக்குறளில் ஏறத்தாழ 50 வடமொழிச் சொற்கள் இருப்பதாக ஆய்வாளர்கள் கணக்கிட்டுள்ளனர் .

13 . அன்று , இன்று , என்று ஆகிய சொற்களுக்கு முன் வலிமிகாது .

" இன்றுபோய் நாளை வா " என்று இராமன் , இராவணனிடம் சொன்னான் . இதை

" இன்றுப்போய் நாளை வா " என்று எழுதக் கூடாது .

14 . வினைத்தொகையில் வலி மிகாது .

" ஐயா ! வினைத்தொகையை எவ்வாறு கண்டறிவது ?"

இறந்தகாலம் , நிகழ்காலம் ,எதிர்காலம் ஆகிய மூன்று காலங்களும் இரு சொற்களுக்கு இடையில் மறைந்து நின்றால் அவை வினைத்தொகையாகும் . வினைத்தொகையில் இரு சொற்களே இருக்கும். முதலில் இருக்கும்சொல் வினைச்சொல்லாக இருக்கும் . இரண்டாவதாக வரும் சொல் பெயர்ச் சொல்லாக இருக்கும்.

சுடுசோறு , ஊறுகாய் என்பன வினைத்தொகைகள் . இவற்றை

சுடுச்சோறு, ஊறுக்காய் என்று எழுதக் கூடாது .

15 . அடுத்து  உம்மைத் தொகையில் வலி மிகாது .

பால் பழம் . இதைப் பாலும் பழமும் என்று விரிக்கலாம் .

இதைப் " பால்ப்பழம் " என்று எழுதுவது தவறு .

சேரசோழ பாண்டியர் என்பது உம்மைத்தொகை . இங்கெல்லாம் ஒற்று சேர்த்து எழுதக் கூடாது .

சரி மாணவர்களே ! மணி அடித்துவிட்டது . அடுத்த வகுப்பில் மற்றவற்றைப் பார்ப்போம் .  நடத்திய பாடங்களை மீண்டும் படித்துப் பார்க்கவும் . நன்றி !

" நன்றி ஐயா ! "
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

தமிழ் இலக்கணம்  - Page 5 Empty Re: தமிழ் இலக்கணம்

Post by T.N.Balasubramanian Tue Aug 04, 2015 5:33 pm

" ஐயா ! அடுக்குத் தொடருக்கும், இரட்டைக் கிளவிக்கும் என்ன வேறுபாடு ? "

அடுக்குத் தொடரைப் பிரித்தாலும்   பொருள்தரும் ஆனால் இரட்டைக் கிளவியைப் பிரித்தால் பொருள் தராது .


12 . இரு வடமொழிச் சொற்கள் சேர்ந்துவரும் தொடரில் வலி மிகாது .

ஆதி + பகவன் = ஆதிபகவன் .
தேச + பக்தி = தேசபக்தி .

" ஐயா ! ஆதிபகவன் என்றசொல் திருக்குறளில் வருவதல்லவா ! அப்படியானால் திருக்குறளில் வடமொழிச் சொற்கள் உள்ளனவா ?"

திருக்குறளில் ஏறத்தாழ 50 வடமொழிச் சொற்கள் இருப்பதாக ஆய்வாளர்கள் கணக்கிட்டுள்ளனர் .


நன்றி அய்யா !
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தமிழ் இலக்கணம்  - Page 5 Empty Re: தமிழ் இலக்கணம்

Post by விமந்தனி Wed Aug 05, 2015 12:27 am

அப்பொழுது சரவணன் எழுந்து , " ஐயா ! அடுக்குத் தொடருக்கும், இரட்டைக் கிளவிக்கும் என்ன வேறுபாடு ? "

அடுக்குத் தொடரைப் பிரித்தாலும் பொருள்தரும் ஆனால் இரட்டைக் கிளவியைப் பிரித்தால் பொருள் தராது .
வகுப்பில் படித்தது. மறுபடியும் நினைவிலேற்றிகொள்ளக்கூடிய விளக்கம். நன்றி ஐயா.


குறிப்பு: வாரம் ஒரு முறை பாடம் நடத்துவது போல், மாதம் ஒருமுறை நடத்திய பாடத்தில் இருந்து ஒரு சின்ன தேர்வு வையுங்களேன் ஐயா. அய்யோ, நான் இல்லை


தமிழ் இலக்கணம்  - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதமிழ் இலக்கணம்  - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தமிழ் இலக்கணம்  - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

தமிழ் இலக்கணம்  - Page 5 Empty Re: தமிழ் இலக்கணம்

Post by krishnaamma Wed Aug 05, 2015 12:34 am

நன்றி ஐயா புன்னகை நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தமிழ் இலக்கணம்  - Page 5 Empty Re: தமிழ் இலக்கணம்

Post by krishnaamma Wed Aug 05, 2015 12:39 am

ayyasamy ram wrote:மதிப்புக்குரிய பெரியவர்கள் யாருக்காவது எழுதும்போது,
'மகா ராராஸ்ரீ' என அடைமொழி
கொடுத்து எழுதுவதும் அந்தக்கால பழக்கம்..!!
-

மஹா ராஜ ராஜ ஸ்ரீ என்று பொருள் வருமா ராம் அண்ணா? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தமிழ் இலக்கணம்  - Page 5 Empty Re: தமிழ் இலக்கணம்

Post by ayyasamy ram Wed Aug 05, 2015 7:24 am

krishnaamma wrote:
ayyasamy ram wrote:மதிப்புக்குரிய பெரியவர்கள் யாருக்காவது எழுதும்போது,
'மகா ராராஸ்ரீ' என அடைமொழி
கொடுத்து எழுதுவதும் அந்தக்கால பழக்கம்..!!
-

மஹா ராஜ ராஜ ஸ்ரீ என்று பொருள் வருமா ராம் அண்ணா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1155514
-
ஆமாம்....
-
நாங்கள் சிறு வயதில் அதைக் கிண்டல்
செய்வோம்....
-
மகா ராராஸ்ரீ' மண்டையிலே பிளாஸ்திரி-

என்று
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தமிழ் இலக்கணம்  - Page 5 Empty Re: தமிழ் இலக்கணம்

Post by T.N.Balasubramanian Wed Aug 05, 2015 7:28 am

vimandhani wrote:குறிப்பு: வாரம் ஒரு முறை பாடம் நடத்துவது போல், மாதம் ஒருமுறை நடத்திய பாடத்தில் இருந்து ஒரு சின்ன தேர்வு வையுங்களேன் ஐயா. அய்யோ, நான் இல்லை

அய்யோ, நான் இல்லை ,,,,,,,,,,,, கன்னத்தில் அறை ........ அய்யோ, நான் இல்லை .........மண்டையில் அடி ....... அய்யோ, நான் இல்லை ......சுட்டுத்தள்ளூ! .... சோகம்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தமிழ் இலக்கணம்  - Page 5 Empty Re: தமிழ் இலக்கணம்

Post by விமந்தனி Wed Aug 05, 2015 12:50 pm

T.N.Balasubramanian wrote:
vimandhani wrote:குறிப்பு: வாரம் ஒரு முறை பாடம் நடத்துவது போல், மாதம் ஒருமுறை நடத்திய பாடத்தில் இருந்து ஒரு சின்ன தேர்வு வையுங்களேன் ஐயா. அய்யோ, நான் இல்லை

அய்யோ, நான் இல்லை ,,,,,,,,,,,, கன்னத்தில் அறை ........ அய்யோ, நான் இல்லை .........மண்டையில் அடி ....... அய்யோ, நான் இல்லை ......சுட்டுத்தள்ளூ! .... சோகம்

ரமணியன்

அதிர்ச்சிஅதிர்ச்சி என்ன ஐயாவுக்கு இவ்வளவு கோவம் வருகிறது....சோகம்  துப்பாக்கி எடுத்து சுடற அளவுக்கு...??????

அப்படி என்ன தப்பா சொல்லிட்டேன்.... அழுகை அழுகை


தமிழ் இலக்கணம்  - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதமிழ் இலக்கணம்  - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தமிழ் இலக்கணம்  - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

தமிழ் இலக்கணம்  - Page 5 Empty Re: தமிழ் இலக்கணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum