Latest topics
» கருத்துப்படம் 02/10/2024by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ் இலக்கணம்
+8
கவியரசன்(கவிச்சுடர்)
krishnaamma
balakarthik
shobana sahas
மாணிக்கம் நடேசன்
ayyasamy ram
T.N.Balasubramanian
M.Jagadeesan
12 posters
Page 1 of 6
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
தமிழ் இலக்கணம்
தமிழாசிரியர் வகுப்பினுள் நுழைந்தார். மாணவர்கள் அனைவரும் எழுந்து நின்று ,"வணக்கம் அய்யா! " என்றனர்.
" மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம். அமருங்கள். இன்று என்ன பாடம்?"
" இலக்கணம் அய்யா! "
" நல்லது. எல்லோரும் இலக்கணப் புத்தகம் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்."
அப்பொழுது சரவணன் என்ற மாணவன் எழுந்து " அய்யா! பள்ளிக்கு வரும் வழியில் ஒரு கடையில் " இங்கு சிமெண்ட் விற்க்கப்படும்" என்று எழுதியிருந்தது. அது சரியா அய்யா?" என்று கேட்டான்.
ஆசிரியர் சரவணனை, அவன் சொன்னதைக் கரும்பலகையில் எழுதிக்காட்டுமாறு கேட்டுக்கொண்டார். சரவணனும் ," இங்கு சிமெண்ட் விற்க்கப்படும் " என்று எழுதினான்.
உடனே தமிழாசிரியர், " விற்கப்படும் " என்று எழுதுவதே சரி. " விற்க்கப்படும் " என்று எழுதுவது தவறு. வல்லெழுத்து " ற் " க்குப் பக்கத்தில் ஒற்றெழுத்து வருதல் கூடாது. உங்கள் நினைவுக்காக ஒரு குறிப்புத் தருகிறேன்.அதாவது "ய், ர், ழ் " ஆகிய மூன்று எழுத்துக்களுக்குப் பக்கத்தில்தான் ஒற்று எழுத்து வருதல் வேண்டும்.உதாரணமாக " நாய்க்குட்டி, நீர்க்குமிழி, தமிழ்த்தாய் " என்று எழுதுவதுதான் சரி. பிற ஒற்று எழுத்துக்களுக்குப் பக்கத்தில் ஒற்று எழுத்து வருவது பிழை."
" ஐயா! அப்படியானால் " கேப்டன் விஜயகாந்த் " என்று எழுதுவது பிழையா?" என்று சரவணன் கேட்டான்.
" உறுதியாகச் சொல்வேன்; அவ்வாறு எழுதக்கூடாது. " கேப்டன் விஜயகாந்து " என்றுதான் எழுதவேண்டும். சிலர் டீக்கடைக்குச் சென்று "ஒரு ஸ்ட்ராங்க் டீ போடப்பா! என்று கேட்பார்கள். சிலர் "பேங்க்" என்று எழுதுவார்கள்.ஆங்கில வார்த்தைகளை அப்படியே தமிழில் எழுதுவதால்தான் இதுபோன்ற குழப்பங்கள் வருகின்றன. "பேங்க் "என்ற வார்த்தைக்குப் பதிலாக " வங்கி " என்ற வார்த்தையைப் பயன்படுத்தலாமே! "ஸ்ட்ராங்க் டீ " என்பதற்குப் பதிலாக " கெட்டியான டீ " என்று சொல்லலாமே! " என்று ஆசிரியர் சொன்னார்.
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: தமிழ் இலக்கணம்
எல்லோரும் அறிய வேண்டிய / ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டிய
பெரும் அளவில் உதவக்கூடிய தமிழ் இலக்கண சிறு குறிப்பு .
நன்றி ,Jagadeesan அவர்களே .
ரமணியன்
பிகு : கவிதை களஞ்சியம் பகுதியில் இருந்து ,தகவல் களஞ்சியம் /பொது அறிவுக்கு
மாற்றப்பட்டுள்ளது .
ர...ன்
பெரும் அளவில் உதவக்கூடிய தமிழ் இலக்கண சிறு குறிப்பு .
நன்றி ,Jagadeesan அவர்களே .
ரமணியன்
பிகு : கவிதை களஞ்சியம் பகுதியில் இருந்து ,தகவல் களஞ்சியம் /பொது அறிவுக்கு
மாற்றப்பட்டுள்ளது .
ர...ன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: தமிழ் இலக்கணம்
தொடர்ச்சியாக எழுதலாம் என்று எண்ணியுள்ளேன் ! இரமனியன் மற்றும் அய்யாசாமி ராம் அவர்கள் கொடுத்த ஊக்கத்திற்கு நன்றி !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: தமிழ் இலக்கணம்
நல்ல முயற்சி, தொடருங்கள் ஐயா.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: தமிழ் இலக்கணம்
எங்கள் தமிழ் மேன்மையுற ஆக்கம் தருவது தாங்கள் எனில் ,
ஊக்கம் தருவதாவது நாங்களாக இருக்கலாம் அல்லவா ?
தொடருங்கள் jagadeesan
ரமணியன்
ஊக்கம் தருவதாவது நாங்களாக இருக்கலாம் அல்லவா ?
தொடருங்கள் jagadeesan
ரமணியன்
Last edited by T.N.Balasubramanian on Mon Jul 20, 2015 1:53 pm; edited 1 time in total (Reason for editing : spelling)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: தமிழ் இலக்கணம்
மேற்கோள் செய்த பதிவு: 1151719T.N.Balasubramanian wrote:எங்கள் தமிழ் மேன்மையுற ஆக்கம் தருவது தாங்கள் எனில் ,
ஊக்கம் தருவதாவது நாங்களாக இருக்கலாம் அல்லவா ?
தொடருங்கள் jagadeesan
ரமணியன்
அருமையாக சொன்னீர்கள் ரமணி அய்யா ...ரமணீயன் அய்யா .
தொடர்ந்து எழுதுங்கள் ஜெகதீசன் அய்யா .. எனக்கு படிக்க தான் தெரியும். உங்களை மாதிரி எழுத தெரியாது . உங்களை நாங்கள் ஊகபடுதுகிறோம் . அதனால் பலன் எல்லாருக்கும் .
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: தமிழ் இலக்கணம்
shobana sahas wrote:தொடர்ந்து எழுதுங்கள் ஜெகதீசன் அய்யா .. எனக்கு படிக்க தான் தெரியும். உங்களை மாதிரி எழுத தெரியாது . உங்களை நாங்கள் ஊகபடுதுகிறோம் . அதனால் பலன் எல்லாருக்கும் .
நீங்க எழுதிருக்கறதை பார்த்தாலே தெரியுது
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: தமிழ் இலக்கணம்
அருமை யான திரி ஜகதீசன் ஐயா..தொடருங்கள்................உங்களை தொடரக்காத்திருக்கோம்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தமிழ் இலக்கணம்
"ய், ர், ழ் " ஆகிய எழுத்துகளுக்கு அடுத்து மட்டுமே ஒற்றெழுத்துக்கள் வரவேண்டும் என்று பார்த்தோம் .இப்பொழுது சில எடுத்துக் காட்டுகளைப் பார்ப்போமா !
"ய்," அடுத்து வருகின்ற ஒற்றெழுத்துகள்
--------------------------------------------------------------------------
புலிபோலப் பாய்ந்தான் .
தாய்ப்பாசம்
நாய்க்குட்டி
பாலைக் காய்ச்சினாள்
ஆய்ச்சியர் குரவை
வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டான்
"ர் " அடுத்து வருகின்ற ஒற்றெழுத்துக்கள்
----------------------------------------------------------------------------
பார்த்த ஞாபகம் இல்லையோ ?
கூர்ந்து நோக்கினான்
மோர்க்குழம்பு
வேர்க்கடலை
" ழ் " அடுத்து வருகின்ற ஒற்றெழுத்துக்கள்
----------------------------------------------------------------------------
வாழ்க்கை
வாழ்ந்து கெட்டவன்
கீழ்ப்பாக்கம்
யாழ்ப்பாணம்
வாழ்த்தினான்
சரி மாணவர்களே ! இப்பொழுது ஒரு கேள்வி . தெரிந்தவர்கள் பதில் சொல்லலாம் .
பாய் கடை ஆனால் பாய்க் கடை .
இதன் பொருள் என்ன ? சாகுல் ஹமீது நீ சொல் பார்க்கலாம் .
" ஐயா ! முஸ்லிம் மக்களை " பாய் " என்று கூப்பிடுவார்கள் .எனவே பாய் கடை என்றால் முஸ்லிம் ஒருவர் நடத்துகின்ற கடை என்று பொருள் . பாய்க்கடை என்றால் படுக்கின்ற பாய்களை விற்கின்ற கடை என்று சொல்லாம் .
அருமையான விளக்கம் என்று சொல்லி சாகுல் ஹாமீதைத் தட்டிக் கொடுத்தார் ஆசிரியர் .
மாணவர்களே ! இதிலிருந்து நமக்கு என்ன தெரிகிறது ? இரு சொற்களுக்கு இடையே ஒற்று மிகுந்தால் ஒரு பொருளும் ,, ஒற்று மிகவில்லைஎன்றால் வேறொரு பொருளும் கிடைக்கும் என்பது தெரிகிறது . எனவே தமிழ் மொழியில் நாம் எழுதும்போது மிகவும்
எச்சரிக்கையாக இருக்கவேண்டும் . ஒற்று போடக்கூடாத இடத்தில் போட்டாலும் , போடவேண்டிய இடத்தில் போடாமல் விட்டாலும் பொருட் குற்றம் உண்டாகும் .
செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும் . ( தெரிந்து செயல்வகை-406 )
என்ற குறளின் பொருள் இதற்கும் பொருந்தும்
மேலும் சில எடுத்துக் காட்டுகளைப் பார்ப்போம் .
மருந்து கடை - மருந்தைக் கடை ( கடைதல் - தொழிற்பெயர் )
மருந்துக் கடை - மருந்தை விற்கும் கடை
வேலை தேடு - ஒரு வேலையை தேடு
வேலைத் தேடு - வேல் என்ற ஆயுதத்தைத் தேடு
நடுகல் - செத்தார்க்கு நடப்படுகின்ற கல்
நடுக்கல் - நடுவில் உள்ள கல்
சாகாடு - வண்டி
சாக்காடு - சாவு
கைமாறு - ஒரு கையிலிருந்து மற்றொரு கைக்கு மாற்றுவது .
கைம்மாறு - நன்றிக்கடன்
பொய் சொல் - பொய் சொல்வாயாக ! ( ஏவல் )
பொய்ச்சொல் - பொய்யான சொல்
ஆசிரியர் : மீண்டும் நாளை பார்ப்போம் .
மாணவர்கள் : நன்றி ஐயா !
"ய்," அடுத்து வருகின்ற ஒற்றெழுத்துகள்
--------------------------------------------------------------------------
புலிபோலப் பாய்ந்தான் .
தாய்ப்பாசம்
நாய்க்குட்டி
பாலைக் காய்ச்சினாள்
ஆய்ச்சியர் குரவை
வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டான்
"ர் " அடுத்து வருகின்ற ஒற்றெழுத்துக்கள்
----------------------------------------------------------------------------
பார்த்த ஞாபகம் இல்லையோ ?
கூர்ந்து நோக்கினான்
மோர்க்குழம்பு
வேர்க்கடலை
" ழ் " அடுத்து வருகின்ற ஒற்றெழுத்துக்கள்
----------------------------------------------------------------------------
வாழ்க்கை
வாழ்ந்து கெட்டவன்
கீழ்ப்பாக்கம்
யாழ்ப்பாணம்
வாழ்த்தினான்
சரி மாணவர்களே ! இப்பொழுது ஒரு கேள்வி . தெரிந்தவர்கள் பதில் சொல்லலாம் .
பாய் கடை ஆனால் பாய்க் கடை .
இதன் பொருள் என்ன ? சாகுல் ஹமீது நீ சொல் பார்க்கலாம் .
" ஐயா ! முஸ்லிம் மக்களை " பாய் " என்று கூப்பிடுவார்கள் .எனவே பாய் கடை என்றால் முஸ்லிம் ஒருவர் நடத்துகின்ற கடை என்று பொருள் . பாய்க்கடை என்றால் படுக்கின்ற பாய்களை விற்கின்ற கடை என்று சொல்லாம் .
அருமையான விளக்கம் என்று சொல்லி சாகுல் ஹாமீதைத் தட்டிக் கொடுத்தார் ஆசிரியர் .
மாணவர்களே ! இதிலிருந்து நமக்கு என்ன தெரிகிறது ? இரு சொற்களுக்கு இடையே ஒற்று மிகுந்தால் ஒரு பொருளும் ,, ஒற்று மிகவில்லைஎன்றால் வேறொரு பொருளும் கிடைக்கும் என்பது தெரிகிறது . எனவே தமிழ் மொழியில் நாம் எழுதும்போது மிகவும்
எச்சரிக்கையாக இருக்கவேண்டும் . ஒற்று போடக்கூடாத இடத்தில் போட்டாலும் , போடவேண்டிய இடத்தில் போடாமல் விட்டாலும் பொருட் குற்றம் உண்டாகும் .
செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும் . ( தெரிந்து செயல்வகை-406 )
என்ற குறளின் பொருள் இதற்கும் பொருந்தும்
மேலும் சில எடுத்துக் காட்டுகளைப் பார்ப்போம் .
மருந்து கடை - மருந்தைக் கடை ( கடைதல் - தொழிற்பெயர் )
மருந்துக் கடை - மருந்தை விற்கும் கடை
வேலை தேடு - ஒரு வேலையை தேடு
வேலைத் தேடு - வேல் என்ற ஆயுதத்தைத் தேடு
நடுகல் - செத்தார்க்கு நடப்படுகின்ற கல்
நடுக்கல் - நடுவில் உள்ள கல்
சாகாடு - வண்டி
சாக்காடு - சாவு
கைமாறு - ஒரு கையிலிருந்து மற்றொரு கைக்கு மாற்றுவது .
கைம்மாறு - நன்றிக்கடன்
பொய் சொல் - பொய் சொல்வாயாக ! ( ஏவல் )
பொய்ச்சொல் - பொய்யான சொல்
ஆசிரியர் : மீண்டும் நாளை பார்ப்போம் .
மாணவர்கள் : நன்றி ஐயா !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» தமிழ் இலக்கணம்
» தமிழ் இலக்கணம் - அசைகள்
» தமிழ் இலக்கணம் கற்க...........
» கூடைமேலே கூடை வைச்சு ,,,,,,,,,,தமிழ் இலக்கணம்
» வேலன்:-ஆங்கில இலக்கணம் தமிழ் மூலம் அறிந்துகொள்ள
» தமிழ் இலக்கணம் - அசைகள்
» தமிழ் இலக்கணம் கற்க...........
» கூடைமேலே கூடை வைச்சு ,,,,,,,,,,தமிழ் இலக்கணம்
» வேலன்:-ஆங்கில இலக்கணம் தமிழ் மூலம் அறிந்துகொள்ள
Page 1 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|