புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
சிவா |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
உயிரற்ற ஆட்டக்களத்தில் வெளுத்துக் கட்டும் சூரர்களா ஆஸ்திரேலிய பேட்ஸ்மென்கள்?
Page 1 of 1 •
- kumaravel2011புதியவர்
- பதிவுகள் : 19
இணைந்தது : 24/07/2015
ஆஷஸ் தொடர் 3-வது டெஸ்ட் போட்டியில், நேற்று முதல் நாளில் 37-வது ஓவரிலேயே 136 ரன்களுக்குச் சுருண்டது ஆஸ்திரேலியா. இதனால் ஆஸ்திரேலிய பேட்ஸ்மென்களின் உண்மையான திறமை குறித்த கேள்விகள் எழுந்துள்ளன. ஆண்டர்சன் நேற்று ஆஸ்திரேலியாவின் பேட்டிங் உத்திகளின் போதாமையை அம்பலப்படுத்தினார்.
பந்துகள் ஸ்விங் ஆனால் இங்கிலாந்தில் ஆடினாலும் அல்லது தன் சொந்த மண்ணில் ஆடினாலும் ஆஸ்திரேலியா மண்ணைக் கவ்வும் என்றே தெரிகிறது. புள்ளி விவரங்களும் அவ்வாறே தெரிவிக்கின்றன.
பொதுவாக இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு தோற்றுசெல்லும் உயர்மட்ட அணிகள், பிட்சை குறைகூறுவது வழக்கம். குறிப்பாக நட்சத்திர அந்தஸ்து பெற்ற இந்திய பேட்ஸ்மென்களை 'flat track bullies' அதாவது மந்தமான ஆடுகளத்தில் வெளுத்துக் கட்டுபவர்கள் என்ற தொனியில் ஆஸ்திரேலியர்களும், இங்கிலாந்து கிரிக்கெட் நிபுணர்களும், முன்னாள் இந்நாள் வீரர்களும் குறிப்பிடுவது வழக்கம். குறிப்பாக பாய்காட் போன்றவர்கள் எந்த பிட்சிலும் அடித்து நொறுக்கும் சேவாக் போன்ற மரபை மீறிய பேட்ஸ்மென்களையும் மட்டை ஆட்டக்கள சூரர்கள் என்று வர்ணிப்பார்.
முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா தோற்றதற்குக் காரணம் அந்த அணியின் பேட்ஸ்மென்கள் அதீத தன்னம்பிக்கையில் ஆடினர் என்று கூறப்பட்டது. லார்ட்ஸ் பிட்ச் அதன் வழக்கமான உயிரை இழந்து உயிரற்ற ஆட்டக்களமான போது ரன்களைக் குவித்து அதன் பிறகு இங்கிலாந்து நெருக்கடிக்குள்ளானதோடு, அந்த மட்டைப் பிட்சிலும் மோசமாக ஆடி தோல்வி தழுவியது, எனவே செத்த ஆட்டக்கள தீரர்கள் என்ற அந்த ‘அவப்பெயர்’ கூட இங்கிலாந்துக்கு கிடைக்காமல் போனது.
ஆனால், நேற்று மைக்கேல் கிளார்க் புற்கள் உள்ள உயிரோட்டமான, பந்துகள் ஸ்விங் ஆகும் சூழ்நிலையில் டாஸ் வென்று முதலில் பேட் செய்யும் முடிவின் மீது தற்போது விமர்சனம் எழுந்துள்ளது. ஏன் கிளார்க்கை இதற்காக சாட வேண்டும் என்பதே நம் கேள்வி. அவர்கள்தான் எந்தப் பிட்சிலும் ஆடும் தீரர்கள், சூரர்கள் ஆயிற்றே, ஏன் நேற்று முடியவில்லை? உண்மையில் மிகவும் துல்லியமான ஸ்விங் பவுலிங்குக்கு எதிராக எந்த அணியும் சரணடைவதுதான் நடக்கும்.
ஆனால், அத்தகைய தருணங்களில் ரிச்சர்ட்ஸ், லாரா, சச்சின், திராவிட், சங்கக்காரா, ஜாக் காலிஸ் போன்ற வீரர்கள் தங்களது உத்தியின் வலிமையையும், மனவலிமையையும் உறுதிப்பாட்டையும் காண்பித்துள்ளனர். ‘செத்த ஆட்டக்கள தீரர்கள்’ என்று ஒரு சில இந்திய, இலங்கை வீரர்களை அவர்கள் வர்ணிக்கலாம், ஆனால் ஸ்விங் ஆட்டக்களத்தில் மேற்கூறிய வீரர்கள் தங்களுக்கேயுரிய பாணியில் எதிரணியினரை ஆதிக்கம் செலுத்தியுள்ளனர் என்பதே உண்மை.
அத்தகைய டெஸ்ட் வீரர்கள் ஆஸ்திரேலிய அணியில் இப்போது இல்லை என்பதே உண்மை. ஸ்டீவ் ஸ்மித்தை இப்போது செத்த ஆட்டக்கள தீரர் என்று ஒருவர் அழைத்தால் அது எவ்வளவு அபத்தமாக அமையும்?
ஆனால், நேற்று அவருக்கு ஸ்டீவன் ஃபின் வீசிய பந்து அருமையானது, ஒரு பந்தை டிரைவ் ஆடிவிட்டால், உடனே தன்னம்பிக்கையின் உச்சத்துக்கு சென்று விடக்கூடாது என்று வேகப்பந்து வீச்சை அணுஅணுவாக ஆடிக் கணித்துள்ள சுனில் கவாஸ்கர் கூறியது இங்கு நினைவுகூரத்தக்கது.
அவர் கூறுவார், ஸ்விங் ஆகும் போது ஓவர் பிட்ச் பந்துகள் என்று நாம் தவறாக கருதும் பந்துக்கு டிரைவ் ஆடச் செல்வோம், இது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு நம்பிக்கை அளித்துவிடும். எனவே ஒரு ஷாட்டை முன்னால் வந்து ஆடினோம் என்றால் அடுத்த பந்தை பின்னால் சென்று ஆட வேண்டும் அல்லது ஆடாமல் விட்டு விட வேண்டும் என்பார் சுனில் கவாஸ்கர்.
மைக்கேல் கிளார்க் காயத்திற்குப் பிறகே சரியாக ஆட முடிவதில்லை. அவரது உத்தி முன்னால் வந்து ஆடுவதற்கு ஏற்றதாக இல்லை. பின்னால் சென்றாலும் அவரால் புல், கட், ஹூக் போன்றவற்றை துல்லியமாக நடைமுறைப்படுத்த முடியவில்லை. டேவிட் வார்னர் நல்ல ஸ்விங் பந்துவீச்சுக்கு முன்னால் ஒன்றுமில்லாத வீரர் என்பதும் நேற்று தெரிந்தது. ஒரு பந்தை ஆடுவதா வேண்டாமா என்பதிலேயே ஆஸ்திரேலிய பேட்ஸ்மென்களுக்கு நேற்று இரட்டை மனோநிலை ஏற்பட்டது.
துணைக் கண்ட ‘செத்த பிட்ச்’களில் ஆடும் சூரப்புலிகள் என்று உலகின் தலைசிறந்த துணைக்கண்ட வீரர்களையும் கேலி பேசும் அவர்களும் செத்த பிட்ச் நாயகர்கள்தான். இங்கிலாந்தில் இத்தகைய சூழ்நிலைமைகளில் ராகுல் திராவிட் நிறைய சதங்களை அடித்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் வெளுத்துக் கட்டியுள்ளார், அரவிந்த டிசில்வா, சங்கக்காரா, தில்ஷன், ஜெயசூரியா போன்ற துணைக்கண்ட பேட்ஸ்மென்களும் இந்தச் சூழ்நிலைகளை திறம்பட எதிர்கொண்டுள்ளனர்.
ஆனால் ஆஸ்திரேலியா நேற்று மட்டுமல்ல 2005 ஆஷஸ் தொடர் முழுதும் இத்தகைய சூழ்நிலைகளை திறமையுடன் எதிர்த்து ஆட முடியாமல் தோல்வி தழுவியது.
1997-ம் ஆண்டு ஆஷஸ் தொடரில் இதே எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் ஒன்றில் மார்க் டெய்லர் தலைமையிலான வலுவான ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பேட் செய்து 118 ரன்களுக்குச் சுருண்டதும் அறிந்த கதைதான். அப்போதும் இங்கிலாந்து 3 பவுலர்களையே பயன்படுத்தியது. இப்போதும் 3 பவுலர்களையே இங்கிலாந்து பயன்படுத்தியது. ஆனால் இம்முறை ராஜர்ஸ் அரைசதம் கண்டார், மார்க் டெய்லர் அணியில் ஒருவரும் அரைசதம் அடிக்கவில்லை.
துணைக்கண்ட ‘செத்த பிட்ச்’ களில் ஆடும் பேட்ஸ்மென்கள் என்று அவர்களால் பெயர் பெற்ற பேட்ஸ்மென்கள் ஸ்விங் ஆகும் நிலைகளில் கைகளைத் தளர்வாகக் கொண்டு சென்று பந்தை ஆடுவர், இதனால் எட்ஜ் ஆனாலும் பந்து பீல்டர் கைக்கு செல்லாது.
பவுன்ஸ் பிட்ச்களில் ஆடிப் பழகிய ஆஸ்திரேலிய பேட்ஸ்மென்கள், பந்தை அடிக்க வன்மையாகச் செல்வர், இதனால் எட்ஜ் பீல்டர் கைகளுக்குச் செல்கிறது. இங்குதான் ராகுல் திராவிட், சச்சின் டெண்டுல்கர், ஜாக் காலிஸ், சங்கக்காரா ஆகியோரது உத்தி பெரிதும் கைகொடுக்கும்.
எனவே லார்ட்ஸில் செத்த பிட்சில்தான் ஆஸ்திரேலிய பேட்ஸ்மென்கள் சோபித்தனர். ஸ்விங் சாதகமான ஆட்டக்களத்தில் எவ்வளவு ஆக்ரோஷமான அணியாகத் தங்களை ஆஸ்திரேலியா கருதிக் கொண்டாலும் அந்த அணியில் கவாஸ்கர், திராவிட், காலிஸ் பாணி வீரர்களின் தேவை இருக்கிறது என்பதையே உணர்த்துகிறது.
உண்மையில் நல்ல ஸ்விங் பிட்சிலும் திணறுகிறார்கள், நல்ல ஸ்பின் பிட்சிலும் திணறுகிறார்கள் என்றால் அவர்களும் செத்த பிட்சில் வெளுத்துக் கட்டும் சூரர்கள்தானே!
-------------------------------------------------------
சுட்டிகள் நீக்கப்பட்டன
ர...ன்
பந்துகள் ஸ்விங் ஆனால் இங்கிலாந்தில் ஆடினாலும் அல்லது தன் சொந்த மண்ணில் ஆடினாலும் ஆஸ்திரேலியா மண்ணைக் கவ்வும் என்றே தெரிகிறது. புள்ளி விவரங்களும் அவ்வாறே தெரிவிக்கின்றன.
பொதுவாக இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு தோற்றுசெல்லும் உயர்மட்ட அணிகள், பிட்சை குறைகூறுவது வழக்கம். குறிப்பாக நட்சத்திர அந்தஸ்து பெற்ற இந்திய பேட்ஸ்மென்களை 'flat track bullies' அதாவது மந்தமான ஆடுகளத்தில் வெளுத்துக் கட்டுபவர்கள் என்ற தொனியில் ஆஸ்திரேலியர்களும், இங்கிலாந்து கிரிக்கெட் நிபுணர்களும், முன்னாள் இந்நாள் வீரர்களும் குறிப்பிடுவது வழக்கம். குறிப்பாக பாய்காட் போன்றவர்கள் எந்த பிட்சிலும் அடித்து நொறுக்கும் சேவாக் போன்ற மரபை மீறிய பேட்ஸ்மென்களையும் மட்டை ஆட்டக்கள சூரர்கள் என்று வர்ணிப்பார்.
முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா தோற்றதற்குக் காரணம் அந்த அணியின் பேட்ஸ்மென்கள் அதீத தன்னம்பிக்கையில் ஆடினர் என்று கூறப்பட்டது. லார்ட்ஸ் பிட்ச் அதன் வழக்கமான உயிரை இழந்து உயிரற்ற ஆட்டக்களமான போது ரன்களைக் குவித்து அதன் பிறகு இங்கிலாந்து நெருக்கடிக்குள்ளானதோடு, அந்த மட்டைப் பிட்சிலும் மோசமாக ஆடி தோல்வி தழுவியது, எனவே செத்த ஆட்டக்கள தீரர்கள் என்ற அந்த ‘அவப்பெயர்’ கூட இங்கிலாந்துக்கு கிடைக்காமல் போனது.
ஆனால், நேற்று மைக்கேல் கிளார்க் புற்கள் உள்ள உயிரோட்டமான, பந்துகள் ஸ்விங் ஆகும் சூழ்நிலையில் டாஸ் வென்று முதலில் பேட் செய்யும் முடிவின் மீது தற்போது விமர்சனம் எழுந்துள்ளது. ஏன் கிளார்க்கை இதற்காக சாட வேண்டும் என்பதே நம் கேள்வி. அவர்கள்தான் எந்தப் பிட்சிலும் ஆடும் தீரர்கள், சூரர்கள் ஆயிற்றே, ஏன் நேற்று முடியவில்லை? உண்மையில் மிகவும் துல்லியமான ஸ்விங் பவுலிங்குக்கு எதிராக எந்த அணியும் சரணடைவதுதான் நடக்கும்.
ஆனால், அத்தகைய தருணங்களில் ரிச்சர்ட்ஸ், லாரா, சச்சின், திராவிட், சங்கக்காரா, ஜாக் காலிஸ் போன்ற வீரர்கள் தங்களது உத்தியின் வலிமையையும், மனவலிமையையும் உறுதிப்பாட்டையும் காண்பித்துள்ளனர். ‘செத்த ஆட்டக்கள தீரர்கள்’ என்று ஒரு சில இந்திய, இலங்கை வீரர்களை அவர்கள் வர்ணிக்கலாம், ஆனால் ஸ்விங் ஆட்டக்களத்தில் மேற்கூறிய வீரர்கள் தங்களுக்கேயுரிய பாணியில் எதிரணியினரை ஆதிக்கம் செலுத்தியுள்ளனர் என்பதே உண்மை.
அத்தகைய டெஸ்ட் வீரர்கள் ஆஸ்திரேலிய அணியில் இப்போது இல்லை என்பதே உண்மை. ஸ்டீவ் ஸ்மித்தை இப்போது செத்த ஆட்டக்கள தீரர் என்று ஒருவர் அழைத்தால் அது எவ்வளவு அபத்தமாக அமையும்?
ஆனால், நேற்று அவருக்கு ஸ்டீவன் ஃபின் வீசிய பந்து அருமையானது, ஒரு பந்தை டிரைவ் ஆடிவிட்டால், உடனே தன்னம்பிக்கையின் உச்சத்துக்கு சென்று விடக்கூடாது என்று வேகப்பந்து வீச்சை அணுஅணுவாக ஆடிக் கணித்துள்ள சுனில் கவாஸ்கர் கூறியது இங்கு நினைவுகூரத்தக்கது.
அவர் கூறுவார், ஸ்விங் ஆகும் போது ஓவர் பிட்ச் பந்துகள் என்று நாம் தவறாக கருதும் பந்துக்கு டிரைவ் ஆடச் செல்வோம், இது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு நம்பிக்கை அளித்துவிடும். எனவே ஒரு ஷாட்டை முன்னால் வந்து ஆடினோம் என்றால் அடுத்த பந்தை பின்னால் சென்று ஆட வேண்டும் அல்லது ஆடாமல் விட்டு விட வேண்டும் என்பார் சுனில் கவாஸ்கர்.
மைக்கேல் கிளார்க் காயத்திற்குப் பிறகே சரியாக ஆட முடிவதில்லை. அவரது உத்தி முன்னால் வந்து ஆடுவதற்கு ஏற்றதாக இல்லை. பின்னால் சென்றாலும் அவரால் புல், கட், ஹூக் போன்றவற்றை துல்லியமாக நடைமுறைப்படுத்த முடியவில்லை. டேவிட் வார்னர் நல்ல ஸ்விங் பந்துவீச்சுக்கு முன்னால் ஒன்றுமில்லாத வீரர் என்பதும் நேற்று தெரிந்தது. ஒரு பந்தை ஆடுவதா வேண்டாமா என்பதிலேயே ஆஸ்திரேலிய பேட்ஸ்மென்களுக்கு நேற்று இரட்டை மனோநிலை ஏற்பட்டது.
துணைக் கண்ட ‘செத்த பிட்ச்’களில் ஆடும் சூரப்புலிகள் என்று உலகின் தலைசிறந்த துணைக்கண்ட வீரர்களையும் கேலி பேசும் அவர்களும் செத்த பிட்ச் நாயகர்கள்தான். இங்கிலாந்தில் இத்தகைய சூழ்நிலைமைகளில் ராகுல் திராவிட் நிறைய சதங்களை அடித்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் வெளுத்துக் கட்டியுள்ளார், அரவிந்த டிசில்வா, சங்கக்காரா, தில்ஷன், ஜெயசூரியா போன்ற துணைக்கண்ட பேட்ஸ்மென்களும் இந்தச் சூழ்நிலைகளை திறம்பட எதிர்கொண்டுள்ளனர்.
ஆனால் ஆஸ்திரேலியா நேற்று மட்டுமல்ல 2005 ஆஷஸ் தொடர் முழுதும் இத்தகைய சூழ்நிலைகளை திறமையுடன் எதிர்த்து ஆட முடியாமல் தோல்வி தழுவியது.
1997-ம் ஆண்டு ஆஷஸ் தொடரில் இதே எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் ஒன்றில் மார்க் டெய்லர் தலைமையிலான வலுவான ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பேட் செய்து 118 ரன்களுக்குச் சுருண்டதும் அறிந்த கதைதான். அப்போதும் இங்கிலாந்து 3 பவுலர்களையே பயன்படுத்தியது. இப்போதும் 3 பவுலர்களையே இங்கிலாந்து பயன்படுத்தியது. ஆனால் இம்முறை ராஜர்ஸ் அரைசதம் கண்டார், மார்க் டெய்லர் அணியில் ஒருவரும் அரைசதம் அடிக்கவில்லை.
துணைக்கண்ட ‘செத்த பிட்ச்’ களில் ஆடும் பேட்ஸ்மென்கள் என்று அவர்களால் பெயர் பெற்ற பேட்ஸ்மென்கள் ஸ்விங் ஆகும் நிலைகளில் கைகளைத் தளர்வாகக் கொண்டு சென்று பந்தை ஆடுவர், இதனால் எட்ஜ் ஆனாலும் பந்து பீல்டர் கைக்கு செல்லாது.
பவுன்ஸ் பிட்ச்களில் ஆடிப் பழகிய ஆஸ்திரேலிய பேட்ஸ்மென்கள், பந்தை அடிக்க வன்மையாகச் செல்வர், இதனால் எட்ஜ் பீல்டர் கைகளுக்குச் செல்கிறது. இங்குதான் ராகுல் திராவிட், சச்சின் டெண்டுல்கர், ஜாக் காலிஸ், சங்கக்காரா ஆகியோரது உத்தி பெரிதும் கைகொடுக்கும்.
எனவே லார்ட்ஸில் செத்த பிட்சில்தான் ஆஸ்திரேலிய பேட்ஸ்மென்கள் சோபித்தனர். ஸ்விங் சாதகமான ஆட்டக்களத்தில் எவ்வளவு ஆக்ரோஷமான அணியாகத் தங்களை ஆஸ்திரேலியா கருதிக் கொண்டாலும் அந்த அணியில் கவாஸ்கர், திராவிட், காலிஸ் பாணி வீரர்களின் தேவை இருக்கிறது என்பதையே உணர்த்துகிறது.
உண்மையில் நல்ல ஸ்விங் பிட்சிலும் திணறுகிறார்கள், நல்ல ஸ்பின் பிட்சிலும் திணறுகிறார்கள் என்றால் அவர்களும் செத்த பிட்சில் வெளுத்துக் கட்டும் சூரர்கள்தானே!
-------------------------------------------------------
சுட்டிகள் நீக்கப்பட்டன
ர...ன்
- கவியரசன்(கவிச்சுடர்)பண்பாளர்
- பதிவுகள் : 168
இணைந்தது : 16/07/2015
உண்மைதான் சரியாக சொன்னீர்கள்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கவியரசன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010
ரெண்டாம் முறை 10.04 am பதிவானது , நீக்கப் பட்டுள்ளது , குமாரவேல் .
நேரிடையாக வேறு தளத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும் சுட்டிகளை தவிர்க்கவும் .
விதிமுறைகள் அனுபதிப்பது இல்லை ,குமாரவேல் .
உங்கள் பதிவில் உள்ளது நீக்கப்படுகிறது .கவனம் தேவை ,வேல் .
நன்றி .
ரமணியன்
நேரிடையாக வேறு தளத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும் சுட்டிகளை தவிர்க்கவும் .
விதிமுறைகள் அனுபதிப்பது இல்லை ,குமாரவேல் .
உங்கள் பதிவில் உள்ளது நீக்கப்படுகிறது .கவனம் தேவை ,வேல் .
நன்றி .
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- kumaravel2011புதியவர்
- பதிவுகள் : 19
இணைந்தது : 24/07/2015
மண்னிக்க வேண்டும் ஐயா? இனிமேல் அந்த தவரு நிகழாமல் பார்த்துகொல்கிரேன்!
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010
நன்றி ,வேல் !
ரமணியன்
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|