ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்றும் நம் நினைவில் அமரர் எம்.எஸ்.விஸ்வநாதன்

4 posters

Go down

என்றும் நம் நினைவில் அமரர் எம்.எஸ்.விஸ்வநாதன்  Empty என்றும் நம் நினைவில் அமரர் எம்.எஸ்.விஸ்வநாதன்

Post by சிவா Tue Jul 14, 2015 12:24 pm

என்றும் நம் நினைவில் அமரர் எம்.எஸ்.விஸ்வநாதன்  11738042_888987174506928_8234576910501824785_n

* இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் கேரளாவின் பாலக்காடு அருகே எலப்புள்ளி கிராமத்தில் 1928 ஜூன் 24ல் பிறந்தார். அவரது முழுப்பெயர் மனயங்கத் சுப்ரமணியன் விஸ்வநாதன். அவரது பெற்றோர் மனயங்கத் சுப்பிரமணியன் - நாராயணி குட்டி.

* 4 வயதில் தந்தையை இழந்தவர், கண்ணனூரில் தாத்தா வீட்டில் வளர்ந்தார். பள்ளியில் படித்ததில்லை. தியேட்டர்களில் நொறுக்குத் தீனி விற்பார். நீலகண்ட பாகவதரிடம் இசை பயின்றார். 13 வயதில் மேடைக் கச்சேரி நிகழ்த்தினார்.

* நடிகர், பாடகராக வரவேண்டும் என்பது அவரது விருப்பம். அது நிறைவேறவில்லை. சினிமா கம்பெனியில் சர்வராக வேலை பார்த்தார். பிறகு, இசையமைப்பாளர் சி.ஆர்.சுப்புராமன் குழுவில் இவர் ஆர்மோனியக் கலைஞராகவும், டி.கே.ராமமூர்த்தி வயலின் கலைஞராகவும் சேர்ந்தனர்.

* சுப்புராமனின் திடீர் மறைவால் பாதியில் நின்ற அவரது படங்களை இவர்கள் இருவரும் முடித்துக் கொடுத்தனர். ‘தேவதாஸ்’, ‘சண்டிராணி’ படங்களின் இணை இசையமைப்பாளர்களாக அறிமுகமாயினர். ‘பணம்’ திரைப்படத்தில் ஆரம்பித்து, ‘ஆயிரத்தில் ஒருவன்’ வரை 700 திரைப்படங்களுக்கு இணைந்து இசையமைத்தனர்.

* எம்எஸ்வி தனியாக 500 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். இளையராஜாவோடு சேர்ந்து 3 படங்களுக்கு இசையமைத்தார். ‘கண்ணகி’, ‘காதல் மன்னன்’, ‘காதலா காதலா’ உட்பட 10-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

* பீம்சிங், கிருஷ்ணன் பஞ்சு, திருலோகசந்தர், கே.பாலசந்தர் ஆகிய 4 இயக்குநர்களிடம் அதிகம் பணிபுரிந்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உட்பட பல மொழிகளிலும் 1,200 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார்.

* ‘புதிய பறவை’ படத்தில் வரும் ‘எங்கே நிம்மதி’ பாடலுக்கு அதிகபட்சம் 300 இசைக் கருவிகளையும், ‘பாகப்பிரிவினை’ படத்தில் வரும் ‘தாழையாம் பூ முடிச்சு’ பாடலுக்கு 3 இசைக் கருவிகளையும் பயன்படுத்தியவர். பியானோ, ஆர்மோனியம், கீ போர்டு அற்புதமாக வாசிப்பார். ‘நீராரும் கடலுடுத்த..’ என்று தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு இசையமைத்தவர்.

* கர்நாடக இசை மேதைகள் எம்.எல்.வசந்தகுமாரி, பாலமுரளி கிருஷ்ணா போன்றவர்களை தன் இசையில் பாடவைத்துள்ளார். இவரும் பல பாடல்களைப் பாடியுள்ளார்.

* இந்தியா - பாகிஸ்தான் போரின் முடிவில் 1965-ல் போர் முனைக்குத் தன் குழுவினரோடு சென்று ஆர்மோனியத்தை கழுத்தில் மாட்டிக்கொண்டு, காயமுற்ற படை வீரர்களுக்காகப் பாடினார்.

* ஒரே பிறந்த தேதியைக் கொண்ட தமிழ்த் திரையுலக ஜாம்பவான்கள் எம்எஸ்வி-யும், கவியரசு கண்ணதாசனும் சிறந்த நட்புக்கு உதாரணமாகத் திகழ்ந்தனர். இவர் இசையமைத்த ‘அத்தான் என்னத்தான்’ போன்ற பாடல்களைப் பாடும் வாய்ப்பு தனக்குக் கிடைத்தால் சென்னையிலேயே தங்கிவிடுவேன்’ என்று லதா மங்கேஷ்கர் ஒருமுறை கூறினார்.

* மெல்லிசை மன்னர், கலைமாமணி, திரை இசை சக்கரவர்த்தி உள்ளிட்ட பல பட்டங்களையும் ஃபிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது உட்பட பல விருதுகளையும் பெற்றவர்.

* தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம் என 1,200 திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவருக்கு மெல்லிசை மன்னன் பட்டம், நடிகர் திலகம் சிவாஜி கணேசனால் சூட்டப்பட்டது.


என்றும் நம் நினைவில் அமரர் எம்.எஸ்.விஸ்வநாதன்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

என்றும் நம் நினைவில் அமரர் எம்.எஸ்.விஸ்வநாதன்  Empty Re: என்றும் நம் நினைவில் அமரர் எம்.எஸ்.விஸ்வநாதன்

Post by சிவா Tue Jul 14, 2015 12:28 pm

* இந்தியாவில் முதன் முதலில் முழு ஆர்கெஸ்ட்ராவை சேலத்தில் மேடையைற்றியவர் எம்.எஸ்.வி

* ஒரே பிறந்த தேதியைக் கொண்ட தமிழ்த் திரையுலக ஜாம்பவான்கள் எம்எஸ்வி-யும், கவியரசு கண்ணதாசனும் சிறந்த நட்புக்கு உதாரணமாகத் திகழ்ந்தனர். இவர் இசையமைத்த ‘அத்தான் என்னத்தான்’ போன்ற பாடல்களைப் பாடும் வாய்ப்பு தனக்குக் கிடைத்தால் சென்னையிலேயே தங்கிவிடுவேன்’ என்று லதா மங்கேஷ்கர் ஒருமுறை கூறினார்.

* நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் இடம்பெற்ற முத்தான முத்தல்லவோ பாடலே 20 நிமிடத்தில் இசையமைத்தார்.

* தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம் என 1,200 திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவருக்கு மெல்லிசை மன்னன் பட்டம், நடிகர் திலகம் சிவாஜி கணேசனால் சூட்டப்பட்டது.

* மெல்லிசை மன்னர், கலைமாமணி, திரை இசை சக்கரவர்த்தி உள்ளிட்ட பல பட்டங்களையும் ஃபிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது உட்பட பல விருதுகளையும் பெற்றவர்.

* தென்னிந்திய பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருதும், சிறந்த இசையமைப்பாளருக்கான கேரள அரசு விருதும் பெற்றவர்.

* காலத்தால் அழியாத பல காவியப் பாடல் தந்த எம்எஸ் விஸ்வநாதனின் மனைவி ஜானகி கடந்த 2012-ம் ஆண்டு மறைந்தார்.

* கடந்து வந்த பயணத்தில் அவர் இசையமைப்பதை, பாடுவதை மட்டுமே சிரத்தையாய் மேற்கொண்டாரே தவிர, அவற்றைப் பதிவாக ஆவணப்படுத்துவதில் கவனம் செலுத்தப்படவில்லை.

* தனது இந்த சாதனையை அவர் எந்த மேடையிலும் காட்டிக் கொண்டது கூட இல்லை.


என்றும் நம் நினைவில் அமரர் எம்.எஸ்.விஸ்வநாதன்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

என்றும் நம் நினைவில் அமரர் எம்.எஸ்.விஸ்வநாதன்  Empty Re: என்றும் நம் நினைவில் அமரர் எம்.எஸ்.விஸ்வநாதன்

Post by சிவா Tue Jul 14, 2015 12:28 pm

எம்.எஸ்.வி அறிமுகப்படுத்திய பாடகர்கள்

* ஜெயச்சந்திரன் - திரைப்படம் - மணிபயல்

* வாணிஜெயராம் - திரைப்படம் - தீர்க்க சுமங்கலி

* வசந்தா - திரைப்படம் - சுமதி என் சுந்தரி

* எம்.எல்.ஸ்ரீகாந்தி - திரைப்படம் - உத்தரவின்றி உள்ளே வா

* ஜி.கே. வெங்கடேஷ் - திரைப்படம் - பாவ மன்னிப்பு

* கல்யாணி மேனன் - திரைப்படம் - சுஜாதா

* புஷ்பலதா - திரைப்படம் - ராஜபாட் ரங்கத்துரை

* சாவித்திரி - திரைப்படம் - வயசு பொண்ணு

* ஷேக் முகமது - திரைப்படம் - ஆபூர்வ ராகங்கள்

* ஷோபா சந்திரசேகர் - திரைப்படம் - நம்நாடு


என்றும் நம் நினைவில் அமரர் எம்.எஸ்.விஸ்வநாதன்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

என்றும் நம் நினைவில் அமரர் எம்.எஸ்.விஸ்வநாதன்  Empty Re: என்றும் நம் நினைவில் அமரர் எம்.எஸ்.விஸ்வநாதன்

Post by சிவா Tue Jul 14, 2015 12:29 pm

எம்.எஸ்.வி அறிமுகப்படுத்திய கவிஞர்கள்

* புலமைப்பித்தன்

* முத்துலிங்கம்

* நா.காமராசன்

* ரோஷானாரா பேகம் - குங்குமப்பொட்டின் மங்கலம் பாடல் (குடியிருந்த கோயில்)

எம்.எஸ்.வி நடித்த படங்கள்


எம்.எஸ்..வி கமல், அஜித் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்துள்ளார்.

* காதலா காதலா

* காதல் மன்னன்

* தகதிமிதா

* அன்பே வா (புதியது)

* மஹாராஜா

* தில்லு முல்லு (ரீ-மேக்)


என்றும் நம் நினைவில் அமரர் எம்.எஸ்.விஸ்வநாதன்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

என்றும் நம் நினைவில் அமரர் எம்.எஸ்.விஸ்வநாதன்  Empty Re: என்றும் நம் நினைவில் அமரர் எம்.எஸ்.விஸ்வநாதன்

Post by சிவா Tue Jul 14, 2015 12:30 pm

எம்.எஸ்.வி - இசைஞானி இளையராஜா கூட்டணி

எம்.எஸ்.வி இசைஞானி இளையராஜாவுடன் இணைந்து சில படங்களில் பணியாற்றியுள்ளார்.

* மெல்ல திறந்ததது கதவு

* செந்தமிழ் பாட்டு

* விஷ்வ துளசி

ஒரு காலத்தில் தனக்குப் போட்டியாளராகக் கருதப்பட்ட இளையராஜாவோடு சேர்ந்து அவர் இசை அமைத்ததே, அவரது விசால மனப்பான்மைக்கு அடையாளம் எனக் கூறலாம்.

எம்.எஸ்.வி - வாலி கூட்டணி

கண்ணதாசனை போன்று கவிஞர் வாலியுடன் ஏராளமான படங்களில் எம்.எஸ்.வி இணைந்து பணியாற்றியுள்ளனர்.

* சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ... - சந்திரோதயம்

* ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் - அன்பே வா

* ஒன்னா இருக்க கத்தக்கணும் - அன்பு கரங்கள்

* கண்போன போக்கிலே கால் போகலாமா - பணம் படைத்தவன்

* காத்திருந்த கண்களே - மோட்டார் சுந்தரம் பிள்ளை

* தரைமேல் பிறக்க வைத்தான் - படகோட்டி

* கொடுத்ததெல்லாம் கொடுத்தான் - படகோட்டி

* காற்று வாங்க போனேன் - கலங்கரை விளக்கம்

* ஏன் என்ற கேள்வி - ஆயிரத்தில் ஒருவன்

* மன்னவனே அழலாமா - கற்பகம்

* நாளை இந்த வேளை பார்த்து - உயர்ந்த மனிதன்

* மெல்லப்போ மெல்லப்போ - காவல்காரன்

* ஆண்டவனே உன் பாதங்களில் - ஒளிவிளக்கு

* வண்ணக்கிளி சொன்ன மொழி - தெய்வத்தாய்

* நான் அனுப்பவது கடிதம் அல்ல - பேசும் தெய்வம்

* நல்ல இடம் வந்த இடம் - கலாட்டா கல்யாணம்

* அங்கே சிரிப்பவர்கள் - ரிக்ஷாகாரன்

* சொல்லத்தான் நினேக்கிறேன் - சொல்லத்தான் நினைக்கிறேன்

* நிலவு ஒரு பெண்ணாகி - உலகம் கற்றும் வாலிபன்

* ஒரு தாய் வயிற்றில் - உரிமைக்குரல்

* மல்லிகை முல்லை பூப்பந்தல் - அன்பே ஆருயிரே

* ஒன்றும் அறியாத பெண்ணோ --- இதயக்கனி

* நினைத்ததை நடத்தியே முடிப்பவன் - நம் நாடு

* கண்ணன் எந்தன் காதலன் - ஒரு தாய் மக்கள்

* நான் அளவோடு ரசிப்பவன் - எங்கள் தங்கம்

* வெற்றி மீது வெற்றி - தேடி வந்த மாப்பிள்ளை

* மாதவி பொன் மயிலால் - இருமலர்கள்

* நான் ஆணையிட்டால் - எங்க வீட்டுப் பிள்ளை

* பொங்கும் கடலோசை - மீனவன் நண்பன்

* இதோ எந்தன் தெய்வம் - பாபு


என்றும் நம் நினைவில் அமரர் எம்.எஸ்.விஸ்வநாதன்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

என்றும் நம் நினைவில் அமரர் எம்.எஸ்.விஸ்வநாதன்  Empty Re: என்றும் நம் நினைவில் அமரர் எம்.எஸ்.விஸ்வநாதன்

Post by சிவா Tue Jul 14, 2015 12:31 pm

தமிழ் சினிமாவின் பொற்காலம்

தமிழ் சினிமாவில் மிக அதிகமாக, பீம்சிங், கிருஷ்ணன் பஞ்சு, ஏ.சி.திருலோசந்தர், கே.பாலசந்தர் என இந்த நான்கு இயக்குநர்களிடம் வேலை பார்த்திருக்கிறார், அது தமிழ் சினிமாவின் பொற்காலம் ஆகும்.

பாசமலரில் ஆரம்பித்த பாட்டு

சொந்தக் குரலில் பாடுவதில் பெரும் பிரபலம் அடைந்த மெல்லிசை மன்னர். உச்சஸ் தாயில் பாடின பாடல்கள் பெரும்புகழ் பெற்றவை,`பாசமலர்’ படத்தில் ஆரம்பித்தது இந்தப் பாட்டுக் கச்சேரி.

தமிழ்தாய் வாழ்த்துக்கு இசை

தமிழ்த் தாய் வாழ்த்தான `நீராடும் கடலுடுத்த’ பாடலுக்கு இசை அமைத்த பெருமை எம்.எஸ்.வி-க்கு சேரும். முதலில் பிறந்த ராகம் எனக் கருதப்படும் மோகனத்தில் இயல்பாக அமைந்த பாடலாக அது சிறப்புப் பெறுகிறது.

1965-ல் இந்தியா-பாகிஸ்தான் போரின் முடிவின்போது போர் முனைக்குச் சென்ற குழுவோடு போய், கழுத்தில் ஆர்மோனியத்தை மாட்டிக்கொண்டு காயமுற்ற படை வீரர்களுக்குப் பாடினார். உடன் ஆடிக்காட்டியவர் சந்திரபாபு.

உலக இசையை தமிழில் புகுத்திய பெருமை

உலக இசையை தமிழில் புகுத்திய பெருமை இவரேயே சாரும். எகிப்திய இசையை பட்டத்து ராணி பாடலிலும், பெர்சியன் இசையை நினைத்தேன் வந்தாய் நூறு வயது பாடலிலும், ஜப்பானிய இசையை பன்சாயி காதல் பறவை பாடலிலும், லத்தீன் இசையை யார் அந்த நிலவு பாடலிலும், ரஷ்ய இசையை கண் போன போக்கிலே கால் போகலாமா பாடலிலும், மெக்சிகன் இசையை முத்தமிடும் நேரமெப்போ பாடல்களிள் மூலம் கொண்டு வந்தவர்.

தன் இசையறிவை அறியாத எம்.எஸ்.வி

வி.குமார், இளையராஜா, ரஹ்மான், கங்கை அமரன், தேவா, யுவன்ஷங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ் போன்ற அனைத்து இசையமைப்பாளர்களிடமும் பாடி எம்.எஸ்.வி, தன் இசையறிவை பெரிதாக நினைத்துக் கொள்ளாமால் மனப்போக்கினால் நிகழ்ந்தவை இவை.

எம்.எஸ்.வி இசைக்கு கட்டுப்பட்டவர்கள்

சினிமா இசையில் இருந்து அதிகமாக ஒதுங்கி ஆன்மீக இசையில் இருந்த எம்.எல்.வசந்தகுமாரி, பாலமுரளி கிருஷ்ணா, மகாராஜபுரம் சந்தானம், பாம்பே ஜெயஸ்ரீ போன்றவர்கள் மெல்லிசை மன்னரின் இசைக்குக் கட்டுப்பட்டு பாடி இருக்கிறார்கள்


என்றும் நம் நினைவில் அமரர் எம்.எஸ்.விஸ்வநாதன்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

என்றும் நம் நினைவில் அமரர் எம்.எஸ்.விஸ்வநாதன்  Empty Re: என்றும் நம் நினைவில் அமரர் எம்.எஸ்.விஸ்வநாதன்

Post by சிவா Tue Jul 14, 2015 12:31 pm

எம்.எஸ்.வி இசையமைத்த திரைப்படங்கள்

* போன மச்சான் திரும்பி வந்தான் (1954)

* தெனாலி ராமன் (1956)

* கலங்கரை விளக்கம் (திரைப்படம்) (1965)

* குழந்தையும் தெய்வமும் (1965)

* நீலவானம் (1965)

* பஞ்சவர்ணக்கிளி (1965)

* அன்பே வா (1966)

* சந்திரோதயம் (1966)

* உயர்ந்த மனிதன் (1968)

* அலைகள் (திரைப்படம்) (1973)

* பாக்தாத் பேரழகி (1973)

* பாரத விலாஸ் (1973)

* எங்கள் தாய் (1973)

* கங்கா கௌரி (1973)

* கௌரவம் (திரைப்படம்) (1973)

* மணிப்பயல் (1973)

* மனிதரில் மாணிக்கம் (1973)

* நல்ல முடிவு (1973)

* பாசதீபம் (1973)

* பொன்னூஞ்சல் (1973)

* பூக்காரி (1973)

என 1200 திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.

மெல்லிசை மன்னருக்கு கலைமாமணி, ஃபிலிம்ஃபேர் வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் கிடைத்தன. ஆனால், தேசிய விருதோ, தமிழ்நாடு அரசு விருதோ இவருக்குக் கிடைக்கவில்லை என்பது வருந்தத்தக்கது.

தமிழ்தாய் வாழ்த்துப்பாடலான ‛நீராரும் கடலுடத்த..' பாடலுக்கு இசையமைத்த பெருமைக்குரியவர் எம்.எஸ்.வி. தன் இசையால் தமிழ் இதங்களை வசப்படுத்தி சாதனைகளை கூட நினைவில் வைத்துக் கொள்ளாமல் இந்த உலகை விட்டு மறைந்தார். எனினும் நம் நினைவை விட்டு அகலாமல் என்றும் அவர் நம் இதங்களில் இசையால் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.


என்றும் நம் நினைவில் அமரர் எம்.எஸ்.விஸ்வநாதன்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

என்றும் நம் நினைவில் அமரர் எம்.எஸ்.விஸ்வநாதன்  Empty Re: என்றும் நம் நினைவில் அமரர் எம்.எஸ்.விஸ்வநாதன்

Post by ayyasamy ram Tue Jul 14, 2015 1:27 pm

என்றும் நம் நினைவில் அமரர் எம்.எஸ்.விஸ்வநாதன்  103459460 என்றும் நம் நினைவில் அமரர் எம்.எஸ்.விஸ்வநாதன்  3838410834
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

என்றும் நம் நினைவில் அமரர் எம்.எஸ்.விஸ்வநாதன்  Empty Re: என்றும் நம் நினைவில் அமரர் எம்.எஸ்.விஸ்வநாதன்

Post by அருண் Tue Jul 14, 2015 1:45 pm

இப்போது இவர் நம்மோடு இல்லை என்றாலும் இவரது பாடல் மற்றும் படங்கள் மூலம் நம்மோடு வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்.
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

என்றும் நம் நினைவில் அமரர் எம்.எஸ்.விஸ்வநாதன்  Empty Re: என்றும் நம் நினைவில் அமரர் எம்.எஸ்.விஸ்வநாதன்

Post by shobana sahas Wed Jul 15, 2015 12:51 am

எவ்வளோ உயர்ந்த மனிதர் !!!!!!! சோகம் சோகம்
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

என்றும் நம் நினைவில் அமரர் எம்.எஸ்.விஸ்வநாதன்  Empty Re: என்றும் நம் நினைவில் அமரர் எம்.எஸ்.விஸ்வநாதன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum