புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நவீன விக்கிரமாதித்தன்  I_vote_lcapநவீன விக்கிரமாதித்தன்  I_voting_barநவீன விக்கிரமாதித்தன்  I_vote_rcap 
62 Posts - 63%
heezulia
நவீன விக்கிரமாதித்தன்  I_vote_lcapநவீன விக்கிரமாதித்தன்  I_voting_barநவீன விக்கிரமாதித்தன்  I_vote_rcap 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
நவீன விக்கிரமாதித்தன்  I_vote_lcapநவீன விக்கிரமாதித்தன்  I_voting_barநவீன விக்கிரமாதித்தன்  I_vote_rcap 
6 Posts - 6%
mohamed nizamudeen
நவீன விக்கிரமாதித்தன்  I_vote_lcapநவீன விக்கிரமாதித்தன்  I_voting_barநவீன விக்கிரமாதித்தன்  I_vote_rcap 
4 Posts - 4%
sureshyeskay
நவீன விக்கிரமாதித்தன்  I_vote_lcapநவீன விக்கிரமாதித்தன்  I_voting_barநவீன விக்கிரமாதித்தன்  I_vote_rcap 
1 Post - 1%
viyasan
நவீன விக்கிரமாதித்தன்  I_vote_lcapநவீன விக்கிரமாதித்தன்  I_voting_barநவீன விக்கிரமாதித்தன்  I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நவீன விக்கிரமாதித்தன்  I_vote_lcapநவீன விக்கிரமாதித்தன்  I_voting_barநவீன விக்கிரமாதித்தன்  I_vote_rcap 
254 Posts - 44%
heezulia
நவீன விக்கிரமாதித்தன்  I_vote_lcapநவீன விக்கிரமாதித்தன்  I_voting_barநவீன விக்கிரமாதித்தன்  I_vote_rcap 
221 Posts - 38%
mohamed nizamudeen
நவீன விக்கிரமாதித்தன்  I_vote_lcapநவீன விக்கிரமாதித்தன்  I_voting_barநவீன விக்கிரமாதித்தன்  I_vote_rcap 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
நவீன விக்கிரமாதித்தன்  I_vote_lcapநவீன விக்கிரமாதித்தன்  I_voting_barநவீன விக்கிரமாதித்தன்  I_vote_rcap 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
நவீன விக்கிரமாதித்தன்  I_vote_lcapநவீன விக்கிரமாதித்தன்  I_voting_barநவீன விக்கிரமாதித்தன்  I_vote_rcap 
15 Posts - 3%
prajai
நவீன விக்கிரமாதித்தன்  I_vote_lcapநவீன விக்கிரமாதித்தன்  I_voting_barநவீன விக்கிரமாதித்தன்  I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
நவீன விக்கிரமாதித்தன்  I_vote_lcapநவீன விக்கிரமாதித்தன்  I_voting_barநவீன விக்கிரமாதித்தன்  I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
நவீன விக்கிரமாதித்தன்  I_vote_lcapநவீன விக்கிரமாதித்தன்  I_voting_barநவீன விக்கிரமாதித்தன்  I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நவீன விக்கிரமாதித்தன்  I_vote_lcapநவீன விக்கிரமாதித்தன்  I_voting_barநவீன விக்கிரமாதித்தன்  I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
நவீன விக்கிரமாதித்தன்  I_vote_lcapநவீன விக்கிரமாதித்தன்  I_voting_barநவீன விக்கிரமாதித்தன்  I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நவீன விக்கிரமாதித்தன்


   
   
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Jul 13, 2015 10:22 pm

தன் முயற்சியில் சற்றும் மனம் தளரா விக்கிரமாதித்தன் , மீண்டும் முருங்கை மரத்தின் மீதேறி , வேதாளத்தை இறக்கித் தன் தோளில் சுமந்துகொண்டு மயானத்தை நோக்கி நடக்கத் தொடங்கினான்.

வேதாளம், ஹஹ்ஹா! ஹஹ்ஹா! என்று பலமாகச் சிரித்து ," விக்கிரமா! உன் தளராத முயற்சியைப் பாராட்டுகிறேன்; உனக்கு வழிநடைக் களைப்புத் தெரியாமல் இருக்கக் கதையொன்று சொல்கிறேன்; நன்றாக் கவனித்துக் கேட்பாயாக! கதையின் முடிவில் உன்னிடம் ஒரு கேள்வி கேட்பேன்; அதற்கு சரியான பதில் கூறாவிட்டால் , உன் தலை வெடித்து சுக்கு நூறாகச் சிதறிவிடும் !" என்று எச்சரிக்கை செய்தது.

விக்கிரமனும்," சரி! வேதாளமே! கதையைச் சொல் !" என்று சொன்னான்.

" காவிரிப் பட்டணம் என்ற ஊரில் முன்னொரு காலத்தில் , சந்திரசேகரன் என்ற செல்வந்தன் ஒருவன் இருந்தான். அவனுக்குக் கோடிக்கணக்கான மதிப்புடைய சொத்துக்கள் இருந்தன.தனசேகரன், குணசேகரன் என்ற இரண்டு மகன்கள் இருந்தனர். தன் மனைவி லட்சுமியுடன் சீரும் சிறப்புமாக அவன் வாழ்ந்து வந்தான்.

திடீரென்று சந்திரசேகரன் ஒருநாள் நோய்வாய்ப் பட்டான். வயதான காரணத்தால், மருத்துவர்கள் கொடுத்த மருந்துகளால் பயன் ஏதும் ஏற்படவில்லை. தன் அந்திம காலம் நெருங்கிவிட்டதை அறிந்த சந்திரசேகரன் தன் சொத்துக்களைச் சரிபாதியாகப் பிரித்துத் தன் இரு மகன்களுக்கும் உயில் எழுதி வைத்தான். தாயைக் கவனிக்கும் பொறுப்பு இரு மகன்களுக்கும் உள்ள காரணத்தால் , ஒவ்வொரு மகனும் ஆறு மாதங்கள் முறைவைத்துத் தாயைப் பராமரிக்க வேண்டும் என்றும் உயிலில் எழுதி வைத்துவிட்டுக் கண்ணை மூடினான்.

இரண்டு மகன்களும் திருமணம் செய்துகொண்டு நிம்மதியாக வாழ்ந்துவந்தனர். பெற்ற தாயையும் முறைவைத்து மனம்நோகாமல் காத்துவந்தனர்.
இவ்வாறு இருக்கையில் , இரண்டு மகன்களுடைய வாழ்க்கையிலும் விதி விளையாட ஆரம்பித்தது.

பெரிய மகன் தனசேகரனுக்குத் தீய நண்பர்களுடைய சகவாசம் ஏற்பட்டது. அதன் காரணமாகக் குடிப்பழக்கத்திற்கு அடிமையானான். வேசியர் வீட்டுக்குச் சென்று பெரும்பொருள் தொலைத்தான். மீதியிருந்த சொத்தையும் சூதாடித் தொலைத்தான். எல்லாவற்றையும் இழந்து நடுத்தெருவிற்கு வந்துவிட்டான். தன மகனின் நிலைகண்டு வேதனைப்பட்டாள் அவனது தாய். அவள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் , தனசேகரன் கேட்பதாக இல்லை. இனி அவனைத் திருத்தமுடியாது என்று தெரிந்துகொண்ட அவள், அவனுக்குப் பாரமாக இருக்க விரும்பவில்லை. ஒருநாள் சொல்லாமல், கொள்ளாமல் தனசேகரனை விட்டு நீங்கி, குணசேகரன் வீட்டுக்கு வந்தாள்.

குணசேகரனின் நிலைமையோ, அவன் அண்ணன் தனசேகரன் நிலைமையைவிட மோசமாக இருந்தது. மளிகைக்கடை வியாபாரத்தில், கொடுத்த கடனை வசூல் செய்ய முடியாததால், பெரும் நஷ்டம் ஏற்பட்டது. நிதி நிறுவனம் ஒன்றில் குணசேகரன் , அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு , லட்சக்கணக்கில் முதலீடு செய்திருந்தான். அந்த நிதி நிறுவனத்தின் முதலாளி ,ஒருநாள் இரவோடு இரவாக எல்லாப் பணத்தையும் சுருட்டிக்கொண்டு கம்பி நீட்டிவிட்டான். மீதியிருந்த கொஞ்சநஞ்ச பணத்தையும், தன் மனைவியின் புற்றுநோய் அறுவை சிகிச்சைக்காக செலவிட்டிருந்தான். அடுத்தவேளை சோற்றுக்குக் கூட வழியில்லாமல் அலைந்து கொண்டிருந்தான். அவன் நிலையைக்கண்ட தாய், அவனுக்காக ரொம்பவும் பரிதாபப் பட்டாள். தன் இளைய மகனுக்கும் பாரமாக இருக்க அவள் விரும்பவில்லை. ஒருநாள் அவனிடம் சொல்லாமல் வீட்டைவிட்டு வெளியேறினாள்.

தனசேகரனும், குணசேகரனும் கூலிவேலை செய்து குடும்பத்தைக் காப்பற்றி வந்தனர். சொல்லாமல், கொள்ளாமல் போன தாயைப் பல இடங்களிலும் தேடி அலைந்தனர்.

இந்த நிலையில் குணசேகரனின் நண்பன் ஒருவன் ஒருநாள் குணசேகரனைப் பார்க்க வந்தான். அவனைப் பெற்ற தாய் , பக்கத்து ஊரில் பிச்சை எடுப்பதாச் சொன்னான். இதனைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த குணசேகரன், தன் அண்ணனை அழைத்துக் கொண்டு பக்கத்து ஊருக்குச் சென்றான். அங்கே பேருந்து நிலையத்தில், தங்களைப் பெற்றதாய் பிச்சை எடுக்கும் காட்சியைக்கண்டு கண்ணீர் வடித்தனர். அவளது காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டனர். மீண்டும் வீட்டுக்கு வருமாறு கெஞ்சிக் கேட்டுக் கொண்டனர். முதலில் மறுத்த அந்தத் தாய் பிறகு வருவதற்கு ஒப்புக் கொண்டாள். ஆனால் குணசேகரன் வீட்டிலேயே தங்கியிருப்பதாகவும், பெரியவன் தனசேகரன் வீட்டுக்கு எப்போதும் வரமுடியாது என்றும் உறுதியாகத் தெரிவித்துவிட்டாள். இந்த நிபந்தனைக்கு ஒத்துக்கொள்ளாவிட்டால் தன்னை விட்டுவிடுமாறும், தான் வழக்கம்போல் பிச்சை எடுத்துப் பிழைத்துக் கொள்வதாகவும் தெரிவித்துவிட்டாள். வேறுவழியின்றி இருவரும் தாயின் நிபந்தனைக்கு ஒத்துக்கொண்டனர்.

கதையைச் சொல்லிமுடித்த வேதாளம்," விக்கிரமா! குணசேகரனின் வீட்டுக்கு வருவதற்கு ஒத்துக்கொண்ட தாய், பெரியவன் தனசேகரனின் வீட்டுக்குப் போக மறுத்தது ஏன்? இதற்குச் சரியான விடை சொல்லாவிட்டால் உன் தலை வெடித்துச் சுக்கு நூறாகச் சிதறிவிடும்." என்று சொன்னது.

உடனே விக்கிரமன்," வேதாளமே! இருவருமே வறுமையில் வாடினாலும், வறுமை வந்தவிதம் மாறுபட்டது. வியாபாரத்தில் நஷ்டம், நிதி நிறுவனக்காரனின் மோசடி, மனைவியின் மருத்துவச் செலவு ஆகிய காரணங்களால் குணசேகரனுக்கு வறுமை வந்தது. இந்த வறுமைக்கு அவன் காரணமல்ல! இந்த வறுமை நீதிக்கு உட்பட்டது; இந்த வறுமையை அய்யன் திருவள்ளுவர், அறன் சார்ந்த நல்குரவு என்று கூறி அதனை நியாயப் படுத்துகிறார். ஆனால் தனசேகரனுக்கு குடிப்பழக்கம், வேசியர் தொடர்பு, சூதாடுதல் ஆகிய நீதிக்குப் புறம்பான செயல்களால் வறுமை வந்தது. அவனுடைய வறுமைக்கு அவனே முழுப்பொறுப்பு. நீதிக்கு அப்பாற்பட்ட இந்த வறுமையை, அய்யன் திருவள்ளுவர் ," அறன் சாரா நல்குரவு " எனக் குறிப்பிடுகின்றார். பெற்ற தாய் பலமுறை இடித்துக் கூறியும், தனசேகரன் திருந்தவில்லை. ஆகவே தங்குவதற்கு இளைய மகனின் வீட்டை அந்தத் தாய் தேர்ந்தெடுத்ததில் எந்தத் தவறும் இல்லை." என்று கூறினான்.

விக்கிரமாதித்தனின் இந்த சரியான பதிலால் ,வேதாளம் திருப்தி அடைந்தது. மீண்டும் அது பறந்துசென்று முருங்கை மரத்தின்மீது ஏறிக்கொண்டது.

குறள்:
=====
அறன்சாரா நல்குரவு ஈன்ற தாயானும்
பிறன்போல நோக்கப் படும்.

பொருள்:
=======

அறத்திற்குப் புறம்பான செயல்களைச் செய்து ஒருவனுக்கு வறுமை வந்தால், அவனைப் பெற்ற தாய்கூட , அவனைச் சொந்தம் கொண்டாட மாட்டாள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 13, 2015 10:30 pm

சிறந்த நீதிக் கதை! பகிர்வுக்கு நன்றி ஜகதீசன்!



நவீன விக்கிரமாதித்தன்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Tue Jul 14, 2015 4:05 am

அருமையான கதை அய்யா . இது போல் நீங்கள் நிறைய "திருக்குறள் கூறும் நீதி கதை " களை எங்களுக்கு சொல்ல வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் அய்யா . நவீன விக்கிரமாதித்தன்  103459460 நவீன விக்கிரமாதித்தன்  1571444738

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84108
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jul 14, 2015 7:52 am

நவீன விக்கிரமாதித்தன்  4qEa8sOLRD6EysC4mdXV+vikki
-
நவீன விக்கிரமாதித்தன்  103459460 நவீன விக்கிரமாதித்தன்  3838410834

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Jul 14, 2015 8:07 am

சிவா wrote:சிறந்த நீதிக் கதை! பகிர்வுக்கு நன்றி ஜகதீசன்!
மேற்கோள் செய்த பதிவு: 1150751

சிவாவின் பாராட்டுக்கு நன்றி . இது பகிர்வு அல்ல . என் சொந்தக் கற்பனைதான் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Jul 14, 2015 8:08 am

ஷோபனா மற்றும் அய்யாசாமி ராம் அவர்களின் பாராட்டுக்கு நன்றி .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 14, 2015 9:29 am

M.Jagadeesan wrote:
சிவா wrote:சிறந்த நீதிக் கதை! பகிர்வுக்கு நன்றி ஜகதீசன்!
மேற்கோள் செய்த பதிவு: 1150751

சிவாவின் பாராட்டுக்கு நன்றி . இது பகிர்வு அல்ல . என் சொந்தக் கற்பனைதான் .
மேற்கோள் செய்த பதிவு: 1150781
மன்னிக்கவும், சொந்தக் கதை என்பதை அறியாமல் கூறிவிட்டேன்.

சிறந்த நீதிக் கதையை வழங்கியதற்கு நன்றி.



நவீன விக்கிரமாதித்தன்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 15, 2015 5:52 pm

மிக நல்ல கதை ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக