Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
நவீன விக்கிரமாதித்தன்
5 posters
Page 1 of 1
நவீன விக்கிரமாதித்தன்
தன் முயற்சியில் சற்றும் மனம் தளரா விக்கிரமாதித்தன் , மீண்டும் முருங்கை மரத்தின் மீதேறி , வேதாளத்தை இறக்கித் தன் தோளில் சுமந்துகொண்டு மயானத்தை நோக்கி நடக்கத் தொடங்கினான்.
வேதாளம், ஹஹ்ஹா! ஹஹ்ஹா! என்று பலமாகச் சிரித்து ," விக்கிரமா! உன் தளராத முயற்சியைப் பாராட்டுகிறேன்; உனக்கு வழிநடைக் களைப்புத் தெரியாமல் இருக்கக் கதையொன்று சொல்கிறேன்; நன்றாக் கவனித்துக் கேட்பாயாக! கதையின் முடிவில் உன்னிடம் ஒரு கேள்வி கேட்பேன்; அதற்கு சரியான பதில் கூறாவிட்டால் , உன் தலை வெடித்து சுக்கு நூறாகச் சிதறிவிடும் !" என்று எச்சரிக்கை செய்தது.
விக்கிரமனும்," சரி! வேதாளமே! கதையைச் சொல் !" என்று சொன்னான்.
" காவிரிப் பட்டணம் என்ற ஊரில் முன்னொரு காலத்தில் , சந்திரசேகரன் என்ற செல்வந்தன் ஒருவன் இருந்தான். அவனுக்குக் கோடிக்கணக்கான மதிப்புடைய சொத்துக்கள் இருந்தன.தனசேகரன், குணசேகரன் என்ற இரண்டு மகன்கள் இருந்தனர். தன் மனைவி லட்சுமியுடன் சீரும் சிறப்புமாக அவன் வாழ்ந்து வந்தான்.
திடீரென்று சந்திரசேகரன் ஒருநாள் நோய்வாய்ப் பட்டான். வயதான காரணத்தால், மருத்துவர்கள் கொடுத்த மருந்துகளால் பயன் ஏதும் ஏற்படவில்லை. தன் அந்திம காலம் நெருங்கிவிட்டதை அறிந்த சந்திரசேகரன் தன் சொத்துக்களைச் சரிபாதியாகப் பிரித்துத் தன் இரு மகன்களுக்கும் உயில் எழுதி வைத்தான். தாயைக் கவனிக்கும் பொறுப்பு இரு மகன்களுக்கும் உள்ள காரணத்தால் , ஒவ்வொரு மகனும் ஆறு மாதங்கள் முறைவைத்துத் தாயைப் பராமரிக்க வேண்டும் என்றும் உயிலில் எழுதி வைத்துவிட்டுக் கண்ணை மூடினான்.
இரண்டு மகன்களும் திருமணம் செய்துகொண்டு நிம்மதியாக வாழ்ந்துவந்தனர். பெற்ற தாயையும் முறைவைத்து மனம்நோகாமல் காத்துவந்தனர்.
இவ்வாறு இருக்கையில் , இரண்டு மகன்களுடைய வாழ்க்கையிலும் விதி விளையாட ஆரம்பித்தது.
பெரிய மகன் தனசேகரனுக்குத் தீய நண்பர்களுடைய சகவாசம் ஏற்பட்டது. அதன் காரணமாகக் குடிப்பழக்கத்திற்கு அடிமையானான். வேசியர் வீட்டுக்குச் சென்று பெரும்பொருள் தொலைத்தான். மீதியிருந்த சொத்தையும் சூதாடித் தொலைத்தான். எல்லாவற்றையும் இழந்து நடுத்தெருவிற்கு வந்துவிட்டான். தன மகனின் நிலைகண்டு வேதனைப்பட்டாள் அவனது தாய். அவள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் , தனசேகரன் கேட்பதாக இல்லை. இனி அவனைத் திருத்தமுடியாது என்று தெரிந்துகொண்ட அவள், அவனுக்குப் பாரமாக இருக்க விரும்பவில்லை. ஒருநாள் சொல்லாமல், கொள்ளாமல் தனசேகரனை விட்டு நீங்கி, குணசேகரன் வீட்டுக்கு வந்தாள்.
குணசேகரனின் நிலைமையோ, அவன் அண்ணன் தனசேகரன் நிலைமையைவிட மோசமாக இருந்தது. மளிகைக்கடை வியாபாரத்தில், கொடுத்த கடனை வசூல் செய்ய முடியாததால், பெரும் நஷ்டம் ஏற்பட்டது. நிதி நிறுவனம் ஒன்றில் குணசேகரன் , அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு , லட்சக்கணக்கில் முதலீடு செய்திருந்தான். அந்த நிதி நிறுவனத்தின் முதலாளி ,ஒருநாள் இரவோடு இரவாக எல்லாப் பணத்தையும் சுருட்டிக்கொண்டு கம்பி நீட்டிவிட்டான். மீதியிருந்த கொஞ்சநஞ்ச பணத்தையும், தன் மனைவியின் புற்றுநோய் அறுவை சிகிச்சைக்காக செலவிட்டிருந்தான். அடுத்தவேளை சோற்றுக்குக் கூட வழியில்லாமல் அலைந்து கொண்டிருந்தான். அவன் நிலையைக்கண்ட தாய், அவனுக்காக ரொம்பவும் பரிதாபப் பட்டாள். தன் இளைய மகனுக்கும் பாரமாக இருக்க அவள் விரும்பவில்லை. ஒருநாள் அவனிடம் சொல்லாமல் வீட்டைவிட்டு வெளியேறினாள்.
தனசேகரனும், குணசேகரனும் கூலிவேலை செய்து குடும்பத்தைக் காப்பற்றி வந்தனர். சொல்லாமல், கொள்ளாமல் போன தாயைப் பல இடங்களிலும் தேடி அலைந்தனர்.
இந்த நிலையில் குணசேகரனின் நண்பன் ஒருவன் ஒருநாள் குணசேகரனைப் பார்க்க வந்தான். அவனைப் பெற்ற தாய் , பக்கத்து ஊரில் பிச்சை எடுப்பதாச் சொன்னான். இதனைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த குணசேகரன், தன் அண்ணனை அழைத்துக் கொண்டு பக்கத்து ஊருக்குச் சென்றான். அங்கே பேருந்து நிலையத்தில், தங்களைப் பெற்றதாய் பிச்சை எடுக்கும் காட்சியைக்கண்டு கண்ணீர் வடித்தனர். அவளது காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டனர். மீண்டும் வீட்டுக்கு வருமாறு கெஞ்சிக் கேட்டுக் கொண்டனர். முதலில் மறுத்த அந்தத் தாய் பிறகு வருவதற்கு ஒப்புக் கொண்டாள். ஆனால் குணசேகரன் வீட்டிலேயே தங்கியிருப்பதாகவும், பெரியவன் தனசேகரன் வீட்டுக்கு எப்போதும் வரமுடியாது என்றும் உறுதியாகத் தெரிவித்துவிட்டாள். இந்த நிபந்தனைக்கு ஒத்துக்கொள்ளாவிட்டால் தன்னை விட்டுவிடுமாறும், தான் வழக்கம்போல் பிச்சை எடுத்துப் பிழைத்துக் கொள்வதாகவும் தெரிவித்துவிட்டாள். வேறுவழியின்றி இருவரும் தாயின் நிபந்தனைக்கு ஒத்துக்கொண்டனர்.
கதையைச் சொல்லிமுடித்த வேதாளம்," விக்கிரமா! குணசேகரனின் வீட்டுக்கு வருவதற்கு ஒத்துக்கொண்ட தாய், பெரியவன் தனசேகரனின் வீட்டுக்குப் போக மறுத்தது ஏன்? இதற்குச் சரியான விடை சொல்லாவிட்டால் உன் தலை வெடித்துச் சுக்கு நூறாகச் சிதறிவிடும்." என்று சொன்னது.
உடனே விக்கிரமன்," வேதாளமே! இருவருமே வறுமையில் வாடினாலும், வறுமை வந்தவிதம் மாறுபட்டது. வியாபாரத்தில் நஷ்டம், நிதி நிறுவனக்காரனின் மோசடி, மனைவியின் மருத்துவச் செலவு ஆகிய காரணங்களால் குணசேகரனுக்கு வறுமை வந்தது. இந்த வறுமைக்கு அவன் காரணமல்ல! இந்த வறுமை நீதிக்கு உட்பட்டது; இந்த வறுமையை அய்யன் திருவள்ளுவர், அறன் சார்ந்த நல்குரவு என்று கூறி அதனை நியாயப் படுத்துகிறார். ஆனால் தனசேகரனுக்கு குடிப்பழக்கம், வேசியர் தொடர்பு, சூதாடுதல் ஆகிய நீதிக்குப் புறம்பான செயல்களால் வறுமை வந்தது. அவனுடைய வறுமைக்கு அவனே முழுப்பொறுப்பு. நீதிக்கு அப்பாற்பட்ட இந்த வறுமையை, அய்யன் திருவள்ளுவர் ," அறன் சாரா நல்குரவு " எனக் குறிப்பிடுகின்றார். பெற்ற தாய் பலமுறை இடித்துக் கூறியும், தனசேகரன் திருந்தவில்லை. ஆகவே தங்குவதற்கு இளைய மகனின் வீட்டை அந்தத் தாய் தேர்ந்தெடுத்ததில் எந்தத் தவறும் இல்லை." என்று கூறினான்.
விக்கிரமாதித்தனின் இந்த சரியான பதிலால் ,வேதாளம் திருப்தி அடைந்தது. மீண்டும் அது பறந்துசென்று முருங்கை மரத்தின்மீது ஏறிக்கொண்டது.
குறள்:
=====
அறன்சாரா நல்குரவு ஈன்ற தாயானும்
பிறன்போல நோக்கப் படும்.
பொருள்:
=======
அறத்திற்குப் புறம்பான செயல்களைச் செய்து ஒருவனுக்கு வறுமை வந்தால், அவனைப் பெற்ற தாய்கூட , அவனைச் சொந்தம் கொண்டாட மாட்டாள்.
வேதாளம், ஹஹ்ஹா! ஹஹ்ஹா! என்று பலமாகச் சிரித்து ," விக்கிரமா! உன் தளராத முயற்சியைப் பாராட்டுகிறேன்; உனக்கு வழிநடைக் களைப்புத் தெரியாமல் இருக்கக் கதையொன்று சொல்கிறேன்; நன்றாக் கவனித்துக் கேட்பாயாக! கதையின் முடிவில் உன்னிடம் ஒரு கேள்வி கேட்பேன்; அதற்கு சரியான பதில் கூறாவிட்டால் , உன் தலை வெடித்து சுக்கு நூறாகச் சிதறிவிடும் !" என்று எச்சரிக்கை செய்தது.
விக்கிரமனும்," சரி! வேதாளமே! கதையைச் சொல் !" என்று சொன்னான்.
" காவிரிப் பட்டணம் என்ற ஊரில் முன்னொரு காலத்தில் , சந்திரசேகரன் என்ற செல்வந்தன் ஒருவன் இருந்தான். அவனுக்குக் கோடிக்கணக்கான மதிப்புடைய சொத்துக்கள் இருந்தன.தனசேகரன், குணசேகரன் என்ற இரண்டு மகன்கள் இருந்தனர். தன் மனைவி லட்சுமியுடன் சீரும் சிறப்புமாக அவன் வாழ்ந்து வந்தான்.
திடீரென்று சந்திரசேகரன் ஒருநாள் நோய்வாய்ப் பட்டான். வயதான காரணத்தால், மருத்துவர்கள் கொடுத்த மருந்துகளால் பயன் ஏதும் ஏற்படவில்லை. தன் அந்திம காலம் நெருங்கிவிட்டதை அறிந்த சந்திரசேகரன் தன் சொத்துக்களைச் சரிபாதியாகப் பிரித்துத் தன் இரு மகன்களுக்கும் உயில் எழுதி வைத்தான். தாயைக் கவனிக்கும் பொறுப்பு இரு மகன்களுக்கும் உள்ள காரணத்தால் , ஒவ்வொரு மகனும் ஆறு மாதங்கள் முறைவைத்துத் தாயைப் பராமரிக்க வேண்டும் என்றும் உயிலில் எழுதி வைத்துவிட்டுக் கண்ணை மூடினான்.
இரண்டு மகன்களும் திருமணம் செய்துகொண்டு நிம்மதியாக வாழ்ந்துவந்தனர். பெற்ற தாயையும் முறைவைத்து மனம்நோகாமல் காத்துவந்தனர்.
இவ்வாறு இருக்கையில் , இரண்டு மகன்களுடைய வாழ்க்கையிலும் விதி விளையாட ஆரம்பித்தது.
பெரிய மகன் தனசேகரனுக்குத் தீய நண்பர்களுடைய சகவாசம் ஏற்பட்டது. அதன் காரணமாகக் குடிப்பழக்கத்திற்கு அடிமையானான். வேசியர் வீட்டுக்குச் சென்று பெரும்பொருள் தொலைத்தான். மீதியிருந்த சொத்தையும் சூதாடித் தொலைத்தான். எல்லாவற்றையும் இழந்து நடுத்தெருவிற்கு வந்துவிட்டான். தன மகனின் நிலைகண்டு வேதனைப்பட்டாள் அவனது தாய். அவள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் , தனசேகரன் கேட்பதாக இல்லை. இனி அவனைத் திருத்தமுடியாது என்று தெரிந்துகொண்ட அவள், அவனுக்குப் பாரமாக இருக்க விரும்பவில்லை. ஒருநாள் சொல்லாமல், கொள்ளாமல் தனசேகரனை விட்டு நீங்கி, குணசேகரன் வீட்டுக்கு வந்தாள்.
குணசேகரனின் நிலைமையோ, அவன் அண்ணன் தனசேகரன் நிலைமையைவிட மோசமாக இருந்தது. மளிகைக்கடை வியாபாரத்தில், கொடுத்த கடனை வசூல் செய்ய முடியாததால், பெரும் நஷ்டம் ஏற்பட்டது. நிதி நிறுவனம் ஒன்றில் குணசேகரன் , அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு , லட்சக்கணக்கில் முதலீடு செய்திருந்தான். அந்த நிதி நிறுவனத்தின் முதலாளி ,ஒருநாள் இரவோடு இரவாக எல்லாப் பணத்தையும் சுருட்டிக்கொண்டு கம்பி நீட்டிவிட்டான். மீதியிருந்த கொஞ்சநஞ்ச பணத்தையும், தன் மனைவியின் புற்றுநோய் அறுவை சிகிச்சைக்காக செலவிட்டிருந்தான். அடுத்தவேளை சோற்றுக்குக் கூட வழியில்லாமல் அலைந்து கொண்டிருந்தான். அவன் நிலையைக்கண்ட தாய், அவனுக்காக ரொம்பவும் பரிதாபப் பட்டாள். தன் இளைய மகனுக்கும் பாரமாக இருக்க அவள் விரும்பவில்லை. ஒருநாள் அவனிடம் சொல்லாமல் வீட்டைவிட்டு வெளியேறினாள்.
தனசேகரனும், குணசேகரனும் கூலிவேலை செய்து குடும்பத்தைக் காப்பற்றி வந்தனர். சொல்லாமல், கொள்ளாமல் போன தாயைப் பல இடங்களிலும் தேடி அலைந்தனர்.
இந்த நிலையில் குணசேகரனின் நண்பன் ஒருவன் ஒருநாள் குணசேகரனைப் பார்க்க வந்தான். அவனைப் பெற்ற தாய் , பக்கத்து ஊரில் பிச்சை எடுப்பதாச் சொன்னான். இதனைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த குணசேகரன், தன் அண்ணனை அழைத்துக் கொண்டு பக்கத்து ஊருக்குச் சென்றான். அங்கே பேருந்து நிலையத்தில், தங்களைப் பெற்றதாய் பிச்சை எடுக்கும் காட்சியைக்கண்டு கண்ணீர் வடித்தனர். அவளது காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டனர். மீண்டும் வீட்டுக்கு வருமாறு கெஞ்சிக் கேட்டுக் கொண்டனர். முதலில் மறுத்த அந்தத் தாய் பிறகு வருவதற்கு ஒப்புக் கொண்டாள். ஆனால் குணசேகரன் வீட்டிலேயே தங்கியிருப்பதாகவும், பெரியவன் தனசேகரன் வீட்டுக்கு எப்போதும் வரமுடியாது என்றும் உறுதியாகத் தெரிவித்துவிட்டாள். இந்த நிபந்தனைக்கு ஒத்துக்கொள்ளாவிட்டால் தன்னை விட்டுவிடுமாறும், தான் வழக்கம்போல் பிச்சை எடுத்துப் பிழைத்துக் கொள்வதாகவும் தெரிவித்துவிட்டாள். வேறுவழியின்றி இருவரும் தாயின் நிபந்தனைக்கு ஒத்துக்கொண்டனர்.
கதையைச் சொல்லிமுடித்த வேதாளம்," விக்கிரமா! குணசேகரனின் வீட்டுக்கு வருவதற்கு ஒத்துக்கொண்ட தாய், பெரியவன் தனசேகரனின் வீட்டுக்குப் போக மறுத்தது ஏன்? இதற்குச் சரியான விடை சொல்லாவிட்டால் உன் தலை வெடித்துச் சுக்கு நூறாகச் சிதறிவிடும்." என்று சொன்னது.
உடனே விக்கிரமன்," வேதாளமே! இருவருமே வறுமையில் வாடினாலும், வறுமை வந்தவிதம் மாறுபட்டது. வியாபாரத்தில் நஷ்டம், நிதி நிறுவனக்காரனின் மோசடி, மனைவியின் மருத்துவச் செலவு ஆகிய காரணங்களால் குணசேகரனுக்கு வறுமை வந்தது. இந்த வறுமைக்கு அவன் காரணமல்ல! இந்த வறுமை நீதிக்கு உட்பட்டது; இந்த வறுமையை அய்யன் திருவள்ளுவர், அறன் சார்ந்த நல்குரவு என்று கூறி அதனை நியாயப் படுத்துகிறார். ஆனால் தனசேகரனுக்கு குடிப்பழக்கம், வேசியர் தொடர்பு, சூதாடுதல் ஆகிய நீதிக்குப் புறம்பான செயல்களால் வறுமை வந்தது. அவனுடைய வறுமைக்கு அவனே முழுப்பொறுப்பு. நீதிக்கு அப்பாற்பட்ட இந்த வறுமையை, அய்யன் திருவள்ளுவர் ," அறன் சாரா நல்குரவு " எனக் குறிப்பிடுகின்றார். பெற்ற தாய் பலமுறை இடித்துக் கூறியும், தனசேகரன் திருந்தவில்லை. ஆகவே தங்குவதற்கு இளைய மகனின் வீட்டை அந்தத் தாய் தேர்ந்தெடுத்ததில் எந்தத் தவறும் இல்லை." என்று கூறினான்.
விக்கிரமாதித்தனின் இந்த சரியான பதிலால் ,வேதாளம் திருப்தி அடைந்தது. மீண்டும் அது பறந்துசென்று முருங்கை மரத்தின்மீது ஏறிக்கொண்டது.
குறள்:
=====
அறன்சாரா நல்குரவு ஈன்ற தாயானும்
பிறன்போல நோக்கப் படும்.
பொருள்:
=======
அறத்திற்குப் புறம்பான செயல்களைச் செய்து ஒருவனுக்கு வறுமை வந்தால், அவனைப் பெற்ற தாய்கூட , அவனைச் சொந்தம் கொண்டாட மாட்டாள்.
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: நவீன விக்கிரமாதித்தன்
சிறந்த நீதிக் கதை! பகிர்வுக்கு நன்றி ஜகதீசன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நவீன விக்கிரமாதித்தன்
அருமையான கதை அய்யா . இது போல் நீங்கள் நிறைய "திருக்குறள் கூறும் நீதி கதை " களை எங்களுக்கு சொல்ல வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் அய்யா .
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: நவீன விக்கிரமாதித்தன்
மேற்கோள் செய்த பதிவு: 1150751சிவா wrote:சிறந்த நீதிக் கதை! பகிர்வுக்கு நன்றி ஜகதீசன்!
சிவாவின் பாராட்டுக்கு நன்றி . இது பகிர்வு அல்ல . என் சொந்தக் கற்பனைதான் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: நவீன விக்கிரமாதித்தன்
ஷோபனா மற்றும் அய்யாசாமி ராம் அவர்களின் பாராட்டுக்கு நன்றி .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: நவீன விக்கிரமாதித்தன்
மேற்கோள் செய்த பதிவு: 1150781M.Jagadeesan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1150751சிவா wrote:சிறந்த நீதிக் கதை! பகிர்வுக்கு நன்றி ஜகதீசன்!
சிவாவின் பாராட்டுக்கு நன்றி . இது பகிர்வு அல்ல . என் சொந்தக் கற்பனைதான் .
மன்னிக்கவும், சொந்தக் கதை என்பதை அறியாமல் கூறிவிட்டேன்.
சிறந்த நீதிக் கதையை வழங்கியதற்கு நன்றி.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நவீன விக்கிரமாதித்தன்
மிக நல்ல கதை ஐயா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» தும்பைப் பூ சட்டை - தா.வே. விக்கிரமாதித்தன்
» ஆண்ட இனம் ஏன் அடிமையானது? மலேசியாவில் விக்கிரமாதித்தன்
» விக்கிரமாதித்தன்,தெனாலிராமன்,பீர்பால்,முல்லா கதைகள் தமிழில் இலவசமாக டவுன்லோட் செய்ய
» நவீன அ...ஆ..
» நவீன திருவிளையாடல்
» ஆண்ட இனம் ஏன் அடிமையானது? மலேசியாவில் விக்கிரமாதித்தன்
» விக்கிரமாதித்தன்,தெனாலிராமன்,பீர்பால்,முல்லா கதைகள் தமிழில் இலவசமாக டவுன்லோட் செய்ய
» நவீன அ...ஆ..
» நவீன திருவிளையாடல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|