Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பில்லா , ரங்கா
4 posters
Page 1 of 1
பில்லா , ரங்கா
பக்கத்து ஊரில் நடைபெறும் ஒரு திருமணத்தில் கலந்து கொள்வதற்காக பரமசிவ முதலியார் கிளம்பினார். தன் வீட்டில் வேலை செய்யும் பில்லா, ரங்கா ஆகிய இரண்டு வேலையாட்களையும் துணைக்கு அழைத்துக்கொண்டார்.
முதலியார் ,வீட்டைப் பூட்டும் சமயத்தில் ரங்கா , முதலியாரைப் பார்த்து," ஐயா ! செல்போன், ATM கார்டு ஆகியவற்றை எடுத்துக் கொண்டீர்களா? சமயத்தில் உதவும்; கையோடு குடையையும் எடுத்துக் கொள்ளுங்கள் ! மழை வரும்போல இருக்கிறது." என்று சொன்னான்.
" சரியாகச் சொன்னாய் ரங்கா!" என்று சொல்லிவிட்டு , முதலியார் வீட்டினுள் சென்று செல்போன், ATM கார்டு,குடை ஆகியவற்றை எடுத்துக்கொண்டார். வீட்டைப் பூட்டிவிட்டு மூவரும் கிளம்பினர்.
பேருந்து நிலையம் அடைந்தனர்.
திடீரென முதலியாருக்கு ஒரு சந்தேகம் வந்துவிட்டது. வீட்டைச் சரியாகப் பூட்டவில்லையோ என்று சந்தேகப்பட்டார்.
" பில்லா !, ரங்கா ! வீட்டைச் சரியாகப் பூட்டினேனா இல்லையா என்ற சந்தேகம் வந்துவிட்டது. " என்றார் முதலியார்.
உடனே ரங்கா, " ஐயா ! கொஞ்சமும் கவலைப்படவேண்டாம். நீங்கள் வீட்டைப் பூட்டும்போது நான் கவனித்தேன்; சரியாகத்தான் பூட்டினீர்கள். பூட்டை நான் இழுத்துப் பார்த்தேன். எனவே சந்தேகம் வேண்டாம். " என்று சொன்னான்.
ஆனாலும் முதலியாருக்கு சந்தேகம் தீர்ந்தபாடில்லை. தயக்கத்துடன் நின்றுகொண்டு இருந்தார். உடனே ரங்கா,
" ஐயா ! சாவியைக் கொடுங்கள் ; வேண்டுமானால் தங்களுடைய திருப்திக்காக நான் போய் பார்த்துவிட்டு வருகிறேன். " என்று சொன்னான்.
ரங்காவை நம்பி வீட்டு சாவியைக் கொடுக்க முதலியார் தயங்கினார். ஆறு மாதங்களுக்கு முன்புதான் ரங்காவை , முதலியார் வீட்டு வேலைக்கு சேர்த்துக்கொண்டார். பில்லா அந்த வீட்டில் ஐந்து ஆண்டுகளாக வேலை செய்கிறான். ரங்காவை நம்பி வீட்டு சாவியைக் கொடுத்தால், அவன் வீட்டில் உள்ளதை எல்லாம் சுருட்டிக்கொண்டு கம்பி நீட்டிவிட்டால் என்ன செய்வது என்று யோசித்தார். உடனே பில்லாவைப் பார்த்து,
" பில்லா! நீ போய் பார்த்துவிட்டு வா ! " என்றார்.
" சரி ஐயா ! " என்று சொல்லிவிட்டு பில்லா கிளம்பினான். அவன் சிறிதுதூரம் சென்றவுடன் முதலியார்,
" முட்டாளே ! சாவி வாங்காமல் போகிறாயே ! பூட்டு சரியாகப் பூட்டாமல் இருந்தால் என்ன செய்வாய் ?" என்று கோபித்தார் முதலியார்.
" ஐயா ! மறந்துவிட்டேன். " என்று சொல்லித் தலையைச் சொறிந்தான் பில்லா.
பில்லா வீட்டை நெருங்கும் சமயத்தில் மழை பிடித்துக்கொண்டது. அருகிலிருந்த ஒரு மரத்தின் கீழே ஒதுங்கினான் பில்லா.
அப்போது அங்குவந்த வழிப்போக்கன் ஒருவன் பில்லாவைப் பார்த்து,
" தம்பி ! இது உங்க வீடா ? "என்று கேட்டான்.
" இல்லை ; என் முதலாளி வீடு. பஸ் ஸ்டாண்டில் முதலாளி காத்துக்கொண்டு இருக்கிறார். வீடு சரியாகப் பூட்டி இருக்கிறதா என்று என்னைப் பார்த்துவிட்டு வரச் சொன்னார். அதான் வந்தேன். அதற்குள் இப்படி மழை பிடித்துக்கொண்டது." என்றான் பில்லா.
உடனே வழிப்போக்கன்," அவ்வளவுதானே ! நீ இங்கேயே இரு தம்பி ! சாவியைக் கொடு. நான் போய் பார்த்துவிட்டு வருகிறேன். பூட்டாமல் இருந்தால் நான் போய் சரியாகப் பூட்டிவிட்டு வருகிறேன்; வீணாக நீ ஏன் மழையில் நனையவேண்டும் ?" என்று சொன்னான்.
உடனே பில்லா , வழிப்போக்கனிடம் சாவியைக் கொடுத்தான்.
சாவியை வாங்கிக்கொண்ட வழிப்போக்கன் வீட்டின் கதவருகில் சென்றான். பூட்டை இழுத்துப் பார்த்தான். சரியாகப் பூட்டி இருந்ததைக் கண்டான். உடனே சாவியைப் பூட்டில் செருகி பூட்டைத் திறந்தான். பூட்டைத் திறந்த நிலையில் வைத்துவிட்டு பில்லாவிடம் வந்து,
" தம்பி ! நீ இங்கு வந்தது நல்லதாப் போச்சு ! பூட்டு சரியாகப் பூட்டப்படாமல் இருந்தது. நான் சரியாகப் பூட்டிவிட்டேன்." என்று சொல்லி சாவியை பில்லாவிடம் கொடுத்தான்.
" ரொம்பவும் நன்றி ஐயா !" என்று சொல்லிவிட்டு பில்லா முதலியாரிடம் சென்றான். மழையும் விட்டிருந்தது.
பில்லாவைப் பார்த்த முதலியார், " என்ன பில்லா! வீடு பூட்டியிருந்ததா ?"
" இல்லை ஐயா ! பூட்டு சரியாக பூட்டப்படாமல் இருந்தது. "
" நான் நினைத்தது சரியாப் போச்சு. உன்னை அனுப்பினது நல்லதாப் போச்சு. இப்ப பூட்ட சரியாப் பூட்டுனியா ?"
" ஆம் ஐயா! சரியாகப் பூட்டிவிட்டான். "
" பூட்டிவிட்டானா ! அப்ப நீ பூட்டவில்லையா ?"
பில்லா நடந்ததைச் சொன்னவுடன், முதலியார் தீயை மிதித்தவர் போல ஆனார்.
" மூளையில்லா முண்டமே ! முன்பின் தெரியாத ஒருவனிடம் சாவியைக் கொடுத்து வீட்டைப் பூட்டச் சொல்லியிருக்கியே ! அவன் என்ன செஞ்சானோ ஏது செஞ்சானோ தெரியலையே " என்று பதறி அடித்துக்கொண்டு வீட்டை நோக்கி ஓடினார் முதலியார். அங்கே
வீடு திறந்துகிடந்தது. வீட்டின் உள்ளே நுழைந்த முதலியார் பீரோவைப் பார்த்தார். பீரோவிலிருந்த நகைகள், ரொக்கப் பணம் எல்லாம் கொள்ளையடிக்கப்பட்டு சுத்தமாக துடைத்து வைக்கப்பட்டு இருந்தது.
' அய்யய்யோ ! எல்லாம் போச்சே ! ' என்று முதலியார் தலையில் அடித்துக்கொண்டார்.
குறள்:
=====
தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும். ( தெரிந்து தெளிதல்-510 )
கருத்து:
=======
ஒருவனை ஆராயாது தெளிதலும், ஆராய்ந்து தெளிந்தவன் மாட்டு ஐயப்படுதலும் நீங்காத துன்பத்தைக் கொடுக்கும்.
முதலியார் ,வீட்டைப் பூட்டும் சமயத்தில் ரங்கா , முதலியாரைப் பார்த்து," ஐயா ! செல்போன், ATM கார்டு ஆகியவற்றை எடுத்துக் கொண்டீர்களா? சமயத்தில் உதவும்; கையோடு குடையையும் எடுத்துக் கொள்ளுங்கள் ! மழை வரும்போல இருக்கிறது." என்று சொன்னான்.
" சரியாகச் சொன்னாய் ரங்கா!" என்று சொல்லிவிட்டு , முதலியார் வீட்டினுள் சென்று செல்போன், ATM கார்டு,குடை ஆகியவற்றை எடுத்துக்கொண்டார். வீட்டைப் பூட்டிவிட்டு மூவரும் கிளம்பினர்.
பேருந்து நிலையம் அடைந்தனர்.
திடீரென முதலியாருக்கு ஒரு சந்தேகம் வந்துவிட்டது. வீட்டைச் சரியாகப் பூட்டவில்லையோ என்று சந்தேகப்பட்டார்.
" பில்லா !, ரங்கா ! வீட்டைச் சரியாகப் பூட்டினேனா இல்லையா என்ற சந்தேகம் வந்துவிட்டது. " என்றார் முதலியார்.
உடனே ரங்கா, " ஐயா ! கொஞ்சமும் கவலைப்படவேண்டாம். நீங்கள் வீட்டைப் பூட்டும்போது நான் கவனித்தேன்; சரியாகத்தான் பூட்டினீர்கள். பூட்டை நான் இழுத்துப் பார்த்தேன். எனவே சந்தேகம் வேண்டாம். " என்று சொன்னான்.
ஆனாலும் முதலியாருக்கு சந்தேகம் தீர்ந்தபாடில்லை. தயக்கத்துடன் நின்றுகொண்டு இருந்தார். உடனே ரங்கா,
" ஐயா ! சாவியைக் கொடுங்கள் ; வேண்டுமானால் தங்களுடைய திருப்திக்காக நான் போய் பார்த்துவிட்டு வருகிறேன். " என்று சொன்னான்.
ரங்காவை நம்பி வீட்டு சாவியைக் கொடுக்க முதலியார் தயங்கினார். ஆறு மாதங்களுக்கு முன்புதான் ரங்காவை , முதலியார் வீட்டு வேலைக்கு சேர்த்துக்கொண்டார். பில்லா அந்த வீட்டில் ஐந்து ஆண்டுகளாக வேலை செய்கிறான். ரங்காவை நம்பி வீட்டு சாவியைக் கொடுத்தால், அவன் வீட்டில் உள்ளதை எல்லாம் சுருட்டிக்கொண்டு கம்பி நீட்டிவிட்டால் என்ன செய்வது என்று யோசித்தார். உடனே பில்லாவைப் பார்த்து,
" பில்லா! நீ போய் பார்த்துவிட்டு வா ! " என்றார்.
" சரி ஐயா ! " என்று சொல்லிவிட்டு பில்லா கிளம்பினான். அவன் சிறிதுதூரம் சென்றவுடன் முதலியார்,
" முட்டாளே ! சாவி வாங்காமல் போகிறாயே ! பூட்டு சரியாகப் பூட்டாமல் இருந்தால் என்ன செய்வாய் ?" என்று கோபித்தார் முதலியார்.
" ஐயா ! மறந்துவிட்டேன். " என்று சொல்லித் தலையைச் சொறிந்தான் பில்லா.
பில்லா வீட்டை நெருங்கும் சமயத்தில் மழை பிடித்துக்கொண்டது. அருகிலிருந்த ஒரு மரத்தின் கீழே ஒதுங்கினான் பில்லா.
அப்போது அங்குவந்த வழிப்போக்கன் ஒருவன் பில்லாவைப் பார்த்து,
" தம்பி ! இது உங்க வீடா ? "என்று கேட்டான்.
" இல்லை ; என் முதலாளி வீடு. பஸ் ஸ்டாண்டில் முதலாளி காத்துக்கொண்டு இருக்கிறார். வீடு சரியாகப் பூட்டி இருக்கிறதா என்று என்னைப் பார்த்துவிட்டு வரச் சொன்னார். அதான் வந்தேன். அதற்குள் இப்படி மழை பிடித்துக்கொண்டது." என்றான் பில்லா.
உடனே வழிப்போக்கன்," அவ்வளவுதானே ! நீ இங்கேயே இரு தம்பி ! சாவியைக் கொடு. நான் போய் பார்த்துவிட்டு வருகிறேன். பூட்டாமல் இருந்தால் நான் போய் சரியாகப் பூட்டிவிட்டு வருகிறேன்; வீணாக நீ ஏன் மழையில் நனையவேண்டும் ?" என்று சொன்னான்.
உடனே பில்லா , வழிப்போக்கனிடம் சாவியைக் கொடுத்தான்.
சாவியை வாங்கிக்கொண்ட வழிப்போக்கன் வீட்டின் கதவருகில் சென்றான். பூட்டை இழுத்துப் பார்த்தான். சரியாகப் பூட்டி இருந்ததைக் கண்டான். உடனே சாவியைப் பூட்டில் செருகி பூட்டைத் திறந்தான். பூட்டைத் திறந்த நிலையில் வைத்துவிட்டு பில்லாவிடம் வந்து,
" தம்பி ! நீ இங்கு வந்தது நல்லதாப் போச்சு ! பூட்டு சரியாகப் பூட்டப்படாமல் இருந்தது. நான் சரியாகப் பூட்டிவிட்டேன்." என்று சொல்லி சாவியை பில்லாவிடம் கொடுத்தான்.
" ரொம்பவும் நன்றி ஐயா !" என்று சொல்லிவிட்டு பில்லா முதலியாரிடம் சென்றான். மழையும் விட்டிருந்தது.
பில்லாவைப் பார்த்த முதலியார், " என்ன பில்லா! வீடு பூட்டியிருந்ததா ?"
" இல்லை ஐயா ! பூட்டு சரியாக பூட்டப்படாமல் இருந்தது. "
" நான் நினைத்தது சரியாப் போச்சு. உன்னை அனுப்பினது நல்லதாப் போச்சு. இப்ப பூட்ட சரியாப் பூட்டுனியா ?"
" ஆம் ஐயா! சரியாகப் பூட்டிவிட்டான். "
" பூட்டிவிட்டானா ! அப்ப நீ பூட்டவில்லையா ?"
பில்லா நடந்ததைச் சொன்னவுடன், முதலியார் தீயை மிதித்தவர் போல ஆனார்.
" மூளையில்லா முண்டமே ! முன்பின் தெரியாத ஒருவனிடம் சாவியைக் கொடுத்து வீட்டைப் பூட்டச் சொல்லியிருக்கியே ! அவன் என்ன செஞ்சானோ ஏது செஞ்சானோ தெரியலையே " என்று பதறி அடித்துக்கொண்டு வீட்டை நோக்கி ஓடினார் முதலியார். அங்கே
வீடு திறந்துகிடந்தது. வீட்டின் உள்ளே நுழைந்த முதலியார் பீரோவைப் பார்த்தார். பீரோவிலிருந்த நகைகள், ரொக்கப் பணம் எல்லாம் கொள்ளையடிக்கப்பட்டு சுத்தமாக துடைத்து வைக்கப்பட்டு இருந்தது.
' அய்யய்யோ ! எல்லாம் போச்சே ! ' என்று முதலியார் தலையில் அடித்துக்கொண்டார்.
குறள்:
=====
தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும். ( தெரிந்து தெளிதல்-510 )
கருத்து:
=======
ஒருவனை ஆராயாது தெளிதலும், ஆராய்ந்து தெளிந்தவன் மாட்டு ஐயப்படுதலும் நீங்காத துன்பத்தைக் கொடுக்கும்.
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: பில்லா , ரங்கா
நல்ல கதை அய்யா . நன்றி .
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: பில்லா , ரங்கா
ஷோபனா அவர்களின் பாராட்டுக்கு நன்றி .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பில்லா , ரங்கா
வீட்ட கொள்ளை அடிச்சதோட போனானே யாருக்காவது வித்திருந்தா அம்போதான்
இதுக்குத்தான் பூட்ட ஒழுங்கா வீட்டனும் ச்சே வீட்ட ஒழுங்கா பூட்டனும்
இதுக்குத்தான் பூட்ட ஒழுங்கா வீட்டனும் ச்சே வீட்ட ஒழுங்கா பூட்டனும்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: பில்லா , ரங்கா
மேற்கோள் செய்த பதிவு: 1151171balakarthik wrote:வீட்ட கொள்ளை அடிச்சதோட போனானே யாருக்காவது வித்திருந்தா அம்போதான்
இதுக்குத்தான் பூட்ட ஒழுங்கா வீட்டனும் ச்சே வீட்ட ஒழுங்கா பூட்டனும்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பில்லா , ரங்கா
ஷோபனா , கிருஷ்ணம்மா , பாலாகார்த்திக் ஆகியோரின் பாராட்டுக்கு நன்றி !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Similar topics
» கேடி பில்லா கில்லாடி ரங்கா (KBKR) – விமர்சனம்
» தெய்வங்கள் எல்லாம் தோற்றேப் போகும் - கேடி பில்லா கில்லாடி ரங்கா !
» ரங்கா- சினிமா விமரிசனம்
» ரங்கா’ன்னு பெயர் வெச்சது குத்தமா…
» ஆவடி வேல்டெக் ரங்கா சங்கு கலைக்கல்லூரியில் ”முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு விழா”
» தெய்வங்கள் எல்லாம் தோற்றேப் போகும் - கேடி பில்லா கில்லாடி ரங்கா !
» ரங்கா- சினிமா விமரிசனம்
» ரங்கா’ன்னு பெயர் வெச்சது குத்தமா…
» ஆவடி வேல்டெக் ரங்கா சங்கு கலைக்கல்லூரியில் ”முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு விழா”
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|