ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களுக்கு 40 வயதில் காதல் வருமா?

4 posters

Go down

 பெண்களுக்கு 40 வயதில் காதல் வருமா? Empty பெண்களுக்கு 40 வயதில் காதல் வருமா?

Post by சிவா Mon Jul 13, 2015 12:36 am


பொறுப்பான பதவியில் இருக்கும் பெண்மணி அவர். அவ்வப்போது ஊடகங்களிலும் தென்படுவார். பார்க்க பளிச்சென்று கம்பீரமாக இருப்பார்.

வெகுநேரம் என்னிடம் பேசிக்கொண்டிருந்த அவரிடம், ‘நாம் இவ்வளவு நேரம் பேசியும் நீங்கள் இறுக்கமாகவே காணப்படுகிறீர்களே! ஏன்?’ என்று கேட்டேன்.

‘‘பலதரப்பட்ட பிரபல ஆண்கள் பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் என்னை சந்திக்கிறார்கள். மணிக்கணக்கில் என்னோடு அமர்கிறார்கள். நான் இறுக்கமாக, உம்மென்று இருந்தால்தான் என்னிடம் நெருங்கமாட்டார்கள். எனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய கேள்விகளையும் கேட்கமாட்டார்கள்’’ என்று பதிலளித்தார்.

‘அப்படியானால் நீங்கள் மகிழ்ச்சியடையும் விதத்திலும், வெளியே சொல்லிக்கொள்ளும் விதத்திலும் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை இல்லை. அப்படித்தானே?’ என்று நான் கேட்டேன். அதன் பின்புதான் அவர், வெற்றிடமாக இருக்கும் தனது தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி மனந் திறந்து பேசத் தொடங்கினார்.

இந்த பெண்மணி வசதியான குடும்பத்தில் பிறந்திருக்கிறார். பெரிய வீடும், பண்ணையும் இருந்திருக்கிறது. இவருக்கு நினைவு தெரியும் முன்பே தந்தை இறந்து போயிருக்கிறார். அதனால் முழு நிர்வாகத்தையும் கவனிக்கும் பொறுப்பு இளம் வயது தாயாருக்கு வந்திருக்கிறது. பண்ணையில் ஆண்களே அதிகம் வேலை பார்த்திருக்கிறார்கள். ‘கணவர் இல்லாத பெண் என்பதை வேலைக்காரர்கள் தங்களுக்கு சாதகமாக எடுத்துக்கொள்ளக்கூடாது’ என்பதற்காக, இறுக்கமான முகத்தோடு ஆண்களிடம் கடுமையாக நடந்திருக்கிறார்.

‘‘அம்மாவை பார்த்தே வளர்ந்ததால் நானும் ஆண்களிடம் அப்படியே நடந்துகொண்டேன். நான் பருவமடைந்த காலகட்டத்தில் அதுவே எனக்கு பாதுகாப்பாக தெரிந்ததால் இப்போதும் அதையே தொடர்கிறேன்’’ என்று இறுக்கமான முகத்திற்கு விளக்கம் கொடுத்தார்.

இவருக்கு வயது 40, திருமணம் செய்துகொள்ளவில்லை. காரணம் கேட்டேன்.

‘‘சிறுவயதில் இருந்தே ஆண்களை வேலைக்காரர்களாக பார்த்து பழகிவிட்டதால், சம உரிமை கொடுத்து ஆணை திருமணம் செய்துகொள்ள மனம் இடம்தரவில்லை. ஆனால் இப்போது 40 வயதில் எனக்குள் காதல் அரும்பியிருக்கிறது. அதுபற்றி உங்களிடம் ஆலோசனை பெறவே வந்திருக்கிறேன்’’ என்றார்.

இவர் சார்ந்திருக்கும் துறையில், இன்னொரு பிரிவில் இவர் காதலிக்கும் நபர் பணிபுரிகிறார். இருவருக்கும் சம வயது.

‘‘எனது காதலருக்கும் திருமணமாகவில்லை. இதுவரை எந்த ஆணிடமும் ஏற்படாத முதல் ஈர்ப்பு அவர் மீது எனக்கு ஏற்பட்டிருக்கிறது. ஆனால் அதை நான் மறைத்து, நல்ல நண்பராக மட்டும் பழகிக்கொண்டிருக்கிறேன். அவர் காதலைத் தவிர மீதி எல்லா விஷயங்களையும் என்னிடம் பேசுகிறார். ஒருநாள்கூட அவரை பார்க்காமல் என்னால் இருக்க முடியாது. அதுபோல் என்னை பார்க்காமல் அவராலும் இருக்க முடியவில்லை. ஆனாலும் மனந்திறந்து பேசாமல் இருவரும் கண்ணாமூச்சி விளையாடுகிறோம்’’ என்றார் கவலை கலந்த குரலில்.

பிரியமுடியாத அளவுக்கு இருவரும் நெருங்கியிருப்பது புரிந்தது. ஆனாலும் இவர்களது அதிக படிப்பு, பெரிய வேலை, அந்தஸ்து போன்றவை மனந்திறந்து பேச முடியாத அளவுக்கு இருவருக்குள்ளும் ‘ஒருவித பயத்தை’ உருவாக்கியிருப்பதை உணர முடிந்தது.

‘நீங்கள் காதலை வெளிப்படுத்த பயப்படுகிறீர்கள் அல்லவா?’ என்று கேட்டேன்.

‘‘ஆமாம்! நான் காதலை வெளிப்படுத்தும்போது அவர், ‘நான் உன்னை காதலிக்கவில்லை. இந்த வயதில் காதலிப்பது அசிங்கம். நாம் திருமணம் செய்துகொள்ள வாய்ப்பில்லை’ என்று கூறிவிட்டால், எனக்கு அவமானம் ஆகிவிடும். அதனால் உருவாகும் குற்ற உணர்வில் இருந்து என்னால் மீள முடியாது. அதன் பின்பு அவரது நட்பும் எனக்கு கிடைக்காமல் போய்விடுமே! ஆகையால்தான் பயப்படுகிறேன்’’ என்றார்.

‘காதல் வசப்படாததுவரை நீங்கள் தைரியமாக இருந்திருக்கிறீர்கள். எப்போது காதல் வசப்பட்டீர்களோ அப்போதே மனதளவில் பலகீனமாகிவிட்டீர்கள். அதனால்தான் இவ்வளவு பயம்’ என்ற நான், ‘இந்த பயம் உங்களைவிட்டு போக ஒரே ஒரு வழிதான் இருக்கிறது’ என்றேன்.

‘‘என்ன வழி?’’ என்று ஆவலுடன் கேட்டார்.

‘மனந்திறந்து பேச இன்னும் யோசித்துக்கொண்டே இருந்தால் 50 வயதான பின்பு, ‘40 வயதில் காதலை சொல்லாமல் விட்டுவிட்டோமே!’ என்று நீங்கள் பெரும் கவலை கொள்ள வேண்டிய திருக்கும். அதனால் செல்போனை எடுங்கள். இப்போதே உங்கள் மனதில் இருப்பதை அவரிடம் சொல்லுங்கள். நீங்கள் நினைப்பதைபோல்தான் அவரும் நினைப்பார். அதனால் பயப்படாதீர்கள். தைரியமாக பேசுங்கள்’ என்றேன்.

அந்த பெண்மணி தயக்கத்தோடு செல்போனை எடுத்து பேசினார். பேச்சின் போக்கிலே கண்களை மூடிக்கொண்டு தைரியமாக தனது காதலை சொல்லிவிட்டார். மீண்டும் அவர்கள் பேச்சு தொடர, அவர் முகத்தில் இருந்த இறுக்கம் தளர்ந்து சிரிப்பு வந்தது. நாணமும் தென்பட்டது.

சிறிது நேரம் பேசிவிட்டு அவர் போனை ‘ஆப்’ செய்ததும், ‘உங்கள் காதலர் என்ன பதில் சொன்னார் என்பதை உங்கள் சிரிப்பே காட்டிக்கொடுத்துவிட்டது’ என்றேன்.

‘‘ஆமாம், நான் பயந்ததுபோல் அவரும் பயந்து காதலை சொல்லாமல் தவிர்த்திருக்கிறார். நான் வெளிப்படையாக பேசியதும் அவரும் காதலை சொல்லிவிட்டார். நாங்கள் விரைவில் திருமணம் செய்துகொள்வோம். எனக்கு குழந்தை பெற்றுக்கொள்ள ஆசையாக இருக்கிறது’’ என்றார், தலையை கவிழ்ந்து கொண்டு!

சிலருக்கு இப்படித்தான் 40 வயதில் காதல் பூக்கிறது. அதையும் மறைத்து என்ன ஆகப்போகிறது! எல்லா பெண்களும் வாழத்தானே பிறந்திருக்கிறார்கள்!

தினத்தந்தி!


 பெண்களுக்கு 40 வயதில் காதல் வருமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 பெண்களுக்கு 40 வயதில் காதல் வருமா? Empty Re: பெண்களுக்கு 40 வயதில் காதல் வருமா?

Post by krishnaamma Mon Jul 13, 2015 12:56 am

நல்ல பகிர்வு சிவா.......வாழ்க்கை வாழ்வதற்கே !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 பெண்களுக்கு 40 வயதில் காதல் வருமா? Empty Re: பெண்களுக்கு 40 வயதில் காதல் வருமா?

Post by shobana sahas Wed Jul 15, 2015 3:50 am

அருமையாக உள்ளது .. மனதை திறந்து காட்ட பாவம் தயங்கி இருக்கிறார் . "ஐஸ் பிரேக் "ஆனதும்.... மகிழ்ச்சி தான் .. சூப்பர்  பெண்களுக்கு 40 வயதில் காதல் வருமா? 103459460  பெண்களுக்கு 40 வயதில் காதல் வருமா? 3838410834  பெண்களுக்கு 40 வயதில் காதல் வருமா? 1571444738
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

 பெண்களுக்கு 40 வயதில் காதல் வருமா? Empty Re: பெண்களுக்கு 40 வயதில் காதல் வருமா?

Post by ayyasamy ram Wed Jul 15, 2015 6:23 am

நல்ல வேலை கிடைத்ததும் ,
வறுமையில் வாடிய குடும்பத்தை தூக்கி
நிறுத்துவதிலும், மூத்த சகோதரி மற்றும்
தங்கைகளை கரையேற்றுவதிலும் இளமையை
தொலைத்த பெண் தற்போது வசதியுடன்
இருக்கிறார்....
-
வயது நாற்பதை கடந்து விட்டது...
தன்னிடம் உள்ள சொத்துக்களை உத்தேசித்துதான்
தன்னை திருமணம் செய்து கொள்ள ஆடவன்
முன்வருவான் என்ற அச்சத்தில் முதிர்கன்னியாக
காலத்தைக் கழிக்கிறாள்....
-
இப்படிப்பட்ட பெண்களும் இருக்கிறார்கள்...

-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84145
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 பெண்களுக்கு 40 வயதில் காதல் வருமா? Empty Re: பெண்களுக்கு 40 வயதில் காதல் வருமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum